Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 457
- Thread Author
- #1
சென்னை ஏர்போர்ட்:
" வெற்றிஈஈஈ என்ன பண்ணுற என்று சத்தியமூர்த்தி பல்லை கடித்து கேட்க, மற்றவர்களோ அவர்களை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது".
" சுந்தரபாண்டியனும், மைக்கேலும் சத்தியமூர்த்தியின் அருகில் வந்தவர்கள், நீங்க தான் சத்தியமூர்த்தியா? என்க, ஆமாம் என்றார்".
" சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எங்களை பாலோவ் பண்ணி வாங்களென்று கெஸ்ட் ஹவுஸ் அட்ரஸை மைக்கேல் கொடுத்து விட்டு, வசுவிடம் வந்தவர், தம்பி என்று வெற்றியின் தோளில் தட்ட, அம்மா இன்னும் உங்களுக்கு கோபம் போகவில்லையா? என்றான்.
"வெற்றி என்று சற்று கடுமையாக சத்தியமூர்த்தி கூப்பிட, அந்த குரலில் வசுவிடமிருந்து விலகி வந்தான்"
" வா என வெற்றியின் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட, வசுந்தராவோ இடிந்து போனார்".
" அந்த மனுஷன் திரும்பவும் ஓடிட்டாராணா என்கும் போது,வசுவின் கண்கள் கண்ணீரை பொழிந்தது".
" வசு... இப்போ நாம ஃப்ளைட்டில் போக போறது இல்லை. நம்ப கெஸ்ட் ஹவுஸிற்கு தான் போறோம்".
" எதா இருந்தாலும் அங்கு போய் பேசிக்கலாம். கொஞ்சம் சுற்றி பார், எல்லாரும் நம்மை தான் வேடிக்கை பாக்குறாங்களென்று மைக்கேல் சொல்ல, வசுவோ ம்ம் என தலையசைக்க, மூவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்".
" அப்பா என்ன பண்ணுற?, எத்தனை வருஷம் கழித்து அம்மாவை பார்த்திருக்கோம்?,பிறகு எதுக்கு இப்படி இழுத்துட்டு வர? என்று வெற்றி கோவமாக கேட்க...
"ஏன்டா உனக்கு அறிவு இருக்கா இல்லையா?,சொல்லு.ஒருநாள் ரெண்டு நாளா? கிட்டத்தட்ட 23 வருஷம் ஆகுது".
"சப்போஸ் வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தால், வசுந்தரா குடும்ப வாழ்க்கை என்ன ஆவது?, இதையெல்லாம் யோசிக்க மாட்டியா?.
"எனக்கும் அவளை பார்த்த உடனே அப்படித்தான் இருந்துச்சு. அதற்காக நான் என்ன பண்ண முடியும் சொல்லு? என்று தன்னை மீறி மகனிடம் சத்தியமூர்த்தி கேட்க, இப்பொழுது தான் வெற்றிக்கும் அந்த விஷயம் புரிந்தது".
" சத்தியமூர்த்தியின் மனசோ, கண்டிப்பா அவ என்ன விட்டு மாற மாட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், நிதர்சனமோ அப்படி ஆகியிருக்கலாமென்றும் சொல்லியது".
" பெற்றவர்களுக்கு ஒரே பொண்ணு. எப்படி விட்டு இருப்பாங்க? என்று யோசனையானார்".
" இப்போ என்னப்பா பண்ணுறது? என்று வெற்றி கேட்க, இந்த அட்ரஸ்க்கு காரை ஓட்டு. அவங்க கூட இருந்த ஒருத்தர் குடுத்துட்டு போனாரு"
"ஏதோ நம்ம கிட்ட பேசணுமாம் என்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிப்பா அங்கு போய் என்னன்னு பார்க்கலாமென்று காரை ஸ்டார்ட் பண்ணிய வெற்றி, மைக்கேல் கொடுத்த அட்ரஸை நோக்கி சென்றான்".
" இரண்டு மணி நேர பயணத்தில் மைக்கேல் கொடுத்த அட்ரஸுக்கு முன்பு வந்து காரை நிறுத்த, வாட்ச்மேனும் கதவை திறந்து விட்டார்".
" உள்ளே போய் காரை நிறுத்த, வெற்றி அங்க எந்த அதிக பிரசங்கி தனமும் வேண்டாம். சரியா என சத்தியமூர்த்தி கேட்க, சரிப்பா என்றவன், உள்ளே போன பிறகு அதை முடிவு பண்ணிக்கலாமென்று தனக்குள் சொல்லியவன், கதவை திறந்து கீழே இறங்கினான்".
" பின்னர் இருவரும் உள்ளே செல்ல, அங்கு மேக்கேலும், சுந்தரபாண்டியனும் இருந்தனர்".
" இவர்களை பார்த்த மைக்கேல் உள்ளே வாங்களென்க, பேச்சு குரல் கேட்டு ரூமிலிருந்து வெளியே வந்த வசுந்தரா, சத்தியமுர்த்தியின் எதிரில் வந்தவர், நொடியும் தாமதிக்காமல் மாறி மாறி அறைய, இதை அங்கிருந்த மூவருமே எதிர் பார்க்கவில்லை"
" என்ன பண்ணுறீங்களென்று பதறிப்போய் வெற்றி தடுக்க, அவனை ஒரு பார்வை வசுந்தரா பார்க்க, அந்த பார்வையிலே இரண்டு அடி பின்னால் நகர்ந்து போனான்".
" தனது கை வலிக்கும் வரை அறைந்த வசுந்தரா, அழுது கொண்டே அங்கிருந்து ரூமிற்குள் சென்று விட்டார்".
வசு சென்ற பின்னர் அப்பா என அவர் அருகில் வந்த வெற்றி, அவரின் கன்னத்தை பார்க்க, கை விரல் தடம் பதிந்து சிவந்து போயிருந்தது".
" வாப்பா நாம போகலாமென்று கோவமாக அவரின் கையை பிடித்து இழுக்க, கொஞ்சம் இரு கண்ணு".
" எதோ பேசணுமென்று சொன்னாங்கள் இல்லையா என சத்தியமூர்த்தி சொல்ல, அவரின் நிதானத்தை கண்டு சுந்தரபாண்டியனும், மைக்கேலும் திகைத்து போயினர்".
" நான் மைக்கேல், வசுவோட அண்ணன். இவங்க எங்கப்பா சுந்தரபாண்டியன் என்க, வசு ஒரு பொண்ணு தானே?, இவர் அண்ணனென்று சொல்கிறாரே என சத்தியமூர்த்தி யோசனை செய்ய,முதல்ல இருவரும் உட்காருங்க என்றார் மைக்கேல்".
" பரவாயில்லை நீங்க விஷயத்தை சொல்லுங்க என்று வெற்றி கேட்க, தம்பி உனக்கு இது தெரியாத விஷயம். அதனால் நீ கொஞ்சம் அமைதியாக இருப்பா என்ற சுந்தரபாண்டியன், சத்தியமூர்த்தியை பார்த்து, உட்காருங்கள் என்றார்".
" அவரின் வார்த்தைக்கும், வயதிற்கும் மரியாதை கொடுத்து, அங்கிருந்த சோபாவில் மகனின் கையை பிடித்தவாறு உட்கார, உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்று சுந்தரபாண்டியன் வார்த்தையில் தயக்கம் காட்ட, கேளுங்க சார் என்றார் சத்தியமூர்த்தி"
"தனது தொண்டையை செருமி சரி பண்ணியவர், தவறாக எடுத்துக்காதீங்க, உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா?என்க, ஆகிடுச்சுங்க சார்"
" வரும் திங்கள் கிழமை வந்தால் இருபத்தி நான்கு வருஷம் முடிய போகுதென்றார்".
" உள்ளேயிருந்து சத்தியமூர்த்தியின் வார்த்தைகளை கேட்டு கொண்டிருந்த வசுக்கு, முதலில் அவர் சொல்லிய கல்யாணம் ஆகிவிட்டது என்பதிலே உடைந்து விட, அடுத்ததாக சொன்னதில் குழம்பம் வந்தது".
" உடனே அங்கிருந்த காலண்டரில் அந்த நாள் எந்த தேதியென பார்த்தவர், கண்கள் விரிய அதிர்ந்தவர், சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்து தயங்கி நிற்க...
" ஓஓஓ... உங்கள் பையனா என கேட்க, ஆமாம். ஐபிஎஸ் டிரைனிங்கில் இருக்கானென்று சத்தியமூர்த்தி சொல்ல, அப்படியா என்றார்".
" அப்பொழுது அங்கு வந்த வசு, சத்தி என்க, 24 ஆண்டுகளுக்கு பின்னர் கேட்ட அழைப்பால் அவருக்கு கண்கள் கலங்கியது".
" பின்னர் சுதாரித்துக் கொண்டவர், கீழே குனிந்து தன்னை சரி படுத்திக் கொண்டு நிமிர்ந்தவர்,சொல்லுங்கள் மிசஸ் வசுந்தரா என்று அடுத்த வார்த்தைகளை முடிக்க முடியாமல் சத்தியமூர்த்தி தடுமாற,வசுந்தரா சத்தியமூர்த்தி என்று அழுத்தமாக சொல்வதைக் கேட்டு,சோபாவில் உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தி மட்டுமல்ல, சுந்தரபாண்டியன் மற்றும் மைக்கேலும் அதிர்ந்து போய் எழுந்து நின்றார்கள்".
" ஒரு நிமிடம் சத்தியமூர்த்திக்கு வார்த்தை வரவில்லை. வார்த்தைகள் தொண்டையை அடைக்க, கண்கள் மட்டும் கண்ணீரை பொழிய, தாராஆஆஆ என்க, சத்தி என்றவாறு அவரின் தோளில் சாய்ந்த வசுந்தரா கதறி அழ, அதை பார்த்த மூவரும், அங்கிருந்து வெளியே சென்றனர்"
" தம்பி என்னடா நடக்குதென்று சுந்தபாண்டியன் மைக்கேலிடம் கேட்க, அப்பா, என்ன நடந்ததென்று இருவருக்கும் தான் தெரியும், அவங்களாக சொல்லாமல் நமக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை".
" நான் அப்போதிலிருந்து சொல்வது போல, வசு தான் ஏதோ தப்பா புரிந்து கொண்டு இருக்குதுப்பா என்க, எனக்கும் அப்படி தான் தோணுதுப்பா என்றார் சுந்தரபாண்டியன்".
" வெற்றியோ எதுவும் புரியாமல் இருவரையும் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருப்பதை கண்ட மைக்கேல், தம்பி நீங்க எந்த ஊரு? என கேட்க, வெற்றியோ பொள்ளாச்சி என்று சொன்னான்".
சதூர்வேதமங்கலம்:
" தூங்கி எழுந்த ஆர்கலி வெளியே வந்து பார்க்க, ருத்ரன் படுத்திருந்த இடம் வெறுமையாக இருப்பதை கண்டவள், இந்த மனுஷன் எங்கே போனாரு என தேடினாள்".
" கதவை திறந்து தோட்டத்தில் பார்க்க அங்கும் இல்லை. பின்னர் முன் கதவை திறக்க , அது வெளிபுறமாக தாழிட்டிருப்பது தெரிந்து, சந்து வழியாக முன்னே வந்து தாழ்ப்பாளை விலக்கியவள், போயாச்சு போலயென சொல்லியவள், தோளை குலுக்கி கொண்டு, வழக்கமான வேலையை பார்க்க தொடங்க, பாட்டியும் அங்கு வந்து சேர்ந்தார்"
" ஆரா கண்ணு பால் சுட வைக்கட்டுமா என்க, வேண்டாம் பாட்டி. பசிக்கிற போல இருக்கு. டிபனே பண்ணிடலாமென்றவள், அதற்கான வேலையை பார்க்கலானாள்"
" மனதிற்குள் மட்டும் ருத்ரனை பற்றிய எண்ணங்கள் ஓடியது".
" டிபனை செய்து முடிக்க, கிரிஜா பாட்டியும், சைலஜா பாட்டியும் அங்கு வந்தனர். இருவரையும் பார்த்தவள், வாங்க பாட்டியென்றவள், பாட்டி, பாட்டி என தோட்டத்து பக்கம் குரல் கொடுத்தாள்".
" இதோ வரேன் கண்ணு என்றவாறு பரித்த கீரைகளோடு உள்ளே வந்தவர், அங்கிருந்த இருவரையும் பார்த்து, வாங்கடாமா என்றார்".
" கண்ணு, என்ன வேடிக்கை பாக்குற?,ரெண்டு பேருக்கும் டீ போட்டு குடு என்க, நாங்க டிபன் சாப்பிடலாமென்று வந்தோம், நீங்க என்னக்கா, டீயோடு துரத்தி விடுறீங்களென்று கிரிஜா பாட்டி கேட்க, அதுக்கு என்ன கண்ணு, சாப்பிடுங்கடா".
" நம்ப பேத்தி நிறைய தான் செஞ்சிருக்கு. அந்த அம்மாவுக்கு புடிச்சதாச்சே என்று சிரித்தவர், ஆரா கண்ணு நீ பரிமாறு, நான் ரெண்டு தோசை ஊத்திடுறேன் என்றார்".
" இதெல்லாம் நல்லா இல்லையென்றவாறு சிம்ஹன் தாத்தாவும் அங்கு வந்து சேர்ந்தார்".
" ஒரு வார்த்தை அக்காளும் தங்கச்சியும் சொல்லிட்டு வராமல் ஓடி வந்தீட்டீங்களே என மனைவியையும், மச்சினியையும் முறைத்து பார்க்க, போனையே கட்டி கிட்டு அழுதீங்க".
" அதான் நாங்க வந்துட்டோமென்று கிரிஜா பாட்டி சொல்ல, எதே என்று பார்த்தார்".
" திடீர்னு இவர்கள் வருவார்கள் என்பது தெரியாததால் மூவர் சாப்பிடும் அளவிற்கு தான் காய்கறிகள் போட்ட உப்புமாவை ஆர்கலி செய்திருந்தாள்".
" தோசை போட்டு கொண்டாலும் சட்னி குறைவா இருக்கே என யோசித்தவளுக்கு, செல்பில் இருந்த சேவ் கண்ணில் பட, மட மடவென்று சேவ் டொமேட்டோ செய்யும் வேலையில் இறங்கினாள்".
" இங்கே பெரியவர்கள் நால்வரும் சிரித்து பேசியபடி இருக்க, கால் மணி நேரத்தில் தோசையும்,சேவ் பாஜியும் தயாராக, ஒவ்வொன்றாக எடுத்து வந்து ஹாலில் வைக்க, ஏம்மா, உன் பாட்டிகளுக்கு மட்டும் தான் அனுமதியா?, நான் என்ன சண்டைகாரனா??? என்றார்.
" தாத்தாவின் பேச்சு புரிய,உங்கள் வீட்டிற்கு நீங்க வந்துருக்கீங்க தாத்தா. அதற்கு ஏன் நான் வாங்க என சொல்லணும் என்க, அட அட அட,ஒரு வார்த்தை என்றாலும் திருவார்த்தையா சொன்ன அம்மு என்றார் சைலஜா பாட்டி".
" பின்னர் பேசியபடியே அங்கிருந்த உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டனர், எல்லாரும் இங்க இருக்காங்க?, இந்த மனுஷன் மட்டும் ஆளை காணுமேயென, ஆர்கலியின் உள்ளுக்குள் கேள்வி எழும்பாமலும் இல்லை"
" வெற்றிஈஈஈ என்ன பண்ணுற என்று சத்தியமூர்த்தி பல்லை கடித்து கேட்க, மற்றவர்களோ அவர்களை வேடிக்கை பார்ப்பது தெரிந்தது".
" சுந்தரபாண்டியனும், மைக்கேலும் சத்தியமூர்த்தியின் அருகில் வந்தவர்கள், நீங்க தான் சத்தியமூர்த்தியா? என்க, ஆமாம் என்றார்".
" சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எங்களை பாலோவ் பண்ணி வாங்களென்று கெஸ்ட் ஹவுஸ் அட்ரஸை மைக்கேல் கொடுத்து விட்டு, வசுவிடம் வந்தவர், தம்பி என்று வெற்றியின் தோளில் தட்ட, அம்மா இன்னும் உங்களுக்கு கோபம் போகவில்லையா? என்றான்.
"வெற்றி என்று சற்று கடுமையாக சத்தியமூர்த்தி கூப்பிட, அந்த குரலில் வசுவிடமிருந்து விலகி வந்தான்"
" வா என வெற்றியின் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட, வசுந்தராவோ இடிந்து போனார்".
" அந்த மனுஷன் திரும்பவும் ஓடிட்டாராணா என்கும் போது,வசுவின் கண்கள் கண்ணீரை பொழிந்தது".
" வசு... இப்போ நாம ஃப்ளைட்டில் போக போறது இல்லை. நம்ப கெஸ்ட் ஹவுஸிற்கு தான் போறோம்".
" எதா இருந்தாலும் அங்கு போய் பேசிக்கலாம். கொஞ்சம் சுற்றி பார், எல்லாரும் நம்மை தான் வேடிக்கை பாக்குறாங்களென்று மைக்கேல் சொல்ல, வசுவோ ம்ம் என தலையசைக்க, மூவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்".
" அப்பா என்ன பண்ணுற?, எத்தனை வருஷம் கழித்து அம்மாவை பார்த்திருக்கோம்?,பிறகு எதுக்கு இப்படி இழுத்துட்டு வர? என்று வெற்றி கோவமாக கேட்க...
"ஏன்டா உனக்கு அறிவு இருக்கா இல்லையா?,சொல்லு.ஒருநாள் ரெண்டு நாளா? கிட்டத்தட்ட 23 வருஷம் ஆகுது".
"சப்போஸ் வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தால், வசுந்தரா குடும்ப வாழ்க்கை என்ன ஆவது?, இதையெல்லாம் யோசிக்க மாட்டியா?.
"எனக்கும் அவளை பார்த்த உடனே அப்படித்தான் இருந்துச்சு. அதற்காக நான் என்ன பண்ண முடியும் சொல்லு? என்று தன்னை மீறி மகனிடம் சத்தியமூர்த்தி கேட்க, இப்பொழுது தான் வெற்றிக்கும் அந்த விஷயம் புரிந்தது".
" சத்தியமூர்த்தியின் மனசோ, கண்டிப்பா அவ என்ன விட்டு மாற மாட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், நிதர்சனமோ அப்படி ஆகியிருக்கலாமென்றும் சொல்லியது".
" பெற்றவர்களுக்கு ஒரே பொண்ணு. எப்படி விட்டு இருப்பாங்க? என்று யோசனையானார்".
" இப்போ என்னப்பா பண்ணுறது? என்று வெற்றி கேட்க, இந்த அட்ரஸ்க்கு காரை ஓட்டு. அவங்க கூட இருந்த ஒருத்தர் குடுத்துட்டு போனாரு"
"ஏதோ நம்ம கிட்ட பேசணுமாம் என்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிப்பா அங்கு போய் என்னன்னு பார்க்கலாமென்று காரை ஸ்டார்ட் பண்ணிய வெற்றி, மைக்கேல் கொடுத்த அட்ரஸை நோக்கி சென்றான்".
" இரண்டு மணி நேர பயணத்தில் மைக்கேல் கொடுத்த அட்ரஸுக்கு முன்பு வந்து காரை நிறுத்த, வாட்ச்மேனும் கதவை திறந்து விட்டார்".
" உள்ளே போய் காரை நிறுத்த, வெற்றி அங்க எந்த அதிக பிரசங்கி தனமும் வேண்டாம். சரியா என சத்தியமூர்த்தி கேட்க, சரிப்பா என்றவன், உள்ளே போன பிறகு அதை முடிவு பண்ணிக்கலாமென்று தனக்குள் சொல்லியவன், கதவை திறந்து கீழே இறங்கினான்".
" பின்னர் இருவரும் உள்ளே செல்ல, அங்கு மேக்கேலும், சுந்தரபாண்டியனும் இருந்தனர்".
" இவர்களை பார்த்த மைக்கேல் உள்ளே வாங்களென்க, பேச்சு குரல் கேட்டு ரூமிலிருந்து வெளியே வந்த வசுந்தரா, சத்தியமுர்த்தியின் எதிரில் வந்தவர், நொடியும் தாமதிக்காமல் மாறி மாறி அறைய, இதை அங்கிருந்த மூவருமே எதிர் பார்க்கவில்லை"
" என்ன பண்ணுறீங்களென்று பதறிப்போய் வெற்றி தடுக்க, அவனை ஒரு பார்வை வசுந்தரா பார்க்க, அந்த பார்வையிலே இரண்டு அடி பின்னால் நகர்ந்து போனான்".
" தனது கை வலிக்கும் வரை அறைந்த வசுந்தரா, அழுது கொண்டே அங்கிருந்து ரூமிற்குள் சென்று விட்டார்".
வசு சென்ற பின்னர் அப்பா என அவர் அருகில் வந்த வெற்றி, அவரின் கன்னத்தை பார்க்க, கை விரல் தடம் பதிந்து சிவந்து போயிருந்தது".
" வாப்பா நாம போகலாமென்று கோவமாக அவரின் கையை பிடித்து இழுக்க, கொஞ்சம் இரு கண்ணு".
" எதோ பேசணுமென்று சொன்னாங்கள் இல்லையா என சத்தியமூர்த்தி சொல்ல, அவரின் நிதானத்தை கண்டு சுந்தரபாண்டியனும், மைக்கேலும் திகைத்து போயினர்".
" நான் மைக்கேல், வசுவோட அண்ணன். இவங்க எங்கப்பா சுந்தரபாண்டியன் என்க, வசு ஒரு பொண்ணு தானே?, இவர் அண்ணனென்று சொல்கிறாரே என சத்தியமூர்த்தி யோசனை செய்ய,முதல்ல இருவரும் உட்காருங்க என்றார் மைக்கேல்".
" பரவாயில்லை நீங்க விஷயத்தை சொல்லுங்க என்று வெற்றி கேட்க, தம்பி உனக்கு இது தெரியாத விஷயம். அதனால் நீ கொஞ்சம் அமைதியாக இருப்பா என்ற சுந்தரபாண்டியன், சத்தியமூர்த்தியை பார்த்து, உட்காருங்கள் என்றார்".
" அவரின் வார்த்தைக்கும், வயதிற்கும் மரியாதை கொடுத்து, அங்கிருந்த சோபாவில் மகனின் கையை பிடித்தவாறு உட்கார, உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்று சுந்தரபாண்டியன் வார்த்தையில் தயக்கம் காட்ட, கேளுங்க சார் என்றார் சத்தியமூர்த்தி"
"தனது தொண்டையை செருமி சரி பண்ணியவர், தவறாக எடுத்துக்காதீங்க, உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா?என்க, ஆகிடுச்சுங்க சார்"
" வரும் திங்கள் கிழமை வந்தால் இருபத்தி நான்கு வருஷம் முடிய போகுதென்றார்".
" உள்ளேயிருந்து சத்தியமூர்த்தியின் வார்த்தைகளை கேட்டு கொண்டிருந்த வசுக்கு, முதலில் அவர் சொல்லிய கல்யாணம் ஆகிவிட்டது என்பதிலே உடைந்து விட, அடுத்ததாக சொன்னதில் குழம்பம் வந்தது".
" உடனே அங்கிருந்த காலண்டரில் அந்த நாள் எந்த தேதியென பார்த்தவர், கண்கள் விரிய அதிர்ந்தவர், சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்து தயங்கி நிற்க...
" ஓஓஓ... உங்கள் பையனா என கேட்க, ஆமாம். ஐபிஎஸ் டிரைனிங்கில் இருக்கானென்று சத்தியமூர்த்தி சொல்ல, அப்படியா என்றார்".
" அப்பொழுது அங்கு வந்த வசு, சத்தி என்க, 24 ஆண்டுகளுக்கு பின்னர் கேட்ட அழைப்பால் அவருக்கு கண்கள் கலங்கியது".
" பின்னர் சுதாரித்துக் கொண்டவர், கீழே குனிந்து தன்னை சரி படுத்திக் கொண்டு நிமிர்ந்தவர்,சொல்லுங்கள் மிசஸ் வசுந்தரா என்று அடுத்த வார்த்தைகளை முடிக்க முடியாமல் சத்தியமூர்த்தி தடுமாற,வசுந்தரா சத்தியமூர்த்தி என்று அழுத்தமாக சொல்வதைக் கேட்டு,சோபாவில் உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தி மட்டுமல்ல, சுந்தரபாண்டியன் மற்றும் மைக்கேலும் அதிர்ந்து போய் எழுந்து நின்றார்கள்".
" ஒரு நிமிடம் சத்தியமூர்த்திக்கு வார்த்தை வரவில்லை. வார்த்தைகள் தொண்டையை அடைக்க, கண்கள் மட்டும் கண்ணீரை பொழிய, தாராஆஆஆ என்க, சத்தி என்றவாறு அவரின் தோளில் சாய்ந்த வசுந்தரா கதறி அழ, அதை பார்த்த மூவரும், அங்கிருந்து வெளியே சென்றனர்"
" தம்பி என்னடா நடக்குதென்று சுந்தபாண்டியன் மைக்கேலிடம் கேட்க, அப்பா, என்ன நடந்ததென்று இருவருக்கும் தான் தெரியும், அவங்களாக சொல்லாமல் நமக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை".
" நான் அப்போதிலிருந்து சொல்வது போல, வசு தான் ஏதோ தப்பா புரிந்து கொண்டு இருக்குதுப்பா என்க, எனக்கும் அப்படி தான் தோணுதுப்பா என்றார் சுந்தரபாண்டியன்".
" வெற்றியோ எதுவும் புரியாமல் இருவரையும் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருப்பதை கண்ட மைக்கேல், தம்பி நீங்க எந்த ஊரு? என கேட்க, வெற்றியோ பொள்ளாச்சி என்று சொன்னான்".
சதூர்வேதமங்கலம்:
" தூங்கி எழுந்த ஆர்கலி வெளியே வந்து பார்க்க, ருத்ரன் படுத்திருந்த இடம் வெறுமையாக இருப்பதை கண்டவள், இந்த மனுஷன் எங்கே போனாரு என தேடினாள்".
" கதவை திறந்து தோட்டத்தில் பார்க்க அங்கும் இல்லை. பின்னர் முன் கதவை திறக்க , அது வெளிபுறமாக தாழிட்டிருப்பது தெரிந்து, சந்து வழியாக முன்னே வந்து தாழ்ப்பாளை விலக்கியவள், போயாச்சு போலயென சொல்லியவள், தோளை குலுக்கி கொண்டு, வழக்கமான வேலையை பார்க்க தொடங்க, பாட்டியும் அங்கு வந்து சேர்ந்தார்"
" ஆரா கண்ணு பால் சுட வைக்கட்டுமா என்க, வேண்டாம் பாட்டி. பசிக்கிற போல இருக்கு. டிபனே பண்ணிடலாமென்றவள், அதற்கான வேலையை பார்க்கலானாள்"
" மனதிற்குள் மட்டும் ருத்ரனை பற்றிய எண்ணங்கள் ஓடியது".
" டிபனை செய்து முடிக்க, கிரிஜா பாட்டியும், சைலஜா பாட்டியும் அங்கு வந்தனர். இருவரையும் பார்த்தவள், வாங்க பாட்டியென்றவள், பாட்டி, பாட்டி என தோட்டத்து பக்கம் குரல் கொடுத்தாள்".
" இதோ வரேன் கண்ணு என்றவாறு பரித்த கீரைகளோடு உள்ளே வந்தவர், அங்கிருந்த இருவரையும் பார்த்து, வாங்கடாமா என்றார்".
" கண்ணு, என்ன வேடிக்கை பாக்குற?,ரெண்டு பேருக்கும் டீ போட்டு குடு என்க, நாங்க டிபன் சாப்பிடலாமென்று வந்தோம், நீங்க என்னக்கா, டீயோடு துரத்தி விடுறீங்களென்று கிரிஜா பாட்டி கேட்க, அதுக்கு என்ன கண்ணு, சாப்பிடுங்கடா".
" நம்ப பேத்தி நிறைய தான் செஞ்சிருக்கு. அந்த அம்மாவுக்கு புடிச்சதாச்சே என்று சிரித்தவர், ஆரா கண்ணு நீ பரிமாறு, நான் ரெண்டு தோசை ஊத்திடுறேன் என்றார்".
" இதெல்லாம் நல்லா இல்லையென்றவாறு சிம்ஹன் தாத்தாவும் அங்கு வந்து சேர்ந்தார்".
" ஒரு வார்த்தை அக்காளும் தங்கச்சியும் சொல்லிட்டு வராமல் ஓடி வந்தீட்டீங்களே என மனைவியையும், மச்சினியையும் முறைத்து பார்க்க, போனையே கட்டி கிட்டு அழுதீங்க".
" அதான் நாங்க வந்துட்டோமென்று கிரிஜா பாட்டி சொல்ல, எதே என்று பார்த்தார்".
" திடீர்னு இவர்கள் வருவார்கள் என்பது தெரியாததால் மூவர் சாப்பிடும் அளவிற்கு தான் காய்கறிகள் போட்ட உப்புமாவை ஆர்கலி செய்திருந்தாள்".
" தோசை போட்டு கொண்டாலும் சட்னி குறைவா இருக்கே என யோசித்தவளுக்கு, செல்பில் இருந்த சேவ் கண்ணில் பட, மட மடவென்று சேவ் டொமேட்டோ செய்யும் வேலையில் இறங்கினாள்".
" இங்கே பெரியவர்கள் நால்வரும் சிரித்து பேசியபடி இருக்க, கால் மணி நேரத்தில் தோசையும்,சேவ் பாஜியும் தயாராக, ஒவ்வொன்றாக எடுத்து வந்து ஹாலில் வைக்க, ஏம்மா, உன் பாட்டிகளுக்கு மட்டும் தான் அனுமதியா?, நான் என்ன சண்டைகாரனா??? என்றார்.
" தாத்தாவின் பேச்சு புரிய,உங்கள் வீட்டிற்கு நீங்க வந்துருக்கீங்க தாத்தா. அதற்கு ஏன் நான் வாங்க என சொல்லணும் என்க, அட அட அட,ஒரு வார்த்தை என்றாலும் திருவார்த்தையா சொன்ன அம்மு என்றார் சைலஜா பாட்டி".
" பின்னர் பேசியபடியே அங்கிருந்த உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டனர், எல்லாரும் இங்க இருக்காங்க?, இந்த மனுஷன் மட்டும் ஆளை காணுமேயென, ஆர்கலியின் உள்ளுக்குள் கேள்வி எழும்பாமலும் இல்லை"