• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
467
சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்:

"மிஸ்டர் வெற்றிவேல் நீங்களும் ஜானும்,ஃப்ளைட் உள்ளே போய் செக் பண்ணுங்க. உங்க கூட ரெண்டு பாம்ஸ் ஸ்குவாட் வருவார்கள் "

"இங்க உள்ளதை நாங்க பார்த்துக்கிறோமென்று அவனின் மேல் அதிகாரி இன்ஸ்டிரக்ஷன் கொடுக்க, எஸ் சார் என்று சொல்லி அவர்கள் உள்ளே சென்றனர்"

"அங்கிருந்த எல்லா ஃப்ளைட்டையும் சோதித்து விட்டார்கள். இன்னும் மீதம் இருந்தது இரண்டே இரண்டு ஃப்ளைட் தான்"

"இதில் ஏதோ ஒன்றில் தான் பாம் இருக்கிறது என்பது உறுதியாக இல்லை என்றாலும், சந்தேகம் வந்தது"

" ஜான் நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சு போகலாம் நீ அந்த ஃப்ளைட்டுக்கு போங்க. நான் இந்த ஃப்ளைட்டுக்கு போகிறேன் என்று சொல்ல, நானும் அதை தான் வெற்றி யோசித்தேன் என்று சொன்னான்"

" ஓகே கேர்ஃபுல் என்றவாறு இரண்டு ஃப்ளைட்டிலும் சோதனையிட, முதலில் ஜான் இருக்கும் ஃப்ளைட்டில் கேப்டன் சீட்டிற்கு கீழே இருக்கும் பாம் கண்டு பிடிக்கப்பட, அது வெடிக்க இன்னும் 5 மினிட்ஸ் இருப்பதாக டைமர் காட்டியது".

" கை தேர்ந்த பாம் ஸ்குவாட் என்பதால் அது எந்த வகையான பாம் என்பதை சில நொடியில் கண்டறிந்தவர், அதன் ஒயரை கட் பண்ண, டைமர் ஆப் ஆனது"

" இங்கே வெற்றியும் சோதனை பண்ண, அங்கே பேசஞ்சர்ஸ் உட்காரும் சீட்டிற்கு அடியில் பாம் இருப்பது தெரிந்தது"

"அதற்கான நேரம் இன்னும் இரண்டு நிமிடமே இருக்க, என்ன செய்வதென்று ஒரு நொடி இருவருக்கும் புரியவில்லை"

"சார் இதை கண்டிப்பாக டிஸ்குவாலிஃபை பண்ண முடியாது என்று அந்த பாம் ஸ்குவாட் சொல்ல, பொறுமையாக பாமை கழட்டி எடுத்தவன், சுற்றி இடத்தை பார்த்தான்"

"பின்னர் கீழே இறங்கி வேகமாக டைமரை பார்த்துக் கொண்டே ஓடியவன் தூரத்தில் தெரிந்த காலி இடத்தில், முடிந்த அளவு வேகமாக தூக்கி எறிந்து விட்டு ஓடி வர, கீழே விழுந்த பாம், சில நொடியில் வெடித்து சிதறியது"

"இந்த விஷயம் தான் நாடு முழுவதும் தலைப்பு செய்தியாக அனைத்து சேனலிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது"

பொள்ளாச்சி:

"ஒன்பது மாதங்களுக்கு பின்னர் தன்னவனை இன்று தான் ஜனனியும் பார்த்தாள்"

"இடைப்பட்ட நாளில் அன்பு-கீதா இருவருக்கும் நல்ல முறையில் திருமணம் முடிந்திருந்தது"


"தற்செயலாக டிவி சேனலை மாற்றும் பொழுது தான் இந்த செய்தியை கண்டு கதறினாள்"

வெற்றிக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், எதாவது ஆகியிருந்தால் என்பதை நினைத்தே இந்த கண்ணீர்"

அவளை எப்படி சமாதானம் செய்வென்று புரியாமல் மற்றவர்களும் பரிதவித்து நிற்க, அப்பொழுது தான் வள்ளியம்மையின் நினைவு ஜனனிக்கு வர, வேகமாக எழுந்தவள், அப்பா அங்கே வள்ளியம்மா என்க, அட ஆமாம் மா"

கீதா வேற மாசமா இருக்கு. நீ போய்ட்டு பாரு, நான் கலாவை அனுப்புறேனென்று சொல்லிய ராக்கம்மா பாட்டி, கீதாவின் வீட்டிற்கு போய் விஷயத்தை சொல்ல, அவரும் பதறியபடி, இதோ போறேன் அத்தையென்று சென்றார்"

வேகமாக ஓட்டமும் நடையுமாக வந்த ஜனனி, பெரியம்மா பெரியம்மா என கூப்பிட்டுக்கொண்டே உள்ளே போய் பார்க்க அங்கே டிவி ஓடிக் கொண்டிருப்பதும், வள்ளியம்மை தரையில் மயங்கி கிடப்பதும் தெரிந்தது"

" ஐயோ பெரியம்மா என்று கதறி ஓடியவள் கிச்சனிற்கு சென்று ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துட்டு வந்து அவரின் முகத்தில் தெளிக்க, சிறிது நொடியில் கண்ணை திறந்த வள்ளி, அங்கிருந்த ஜனனியை பார்த்துவிட்டு, வெற்றி என்று அவளை அணைத்துக் கொண்டு அழுதார்"

"பெரியம்மா ஒன்னும் இல்லை,அவர் நல்லா இருக்காரு மா.உங்க மருமகனுக்கு ஒன்னும் இல்லைங்கம்மா என்றவளின் வார்த்தையை கேட்டவர்,நீ சொல்வது நிஜமா தானே என்க,ஆமாம் மா"

"நீங்கள் வேண்டுமானால் அவருக்கு ஃபோன் போட்டு பாருங்களென்று ஜனனி சொல்லும் போதே, வள்ளியின் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது"

"மனமோ தன்னவன் தான் என சொன்னாலும்,ஆனால் வேறு யாராவது இருந்தால் என்ன செய்வது, ஏமாந்துவிடுவோமே என தனக்குள் சொல்லியவள், டேபிளின் மேல் இருந்த போனை எடுத்து வந்து, வள்ளியிடம் நீட்டினாள்"

"அதை வாங்கியவர்,கவரை திறந்து டிஸ்பிளேவில் புகைப்படத்தோடு வந்த பெயரை பார்க்க, கண்ணா என்ற பெயர் வந்ததும் உடனே அட்டென் பண்ணியவர் கண்ணுஊஊ என்க, என்ன வள்ளி பண்ணுற என்றான், அந்த பக்கமிருந்து வெற்றி"

"கண்ணு கண்ணு என வள்ளி அழ, அட அடஅடடடடஆஆஆ.உன் கிட்ட எப்படியாப்பட்ட விஷயத்தை சொல்ல கால் பண்ணிருக்கேன், நீ என்னடா என்றால் ஒப்பாரி வைக்குறாயே"

"நான் நல்லா பேஷா இருக்கேன். டிவியை பார்த்து உன் கற்பனை குதிரை வேகமாக ஓடியிருக்குமென்று தெரிஞ்சி தான் உடனே உனக்கு ஃபோன் போட்டேன் என்றான்"

"மருமகனின் பேச்சில் இயல்பிற்கு திரும்பியவர்,என்ன விஷயம் கண்ணு?ம்ம் சொல்லு என ஆர்வமாய் கேட்க,அது வந்து வள்ளி,இன்னும் ரெண்டு நாளைக்குள் நம்ப வீட்டுக்கு எதிர்பாராத ஒருத்தவங்க வருவாங்க"

"அவங்களை அங்கையே புடிச்சி வைக்க வேண்டியது உன்னோட சாமார்த்தியம் சொல்லிட்டேன். என்னால் முடிஞ்சதை இங்கு நான் பண்ணிட்டேன் என்க.. "

"அட செந்தூராஆஆஆ என்னப்பா சோதனை,இப்படி தலையும் புரியாமல்,வாலும் புரியாமல் சொன்னா,இந்த மக்குக்கு என்ன கண்ணு எனக்கு விளங்கும்"

"என்னதென்று நீயே சொல்லுய்யா என்க,நோ வள்ளி நோ.அதை நேரில் பார்த்து நீயே தெரிந்துகொள் என்றவன்,மேலும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை கட் பண்ணினான்"

சதூர்வேதமங்கலம்:

"தங்கையின் அழுகை குறைந்திருப்பதை கண்ட கிரிஜா பாட்டி, சைலு இப்ப சொல்லு?,வசு வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது? என்று கேட்டார்"

"அக்கா-மாமா,உங்க கிட்ட சொல்லாத ஒரு விஷயம் இருக்கு என்று தயங்க,அப்படி என்ன தங்கமலை ரகசியம் சொல்லு பாப்பு?,என்ன விஷயம் அதுயென்றார் சிம்ஹன் தாத்தா"

"இவரு ரிட்டையர்டு ஐ பி எஸ் ஆபிசர் என்க,என்னாஆஆ என்று இப்பொழுது சிம்ஹன் தம்பதியினர் இருவரும் அதிர்ந்து போனார்கள்"

ஆமாக்கா இவர் போலீஸா இருக்கிறார் என்பது, எனக்கு அப்போ தெரியாது. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் உண்மை தெரியும் என்று சொல்ல, என்ன புதுசு புதுசா சொல்லுறடி?

அக்கா அதாவது,நான் ஸ்கூலிற்கு போய் வரும் போது தான் அங்க இருக்கும் பேக்கரியில் இவரை முதன் முதலாக பார்த்தேன்"

"ஒருநாள் ஸ்கூல்ல காம்படீஷன் இருக்குன்னு சொல்லிட்டு நான் லேட்டா வந்தேன் தெரியுமா?.உனக்கு அந்த நாள் ஞாபகம் இருக்கா?.

"நீ கூட கேட்டியே,ஏய் என்னடி போகும் போது ஒரு டிரஸ் போட்டு போனாய். இப்போ வரும் போது வேரு டிரஸ் போட்டு வந்துருக்கியே என்று,அன்று நடந்ததை தனது அக்காவிடம் ஞாபகப்படுத்தி கேட்க,அவரும் யோசித்துப் பார்த்தவர்,ஹம் ஆமா ஆமா அன்று உங்க ஸ்கூல்ல ஆண்டுவிழா அன்றைக்கு தானே நடந்தது என்றார் கிரிஜா பாட்டி"

"ஆமாம் கா அதேதான்.அன்றைக்கு பங்ஷன் முடிஞ்சி நான் வீட்டுக்கு வரும் போது கொஞ்சம் இருட்டிருச்சி".

"மழை வேற தூறல் போட,நான் ஆட்டோ எதாவது வருமாயென்று அந்த பேக்கரிக்கு எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கொஞ்சம் பயத்தோட நின்னுட்டு இருந்தேன் கா"

"கொஞ்ச நேரத்தில் ரெண்டு குடிகாரனுங்க அங்க வந்து,ஒரு மாதிரியா சுற்றி சுற்றி வந்து என்னை பார்த்தானுங்ககா"

"பேக்கரி லீவா இருக்க,அப்பொழுது அங்கு யாருமே இல்லை,அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாக,அவனுங்க ரெண்டு பேரும் என் புடவையை இழுத்து என அழுதவர், சொல்லுடி என்னாச்சி என்று பதறினார்"

"நான் கத்தி கதறி யாராவது காப்பாத்துங்களென்று வேகமாக கத்தும் போது இவர் தான் அந்த வழியா வந்து,அவனுங்கள் ரெண்டு பேரையும் நல்லா அடித்து போட்டார்"

"புடவை,கிழிஞ்சிபோக,யாராவது பாக்குறதுக்கு முன்னே என் கூட வாங்கயென்று அவர் வண்டியிலே என்னை கூப்பிட்டு போனவர், ஒரு வீட்டுக்கு முன்ன போய் நிறுத்த,அது தனி வீடா இருந்ததால் எனக்கு பயம்"

"நான் வராம நிற்க, பயப்படாதீங்க. நான் அந்த பேக்கரியில் வேலை பார்ப்பவன் தான்.இது எனக்கு ரொம்ப தெரிஞ்ச வீடு"

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நாளைக்கு வேண்டுமானால் விசாரிச்சிக்குங்க என்று சொல்லும் போது, கரண்ட் வந்துடுச்சி"

"அந்த வீட்டுக்குள்ளே நானும் போனேன். அங்கே ஒரு அக்காவும்,வயதான அம்மாவும் இருந்தாங்கள் கா"

"அவங்க வீட்டின் பின் போர்ஷனில் தான் இவர் தங்கி இருக்கிறாராம். அவங்க கிட்ட சொல்லி வேற ட்ரெஸ் வாங்கி கொடுத்தாரு"

"அதன் பிறகு மழை விட்டதும் அவரே ஆட்டோ வர வச்சு அதுல அனுப்பி வச்சாங்க"

"நானும் எதுவும் நடக்காத போல வீட்டுக்கு வந்தேன்.மழையில நனைந்தது,பிறகு நடந்த சம்பவத்தால் வந்த பயம் எல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு வாரம் காய்ச்சல் நான் ஸ்கூலும் போகலை"

"பிறகு நான் ஸ்கூல் போகும் போது தினமும் அந்த பேக்கரியில் பார்க்க,அவர் அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்காது போலவும்,என்னை தெரிந்த போலவும் கண்டுக்கவே இல்லை"

"இப்படியே ஒரு மாதம் போச்சு.ஒரு நாள் நானே போய் அவர்கிட்ட கேட்டேன் கா.என்னை தெரியலையா என்று?,அவர் கடையை சுற்றி பார்த்து விட்டு நல்லாவே தெரியும் என்க, பிறகு ஏன் என்கிட்ட நீங்கள் பேசவே இல்லையென்று நான் கேட்க,ஏன் அன்று இருட்டுல நடந்ததை எல்லாருக்கும் படம் போட்டு காட்டணுமான்னு கேட்டாருக்கா"

"அவர் கேட்ட கேள்வியில எனக்கு சிரிப்பு வந்ததும் நான் சிரிச்சிட்டேன், ஆனால் அவரோ என்னை கண்ணு மண்ணு தெரியாமல் திட்டி துரத்தி விட்டாரு"

"கொஞ்ச நாள் நானும் கண்டுக்காமல் போனேன்.ஆனால்,நடந்த உண்மை என்னவென்றால் தூரத்தில் வரும் போதே அவரை நான் பார்த்து விடுவதால்,நான் கவனிப்பது அவருக்கு கொஞ்சமும் தெரியாமல் போய்விட்டது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
467
கனடா:

" ஏய் ஆதி உன் ஃபோனிற்கு எவ்வளவு நேரமாக கால் வந்துட்டே இருக்கு பாரென்று ரியா தூக்கத்தில் சொல்ல, ம்ம் என்றவாறு ஆதிரா தூங்கிக் கொண்டிருந்தாள்"

"இப்பொழுது ரியாவின் நம்பருக்கு கால் வர, தூக்கத்தோடே அட்டென் பண்ணியவள்,அங்கு கேட்ட குரலால் எழுந்து உட்கார்ந்து கொண்டு,ஹம் சொல்லுங்க அங்கிள் என்றாள்"

" அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தியை கேட்டவள் ம்ம் சரிங்க அங்கிள். பத்து நிமிஷத்தில் கால் பண்ணுறேனென்று சொல்லி அழைப்பை கட் பண்ணியவள், ஏய் ஆதி சீக்கிரம் எந்திரிடி"

"அடியேய் உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்காங்களாம். பத்து நிமிஷத்தில் வீடியோ கால் பண்ணுறேன்னு சொல்லி அங்கிள் தான் போன் பண்ணுறாங்க என்று ரியா சொல்ல, நன்கு தூக்கத்தில் இருந்தவள் தோழியின் வார்த்தைகளைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்தவள் அடக்கடவுளே கல்யாண பேச்சு வரக்கூடாது என்பதற்காக தானே சென்னையில் படிக்காமல்,ரியாவை இழுத்துக் கொண்டு கனடாவிற்கு வந்தேன்"

"இங்கேயும் அதே பிரச்சனையா என்று, தனது தலையில் கை வைத்துக் கொண்டாள் ஆதிரா"

" சிறிது நிமிடங்கள் செல்ல,இன்று எப்படியாவது தன் மனதிற்கு பிடித்தவனைப் பற்றி வீட்டில் சொல்லிடணும்.அப்போ தான் இனி கல்யாண பேச்சு எடுக்க மாட்டார்கள்"

" இதற்கு மேலும் இந்த விஷயத்தை தள்ளி போடக்கூடாது.இன்றே நம் முடிவை சொல்வது தான் சரியென்று முடிவெடுத்து, ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள் ஆதிரா"

"மேலும் முக்கால் மணி நேரம் கடந்திருக்க,தோழிகள் இருவரும் தயாராகி அங்கிருக்கும் ஹாலிற்கு வந்தனர். அந்த நேரம் சமையலுக்கு வைத்திருக்கும் வேலையாளும் வர, இரவு டின்னர் மெனுவை சொல்லி விட்டு, இப்பொழுது ஆளுக்கொரு காஃபி கொடுக்குமாறு சொல்லியவளுங்கள், வரப்போகும் வீடியோ காலிற்காக இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்"

களுத்துறை:

" அங்கிள் எங்கே தான் போறாங்க என்று ஆது கேட்க ,வாங்கப்பா என்று ஆலீஸும் சொல்ல, சரி வாடா. எல்லாரும் போறாங்க நாமளும் போவோமென்று ரஞ்ஜனோடு பின்னாடியே சென்றான்"

" எரும மாடு அங்கே போனால் தெரிந்து விடும். அத விட்டு நீ ஏன் உளறிக்கிட்டு இருக்கேடா என நண்பனை பார்த்து ரஞ்ஜன் கேட்க, எல்லாம் நேரம்டா"

" கொஞ்சமாவது தங்கச்சி புருஷன் என்று மரியாதையை கூட கொடுக்காமல், இப்படி பேசுறியே,இது நல்லதுக்கு இல்லைடா என்க,செருப்பு பிஞ்சிடும் பிஞ்சி"

" தங்கச்சி புருஷன்,அக்கா புருஷன்னு. மரியாதை வேற உனக்கு கேடா என்று ரஞ்ஜன் சொல்ல, அதற்கு ஆதுவோ,டேய் மச்சி போதும்டா"

" ரொம்ப புகழாதடா எனக்கு வெட்கமாக வருது என்க, அடச்சை என தன் தலையில் தட்டிக் கொண்ட ரஞ்ஜன், வாயை மூடிக்கிட்டு வாடா என்றான்"

" ஏம்பா அங்கே இருந்து வர இவ்வளவு நேரமா? என ஆனந்த் கேட்க, வேண்டுதலை, அதான் பொறுமையாக வந்தோமென்று ஆது சொல்ல, மற்றவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது"

" ஜேம்ஸ் நைட்ல இருந்து எங்களுக்கு மண்டை காய்ஞ்சிட்டுடா.பாப்புக்கு பார்த்த மாப்பிள்ளை யாரு?, நீ பார்த்தால் சரியாக தான் இருக்கும் டா"

" இருந்தாலும் பையனை பற்றி தெரிந்து கொள்ளவதற்கு ஒரே ஆர்வமா இருக்குடா என்றார் சுந்தர்"

" என்ன பிடாரிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கீங்களா?என்று ஆது சத்தமாக கேட்க, இப்பொழுது எல்லாரும் ஆதவனை முறைத்து பார்த்தனர்"

" ஐய்யோ,வழக்கமா சொல்ற போல சத்தமா சொல்லிட்டேனே...
சமாளிப்போம், ஒரு வார்த்தை கூட யாருமே சொல்லவே இல்லையே என்று ஆது கோபப்பட்டு கேட்க,நாங்க எங்கடா பார்த்தோம்.ஜேம்ஸ் தான் பார்த்திருக்கிறேன்னு சொன்னான்"

"நேரம் போய்ட்டு இருக்கு, ஆனால் இவன் சொன்ன போல, யாருமே இதுவரை வரவில்லை என சுந்தர் சொல்ல, ஜேம்ஸ் போதும் உன் விளையாட்டு"

" நேரடியாக விஷயத்திற்கு வா என ஆலீஸ் சொல்ல, சரி என்றவர், சுந்தர்- மேகுமா, நம்ப பாப்புக்கு நான் பார்த்த மாப்பிள்ளை கிருபாவோட பையன் ரஞ்ஜன் தான் என்க, எதே என மற்றவர்கள் ஆனந்தத்தில் அதிர்ந்தனர்"

" இவ்வளவு நேரம் நெருப்பில் நிற்குவதை போல புழுவாய் துடித்துக் கொண்டிருந்த ரஞ்ஜனுக்கு, தனது மாமா சொன்னதை கேட்டு, இப்பொழுது தான் அவனுக்கு உயிரே வந்தது போல இருந்தது"

"ராகினிக்கும்- ஆதுக்கும் முடிவாகிடுச்சி. கையோடு இவங்களுக்கும் பேசிட்டால் சரியா வருமென்று மனசு தோணியதுடா".

" நம்ப கிட்டையே புள்ளைங்க இருக்கும் போது, வெளியே ஏன் பார்க்கணுமென்று நானும், ஆனந்தும் பேசிக்கொண்டோம்"

"இப்போ நீங்க தான் முடிவு சொல்லணும்? என்றார். கரும்பு தின்பதற்கு கசக்குமாணா என்றவர், உங்க பேபிகிட்ட நீங்களே கேளுங்கணா?

" நானும் பாப்பு இங்கு வந்ததிலிருந்து கல்யாண பேச்சை எடுக்குறேன். அவள் பிடி கொடுத்தே பேச மாட்டுறாள் ணா"

"யாரையாவது விரும்பினாலும் சொல்லுடா, அந்த பையன் வீட்டிலே பேசுறோமென்று சொன்னோம்"

"அதற்கும் வாயை திறக்கலை. இங்கே இருந்தால் அதை பற்றி பேச்சு வருமென்று தான், உங்க பேபிமா கனடாவிற்கு படிக்க போறேனென்று பிடிவாதமாக போயிருக்காள் என்றார்"

"ஹாஹாஹா... இதுவேரையா என்று சத்தமாக சிரித்த ஜேம்ஸ், ஆலீஸ் நீயே பேபிமாக்கு கால் பண்ணு என்க, ம்ம் என்று சொல்லியவர், தனது ஃபோனிலிருந்து பேபிமா என்ற பெயருக்கு வீடியோ கால் பண்ணினார்"

" ஏய், ஆலீஸ் மாம் கிட்ட இருந்து கால் வருதுடி என்க, அட்டென் பண்ணு பக்கி. யாரு தான் அந்த பாவப்பட்ட ஜீவனென்று, நானும் பார்க்கிறேனென்று சொன்னாள் ரியா"

"தோழியின் வார்த்தைகளைக் கேட்டு ஆதிரா முறைத்துப் பார்க்க,கால் கட்டானது. பின்னர் மீண்டும் அழைப்பு வர அட்டென்ட் பண்ணிய ரியா, ஹலோ ஆண்டி எப்படி இருக்கீங்க? என்க, நல்லா இருக்கிறேன் டா.நீ எப்படி இருக்க? என்று பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்"

"சிறிது நிமிடங்கள் இருவரும் பேசிவிட்டு பேபி மா எங்கடா என்க,இதோ பக்கத்தில் தான் இருக்கிறாள் உங்க பேபிமா என்றபடியே ஆதிரா பக்கம் ஃபோனை திரும்பினாள்"

"பேபிமா எப்படி டா இருக்க என்க, நல்லா இருக்கேன் மாம். நீங்க?, டாட் எப்படி இருக்கீங்களென்று ஆதிரா கேட்க, நல்லா இருக்கோம் டா"

"அப்புறம் பேபிமா, உன்னை கேட்காமல் நானும், உன் டாடியும் உனக்கொரு மாப்பிள்ளையை பார்த்திருக்கோம். உனக்கு பிடித்திருந்தால் தான் அடுத்த கட்ட நடவடிக்கை"

"எந்த கட்டாயமும் இல்லை பேபிமா. ரொம்ப தங்கமான பையன். வார்த்தை மட்டும் அவ்வளவு எளிதில் வாங்கிட முடியாதுடா என்று சொல்லி ஆலீஸ் சிரித்தவர், சரி பையனை வீடியோல பாரு"

"மற்றதை பிறகு பேசிக்கலாமென்றவர், ரஞ்சனிடம் ஃபோனை கொடுக்க, ஆதிராவோ ஆண்டவனே என்ன இது சோதனை?, நான் எதை நினைத்து பேச இருந்தால், மாம் வேற இப்படி சொல்லுறாங்களே"

"சரி சரி அந்த மொகரையை பார்த்து விட்டு பிடிக்கலையென்று சொல்லிட வேண்டியது தானென்று மனதிற்குள் முடிவெடுத்தவள், வேண்டா வெறுப்பாக கையிலிருக்கும் ஃபோனை பார்க்க,அங்கே இருப்பவனை கண்டு கண்கள் விரிய அதிர்ந்து போனாள்"

சதூர்வேதமங்கலம்:

" என்ன பண்ணுறாளென்று தெரியவில்லையே?, நேற்றிலிருந்து இன்னும் அவளை பார்க்கலை, நம்மை தேடி இருப்பாளா? என ருத்ரன் முணு முணுக்க, ச்சே ச்சே உன்னை ஏன் அவள் தேட போறாள் டா"

"மூன்று வேளையும் சாப்பிட்டு நல்லா நிம்மதியா தூங்கியிருப்பாள். நீ பேசிய லட்சணத்திற்கு எவள்டா உன்னை நினைப்பாளென்று மனசாட்சி கேள்வி கேட்டது"

நீ வேற ஏன் இப்படி பேசி என் உசுரை வாங்குற?, பிசினஸில் எவ்வளவு பிரச்சினை, போட்டிகள் வந்தாலும் என்னால் சமாளிக்க முடியுது.

"ஆனால், என் பொண்டாட்டிய மட்டும் என்னால் சமாதானம் பண்ண முடியலையே?, இதனால் தான் கல்யாணம் ஆன ஆண்களெல்லாம், பொண்டாட்டி பேரை கேட்டாலே அலர்றாங்களோ என்றான்"

"அவன் சொன்னதை கேட்ட மனசாட்சி, டேய் நீயும் அவங்களும் ஒன்றா என கேட்க, பின்ன இல்லையா என ருத்ரன் திருப்பி கேட்க, இப்பொழுது மனசாட்சி கைதட்டி சிரித்தது"

"முதல்ல பொண்டாட்டி என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா?, தாலி கட்டுணவன் எல்லாம் புருஷனென்றால் சினிமாவில் நடிக்கும் நடிகை, நடிகர்களுக்கு எத்தனை புருஷன்?, பொண்டாட்டி இருக்கணும் சொல்லு?

மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக நினைத்து கவலைப்பட்டு கண்ணீர் வடிப்பவள்.

"அவள் தான் மணிமகுடம்.அந்த மணிமகுடத்தில் பதியப்பட்டு இருக்கும் வைரம் தான் புருஷன்".

வைரம் இல்லையென்றாலும் மணிமகுடம் மணிமகுடமாய் தான் இருக்கும். ஆனால் வைரம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதற்கு மதிப்பு.

"நீயும் அவ்வளவு கெட்டவன் இல்லை என்க, பார்டா?, நீயா எனக்கு நல்லவன்னு சர்டிபிகேட் கொடுக்கிற?என மனசாட்சியிடம் ருத்ரன் கேட்க, உண்மையை நான் எப்பவுமே மறைக்க மாட்டேன்"

"அதனால் தால் நீதி நேர்மை எருமை பெருமை என்று பீலா விட்டாலும், எல்லாரும் சொல்வது என்ன, உங்கள் மனசாட்சிக்கு சரி என்று படுவதை செய்யுங்கள் என்பதை தானே என்க, ஆமாம் என்றான்"

"நீயே யோசனை பண்ணி பாரு, உனக்கு உன் தவறு புரியும். தாலி கட்டியதை தவிர கணவனா நீ அவளுக்கு என்ன செய்யதாய் என்பதை, திரும்ப நல்லா ஞாபகபடுத்தி பார்த்து விட்டு அடுத்ததை முடிவெடுயென்று சொல்லி மனசாட்சி சென்றது"

" சிறிது நிமிடம் கண்ணை மூடியிருந்தவனுக்கு, ஆர்கலியை முதல் முதலாக கண்ட போது, தனக்குள் தோன்றிய உணர்வுகளின் சங்கமத்தை மனக்கண்ணில் கொண்டு வந்தான்"

"பள்ளிக்கூட பெண்ணாக இருந்தாலும் அந்த துரு துரு கண்களும், துள்ளிக்குதித்த குதிரை வாலும், கோவத்தில் மூக்கு சிவக்க அவள் நின்றிருந்த கோலம், அந்த ஆறடி ஆண்மகனை அசைத்து பார்த்தது என்பது மறுக்க முடியாத உண்மை தான்"

"அன்று அவள் சென்ற பிறகு வாக்கிங் போக முயன்றவனால், ஏனோ தயக்கமாகவே இருந்தது"

"அவளின் பின்னாலே சென்று எந்த வீட்டிற்கு போகிறாளென தெரிந்து கொள்ள ஆவல் எழும்ப, அறிவோ அடேய் ஸ்கூல் பொண்ணுடா என பிடறியில் தட்டியது போல உண்மையை உணர்த்த, தலையை உதறியபடி, ஓடலானான்"


அப்பொழுது, தம்பி, தம்பி என கூப்பிடும் சத்தம் கேட்டு, தன் யோசனையிலிருந்து வெளியே வந்தவன், எதிரில் இருக்கும் மலரை பார்க்க, காஃபி எடுத்துக்கோங்க தம்பி என்று டிரேவை நீட்டினார்"

ஆர்கலி எங்கே.?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top