Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 439
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
"தற்செயலாக இடது பக்கம் ஆர்கலி திரும்ப,அங்கே தூண் மேல் சாய்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டவளுக்கு, கடைசியாக அவனை பார்த்த அந்த நாள் நினைவு வந்தது".
"அந்நாளில் அவன் பேசிய பேச்சுக்களின் வலியால், இப்பொழுதும் அவளின் கண்கள் கலங்க, வேறு பக்கமாய் தனது முகத்தை திருப்பிக்கொண்டாள்".
"ஆர்கலியையே பார்த்திருந்தவன்,வேகமாக அவளை நோக்கி வந்தான்".
" ம்கும் என தொண்டையை செருமி தன்னை சரி பண்ணிக்கொண்டவன், என்ன இங்க உட்கார்ந்திருக்க?, பூச்சி எதாவது இருக்க போகுது, எந்திரி என்க…அவள் அமைதியாக இருக்கவும் கீழே குனிந்து அவள் தோளில் கை வைக்க, பட்டென்று அவன் கையை தட்டி விட்டவள் "ஹலோ மிஸ்டர்.ருத்ர வீர சிம்ஹன், என் தோள் மேல கை வைக்கிறதுக்கு எவ்வளவு ரேட் என்பதை,இதுவரை உங்க கிட்ட நான் பேசவே இல்லையே என்க,ஆர்கலியின் வார்த்தையை கேட்டவன், கன்னத்தில் அரை வாங்கியது போல் அங்கிருந்து சென்று விட்டான்".
"இனி தாண்டா இந்த ஆர்கலியோட ஆட்டம் உனக்கு தெரியும் என்றவள், கைகளை ஊன்றி பொறுமையாக எழுந்து,அங்கிருந்து வீட்டை நோக்கி செல்ல, கருப்பாயி அவளை தேடி வருவது தெரிந்தது".
"வா ஆராமா,மணி என்ன ஆகுது?, இன்னும் சாப்பிடாமால் இருக்க?, உனக்கு பசிக்கவில்லையென்றால், வயிற்றில் இருக்கும் என் மருமக புள்ளைங்களையும் பட்னி போடுவது எவ்வகை நியாயம்?
"உன் அண்ணன் வேற என் தொங்கச்சி இல்லாமல் சாப்பிடமாட்டேனு இருக்காரு என கிண்டல் செய்ய…
"ஏண்டி உன் கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன், இங்க வந்து கெக்கே பெக்கேனு இளிச்சிட்டு நிக்கிற என சங்கரின் குரல் கேட்க, வந்துட்டார்யா திருப்பாச்சி அண்ணன்".
" எம்மா பாசமலரு வாத்தா என்க, என்னடி கொழுப்பா?, வாய் இருக்காதென்ற சங்கர், தங்கச்சிமா வாடா கண்ணு சாப்பிடலாமென்க, இதோணா என்று சென்றாள்".
அங்கிருந்த தரையில் சங்கர் உட்கார, அவனுக்கு அருகிலே ஆர்கலியும் உட்கார,எக்கா நீங்களும் வாங்க. நாம தானே பார்த்துக்கலாமென்று மலரை சாப்பிட கூப்பிட, சரி சங்கரு என்றவர், கருப்பாயி, இலையை வச்சி பரிமாறு, நான் அப்பளத்தை பொரிச்சிட்டு வரேனென்று உள்ளே போய்விட்டார்".
"சிறிது நிமிடத்தில் மலரும் வந்து விட, அந்நேரம் ருத்ரனும் சாப்பிட வந்தான்".
" நான் பரிமாறுரேன் நீங்கள் சாப்பிடுங்களென்க, இருக்கட்டும், நானும் கீழவே உட்கார்ந்துக்குறேன் என்றவன், சங்கரின் பக்கத்தில் உட்கார, பின்னர் ஐவரும் தேவையானதை போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்".
ருத்ரனுக்கு இது புது அனுபவமாக இருந்தது. எப்போதும் யாராவது ஒருவர் பரிமாறியே சாப்பிட்டு பழகியவனுக்கு, இன்று வேண்டியதை தானே போட்டு சாப்பிடுவது பிடித்திருந்தது".
"பின்னர் கையை கழுவிக்கொண்டு சங்கரை தேடி வர,அங்கே சங்கர், கருப்பாயி, மலர், ஆர்கலி நால்வரும் வெளியே இருக்கும் வராண்டாவில் உட்கார்ந்திருந்தனர்".
" காலடி சத்தம் கேட்டு சங்கர் திரும்பி பார்க்க,ருத்ரன் வருவது தெரிந்து, ஏதோ பேசனுமென்று சொன்னாரே இந்த தம்பியென்பது நினைவில் வர, எழுந்தவர், வாங்க தம்பியென முன்னே நடக்க, ருத்ரனும் பின்னாடியே சென்றான்".
" வீட்டிற்கு பின்னாடி இருக்கும் அடர்ந்த மரங்களின் ஊடே அங்கங்கே கல்பெஞ்சு இருந்தது. அதில் ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்ட சங்கர், வாங்க தம்பி உட்காருங்கள் என்றார்".
"அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவன் ரொம்ப அழகா இருக்கு இல்லையா என்க,ஆமாம் தம்பி அந்த காலத்து மனுஷன் பார்த்து பார்த்து வச்ச மரம்".
"தேவராஜ் ஐயாவோட அப்பா சிவராஜ் ஐயா நட்ட மரங்கள் தான் இதெல்லாம் என்று சொல்லி விட்டு, ருத்ரனை பார்த்தார்".
" சங்கரின் பார்வையை கண்டவன் மாமா என்க, சொல்லுங்க தம்பி, ஏதோ பேசணும் என்றீங்களே என சங்கர் கேட்க, ஆமாம் மாமா".
" இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம் மாமா. ருத்ரனென்றே சொல்லுங்கள் என்றவனுக்கு, தங்கச்சி புருஷனை மரியாதையோடு கூப்பிட வேண்டியது , எங்களோட கடமைப்பா என்று சொல்லி சிரித்தார்".
" பின்னர் நேரடியாக விஷயத்துக்கு வந்தவன், மாமா நிச்சயமாக என் மேல தவறான எண்ணம் தான் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்".
ஆனால், இதுக்கப்புறம் உங்க தங்கச்சியுடைய வாழ்க்கை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். கடைசி வரைக்கும் அவளையும், குழந்தையும் பார்த்துக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு மாமா".
மைக்கில் அங்கிள் சொன்னாங்க, நீங்களும் அக்காவும் தான், ஆர்கலிக்கும் பாட்டிக்கும் இத்தனை நாள் பாதுகாப்பாக இருந்தீர்கள் என்று, இதை நான் உயிர் இருக்க வரைக்கும் மறக்க மாட்டேன் என்க, ருத்ரனின் வார்த்தையை கேட்டவர், தம்பி, தங்கச்சிமா இந்த வீட்டுக்கு வந்த அன்றையிலிருந்து என் கூட பிறந்த பிறப்பா தான் இந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைக்கிறேன்".
"தங்கச்சிமாவும் அப்படி தான்.என்னோட தங்கச்சிக்கு நான் செய்ய வேண்டியது கடமை. மைக்கேல் சார் ஆர்கலி பற்றி விசாரிக்கும் போது, எனக்கு அவர் மேல சந்தேகமா இருந்தது.
அதனால் தான் அன்னைக்கு போனில் நான் கடுமையாக பேசினேன்.வாழ வேண்டிய பொண்ணு, இப்படி புள்ளைங்களோடு தனிமரமா நின்றால், நல்லாவா இருக்கும்?.
சொந்த பந்தம் இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை தெரியும். கடவுளாக பார்த்து அந்த தங்கச்சி என்ற உறவு எனக்கு கொடுத்திருக்கான்.
"அது வாழ்க்கை நல்லா இருக்கணும் என்ற எண்ணம் எனக்கு இருக்காதா? பா என்க, எந்த ஒரு ரத்த பந்தமும் இல்லாமல் இவர்களுக்குள் எப்படி இப்படி ஒரு பாசம் என்று, ருத்ரன் வியந்து போய் சங்கரை போனான்"
ருத்ரனின் பார்வையை கண்ட சங்கர், என்ன தம்பி இப்படி பாக்குறீங்க என்க, இல்ல மாமா உங்களோட பாசத்தை பார்த்து ஆச்சரியமா இருக்கு எனக்கு. இந்த அளவுக்கு என் மேலயும் பாசம் காட்டுவீங்களா? என கேட்க, கண்டிப்பா".
"தங்கச்சி புருஷன் மேல பாசம் இல்லாம எப்படி இருக்க முடியும். ஆர்கலி மேல எவ்வளவு பாசமோ அந்த அளவுக்கு சொல்ல முடியாது. ஏனென்றால் என் தங்கச்சி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது".
" கூட பிறந்தால் தான் அண்ணன் தங்கச்சி இல்லை, அன்பால் இணைந்தாலும் உறவு தான்".
" நீங்க ரொம்ப படிச்சவங்க. உங்களுக்கு நான் அறிவுரை சொல்லுணுமென்று அவசியம் இல்லை. புருஷன் இல்லாமல் பொண்டாட்டியால்,இந்த உலகத்தில் வாழ்ந்திட முடியும்".
" ஆனால்,பொண்டாட்டி இல்லையென்றால் புருஷனுக்கு வாழ்க்கையே கிடையாது. பார்த்துக்குங்க என்றார்".
இலங்கை களுத்துறை பயணம்:
"நண்பர்கள் மூவரும் தூங்கிக்கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது".
" ரஞ்சன் எழுந்து போய் கதவை திறக்க, மூன்று பேருக்கும் இதில் டிரஸ் இருக்கு பா, ஆனந்த் தான் கொடுத்துட்டு போனரென்று சொல்லிய ஜேம்ஸ், குளிச்சிட்டு வாங்க, மார்னிங் பிரேக் பாஸ்ட் சாப்பிட வெய்ட் பண்ணிட்டு இருங்காங்களென்க, சரி மாமா என்று சொல்லிய ரஞ்சன் கதவை சாத்தி விட்டு, நண்பர்களை எழுப்பி விட்டான்".
" மூவரும் தயாராகி வெளியே வர ஒரு மணி நேரமானது. பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு,பக்கத்தில் இருக்கின்ற ஆதிராவின் வீட்டிற்குள் சென்றனர்".
" அங்கே ஹாலில் எல்லாரும் இருப்பது தெரிந்து, என்னடா பெரிய மீட்டிங் போய்ட்டு இருக்கு போலயென்று ஆது சொல்ல, ம்ம்.. "
" வெட்டியா பேசி உசுர வாங்காமல், நாம சொல்லிட்டு கிளம்பிடலாமென்று ருத்ரன் சொல்ல, நண்பனை முறைத்து பார்த்த ஆது, ஆமாம்".
"நான் தான் ஆசைப்பட்டு பேசுறேன் பாருயென்றவனுக்கு, இருக்கலாம், யாருக்கு தெரியுமென்றான் ரஞ்ஜன்".
" என்ன ஆனந்த், மூன்று பேரையும் வெத்தல பாக்கு வச்சு அழைச்சா தான், வீட்டுக்குள்ள வருவானுங்களா? என சிம்ஹன் தாத்தா கேட்க, இருக்கலாம் மாமா என்றார்".
" டேய் சிங்கம் நம்மை பற்றி தான் பேசிட்டு இருக்கென்று ருத்ரன் உள்ளே செல்ல, மற்ற இருவரும் அவன் பின்னாடியே சென்றவர்கள், அங்கிருந்து சோபாவில் உட்கார,என்னப்பா கிளம்பலாமா என ஆனந்த் கேட்க, ஏன் வேற எதாவது பிளானா என்றான் ருத்ரன்".
" நோ நோ என்றார் ஆனந்த்".
" பின்ன, என்ன கேள்வி இது என்றவன், ராகினிக்கு நினைவு வந்து விட்டது என்க, என்னாஆ என அதிர்ந்தனர்".
"ஆமாம் மாமா.நைட் தான் டாக்டர் போன்ல சொன்னாரு என்ற ரஞ்ஜன், நாங்க போற வழியில் சாப்பிட்டுக்கிறோம்".
" நீங்க சாப்பிட்டு கிளம்புங்களென்று சொல்லி விட்டு, மூவரும் அங்கிருந்து ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றனர்".
" வேகமாகவும், அதே நேரம் நிதானத்தோடும் காரை ஓட்டி வந்த ருத்ரன்,ஹாஸ்பிட்டலின் பார்க்கிங் ஏரியாவிற்குள் நுழைந்து காரை நிறுத்தி விட்டு, வார்டிற்கு செல்ல ரஞ்ஜனுக்கு தான் பட படப்பாக இருந்தது".
" ராகினி இருக்கும் ஃப்ளோருக்கு வந்தவர்கள், அறைக்கதவை திறந்து உள்ளே போய் பார்க்க, அங்கிருந்த ஜன்னலோரமாய் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த ராகினி, கதவு திறந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவளுக்கு,இத்தனை வருடங்களாய் மறைந்திருந்த அழுகை வந்தது".
" வேகமாக தனது அண்ணனிடம் வந்தவள், அண்ணா என கட்டிக்கொண்டு அழ, ரஞ்ஜனுக்கும் அழுகை வந்தது".
"பின்னர் மற்ற இருவரையும் நலம் விசாரித்தவள், அண்ணா உன் கிட்ட ஒன்னு சொல்லணுமென்றாள்".
" ராகினி, முதல்ல உனக்கு உடம்புக்கு எப்படி இருக்குமா, அதை சொல்லலென்று ருத்ரன் கேட்க, நல்லா இருக்கேன் வீராணா என்றாள்"
" ஒற்றை பிள்ளையான ருத்ரனுக்கு ராகினியை ரொம்ப பிடிக்கும். எப்போதும் பள்ளியில் அண்ணா, அண்ணா என அவன் பின்னாடியே தான் இருப்பாள்"
" சில வருடங்களாய் கேட்காத அந்த குரலை கேட்டவனுக்கும் கண்கள் கலங்கியது"
"மீண்டும் அண்ணா நான் ஒன்னு சொல்லணுமென்றாள் ராகினி"
" என்னடா சொல்லு என்க, நம்ப அம்மாவை அந்த பொம்பளை தான் ணா அடித்து கொன்றாள். அதை அப்பா இல்லை இல்லை ச்சை அந்த ஆளும் வேடிக்கை பார்த்தார்ணா".
" நான் அம்மானு கதறி ஓடும் போது, அந்த பொம்பளை குறுக்கே கால் நீட்டிட்டாள். அதில் தடுக்கி தான் மாடியிலிருந்து கீழே விழுந்துட்டேணா என அன்று நடந்ததை சொல்லி ராகினி அழ,கேட்ட மூவருக்கும், கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது".
"தற்செயலாக இடது பக்கம் ஆர்கலி திரும்ப,அங்கே தூண் மேல் சாய்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டவளுக்கு, கடைசியாக அவனை பார்த்த அந்த நாள் நினைவு வந்தது".
"அந்நாளில் அவன் பேசிய பேச்சுக்களின் வலியால், இப்பொழுதும் அவளின் கண்கள் கலங்க, வேறு பக்கமாய் தனது முகத்தை திருப்பிக்கொண்டாள்".
"ஆர்கலியையே பார்த்திருந்தவன்,வேகமாக அவளை நோக்கி வந்தான்".
" ம்கும் என தொண்டையை செருமி தன்னை சரி பண்ணிக்கொண்டவன், என்ன இங்க உட்கார்ந்திருக்க?, பூச்சி எதாவது இருக்க போகுது, எந்திரி என்க…அவள் அமைதியாக இருக்கவும் கீழே குனிந்து அவள் தோளில் கை வைக்க, பட்டென்று அவன் கையை தட்டி விட்டவள் "ஹலோ மிஸ்டர்.ருத்ர வீர சிம்ஹன், என் தோள் மேல கை வைக்கிறதுக்கு எவ்வளவு ரேட் என்பதை,இதுவரை உங்க கிட்ட நான் பேசவே இல்லையே என்க,ஆர்கலியின் வார்த்தையை கேட்டவன், கன்னத்தில் அரை வாங்கியது போல் அங்கிருந்து சென்று விட்டான்".
"இனி தாண்டா இந்த ஆர்கலியோட ஆட்டம் உனக்கு தெரியும் என்றவள், கைகளை ஊன்றி பொறுமையாக எழுந்து,அங்கிருந்து வீட்டை நோக்கி செல்ல, கருப்பாயி அவளை தேடி வருவது தெரிந்தது".
"வா ஆராமா,மணி என்ன ஆகுது?, இன்னும் சாப்பிடாமால் இருக்க?, உனக்கு பசிக்கவில்லையென்றால், வயிற்றில் இருக்கும் என் மருமக புள்ளைங்களையும் பட்னி போடுவது எவ்வகை நியாயம்?
"உன் அண்ணன் வேற என் தொங்கச்சி இல்லாமல் சாப்பிடமாட்டேனு இருக்காரு என கிண்டல் செய்ய…
"ஏண்டி உன் கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன், இங்க வந்து கெக்கே பெக்கேனு இளிச்சிட்டு நிக்கிற என சங்கரின் குரல் கேட்க, வந்துட்டார்யா திருப்பாச்சி அண்ணன்".
" எம்மா பாசமலரு வாத்தா என்க, என்னடி கொழுப்பா?, வாய் இருக்காதென்ற சங்கர், தங்கச்சிமா வாடா கண்ணு சாப்பிடலாமென்க, இதோணா என்று சென்றாள்".
அங்கிருந்த தரையில் சங்கர் உட்கார, அவனுக்கு அருகிலே ஆர்கலியும் உட்கார,எக்கா நீங்களும் வாங்க. நாம தானே பார்த்துக்கலாமென்று மலரை சாப்பிட கூப்பிட, சரி சங்கரு என்றவர், கருப்பாயி, இலையை வச்சி பரிமாறு, நான் அப்பளத்தை பொரிச்சிட்டு வரேனென்று உள்ளே போய்விட்டார்".
"சிறிது நிமிடத்தில் மலரும் வந்து விட, அந்நேரம் ருத்ரனும் சாப்பிட வந்தான்".
" நான் பரிமாறுரேன் நீங்கள் சாப்பிடுங்களென்க, இருக்கட்டும், நானும் கீழவே உட்கார்ந்துக்குறேன் என்றவன், சங்கரின் பக்கத்தில் உட்கார, பின்னர் ஐவரும் தேவையானதை போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்".
ருத்ரனுக்கு இது புது அனுபவமாக இருந்தது. எப்போதும் யாராவது ஒருவர் பரிமாறியே சாப்பிட்டு பழகியவனுக்கு, இன்று வேண்டியதை தானே போட்டு சாப்பிடுவது பிடித்திருந்தது".
"பின்னர் கையை கழுவிக்கொண்டு சங்கரை தேடி வர,அங்கே சங்கர், கருப்பாயி, மலர், ஆர்கலி நால்வரும் வெளியே இருக்கும் வராண்டாவில் உட்கார்ந்திருந்தனர்".
" காலடி சத்தம் கேட்டு சங்கர் திரும்பி பார்க்க,ருத்ரன் வருவது தெரிந்து, ஏதோ பேசனுமென்று சொன்னாரே இந்த தம்பியென்பது நினைவில் வர, எழுந்தவர், வாங்க தம்பியென முன்னே நடக்க, ருத்ரனும் பின்னாடியே சென்றான்".
" வீட்டிற்கு பின்னாடி இருக்கும் அடர்ந்த மரங்களின் ஊடே அங்கங்கே கல்பெஞ்சு இருந்தது. அதில் ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்ட சங்கர், வாங்க தம்பி உட்காருங்கள் என்றார்".
"அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவன் ரொம்ப அழகா இருக்கு இல்லையா என்க,ஆமாம் தம்பி அந்த காலத்து மனுஷன் பார்த்து பார்த்து வச்ச மரம்".
"தேவராஜ் ஐயாவோட அப்பா சிவராஜ் ஐயா நட்ட மரங்கள் தான் இதெல்லாம் என்று சொல்லி விட்டு, ருத்ரனை பார்த்தார்".
" சங்கரின் பார்வையை கண்டவன் மாமா என்க, சொல்லுங்க தம்பி, ஏதோ பேசணும் என்றீங்களே என சங்கர் கேட்க, ஆமாம் மாமா".
" இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம் மாமா. ருத்ரனென்றே சொல்லுங்கள் என்றவனுக்கு, தங்கச்சி புருஷனை மரியாதையோடு கூப்பிட வேண்டியது , எங்களோட கடமைப்பா என்று சொல்லி சிரித்தார்".
" பின்னர் நேரடியாக விஷயத்துக்கு வந்தவன், மாமா நிச்சயமாக என் மேல தவறான எண்ணம் தான் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்".
ஆனால், இதுக்கப்புறம் உங்க தங்கச்சியுடைய வாழ்க்கை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். கடைசி வரைக்கும் அவளையும், குழந்தையும் பார்த்துக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு மாமா".
மைக்கில் அங்கிள் சொன்னாங்க, நீங்களும் அக்காவும் தான், ஆர்கலிக்கும் பாட்டிக்கும் இத்தனை நாள் பாதுகாப்பாக இருந்தீர்கள் என்று, இதை நான் உயிர் இருக்க வரைக்கும் மறக்க மாட்டேன் என்க, ருத்ரனின் வார்த்தையை கேட்டவர், தம்பி, தங்கச்சிமா இந்த வீட்டுக்கு வந்த அன்றையிலிருந்து என் கூட பிறந்த பிறப்பா தான் இந்த நிமிஷம் வரைக்கும் நான் நினைக்கிறேன்".
"தங்கச்சிமாவும் அப்படி தான்.என்னோட தங்கச்சிக்கு நான் செய்ய வேண்டியது கடமை. மைக்கேல் சார் ஆர்கலி பற்றி விசாரிக்கும் போது, எனக்கு அவர் மேல சந்தேகமா இருந்தது.
அதனால் தான் அன்னைக்கு போனில் நான் கடுமையாக பேசினேன்.வாழ வேண்டிய பொண்ணு, இப்படி புள்ளைங்களோடு தனிமரமா நின்றால், நல்லாவா இருக்கும்?.
சொந்த பந்தம் இல்லாதவங்களுக்கு தான் அந்த அருமை தெரியும். கடவுளாக பார்த்து அந்த தங்கச்சி என்ற உறவு எனக்கு கொடுத்திருக்கான்.
"அது வாழ்க்கை நல்லா இருக்கணும் என்ற எண்ணம் எனக்கு இருக்காதா? பா என்க, எந்த ஒரு ரத்த பந்தமும் இல்லாமல் இவர்களுக்குள் எப்படி இப்படி ஒரு பாசம் என்று, ருத்ரன் வியந்து போய் சங்கரை போனான்"
ருத்ரனின் பார்வையை கண்ட சங்கர், என்ன தம்பி இப்படி பாக்குறீங்க என்க, இல்ல மாமா உங்களோட பாசத்தை பார்த்து ஆச்சரியமா இருக்கு எனக்கு. இந்த அளவுக்கு என் மேலயும் பாசம் காட்டுவீங்களா? என கேட்க, கண்டிப்பா".
"தங்கச்சி புருஷன் மேல பாசம் இல்லாம எப்படி இருக்க முடியும். ஆர்கலி மேல எவ்வளவு பாசமோ அந்த அளவுக்கு சொல்ல முடியாது. ஏனென்றால் என் தங்கச்சி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது".
" கூட பிறந்தால் தான் அண்ணன் தங்கச்சி இல்லை, அன்பால் இணைந்தாலும் உறவு தான்".
" நீங்க ரொம்ப படிச்சவங்க. உங்களுக்கு நான் அறிவுரை சொல்லுணுமென்று அவசியம் இல்லை. புருஷன் இல்லாமல் பொண்டாட்டியால்,இந்த உலகத்தில் வாழ்ந்திட முடியும்".
" ஆனால்,பொண்டாட்டி இல்லையென்றால் புருஷனுக்கு வாழ்க்கையே கிடையாது. பார்த்துக்குங்க என்றார்".
இலங்கை களுத்துறை பயணம்:
"நண்பர்கள் மூவரும் தூங்கிக்கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது".
" ரஞ்சன் எழுந்து போய் கதவை திறக்க, மூன்று பேருக்கும் இதில் டிரஸ் இருக்கு பா, ஆனந்த் தான் கொடுத்துட்டு போனரென்று சொல்லிய ஜேம்ஸ், குளிச்சிட்டு வாங்க, மார்னிங் பிரேக் பாஸ்ட் சாப்பிட வெய்ட் பண்ணிட்டு இருங்காங்களென்க, சரி மாமா என்று சொல்லிய ரஞ்சன் கதவை சாத்தி விட்டு, நண்பர்களை எழுப்பி விட்டான்".
" மூவரும் தயாராகி வெளியே வர ஒரு மணி நேரமானது. பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு,பக்கத்தில் இருக்கின்ற ஆதிராவின் வீட்டிற்குள் சென்றனர்".
" அங்கே ஹாலில் எல்லாரும் இருப்பது தெரிந்து, என்னடா பெரிய மீட்டிங் போய்ட்டு இருக்கு போலயென்று ஆது சொல்ல, ம்ம்.. "
" வெட்டியா பேசி உசுர வாங்காமல், நாம சொல்லிட்டு கிளம்பிடலாமென்று ருத்ரன் சொல்ல, நண்பனை முறைத்து பார்த்த ஆது, ஆமாம்".
"நான் தான் ஆசைப்பட்டு பேசுறேன் பாருயென்றவனுக்கு, இருக்கலாம், யாருக்கு தெரியுமென்றான் ரஞ்ஜன்".
" என்ன ஆனந்த், மூன்று பேரையும் வெத்தல பாக்கு வச்சு அழைச்சா தான், வீட்டுக்குள்ள வருவானுங்களா? என சிம்ஹன் தாத்தா கேட்க, இருக்கலாம் மாமா என்றார்".
" டேய் சிங்கம் நம்மை பற்றி தான் பேசிட்டு இருக்கென்று ருத்ரன் உள்ளே செல்ல, மற்ற இருவரும் அவன் பின்னாடியே சென்றவர்கள், அங்கிருந்து சோபாவில் உட்கார,என்னப்பா கிளம்பலாமா என ஆனந்த் கேட்க, ஏன் வேற எதாவது பிளானா என்றான் ருத்ரன்".
" நோ நோ என்றார் ஆனந்த்".
" பின்ன, என்ன கேள்வி இது என்றவன், ராகினிக்கு நினைவு வந்து விட்டது என்க, என்னாஆ என அதிர்ந்தனர்".
"ஆமாம் மாமா.நைட் தான் டாக்டர் போன்ல சொன்னாரு என்ற ரஞ்ஜன், நாங்க போற வழியில் சாப்பிட்டுக்கிறோம்".
" நீங்க சாப்பிட்டு கிளம்புங்களென்று சொல்லி விட்டு, மூவரும் அங்கிருந்து ஹாஸ்பிட்டலை நோக்கி சென்றனர்".
" வேகமாகவும், அதே நேரம் நிதானத்தோடும் காரை ஓட்டி வந்த ருத்ரன்,ஹாஸ்பிட்டலின் பார்க்கிங் ஏரியாவிற்குள் நுழைந்து காரை நிறுத்தி விட்டு, வார்டிற்கு செல்ல ரஞ்ஜனுக்கு தான் பட படப்பாக இருந்தது".
" ராகினி இருக்கும் ஃப்ளோருக்கு வந்தவர்கள், அறைக்கதவை திறந்து உள்ளே போய் பார்க்க, அங்கிருந்த ஜன்னலோரமாய் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த ராகினி, கதவு திறந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவளுக்கு,இத்தனை வருடங்களாய் மறைந்திருந்த அழுகை வந்தது".
" வேகமாக தனது அண்ணனிடம் வந்தவள், அண்ணா என கட்டிக்கொண்டு அழ, ரஞ்ஜனுக்கும் அழுகை வந்தது".
"பின்னர் மற்ற இருவரையும் நலம் விசாரித்தவள், அண்ணா உன் கிட்ட ஒன்னு சொல்லணுமென்றாள்".
" ராகினி, முதல்ல உனக்கு உடம்புக்கு எப்படி இருக்குமா, அதை சொல்லலென்று ருத்ரன் கேட்க, நல்லா இருக்கேன் வீராணா என்றாள்"
" ஒற்றை பிள்ளையான ருத்ரனுக்கு ராகினியை ரொம்ப பிடிக்கும். எப்போதும் பள்ளியில் அண்ணா, அண்ணா என அவன் பின்னாடியே தான் இருப்பாள்"
" சில வருடங்களாய் கேட்காத அந்த குரலை கேட்டவனுக்கும் கண்கள் கலங்கியது"
"மீண்டும் அண்ணா நான் ஒன்னு சொல்லணுமென்றாள் ராகினி"
" என்னடா சொல்லு என்க, நம்ப அம்மாவை அந்த பொம்பளை தான் ணா அடித்து கொன்றாள். அதை அப்பா இல்லை இல்லை ச்சை அந்த ஆளும் வேடிக்கை பார்த்தார்ணா".
" நான் அம்மானு கதறி ஓடும் போது, அந்த பொம்பளை குறுக்கே கால் நீட்டிட்டாள். அதில் தடுக்கி தான் மாடியிலிருந்து கீழே விழுந்துட்டேணா என அன்று நடந்ததை சொல்லி ராகினி அழ,கேட்ட மூவருக்கும், கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது".