• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
களுத்துறை பயணம்- நினைவுகள்:

"நாட்கள் யாருக்கு நன்றாக போனதோ, இல்லையோ தெரியவில்லை. ஆனந்தனுக்கும் ராகினிக்கும் ரொம்ப சிறப்பாகவே செல்ல, இன்னொருத்தனுக்கு தான் வயிறு காந்தியது".

" ராகினி பத்தாவது வரை தான் படித்திருக்கிறாள் என்பதால், மேற்கொண்டு உனக்கு படிக்க ஆசையானு ஆனந்தன் ஓர் நாள் அவளிடம் கேட்க, இல்லை மாமா என்றாள்".

" ஏண்டா மா?, வருஷம் போய் விட்டென்று நினைக்கிறாயா?, இல்லை இனி படித்தால் படிப்பு ஏறாதென்ற பயமா? என்றபடி சிரிக்க, மாமா என முறைத்தவள், எனக்கு சின்ன வயதில் இருந்து பரத நாட்டியத்தில் பெரிய ஆளா வரணுமென்ற ஆசை தான் மாமா".

" அரங்கேற்றம்லாம் என்னோட 7 வயதில் பண்ணியாச்சி. விபத்து நடந்த அன்று கூட நான் ஒரு போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு வாங்கிட்டு ஆசையா வந்தேன்".அதன் பின்னர் எல்லாமென்று தனது கையை வானத்தை நோக்கி காட்டினாள்".

"பின்னர் இருவரும் வேறு கதைகளை பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்".

" கதிரவனும் உதயமானான்".

"வழக்கம் போல பூஜையை முடித்து வெளியே வந்தவள், மாமா என்று ஆரத்தியை நீட்ட, எடுத்துக்கொண்ட ஆனந்தன், ராகினி ஒரு இடத்திற்கு போகணும்".நீ சரியா ஒன்பது மணிக்கெல்லாம் ரெடியா இருமா என்று, மீண்டும் நியூஸ் பேப்பருக்குள் மூழ்கினார்".

"இதை கேட்டுக் கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்த ஆதுவும், ரஞ்ஜனும் அப்படி எங்கே? என கோரஸாக கேட்க, ஆனந்தனோ பர்சனல் என்று சொல்லி விட்டு மீண்டும் பேப்பரை படிக்க தொடங்க, பரிட்சை போலடா என்றான் ஆது".

" இருக்கலாம்டா என்று ரஞ்ஜன் சிரிக்க, ம்ம் என ராகினி முறைத்தாள். பின்னர் இருவருக்கும் டிபனை பரிமாற, சாப்பிட்டு முடித்த இருவரும் ஷோரூமிற்கு கிளம்பி விட்டனர்".

"ஆனந்தன் சொன்ன போலவே ராகினியும் தயாராகி ஹாலிற்கு வந்தாள். சில நிமிடத்தில் ஆனந்தனும் அங்கு வர, பின்னர் செல்லாவிடம் சொல்லிக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டார்கள்"

" இந்த மாமா எங்கே தான் கூப்பிட்டு போறாங்களென்று ராகினியும் யோசனையாக வந்தாள்".

" அரைமணி நேரம் சென்ற பின்னர், அங்கிருந்து இடது பக்கம் கார் திரும்பும் வழியில் இருந்த போர்டை பார்த்தவளின் கண்கள் விரிந்தது".

" நிலானி கலாஷேத்ரா செல்லும் வழி என்ற பெயரை படித்தவள், அதிர்வோடே ஆனந்தனை திரும்பி பார்க்க, மௌனமாக சிரித்தார்". அந்த பில்டிங்கின் நுழைவு வாயிலிற்குள் நுழைந்து காரை நிறுத்தியவர், வாம்மா என்க, மாமா என்னும் போதே ராகினியின் நா தழுதழுத்து".

" கமான் ராகினி என்க, பின்னர் காரிலிருந்து இறங்கியவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவர், மேடமை பார்க்கணும்".

" S. A பில்டர்ஸ்ல இருந்து வந்துருக்கேனென்று சொல்லுங்களென்க, ரிசப்ஷனில் இருந்த பெண்ணும் அங்கிருந்து இன்டர்காமில், விஷயத்தை பேசிவிட்டு ஓகே மேடம் என்று ரிசீவரை வைத்து விட்டு, சார் மேடம் உங்களை வர சொல்றாங்க என்க..".

" ஓகே மா என்றவர், உள்ளே செல்ல, அங்கிருந்த சூழலை கண்கள் விரிய ரசித்தவாறு, ராகினியும் அவர் பின்னாடியே சென்றாள்".

"அங்கிருந்த அறைக்கு முன் சென்றவர், எக்ஸ்க்யூஸ் மீ என்று ஆனந்தன் கேட்க, சார் உள்ளே வாங்க என்னும் குரல் கேட்டது".

" ராகினியோடு உள்ளே வந்தவரை பார்த்த நிலானி,வணக்கம் சார், உட்காருங்கள் என்று அங்கிருந்து சேரை காட்ட, தேங்க்யூ என்றவர், நேற்று ஃபோனில் சொன்னேனே என்க, ஓகே சார்".

" சின்னதா ஒரு ரிகர்சல் பார்க்கலாமா மா?,ஏன் கேட்கிறேன் என்றால், இத்தனை வருஷம் அன்கான்சியஸில் இருந்து இப்போ தான் வந்திருக்கீங்க"

" எந்த அளவுக்கு உங்களுக்கு ஸ்டெப்ஸ் ஞாபகம் இருக்கும் என்பது தெரியலை. அதனால் தான் என்க,ஓகே மேடம் என்றவாறு அங்கிருந்து எழ, வாங்க சார் என்று பக்கத்தில் இருக்கும் அறைக்கு கூப்பிட்டு போனவர்,ஓகே வா மா என்க, புடவை முந்தானையை இடுப்பில் சொருகினாள்".

" பின்னர் அங்கிருந்த நடராஜ் சிலையை வணங்கி விட்டு ஓகே என்று தனது கட்டை விரலை காட்ட, நிலானியும் அங்கிருந்த ஆடியோவை ஆன் பண்ணினார்".

"பாட்டு முடிந்து அவர் காலில் விழுந்த போது தான், நிலானியே சுய நினைவிற்கு வந்தார்".

" சார் இவங்களுக்கு நான் கிளாஸ் எடுக்க வேண்டாம். இவங்களே இனி பசங்களுக்கு கிளாஸ் எடுப்பாங்களென்றவர், எவ்வளவு அற்புதமா பாவனையை வெளிப்படுத்தி இருக்கிறாய் ராகினி".

" உன்னை பாராட்ட வார்த்தை இல்லை. இனி இந்த ஸ்கூல்ல நீ டான்ஸ் டீச்சர் என்க, சந்தோஷத்தில் ராகினிக்கு அழுகை வந்தது".

" மேடம் அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்காயென்க,உன் தகுதி எதுவென்று மீண்டும் நிரூபித்து விட்டாய்".

" வாங்களென்று தனது அறைக்கு கூப்பிட்டு போனவர், அந்த பள்ளிக்குரிய ரூல்ஸ்களை சொல்லியவர், முடிந்தால் இன்றே ஜாயின் பண்ணிக்க சொல்ல, ராகினியும் ஏக்கமாக ஆனந்தனை பார்க்க, ம்ம் என தலையசைத்தார்".

" சரி மதியம் லஞ்ச் நான் கொண்டு வரேனென்று சொல்ல, நோ சார். டீச்சர்ஸ்ங்களுக்கு புட் இங்கையே உண்டு".

" காலை ஆறு மணியில இருந்து பேட்ச் ஆரம்பிக்குது. சிலரால் புட் கொண்டு வர முடியாது என்பதால் தான் என்க, ஓகே டா".

" அப்போ ஈவ்னிங் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்குறேன், ஆல் த பெஸ்ட் என்றவாறு ஆனந்தன் அங்கிருந்து சென்று விட்டார்".

" நிலானியும் அங்கு இருப்பவர்களுக்கு ராகினியை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, முதல் நாள் வகுப்பையும் தொடங்க சொல்லி சென்று விட, ராகினியும் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தாள்".

" நாட்களும் இறக்கை கட்டி பறந்தது. ராகினிக்கு காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும், பரத வகுப்புக்கான நேரம் ஒதுக்கி இருந்தனர்"

" அவளை அழைத்துப் போவதும் கொண்டு வந்து விடுவதும் ஆனந்தன் தான்".

" ஒரு நாள் ஆனந்தனால் அவளை அழைத்துப் போக முடியாத சூழல் வந்தது. ரஞ்ஜனும் முதல் நாளே பிசினஸ் விஷயமாக வெளியூருக்கு சென்றிருக்க, ஆது தான், ராகினியை கூப்பிட்டு போக வேண்டிய சூழல் வந்தது".

சதூர்வேதமங்கலம்:

"ஒரு வேளை அன்று ருத்ரன் சொல்லிக்காட்டியது போல, தான் ஒன்னுமில்லாதவளென்றும், இந்த பணக்காரர்களோடு இருக்க தகுதி இல்லை என்னும் எண்ணம், ஆர்கலியின் நினைவிற்கு வந்ததே மூலக் காரணமாகிவிட்டது"

" ஆரா கண்ணு நான் உன் அண்ணி கூட போறேன். நீயும் தம்பியும் வாங்களென்று சொல்லிய பாட்டி, ருத்ரனை பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்றார்".

" சிறிது நிமிடம் வரை ரூமிற்குள்ளே இருந்தவள், எழுந்து வந்து கதவை திறக்க, அங்கே கைகளை கட்டிக்கொண்டு ருத்ரன் நின்று கொண்டிருந்தான்".

" சரி சமாளிப்போமென்று தனக்குள் சொல்லி கொண்டவள், அங்கொருவன் இருப்பதை கண்டு கொள்ளாமல், தோட்டத்து கதவை திறந்து வெளியே சென்றவள், அங்கிருக்கும் துணி துவைக்கும் கல்லின் மேலே போய் உட்கார்ந்து கொண்டாள்".

" வாசல் படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், ருத்ரா உன் பொண்டாட்டியோட ரிவெஞ் இதோ ஆரம்பமாகிவிட்டது".

" பார்த்துடா என மனசாட்சி சொல்ல, ம்ம் என்றவன்,அவளிடம் சென்று, எதுக்கு இங்க வந்து உட்கார்ந்திருக்க? என்க, ஹம் வேண்டுதல் என்றாள்".

" ஓஓஓ நல்ல வேண்டுதல் தான். ஆனால் பாரு, உன் காலுக்கு கீழே எதோ இருப்பது போல என்க, என்னா என்னா என பதறி எழுந்தவள் கீழே விழப்போக, தன்னவளை பின்புறமாய் இடையோடு இறுக்கி தாங்கி பிடித்தான்".

" அவள் சுதாரித்து சண்டைக்கு வருவதற்குள், தன்னை தேற்றியவன், ஏய் பார்த்து. நீ கீழே விழுந்தாலும் எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை".

" ஆனால், வயிற்றில் இருப்பது என் குழந்தையாச்சே, கொஞ்சம் பார்த்து இரு என்க, அதைக்கேட்டவள், கோவமாக அவனை பார்த்து, நீங்க கொஞ்சம் கையை எடுத்தால் நான் தள்ளி போவேன் என்றாள்".

" ஏன் என் அருகாமையில் இருந்தால் மனசு மாறிடுமோனு பயமா? என ருத்ரன் கேட்டான்".

" அய்யோ இந்த மனுஷன் கண்டு புடிச்சிட்டாரே என அதிர்ந்தவளுக்கு, உண்மையிலே ருத்ரனின் அணைப்பும், பேசும் போது அவள் காதோடு உரசும் அவன் தாடியும் இம்சையை தான் கொடுத்தது".

" நோ... மயங்காதடி, உன்னை எப்படி எல்லாம் பேசினான் இவன்?, அதெல்லாம் மறந்து விட்டதா என மனசாட்சி சொல்ல, தன்னை மீண்டுக்கொண்டவள், இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே?...

" எத்தனையோ இரவு எத்தனையோ பேர் மேல இப்படி என அவள் சொல்ல வரும் போது, அவள் கழுத்தை பின் பக்கமாய் வளைத்தவன், அடுத்த வார்த்தையை பேச விடாமல், அவள் இதழோடு தன் இதழை வைத்து மூடினான்".


"சிறிது நிமிடத்தில் மூச்சிக்காக அவள் தவிப்பது தெரிந்து தன்னிடமிருந்து அவளை விலக்கி விட்டவன், எப்படி டி என கண்ணடித்து கேட்க, பொறுக்கி என முணு முணுத்துக்கொண்டே அங்கிருந்து உள்ளே சென்றாள்"

" ஆர்கலி உள்ளே போய்விட்டதை உறுதி செய்தவன், ஆஆஆஆ என தனது முகத்தை சுருக்கி வலது கையை பார்க்க,தையல் போட்ட காயத்திலிருந்து
நல்ல வேளை ரத்தம் எதுவும் கசியவில்லை"

ஏண்டா அதான் கையில் தையல் போட்டுருக்கே, பெரிய இவனாட்டம் அந்த கையால தாங்கி பிடிக்குற என அவன் மனசாட்சி கேட்க, பின்ன,என் பொண்டாட்டி கீழ விழுந்தால் என்ன ஆவது?..

"அதனால் தான் என் கையை பற்றி கூட யோசிக்காமல் பிடித்தேனென்றவனை பார்த்து சிரித்த மனசாட்சி,டேய் டேய் பொறுப்பு பொன்னம்பலம்"

" நீ பண்ணிய வேலைக்கு என்ன பண்ண போறானு முதல்ல போய் பாருடா.பிறகு உன் அக்கரை சக்கரைய அவளுக்கு காட்டு என்று சொல்லி சென்றது".

" என்ன சொல்ல போறாளென்று தெரியவில்லையே?, அய்யோஓஓஓ நான் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன். சுண்டெலி போல இருக்கவள், இப்படி என்னை புலம்ப வைக்குறாளே?

இது தான் மனைவி என்பதா? என சொல்லிக்கொண்டவன், சரி உள்ளே போவோமென்று பொறுமையாக வாசல் வரை வந்தவன், உள்ளே எட்டி பார்க்க அங்கே சேரில், ஆர்கலி கோவமாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

" மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹனென்று சொல்ல,ஹப்பாடா நல்ல பாயிண்ட் கிடைத்து விட்டது. இப்போ பாருடி என் செல்ல பொண்டாட்டி என்றவாறு கோவமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டே உள்ளே வந்தவன், ஆர்கலியை முறைத்து பார்த்தான்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
"என்ன நீங்களென்று ஆர்கலி பேச வர,ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க?

எப்போ பார்த்தாலும் என் பேரை சொல்லிட்டு?.என்னமோ நீ தான் என்னை பெத்து வளர்த்து பேர் வச்ச போல, ருத்ர வீர சிம்ஹன், ருத்ர வீர சிம்ஹன்னு ஏலம் போடுற?.

உனக்கு என்னை கூப்பிடணுமென்று ஆசை இருந்தால், டார்லிங், செல்லம், புஜ்ஜி இப்படி எதாவது ஓர் பேரை சொல்லி கூப்பிடு.

அதை விட்டு என்னோட தாத்தா பேரை சொல்லிட்டு இருக்க. வீர சிம்ஹன் என்பது அவரோட பெயர். ஏன் இது உனக்கு தெரியாதா?

"இனி இப்படி கூப்பிட்ட வாயை ஒடைச்சிடுவேன் பார்த்துக்கோ என்றவன், ஹப்பாடா ஒரு வழியா இவ வாயை அடைச்சிட்ட ருத்ரா, இதையே மெயிண்டெய்ன் பண்ணு என சொல்லிக்கொண்டவன், அங்கிருந்து வெளியே சென்றான்".

" போறவனையே பார்த்தவளுக்கு இடி இடித்து விட்டது போல இருந்தது".

" பேரை சொன்னதற்கா இந்த ஆளு இப்படி குதிக்கிறான் என சொன்னவள், அட ஆமா".அவனோட தாத்தா பேராச்சே வீர சிம்ஹன், அதான் இவன் இப்படி தாளிச்சிட்டு போறான்".

" தப்பு நம்ப மேல தான்".

" இனி இப்படி பெரியவங்கள் பேரை சொல்லக்கூடாது ஆர்கலி என சொல்லி பெரு மூச்சு விட்டாள்".

"கதவின் ஓரம் நின்று அவள் என்ன செய்கிறாளென்று மறைந்திருந்து கவனித்த ருத்ரனின் காதில் ஆர்கலி சொல்லியது விழ, ஹப்பாடா".

" சீக்கிரமா என் பொண்டாட்டிய சரி பண்ணிடலாமென்று விசிலடிக்க, உள்ளே இருந்தவள் விசில் சத்தம் கேட்டு, யாரு என எழுவது தெரிந்து சில அடி தள்ளி போய் வானத்தை பார்ப்பது போல நின்று கொண்டான்".

"வாசலில் நின்று ஆர்கலி பார்க்க, ருத்ரன் நிற்பது தெரிந்தது. ஹலோ சார், என் வீட்டுக்கு நான் ஒன்னும் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் எடுக்கவில்லையே என்றவள், கதவை தாழிட்டு, தனது அறைக்குள் சென்று விட்டாள்".

" ச்சை.. இந்த மனுஷனை பார்த்தாலே ஒர் வேலையும் நமக்கு ஓட மாட்டேங்கிறது. இனி என்ன செய்ய?

அக்ரிமெண்ட் வேற போடணும்னு சொல்லுறான்?.

அய்யோ...

தங்க குட்டிங்களா, உங்களை பிரிஞ்சி அம்மா எப்படி இருப்பேன் என்கும் போதே அவள் கண்கள் கலங்கியது.

கண்டிப்பா உங்களை விட்டு அம்மாவால் இருக்க முடியாது.உங்கப்பன் என்ன பண்ணுறானு நானும் பாக்குறேனென்று சொல்லியவள், கண்ணை துடைத்துக் கொண்டு, நீங்க வெளியே வந்ததும், அவரை நல்லா அடிக்கணும். அப்புறம், கடிச்சி வைக்கணும் சரியா என கேட்கும் போது, குழந்தைகள் உதைக்கும் அசைவு தெரிந்தது.

"மீண்டும் அவள் அறையின் ஜன்னலோரம் நின்று ஆர்கலி பேசுவதை கேட்ட ருத்ரன், அடி சண்டாள பாவி"

"இப்பவே எனக்கு அடியாள் செட் பண்ணுறியாடி?,கவலை படாதடி இனி உன்னை விட்டு போக மாட்டேன் என முணுமுணுத்தவன் கேட் திறக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்து தள்ளி போய் பார்க்க, வருவது சங்கர் என்று தெரிந்தது"

"என்ன தம்பி வாசல்ல நிக்குறீங்க?, தங்கச்சி அங்கையும் இல்லையே என்கும் போது, சங்கரின் குரலை கேட்டவள், வாசல் கதவை திறந்தாள்".

" என்னம்மா இது?, வாசல்ல நிக்க வச்சிருக்க என கோவமாக கேட்க, அண்ணா அது வந்துணா என பேசுவதற்கு ஆர்கலி தடுமாற, நான் தான் மாமா வீட்டிற்கு கிளம்பினேன்".

" அதான் டோரை லாக் பண்ணிட்டாள். அப்போ தான் நீங்க வந்தீங்களென்க, அப்படியா தம்பி, இது தெரியாமல் தங்கச்சி கிட்ட கோவ பட்டுட்டனே என்றவர், தங்கச்சிமா அண்ணனை மன்னிச்சிடுத்தா என்றார்".

" அய்யோ மாமா, அதெல்லாம் இவள் ஒன்னும் நினைக்கமாட்டாளென்று ருத்ரன் சொல்ல, ஹலோ ஹலோ சார், கொஞ்சம் நிறுத்துங்க"

" நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்க சொல்லிட்டு இருக்கீங்க?, அது மட்டும் இல்லாமல் என் அண்ணனை மாமா மாமானு உரிமை கொண்டாடும் வேலையெல்லாம் வச்சிக்காதீங்க, நாங்கள் ஏழைகள். இனம் இனத்தோட
தான் சேருமென்று வார்த்தையால் ருத்ரனின் இதயத்தில் அடித்தாள்".

" இவ்வளவு நேரம் மனைவியின் பாச பொறாமையை சிரித்தபடியே ரசித்தவன், அவள் கடைசியாக பேசிய பேச்சில் துணி கொண்டு துடைத்த போல, அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது"

" சூழலை இயல்பாக்கும் பொருட்டு, சரி சரி சாப்பிட்டு தெம்பா வாக்கு வாதம் பண்ணலாம் வாங்க வாங்க என்று, கையிலிருக்கும் சாப்பாட்டு கேரியரோடு உள்ளே சென்றார்".

" ம்கும் என தொண்டையை கணைத்து சரி பண்ணியவன், மாமா எனக்கு பசிக்கலை, சோ வேண்டாமென்றான்".

" ருத்ரனை திரும்பி பார்த்தவர், உள்ளே வாங்க மாப்பிள்ளை என்றார்".

" அவர் அழைத்த விதத்தை கேட்டவன், மாமா என சந்தோஷத்தில் அழைக்க, வாங்க மாப்பிள்ளை. சோத்தை மறுத்தால் எல்லாம் சரியாகாதென்றார்.

" இருவரும் எதிரெதிரில் உட்கார்ந்து சாப்பிட்டாலும், எதுவும் பேசிக் கொள்ளவில்லை"

" சாப்பிடும் போது ருத்ரனுக்கு புரையேற, எவள் நிறைக்குறாளென்று தெரியவில்லையே என சொல்லிக் கொண்டே, தனது தலையில் தட்டி கொண்டிருந்தான்"

" ருத்ரன் சொல்லிய வார்த்தையை கேட்டவளுக்கு கோவம் வர, தண்ணி எடுக்கும் சாக்கில் அவன் பக்கமாய் தள்ளி விட்டவள், சாரிங்க சார் என்றவாறு எழுந்து போக, நனைந்த பேண்டை பார்த்து அவளை முறைத்தவன், இப்படி பண்ணிட்டாளே?, ஒரு வார்த்தை விளையாட்டுக்கு வெறுப்பேத்த சொன்னேன்".

" அதுக்கு இப்படி பழி வாங்கிட்டாள். நல்லவேளை டா ருத்ரா, சாம்பார் கப்பை தள்ளி வச்சிருந்தா".

"இல்லை அது இருந்த ஹீட்டிற்கு உன் நிலமை அய்யோஓஓ என்றவன், அங்கிருந்த ரூமிற்குள் சென்று பார்க்க, அது தன்னவளின் அறை என்பது தெரிந்தது".

"அப்பொழுது தங்கச்சிமா என சங்கரின் குரல் வாசலில் கேட்க, ஹப்பாடா. மாமா வந்தாரே என்றவாறு வாசலுக்கு வந்தவனை பார்த்தவர், மாப்பிள்ளை இதில் உங்களுக்கு மாத்திக்க துணி இருக்கு".

" ஆச்சி அங்கையே இருக்காங்களாம் என்றவர் ஆர்கலி எதோ சொல்ல வருவது கண்டு, சரிமா காலையில் பார்க்கலாமென்றவாறு அங்கிருந்து சென்றார்".

களுத்துறை பயணம்:

" வழக்கமாய் காலை 7:30 மணிக்கு அவள் சென்று விடுவதால் அதே போல் தயாராகி கீழே வந்தாள்".

" பின்னர் காரில் அழைத்து போய் விட்டவன், அங்கிருந்து ஷோரூமிற்கு சென்றவனுக்கு, ராகினியிடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலை சொல்லிய நாள் நினைவிற்கு வந்தது".

அன்று ஸ்கூலில் கல்ச்சுரல் புரோகிராம்"

" ஆதவன், ருத்ரன், ரஞ்ஜன் மூவரும் 12 ஆம் வகுப்பும், ராகினி 10 ஆம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்த நேரமது".

"மாணவர்கள் அனைவரும் ஆடிட்டோரியம் வந்து சேர, நிகழ்ச்சிகளும் ஆரம்பமானது".

" சில நிமிடங்கள் சென்று ஸ்டேஜிற்கு வந்து நின்றவளை பார்த்த ஆது, என்னடா, இன்றைக்கும் இவள் டான்ஸ் உண்டா என நண்பனிடம் கேட்க, ஆமாடா என்றான் ரஞ்ஜன்".

" பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, ராகினியின் நடனத்தை பார்த்த ஆது மெய் மறந்து போனான்".

" அவளின் ஒவ்வொரு பாவனையையும் மனதிற்குள் படமாக்கியவன், எப்பாஆஆஆ, என்னமா ஆடுறாளென்று தனக்குள் சொல்லிக்கொண்டான்".

"டான்ஸ் முடிந்து ராகினி சென்று விட, ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேனென்று சொல்லி அங்கிருந்து வெளியே வந்தவன், சுற்றி பார்த்தவாறு ராகினி இருக்கும் ரூமிற்குள் சென்றவன், ராகினி என்க, அவளும் பதறி போய் திரும்பினாள்".

" ஹேய் ரிலாக்ஸ்.... உன் கிட்ட ஒன்னு சொல்லணும். இதுவரை எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோணியதில்லை".

"ஆனால் இன்னைக்கு உன்னை பார்த்ததும் தோணிச்சு. இனிமே நீ ஸ்டேஜில் டான்ஸ் ஆடாதே. அப்படி ஆடினால் அது எனக்காக மட்டும் தான் இருக்கணும்".

"ஐ லவ் யூ ராகினி. யோசிச்சு பதில் சொல்லு என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்".

"அது தான் ராகினியை அவன் கடைசியாக பார்த்தது, அதன் பின்னர் நண்பனும், ராகினியும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை".

" சில வருடங்களுக்கு பின்னர் தான், ரோட்டில் மயங்கிய நிலையில் ரஞ்ஜனை பார்த்தது"

" ராகினியை பற்றி எப்படி விசாரிப்பது?, அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? என்றெல்லாம் காரில் வரும் போது நினைத்து உள்ளுக்குள்ளே தவித்து போனான்".

" ரஞ்சா சீக்கிரம் என் ராகியை பற்றி சொல்லுடா சொல்லுடா என சுலோகம் போல மனதிற்குள்ளே ஆது கேட்க, ரஞ்ஜனும் அவன் கடந்த காலத்தை சொல்லி முடித்ததும், உடனே தன்னவளை பார்க்க வேண்டுமென்று மனது துடித்தது".

" இன்னும் தனது இரண்டு நண்பர்களிடமே இந்த விஷயத்தை சொல்லவில்லை. அவர்களுக்கு தெரிந்தால், இதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ, என்னும் பயமும் அவனுக்கு ஒரு பக்கம் இருந்தது"

" காலையில் அவளை ஹாஸ்பிடலில் பார்த்த பிறகு தான் ஆதுக்கு உயிரே வந்தது".

" தன்னவளை பார்த்ததும் கட்டிப்பிடித்து கதறி அழ வேண்டும் என்று உள்ளம் துடித்தாலும், வலு கட்டாயமாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்"

" அதுவரை பூஜை அறைக்கு செல்லாதவன், அன்றிலிருந்து ராகினி விரைவில் குணமாக வரவேண்டும் என்று, மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டான்".

" வருடங்கள் மட்டுமே ஓடியது. ஆனால் ராகினிக்கு நினைவு வந்த போல தெரியவில்லை. அப்படி இருக்கும் போது தான் ஆதிராவின் பார்ட்டிக்கு போயிருந்த பொழுது, ராகினிக்கு நினைவு வந்துவிட்டது என்று ரஞ்ஜன் சொல்ல, ஆதுக்கு அழுகை வந்தது".

" நண்பர்கள் தூங்கும் வரை தன்னை கட்டு படுத்தியவன், ரெஸ்ட் ரூமிற்குள் சென்று அழுது தீர்த்தவன், தன்னவளை காண மன நிம்மதியோடு வந்து படுத்தான்".

" பிறகு ராகினியை பார்த்தது, ஆனால் தான் ஒருவன் தெரிந்தவன் போல அவள் கண்டுகொள்ளாதது, தன்னுடைய வீட்டிற்கே, அவள் வந்து தங்குவாள் என சிறிதும் ஆது எதிர் பார்க்கவில்லை".

"டேய் டேய் அடேய் தடிமாட்டு முண்டமென்று ரஞ்ஜன் ஆதுவின் தோளில் அடிக்க,உடனே சடேன் பிரேக் போட்டவன், கடந்த காலத்தின் நினைவிலிருந்து வெளியே வந்து,என்னடா என்றான்".

" பைத்தியக்காரா,நீ என்னத்தை நினைச்சி காரை ஓட்டிட்டு போற?, மாமா வீட்டுக்கு போற வழிய தாண்டி வந்துட்டோமென்க, என்ன யோசனையோ?, யாருக்கு தெரியுமென்று ஆனந்த் சொல்ல, கண்ணாடி வழியாக தனது தந்தையை முறைத்து பார்த்த ஆதுவை கண்டு, ராகினிக்கு சிரிப்பு வந்தது".

ஆர்கலி எங்கே..??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top