• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
களுத்துறை பயணம்:


ஆதிரா அவளுடைய எண்ணத்தை சொல்லியாச்சு இனி இதில் ரஞ்ஜன் தான் முடிவு எடுக்கணுமென்றனர்"

"ஆதிரா படிக்கிறதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை"

"ஆனால் ராகினியோட கல்யாணத்தை மட்டும் இப்போ முடிச்சிடலாம் மாமா என்றான். கேட்டியா பேபிமா உன் ஆளு ஓகே சொல்லியாச்சி என்று சிரித்தவர், சரிடா ரெண்டு பேரும் உடம்பை பார்த்துக்கோங்க"

" நேரத்துக்கு சாப்பிடுங்க,அப்போ அப்போ கொஞ்சம் படிங்கடா என்க,ம்கும் இது அப்பா.நமக்கும் நல்லா வந்து வாய்த்ததே என்று ஆது முணு முணுக்க,ஆனந்த் தனது மகனை முறைத்து பார்த்தார்"

"பின்னர் மேலும் சிறிது நிமிடங்கள் பேசியிருந்து விட்டு,அங்கிருந்து கிளம்பினர்"

பொள்ளாச்சி:

"கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட வள்ளியம்மை,சோபாவிலிருந்து எழுந்து வேகமாக வெளியே வந்து பார்க்க,அங்கே சத்தியமூர்த்தி தான் கார் கதவை திறந்து கீழே இறங்கி வருவது தெரிந்தது"

"அண்ணா என்று ஓடிப்போய் அவர் கையை பிடித்து கதறி அழ,ஒன்னும் இல்லடா.நல்லா இருக்கிறான் என்று சொன்னார்"

" நிஜமா தானேணா என பயத்தோடு கேட்க,ஆமாடா வள்ளி.உன் மருமவன் தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் பண்ணியது"

" வா உள்ளே போகலாமென்று தங்கை கையை பிடித்தபடியே சத்தியமூர்த்தி உள்ளே செல்ல,அங்கே இருக்கும் ஜனனியை பார்த்தவர்,வாம்மா என்றார்"

"நல்லா இருக்கீங்களா மாமா என்றவளுக்கு,நான் நல்லா இருக்கேன் மா.அங்க வீட்ல?,வள்ளி உன் கையால ஒரு இஞ்சி டீ கொண்டு வாம்மா"

"அதற்குள் நான் போய் கை கால் கழுவிட்டு வரேனென்று தனது அறைக்குள் சென்றவர்,சின்னதாக ஒரு குளியலை போட்டு, உள்ளறையை திறந்தவர்,அங்கிருந்த ஆளுயர வசுந்தராவின் ஃபோட்டோவை தடவி பார்த்து,ஆனந்தத்தில் கண் கலங்கினார்"

"இன்னும் என் தாராவா தான் நீ இருக்கயென்று தெரிந்ததும்,எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?”

"அப்போ நடந்தது உனக்கு மட்டும் தான் தெரியும் தாரா.நீ சொன்ன பிறகிலாவது எனக்கு துளி அளவிளாவது நினைவிற்கு வருமாயென்று தெரியவில்லையே என்கும் போது,அவர் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டு,அங்கிருந்த கதவை வேகமாக சாற்றி விட்டு,வெளியே உள்ள கதவை திறக்க,அண்ணா டீ என்றார் வள்ளியம்மை"

"ம்ம் என்றவாறு ஹாலிற்கு வந்தவர், அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார,டீ டம்ளரை வள்ளி நீட்டினார்.வாங்கி ஒரு வாய் குடித்தவர்,என் தங்கச்சி கையால தான் டீ குடிக்கணுமென்று, மூன்று வாரமா டீயே குடிக்கலைடா கோபி என்று சொல்ல,மாமா இதுலாம் கொஞ்சம் ஓவர்தானென்று சொல்லி கோபி சிரித்தான்"

"பின்னர் லண்டனில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்க நேரமும் போனது.ஜனனியும் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு போய் விட,வள்ளியும் இரவு டிபனை தயார் பண்ணி முடித்தவர்,அண்ணா,கோபி இருவரும் வாங்க சாப்பிடலாமென்கும் போது தான் மணியை பார்க்க,இரவு 9 என்று காட்டியது"

" சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்கு சென்று படுத்து விட்டனர்.

இப்பொழுது சத்தியமூர்த்தியின் மனதிற்கு தான் மகன் பேசியது நினைத்து ஒரே குழப்பமாக இருந்தது.

"வசுந்தராவை பற்றி வீட்டில் தெரிந்தவர்கள்,வள்ளியும் சத்தியமூர்த்தி தாத்தா,மற்றும் ஊரில் சிலர் மட்டும் தான்"

"வெற்றிக்கு இதுவரை இருவரும் சொல்லியதில்லை. பின்னர் எப்படி வசுந்தராவை அவன் அம்மா என்று கண்டுபிடித்தான் என்பது,அவர் எவ்வளவோ யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.

"சரி அந்த செந்தூராண்டவன் நம்ம வாழ்க்கையில் என்ன வைத்திருக்கிறானோ,அதுபடி தான் நடக்கும் என்று மனதை அமைதிப்படுத்தியவர்,கண்ணை மூட வசுந்தராவை பார்த்த நிகழ்வு தான் அவரின் நினைவுக்கு வந்து கொண்டு இருந்தது"

"காலை கதிரவன் தன் பொன்னொளியை வீசிக்கொண்டு கிழக்கு முகமாக உதயமாக, வேலைக்கு போகிறவர்கள் ஊருக்குள் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, வழக்கமாய் எழும் நேரம் தாண்டி தூங்கிய சத்தியமூர்த்தி,ஒருவாராய் எழுந்து ப்ரஷாகி வெளியே வந்தவர், அங்கிருந்து சாமி அறைக்குள் சென்றார்"

"சில நிமிடங்கள் கண்ணை மூடி வணங்கி விட்டு,விபூதியை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டு ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் வந்து உட்கார,அண்ணன் வந்ததை பார்த்த வள்ளியோ,சூடாக டீ எடுத்துட்டு வந்து கொடுத்தார்"

"டீயை குடித்து முடித்தவர்,அன்றைய தினசரி பேப்பரை படித்துக் கொண்டிருக்க,யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்க்க, கணக்குபிள்ளை மாரியப்பன் வர,வாங்க கணக்கு என்றார்"

வரேங்கைய்யா.நல்லா இருக்கீங்களா? என்க.ம்ம் நல்லா இருக்கேன் என்றார் சத்தியமூர்த்தி.


"நீங்க வந்துருக்கீங்கனு ஜனனி நைட் வந்து சொல்லுச்சி.அந்த நேரத்தில் எங்கிருந்து வருவது.அதான் உங்களையு பார்த்துட்டு போகலானு வந்தேனென்க,ம்ம் என்றவர் பின்னர் மூன்று வாரங்களாக வயலில் நடந்த வேலைகளை பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்"

"ஒரு மணி நேரம் கடந்து இருக்க, அண்ணா என்று அங்கு வந்து வள்ளி கூப்பிட,பேசிக்கொண்டிருந்த சத்தியமூர்த்தி தங்கையின் குரல் கேட்டு திரும்பிப் பார்க்க,சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்றார்"

"வாங்க கணக்கு சாப்பிடலாமென்று கூப்பிட,ஜனனி புள்ள வீட்டில் அடை செஞ்சுச்சு,சூடாக சாப்பிட்டு தான் உங்களை பார்க்க வந்தேன்,சரிங்க நீங்க சாப்பிட்டு வாங்க,கொஞ்சம் மீதி கணக்கு வேலை இருக்கு.

நான் எழுதிட்டு இருக்கேனென்று எழுந்தவர்,அங்கிருக்கும் இன்னொரு அறைக்குள் சென்ற மாரியப்பன், கபோர்டில் இருந்த நோட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து தனது வேலையை தொடர்ந்தார்.

"நீயும் உட்காருமா,ரெண்டு பேரும் தானே இருக்கோமென்க,நான் வந்துட்டேனென்று அங்கு வந்த கோபி, சித்தி ரொம்ப பசிக்குது.

சீக்கிரம் வயித்துக்கு எதாவது குடு என்றான்.

அவனுக்கு தட்டை வைத்து டிபனை பரிமாற,வேக வேகமாக சாப்பிடுபவனை பார்த்தவர்,டேய் ஏன் இவ்வளவு அவசரமென்றார் சத்தியமூர்த்தி.

அவசரம் தான் மாமா.இன்னைக்கு உளுந்து மூட்டை லோடு ஆந்திராக்கு அனுப்பணும்.

இன்னும் கொஞ்சநேரத்தில் அந்த லாரிகாரன் வந்துடுவானென்றவன்,வேகமாக சாப்பிட்டு எழ அவன் முன்பு காஃபியை வள்ளி நீட்ட,சித்தினா என் செல்ல சித்திதான் என தோளோடு அணைத்தவன்,குடித்து விட்டு அங்கிருந்து சென்றான்

சதூர்வேதமங்கலம்:

மணி பாரு ஆரா கண்ணு என்றவர், அவள் கையில் பாதாம் பாலை குடுத்து விட்டு,இரவு உணவை செய்ய தொடங்கினார்"

"இருங்க பாட்டி நானும் வரேனென்க,அதுலாம் வேண்டாம் கண்ணு.மதியம் செய்த சாம்பார் இருக்கு,சட்னிக்கு முன்னவே வெங்காயம் தக்காளிலாம் வதக்கிட்டேன்.

அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து,கடுகை தாளித்து அதில் ஊற்றியவர்,சுட வைத்த சாம்பார் அடுப்பை அணைத்து விட்டு வந்து உட்கார,ஆர்கலி டிவியை ஆன் பண்ணினாள்.

"இருவரும் படம் பார்த்துக்கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடிக்க, பாத்திரங்களை ஆர்கலியே கழுவி காய வைத்து விட்டு,வாசல் பக்கமாய் நடைபயிற்சிக்கு வந்தாள்"

"அரை மணி நேரத்திற்கு மேலே நடந்தவள்,கால் லேசாக வலிப்பது போல இருக்க,அங்கிருந்த திண்ணையில் போய் உட்கார்ந்தவளின் சிந்தனைகளெல்லாம் ருத்ரன் குடுத்த ஃபைல் மேலேயே இருந்தது"

"சிறிது நிமிடங்கள் வாசலில் உட்கார்ந்து வானத்து நிலவை பார்த்தவள்,ஒரு முடிவோடு எழுந்து உள்ளே போய் கதவை சாற்றி விட்டு, பாட்டி இடம் சொல்லிக்கொண்டு தனது அறைக்குள் சென்றவள், மீண்டும் அந்த ஃபைல் எடுத்து படித்துப் பார்க்களானாள்"

ஆர்கலி சத்தியமூர்த்தி என்ற நான், இலங்கை இரத்தினபுரியில் வசிக்கும் ருத்ர வீர சிம்ஹன் அவர்களுக்கு எழுதி தருகின்ற அக்ரிமெண்ட் பத்திரமாவது.

எனது வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் திரு ருத்ர வீர சிம்ஹன் அவர்களுடைய குழந்தையை,நல்ல முறையில் பெற்றெடுத்து,ஒரு வயது வரைக்கும் குழந்தையை நன்கு வளர்த்து அவர்களிடம் ஒப்படைப்பேன்"

"அதன் பிறகு குழந்தையிடமோ, குழந்தை சம்பந்தப்பட்ட யாரிடமோ நான் தான் குழந்தையின் தாயென்றும்,வேறு எந்த தொடர்பும் அவர்களிடம் வைத்துக்கொள்ள மாட்டேன்"

" அதன் படி,குழந்தையை வளர்ப்பதற்காக மாதம் ஒரு லட்சம் தொகையை சம்பளமாக பெற்றுக் கொள்கிறேன்.யாரின் வற்புறுத்தல் இல்லாமல் இதை என் முழு மனதுடன் நான் சுயமாக யோசித்து எடுத்த முடிவு"

என்னால் வருங்காலத்தில் எந்த பிரச்சினையும் வராதென்பதை உறுதியளிக்கின்றேன்.

இப்படிக்கு

"படுபாவி பயலே,என் புள்ளைய வளர்க எனக்கு சம்பளமாடா?, இவனெல்லாம் தாய் கிட்ட தானே வளர்ந்தான்"

அப்போ,ஒரு தாயோட அருமை இவனுக்கு கொஞ்சம் கூட தெரியாதா?

இந்த உலகத்திலேயே தாய்ப்பாலுக்கு விலை பேச முடியும் அளவுக்கு,எந்த பணக்காரன்டா இருக்கிறான்?

அதும் நான் தாயென்று சொல்லக்கூடாதா?

"ஏண்டா,பத்துமாசம் சுமந்து பெற்றெடுத்தவளுக்கு தாயென்று சொல்ல உரிமை இல்லையா?,நீ யார் டா இதை சொல்வதென்று,தனது வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தாள்"

அப்பொழுது ஆர்கலிக்கு நிதர்சனம் உரைத்தது.நாமும் இதற்கு சம்மதித்தோமே.

அதன் பிறகு தானே ரெடி பண்ணி இருக்கிறானென்று, மேலே இருக்கும் தேதியை பார்க்க, அக்ரீமெண்ட் நேற்றைய தேதியில் சட்டப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

" ஆண்டவா எந்த தாய்க்கும் வராத சோதனையை எனக்கு ஏன் இப்படி கொடுத்தாய்?

அப்படி என்ன பாவம் தான் நான் போன ஜென்மத்தில் தெரிந்தோ இல்லை தெரியாமலோ பண்ணினேன் என,எனக்கு இப்படி ஒரு தண்டனை?

உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லையா?

தகப்பன் பேர் தெரியும்.ஆனால் அவர் யாரென்று இந்த பாவிக்கு தெரியாது.

தாயில்லாமல் நான் பிறக்க வழியில்லை.

அந்த தாய் யார் என்பதை அப்பா தான் பிள்ளைக்கு சொல்லணும்.

இங்கே என் நிலையும் இதானே.உனக்கு அப்பா யாரென்று தெரியும்.ஆனால் அம்மா நானென்று தெரியாதே என்கும் போது, அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தோடியது.

அந்நேரம் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் அசைவு தெரிய இல்லை அம்மா அழவில்லை செல்லங்களா என்கும் போது,அந்த நேரம் அவளுக்கொரு விஷயம் நினைவிற்குள் வந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
சதூர்வேதமங்கலம்:

நம் வயிற்றில் இரட்டை குழைந்தைகள் இருப்பது,இதுவரை அவனுக்கு தெரியவில்லை.

ஆஹா ஆஹா நல்ல வழி கிடைத்து விட்டது....

"உங்களில் ஒருவர் அம்மா கூட இருப்பீங்க தங்கங்களா. உங்க அப்பா அளவிற்கு என் கிட்ட வசதி இல்லை என்றாலும்,உன்னை ஒழுக்கமான பிள்ளையா,சிறப்பா வளர்த்து காட்டுவேன் கண்ணா என்று அழுத கண்களை துடைத்து விட்டு,புதுவித நம்பிக்கையை மனதில் விதைத்தவள்,எழுந்து போய் தனது ஹேண்ட் பேக்கில் இருந்த பேனாவை எடுத்துட்டு வந்து,அக்ரிமெண்ட் பேப்பரில் ஆர்கலி சத்தியமூர்த்தி என்று சைன் பண்ணினாள்"

" பிறகு யோசித்தாள், நாம் ஏன் கடைசி வரை இதே பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்க கூடாது?.

" எஸ் நம்ப வாழ்க்கை இனி இதே ஊரில் தான்.நாளைக்கு கண்ணன் சாரை பார்த்து பேச வேண்டுமென்று முடிவெடுத்தவள்,பின் உறங்க தொடங்கினாள்".

" அங்கே கட்டில் மேல் படுத்திருந்த ருத்ரன்,அக்ரீமெண்ட் படித்திருப்பாளா?,சைன் பண்ணுவாளா?கண்டிப்பா நம்ம மேல கோவப்பட்டு வாய்க்கு வந்ததெல்லாம் திட்டிக் கொண்டிருப்பாள்"

நல்ல வேலை நேர்ல குடுக்கவில்லை. இல்லன்னா நமக்கும் கிளாஸ் எடுத்திருப்பா வாத்திச்சி.தப்பிச்சடா அந்த வாயாடி கிட்ட இருந்து.

இருந்தாலும் நம்ம பொண்டாட்டிக்கு இவ்வளவு கோவம் வரக்கூடாது. சண்டாளி,தையல் போட்டிருக்கென்று தெரிந்தும் கரண்டியை எடுத்து இப்படி கையில அடிச்சிட்டாளே.

மனுஷன் கையில தையல் போட்டுருக்கானே என்று கொஞ்சமாச்சும் அவளுக்கு பாவம் பார்க்க மனசு இல்லையே?.

ம்கும்...ரொம்ப இரக்க குணம் கொண்டவளை நானே இப்படி இறுகி போக வைத்து விட்டேனே..

சாரி டி மை டியர் பார்பி டால்.உன் குணம் என்னால தான் மாறிடுச்சு இல்லையா.

உன்னை போல ஒரு நல்ல பொண்ணுக்கு, நான் புருஷனா கிடைத்தது தவறான முடிவு என்று,உன் மனசுல நல்லா பதிந்து விட்டது என்பது எனக்கு நல்லாவே தெரியும்.

ஆனால் வேற வழி இல்லைடி. உண்மையிலேயே என் மீதான தப்பை நான் புரிஞ்சுகிட்டேன்.நீயும்,நம்ப குழந்தையும் இல்லாமல் என்னால் எப்படி வாழ முடியும் சொல்லு?

உன்கிட்ட நேர்ல பார்த்து இத நான் சொன்னேன் என்றால்,நிச்சயமா நான் சொல்வதை நீ நம்ப மாட்டாய்.இது எனக்கு நன்றாகவே தெரியும்.

ஏன்னா உன்ன அந்த அளவுக்கு நான் காயப்படுத்தியிருக்கேன்.அந்த காயத்துக்கு மருந்தாக இருப்பேன்னு என்னால சொல்ல முடியாது.

ஆனா திரும்ப என்னால ஒரு சொட்டு கண்ணீர் உன் கண்ணுல வராத அளவுக்கு,நிச்சயமா நான் நடந்து கொள்வேன்.இதை நீ நம்பணும்.

அதுக்கு நீ என் கூட இருந்து தான் ஆகணும்.நிச்சயமா உன் மனசு மாறும் என்கிற நம்பிக்கையை எனக்கு இருக்குடி.

மண்டபத்தில் என்னை பார்த்ததும், உன் முகத்தில் ஒரு நொடி தோன்றிய சந்தோச ஒளியை நான் பார்த்தேன்.

அது உண்மையா பொய்யா என்று நான் கண்ணை சிமிட்டி பார்ப்பதற்குள்,நீ இறுக்கமாக உன் முகத்தை வைத்துக்கொண்டு நின்றாய்.

ஒருவேளை அது என் பிரம்மையா என்னன்னு தெரியலை.இனி காலம் முழுவதும் என்னோட அன்பாலையும், உன் மேல் நான் வைத்திருக்கும் காதலாலையும் உன்னை மூழ்க வைப்பேன்டி என தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன்,வெகு நேரம் கழித்து உறங்கினான்"

" வழக்கம் போல் விடியல் தொடங்கியது.ப்ரஷாகி காலை உணவை சாப்பிட்டு முடித்த ஆர்கலி,பாட்டி நான் பெரிய வீடு வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரேன்.

சார் கிட்ட ஸ்கூல் விஷயமா கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்ல,சரி கண்ணு நீ பார்த்து போய்டுவியா.. கூட நான் வரணுமா என்று கேட்க,முதல்ல நீங்க சாப்பிடுங்க பாட்டி.

கண்ணுக்கு எட்டிய இடத்தில் தானே வீடு இருக்கு.நான் போயிட்டு கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்.நான் அந்த பக்கம் போய்டேனென்று உடனே துணி தைக்க உட்கார்ந்து விட வேண்டாம். ஞாபகம் இருக்கட்டும் என்று சொல்லியவள், பைலை எடுத்துக் கொண்டு வெளியே வர கருப்பாயியும் அங்கு வந்து சேர்ந்தார்.

ஸ்கூலுக்கா ஆரமா என்று கேட்க, இல்லைங்கண்ணி. கண்ணன் சாரை பார்க்கணும் என்று சொல்லியவள், அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கி சென்றாள்"

தெரிந்தவர்கள் சிலர் பார்த்து சிரிக்க, ஆர்கலியும் தலையாட்டி கொண்டு பெரிய வீட்டிற்கு வந்தவள், அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்து வீட்டிற்குள் வர,கண்ணனும் தேவகியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"வணக்கம் சார் என்று சொல்ல,சத்தம் கேட்டு இருவரும் வாசல் பக்கம் பார்க்க ஆர்கலி தான் வந்து கொண்டிருந்தாள்"

" இருவரும் வாம்மா என்றனர்.உடம்பு நல்லா இருக்கா கண்ணுயென தேவகி கேட்க,நல்லா இருக்குங்கம்மா.நேத்து தான் செக்கப்க்கு போய்விட்டு வந்தோம் என்றவள்,எங்கே தாத்தா பாட்டியை காணவில்லை என்க..

மூவரும் பொள்ளாச்சி வரைக்கும் போயிருக்காங்கமா என்று சொல்லிய தேவகி, இருமா பால் எடுத்துட்டு வரேன் என்க,அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா.

இப்ப தான் டிபன் சாப்பிட்டு வந்தேன் என்றாள்.ரியா கால் பண்ணினாளா? நல்லா இருக்காளா?என விசாரிக்க, நல்லா இருக்கா மா.

ஆதிராவும் கூட இருப்பதால் கவலை இல்லையென்று சொல்ல,அந்த பெயரை கேட்டவளுக்கு குழப்பமானது.

அவள் முக பாவனை வைத்து ஆதிராவும் ரியாவும் காலேஜ்ல ஒண்ணா படிச்சவங்க.ரெண்டு பேரும் குளோஸ் ப்ரண்ட்ஸ் மா.

இங்க நம்ம வீட்டுக்கு ஆதிரா வந்திருக்கிறாள்.பிஜி அங்க தான் படிப்போமென்று இரண்டு பேரும் முடிவெடுத்து ஒன்னாவே கனடாவுக்கு போயிருக்காங்க.

எப்படியோ நல்லபடியாக படித்து வந்தால் சந்தோஷம் தானேயென்று தேவகி சிரிக்க,ஆமாங்கம்மா என்றவள்,ஆதிராவும் நம்ப ஊர் பொண்ணா என்க, இல்லை மா.

ஆதிரா சொந்த ஊர் இலங்கை மா.உன் புருஷனோட அத்தை பொண்ணுதானென்று சொல்ல, ஓஓஓஓ அந்த மேடம் சொன்ன பொண்ணு இவள் தானோ என தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

ரொம்ப தங்கமான பொண்ணு.மூன்று மாதங்களுக்கு முன்பு லண்டனில் நடந்த உலகளவில் ஓவியப்போட்டியில் ஆதிரா தான் வின்னர்மா.

ஆரா என்ற பெயர்ல அவளோட ஓவியம் பிரசித்திபெற்றது.சோசியல் மீடியால எப்படியும் அந்த வீடியோ இருக்கும்.முடிந்தால் பாருமாயென்று கண்ணன் சொல்லும் போது, குட்மார்னிங் அங்கிள் என சொல்லியபடி ருத்ரன் அங்கு வந்தான்.

பொள்ளாச்சி:

சரி வள்ளி நான் வயலுக்கு போய்ட்டு வரேன்மா.மூன்று வாரமா பார்க்காதது மனசுக்கு ஏதோ போல இருக்கிறதென்ற சத்தியமூர்த்தி, அங்கிருந்த பைக்கில் ஏறி தங்களது வயலை நோக்கி சென்றார்.

வழியில் தெரிந்தவர்கள் எல்லாரும் எப்ப வந்தீங்க என்று நல விசாரிக்க, அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே வயலுக்கு போய் சேர்ந்தவர்,எல்லாவற்றையும் சுற்றி பார்த்து வரவே ஒரு மணி நேரத்திற்கு மேலானது.

வள்ளியும் மதிய உணவு சமைக்க தேவையானதை எடுத்து வைக்கும் போது,வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

வேலையாள் ஒருவர், தங்கச்சி, தங்கச்சி என கூப்பிட, கிச்சனிலிருந்து வெளியே வந்தவரிடம்,ரெண்டு கார்ல யாரோ அய்யாவ பார்க்க வந்துருக்காங்கமா என்றார்.

சரிங்கண்ணா என்ற வள்ளி வாசலுக்கு சென்று பார்க்க,அங்கே காரிலிருந்து கீழே இறங்கிய வசுந்தராவை பார்த்தவர் "அண்ணீஈஈஈ" என்றார்.

வள்ளி சொன்ன அண்ணி என்ற வார்த்தை வசுவிற்கு நன்கு கேட்க, சத்தியமூர்த்திக்கு தங்கையில்லையே?

இந்த பொண்ணு நம்பளை அண்ணி என்று கூப்பிடுதேயென குழப்பமாக, வாங்கண்ணி என்றவாறு வேகமாக போய் வசுவின் கையை பிடித்த வள்ளி,மற்றவர்களையும் வாங்க வாங்க என்றவர்,அண்ணி ஒரு நிமிஷம் இங்கே இருங்களென்று வேகமாக வீட்டிற்குள் சென்று, ஆரத்தியை கரைத்து எடுத்து வந்தவரை கண்ட கிரிஜா பாட்டி, சைலஜா பாட்டி இருவருக்கும், மனதிற்கு திருப்தியாக இருந்தது.

இந்த வீட்டோட மருமகள் நீங்க.முதல் முதலா வரீங்க உங்களை ஆரத்தி எடுத்து தானே வரவேற்கணும் என்று சொல்லிய வள்ளியம்மை, வசுந்தராவுக்கு மூன்று சுற்று சுற்றி நெற்றியில் பொட்டை வைத்தவர், பக்கத்தில் இருந்து வேலையாளிடம் கொடுத்து வாசலில் ஊற்றுங்கள் கா என்று சொல்லிவிட்டு,உள்ளே வாங்கயென்று கையோடு அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

உள்ளே வந்த அனைவரும் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து சுற்றி பார்க்க,வெளிய இருந்து பார்க்கும் போதே தெரிந்தது,அது ஜமீன் வீடு என்பது.

இதோ வந்துவிடுகிறேன் என்று கிச்சனிற்குள் சென்றவர், சூடாக இருந்த பாலில் காஃபி தயாரித்து எடுத்து வந்து,அனைவருக்கும் கொடுத்த வள்ளி,அண்ணா நேத்து தான் லண்டன்ல இருந்து வந்தாங்க.

அதான் வயலை பாக்கணும்னு போயிருக்காங்க.இதோ நான் கால் பண்ணி வர சொல்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து சென்றார்.

நடவு வயலில் சில இடத்தில் களைகள் இருப்பதை பார்த்தவர்,நாளைக்கு ஆள் வைத்து இந்த களையெல்லாம் இப்பயே எடுக்க சொல்லிடணும் என்று சொல்லிக் கொண்டே வரப்பில் நடந்து வரும் போது,அவரின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

யாரென்று பெயரை பார்க்க தங்கை என்று வர, அட்டென்ட் பண்ணியவர் சொல்லு வள்ளி என்க,அண்ணா அண்ணா நம்ப வீட்டிற்கு அண்ணி வந்திருக்காங்க என்று சொல்ல,ஒரு நிமிடம் சத்தியமூர்த்திக்கு பேச்சே வரவில்லை.

அண்ணா அண்ணா,ஹலோ ஹலோ என்று வள்ளி மீண்டும் சத்தமாக கூப்பிட,என்ன சொன்ன வள்ளி? என சத்தியமூர்த்தி தன் காதில் விழுந்தது சரியாயென்று தெரிந்து கொள்ள தங்கையிடம் கேட்க,அய்யோ ஆமாணா.

வசுந்தரா அண்ணி தான் வந்திருக்காங்க.அவங்க கூட இன்னும் சிலரும் வந்துருக்காங்க . சீக்கிரம் வீட்டுக்கு வாங்களென்று சொல்லி ஃபோனை வைத்தார்.

அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்த சத்தியமூர்த்திக்கு,மனது ஒரு பக்கம் பட படப்பாக இருந்தது.

வீட்டுக்கு உரிமையான மருமகளாய், தன்னுடைய மனைவி தாரா வந்திருக்கிறாள் என்று நினைக்கும் போது,அவருக்கு சந்தோஷம் தாளவில்லை.

அவர் மனதிற்குள் இருக்கும் சந்தோஷமே முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.வேகமாக வீட்டிற்குள் வந்தவர்,எல்லாரும் வாங்க வாங்கயென்று தனது இரு கையெடுத்து கும்பிட்டபடியே அங்கு வந்தார் சத்தியமூர்த்தி.

அம்மாடி வள்ளி என்று கூப்பிட, இதோணா என்றவாறு அங்கு வந்த தங்கையை காட்டி,என்னோட ஒரே தங்கச்சி வள்ளியம்மை என்றார்.

சார் நீங்க சிம்ஹானந்த் டைமண்ட் ஓனர் தானே என யோசனையோடு சத்தியமூர்த்தி கேட்க,ஹம். அதுமட்டுமில்லை உங்களோட பெரிய மாமனாரென்று சொல்லி சிம்ஹன் தாத்தா சிரித்தார்.

என்ன சொல்றீங்க சாரென்று சத்தியமூர்த்தி அதிர்வாய் கேட்டவர்,அப்பொழுது தான் எதிரில் உள்ள சோபாவில் உட்கார்ந்திருக்கும் சைலஜா பாட்டி-கிரிஜா பாட்டி இருவரையும் பார்த்தவர்,என்ன இவங்க இருவரும் ஒரே போல இருக்கிறாங்க என்று யோசனையானார்.

சத்தியமூர்த்தியின் குழப்பமான முகத்தை பார்த்த சிம்ஹன் தாத்தா அவங்க ரெண்டு பேரும் சைலஜா-கிரிஜா.

என் மனைவி கிரிஜாவும்,அவளுடைய இரட்டை பிறவியான தங்கச்சி சைலஜாவும்.இப்படி சொல்றதை விட உங்களோட ரெண்டு மாமியார்களும் அவங்க தான் என்றார்.

ஆர்கலி எங்கே....??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top