• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
சதூர்வேதமங்கலம்:

"ருத்ரனை பார்த்த ஆர்கலிக்கு உள்ளுக்குள் திக்கென்று இருந்தது.அவன் போட்டிருந்த டி-ஷர்ட் அவளுக்கு பொள்ளாச்சியில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வரிசையாக ஞாபகப்படுத்த,அவளையும் மீறி அந்த நிகழ்வு அவள் முகத்தில் சிறிது வெட்கத்தை கொடுத்தது"

மனைவியின் முகத்தை கவனித்துக் கொண்டே அங்கு வந்தவனுக்கு அவள் எதை நினைத்து இப்படி நாணி சிவக்கிறாள் என்பது புரிந்து,ஹா ஹா ஹா பிளான் பண்ணி தாண்டி இந்த டிஷர்டை போட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இயல்பாக மனைவியின் அருகில் வந்து ருத்ரன் உட்கார,இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?..

எதுக்கு இப்படி வந்து பக்கத்துல உக்காருறீங்க?

அதான் எத்தனையோ சோபா இங்க இருக்கே,அதுல போய் உட்கார வேண்டியதானே என்று அவள் கேட்க என் பொண்டாட்டி பக்கத்தில் நான் உட்காருரேன் டி.இதுல உனக்கு எங்க கசக்குது?

உன்கிட்ட ஒன்னும் என் பக்கத்துல வந்து உரசி உட்காருன்னு நான் கெஞ்சி கதறவில்லையே என்று ருத்ரன் கேட்க,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றாள்.

ஓஓஓஓ...

வேறு எதுக்கு குறைச்சல் சொல்லு பாக்கலாம்.அழகு இல்லையா? அறிவு இல்லையா?கம்பீரமில்லையா? ஹேண்ட்ஸமா இல்லையா? சொல்லுடி.

ஆண் மகனுக்கு தேவையான அத்தனையும் அம்சமா கச்சிதமா பொருந்தியவன் டி உன் சுவீட் புருஷனென்று சொல்ல,ஆமா ஆமா உன்கிட்ட எல்லாம் இருக்கு.

ஆனால் முக்கியமா ஒரு மனுஷனுக்கு இருக்க வேண்டிய,மனித தன்மை சுத்தமா இல்லாத பிறவியென்றாள் ஆர்கலி.

ஆஹான்...

அப்படியா?

மனிதத்தன்மை இருப்பதால் தாண்டி அன்னைக்கு ரெண்டு ரவுண்டோடு நிறுத்தினேன்.இல்லையென்றால் நீ என்னவாகியிருப்பாய் என்பதை கொஞ்சம் நினைத்து பாருயென்றான்.

ருத்ரன் சொன்னதை கேட்டு பல்லை கடித்தவள்,வாயை மூடு என்க, பட்டென்று மனைவியின் உதட்டோடு தனது உதட்டை பொறுத்தி முத்தமிட்டான்.

ம்ம் ம்ம் என்று அவள் திமிர,வலிப்பது போல அவள் உதட்டை கடித்தவன், காலடி சத்தம் கேட்டு அவளிடமிருந்து விலகி,நல்ல பிள்ளை போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டான்.

படுபாவி பயல்.கொஞ்ச நேரத்துல என்ன வேலை பண்ணிட்டான். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க என்று ருத்ரனை பார்த்து கோவமாக கேட்க,என் பொண்டாட்டி சொன்னதை தாண்டி நான் செய்தேன்.

நீ என்ன சொன்ன என்பதை நீயே நல்லா யோசிச்சு பாருடி என்றான்.

ஆர்கலியோ அவன் பேச்சில் ஒரு நொடி குழம்பியவள்,என்ன சொன்னோம் என்று யோசித்துப் பார்க்க,வாயை மூடு என்று சொன்னது நினைவு வந்தது.

"வாய மூடுன்னு சொன்னேன் என்றாள்".

அதை தாணடி பண்ணுனேன் என்று கண்ணடிக்க,உங்க வாயை தான் மூடுங்கன்னு சொன்னேன்.என் வாயை இல்லை என்றாள்.

நீ எங்கே டி இப்படி தெளிவாக சொன்ன?

வாய மூடு என்று மொட்டையா சொன்ன.சரி நம்ப பொண்டாட்டி ஆசையா லிப் கிஸ் கேக்குறான்னு நானும் உடனேகொடுத்தேன் அவ்வளவு தான்.

பின்னர் தன்னிடம் இருந்த ஃபைலை எடுத்து ருத்ரனின் முன்பு ஆர்கலி நீட்ட, அதை வாங்கியவன்,எப்படி செக் இல்லை கேஷா வேணுமா? என்று கேட்க கேஷாவே வேண்டுமென்றாள்.

ஓகே அட்வான்ஸ் எதாவது வேண்டுமா என்று கேட்க கண்டிப்பாக சார்,நிச்சயமா வேண்டும்.

ஏனென்றால் இந்த பிரசவத்தில் என்ன வேணாலும் நடக்கலாமென ஆர்கலி சொல்லும் போது,ஏய் வாய மூடுடி என்று அவள் தொண்டையைப் பிடித்தான்.

மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன் உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு வெறும்,வயிற்றில் இருக்கும் குழந்தை மட்டும் தான்,அது தான் நம்முடைய அக்ரீமெண்ட்.

மற்ற படி நான் என்ன பேசணும் என்ன பேசக்கூடாது என்று சொல்ல வேண்டிய உரிமை உங்களுக்கு கிடையாது. முதலில் என் மேல் இருந்து கையை எடுங்கள் என்று தட்டி விட்டாள்.

பல்லைக் கடித்து தன்னை சமாளித்தவன்,ஓகே மேடம் என்றவாறு,கையில் இருந்த ஃபைலை பிரித்து பார்க்க,அதில் ஆர்கலி சத்தியமூர்த்தி என்கும் கையொப்பம் இருந்தது.


ஓகே..இதோ வரேனென்று அங்கிருந்து அறைக்குள் சென்றவன்,கோபமாக ஃபைலை தூக்கி கட்டிலின் மேல் எறிந்தான். ஆர்கலி இதற்கு பணம் வாங்குவாள் என்பதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதும்,அவள் ஒரு நாள் கூட எனக்கு அது வேண்டும்,இது வேண்டுமென்று வாயை திறந்து கேட்டதேயில்லை.
பணத்தைப் பற்றி பேசினால்,நீ கோபப்பட்டு என்கிட்ட சண்டை போடுவ என்பதற்காக தாண்டி இந்த வரிகளை எழுத சொன்னேன். ஆனா இதுக்கு நீ எப்படி சம்மதிச்ச? என்று தலையில் கை வைத்தபடியே கட்டில் மேலே உட்கார்ந்து கொண்டான்.

சில நிமிடங்களில் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்க,எழுந்து போய் கதவை திறந்து பார்க்க,அங்கே ஆர்கலி தான் நின்று கொண்டிருந்தாள்.

அவள் கையைப் பிடித்து வேகமாக இழுத்தவன் அங்கிருந்து சுவற்றில் சாய்த்து,மேடத்துக்கு இப்பவே அட்வான்ஸ் வேணுமோ என்று, அவள் உதட்டை பிடித்து நன்கு திருகிக்கொண்டே கேட்க, வலித்தாலும் வெளியே காட்டிக்காமல் ஆமாம் என்றாள்.

பொள்ளாச்சி:

"வசுவோ அங்கு நடப்பதை எல்லாம் ஒரு பார்வையாளராக அமைதியாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்"

"சரிங்க தம்பி சுற்றி வளைத்து பேச வேண்டாம்.நேரடியாக விஷயத்துக்கு வரலாமே என்று சிம்ஹன் தாத்தா கேட்க,தாராளமாக வரலாம் சார் என்றார்.

இன்னும் என்ன சார் சார் என்று மாமா என்று கூப்பிடுங்கள் என்க,அதற்கு சத்தியமூர்த்தி சிரித்தார்.

"வள்ளி குடிக்க எதாச்சும் கொண்டு வந்து கொடுத்தியா என்று சத்தியமூர்த்தி கேட்க,அதெல்லாம் வந்த உடனே நாங்க குடிச்சாச்சி"

"அது மட்டுமில்லாமல் வரும் போதே நாங்க டிபன் சாப்பிட்டுட்டு தான் வந்தோம் என்றார் சுந்தரபாண்டியன்"

" ஓஓஓ, சரிங்க மாமா என தயங்கியபடியே கூப்பிட்டவர், உண்மையிலே என்ன நடந்ததென்று எனக்கு நினைவில்லை"

"வள்ளி என் ரூம்ல உள்ள கபோர்டில் நீலகலர்ல ஒரு பைல் இருக்கும் பாருமா.அதை கொண்டு வா என்க, இதோணா என்றபடியே உள்ளே போன வள்ளி சில நிமிடத்தில் ஃபைலோடு வந்தவர்,இந்தாங்கண்ணா என்க,வள்ளி அதை உங்க அண்ணி கிட்ட குடுத்து படித்து பார்க்க சொல்லுமா என்றார்"

" அண்ணி இந்தாங்கள் என்று ஃபைலை நீட்ட,யோசனையோடு வாங்கிய வசுந்தரா,பார்வையாலே என்னவென்று சத்தியமூர்த்தியிடம் கேட்டார்.

"தன் காதல் மனைவியின் பார்வை மொழியை ரசித்த சத்தியமூர்த்திக்கு சிரிப்பு வந்தது"

" படித்துப் பாரு தாரா என்க, ம்ம் என்றவாறு திறந்து படிக்க ஆரம்பித்தவரின் முகங்கள் காட்டிய பாவனையை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்"

" சில நிமிடங்கள் கடக்க வசுவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிவதும் மற்றவர்கள் பார்வையில் பட்டது"

" படிக்க படிக்க வசுவின் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீர், வார்த்தைகள் பார்வைக்கு படாமல் மறைத்து நிற்க,தன் கண்ணை மூடி நீரை கீழே சிதற விட்டு,ஃபைல் முழுவதும் படித்து முடித்த வசுந்தரா,நிமிர்ந்து சத்தியமூர்த்தியை பார்த்து, இங்கே நம்ப ரூம் எங்கே இருக்கின்றது என்றார்"

"சின்ன சிரிப்போடே வா என எழுந்து செல்ல,சத்தியமூர்த்தியின் பின்னால் வசுவும் சென்றார்"

"அப்படி என்ன தான் அந்த பைலில் இருக்கிறது என்றபடியே எழுந்து போன கிரிஜா பாட்டியும் அதை படித்துப் பார்க்க அவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பதை கண்டார்கள்"

" கதவை திறந்து உள்ளே போன சத்தியமூர்த்தியிடம் ரெஸ்ட் ரூம் எங்கே என கேட்க,கையை நீட்டி சொன்னார்"

" உள்ளே போய் சத்தமின்றி வசுந்தரா அழ,சிறிது நிமிடம் வெளியே நின்ற சத்தியமூர்த்தி,பின்னர் தயக்கமாய் அங்கிருந்த கதவை திறந்து பார்க்க,வசு அழுவது தெரிந்தது"

"தாரா என அவர் தோளில் தொட, மன்னிச்சிடு சத்தியென்று தனது கணவரை கட்டிக்கொண்டு வசு அழ, நீண்ட வருடங்களுக்கு பின்னர் தனது மனைவியின் ஸ்பரிசத்தை உணர்ந்த சத்தியமூர்த்திக்கு,நிழற்படமாய் ஏதேதோ நினைவுகள் அலையலையாய் வந்து சென்றது"

கனடா:

" ஹாலிற்கு வந்த ஆதிராவின் முகத்தை பார்த்தே அவள் மனநிலை ரியாவிற்கு புரிந்தது"

" எதுவும் பேசாமல் மௌனமாய் ரியா சிரிக்க,சொல்லிட்டு சிரிடி என்றாள்"

" விஷயத்தை நீ தான் சொல்லணும்டி என ரியா கேட்க,என்னத்தை நான் மேடம் கிட்ட சொல்லணும்?,ஓஓஓஓ நாளைக்கு எக்ஸாம் இருக்கே அதை பற்றி கேட்குறியா என்க,ஹேய் ஹேய் ரீல் அந்து போச்சுடி விளக்கெண்ணெய்"

" உனக்கு ரஞ்ஜன் அண்ணாக்கும் ஒரு தனி டிராக் ஓடிட்டு இருக்கு என்பதை,உன் முகத்தில் எரியும் பல்பே சொல்லுது.ஒழுங்கு மரியாதையா விஷயத்தை நீயே என்கிட்ட சொல்லுடி என்று தோழியை மடக்கினாள்"

"அய்யோ அவ்வளவு அப்பட்டமாவா தெரியுதென்று சொல்லியவாறு எழுந்து போய் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க,ஏனோ இதுவரை தன்னிடம் இல்லாத பொலிவு இன்று தனது முகத்தில் அதிகமாய் இருப்பதை ஆதிராவும் உணர்ந்தாள்"

" ஏய் கண்ணாடி வெடிச்சிடும் வெளியே வாடி என்க,ம்ம் என்றபடியே அங்கு வந்த ஆதிரா,ஏன் ரியா என்னை பற்றி நீ என்ன நினைக்குறடி என்று கேட்டாள்"

"பிசாசு என்னடி இது லூசு போல கேள்வி? என்று ரியா சொல்ல,இல்லடி நான் சீரியஸா தான் உன்கிட்ட கேட்கிறேன்.என்ன பத்தி நீ என்ன நினைக்கிற தயவு செய்து சொல்லு பார்க்கலாம் என்றாள் ஆதிரா"

"ஓஓஓ அப்ப ஓகே நல்லா சொல்லுறேன் கேட்டுக்கடி என்ற ரியா, என் தோழி ஆதிரா ரொம்ப அன்பானவள், அமைதியானவள்,நிதானமென்றால் எப்படியென்று அவள் கிட்ட தான் எல்லாரும் கற்கணும்"

"படிப்பில் ரொம்ப கெட்டிக்காரி. பாசத்தில் வானளவை விட பெரியவள்.யார் மனதும் கஷ்டப்படுற போல ஒரு வார்த்தை பேச மாட்டாள். மொத்தத்தில் என் ஆதிரா போல மென்மையானவள்,இந்த உலகத்திலே இல்லையென்று சொல்லி,தனது தோழியை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்"

"தனது தோழி பேசியதையெல்லாம் கேட்டு ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஆதிரா,நீ சொல்லுறவளும், பார்ப்பவளும் எல்லாம் இந்த ஐந்து வருஷமாக இருப்பவளை தான்.ஆனால் இந்த ஐந்து வருஷத்திற்கு முன்னர் நான் எப்படி இருந்தேன் என்பது உனக்கு தெரியுமா ரியா?...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
சதூர்வேதமங்கலம்:

"ஏய் என்னடா பண்ணுறயென்று? ஆர்கலி கேட்க,உனக்கு வாய் ரொம்ப நீளமாகிட்டுடி என்றவாறு, மனைவியின் வாயை தனது ஸ்டைலில் அடைத்தவன்,இன்னும் அவளோடு நெருங்க அவளின் வயிறு ருத்ரனுக்கு தடையாக இடித்தது"

"அவளோ,தன் இரண்டு கைகளாலும் ருத்ரனை அடிக்க,தனது இடது கையால் அவள் கைகளை இறுக்கி பிடித்தவன்,வன்மையாய் ஆரம்பித்த முத்தம்,நிமிடம் செல்ல செல்ல மென்மையாய் மாறியது"

"காதல் கொண்ட மனதான ஆர்கலிக்கு,கணவனின் இதழொற்றல் கிரக்கத்தை கொடுத்தாலும்,அவன் பேசிய வார்த்தைகளின் தாக்கம் இன்னும் அவளுக்கு குறையவில்லை"

"ம்ம் என தனது தலையை அசக்க, ருத்ரனின் செயல் மேலும் வேகத்தை கூட்டியது.இப்போ பாருடா என மனதிற்குள் கருவியவள்,அவனின் கீழ் உதட்டை நன்கு கடித்து வைக்க, ஆர்கலியின் பற்கள் ஏற்படுத்திய வலியால் ஆஆஆ என்று அவளிடமிருந்து தனது உதட்டை வேகமாக பிரித்தெடுத்தவன், ராட்சசியாடி நீ என்றபடியே உதட்டை தொட்டுப் பார்க்க,அதில் ரத்தக்கசிவு இருப்பது ருத்ரனின் பார்வையில் பட்டது"

"அடிப்பாவி நான்-வெஜ் சாப்பிடணும்னு ஆசை இருந்தால் என்கிட்ட சொல்ல வேண்டியது தானடி.அதற்கென்று இப்படியா கடிச்சு வைக்கிறது?

நீதான் டீச்சர் ஆச்சேடி.நல்லா விளக்கம் கொடுப்பாயே,அதை கொடுக்க வேண்டியதுதானே என்று, அவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு கேட்க,மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன் உங்கள் அக்ரிமெண்டில் ஒரு சின்ன சேஞ்ச் இருக்கு.

அதை சொல்லிட்டு போகத்தான் நான் இங்கு வந்தேன் என்றாள்.

ஆர்கலி சொன்னதை கேட்டவன், இல்லையே எல்லாம் சரியா தான இருக்கு.ஒரு முறைக்கு ஐந்து முறை நன்கு படிக்க பார்த்துட்டு தானே உனக்கு அனுப்பி வைத்தேன் என்று சொல்ல,இப்பொழுது கண்ணை கழுவி விட்டு நன்கு படித்து பாருங்கள் என்றாள்.

என்னடி சொல்ற என்றபடி வேகமாக போய் கட்டில் மேல் சிதறி கிடந்த ஃபைல் எடுத்து படித்து பார்க்க,அதில் கடைசி பக்கத்தில் எழுதியிருந்தது அவன் கண்ணில் பட்டது.

பின்குறிப்பு:

இந்த ஒரு வருடத்தில், எந்த காரணத்தைக் கொண்டும் ஆர்கலியின் மேல் என் விரல் நுனி கூட படாது என்பதை,ருத்ர வீர சிம்ஹனாகி நான் வாக்கு தருகிறேனென்று அதில் ஆர்கலி எழுதியிருந்தாள்.

என்னடி இதெல்லாம் என்று கோபமாக கேட்க,உன் வசதிக்கு தகுந்த போல நீ எழுதுன.

அப்போ என் வசதிக்கு தகுந்ததை நான் எழுதணுமா?,இல்லையா? என்று கையை கட்டிக் கொண்டு கேட்டாள் ஆர்கலி.

ஓஓஓஓ என்றவன்,ஓகே டீல் டி.

நானா எந்த காரணத்தை கொண்டும் உன்னை தொட மாட்டேன்.ஆனால் உன் விரல் நுனி,இல்லை உன் டிரஸோட நுனி ஓரமாவது என் மேல பட்டுச்சு,அதுக்கப்புறம் நடக்கிற எதற்கும் நான் பொறுப்பு கிடையாது.

இதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ என ருத்ரன் சொல்ல,என் டிரஸ் நுனியா?, ஹா ஹா ஹா என சிரித்தவள்,மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன் கனவில் கூட என் நிழல் உன் மேல படாது என்றாள்.

ஓகே டி அதையும் பார்த்துரலாம்.இதை டீலா வச்சுக்கலாம் சரியா என்க,ஹம் என்றாள்.

ம்ம்.நல்லா ஞாபகம் வைத்துக்கொள். உன் டிரஸ் மட்டும் இல்லை,உன் முடி கூட என் மேல படக்கூடாது.அப்படி மீறி பட்டுது,அதுக்கு அப்புறம் நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் தான் நீ கேட்கணும்.

"அதை மட்டும் தான் நீ செய்யணும் என்க, யா ஷூர்..இந்த டீல் ஓகே என்றவாறு கதவை திறந்து வெளியே சென்றாள்"

ஹா ஹா ஹா ஹா அடியே ஸ்மார்ட் பொண்டாட்டி...என் அருகாமை உன்னை டிஸ்டர்ப் பண்ணதுன்னு,அதை நான் இங்க வந்து அன்னைக்கே புரிஞ்சுகிட்டேன் டி.

அதுக்காக தானே இந்த டீல் போட்டு இருக்க.எத்தனை நாளைக்கு உன் வீம்பு செல்லுது என்பதை நானும் பார்க்க தான் போறேன் டி.

இந்த ஆட்டத்தில் ஜெயிக்க போறது நீயா?,இல்ல நானா என்பதையும் பார்த்து விடலாம் என்று சொல்லிக் கொண்டான்.

அடேய், புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் இந்த வெளங்காத டீல் தூக்கி தூர போடுங்க.இந்த காயம்பட்ட உதட்டை வச்சுகிட்டு எப்படிடா நீ வெளியில போவாய்?

முதல்ல இதை யோசிடா அறிவுகெட்ட மக்கு பயலே என்று அவன் மனசாட்சி சொல்லியது.

அட ஆமாம்..

இதை நான் யோசிக்கலையே??

அய்யோஓஓஓ என்னை இப்படி புலம்ப வச்சிட்டாளே இந்த வாத்திச்சி என்கும் போது,அவன் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

அங்கிருந்து போய் டீப்பாயின் மேலிருக்கும் போனை எடுத்து பார்க்க, மேகு என்று வந்தது.ஃபோன் கால் அட்டென்ட் பண்ணியவன் சொல்லும் மேகு, எப்படி இருக்க?

மாமா எப்படி இருக்காங்க? என்க, எல்லாரும் நல்லா இருக்கோம் கண்ணா. நீ எப்படி இருக்க? என்றார்.

எனக்கென்ன செம்மையா இருக்கேனென்று ருத்ரன் சொல்ல, சந்தோஷம் கண்ணா என்றவர், உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றதுக்காக தான் கால் பண்ணினேன் என்க,ம்ம் சரி சொல்லு மேகுயென்றான்.

பாப்புக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கு என்க,என்ன சொல்ற மேகு என அதிர்ச்சியாக ருத்ரன் கேட்க, ஆமாம் கண்ணா.

எல்லாம் உனக்கு தெரிஞ்ச பையன் தான் மாப்பிள்ளை என்றார்.எனக்கு தெரிஞ்ச ஆளா என்கும் போது, அவனுக்கு ரஞ்ஜன் முகம் தான் நினைவுக்கு வந்தது.

பட்டென்று ரஞ்சனா என்று கேட்க, ஆமா கண்ணா.ராகினிய பொண்ணு பார்க்க வந்திருந்தார்களே,அப்போ ஜேம்ஸ் அண்ணாவும்,ஆலிஸூம் ரஞ்சனுக்கு பொண்ணு கேட்டாங்க.

நல்ல பையன்.மறுக்கறதுக்கு நமக்கு ஒரு விஷயமும் இல்லை.எனக்கும் மாமாவுக்கு இந்த சம்பந்தம் சரியென்று மனசுக்கு பட்டது.

ஆதிராவை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் என சொல்லும் போது, அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்குணு சொன்னாள்.படிப்பு முடிஞ்ச பிறகு,கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு ரஞ்ஜன் தம்பி சொல்லியாச்சு என்றார்.

அனைத்தையும் கேட்டவன்,ஓஓஓ இவ்வளவு நடந்திருக்கு.எங்கிட்ட ஒரு வார்த்தை கூட யாருமே சொல்லவே இல்லை என்று ருத்ரன் கேட்க,மாமா தான் நாங்களே சொல்லிக்கிறோம் என்று சொன்னாரு கண்ணா.

ஜேம்ஸ் அண்ணா சொல்லுறதை விட நாம சொல்லுறது தானே மரியாதைனு சொல்லிட்டார்.வேற என்ன கண்ணா செய்ய என்க,சரி சரி.

நல்ல வேளை,பத்திரிகை அடிச்சிட்டு வந்து கொடுத்து,கல்யாணத்துக்கு வந்துடுங்களென்று சொல்லாம போனீங்களே,அதுவரைக்கும் சந்தோஷம் என்று சொல்லி போனை கட் பண்ணினான்.

இந்த ரெண்டு பண்ணாடைங்களும் நம்ப கிட்ட சொல்லலையே, சரி இருக்கட்டும்.நானும் இது தெரிஞ்ச போல காட்டிக்க போறதில்லை என தனக்குள் சொல்லிக்கொண்டான்.

வீட்டிற்கு வந்த ஆர்கலி,ஹப்பாடா நல்ல வேளை அந்த மாயக்காரன் கிட்ட இருந்து தப்பிச்சி வந்தோம்.

ஆ ஊ என்றால் படுபாவி பயல் வாயை லாக் பண்ணுவதிலே குறியா இருக்கான்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இந்த மாயம் செய்யும் வித்தைக்காரன் எல்லாத்தையும் நம்மை மறக்க வச்சிடுவான் போலவே???

நெவர்..அவ்வளவு சீக்கிரம் மறக்குற போலவா அவன் செய்யாதென்று முணு முணுக்க...

ஹாஹாஹாஹா..என்று அவள் மனசாட்சி சிரித்தது.

என்ன உனக்கு சிரிப்பென்க, உண்மைய சொன்னால் உனக்கு பொறுக்காதேடி.அப்படியில்லை, அப்படி இல்லன்னு சாதனையா பேசுவ.

எதுக்கு நமக்கு இந்த வம்பு.அதனால் தான் கம்முனு இருக்கேன் என்று சொன்னது.

பொள்ளாச்சி:

தாரா அழாதம்மா என்று மனைவியின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், வெளியே எல்லாரும் இருக்கிறாங்க.

இங்க நம்ம இருந்தால் என்ன மா நினைப்பாங்க என்ற சத்தியமூர்த்தி, நீ முகத்தை கழுவிட்டு வா.நான் போறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஹாலிற்கு வந்தார்.

தம்பி இதில் இருப்பதெல்லாமென்று சிம்ஹன் தாத்தா கையிலிருக்கும் பைலை காட்டி அதிர்வாக கேட்க,ஆமாங்க மாமா,நீங்கள் படித்தது உண்மை தான்.

இருங்க தாரா வரட்டுமென்று அமைதியானார்.

சில நிமிடத்தில் வசுவும் அங்கு வந்து உட்கார,முதல்ல எனக்கு நடந்ததை பற்றி நான் சொல்லிடுறேன்.பிறகு உங்க கேள்வியை கேளுங்களென்றவர், சொல்ல தொடங்கினார்..

18 வருடங்களுக்கு முன்னர்...

கே.எல்.மருத்துவமனை கோயம்புத்தூர்:

அப்பா செந்தூரா உன்னை நம்புபவர்களுக்கு துணையாக இருப்பவரே,உனக்கு கோடான கோடி நன்றிப்பா என்று சொல்லிக் கொண்ட சத்தியமூர்த்தி கவுண்டர்,தனது பேத்தி வள்ளியம்மையையும்,பேரன் வெற்றிவேலையும் அழைத்துக்கொண்டு அந்த ஹாஸ்பிட்டலின் உள்ளே நுழைந்தார்.

இரண்டாவது ப்ளோரில் இருக்கும் ஐசியூவிற்கு வர,அங்கிருந்த நர்ஸ்,வாங்க ஐயா.உங்களுக்காக தான் டாக்டர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

நீங்க மட்டும் உள்ள போங்க.பசங்க இங்கே இருக்கட்டும் என்று சொல்ல, சரிமா என்றவர்,வள்ளி வெற்றிய பாத்துக்க கண்ணு என்று சொல்லி விட்டு,அவர் மட்டும் கதவை திறந்து உள்ளே சென்றார்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு டாக்டர் பார்க்க,அங்கே சத்தியமூர்த்தி கவுண்டர் வருவது தெரிந்தது.

எதுக்கு குணா உடனே வர சொன்ன?

என்ன ஆச்சு குணா என பதட்டமாக கேட்க,அய்யோ பெரியப்பா பயப்படும் அளவிற்கு ஒன்னும் இல்லை.எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் என்று டாக்டர் குணாளன் சொல்ல,கண்ணு நீ முதல்ல விஷயத்தை சொல்லுப்பா.

நீ போன் பண்ணி உடனே வாங்க பெரியப்பாயென்று சொன்னவுடனே எனக்கு ஒரே பதற்றமா ஆயிடுச்சு, சத்தியமூர்த்திக்கு என்ன ஆச்சோயென்று சொல்லி அந்த கம்பீர மனிதர் கண்கலங்கினார்.

பெரியப்பா ஜூனியர்கு நினைவு திரும்பிடுச்சு.அதுக்காக தான் பா உங்களை வர சொன்னேன் என்றார் சத்தியமூர்த்தியின் உறவு பையனான டாக்டர் தயாளன்.

என்னை கண்ணு சொல்லுற என்று சந்தோஷத்தில் அவர் அதிர்ந்து கேட்க, ஆமாம் பெரியப்பா.நைட்டு தான் நினைவு வந்துருக்கு.

சிஸ்டர் தான் பார்த்துட்டு நைட் டூட்டியில் இருந்த டாக்டர் கிட்ட சொல்ல,அவர் செக் பண்ணிட்டு என் கிட்ட சொன்னாங்கப்பா.

நான் ஒரு ஆபரேஷனுக்காக இன்னொரு ஹாஸ்பிடல் போயிருந்தேன்.என்னால உடனே வர முடியல.அதனால தான் நான் காலையில் இங்கு வரும் போதே உங்களை வர சொல்லி போன் பண்ணுனேன் பெரியப்பா என்றார்.

அப்பா செந்தூராண்டவா, உன் கிட்ட வேண்டிக்கிட்ட போல என் குடும்பத்து வாரிசை குணப்படுத்திட்டியே,உனக்கு கோடான கோடி நன்றியப்பா என்று தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி காட்டி சொன்னார்.

குணா இப்போ போய் பார்க்கலாமா என்க,ம்ம் வாங்க பெரியப்பா போகலாமென்று,அங்கிருந்து கதவை திறந்து கொண்டு அவரை அழைத்துச் செல்ல,அங்கே சத்தியமூர்த்தி பெட்டில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

ஹலோ என்னும் சத்தம் கேட்டு பெட்டிலிருந்தவர் திரும்பி பார்த்து தாத்தா என்க,கண்ணு என்னை யாருனு தெரியுதாய்யா? என கண்ணீரோடு கேட்டார் சத்தியமூர்த்தி கவுண்டர்.

தெரியுது தாத்தா.ஆமாம் எங்கே என்னோட அம்மாவை காணலை.நீங்க எப்போ திருச்சிக்கு வந்தீங்க?

உங்க கோபம் போய்விட்டதா? என கேள்விகளை அடுக்க,பெரியவரால் கண்ணீரை தவிர வேறு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

ஆர்கலி எங்கே...??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top