Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 471
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
சைலஜா பாட்டி பிளாஷ்பேக்..
ஸ்கூல் லீவ் விட்டதால், என்னாலையும் அந்த பக்கம் போக முடியலை. இப்படியே இரண்டு வாரங்கள் போக, நாம ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து கோயிலுக்கு போயிருந்தோம்.
அப்போ, பிரசாதம் இருந்த பேகை எடுக்க நான் நம்ப கார் கிட்ட போயிருந்த போது, இவர் வந்து எதிர்ல நின்னாரு.
முதல்ல நான் கவனிக்கல. பேக் எடுத்த பிறகு, டோர் சாத்திட்டு பார்க்க, இவரு என்னையே முறைத்து பார்த்துட்டு இருந்தார்.
எதுக்கு இவர் இப்படி பார்க்கிறார் என்று நானும் யோசனையோடு பார்க்க, ஏண்டி ஒரு மனுஷன் இருக்கானா?, இல்லையான்னு தேடவே மாட்டியா என்று கேட்டார்.
அதை கேட்டவுடன் எனக்கு மனசுல பட்டாம்பூச்சி பறக்குவது போல இருந்துச்சி. சரி கொஞ்ச நேரம் விளையாடலான்னு முடிவு பண்ணினேன்.
உடனே சுதாரிச்சிக்கிட்டு,ரொம்ப வீரப்பா, ரோட்டில் வரவங்க போறவங்க எல்லாரையும் நான் ஏன் தேடணும்னு சொல்ல, ம்ம் உன் கழுத்துல மூணு முடிச்சு போட போறவனை, நீ தேட மாட்டியான்னு சொல்லிட்டு போயிட்டாரு.
அதன் பிறகு ஒரு ஆறு மாசம் நல்லா தான் போனது.
ஓர் நாள் நான் ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கும் போது,இவரு அந்த வழியில நின்னுட்டு இருந்தாரு.
என்னன்னு கேட்க,உன் கிட்ட கொஞ்சம் நான் பேசி ஆகணும்.இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம். லீவு எடுத்துக்கனு சொல்ல, இதுவரை அவர் இப்படி என்கிட்ட பேசினதில்லை என்பதால், நானும் ஸ்கூலுக்கு போய் லீவ் சொல்லி விட்டு நம்ப வராகி அம்மன் கோயிலுக்கு போயிருந்தோம்.
சிறிது நிமிடங்கள் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர் அமைதியாக வானத்தை பார்த்து உட்கார்ந்திருக்க,"எனக்கும் பொறுமை கடந்து போயிடுச்சு"
"இப்படி விட்டத்தை பார்த்து உட்கார்ந்து இருக்க தான் என்னை வர சொன்னீங்களா என கோபமாக நான் கேட்க,உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமென்று சொன்னார்"
"ம்ம் இங்க தானே இருக்கேன் சொல்லுங்கணு சொன்னேன்"
"இன்றைக்கு காலை பதினோரு மணிக்கும் கிளம்பும் கப்பலில் நான் இந்தியா போறேன்"
"திரும்ப எப்போ வர முடியுமென்று சரியா சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பா உனக்காக நான் வருவேன். அதுவரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடியுமா? அப்படின்னு அவர் கேட்டதும், எனக்கு பயங்கர ஷாக் ஆனது"
"என்ன சொல்றீங்கன்னு நான் பதற, ஆமாம் நான் உடனே போய் ஆகணும். இதை மட்டும் தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருந்தாரு"
"எப்படி உங்களை பாக்காம என்னால இருக்க முடியும்?,எப்ப வருவீங்கன்னு தெரியாமல் இப்படி சொன்னா என்ன அர்த்தம் ?.
இதற்கு நடுவுல, எங்க வீட்ல இப்பயே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா தெரியாதா? அப்படின்னு கேட்டு எனக்கு அழுகை வந்துடுச்சு.
உன் நிலைமை எனக்கு புரியுது. அதைவிட என் நிலைமை இப்போதைக்கு உன் கிட்ட சொல்ல முடியாது.ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும். இப்போதைக்கு நான் போய் ஆகணும் அப்படின்னு எந்திரிச்சுட்டார்.
நிச்சயமாக அவர் இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியாது. எப்படியும் உனக்கும் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கும் போது, எனக்கு மாப்பிள்ளை பார்த்து விடுவாங்களென்பது எனக்கு தெரியும்.
ஓர் நாள் அத்தையும் அப்பாவும் பேசிட்டு இருந்தாங்க, அதை நான் கேட்டேன்.
அப்போ,இவர் கிட்ட ஒன்னு சொன்னேன்.சரி தாராளமாக போங்க. ஆனால் ஒன்னே ஒன்னு பண்ணிட்டு போங்களென்று நான் கேட்க, என்ன சொல்லு பண்ணுறேன்னு சொன்னார்.
உங்கள் கூட என்னையும் கையோடு கூட்டிட்டு போங்களென்று நான் சொல்ல, ஏய் என்ன விளையாடுறியா அப்படின்னு கோவப்பட்டார்.
நான் உயிரோட இருக்கணும்னு நினைச்சீங்களென்றால் என்னை கூப்பிட்டு போங்க. இல்லை நீங்க இப்படியே போங்கன்னு நான் சொல்லிட்டு, கோயிலில் கண்ணை மூடி உட்கார்ந்துகொண்டேன்.
என்னால உன்னை கூட்டிட்டு போக முடியாதுன்னு சொல்லிட்டு, அவரு போயிட்டாரு.
நான் அழுதுட்டு அங்கையே இருந்தேன். அவர் போய் ஒரு மணி நேரம் ஆகிட்டு. அப்பொழுது, கப்பலுக்கு நேரம் ஆகிட்டு வா என கூப்பிட்டும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, இவர் முறைச்சிட்டு நின்றார்"
"பிறகு அவரோட இந்தியாக்கு வந்துட்டேன். அங்க வந்து மறாவது நாள் இவர் என்னை திருச்சூருக்கு கூப்பிட்டு போய், அவங்க அப்பா அம்மா கிட்ட என்ன சொன்னாரென்று தெரியவில்லை"
" மறுநாளே எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தாங்க. உங்களையெல்லாம் நினைச்சி வருத்தம் தான்"
"ஒரு வாரம் போக இவ்வளவு பெரிய சொத்துக்காரர், எதுக்கு அங்க வந்து பேக்கரில வேலை பார்த்தீங்கள் என்பதை கேட்டேன்."
"அதுக்கு பதில் உனக்கு நாளைக்கு தெரியுமென்று சொல்லிட்டாருக்கா".
"என்னவா இருக்குமென்று நானும் யோசிக்க எந்த ஐடியாவும் கிடைக்கலை. சரி நாளைக்கே தெரிஞ்சிக்கலானு தூங்கிட்டேன்".
"வழக்கம் போல எந்திரிச்சி ப்ரஷ் ஆகிட்டு இவர் எங்கே காணுமென்று தேட, உள்ளே இருந்து வந்தவரை பார்த்து அதிர்ச்சி தான் எனக்கு"
" போலீஸ் யுனிபார்மில் வந்தார் கா. ஏன் நீங்க போலீஸ்னு சொல்லலைனு சண்டை போட்டேன்.கேஸ் விஷயமா வந்தேன், அதை எப்படி சொல்ல முடியுமென்று கேட்டார். ஏற்கெனவே இந்த போலீஸ்காரர்களால் தான் சர்வானந்த் அண்ணனும், அண்ணியும் இறந்தாங்க"
"அதில் இருந்து நம்ப வீட்டில் யாருக்கும் போலீஸ்காரவங்களே புடிக்காது. இந்த விஷயத்தை சொன்னால் நீங்க ஒத்துக்கமாட்டீங்களென்று தான் நான் மறைச்சிட்டேன்"
"அதும் இல்லாமல், இவருக்கு நாம யாரென்றும் தெரியாது. பணக்கார வீட்டு பொண்ணு என்று தெரிந்தால் இவர் ஏத்துக்காமல் போய்டுவார்னு நானும் சொல்லவில்லை கா"
"மறாவது வருஷம் வசுவும் பிறந்தாள். வருஷமும் ஓடியது. காலேஜ் படிக்க சென்னையில் சேர்த்து விட்டார்"
"மூன்றாவது வருஷம் புராஜக்ட் பண்ண நார்துக்கு போறேனு வசு சொல்ல, நானும் நம்பிட்டேன்"
அங்க போய் சில மாதத்தில் வேலையும் கிடைச்சிடுச்சினு சொன்னாள். இப்படியே ரெண்டு வருஷம் போனது.
"மூனாவது வருஷம் தான் வசு கலெக்டராகிட்டாளென்றும், பீகார்ல போஸ்டிங். உனக்கு தெரிஞ்சால் விடமாட்டாயென்று நாங்க சொல்லவில்லைனு இவர் சொன்னாருக்கா"
எனக்கு பயங்கர கோவம். சண்டை போட்டேன். அங்க இருந்து ஏழாவது மாதம் இங்கே ஆந்திராவில் டிரான்ஸ்பர் ஆகிட்டுனு, மைக்கேலோடு வந்தாள்.
அதன் பிறகு நான் கல்யாண பேச்சு எடுக்க, ஒத்துக்கவே இல்லை. எவ்வளவோ போராடி பார்த்துட்டேன்.
"வருஷமும் ஓட, ஒத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண முடியாத நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே மறுகி போக, பிறகு ஒரு நாள் வசு ரூமிற்கு போகும் போது தான் அவள் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்தேன் கா"
"இதோ வருஷம் ஓடிடுச்சி. இன்றைக்கு தான் அந்த தாலிக்கு சொந்தகாரரை பற்றி தெரிஞ்சிது. அது விஷயமா பேச கோயம்புத்தூருக்கு வர சொல்லுறாருகா என்றவர், மைக்கேலை பற்றியும் சைலஜா பாட்டி கண்ணீரோடு சொல்லி முடித்தார்"
இனி...
"இதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நிமிடம் அங்கே அமைதி தான் நிலவியது"
"மாமா என்ன எதுவுமே சொல்லாம அமைதியா இருக்கீங்க என, கிரிஜா பாட்டி தனது கணவரை பார்த்து கேட்க, யோசிச்சிட்டு இருக்கேன் கிரி"
"எதையும் நேரில் போய் தீர விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது தான் மா.இது பிசினஸ் இல்லை, சட்டுனு முடிவெடுக்க"
"வாழ்க்கை பிரச்சினை"
"நிதானமாக தான் ஆராய்ந்து உண்மைய தெரிந்து கொள்ளணும். இந்த பிரச்சினையை இங்கையே விடுங்க. இப்போ வெளியே போகலாம். கண்ணனும்-தேவகியும் வந்தாச்சி போல, பேச்சு குரல் கேட்குது"
"பங்ஷன் நல்லா முடிஞ்சுதா கண்ணா என்க, முடிஞ்சுதுங்க மாமா என்றவர், பின்னர் கபிலனை பார்த்துட்டு வந்ததை பற்றி சொல்லும் போது டிவியை ஆன் பண்ண, அதில் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் நடந்த பாம் விபத்தை பற்றி தலைப்பு செய்தி ஓடியது"
"இரவு உணவை பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க, சிம்ஹன் தாத்தா தான் பொள்ளாச்சிக்கு போகப்போகும் விஷயத்தை பற்றி சொல்ல, ருத்ரன் யோசனையானான்"
"அப்போ சீனு கிட்ட சொல்லிடுறேன் மாமா.இங்கேயிருந்து போக எப்படியும் நாலு இல்லை அஞ்சு மணி நேரம் ஆகலாம்"
"நல்லவேளை பைபாஸ் வந்ததால் திருச்சிக்கே ஒன்னரைல இருந்து ரெண்டு மணி நேரத்திற்குள் போய் சேர்ந்திடலாம்.அங்க இருந்து கணக்கு பண்ணினால்,எப்படியும் நாலு மணி நேர பயணத்தில் நீங்க பொள்ளாச்சி போய்விடுவீங்க”
"சரி கண்ணா, நீ சொல்ற போலவே போகலாம். அப்போ டிரைவர் கிட்ட காலை 5 மணிக்குலாம் வர சொல்லிடுப்பா என்க, சரி மாமா என்றவர், அதே போல டிரைவர் சீனுவுக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னார்"
"பின்னர் அவரவர் அறைக்குள் சென்று படுத்து விட்டனர். அறைக்குள் நடந்து கொண்டிருந்த ருத்ரனுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை"
"அப்படி என்ன விஷயத்துக்கு இந்த சிங்கம், திடீர்னு பொள்ளாச்சிக்கு போக பிளான் போட்டு இருக்கிறார்,நமக்கு தெரிஞ்சு பொள்ளாச்சியில் யாருமே இல்லையே என்று யோசனையானான்"
"சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தவன், நாம இங்க யோசித்து மண்டைய உருட்டுவதற்கு அவர்களிடமே சென்று கேட்டு விடலாம் என்று முடிவு செய்தவன், கதவை திறந்து கொண்டு பக்கத்தில் அறையில் இருக்கும் தாத்தா பாட்டியின் அறையின் முன்பு போய் நின்று கதவை தட்ட, சில நொடியில் கிரிஜா பாட்டி கதவை திறந்தார்"
"கடந்த மூன்று மாதமாக பேரனிடம் எந்த வார்த்தையும் பேசுவதில்லை என்பதால், பாட்டி அமைதியாக நிற்க, உள்ளே வந்தவன் என்ன திடீர்னு பொள்ளாச்சிக்கு விசிட்?
"அங்க தான் நமக்கு தெரிஞ்சவங்கள் யாருமேயில்லையே என்று தாத்தாவைப் பார்த்து கேட்க, ஒரு முக்கியமான விஷயத்துக்காக உன் சின்ன பாட்டி சைலு கூட நாங்க போறோம்"
இந்த கையை வைத்துக்கொண்டு நீ அங்க வந்து என்ன பண்ண போறாய்? அதனால நீ இங்கையே இரு. நாங்க எப்படியும் நாளைக்கு நைட்டுக்குள்ள வந்து விடுவோம் என்று சொன்னார் சிம்ஹன் தாத்தா
"ஓஓஓ என்றவன், இவங்கள் இருக்கும் போது,நாளைக்கு நம்ப திட்டத்தை எப்படி செயல்படுத்தனு யோசனையா இருந்தேன்.
நல்லவேளை ஆண்டவா, நீயே இதுக்கு வழியை காட்டினாயே என, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டான்.
சைலஜா பாட்டி பிளாஷ்பேக்..
ஸ்கூல் லீவ் விட்டதால், என்னாலையும் அந்த பக்கம் போக முடியலை. இப்படியே இரண்டு வாரங்கள் போக, நாம ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து கோயிலுக்கு போயிருந்தோம்.
அப்போ, பிரசாதம் இருந்த பேகை எடுக்க நான் நம்ப கார் கிட்ட போயிருந்த போது, இவர் வந்து எதிர்ல நின்னாரு.
முதல்ல நான் கவனிக்கல. பேக் எடுத்த பிறகு, டோர் சாத்திட்டு பார்க்க, இவரு என்னையே முறைத்து பார்த்துட்டு இருந்தார்.
எதுக்கு இவர் இப்படி பார்க்கிறார் என்று நானும் யோசனையோடு பார்க்க, ஏண்டி ஒரு மனுஷன் இருக்கானா?, இல்லையான்னு தேடவே மாட்டியா என்று கேட்டார்.
அதை கேட்டவுடன் எனக்கு மனசுல பட்டாம்பூச்சி பறக்குவது போல இருந்துச்சி. சரி கொஞ்ச நேரம் விளையாடலான்னு முடிவு பண்ணினேன்.
உடனே சுதாரிச்சிக்கிட்டு,ரொம்ப வீரப்பா, ரோட்டில் வரவங்க போறவங்க எல்லாரையும் நான் ஏன் தேடணும்னு சொல்ல, ம்ம் உன் கழுத்துல மூணு முடிச்சு போட போறவனை, நீ தேட மாட்டியான்னு சொல்லிட்டு போயிட்டாரு.
அதன் பிறகு ஒரு ஆறு மாசம் நல்லா தான் போனது.
ஓர் நாள் நான் ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கும் போது,இவரு அந்த வழியில நின்னுட்டு இருந்தாரு.
என்னன்னு கேட்க,உன் கிட்ட கொஞ்சம் நான் பேசி ஆகணும்.இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம். லீவு எடுத்துக்கனு சொல்ல, இதுவரை அவர் இப்படி என்கிட்ட பேசினதில்லை என்பதால், நானும் ஸ்கூலுக்கு போய் லீவ் சொல்லி விட்டு நம்ப வராகி அம்மன் கோயிலுக்கு போயிருந்தோம்.
சிறிது நிமிடங்கள் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவர் அமைதியாக வானத்தை பார்த்து உட்கார்ந்திருக்க,"எனக்கும் பொறுமை கடந்து போயிடுச்சு"
"இப்படி விட்டத்தை பார்த்து உட்கார்ந்து இருக்க தான் என்னை வர சொன்னீங்களா என கோபமாக நான் கேட்க,உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமென்று சொன்னார்"
"ம்ம் இங்க தானே இருக்கேன் சொல்லுங்கணு சொன்னேன்"
"இன்றைக்கு காலை பதினோரு மணிக்கும் கிளம்பும் கப்பலில் நான் இந்தியா போறேன்"
"திரும்ப எப்போ வர முடியுமென்று சரியா சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பா உனக்காக நான் வருவேன். அதுவரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடியுமா? அப்படின்னு அவர் கேட்டதும், எனக்கு பயங்கர ஷாக் ஆனது"
"என்ன சொல்றீங்கன்னு நான் பதற, ஆமாம் நான் உடனே போய் ஆகணும். இதை மட்டும் தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருந்தாரு"
"எப்படி உங்களை பாக்காம என்னால இருக்க முடியும்?,எப்ப வருவீங்கன்னு தெரியாமல் இப்படி சொன்னா என்ன அர்த்தம் ?.
இதற்கு நடுவுல, எங்க வீட்ல இப்பயே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா தெரியாதா? அப்படின்னு கேட்டு எனக்கு அழுகை வந்துடுச்சு.
உன் நிலைமை எனக்கு புரியுது. அதைவிட என் நிலைமை இப்போதைக்கு உன் கிட்ட சொல்ல முடியாது.ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும். இப்போதைக்கு நான் போய் ஆகணும் அப்படின்னு எந்திரிச்சுட்டார்.
நிச்சயமாக அவர் இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியாது. எப்படியும் உனக்கும் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கும் போது, எனக்கு மாப்பிள்ளை பார்த்து விடுவாங்களென்பது எனக்கு தெரியும்.
ஓர் நாள் அத்தையும் அப்பாவும் பேசிட்டு இருந்தாங்க, அதை நான் கேட்டேன்.
அப்போ,இவர் கிட்ட ஒன்னு சொன்னேன்.சரி தாராளமாக போங்க. ஆனால் ஒன்னே ஒன்னு பண்ணிட்டு போங்களென்று நான் கேட்க, என்ன சொல்லு பண்ணுறேன்னு சொன்னார்.
உங்கள் கூட என்னையும் கையோடு கூட்டிட்டு போங்களென்று நான் சொல்ல, ஏய் என்ன விளையாடுறியா அப்படின்னு கோவப்பட்டார்.
நான் உயிரோட இருக்கணும்னு நினைச்சீங்களென்றால் என்னை கூப்பிட்டு போங்க. இல்லை நீங்க இப்படியே போங்கன்னு நான் சொல்லிட்டு, கோயிலில் கண்ணை மூடி உட்கார்ந்துகொண்டேன்.
என்னால உன்னை கூட்டிட்டு போக முடியாதுன்னு சொல்லிட்டு, அவரு போயிட்டாரு.
நான் அழுதுட்டு அங்கையே இருந்தேன். அவர் போய் ஒரு மணி நேரம் ஆகிட்டு. அப்பொழுது, கப்பலுக்கு நேரம் ஆகிட்டு வா என கூப்பிட்டும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, இவர் முறைச்சிட்டு நின்றார்"
"பிறகு அவரோட இந்தியாக்கு வந்துட்டேன். அங்க வந்து மறாவது நாள் இவர் என்னை திருச்சூருக்கு கூப்பிட்டு போய், அவங்க அப்பா அம்மா கிட்ட என்ன சொன்னாரென்று தெரியவில்லை"
" மறுநாளே எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தாங்க. உங்களையெல்லாம் நினைச்சி வருத்தம் தான்"
"ஒரு வாரம் போக இவ்வளவு பெரிய சொத்துக்காரர், எதுக்கு அங்க வந்து பேக்கரில வேலை பார்த்தீங்கள் என்பதை கேட்டேன்."
"அதுக்கு பதில் உனக்கு நாளைக்கு தெரியுமென்று சொல்லிட்டாருக்கா".
"என்னவா இருக்குமென்று நானும் யோசிக்க எந்த ஐடியாவும் கிடைக்கலை. சரி நாளைக்கே தெரிஞ்சிக்கலானு தூங்கிட்டேன்".
"வழக்கம் போல எந்திரிச்சி ப்ரஷ் ஆகிட்டு இவர் எங்கே காணுமென்று தேட, உள்ளே இருந்து வந்தவரை பார்த்து அதிர்ச்சி தான் எனக்கு"
" போலீஸ் யுனிபார்மில் வந்தார் கா. ஏன் நீங்க போலீஸ்னு சொல்லலைனு சண்டை போட்டேன்.கேஸ் விஷயமா வந்தேன், அதை எப்படி சொல்ல முடியுமென்று கேட்டார். ஏற்கெனவே இந்த போலீஸ்காரர்களால் தான் சர்வானந்த் அண்ணனும், அண்ணியும் இறந்தாங்க"
"அதில் இருந்து நம்ப வீட்டில் யாருக்கும் போலீஸ்காரவங்களே புடிக்காது. இந்த விஷயத்தை சொன்னால் நீங்க ஒத்துக்கமாட்டீங்களென்று தான் நான் மறைச்சிட்டேன்"
"அதும் இல்லாமல், இவருக்கு நாம யாரென்றும் தெரியாது. பணக்கார வீட்டு பொண்ணு என்று தெரிந்தால் இவர் ஏத்துக்காமல் போய்டுவார்னு நானும் சொல்லவில்லை கா"
"மறாவது வருஷம் வசுவும் பிறந்தாள். வருஷமும் ஓடியது. காலேஜ் படிக்க சென்னையில் சேர்த்து விட்டார்"
"மூன்றாவது வருஷம் புராஜக்ட் பண்ண நார்துக்கு போறேனு வசு சொல்ல, நானும் நம்பிட்டேன்"
அங்க போய் சில மாதத்தில் வேலையும் கிடைச்சிடுச்சினு சொன்னாள். இப்படியே ரெண்டு வருஷம் போனது.
"மூனாவது வருஷம் தான் வசு கலெக்டராகிட்டாளென்றும், பீகார்ல போஸ்டிங். உனக்கு தெரிஞ்சால் விடமாட்டாயென்று நாங்க சொல்லவில்லைனு இவர் சொன்னாருக்கா"
எனக்கு பயங்கர கோவம். சண்டை போட்டேன். அங்க இருந்து ஏழாவது மாதம் இங்கே ஆந்திராவில் டிரான்ஸ்பர் ஆகிட்டுனு, மைக்கேலோடு வந்தாள்.
அதன் பிறகு நான் கல்யாண பேச்சு எடுக்க, ஒத்துக்கவே இல்லை. எவ்வளவோ போராடி பார்த்துட்டேன்.
"வருஷமும் ஓட, ஒத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண முடியாத நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே மறுகி போக, பிறகு ஒரு நாள் வசு ரூமிற்கு போகும் போது தான் அவள் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்தேன் கா"
"இதோ வருஷம் ஓடிடுச்சி. இன்றைக்கு தான் அந்த தாலிக்கு சொந்தகாரரை பற்றி தெரிஞ்சிது. அது விஷயமா பேச கோயம்புத்தூருக்கு வர சொல்லுறாருகா என்றவர், மைக்கேலை பற்றியும் சைலஜா பாட்டி கண்ணீரோடு சொல்லி முடித்தார்"
இனி...
"இதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நிமிடம் அங்கே அமைதி தான் நிலவியது"
"மாமா என்ன எதுவுமே சொல்லாம அமைதியா இருக்கீங்க என, கிரிஜா பாட்டி தனது கணவரை பார்த்து கேட்க, யோசிச்சிட்டு இருக்கேன் கிரி"
"எதையும் நேரில் போய் தீர விசாரித்து தெரிந்து கொள்வது நல்லது தான் மா.இது பிசினஸ் இல்லை, சட்டுனு முடிவெடுக்க"
"வாழ்க்கை பிரச்சினை"
"நிதானமாக தான் ஆராய்ந்து உண்மைய தெரிந்து கொள்ளணும். இந்த பிரச்சினையை இங்கையே விடுங்க. இப்போ வெளியே போகலாம். கண்ணனும்-தேவகியும் வந்தாச்சி போல, பேச்சு குரல் கேட்குது"
"பங்ஷன் நல்லா முடிஞ்சுதா கண்ணா என்க, முடிஞ்சுதுங்க மாமா என்றவர், பின்னர் கபிலனை பார்த்துட்டு வந்ததை பற்றி சொல்லும் போது டிவியை ஆன் பண்ண, அதில் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் நடந்த பாம் விபத்தை பற்றி தலைப்பு செய்தி ஓடியது"
"இரவு உணவை பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க, சிம்ஹன் தாத்தா தான் பொள்ளாச்சிக்கு போகப்போகும் விஷயத்தை பற்றி சொல்ல, ருத்ரன் யோசனையானான்"
"அப்போ சீனு கிட்ட சொல்லிடுறேன் மாமா.இங்கேயிருந்து போக எப்படியும் நாலு இல்லை அஞ்சு மணி நேரம் ஆகலாம்"
"நல்லவேளை பைபாஸ் வந்ததால் திருச்சிக்கே ஒன்னரைல இருந்து ரெண்டு மணி நேரத்திற்குள் போய் சேர்ந்திடலாம்.அங்க இருந்து கணக்கு பண்ணினால்,எப்படியும் நாலு மணி நேர பயணத்தில் நீங்க பொள்ளாச்சி போய்விடுவீங்க”
"சரி கண்ணா, நீ சொல்ற போலவே போகலாம். அப்போ டிரைவர் கிட்ட காலை 5 மணிக்குலாம் வர சொல்லிடுப்பா என்க, சரி மாமா என்றவர், அதே போல டிரைவர் சீனுவுக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னார்"
"பின்னர் அவரவர் அறைக்குள் சென்று படுத்து விட்டனர். அறைக்குள் நடந்து கொண்டிருந்த ருத்ரனுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை"
"அப்படி என்ன விஷயத்துக்கு இந்த சிங்கம், திடீர்னு பொள்ளாச்சிக்கு போக பிளான் போட்டு இருக்கிறார்,நமக்கு தெரிஞ்சு பொள்ளாச்சியில் யாருமே இல்லையே என்று யோசனையானான்"
"சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தவன், நாம இங்க யோசித்து மண்டைய உருட்டுவதற்கு அவர்களிடமே சென்று கேட்டு விடலாம் என்று முடிவு செய்தவன், கதவை திறந்து கொண்டு பக்கத்தில் அறையில் இருக்கும் தாத்தா பாட்டியின் அறையின் முன்பு போய் நின்று கதவை தட்ட, சில நொடியில் கிரிஜா பாட்டி கதவை திறந்தார்"
"கடந்த மூன்று மாதமாக பேரனிடம் எந்த வார்த்தையும் பேசுவதில்லை என்பதால், பாட்டி அமைதியாக நிற்க, உள்ளே வந்தவன் என்ன திடீர்னு பொள்ளாச்சிக்கு விசிட்?
"அங்க தான் நமக்கு தெரிஞ்சவங்கள் யாருமேயில்லையே என்று தாத்தாவைப் பார்த்து கேட்க, ஒரு முக்கியமான விஷயத்துக்காக உன் சின்ன பாட்டி சைலு கூட நாங்க போறோம்"
இந்த கையை வைத்துக்கொண்டு நீ அங்க வந்து என்ன பண்ண போறாய்? அதனால நீ இங்கையே இரு. நாங்க எப்படியும் நாளைக்கு நைட்டுக்குள்ள வந்து விடுவோம் என்று சொன்னார் சிம்ஹன் தாத்தா
"ஓஓஓ என்றவன், இவங்கள் இருக்கும் போது,நாளைக்கு நம்ப திட்டத்தை எப்படி செயல்படுத்தனு யோசனையா இருந்தேன்.
நல்லவேளை ஆண்டவா, நீயே இதுக்கு வழியை காட்டினாயே என, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டான்.