• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
கனடா:

"அடியேய் என்ன சொன்னாலும் தயவு செய்து புரியும் போல தெளிவாக சொல்லுடி"அதை விட்டு மணிரத்தினம் படம் போல டயலாக் பேசாதே என்றவளின் பேச்சை கேட்ட ஆதிராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

ஏய் நான் என்ன அப்படி பெரிய ஜோக் சொல்லிட்டேன்,நீ பல்ல காட்டிக்கிட்டு இருக்க என்று கேட்டு ரியா முறைக்க, ஓகே கூல் கூல் செல்லம் என்றவள், தன் கடந்த காலத்தை பற்றி ஆதிராவும் சொல்ல தொடங்கினாள்..

ரியா,ரஞ்சன்,ருத்ரன் மாமா,ஆது அண்ணா,ரஞ்சனோட தங்கச்சி ராகினி,நான் எல்லாரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்.

சின்ன வயதில் இருந்தே அவங்க மூன்று பேரும் திக் ப்ரண்ட்ஸ்டி.

பணக்காரி என்ற திமிர் எனக்கு சின்ன வயதிலிருந்தே இருந்தது.ஸ்டேட்டஸ் பார்த்து தான் அந்த வயசிலே பழகுவேன்.

அப்போ நான் 10 த் படிச்சிட்டு இருக்கும் போது டியூஷன் போயிட்டு இருந்தேன். அங்கு பக்கத்து ஸ்கூல்ல படிக்கும் சிலரும் வர,கொஞ்ச நாளில் அவங்க கூட ப்ரண்ட்ஸ் ஆகிட்டேன்.ஸ்கூல் லீவ் விட்டாலே அவங்க கூட வெளியே சுத்த கிளம்பிடுவேன் டி.

அவங்களோடு இருக்கும் போது சில முறை ருத்ரன் மாமா,ஆது அண்ணன், ரஞ்ஜன் மூவரும் என்னை பார்த்து, இவங்க கூட உனக்கென்ன பேச்சுனு சத்தம் போடுவாங்க.

நான் அதெல்லாம் கண்டு கொள்ளாம அவங்க கூட நட்பாக தான் இருந்துக்கிட்டு இருந்தேன். அப்படித்தான் ஒரு நாள் என்ன ஆச்சுயென்றால்,எல்லாரும் பிக்னிக் போகலாம்னு பிளான் பண்ணாங்க.

நானும் வீட்ல சொல்லிட்டு அவங்க கூட கிளம்பி போயிட்டேன்.

அந்த குரூப்ல நீலன்னு ஒரு பையன். அவங்க அப்பா கட்சிக்காரர்.அவர் காரை தான் எடுத்துட்டு வந்தான். அந்த காரில் எல்லாரும் போனோம்.

போன இடத்தில் ஒரு பங்களா இருந்துச்சு.அங்க தான் தங்கி இங்குள்ளதை சுற்றி பார்க்க போறோமென்று சொன்னாங்கள்.

அந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் அருவி ஒன்னு இருந்துச்சி. சரி முதல் அருவியில போய் விளையாடலாமென்று போனோம்.

நானும் இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் வேற பக்கம் குளிக்க போயிட்டோம்.

இதுக்கு நடுவுல அந்த பசங்க எல்லாரும் சேர்ந்து,நாங்க குடிக்கிற கூல்ட்ரிங்க்ஸ்ல எதையோ கலந்திட்டானுங்க போல.

அது ஒரு பிக்னிக் ஏரியாடி.எங்க நேரம் போல,அப்போ ருத்ரன் மாமா அவரோட இரண்டு ஃப்ரெண்ட்ஸும் அங்க வந்திருந்தாங்க.

வந்தவங்க எங்கள பார்க்கல.நாங்க மறைவா இருந்த இடத்திலிருந்து பார்க்கும் போது,அவங்க வருவது எங்களுக்கு தெரிந்தது.

எனக்கு ஒரே ஷாக்!!.

என்னடா இவங்க நம்மளை தேடித்தான் வந்தாங்களான்னு நினைச்சிட்டு இருக்கும் போது, அவங்க மூன்று பேரும் ஜாலியா அருவி பக்கம் போவது தெரிந்தது.

நல்ல வேளை நம்ம வந்தது தெரியாது என நானும் குஷியாகி,ஜாலியா குளிச்சிட்டு நாங்க மூணு பேரும் வீட்டுக்கு வந்தா,அங்க நீலன் டைனிங் டேபிள் மேல சாப்பாடு பார்சலை எடுத்து வச்சிட்டு இருந்தான்.

எங்களை பார்த்தவன் சரி சரி வாங்க. முதல்ல சாப்பிடுங்க என்க,நாங்க எல்லாருமே சாப்ட உட்கார,அந்த நேரம் பார்த்து எனக்கு அப்பா கிட்ட இருந்து போன் வந்தது.

நான் பேசிட்டு வரும் போது அந்த ரெண்டு பொண்ணும் இல்லை.எங்கே ரோஜாவும்,ஹீரலுமென கேட்க,அவங்க சாப்பிட்டு டயர்டா இருக்கென்று ரூமிற்கு போய்ட்டாங்க.

நீ தான் இன்னும் சாப்பிடாம இருக்க. சீக்கிரம் சாப்பிடு ஆதிரான்னு சொல்ல,நானும் சாப்பிட்டு முடிக்க, இந்தா உனக்கு பிடிக்கும் என்பதால் பன்னீர் சோடா வாங்கி வச்சிருக்கேனென்று நீலன் கொடுக்க, நானும் வாங்கி பாதி குடிச்சேன்.

எனக்கு அந்த டேஸ்ட் ஏதோ ஒரு மாதிரியா இருந்துச்சு.வேண்டான்னு சொல்லிட்டு எழ,இல்ல பரவால்ல. உனக்காக ஆசைப்பட்டு வாங்கினேன்.

முழுசா குடிமா ஆதிரானு அந்த நீலன் பிடிவாதம் பண்ண,எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு.அதான் வேண்டாம்னு சொல்றேன்.

விட வேண்டிய தானே.அதை விட்டு என்ன பிடிவாதம் நீலன்னு நான் கேட்க,உன்னை அவ்வளவு சீக்கிரம் விடுறதுக்காடி,இங்க நான் கூப்பிட்டு வந்தென்னு சொல்லி என் மேல கைய வச்சான்.

பாதி சுயநினைவு எனக்கு இல்லை. இருந்தாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு அது தப்பென்று உணர்த்த,அவன் கையை தட்டி விட்டுட்டு அங்கிருந்து நான் வெளியில் ஓட ஆரம்பிச்சிட்டேன்.

அப்படி ஓடும் போது தான் எதிரில் வந்த ரஞ்ஜன் மேலே மோதி கீழ விழுந்துட்டேன்.கீழே விழுந்த போது அடிபட்ட தழும்பு தான் இந்த நெற்றில இருக்கிறது என்று காட்டினாள்.

அதுக்கப்புறம் எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியலைடி.நான் கண் திறந்து பார்க்கும் போது வீட்டில் படுத்துருந்தேன்.

அம்மா தான் சொன்னாங்க,சாப்பிட்ட பொருள்ல போதை மருந்து கலந்திருக்காங்களென்று.

ரோஜாவையும், ஹீரலையும் அங்கிருந்த பசங்க சேர்ந்து ரேப் பண்ணிட்டானுங்க.

இது பெரிய இஸ்யூ ஆகி அங்க இலங்கை முழுவதும் பள்ளி மாணவிகள் இப்படி என்று பேப்பர்ல எல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு.நல்ல வேளை என் பேர் அதில் வரலை.

என்னை பார்க்க வந்த மூன்று பேரும்,உங்கிட்ட படிச்சு படிச்சு சொன்னோமே,கொஞ்சமாவது கேட்டியானு ஆது அண்ணன் என் கன்னத்தில் ரெண்டு விட்டார்.

யாரையும் பார்த்து பேச மனசு வரலை. அவ்வளவு குற்ற உணர்ச்சியாக இருந்தது.

பிறகு தான் மெடிசின் படிக்க சென்னைக்கு வந்துட்டேன்.அப்போ மாமா பங்கிற்கு ரெண்டு அடி குடுக்கும் போது,டேய் போதும்டாயென்று ரஞ்சன் தான் வந்து தடுத்தார்.

அப்போ தான் அவர் மேல எனக்கு ஒரு சின்ன சாஃப்ட் கார்னர் வந்துச்சி.அது நாளாக நாளாக காதலா மாறிடுச்சிடி.

இப்போ என் காதல் கல்யாணத்தில் வந்து நிற்குது.இவ்வளவுதானென்று ஆதிரா சொல்லி முடிக்க,அனைத்தையும் கேட்ட ரியாவோ அதிர்ந்து போய் இருந்தாள்.

தோழியை பார்த்தவள்,போயும் போயும் இவ்வளவு கேவலமானவள் கூட இத்தனை வருஷமா நட்பா இருந்தோமோயென்ற அதிர்வாடி என்க,ஆதிராவின் வார்த்தையில் உடனே சுதாரித்தவள்,என்ன பேச்சுடி இதெல்லாம் என்றவாறு தனது தோழியில் வலது பக்க காதை பிடித்து திருகினாள்.


சதூர்வேதமங்கலம்:

சரி பராவயில்லை சொல்லு.அப்படி என்னத்தை பொல்லாத உண்மைய நீ சொல்லுறேனென்று நான் கேட்கிறேன் என்றாள் ஆர்கலி.

ஹாஹாஹா...

இப்பவே சொல்லிடுறேன் டி.பிறகு என்னை திட்டக்கூடாதென மனசாட்சி டீல் பேச,சரி உன்னை நான் திட்டலை.நீ சொல்லு பார்க்கலாம் என்றாள்.

ஓகே...

அதாவது உன் புருஷனை எப்போ மண்டபத்தில் பார்த்தியோ,அப்பவே உனக்குள் இருந்த கோவமெல்லாம் போய்விட்டது. நீ வேண்டுமென்று கோவத்தை இழுத்து போத்திட்டு நிக்கிற.

நேற்றைக்கு உன் புருஷன் கையில் கரண்டியால் அடிச்சியே அது கூட பிளானிங் தான்.

எப்படினு சொல்லட்டுமா?,காயம் ஆறாமல் இங்கிருந்து ருத்ரன் உன்னை கூப்பிட்டு போவது டவுட்.

அக்ரிமெண்ட் படி நாளை கடத்தவே,நீ இப்படி பண்ணின போதுமா என்றது.

மனசாட்சி சொன்னது அத்தனையும் மறுக்க முடியாத உண்மையென்றாலும்,அதை ஏற்றுக்கொள்ள ஆர்கலியின் வீம்பு விரும்பவில்லை.

ஏய் சும்மா உன் பாட்டுக்கு ரீல் சுத்தாதடி.அப்படிலாம் ஒரு வெங்காயமும் இல்லை.

ஆஹான்.. நீ சொல்வது உண்மை அப்படி தானே என மனசாட்சி கேட்க, எஸ் நான் சொல்வது மட்டும் தான் உண்மையென்றவளோ கபோர்டில் இருந்த புக் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

நேரம் கடந்து செல்ல,உள்ளே வந்த பாட்டி மதிய சாப்பாட்டிற்கு அழைத்தார்.அதுக்குள்ளேவா என்றவாறு மணியை பார்க்க,மதியம் இரண்டு மணியென்று கடிகாரம் காட்டியது.

அய்யோ பாட்டி,புக் படிக்க ஆரம்பித்ததும் நேரம் போனது தெரியாமல் அதில் மூழ்கிட்டேன். மன்னிச்சிடுங்க பாட்டி என்க,அட இதில் என்ன ஆரா கண்ணு இருக்கு.

இத்தனை மாசமும் தான் அவதி அவதியா அள்ளி வாய்ல போட்டுக்கிட்டு பள்ளிக்கூடம் ஓடுவ. ஏதோ இந்த நாலு நாளா தான் நிம்மதியா சாப்டுற கண்ணு.

உனக்கு ஆக்கி போடாமல் வேறு யாருக்கு கண்ணு இந்த கிழவி செய்ய போறேன்.வா வா என் பேர புள்ளைங்களுக்கு பசி வந்துருக்குமென்று சொல்லியபடியே அங்கிருந்து சென்றார்.

பரவாயில்லை பாட்டியையாவது இந்த கடவுள் நமக்கு கொடுத்துருக்கானே, இது போதுமென்று சொல்லியவள், எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு சென்று சில நிமிடத்தில் ப்ரஷாகி ஹாலிற்கு வந்தவள்,அப்படியே ஆணி அடித்த போல நின்றாள்.

வாவ் பாட்டி உங்க கை பக்குவம் அல்டிமேட் என்றவாறு,சாம்பார் சாதத்தை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான் ருத்ரன்.

பாட்டி அந்த ஊறுகாய் கொஞ்சம் இங்க வைங்க,அப்படியே அப்பளத்தையும் கொஞ்சம் உடைத்து சாதத்து மேல போடுங்க.ஒரே கையால் சாப்ட கஷ்டமாக இருக்கென்றான்.

சரி கண்ணு என்றவர்,ருத்ரன் கேட்டது போல செய்தவர்,இன்னும் கொஞ்சம் சோறு போடட்டுமாயா என்க, கண்டிப்பா வேணும் பாட்டி.

இப்படிலாம் கிரி செய்யமாட்டாங்க என்றவாறு ரசித்து,ருசித்து சாப்பிட்டான்.

இந்த கடன்காரனை விட்டா எல்லாத்தையும் காலி பண்ணிட்டு போய்டுவான் போலடி ஆர்கலி.

சீக்கிரமாக போய் நீயும் சாப்பிடு. இல்லை குக்கரையும் சேர்த்து முழுங்கிடுவான் போலவென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், கிச்சனிற்குள் சென்று தனக்கு தேவையானதை தட்டில் வைத்துக்கொண்டு வந்தவள், தரையில் உட்கார்ந்தவள்,வாங்க பாட்டி நீங்களுமென்றாள்.

நீ சாப்பிடு ஆராமா.தம்பி சாப்பிடுது இல்லையா பார்த்து பரிமாற வேண்டாமாயென்று பாட்டி சொல்ல,அட இவ்வளவு தானா, இப்போ பாருங்க என்றவன்,தட்டோடா ஆர்கலி பக்கத்தில் போய் உட்கார்ந்தவன்,நீங்களும் வாங்க பாட்டி சரியாகிடுமென்றான்.

தனது அருகில் உட்கார்ந்திருப்பவனை முறைத்து பார்க்க,ஏய் உன் மடியில ஒன்னும் நான் உட்காரவில்லை.பாட்டிக்காக தான்.

பாட்டி உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்க,ம்ம் கேளு கண்ணு என்றார்.

ம்ம்...உங்க பேர் என்னவென்க, விசாலாட்சி வனராசா என்றார்.

அந்நேரம் சாப்பிடுபவனுக்கு புரையேற இப்போ பாருடா என்றவள் பார்த்து பார்த்துயென்று இடது கையால் ருத்ரனின் தலையில் வேகமாக தட்டினாள்.

கண்ணில் நீர் வழிய இருமியவன் டீலு டீலு ஹோய் டீலு டீலு என்று சொல்ல, அடக்கடவுளேயென்று அதிர்ந்து போனாள்!!
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
ஹாஹாஹா என சிரித்தவன், ஹலோ மை டியர் சில்லி பொண்டாட்டி,உன் டீலு பந்தயத்தில் நீ ரொம்ப சீக்கிரமாவே தோற்று போய்டடி...

என்னடி டீச்சர் நீ?

இவ்வளவு மக்கா இருக்கியே?, உனக்கு போய் எப்படி கண்ணன் அங்கிள் டீச்சர் வேலை கொடுத்தாங்க?

நீ பேசிய விஷயமே உனக்கு சுத்தமா ஞாபகம் இல்லாம இருக்கும் போது,உன் கிட்ட பாடம் படிக்கும் பசங்கள் எந்த லட்சணத்தில் இருப்பாங்கள்?.

ஆனாலும் நீ எனக்கு பயங்கர டப் கொடுப்பேன்னு,நான் வேற உன்னை எப்படி சமாளிக்கிறது என்று பயங்கரமாக யோசித்து கொண்டு இருந்தேன் டி.

ஆனா என் பொண்டாட்டி இப்படி ஐஸ்கிரீம் போல உருகி போவனு நான் எதிர்பார்க்கலையே??

ஆண்டவா நீ என் பக்கத்துல தான் நிக்கிற பா.இந்த அடியேன் மேல் இருக்கும் உன் கருணையோ கருணை,உன் ஆதரவு தயவு செய்து என்றும் இந்த அப்பாவியோடு தொடரட்டுமென்று மேலே பார்த்து சொல்ல,ஆர்கலிக்கோ அவன் பேசுவதை கேட்க கேட்க கொலை காண்டு ஏறியது.

அடக்கடவுளே...இவன்கிட்ட போய் இப்படி தோத்து போயிட்டியே ஆர்கலி. இனி இவன் ஆடும் ஆட்டத்துக்கு எல்லாம் நமாளும் ஆடித்தான் ஆகணும்.

இப்படி ஒரு சோதனை வருமென்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையே.ஏண்டி கொஞ்சமாவது சுதாரிச்சிருக்க வேண்டாமா??என்று தனக்குள்ளே முணு முணுத்துக்கொண்டாள்.

பாட்டியும் அவர்கள் விளையாட்டை கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டு எழுந்தவர்,தோட்டத்தில் உள்ள பெஞ்சில் வந்து உட்கார,இயற்கை காற்றின் மயக்கத்தில்,பெஞ்சிலே படுத்து தூங்கிவிட்டார்.

சரி சரி சாப்பிடு.மற்ற கதையை பிறகு பேசிக்கலாமென்றவன்,சாதத்தை ஸ்பூனில் எடுத்து ஆர்கலின் முன்பு நீட்ட,என்னவாமென்றாள்.

உனக்கு எவண்டி கொடுத்தாங்க. வயிற்றில் இருக்குற என் பிள்ளைக்காக கொடுக்கிறேன்.

இந்த நிமிஷத்திலிருந்து,நான் என்ன சொல்லுறேனோ அதை மட்டும் தான் நீ கேட்கணும்.

உனக்கு அக்ரிமெண்ட் ஞாபகம் இருக்கென்று நினைக்கிறேன்.எந்த கிராஸ் கொஸ்டிணும் என் கிட்ட கேட்க கூடாது புரியுதா.

ம்ம் கமான் ஆ காட்டுடி என்றான்.

நானே டீச்சர் எனக்கு பாடம் எடுக்குறானேயென்று தனக்குள் சொல்லிக்கொண்டவள்,நல்லா சிக்கிட்டடி.

புலி வாய்ல தலைய குடுத்தாச்சி. இனி குத்துது குடையுதென்றால் ஒரு புண்ணியமும் இல்லையென்று முணு முணுத்தவள்,வாயை திறந்து ஆ என காட்ட,தன் காதல் மனைவிக்கு சாப்பாட்டை ஊட்டினான்.

ஆர்கலிக்கு அவனின் செயலால் அழுகை வருவது போல இருந்தாலும், அதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இதுவரை அவளுக்கு யாருமே இவ்வளவு உரிமையாக ஊட்டியதில்லை.முதல் முறையாக வளையல்காப்பிற்கு தான் அனைவரும் வந்து சாதம் ஊட்டியது.

மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சாதத்தை ஊட்டியவனுக்கு, ஆர்கலியின் மனதை புரிந்து கொள்ள முடிந்தது.

இனிமே உன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும்தான் டி என தனக்குள் சொல்லிக் கொண்டவன், இன்னும் கொஞ்சம் சாப்பாடு என்று சொல்ல,வேண்டாம் என்று வேகமாக தலையசைத்தாள்.

ஓகே என்றவனும் சாப்பிட்டு முடித்து,ஒரு கையாலே பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய் கிச்சனில் வைக்க,அவனை பார்க்க பாவமாக தான் இருந்தது.இருந்தாலும் செய்யட்டுமென்று அமைதியாக இருந்தாள்.

ஓகே வந்து பெட்டில் படு,எனக்கு முக்கியமான வேலை இருக்கென்று ருத்ரன் சொல்ல,எதேஏஏ என்று அதிர்ந்தாள்!!.

ஏய் ஏய்... நீ நினைக்கிற போல ஒன்னும் இல்லடி.ரொம்ப கற்பனை பண்ணாதே.என் குழந்தை கிட்ட நான் பேசணும்.வா வந்து காட்டு என்றான்.

அட ஆண்டவா...!!

ஏம்பா என்ன இப்படி சோதிக்கிற என்று ஆர்கலி சொல்ல,அதை டீல் போடுவதற்கு முன்னாடி யோசிச்சி இருக்க வேண்டும்.இப்போ புலம்பி ஒன்னும் புண்ணியம் இல்லை.

சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாதே கமானென்று அறைக்குள் செல்ல, வேற வழி,போய் தான் ஆகணுமென்று பின்னாடியே சென்றவள்,ம்ம் பேசு என்று வேறு பக்கம் முகத்தை திருப்பியபடி உட்கார்ந்தாள்.

ஏய் இப்படி உக்கார்ந்தால் நான் எப்படி பேசுறது.ஒழுங்கா படு என்றான்.

பல்லை கடித்தவள்,முறைத்தவாறு பெட்டில் படுக்க,ம்ம் நெக்ஸ்ட் என்று புடவையை காட்ட, படுத்துறானேயென்று நினைத்தவள், வயிற்றின் மேலிருக்கும் புடவையை விலக்க,அந்நேரம் குழந்தைகள் அசைவதை கண்ட ருத்ரன், செல்லமேயென்று வயிற்றில் முத்தம் வைக்க,உடல் சிலிர்க்க அய்யோ என்று கத்தினாள்.

ஏய் ஏண்டி இப்படி கத்துறா?

யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க?

என்னமோ உன்னை நான் ரேப் பண்ற போல நினைக்க மாட்டாங்களா?என ருத்ரன் கேட்க,ரொம்ப ஓவரா தான் பேசுறீங்க என்றாள் ஆர்கலி.

எஸ் டி.

ஏனென்றால் நான் தான் வின்னர்.

அப்போ,நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன்.உன் தலையெழுத்து கேட்டு தான் ஆகணுமென்றவன்,செல்ல குட்டி அப்பா பேசுறது உங்களுக்கு கேட்குதாடா?

எப்படி இருக்கீங்க?

எப்போ அப்பா கிட்ட வருவீங்கள்?

சிலருக்கு நாம் பேசுவது கேட்டு வயிற்றெரிச்சலா இருந்தாலும் இருக்கும்.வேற வழி இல்லை.தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்பா உங்க கிட்ட பேசிட்டு இருப்பேனென்றான்.

பொள்ளாச்சி: பிளாஷ்பேக்...

சத்தியமூர்த்தி கவுண்டரால் தனது மகன் வயிற்று பேரனின் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார்.

ஹலோ சத்யா.எதுக்கு இவ்வளவு கேள்விகள்.எல்லாரும் வீட்டில் தான் இருக்காங்கள். அங்கே போனால் பார்த்துடலாம். அதை விட்டு எதற்கு இவ்வளவு டென்ஷனென்று டாக்டர் குணாளன் கேட்க,ஓகே டாக்டர் என்றார் சத்தியமூர்த்தி.

சரி நீங்க இருங்கள்.இதோ நாங்க வந்துடுறோமென்று சொல்லியவர், பெரியப்பா வாங்களென்று வெளியே அழைத்து போனவர்,எனக்கு தெரிந்து சில விஷயங்களை அவர் மறந்துட்டாறென்று நினைக்கிறேன்.

இவ்வளவு தூரம் அவருக்கு நினைவில் இருக்கே அதே பெரிய விஷயம் தான்.ஏனென்றால் நாலு வருஷத்திற்கு முன்னர் அவர் எந்த நிலமையில் இங்கு வந்தாரென்று நமக்கு நல்லாவே தெரியும்.

கொஞ்ச நாள் போகட்டும், பிறகு ஒவ்வொன்னா சொல்லலாம். அவருக்கு ஞாபகம் வருதாயென்று பார்ப்போம்.இல்லை இப்படியே விட்டுறலாம்.

இதால் அவருக்கு மீண்டும் எந்த பாதிப்பும் வரக்கூடாதுங்க பெரியப்பா. நான் சொல்வது உங்களுக்கு புரியுது தானே என்று டாக்டர் குணாளன் கேட்க,சரி கண்ணு. இப்போ வீட்டுக்கு கூப்பிட்டு போகட்டுமா என்றார்.தாரளமாகப்பா. ஏற்கெனவே நான் எல்லாம் தயாராக தான் வச்சிருக்கேன்.
இதில் நீங்க ஒரு கையெழுத்து மட்டும் போடுங்களென்று பேப்பரை நீட்ட, அவரும் அதில் கையெழுத்து போட்டார்.

மேலும் அரை மணி நேரம் சென்ற பிறகு எல்லா ஃபார்மாலிட்டிஸும் முடித்துக் கொண்டு,சத்தியமூர்த்தி கவுண்டர் தனது மூன்று பேரப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறியவர்,தங்களது ஊரான பொள்ளாச்சியில் இருக்கும் வேடன்புத்தூரை நோக்கி பயணமானார்.

காரில் உட்கார்ந்திருந்த சின்ன பையன் சத்தியமூர்த்தியை உற்று பார்க்க,அதில் அவனின் தந்தை சரவணனின் சாயல் தெரிய,அப்பா என்று போய் அவர் மடியில் உட்கார்ந்து கொண்டான். சிறுவன் தன்னை அப்பா என்று அழைத்தது சத்தியமூர்த்திக்கு மெய் சிலிர்த்து போனது.

இரண்டு கைகளாலும் சிறுவனை அணைத்து முத்தமிட்டவர்,உன் பெயர் என்னப்பா என்க,வெற்றிவேல் என்று சிறுவன் சொல்ல சூப்பர் சூப்பர் என்றவர்,அருகில் இருந்த வள்ளியம்மையை பார்க்க,அண்ணா என்று அவர் சொல்ல,புது உறவுகளின் அழைப்பு,சத்தியமூர்த்திக்கு இதுவரை அனுபவிக்காத உணர்வாக இருந்தது.

ஒரு மணி நேரத்தில் வேடன்புத்தூருக்கு வந்து சேர்ந்தனர்.காரிலிருந்து இறங்கிய சத்தியமூர்த்தி வீட்டை பார்த்துவிட்டு, இவ்வளவு பெரிய வீடா என்றார்.

உள்ளே வா கண்ணு என்று பெரியவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர், வள்ளி அண்ணனுக்கு குடிக்க எதாவது கொண்டு வாம்மா என்க, இதோ தாத்தா என்று வள்ளியும் உள்ளே சென்றாள்.

அந்த ஹாலை சுற்றி பார்த்த சத்தியமூர்த்தி,அங்கிருந்து காலண்டர் பார்த்து திகைத்துப் போயிருந்தார். அதில் இருந்த வருடங்கள் தான் அவர் கண்ணீர் பட்டது.எழுந்து போய் காலண்டரை பார்த்தவர்,தாத்தா இப்போ எந்த வருஷம் என்று குழம்பினார்.

சத்யா இங்க வா கண்ணு,ஒன்னும் இல்லைய்யா நீ முதல்ல வந்து உட்காருய்யா என்று பெரியவர் பதற, தாத்தா எனக்கு ஒன்னும் இல்லை.

என்ன ஆச்சு?,சொல்லுங்களென்க. சத்யா இப்போ தான் கண்ணு நம்ப வீட்டுக்கு வந்துருக்க.கொஞ்ச நாள் போனதும் தாத்தாவே உனக்கு எல்லாம் சொல்லுறேன் என்க,அவராலும் பெரியவர் வார்த்தையை தட்ட முடியவில்லை.

நாட்களும் ஓடியது..

சத்தியமூர்த்தி இங்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது.வழக்கமாக செக்கப்பிற்கு சத்தியமூர்த்தியை அழைத்து சென்ற போது,டாக்டர் குணாளனிடம் கவுண்டர் விஷயத்தை சொல்ல, சரிங்க பெரியப்பா சொல்லி பார்ப்பது நல்லது தான்.

மறுநாளும் விடியல் அழகாய் ஆரம்பமானது. இந்த இடைப்பட்ட நாளில் பெரியவரோடு சத்யாவும் தங்கள் வயல்காட்டிற்கு,காலை மாலை இரண்டு வேளையும் சென்று வருவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

ஊரில் உள்ள எல்லாருக்கும் சந்திரன் ஐயா புள்ளை சத்தியமூர்த்தி என்பதும் தெரிந்தது.

பார்ப்பவர்களெல்லாரும் பெரியவருக்கு குடுத்த மரியாதையை, சத்தியமூர்த்திக்கும் கொடுத்தார்கள்.

தங்களது குல தெய்வமான பேச்சி ஆத்தாளிடம் மனமுறுக வேண்டிய பெரியவர்,தனது நெற்றி நிறைய விபூதியை பூசிக்கொண்டு ஹாலிற்கு வந்து உட்கார,தாத்தா என்றவாறு டீ டம்ளரை வள்ளி நீட்ட,குடு கண்ணு என வாங்கி குடித்தார்.

வயலுக்கு போன சத்தியமூர்த்தியும், வெற்றியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

காலை டிபனை எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, குணாளன் தன் மனைவி பிரீத்தியுடன் வீட்டிற்கு வந்தார்.

ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா என்று பெரியவர் காலை தொட,வா தாயி உட்காரு.தீர்க்க சுமங்கலியா இரு தாயி.

உடம்பு நல்லா இருக்கா?பிள்ளைங்க எப்படி இருக்காங்க தாயி என்று கேட்டார்.

எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா.

அத்தையும்,மாமாவும் உங்களை ரொம்ப விசாரிச்சேன்னு சொன்னாங்க.நம்ப குணவதி( குணாளன் தங்கை)வீட்டுக்கு பசங்களை கூட்டிட்டு போயிருக்காங்க மாமா என்றாள்.

சித்தி,சித்தப்பா,வாங்க சாப்பிடலாம் என்க,வரும் போது தான் வள்ளி சாப்பிட்டு வந்தோம்.டீ மட்டும் உன் கையால குடு என்றார் பிரீத்தி.

உள்ளே சென்ற வள்ளி இருவருக்கும் இரண்டு டம்ளரில் டீ எடுத்துட்டு வந்து கொடுக்க,ஒரு வாய் குடித்தவர்,என் பொண்ணு டீக்கு இந்த கோயம்புத்தூரை எழுதி வச்சாலும் போதாது என்றார் குணாளன்.

சிறிது நிமிடங்கள் சென்றது.

வள்ளி நீ வெற்றியை கூப்பிட்டு போயென்று ஜாடையாக குணாளன் சொல்ல,சரியென்று தலையாட்டியவள்,வெற்றி கண்ணா நாம போய் படம் வரைவோமாயென்க, போலாம்த்தை என்றான்.

சரி வாங்கயென்று சிறுவனோடு மேலே உள்ள அறைக்கு சென்று விட்டாள்.

சத்தியமூர்த்தி உங்ககிட்ட சில விஷயம் பேசணும் பா என்க,சித்தப்பா எதுக்கு இந்த வாங்க போங்க என்ற மரியாதை.நீங்களும் சத்யா என்று சொல்லுங்கள் என்றார்.

சரி சத்யா,உன்கிட்ட சில விஷயம் பெரியப்பா இப்போது சொல்லலாமென்று இருக்காங்க.அதைக் கேட்டு உனக்கு ஏதாச்சும் ஆகுற போல இருந்தால்,நீ அதை நிறுத்த சொல்லிடு என்க, சரிங்க சித்தப்பா.

தாத்தா நீங்க சொல்லுங்களென்க, சத்யா முதல்ல உன் கிட்ட என்னோட பையனும்,மருமகளும் என்னை பற்றி என்ன சொல்லியிருக்காங்கப்பா? என்று கேட்டார் சத்தியமூர்த்தி கவுண்டர்.



ஆர்கலி எங்கே..?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top