Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 505
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம் டூ இலங்கை-இரத்தினகிரி:
ருத்ரா என்னாச்சி பா?
ஏன் அழற?,என்கும் போதுஉள்ளே இருந்த கண்ணன் போனில் என்னாஆஆ என்று அதிர்ந்து பேசுவது தேவகிக்கு கேட்டது.
தேவகி என்று வேகமாக வந்தவர், அங்கிருந்த ருத்ரனை பார்த்து,ஒன்னும் இல்லை ருத்ராயென்று அவனை அணைக்க,அங்கிளென்று ருத்ரன் கதறி அழுதான்.
அய்யோ முதல்ல என்ன ஆச்சு, சொல்லுங்களென்று தேவகி பதற, தேவகி,நம்ப சுந்தரும் மேகலாவும் ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்கமா என்க...
அய்யோ என அவர் பதறி அழுதார்.
ருத்ரனோ,அத்தையுமா என்று கேட்டு அதிர்ந்தான்.
ஆமா ருத்ரா.இப்போ தான் ரியா போன் பண்ணி சொல்லுச்சி.ஆதிராவை கூப்பிட்டுட்டு ரியா ஏர்போர்ட்டிற்கு போயிட்டு இருக்காம்.
நாம உடனே அங்கு போகலாம்,ஃப்ளைட் டிக்கெட் பார்க்கணுமே என்க,அங்கிள் திருச்சியில் இருந்து போற ஃப்ளைட்டில் தான் டிக்கெட் இருக்குயென்றவன், தேவகி-கண்ணனுக்கும் டிக்கெட்டை புக் பண்ணினான்.
தேவகி,ருத்ரா சீக்கிரம் போய் உங்களுக்கு தேவையானதை எடுத்து வைங்க.
நான் அதற்குள் சங்கரை வர சொல்லுறேனென்றவர்,சங்கருக்கு கால் பண்ணி உடனே வர சொல்ல,இதோ வரேங்கைய்யா என்றார்.
ஏன் இப்படி?
அவர்கள் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணவில்லையே?,பிறகு ஏனிந்த முடிவு??
கடவுளேயென தனக்குள் ருத்ரன் கேள்விகளை கேட்டுக்கொண்டே ரெடியாகியவன் லக்கேஜோடு வெளியே வர,அங்கே தேவகி- கண்ணன் இருவரும் தயாராக இருந்தனர்.
சங்கரும் வந்து விட,விஷயத்தை சொல்லிய கண்ணன்,சீக்கிரம் போய் கார் எடுக்க சொன்னார்கள்.
அங்கிள் தாத்தா பாட்டிக்கு விஷயத்தை சொல்லணுமேயென்று ருத்ரன் சொல்ல,அதான் எனக்கும் யோசனையா இருக்குப்பா.
அத்தை உடம்பு இப்போ தான் நல்லாகியிருக்கு.இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை நாம சொன்னால்,இதைக்கேட்டு அவங்க உடம்பை பாதிக்குமே?,சொல்லாமலும் இருக்க முடியாது.அதான் என்ன செய்வதென்று புரியலை ருத்ரா என்றார்.
ருத்ரனும் சிறு யோசனைக்கு பிறகு, அங்கிள் நாம மைக்கேல் அங்கிள் கிட்ட விஷயத்தை சொன்னா என்ன என்க,அவரும் யோசித்து விட்டு இதுவும் நல்லது தான்.
மைக்கேல் நிச்சயமாக பக்குவமா எடுத்து சொல்லுவாரு ருத்ரா.சங்கரு காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்துப்பா என்க,சரிங்கைய்யா என்றவர்,இரண்டு பக்கமும் ரோட்டை பார்த்துவிட்டு காரை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர்,கண்ணனே மைக்கேல் நம்பருக்கு கால் பண்ணினார்.
இரவு உணவை முடித்துக் கொண்டு காற்றோட்டமாக எல்லாரும் வாசலில், உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது,மைக்கேலின் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
எடுத்து பார்க்க கண்ணன் சார் என்று வர, அட்டென் பண்ணியவர் சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க என்க,நான் நல்லா இருக்கேன் மைக்கேல் ஒரு செய்தி சொல்லணுமென்றார்.
அவர் குரலை வைத்தே ஏதோ சரியில்லை என்பது புரிய சாதாரணமாக எழுவது போல பேசிக்கொண்டே போனோடு அங்கிருந்து நகர்ந்தவர்,சார் சொல்லுங்க என்னாச்சி என்று பதறினார்.
மைக்கேலிடம் விஷயத்தை சொல்ல அய்யோஓஓ என்று அதிர்ந்தவர் சரிங்க சார் நீங்க பார்த்து போங்க.
நான் இங்க பார்த்துக்குறேனென்று அழைப்பை கட் பண்ணியவரின் கண்கள் கண்ணீரை சிந்தியது.
சிறிது மாதங்களாய் தான் தன்னை தெரியுமென்றாலும்,வசுவை போல அண்ணா அண்ணா என்று அன்பாய் பழகிய தங்கை,இந்த உலகத்தில் இல்லை என்பதை அவராலும் நம்ப முடியவில்லை .
இதை எப்படி பெரியப்பா- பெரியம்மாவிடம் சொல்வதென்று கண்ணீரோடு நிற்க,அண்ணா என்றவாறு அங்கு வந்தார் வசுந்தரா.
திரும்பி நின்று அழுது கொண்டிருந்த மைக்கேல்,தங்கையின் குரல் கேட்டு திரும்ப,அவரைப் பார்த்த வசுந்தரா,என்னாச்சுணா என்று பதறினார்.
மேகலா,மேகலா என்கும் போதே அவரால் அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.
அண்ணா மேகலாவிற்கு என்னாச்சி சொல்லுணா என்க,வசு மேகலா போன கார் ஆக்ஸிடென்ட் ஆக,மச்சானும்,மேகலாவும் இறந்துட்டாங்கம்மா என்க, அய்யோஓஓஓ என்று வசுவும் கதற, இதைக்கேட்டவர்கள் என்னாச்சோயென்று அங்கு வந்தனர்.
என்னாச்சி வசுயென்று சிம்ஹன் தாத்தா கேட்க,எப்படி இவரிடம் விஷயத்தை சொல்வதென்று புரியாமல் வசுவும் கண்ணீரோடு நின்றார்.
மைக்கேல் உன் தங்கச்சி எதுக்கு அழறா?
ஆர்கலிக்கு உடம்பு எதாவது சரியில்லையா என்று சுந்தரபாண்டியன் தாத்தா கேட்க,அதுலாம் இல்லைப்பா என்க,பிறகு வேற என்னடா விஷயம்,அதை சொல்லு என்றார்.
அப்பா நாமலாம் உடனே இரத்தினகிரிக்கு போகணும்,மேகலாவும்- மச்சானும் கார்ல போகும் போது சின்ன ஆக்ஸிடென்ட் ஆகிட்டாம் என்க...
என்னாஆஆ என்று மற்றவர்கள் பதறினர்.
சத்தியமூர்த்திக்கு மட்டும் அவர் சொல்வதில் ஏதோ விஷயம் ஒளிந்திருப்பது போல தெரிந்தது.
தம்பி,உன் தங்கச்சிக்கும் சுந்தருக்கும் ஒன்னும் இல்லையே என கிரிஜா பாட்டி பதற்றமாய் மைக்கேலிடம் கேட்க,நிஜமா இல்லைங்கம்மா.
நல்லா இருக்காங்க,மேகலாவுக்கு காயந்தான் கொஞ்சம் அதிகமா இருக்காம்.அதுக்கு தான் ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்காம்மா.
ருத்ரன் அங்கிருந்து இலங்கைக்கு கிளம்பியாச்சாம் மா.கண்ணன் சார் இப்போ தான் கால் பண்ணி சொன்னாங்களென்றார்.
சத்தியமூர்த்தி,தாரா வாயென்று அழைத்து போய் விஷயத்தை கேட்க, அழுது கொண்டே தனது தங்கையும், அவள் வீட்டுக்காரரும் இறந்துவிட்டதை சொல்லி கதறி அழுதார்.
கேட்ட சத்தியமூர்த்திக்கும் வேதனையாக தான் இருந்தது.நீ அழாதே என்றவர் உடனே ஃபோன் பண்ணி கோபியை வர வைத்தார்.
என்னாச்சோயென்று கோபியும்,அவன் அப்பாவும் பதறியவாறு அங்கு வந்தவர்கள் மச்சான் என்னாச்சியென்று கோபியின் அப்பா கேட்க,அவரிடம் விஷயத்தை சொன்னார்.
கோபியும் ஃபோனில் செக் பண்ணி பார்த்தவன்,மாமா நைட் 12.30 க்கு இலங்கைக்கு போக ஏர்இந்தியா ஃப்ளைட் இருக்கு.
இப்பவே மணி 10.30 ஆக போகுது. இப்போ நீங்களாம் கிளம்பினால் அந்த ஃப்ளைட்டை புடிச்சிடலாம்.
இல்லையென்றால் திருச்சி போய் தான் மாறணுமென்க,நீ அதிலே டிக்கெட் போட்டுரு கோபி என்றவர்,தாரா நீ போய் எல்லாரையும் தயாராக சொல்லி கூப்பிட்டு வாமா என்றவாறு,தனது அறைக்கு சென்றார்.
அதைப்போல் எல்லாரும் தயாராக, கோபியும் அவனுக்கு தெரிந்த பையனை வர வைத்திருக்க ஆளுக்கொரு காரில் இவர்களை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு வந்தவர்கள் அவர்களுக்கான ஃப்ளைட்டில் ஏற்றி விட்டனர்.
சங்கரு பார்த்து போப்பா என்க,நான் போய்க்குறேன்யா.நீங்களாம் நல்லபடியாக போய் சேர்ந்துட்டு போன் போடுங்க என்றவர்,மாப்பிள்ளை தைரியமாக போங்கள்.மனச விட்டுறாதீங்க.நீங்க தான் இப்போ அங்க ஆறுதலாக இருக்கணுமென்றார்.
பின்னர் இவர்களும் சொல்லிக்கொண்டு ஃப்ளைட்டின் உள்ளே சென்றனர்.
திருச்சியிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் இலங்கையில் இருக்கும் அனுராதபுரம் ஏர்போர்ட்டிற்கு சில மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.
மூவரும் வெளியே வர,ருத்ரன் வீட்டு டிரைவரும் காரோடு அவர்களுக்காக வெய்ட் பண்ண,பின்னர் இவர்கள் மூவரும் காரில் ஏறியதும்,புறப்பட்ட காரும் அங்கிருந்து களுத்துறையை நோக்கி சென்றது.
மூன்று மணிநேர பயணத்தில் சுந்தர் வீட்டிற்கு வந்து சேர,அங்கே தெரிந்தவர்களெல்லாரும் அங்கங்கே குழுமி இருந்தனர்.
ஆலீஸும் ரஞ்சனும் அங்கிருக்க, காரிலிருந்து இறங்கி வரும் இவர்கள் மூவரையும் பார்த்த ஆலீஸ் கதறி அழுதார்.
எதுவும் பேசாமல் நண்பனை இறுக்கமாக அணைத்த ரஞ்ஜன்,அவன் முதுகில் தட்டி கொடுக்க,ருத்ரன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகள்,ரஞ்ஜனின் தோள் பட்டையில் விழுந்தது.
சதூர்வேதமங்கலம்:
காலை உணவு வேளையும் முடிந்தது.
இவ்வளவு நேரம் அந்த இம்சைக்காரன் இங்கு வந்துருப்பானே,ஏன் இன்னும் வரலையென்ற யோசனையோடு பார்வையை வாசல் பக்கம் ஆர்கலி வைத்திருக்க,பாட்டிக்கு அவள் தேடல் புரிந்து,மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நேரமும் கடந்து சென்றது.
ஒரு வேளை அய்யா வேலையா இருப்பானோ?
அப்படி என்ன வேலை தான் இந்த மனுஷன் பார்க்குறான்?,எப்போ பார்தாலும் அந்த வீணா போன லேப்டாப்பையே கட்டிகிட்டு அழுறானே?..
பாட்டியும் துணி தைப்பதற்காக உட்கார்ந்து விட,ஆர்கலிக்கு தான் ரொம்ப போர் அடித்தது.
என்ன பண்ணலாமென்று யோசித்தவள்,பின்னர் எழுந்து தோட்டத்திற்கு சென்று,அங்கு செடியில் இருக்கும் பழுத்த மிளகாய்களை எல்லாம் தேடி பிடித்து பரித்து முடிக்க,ஆராமா என்றவாறு கருப்பாயியும் அங்கு வந்தார்.
மூவரும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்க சங்கரும் அங்கு வந்தார்.
என்னணா உங்க அய்யா வீட்டில் இன்றைக்கு வேலை இல்லையா என்றாள்.
இன்னைக்கு வயல்ல மருந்து போடுறது தான் டா.அது முடிஞ்சி தான் வரேன் என்க, ஓஓஓ சரி ணா.
டீ போடட்டுமா என்க,அதுலாம் வேண்டாம் டா என்றவாறு வாசல் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தவர்,என்ன மனுஷ வாழ்க்கை?..
யாருக்கு எப்போ என்ன நடக்குதென்று சொல்ல முடியலையே என்க,அதைக்கேட்ட பாட்டியோ அய்யா சங்கரு,யாருக்கு என்னாச்சியா என்க,என்னத்தை சொல்ல ஆச்சி...
மாப்பிள்ளையோட அத்தையும்-அவங்க வீட்டுகாரரும் நேற்று இரவு கார் ஆக்சிடெண்ட்ல செத்துப் போயிட்டாங்க.
நைட்டுக்கு திருச்சில போய் அவங்களை இலங்கைக்கு வண்டி(ஃப்ளைட்)ஏற்றி விட்டுட்டு,விடியற்காலை தான் நான் வீட்டிற்கு வந்தேன் என்க,என்னாஆஆ என்று மூன்று பேரும் அதிர்ந்தார்கள்.
அய்யோ மாமா,நீ என்னய்யா சொல்லுற என கருப்பாயி கேட்க,நெசந்தான் புள்ள.
நைட்டுக்கு நீங்கலாம் தூங்கிட்ட பின்ன அய்யாகிட்ட இருந்து போனு வந்துச்சி.
உடனே வா சங்கருனு சொல்ல,அவர் குரலே ரொம்ப பதற்றமாக இருக்க,உன் கிட்ட வயலுக்கு காவலுக்கு போறேனு எழுப்பி சொல்லிட்டு போனேன்.
அங்க போன பொறவு தான் எனக்கு விசயம் தெரியுது.
பாரேன்,பெத்த பொண்ணு எங்கையோ ஒரு நாட்டுல படிக்குது,இங்க ஆயி அப்பன் ரெண்டு பேரும் செத்து போயாச்சி.
மகளுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்,பெரிய டாக்டரா மவள் ஆவணும்னு எத்தனை ஆசையோட, கனவுகளோட இருவரும் இருந்துருப்பாங்களென்று சொல்லி சங்கர் கண் கலங்கினார்.
மூவருக்கும் இறந்தவர்களுக்காக வேதனை படுவதை தவிற வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆர்கலிக்கோ,தனது கணவனை பார்க்கணும் போல இருந்தது.
மாமா ஒரு போன் போட்டு விசாரிக்கலாமா என்க, இரு புள்ள
அங்க என்ன சூழல்னு தெரியலை.
அய்யா போயிட்டு போன் போடுறேனு சொன்னாங்க.செத்த பொறுத்து பாக்கலாம் என்றவர்,அப்படியே தனது கால்களை நீட்டி அந்த திண்ணையிலே படுத்துவிட்டார்.
ருத்ரா என்னாச்சி பா?
ஏன் அழற?,என்கும் போதுஉள்ளே இருந்த கண்ணன் போனில் என்னாஆஆ என்று அதிர்ந்து பேசுவது தேவகிக்கு கேட்டது.
தேவகி என்று வேகமாக வந்தவர், அங்கிருந்த ருத்ரனை பார்த்து,ஒன்னும் இல்லை ருத்ராயென்று அவனை அணைக்க,அங்கிளென்று ருத்ரன் கதறி அழுதான்.
அய்யோ முதல்ல என்ன ஆச்சு, சொல்லுங்களென்று தேவகி பதற, தேவகி,நம்ப சுந்தரும் மேகலாவும் ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்கமா என்க...
அய்யோ என அவர் பதறி அழுதார்.
ருத்ரனோ,அத்தையுமா என்று கேட்டு அதிர்ந்தான்.
ஆமா ருத்ரா.இப்போ தான் ரியா போன் பண்ணி சொல்லுச்சி.ஆதிராவை கூப்பிட்டுட்டு ரியா ஏர்போர்ட்டிற்கு போயிட்டு இருக்காம்.
நாம உடனே அங்கு போகலாம்,ஃப்ளைட் டிக்கெட் பார்க்கணுமே என்க,அங்கிள் திருச்சியில் இருந்து போற ஃப்ளைட்டில் தான் டிக்கெட் இருக்குயென்றவன், தேவகி-கண்ணனுக்கும் டிக்கெட்டை புக் பண்ணினான்.
தேவகி,ருத்ரா சீக்கிரம் போய் உங்களுக்கு தேவையானதை எடுத்து வைங்க.
நான் அதற்குள் சங்கரை வர சொல்லுறேனென்றவர்,சங்கருக்கு கால் பண்ணி உடனே வர சொல்ல,இதோ வரேங்கைய்யா என்றார்.
ஏன் இப்படி?
அவர்கள் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணவில்லையே?,பிறகு ஏனிந்த முடிவு??
கடவுளேயென தனக்குள் ருத்ரன் கேள்விகளை கேட்டுக்கொண்டே ரெடியாகியவன் லக்கேஜோடு வெளியே வர,அங்கே தேவகி- கண்ணன் இருவரும் தயாராக இருந்தனர்.
சங்கரும் வந்து விட,விஷயத்தை சொல்லிய கண்ணன்,சீக்கிரம் போய் கார் எடுக்க சொன்னார்கள்.
அங்கிள் தாத்தா பாட்டிக்கு விஷயத்தை சொல்லணுமேயென்று ருத்ரன் சொல்ல,அதான் எனக்கும் யோசனையா இருக்குப்பா.
அத்தை உடம்பு இப்போ தான் நல்லாகியிருக்கு.இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை நாம சொன்னால்,இதைக்கேட்டு அவங்க உடம்பை பாதிக்குமே?,சொல்லாமலும் இருக்க முடியாது.அதான் என்ன செய்வதென்று புரியலை ருத்ரா என்றார்.
ருத்ரனும் சிறு யோசனைக்கு பிறகு, அங்கிள் நாம மைக்கேல் அங்கிள் கிட்ட விஷயத்தை சொன்னா என்ன என்க,அவரும் யோசித்து விட்டு இதுவும் நல்லது தான்.
மைக்கேல் நிச்சயமாக பக்குவமா எடுத்து சொல்லுவாரு ருத்ரா.சங்கரு காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்துப்பா என்க,சரிங்கைய்யா என்றவர்,இரண்டு பக்கமும் ரோட்டை பார்த்துவிட்டு காரை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர்,கண்ணனே மைக்கேல் நம்பருக்கு கால் பண்ணினார்.
இரவு உணவை முடித்துக் கொண்டு காற்றோட்டமாக எல்லாரும் வாசலில், உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது,மைக்கேலின் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
எடுத்து பார்க்க கண்ணன் சார் என்று வர, அட்டென் பண்ணியவர் சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க என்க,நான் நல்லா இருக்கேன் மைக்கேல் ஒரு செய்தி சொல்லணுமென்றார்.
அவர் குரலை வைத்தே ஏதோ சரியில்லை என்பது புரிய சாதாரணமாக எழுவது போல பேசிக்கொண்டே போனோடு அங்கிருந்து நகர்ந்தவர்,சார் சொல்லுங்க என்னாச்சி என்று பதறினார்.
மைக்கேலிடம் விஷயத்தை சொல்ல அய்யோஓஓ என்று அதிர்ந்தவர் சரிங்க சார் நீங்க பார்த்து போங்க.
நான் இங்க பார்த்துக்குறேனென்று அழைப்பை கட் பண்ணியவரின் கண்கள் கண்ணீரை சிந்தியது.
சிறிது மாதங்களாய் தான் தன்னை தெரியுமென்றாலும்,வசுவை போல அண்ணா அண்ணா என்று அன்பாய் பழகிய தங்கை,இந்த உலகத்தில் இல்லை என்பதை அவராலும் நம்ப முடியவில்லை .
இதை எப்படி பெரியப்பா- பெரியம்மாவிடம் சொல்வதென்று கண்ணீரோடு நிற்க,அண்ணா என்றவாறு அங்கு வந்தார் வசுந்தரா.
திரும்பி நின்று அழுது கொண்டிருந்த மைக்கேல்,தங்கையின் குரல் கேட்டு திரும்ப,அவரைப் பார்த்த வசுந்தரா,என்னாச்சுணா என்று பதறினார்.
மேகலா,மேகலா என்கும் போதே அவரால் அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.
அண்ணா மேகலாவிற்கு என்னாச்சி சொல்லுணா என்க,வசு மேகலா போன கார் ஆக்ஸிடென்ட் ஆக,மச்சானும்,மேகலாவும் இறந்துட்டாங்கம்மா என்க, அய்யோஓஓஓ என்று வசுவும் கதற, இதைக்கேட்டவர்கள் என்னாச்சோயென்று அங்கு வந்தனர்.
என்னாச்சி வசுயென்று சிம்ஹன் தாத்தா கேட்க,எப்படி இவரிடம் விஷயத்தை சொல்வதென்று புரியாமல் வசுவும் கண்ணீரோடு நின்றார்.
மைக்கேல் உன் தங்கச்சி எதுக்கு அழறா?
ஆர்கலிக்கு உடம்பு எதாவது சரியில்லையா என்று சுந்தரபாண்டியன் தாத்தா கேட்க,அதுலாம் இல்லைப்பா என்க,பிறகு வேற என்னடா விஷயம்,அதை சொல்லு என்றார்.
அப்பா நாமலாம் உடனே இரத்தினகிரிக்கு போகணும்,மேகலாவும்- மச்சானும் கார்ல போகும் போது சின்ன ஆக்ஸிடென்ட் ஆகிட்டாம் என்க...
என்னாஆஆ என்று மற்றவர்கள் பதறினர்.
சத்தியமூர்த்திக்கு மட்டும் அவர் சொல்வதில் ஏதோ விஷயம் ஒளிந்திருப்பது போல தெரிந்தது.
தம்பி,உன் தங்கச்சிக்கும் சுந்தருக்கும் ஒன்னும் இல்லையே என கிரிஜா பாட்டி பதற்றமாய் மைக்கேலிடம் கேட்க,நிஜமா இல்லைங்கம்மா.
நல்லா இருக்காங்க,மேகலாவுக்கு காயந்தான் கொஞ்சம் அதிகமா இருக்காம்.அதுக்கு தான் ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்காம்மா.
ருத்ரன் அங்கிருந்து இலங்கைக்கு கிளம்பியாச்சாம் மா.கண்ணன் சார் இப்போ தான் கால் பண்ணி சொன்னாங்களென்றார்.
சத்தியமூர்த்தி,தாரா வாயென்று அழைத்து போய் விஷயத்தை கேட்க, அழுது கொண்டே தனது தங்கையும், அவள் வீட்டுக்காரரும் இறந்துவிட்டதை சொல்லி கதறி அழுதார்.
கேட்ட சத்தியமூர்த்திக்கும் வேதனையாக தான் இருந்தது.நீ அழாதே என்றவர் உடனே ஃபோன் பண்ணி கோபியை வர வைத்தார்.
என்னாச்சோயென்று கோபியும்,அவன் அப்பாவும் பதறியவாறு அங்கு வந்தவர்கள் மச்சான் என்னாச்சியென்று கோபியின் அப்பா கேட்க,அவரிடம் விஷயத்தை சொன்னார்.
கோபியும் ஃபோனில் செக் பண்ணி பார்த்தவன்,மாமா நைட் 12.30 க்கு இலங்கைக்கு போக ஏர்இந்தியா ஃப்ளைட் இருக்கு.
இப்பவே மணி 10.30 ஆக போகுது. இப்போ நீங்களாம் கிளம்பினால் அந்த ஃப்ளைட்டை புடிச்சிடலாம்.
இல்லையென்றால் திருச்சி போய் தான் மாறணுமென்க,நீ அதிலே டிக்கெட் போட்டுரு கோபி என்றவர்,தாரா நீ போய் எல்லாரையும் தயாராக சொல்லி கூப்பிட்டு வாமா என்றவாறு,தனது அறைக்கு சென்றார்.
அதைப்போல் எல்லாரும் தயாராக, கோபியும் அவனுக்கு தெரிந்த பையனை வர வைத்திருக்க ஆளுக்கொரு காரில் இவர்களை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு வந்தவர்கள் அவர்களுக்கான ஃப்ளைட்டில் ஏற்றி விட்டனர்.
சங்கரு பார்த்து போப்பா என்க,நான் போய்க்குறேன்யா.நீங்களாம் நல்லபடியாக போய் சேர்ந்துட்டு போன் போடுங்க என்றவர்,மாப்பிள்ளை தைரியமாக போங்கள்.மனச விட்டுறாதீங்க.நீங்க தான் இப்போ அங்க ஆறுதலாக இருக்கணுமென்றார்.
பின்னர் இவர்களும் சொல்லிக்கொண்டு ஃப்ளைட்டின் உள்ளே சென்றனர்.
திருச்சியிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் இலங்கையில் இருக்கும் அனுராதபுரம் ஏர்போர்ட்டிற்கு சில மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.
மூவரும் வெளியே வர,ருத்ரன் வீட்டு டிரைவரும் காரோடு அவர்களுக்காக வெய்ட் பண்ண,பின்னர் இவர்கள் மூவரும் காரில் ஏறியதும்,புறப்பட்ட காரும் அங்கிருந்து களுத்துறையை நோக்கி சென்றது.
மூன்று மணிநேர பயணத்தில் சுந்தர் வீட்டிற்கு வந்து சேர,அங்கே தெரிந்தவர்களெல்லாரும் அங்கங்கே குழுமி இருந்தனர்.
ஆலீஸும் ரஞ்சனும் அங்கிருக்க, காரிலிருந்து இறங்கி வரும் இவர்கள் மூவரையும் பார்த்த ஆலீஸ் கதறி அழுதார்.
எதுவும் பேசாமல் நண்பனை இறுக்கமாக அணைத்த ரஞ்ஜன்,அவன் முதுகில் தட்டி கொடுக்க,ருத்ரன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகள்,ரஞ்ஜனின் தோள் பட்டையில் விழுந்தது.
சதூர்வேதமங்கலம்:
காலை உணவு வேளையும் முடிந்தது.
இவ்வளவு நேரம் அந்த இம்சைக்காரன் இங்கு வந்துருப்பானே,ஏன் இன்னும் வரலையென்ற யோசனையோடு பார்வையை வாசல் பக்கம் ஆர்கலி வைத்திருக்க,பாட்டிக்கு அவள் தேடல் புரிந்து,மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நேரமும் கடந்து சென்றது.
ஒரு வேளை அய்யா வேலையா இருப்பானோ?
அப்படி என்ன வேலை தான் இந்த மனுஷன் பார்க்குறான்?,எப்போ பார்தாலும் அந்த வீணா போன லேப்டாப்பையே கட்டிகிட்டு அழுறானே?..
பாட்டியும் துணி தைப்பதற்காக உட்கார்ந்து விட,ஆர்கலிக்கு தான் ரொம்ப போர் அடித்தது.
என்ன பண்ணலாமென்று யோசித்தவள்,பின்னர் எழுந்து தோட்டத்திற்கு சென்று,அங்கு செடியில் இருக்கும் பழுத்த மிளகாய்களை எல்லாம் தேடி பிடித்து பரித்து முடிக்க,ஆராமா என்றவாறு கருப்பாயியும் அங்கு வந்தார்.
மூவரும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்க சங்கரும் அங்கு வந்தார்.
என்னணா உங்க அய்யா வீட்டில் இன்றைக்கு வேலை இல்லையா என்றாள்.
இன்னைக்கு வயல்ல மருந்து போடுறது தான் டா.அது முடிஞ்சி தான் வரேன் என்க, ஓஓஓ சரி ணா.
டீ போடட்டுமா என்க,அதுலாம் வேண்டாம் டா என்றவாறு வாசல் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தவர்,என்ன மனுஷ வாழ்க்கை?..
யாருக்கு எப்போ என்ன நடக்குதென்று சொல்ல முடியலையே என்க,அதைக்கேட்ட பாட்டியோ அய்யா சங்கரு,யாருக்கு என்னாச்சியா என்க,என்னத்தை சொல்ல ஆச்சி...
மாப்பிள்ளையோட அத்தையும்-அவங்க வீட்டுகாரரும் நேற்று இரவு கார் ஆக்சிடெண்ட்ல செத்துப் போயிட்டாங்க.
நைட்டுக்கு திருச்சில போய் அவங்களை இலங்கைக்கு வண்டி(ஃப்ளைட்)ஏற்றி விட்டுட்டு,விடியற்காலை தான் நான் வீட்டிற்கு வந்தேன் என்க,என்னாஆஆ என்று மூன்று பேரும் அதிர்ந்தார்கள்.
அய்யோ மாமா,நீ என்னய்யா சொல்லுற என கருப்பாயி கேட்க,நெசந்தான் புள்ள.
நைட்டுக்கு நீங்கலாம் தூங்கிட்ட பின்ன அய்யாகிட்ட இருந்து போனு வந்துச்சி.
உடனே வா சங்கருனு சொல்ல,அவர் குரலே ரொம்ப பதற்றமாக இருக்க,உன் கிட்ட வயலுக்கு காவலுக்கு போறேனு எழுப்பி சொல்லிட்டு போனேன்.
அங்க போன பொறவு தான் எனக்கு விசயம் தெரியுது.
பாரேன்,பெத்த பொண்ணு எங்கையோ ஒரு நாட்டுல படிக்குது,இங்க ஆயி அப்பன் ரெண்டு பேரும் செத்து போயாச்சி.
மகளுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்,பெரிய டாக்டரா மவள் ஆவணும்னு எத்தனை ஆசையோட, கனவுகளோட இருவரும் இருந்துருப்பாங்களென்று சொல்லி சங்கர் கண் கலங்கினார்.
மூவருக்கும் இறந்தவர்களுக்காக வேதனை படுவதை தவிற வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆர்கலிக்கோ,தனது கணவனை பார்க்கணும் போல இருந்தது.
மாமா ஒரு போன் போட்டு விசாரிக்கலாமா என்க, இரு புள்ள
அங்க என்ன சூழல்னு தெரியலை.
அய்யா போயிட்டு போன் போடுறேனு சொன்னாங்க.செத்த பொறுத்து பாக்கலாம் என்றவர்,அப்படியே தனது கால்களை நீட்டி அந்த திண்ணையிலே படுத்துவிட்டார்.