Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 463
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
" சிம்ஹன் தாத்தா தன் மனைவிக்கு பார்த்து பார்த்து பரிமாறுவதை கவனித்த ஆர்கலிக்கு,நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு குடும்பம் வாய்க்கவில்லை?, என்பதை நினைத்து உள்ளுக்குள் கதறினாள்".
அம்மாடி ஆர்கலி ஒரு காஃபி கிடைக்குமா? என்று சிம்ஹன் தாத்தா கேட்க, கண்டிப்பா தாத்தா. இதற்கு ஏன் இவ்வளவு தயக்கமென்று, எழுந்து போய் சூடாக இருந்த பாலில் காஃபி பொடியை கலந்து எடுத்துட்டு வந்து அவரிடம் கொடுத்தாள்".
" நேரமும் கடந்து கொண்டிருக்க, மதியம் என்ன சமைக்கிறது என்பதை ஆர்கலி கேட்க, அப்பொழுது கருப்பாயியும் அங்கு வந்தார். அங்கு இருந்தவர்களை பார்த்து சிரிக்க, வாம்மா. பசங்க இன்னும் ஊரிலிருந்து வரவில்லையா? என்று பாட்டிகள் கேட்க, இல்லைங்க ஆச்சி".
"இனிமேல் புது வருஷம் பிறந்த பிறகு தான் பள்ளிக்கூடம் திறப்பாங்கள் ஆச்சியென்று சொன்னார்".
" நல்ல வேளை அண்ணி வந்தாங்கள். இல்லையென்றால் இவர்களிடம் என்ன பேசுவதென்று, நான் குழம்பி போயிருப்பேனேனு தன் மனதிற்குள் ஆர்கலி நினைத்துக் கொண்டாள்".
" பிறகு இருவரும் பேசிக்கொண்டே மதிய உணவை சமைக்க, ஆராமா உன் கிட்ட ஒன்னு கேட்கணுமென்று கருப்பாயி சொல்ல, அண்ணி, இது என்ன புது பழக்கம்?, பர்மிஷன்லாம் கேட்குறீங்களென்றாள் ஆர்கலி".
" சும்மா தான், மனசு ஏனோ குழம்பிட்டே இருக்கு. கேட்காமலும் இருக்க முடியலை, நீ ஒன்னும் தப்பா எடுத்துக்கமாட்டியே? என அவர் தயங்கினார்".
" ஒரு நொடி அவரின் முகத்தை பார்த்தவள், அண்ணி என் உசுரு இந்த மண்ணுக்குள் போகும் வரை, உங்க உறவு முறியாது."
" சூழ்நிலை மாறலாம், ஆனால் உங்களோட அன்பை ஒரு போதும் நான் மறக்கமாட்டேன்ணி. நிச்சயமா உங்களை பார்க்க நானும், உங்க மருமக புள்ளைங்களோட வருவேன்"
" தாய்மாமன் சீரெல்லாம் விட்டு குடுக்கமாட்டேன், புரிஞ்சிக்குங்களென்று பொரியலை வதக்க, தான் மனதில் கேட்க தயங்கிய கேள்விக்கான பதிலை, ஆர்கலி சொல்லியதை கேட்டு கருப்பாயிக்கு கண்கள் கலங்கியது"
" இது போதும் ஆராமா. நீ அப்படி இல்லையென்றாலும், உள்ளுக்குள் சின்ன பயம் தான் என்றார்".
" சிரித்து சமாளித்தவள், உங்களைப்போல நல்ல உள்ளங்களோட அன்பை பெற,நான் எவ்வளவு பாக்கியம் பண்ணியிருக்கேனோ என, ஆர்கலி தன் மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டாள்"
" சமையல் ரெடியானதும், வெளியே திண்ணையில் பேசிக்கொண்டு இருப்பவர்களை சாப்பிட கூப்பிட, தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த தலைவாழை இலையில், உணவை பரிமாற, ரசித்து சாப்பிட்ட முதியவர்கள், இருவரையும் பாராட்ட தவறவில்லை"
" சரி கொஞ்ச நேரம் போய் படுக்குறோமென்று சொல்லியவாறு, மூவரும் அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கி சென்றனர்".
" இந்த வீட்டில் படுக்க மூவருக்கும் வசதி குறைவு என்பதால், ஆர்கலியும் அவர்களை போக வேண்டாமென்று தடுக்கவில்லை".
" ஆச்சியும், கருப்பாயியும் தரையில் படுத்துக்கொண்டு டிவி பார்க்க, ஆர்கலியோ அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தாள்".
"காலையிலிருந்து ரொம்ப நேரமாக , கிச்சனில் நின்று கொண்டே சமைத்ததால் காலும், இடுப்பும் ரொம்ப வலித்தது"
" அசதியின் காரணமாய் ஆர்கலியும் தூங்கிவிட்டாள்"
" நன்கு தூக்கத்தில் இருந்தவள், நான் தரமாட்டேன் நான் தரமாட்டேனென்று சத்தம் போட, டிவி பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் உள்ளறையிலிருந்து ஆர்கலியின் சத்தம் கேட்டு, பதறி எழுந்து போய் பார்க்க, அவளோ தனது வயிற்றை பிடித்தபடி தரமாட்டேன் என்று சொல்லியவாறே இருக்க, அவளின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தோடிக் கொண்டிருந்தது"
" அம்மாடி ஆரா கண்ணு, ஆராமா என இருவரும் அவளை தட்டி எழுப்ப, சில நொடியில் கண்ணை திறந்தவள், இருவரையும் பார்த்து என்னாச்சி?, என பதறி எழுந்தாள்".
" அய்யோ ஆராமா, எதுக்கு இப்படி பதறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கிற?, யாருக்கும் ஒன்னும் இல்ல என்று கருப்பாயி கொஞ்சம் சத்தமாக சொல்ல, தூங்கிட்டு இருந்தேனா, நீங்க எழுப்புனதும் அதான் பயந்துட்டேன்ணி என்றாள்"
"ம்ம் அட ஒன்னும் இல்லை, கால் கொஞ்சம் வீக்கம் வந்த போல இருக்கே, அதான் கொஞ்சம் வெந்தயகஞ்சி குடிக்கிறியானு கேட்க வந்தேனென்று சமாளித்தார்".
" ஆமாணி,அப்போ கொஞ்சம் வலி இருந்தது தான். தூங்கினதும் சரியாகிட்டு என்று எழுந்தவள், ரெஸ்ட் ரூமிற்குள் செல்ல, பாட்டியும், கருப்பாயியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வெளியே வந்தவர்கள்,ஏதோ கனவு கண்டிருக்கு போல, அதான் ஆச்சி என்றவாறு ஃப்ரிஜில் இருந்த பால் எடுத்து சுட வைத்தார்"
" இரவு எட்டு மணிக்குலாம் ருத்ரனும் சதூர்வேதமங்கலத்திற்கு வந்து சேர்ந்தான்"
" பேரனை சிம்ஹன் தாத்தா முறைத்து பார்க்க, அவனோ அதை கண்டும் காணாமல், லேப்டாப்பில் தனது வேலையை பார்க்கலானான்"
" உன் பேரன் எங்கே போனான் கிரியென மனைவியிடம் கேட்க, அவரோ கணவரை முறைத்து பார்த்தார்".
" என்ன கிரி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மாமனை ரசிக்கிற?, உன் புருஷன் ஆல்வேஸ் ஸ்மார்ட் தான் கிரியென்று தனது மீசையை தடவிக்கொண்டு சிம்ஹன் தாத்தா சொல்லி சிரித்தார்".
" புள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம், அந்த கதையா தான் இருக்கென்று கிரிஜா பாட்டி சொல்ல, ஆமா நான் கிழவன். இவள் 16 வயது இளம் சிட்டு என்றவர், அவன் எங்கே போனானென்று மீண்டும் கேட்டார்".
" ஏங்க, நான் தான் வீரா கிட்ட மூன்று மாதமா பேசுறது இல்லையே, எனக்கு எப்படிங்க தெரியும்?, உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களே போய் கேளுங்களென்று சொல்லி விட்டு, அறைக்குள் சென்று விட,இவள் சொல்லுவதை நம்பலாமா என யோசனையானார் சிம்ஹன் தாத்தா".
சென்னை- சுந்தரபாண்டியன் கெஸ்ட் ஹவுஸ்:
" வசு சொல்லிய வார்த்தைகள் கேட்டவர், வேகமாக வசுவின் அறைக்கதவின் முன்பு போய் நின்ற சத்தியமூர்த்தி, தாரமா ப்ளீஸ், தயவு செய்து கதவை திற என்று தட்டினார்"
"சிறிது நேரம் தட்டிக் கொண்டே இருக்க, மனம் கேட்காமல் எழுந்து வந்து கதவை திறந்த வசுந்தரா,சொல்லுங்க சத்தியமூர்த்தி?
"இப்பொழுது என்ன கதை சொல்ல போறீங்க? என்று கையை கட்டிக் கொண்டு கேட்டார்"
" நீ அழுது கொண்டிருக்கும் போது, உன் கழுத்தில் தாலி கட்டியது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கு. எந்த சூழ்நிலையில் அதை கட்டினேன் என்பது எனக்கு ஞாபகமே இல்லை தாரா என்றார் சத்தியமூர்த்தி"
" அவர் சொல்லியதை கேட்ட வசுந்தரா, தனது கைகளை தட்டி சிரித்தவர், படம் வரைவதில் தான் நீங்க பெரிய ஆர்டிஸ்ட் என்று, இத்தனை வருஷமா நினைத்துக் கொண்டிருந்தேன்".
" ஆனால், திரைக்கதை எழுதுவதிலும் மிஸ்டர்.சத்தியமூர்த்தி பெரிய கில்லாடியா இருக்கீங்களே என்றார்"
" சத்தியமூர்த்தி நீங்க என்ன பேசுறீங்களென்று யோசித்து தான் பேசுறீங்களா? என மைக்கேல் கேட்க,அவர் பக்கம் திரும்பிய சத்தியமூர்த்தி,சார் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை".
" என்ன நடந்ததென்று எனக்கு உண்மையிலே ஞாபகம் இல்லை. தாராவிற்கு தாலி கட்டியதும், மேலும் சில விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கின்றது".
" ஏனென்றால் என்று சொல்லியபடியே ஒரு நிமிஷம் அமைதியாக இருந்தவர், எங்கப்பா நான்கு வருஷம் கோமாவில் இருந்தாங்க போதுமா என்னும் வெற்றியின் குரல் கேட்டு, என்னாஆஆ என மற்ற இருவரும் அதிர்ந்தனர்".
" ஆனால் வசு மட்டும் அதை நம்பாமல், நீ என்னப்பா புது கதை சொல்லிட்டு இருக்க?, ஓஓஓ அவரோட புள்ளையாச்சே, அதான் நீயும் நல்லா கதை எழுதுற என்றார் வசுந்தரா".
" நீங்கள் நம்புவதும் நம்பாமல் போவதும் உங்களுடைய இஷ்டம், அப்புறம் சார் எங்களுடைய ஊர் பொள்ளாச்சியில் இருக்கும் வேடன்புத்தூர் கிராமம்.அங்க வந்து பெரிய வீடு என்று கேட்டால் எல்லாரும் சொல்லுவாங்க".
" எங்க அப்பா வார்த்தையில் நம்பிக்கையிருந்தால் அங்கு வாங்க, மற்றதை பேசிக்கொள்ளலாம்".
" நீங்கள் வர சொன்னீங்க என்பதற்காக தான் வந்தோம்.இவங்க என்னமோ ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்காங்க?.
" இவ்வளவு பேச்சு பேசுறவங்க, இத்தனை வருஷம் எங்கே போயிருந்தாங்களாம்?, எத்தனையோ வழி இருக்கே தேட?, அதில் எதையாவது முயற்சி பண்ணினாங்களா? இல்லை தானே?.
" அதை விட்டு சும்மா எங்கப்பாவை குறை சொல்லிட்டே இருக்காங்க என்று வெற்றி கோவப்பட்டு பேச, வெற்றி போதும் வாயை மூடுடா என்றார் சத்தியமூர்த்தி"
"இப்பொழுது நான் உடனடியாக போகணும் என்றவன், அப்பா வாங்கயென்று அவரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே வெளியே செல்ல, மற்ற மூவரால் ஒன்னும் சொல்ல முடியவில்லை"
" எதுக்கு வெற்றி இப்படி என்னை இழுத்திட்டு வரயென்று சத்தியமூர்த்தி கோவப்பட, அப்பா, சென்னை விமானநிலையத்தில் குண்டு வச்சிருக்காங்கனு மெசேஜ் வந்துருக்கு"
" நான் உடனடியாக அங்கே போகணும். நீங்க நம்ப விஷாலோட வீட்டில் இருங்களென்று சொல்ல, நீ எப்படி இங்கே என சத்தியமூர்த்தி கேட்க, அப்பா, நாங்க டிரைனிங்கிற்காக இங்கே சென்னைக்கு வந்திருக்கோம்".
" விஷாலுக்கும், கபிலனுக்கும், பெங்களூர்ல டிரைனிங் போட்டுருக்காங்க. வள்ளி நீ இந்த ஃப்ளைட்டில் வருவதாக சொல்லுச்சி. அதான் உன்னை பார்க்க வந்தேன் என்றவாறு காரை வேகமாக ஓட்டினான்"
" இப்பொழுது மகளின் முன்பு வந்த சுந்தரபாண்டியன், ஏன் வசு, அவரை பார்த்தால் கதை சொல்லுற போலவா இருக்கிறது?.
" சின்ன வயதில் இருந்து நீ பேசுறது மட்டும் சரி, நீ நினைப்பது மட்டும் தான் உண்மை என்கும் உன்னோட குணம் மாறவேண்டும் என்பதற்காக தான், உன்னை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தோம்"
" ஆனால் கொஞ்சம் கூட உன் குணம் மாறவேயில்லை. சத்தியமூர்த்தி பக்கம் யோசிக்கணும்பானு, உன் அண்ணன் இத்தனை வருஷமா சொல்லிட்டே தான் இருக்கான்"
" நான் தான் மகளென்று வந்ததும் பொது தன்மையா யோசிக்காமல், சுயநலமாக உன் பக்கம் மட்டுமே, இத்தனை வருஷம் நியாயம் இருக்கென்று நினைத்து விட்டேன்"
" அது எவ்வளவு பெரிய தப்பு? என்பது இப்பொழுது தான் புரியுது"
" அந்த பையன் சொன்ன போல நீ நம்ப வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியணும்"
" சோ, நீ இங்கையே ரெஸ்ட் எடு. நானும் மைக்கேலும் போய் விஷயத்தை தெரிந்து கொண்டு வரோமென்க, அப்பா, நானும் வரேன்பா என வசு சொல்ல, எதுக்கு, அங்க வந்தும் நீ சொல்லுவது பொய், கதை கட்டுறனு சொல்வதற்கா என்று கேட்டார்"
" சிம்ஹன் தாத்தா தன் மனைவிக்கு பார்த்து பார்த்து பரிமாறுவதை கவனித்த ஆர்கலிக்கு,நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு குடும்பம் வாய்க்கவில்லை?, என்பதை நினைத்து உள்ளுக்குள் கதறினாள்".
அம்மாடி ஆர்கலி ஒரு காஃபி கிடைக்குமா? என்று சிம்ஹன் தாத்தா கேட்க, கண்டிப்பா தாத்தா. இதற்கு ஏன் இவ்வளவு தயக்கமென்று, எழுந்து போய் சூடாக இருந்த பாலில் காஃபி பொடியை கலந்து எடுத்துட்டு வந்து அவரிடம் கொடுத்தாள்".
" நேரமும் கடந்து கொண்டிருக்க, மதியம் என்ன சமைக்கிறது என்பதை ஆர்கலி கேட்க, அப்பொழுது கருப்பாயியும் அங்கு வந்தார். அங்கு இருந்தவர்களை பார்த்து சிரிக்க, வாம்மா. பசங்க இன்னும் ஊரிலிருந்து வரவில்லையா? என்று பாட்டிகள் கேட்க, இல்லைங்க ஆச்சி".
"இனிமேல் புது வருஷம் பிறந்த பிறகு தான் பள்ளிக்கூடம் திறப்பாங்கள் ஆச்சியென்று சொன்னார்".
" நல்ல வேளை அண்ணி வந்தாங்கள். இல்லையென்றால் இவர்களிடம் என்ன பேசுவதென்று, நான் குழம்பி போயிருப்பேனேனு தன் மனதிற்குள் ஆர்கலி நினைத்துக் கொண்டாள்".
" பிறகு இருவரும் பேசிக்கொண்டே மதிய உணவை சமைக்க, ஆராமா உன் கிட்ட ஒன்னு கேட்கணுமென்று கருப்பாயி சொல்ல, அண்ணி, இது என்ன புது பழக்கம்?, பர்மிஷன்லாம் கேட்குறீங்களென்றாள் ஆர்கலி".
" சும்மா தான், மனசு ஏனோ குழம்பிட்டே இருக்கு. கேட்காமலும் இருக்க முடியலை, நீ ஒன்னும் தப்பா எடுத்துக்கமாட்டியே? என அவர் தயங்கினார்".
" ஒரு நொடி அவரின் முகத்தை பார்த்தவள், அண்ணி என் உசுரு இந்த மண்ணுக்குள் போகும் வரை, உங்க உறவு முறியாது."
" சூழ்நிலை மாறலாம், ஆனால் உங்களோட அன்பை ஒரு போதும் நான் மறக்கமாட்டேன்ணி. நிச்சயமா உங்களை பார்க்க நானும், உங்க மருமக புள்ளைங்களோட வருவேன்"
" தாய்மாமன் சீரெல்லாம் விட்டு குடுக்கமாட்டேன், புரிஞ்சிக்குங்களென்று பொரியலை வதக்க, தான் மனதில் கேட்க தயங்கிய கேள்விக்கான பதிலை, ஆர்கலி சொல்லியதை கேட்டு கருப்பாயிக்கு கண்கள் கலங்கியது"
" இது போதும் ஆராமா. நீ அப்படி இல்லையென்றாலும், உள்ளுக்குள் சின்ன பயம் தான் என்றார்".
" சிரித்து சமாளித்தவள், உங்களைப்போல நல்ல உள்ளங்களோட அன்பை பெற,நான் எவ்வளவு பாக்கியம் பண்ணியிருக்கேனோ என, ஆர்கலி தன் மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டாள்"
" சமையல் ரெடியானதும், வெளியே திண்ணையில் பேசிக்கொண்டு இருப்பவர்களை சாப்பிட கூப்பிட, தோட்டத்தில் இருந்து எடுத்து வந்த தலைவாழை இலையில், உணவை பரிமாற, ரசித்து சாப்பிட்ட முதியவர்கள், இருவரையும் பாராட்ட தவறவில்லை"
" சரி கொஞ்ச நேரம் போய் படுக்குறோமென்று சொல்லியவாறு, மூவரும் அங்கிருந்து பெரிய வீட்டை நோக்கி சென்றனர்".
" இந்த வீட்டில் படுக்க மூவருக்கும் வசதி குறைவு என்பதால், ஆர்கலியும் அவர்களை போக வேண்டாமென்று தடுக்கவில்லை".
" ஆச்சியும், கருப்பாயியும் தரையில் படுத்துக்கொண்டு டிவி பார்க்க, ஆர்கலியோ அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தாள்".
"காலையிலிருந்து ரொம்ப நேரமாக , கிச்சனில் நின்று கொண்டே சமைத்ததால் காலும், இடுப்பும் ரொம்ப வலித்தது"
" அசதியின் காரணமாய் ஆர்கலியும் தூங்கிவிட்டாள்"
" நன்கு தூக்கத்தில் இருந்தவள், நான் தரமாட்டேன் நான் தரமாட்டேனென்று சத்தம் போட, டிவி பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் உள்ளறையிலிருந்து ஆர்கலியின் சத்தம் கேட்டு, பதறி எழுந்து போய் பார்க்க, அவளோ தனது வயிற்றை பிடித்தபடி தரமாட்டேன் என்று சொல்லியவாறே இருக்க, அவளின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தோடிக் கொண்டிருந்தது"
" அம்மாடி ஆரா கண்ணு, ஆராமா என இருவரும் அவளை தட்டி எழுப்ப, சில நொடியில் கண்ணை திறந்தவள், இருவரையும் பார்த்து என்னாச்சி?, என பதறி எழுந்தாள்".
" அய்யோ ஆராமா, எதுக்கு இப்படி பதறி அடிச்சுக்கிட்டு எழுந்திருக்கிற?, யாருக்கும் ஒன்னும் இல்ல என்று கருப்பாயி கொஞ்சம் சத்தமாக சொல்ல, தூங்கிட்டு இருந்தேனா, நீங்க எழுப்புனதும் அதான் பயந்துட்டேன்ணி என்றாள்"
"ம்ம் அட ஒன்னும் இல்லை, கால் கொஞ்சம் வீக்கம் வந்த போல இருக்கே, அதான் கொஞ்சம் வெந்தயகஞ்சி குடிக்கிறியானு கேட்க வந்தேனென்று சமாளித்தார்".
" ஆமாணி,அப்போ கொஞ்சம் வலி இருந்தது தான். தூங்கினதும் சரியாகிட்டு என்று எழுந்தவள், ரெஸ்ட் ரூமிற்குள் செல்ல, பாட்டியும், கருப்பாயியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வெளியே வந்தவர்கள்,ஏதோ கனவு கண்டிருக்கு போல, அதான் ஆச்சி என்றவாறு ஃப்ரிஜில் இருந்த பால் எடுத்து சுட வைத்தார்"
" இரவு எட்டு மணிக்குலாம் ருத்ரனும் சதூர்வேதமங்கலத்திற்கு வந்து சேர்ந்தான்"
" பேரனை சிம்ஹன் தாத்தா முறைத்து பார்க்க, அவனோ அதை கண்டும் காணாமல், லேப்டாப்பில் தனது வேலையை பார்க்கலானான்"
" உன் பேரன் எங்கே போனான் கிரியென மனைவியிடம் கேட்க, அவரோ கணவரை முறைத்து பார்த்தார்".
" என்ன கிரி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மாமனை ரசிக்கிற?, உன் புருஷன் ஆல்வேஸ் ஸ்மார்ட் தான் கிரியென்று தனது மீசையை தடவிக்கொண்டு சிம்ஹன் தாத்தா சொல்லி சிரித்தார்".
" புள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம், அந்த கதையா தான் இருக்கென்று கிரிஜா பாட்டி சொல்ல, ஆமா நான் கிழவன். இவள் 16 வயது இளம் சிட்டு என்றவர், அவன் எங்கே போனானென்று மீண்டும் கேட்டார்".
" ஏங்க, நான் தான் வீரா கிட்ட மூன்று மாதமா பேசுறது இல்லையே, எனக்கு எப்படிங்க தெரியும்?, உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களே போய் கேளுங்களென்று சொல்லி விட்டு, அறைக்குள் சென்று விட,இவள் சொல்லுவதை நம்பலாமா என யோசனையானார் சிம்ஹன் தாத்தா".
சென்னை- சுந்தரபாண்டியன் கெஸ்ட் ஹவுஸ்:
" வசு சொல்லிய வார்த்தைகள் கேட்டவர், வேகமாக வசுவின் அறைக்கதவின் முன்பு போய் நின்ற சத்தியமூர்த்தி, தாரமா ப்ளீஸ், தயவு செய்து கதவை திற என்று தட்டினார்"
"சிறிது நேரம் தட்டிக் கொண்டே இருக்க, மனம் கேட்காமல் எழுந்து வந்து கதவை திறந்த வசுந்தரா,சொல்லுங்க சத்தியமூர்த்தி?
"இப்பொழுது என்ன கதை சொல்ல போறீங்க? என்று கையை கட்டிக் கொண்டு கேட்டார்"
" நீ அழுது கொண்டிருக்கும் போது, உன் கழுத்தில் தாலி கட்டியது மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கு. எந்த சூழ்நிலையில் அதை கட்டினேன் என்பது எனக்கு ஞாபகமே இல்லை தாரா என்றார் சத்தியமூர்த்தி"
" அவர் சொல்லியதை கேட்ட வசுந்தரா, தனது கைகளை தட்டி சிரித்தவர், படம் வரைவதில் தான் நீங்க பெரிய ஆர்டிஸ்ட் என்று, இத்தனை வருஷமா நினைத்துக் கொண்டிருந்தேன்".
" ஆனால், திரைக்கதை எழுதுவதிலும் மிஸ்டர்.சத்தியமூர்த்தி பெரிய கில்லாடியா இருக்கீங்களே என்றார்"
" சத்தியமூர்த்தி நீங்க என்ன பேசுறீங்களென்று யோசித்து தான் பேசுறீங்களா? என மைக்கேல் கேட்க,அவர் பக்கம் திரும்பிய சத்தியமூர்த்தி,சார் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை".
" என்ன நடந்ததென்று எனக்கு உண்மையிலே ஞாபகம் இல்லை. தாராவிற்கு தாலி கட்டியதும், மேலும் சில விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கின்றது".
" ஏனென்றால் என்று சொல்லியபடியே ஒரு நிமிஷம் அமைதியாக இருந்தவர், எங்கப்பா நான்கு வருஷம் கோமாவில் இருந்தாங்க போதுமா என்னும் வெற்றியின் குரல் கேட்டு, என்னாஆஆ என மற்ற இருவரும் அதிர்ந்தனர்".
" ஆனால் வசு மட்டும் அதை நம்பாமல், நீ என்னப்பா புது கதை சொல்லிட்டு இருக்க?, ஓஓஓ அவரோட புள்ளையாச்சே, அதான் நீயும் நல்லா கதை எழுதுற என்றார் வசுந்தரா".
" நீங்கள் நம்புவதும் நம்பாமல் போவதும் உங்களுடைய இஷ்டம், அப்புறம் சார் எங்களுடைய ஊர் பொள்ளாச்சியில் இருக்கும் வேடன்புத்தூர் கிராமம்.அங்க வந்து பெரிய வீடு என்று கேட்டால் எல்லாரும் சொல்லுவாங்க".
" எங்க அப்பா வார்த்தையில் நம்பிக்கையிருந்தால் அங்கு வாங்க, மற்றதை பேசிக்கொள்ளலாம்".
" நீங்கள் வர சொன்னீங்க என்பதற்காக தான் வந்தோம்.இவங்க என்னமோ ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்காங்க?.
" இவ்வளவு பேச்சு பேசுறவங்க, இத்தனை வருஷம் எங்கே போயிருந்தாங்களாம்?, எத்தனையோ வழி இருக்கே தேட?, அதில் எதையாவது முயற்சி பண்ணினாங்களா? இல்லை தானே?.
" அதை விட்டு சும்மா எங்கப்பாவை குறை சொல்லிட்டே இருக்காங்க என்று வெற்றி கோவப்பட்டு பேச, வெற்றி போதும் வாயை மூடுடா என்றார் சத்தியமூர்த்தி"
"இப்பொழுது நான் உடனடியாக போகணும் என்றவன், அப்பா வாங்கயென்று அவரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே வெளியே செல்ல, மற்ற மூவரால் ஒன்னும் சொல்ல முடியவில்லை"
" எதுக்கு வெற்றி இப்படி என்னை இழுத்திட்டு வரயென்று சத்தியமூர்த்தி கோவப்பட, அப்பா, சென்னை விமானநிலையத்தில் குண்டு வச்சிருக்காங்கனு மெசேஜ் வந்துருக்கு"
" நான் உடனடியாக அங்கே போகணும். நீங்க நம்ப விஷாலோட வீட்டில் இருங்களென்று சொல்ல, நீ எப்படி இங்கே என சத்தியமூர்த்தி கேட்க, அப்பா, நாங்க டிரைனிங்கிற்காக இங்கே சென்னைக்கு வந்திருக்கோம்".
" விஷாலுக்கும், கபிலனுக்கும், பெங்களூர்ல டிரைனிங் போட்டுருக்காங்க. வள்ளி நீ இந்த ஃப்ளைட்டில் வருவதாக சொல்லுச்சி. அதான் உன்னை பார்க்க வந்தேன் என்றவாறு காரை வேகமாக ஓட்டினான்"
" இப்பொழுது மகளின் முன்பு வந்த சுந்தரபாண்டியன், ஏன் வசு, அவரை பார்த்தால் கதை சொல்லுற போலவா இருக்கிறது?.
" சின்ன வயதில் இருந்து நீ பேசுறது மட்டும் சரி, நீ நினைப்பது மட்டும் தான் உண்மை என்கும் உன்னோட குணம் மாறவேண்டும் என்பதற்காக தான், உன்னை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தோம்"
" ஆனால் கொஞ்சம் கூட உன் குணம் மாறவேயில்லை. சத்தியமூர்த்தி பக்கம் யோசிக்கணும்பானு, உன் அண்ணன் இத்தனை வருஷமா சொல்லிட்டே தான் இருக்கான்"
" நான் தான் மகளென்று வந்ததும் பொது தன்மையா யோசிக்காமல், சுயநலமாக உன் பக்கம் மட்டுமே, இத்தனை வருஷம் நியாயம் இருக்கென்று நினைத்து விட்டேன்"
" அது எவ்வளவு பெரிய தப்பு? என்பது இப்பொழுது தான் புரியுது"
" அந்த பையன் சொன்ன போல நீ நம்ப வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியணும்"
" சோ, நீ இங்கையே ரெஸ்ட் எடு. நானும் மைக்கேலும் போய் விஷயத்தை தெரிந்து கொண்டு வரோமென்க, அப்பா, நானும் வரேன்பா என வசு சொல்ல, எதுக்கு, அங்க வந்தும் நீ சொல்லுவது பொய், கதை கட்டுறனு சொல்வதற்கா என்று கேட்டார்"