• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
429
திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:

" வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வசு, யோசனையில் இருக்கும் தனது தாயின் அருகில் உட்கார்ந்து கொண்டு, அம்மா, அம்மா என்க.. ".

" சைலஜா பாட்டியிடம் எந்த எதிர்வினையுமில்லை. பின்னர் அவரின் தோளை தட்டி, அம்மா என வேகமாக கூப்பிட, அதில் நிகழ்விற்கு வந்தவர், பக்கத்தில் இருந்த மகளை பார்த்து, வந்துட்டியா வசு".

" இரு அம்மா டீ கொண்டு வரேனென்க, அதுலாம் ஒன்னும் வேண்டாமா. அப்புறம் ஒரு விஷயம், எனக்கு டிரான்ஸ்பர் ஆகிட்டு என்க".

" அப்படியா?, எந்த ஊருக்கென்று சைலஜா பாட்டி கேட்க, பொள்ளாச்சிக்கு மா".

" வர மண்டே ஜாயின் பண்ணனும்மா".

"ஓஓஓ.... உன் அண்ணன் வேற இல்லையே வசு, நீ மட்டும் எப்படி தனியாக போவாய்?, ஒன்னு பண்ணலாம், நாம போகலாம், அங்க வீடு பார்த்து விட்டு, பிறகு அப்பாவும், அண்ணாவும் வரட்டுமென சைலஜா பாட்டி சொல்ல,இல்லம்மா".

" நான் மட்டும் தான் போறேன். அங்க கெஸ்ட்ஹவுஸ் இருக்கு. அண்ணன் வந்த பிறகே நீங்க அனுப்புங்க".

" அதும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் பென்டிங் வொர்க் இருக்கு, அதை முடிச்சிட்டு தான் நான் கிளம்பணும்".

" அதற்குள் அண்ணா வந்துடும்மா என வசு சொல்ல, சரி மா. உனக்கு எது சரியா வருதோ அதைப்போலவே பண்ணுமா என்றவர், மீராக்கா, வசுக்கு காஃபி கொடுக்கலையா என்க, இதோ வந்துட்டேனென்று, வசுக்கு காஃபியை கொடுத்தவர், இதை நீ குடி என சைலஜா பாட்டியிடம் நீட்ட, நன்றிக்கா என்றார்".

" காஃபியை குடித்து முடித்த வசு,சரிமா, எனது ரூமுக்கு போகிறேனென்று சொல்லி செல்ல,சைலஜா பாட்டியின் அருகில் வந்த உட்கார்ந்த மீரா, நீ எதை நினைத்து வருத்தப்படுகிறாய் என்று எனக்கு நல்லா தெரியுது".

"வசுவோட வாழ்க்கை என்னமோ, இந்த டிரான்ஸ்பர் மூலயமாய் சரியாகிடுமென்று எனக்கு தோணுது சைலு".

"நமக்கு மட்டும் தெரிந்த விஷயம் நம்ம வீட்ல இருக்கும் வேலைக்காரங்களுக்கு தெரியாது. நீ இப்படி இருந்தால் அவங்களாம் என்ன நினைப்பாங்கள் சொல்லு? என்க".

"அக்கா சத்தியமா என்னால தாங்க முடியலைக்கா.ஒத்த புள்ளைய பெற்று, அதுக்கு ஒரு நல்லது கெட்டது செய்து பார்க்க முடியாத பாவியா ஆகிட்டேனே என்று அழுதார்".

"நீயே நம்ம வீட்ல இருக்கும் வேலையாட்களுக்கெல்லாம், நம்ம பொண்ணோட வாழ்க்கை பற்றி காட்டி கொடுத்துருவ போல?,இத்தனை வருஷம் எப்படி நம்ம கட்டி காப்பாத்திணோம்,அதை நினைத்து பாருமா".

" மீரா பாட்டி சொன்னதை கேட்ட சைலஜா பாட்டி, உனக்கு தெரியாது ஒன்னும் இல்லக்கா.இத்தனை வருஷமா என் மனசுக்குள்ளிருக்கும் வேதனையை உங்ககிட்ட தான் சொல்லி அழுதுகிட்டு இருக்கேன்".

"இவர் ஒரு வார்த்தை குழந்தை உயிரோட இருக்குனு சொல்லியிருந்தால்,எப்படியும் அந்த பையனை தேடி பிடித்து, கைகால்ல விழுந்தாலாவது,கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்.அவளும் ஒரு குடும்பமாக வாழ்ந்திருப்பாள்".

" ஆனால் இவரு பண்ணிய வேலையால், ஒரு சன்னியாசி போல இத்தனை வருஷமா வாழுறாளேக்கா?, பெத்த வயிறு எப்படி இருக்கும் சொல்லுங்க?, கடல்ல அடிச்சிக்கிட்டு போனவனுக்கு துடுப்பு கிடைச்ச போல, அம்மு கிடைச்சாள்".

" வசுவும் அந்த இறுக்கத்திலிருந்து வெளியே வந்து, சிரிக்க ஆரம்பிச்சி நல்லா போனது.அதுவும் அந்த கடவுளுக்கு பொறுக்கலை".

" ருத்ரன் மூலயமாய் மீண்டும் பிரிச்சிட்டான்.புருஷன் பொண்டாட்டி பிரச்சினையென்றாலும், எல்லாவற்றிலும் பாதிப்பு நம்ம பொண்ணுக்கு தான் கா என்று சொல்லி கதறி அழுதார் சைலஜா பாட்டி".

" அழாத சைலு,எல்லாம் நல்லதுக்கேயென்று நினைப்போம். வசு கூட நான் போறேன். நீ இங்க இருந்து பார்த்துக்கோ என மீரா சொல்ல, அக்கா நான் மனசுல நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க என்க, நீ பெற்றவள், நான் தூக்கி வளர்த்தவள் மா".

" நம்ப புள்ளை வாழ்க்கை சரியாகும்னு எனக்கு ஏதோ மனசுல படுது.எல்லாம் அந்த சோட்டானிக்கரை பகவதி அம்மா அருள் தான் என்ற மீரா பாட்டி, நாளைக்கு வெள்ளிக்கிழமை. ரெண்டு பேரும் கோயிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாமா என்க, போலாம்கா என்றார் சைலஜா பாட்டி".

" அந்த நேரம் உள்ளே வந்த சுந்தரபாண்டியன் தாத்தா,அப்படி என்ன அக்கா தங்கை இருவரும் பிளான் போடுறீங்க? என கேட்டுக் கொண்டு, அங்கிருந்து சோபாவில் வந்து உட்கார்ந்தவர், மீரா எனக்கு ஒரு டீ எடுத்துட்டு வாம்மா என்க, இதோ அண்ணா என்றபடியே உள்ளே சென்றவர், சிறிது நிமிடத்தில் டீயோடு வந்தவர், இந்தாங்கணா என்க.. ".

" கொடுமா என வாங்கி குடித்தவர்,ரொம்ப தலைவலி மா. இப்போதான் பரவாயில்லை என்றவர், மனைவியின் முகத்தை பார்க்க, அதில் அழுத தடம் இருந்தது".

" பெருமூச்சி விட்டவர், சைலு என்க, நாளைக்கு நானும் அக்காவும், சோட்டாணிக்கரைக்கு போய்ட்டு வரோம்க, அப்புறம் வசுக்கு பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் ஆகிருக்கு".

" மண்டே ஜாயின் பண்ணனுமாம் என்க, ஓஓஓ என்றவர், மைக்கேல் வேற ஊர்ல இல்லை. அம்முவை தேடி போனவன் கிட்ட இருந்து ஒரு ஃபோனும் இதுவரை வரவில்லை".

" வசு மட்டும் எப்படி தனியா என சுந்தரபாண்டியன் யோசனையாக, அண்ணா, நான் போறேன் என மீரா சொல்ல, சரி மா".

" அப்போ, மைக்கேல் வந்ததும் நான் அங்க அனுப்பி வைக்கிறேனென்றவர், ஏன் நானெல்லாம் கோயிலுக்கு வரக்கூடாதா என கேட்க, வாங்களேன். உங்களை யாரு வேண்டாமென்றாங்க என சைலஜா பாட்டி சொல்ல,சரிங்க மேடமென்றார் சுந்தரபாண்டியன்".

சதூர்வேதமங்கலம்:

" மண்டபத்தில் பாடல்கள் ஒலிக்க, மேடையில் எல்லாம் சரியா இருக்காயென பெரியாச்சி அம்மா ஒரு முறை பார்த்தவர், சங்கரு, மாலை இன்னும் வரலைப்பா என்க..".

" நம்ப பாலு கிட்ட சொல்லியிருக்கேன் கா. காலையிலே வாங்கிக்கலாம்னு சொன்னாரு.அதான் முத்துவை வாங்க அனுப்பியிருக்கேனென்று சங்கர் சொல்லும் போதே, மாலை இருக்கும் கவரோடு, முத்துவும் அங்கு வந்து சேர்ந்தான்".

" அண்ணா மாலை என சொல்ல, அக்காட்ட குடுடா என்க, பெரியாச்சியிடம் சென்றவன், இந்தாக்கா என கவரை நீட்டினான்"

" இரண்டு கையாலையும் வாங்கியவர், கவரில் போட்டிருந்த முடிச்சை அவிழ்த்து, அதில் இருந்த மாலைகளை பொறுமையாக எடுத்தவர், அங்கிருந்த தாம்பாளத்தில் வைத்து விட்டு, இப்போ எல்லாம் சரி".

" இனி ஆர்கலி வந்த பின்ன, நல்ல நேரம் பார்த்து வளையலை போட்டுற வேண்டியது தான் என்றவர், இன்னும் உன் பொண்டாட்டி என்னடா பண்ணுறாள்?, எல்லாரும் வந்தாச்சி".

" இவளை காணுமேயென்க, தங்கச்சியை கூப்பிட தான் போனாள்கா. இரு, நான் போன் போட்டு பாக்குறேனென்று, பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து, மனைவியின் நம்பருக்கு கால் பண்ண, அட்டென் பண்ணிய கருப்பாயி, இதோ வந்துட்டே இருக்கோம் மாமா".

" நம்ப சின்னா வீடு கிட்ட வந்துட்டோமென்று சொல்லி போனை வைக்க, அக்கா வந்துட்டு இருக்காங்கலாம் என்று சொல்ல, சரி சங்கரு".

" நல்லநேரம் காலை ஒன்பதரைக்கு தான் ஆரம்பிக்குது, இன்னும் பத்து நிமிஷம் இருக்குப்பா என்றவர், அங்கிருந்த பாட்டியின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டார்".

" ஊருக்கு பொதுவான சின்ன மண்டபம் அது. யார் வீட்டில் இதைப்போல சின்ன விஷேசமென்றாலும், பஞ்சாயத்துகாரரிடம் சொல்லி விட்டு இங்கே நடத்திக்கொள்ளலாம்".

" அதற்கு வாடகை 1000 ரூபாய் என பேசி ஒரு மனதாக முடிவெடுத்திருந்தார்கள்".

" தாராளமாக நூறு பேருக்கு மேல் உட்காரும் அளவிற்கு, உள்ளே ஹாலில் இடம் இருந்தது".

" இன்று ஆர்கலிக்கு வளையல்காப்பு என்பதால், ஊரில் உள்ள அனைவரையுமே, முதல் நாளே சங்கரும், கருப்பாயியும் வீடு தேடி போய் பங்ஷனிற்கு வரச்சொல்லி அழைத்திருந்தார்கள்".

" ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்களுக்கும் வசதியாக போக, எல்லாருமே வந்திருந்தனர்".

" மாமா, நான் ஆராமாவையும், பாட்டியும் கூப்பிட்டு வரேன், நீ புள்ளைங்களோடு மண்டபத்திற்கு போய், வரவங்களை பாரு என்க, சரி புள்ள".

" ஆட்டோ சொல்லியிருக்கேன், பார்த்து வந்துடுங்க என்றவாறு, சங்கர் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, கோயில் அருகே இருக்கும் பொது மண்டபத்திற்கு சென்று விட்டார்".

" வளையல்காப்புக்கு கல்யாண புடவை தான் கட்டணும். ஆனால் அதற்கு சாத்தியமில்லை என்பதால், ஏற்கெனவே ஒரு முறை கட்டிய பட்டு புடவையை கட்ட சொல்லி, ஆர்கலியின் நீண்ட கூந்தலை பின்னி, பூவைக்கொண்டு தனக்கு தெரிந்த வரையில் கருப்பாயி அழகு படுத்தி விட்டு, முன்னே வந்து பார்க்க,நல்லா இருக்க ஆராமா".

" சரி சாமிய கும்பிட்டுட்டு வாங்க போகலாம். உன் அண்ணன் கிட்ட, நான் வேற சின்னா வீட்டு கிட்ட வந்துட்டேனு சொல்லிட்டேனென்றவர், சிலீண்டரை ஆப் பண்ணி விட்டு, தோட்டத்து கதவை தாழ்ப்பாள் போட, பின்னர் மூவரும் வெளியே வந்தனர்".

" வீட்டு சாவி கண்ணு என பாட்டி நீட்ட, நீங்க ரெண்டு பேரும் போய்,ஆட்டோவில் உட்காருங்கள் ஆச்சி. நான் பூட்டிட்டு வரேனென்று சொல்ல, இருவரும் ஆட்டோவில் உட்கார்ந்தனர்".

" சாவியை கையில் இருந்த பர்சில் போட்டுக்கொண்டு, வெளியே இருக்கும் இரும்பு கதவை உள் பக்கமாய் கையை விட்டு தாழிட்டு, ஆட்டோவில் ஏறிய கருப்பாயி, அண்ணா போகலாமென்றார்".

" ஏத்தா, உன் புருசன் இதோட அம்பது போன் அடிச்சிட்டான், இன்னுமாடா வரீங்கணு என்க, அப்படியாணா என சிரித்தவர்,கிளம்ப வேண்டாமாணா?, சாதாரண பொம்பளையா?, சட்டு புட்டு ரெடியாக, வயித்து புள்ளைகாரி, முன்ன பின்ன ஆகும் தான் என்க, இது உன் புருசனுக்கு தெரியலையேத்தா என்றவாறு ஆட்டோவை ஓட்டிச்சென்றார் ".

" ஐந்து நிமிடத்தில் அந்த மண்டபத்தின் வாசலில் வந்து ஆட்டோ நிற்க, முதலில் இறங்கிய கருப்பாயி, ஆராமா பார்த்து இறங்கென்க, ஆர்கலியும் தனது பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு கீழே இறங்கினாள்".

" நல்ல நேரம் ஆரம்பிச்சிட்டுடி என்றவாறு சங்கர் அங்கு வர, வந்துட்டோம் மாமா. இங்கு எல்லாம் தயார் தானே என்க, பேச்சை குறைடி".

" தங்கச்சிய கூப்பிட்டு உள்ளே வா என்று சங்கர் முன்னே நடந்தான்".

" ம்கும் என முறுக்கி காட்டிய கருப்பாயி, படியில பார்த்து ஏறிவா ஆராமா என்றபடியே நடக்க, சரிங்க அண்ணி என்றவள், இரண்டு படியில் ஏறி மண்டபத்தின் உள்ளே வலது கால் வைத்து சில அடி நடந்தவள், எதிரில் இருப்பவர்களை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
429
"அதிர்ந்து நிற்பவளின் எதிரில் வந்து நின்ற சைலஜா பாட்டி, அம்முயென அவளின் இடது பக்க தோளை தட்ட, பாட்டி என்றவாறு அவரை அணைத்துக் கொண்டாள்".

" அம்மு,முதல்ல பங்க்ஷன் நல்லபடியா முடியட்டும் டா.மத்ததெல்லாம் பிறகு பேசிக்கலாம். வேற எதுவும் இப்போதைக்கு சொல்ல வேணாம் என்று சொல்லியவர், வாடா என அவள் கையை பிடித்து அழைத்திட்டு போய், அங்கிருந்து இன்னொரு சேரலில் உட்கார வைத்தார்".

" மறந்தும் தனது அருகில் உட்கார்ந்து இருப்பவனை பார்க்கவில்லை. மண்டபத்தின் உள்ளே அவள் அடி அடித்து வைத்ததிலிருந்து ,இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்".

"ஆரம்பித்து வைங்கமா என்று சைலஜா பாட்டியிடம் சொல்ல, அக்கா நீங்க பண்ணுங்க என்று கிரிஜா பாட்டியிடம் சொன்னார்".

"இரண்டு பேருமே சேர்ந்து பண்ணலாம் தப்பு இல்லை என்று பெரியாச்சி சொல்ல, பின்னர் அங்கிருந்த மாலையை எடுத்தவர், வீரா, இந்தா என்க, பாட்டியிடமிருந்து வாங்கிக்கொண்டான்".

"அம்மாடி ஆர்கலி இந்தாமாயென்க, ஆர்கலியின் உள்ளுக்குள், எரிமலை தான் வெடித்துக் கொண்டிருந்தது".

"அவள் அமைதியாக இருப்பதை கண்டு, தங்கச்சிமாயென சங்கர் கூப்பிட, கண்ணை மூடி திறந்தவள், தலையசைத்து வாங்கி கொண்டாள்".

"வீரா பேத்தி கழுத்தில் போட்டுவிடுயென்க, முகம் கொள்ளாத புன்னகையோடு, தன்னருகில் இருப்பவளின் கழுத்தில் மாலையை போட்டு விட்டான்".

"ஆர்கலியென்க, சிறிதும் விருப்பமின்றி, ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல், ருத்ரனின் கழுத்தில் மாலையை போட்டாள்".

"பின்னர் சந்தனத்தை எடுத்து இரண்டு பேரின் கைகளிலும்,கன்னத்திலும் பூசி விட்டனர். பின்பு குங்குமத்தை எடுத்து,நெற்றியில் பொட்டை வைத்து விட்டு, பெரிய தாம்பாளத்தில் இருந்த தங்க வளையலை, ஆளுக்கொரு கையில் அக்கா தங்கை போட்டு விட்டு, தட்டில் இருந்த ஒன்பது விதமான சாதத்திலும் ,கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து இருவருக்கும் ஊட்டி விட்டு, அங்கிருந்த மஞ்சளும், பூக்களும் கலந்த அரிசியை அள்ளி, இருவரையும் ஒன்றாக ஆசீர்வாதம் செய்தனர்".

"ஒரு முறையாவது தன்னை திரும்பி பார்ப்பாளென்று ருத்ரனும் காத்திருக்க, பங்க்ஷன் முடிந்து வீட்டிற்கு வரும் வரை, அவன் ஒருவன் அங்கு இருப்பதை ஆர்கலி கண்டு கொள்ளவே இல்லை".

" வந்தவர்கள் அனைவருக்கும் சிறு அன்பளிப்பை கொடுத்து அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்த சங்கர், அங்கிருந்தவர்களை பார்த்து விட்டு ஆர்கலியை தேட,அவள் அறைக்கதவு சாத்தியிருந்தது".

"ஆரா கண்ணு, ஆரா கண்ணுயென பாட்டி கதவை தட்டினார். உடனே கதவை திறந்தவள், எதுவும் பேசாமல், யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அமைதியாக நின்றாள்".

" எல்லாரும் வந்துருக்காங்க. இங்கு உட்கார்ந்து பேச இடமும் இல்லை, அதற்கான வசதியும் இல்லை. நாம பெரிய வீட்டிற்கு போகலாமென்றார்".

" ஊரில் இருந்த சிலரோ, ஆத்தாடி பெரிய இடத்து பொண்ணு போல, இத்தனை நாள் எவ்வளவு சாதாரணமா நம்ப கூடலாம் பழகியிருக்கு என பேசிக்கொண்டனர்".

"பாட்டி என சைலஜாவிடம் சென்றவள், சொல்லாமல் வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்களென்க, வேண்டாம் டா அம்மு."நீ நல்லா இருக்கியே அது போதுமென்று கண்கலங்கினார்".

"இது என்னோட அக்கா, கிரிஜா வீர சிம்ஹன்.அதாவது உன் புருஷனோட அப்பாவை பெற்றவங்களென்க, ம்கும், புருஷனா?.

"எனக்கு ஏது பாட்டி புருஷன்? என்றாள்".

அம்மு, ஆர்கலி என எல்லாரும் பதற, உண்மைய தானே சொல்லுறேன். எனக்கு ஏது புருஷன்?.

"நீங்களாம் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க?, சரி அதை விடுங்க. மைக்கேல் மாமா, வசுந்தரா மேடம், சுந்தரபாண்டியன் தாத்தா நல்லா இருக்காங்களா? என்க, சைலஜா பாட்டி எதுவும் சொல்லாமல் கண் கலங்கினார்".

"ஆர்கலி என ருத்திரன் கூப்பிட, தனது இடது கையை நீட்டியவள், பேச வேண்டாமென்று சைகையில் சொன்னாள்".

"என்னை மன்னிச்சிடுடி. உண்மை தெரியாமல் உன்னை தப்பா பேசிட்டேனென்று சொல்லியவன், அவளருகில் வந்து, கையை பிடிக்க, அவனிடமிருந்து கையை உதறி விட்டு, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தவள், மரியாதையா எட்ட போய்டு என்றாள்".

"பரவாயில்லை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் அறைந்து கொள். ஆனால், தயவு செய்து என்னை மன்னிச்சிடு என்று சொல்லி, மீண்டும் அவள் கையைப் பிடிக்க ,வெட்கமா இல்லையா உனக்கு?.

"எதுக்கு இப்படி என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கிறாய் என்றாள். எல்லாம் நம்ம வாழ்க்கைக்காகவும், குழந்தைக்காக தான் என ருத்ரன் சொல்ல, வாழ்க்கையா?ஹாஹாஹா என சிரித்தவள்,இந்த குழந்தைக்கும் உனக்கும் என்ன சம்பந்தமென்று கேட்டாள்?".

" குழந்தையோட அப்பன் என்ற உரிமை தானென்றான்.அப்பாவா?, நீயா?,அப்படி என்று யாருடா உனக்கு சொன்னா என்க, ஏய் என்று அவளின் கழுத்தை பிடித்து நெரித்தவன், இன்னொரு வார்த்தை என் குழந்தையோட பிறப்பை பற்றி தப்பா பேசின, வெட்டிப் போட்டிடுவேன் டி என்றான்".

"உன்னோட குழந்தைகள்?, என்ன மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன், மண்டை எதாவது குழம்பிட்டா?, ஆமாம் நீங்க சொல்லுறதுக்கு எதாவது சாட்சி இருக்கா?.

நான் தான் பணத்துக்காக யாரு கூட வேணாலும் வாழ்ந்துருப்பேன். அது இல்லாம நான் ஒரு பிச்சைக்காரி. அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள்.

என் வயிற்று பிள்ளைய உன்னோட குழந்தையென்று சொன்னால் உன் கௌரவம் என்ன ஆவது?,உன் ஸ்டேட்டஸ் என்ன ஆவது?.

" என் வயித்துல இருக்கும் குழந்தையை போய் உன்னோட குழந்தையென்று சொல்றியே, உன்னை நான் இன்ஷியல் அப்பனா இருக்க சொல்லி கூப்பிடவில்லையே?, என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள்".

"இப்பொழுது தான் மற்றவர்களுக்கும், ருத்ரன் அவளிடம் என்ன பேசி இருக்கிறான் என்பது புரிந்தது".

"ஏய்,உண்மை தெரியாமல் அன்னைக்கு உன்கிட்ட பேசினது என் தப்பு தான். என்னை மன்னிச்சிடு. உன் கால்ல வேணாலும் விழுறேன் டி.நீ இல்லாம சத்தியமா என்னால வாழ முடியாது".

"இத்தனை மாதமும் நரக வேதனையா இருந்தது தெரியுமா என்க, அதற்கு கைதட்டி சிரித்தவள் இதை நான் நம்பணுமா மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன்".

" கோடியில் புரளும் ஆளு நீங்க. நான் ஒரு சாதாரண பொண்ணு. என்னை நினைச்சிட்டு நீங்க வாழுறீங்களா?,அப்படி ஒன்னும் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லையே, எந்த கொடுக்கல் வாங்களும் இல்லையே?.

"பிறகு எப்படி? என்று, தனது கைகளை கட்டிக் கொண்டு ஆர்கலி கேட்க, இந்த வயித்துல இருக்கும் குழந்தையை கேளுடி?,அதுங்க சொல்லும். உனக்கும் எனக்கும் என்ன உறவென்று சொன்னான்.

" ஹலோ...இந்த குழந்தைக்கு நீ அப்பன் இல்லாத போது, பின்ன உனக்கும் எனக்கு என்ன சம்பந்தம் இருக்கு என்று மீண்டும் ஆர்கலி கேட்க ,அடிச்சு கொன்னுடுவேன் டி".

"இன்னொரு முறை என்னை கோவமா பேசுறதாக நினைத்து, உன் நடத்தையை பற்றி நீயே தவறா பேசாதே. அது நல்லதுக்கு இல்லை என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல..".

"அவன் அருகில் வந்து சிம்ஹன் தாத்தா, ருத்ரா என்றார். தாத்தா என்று திரும்பி பார்க்க, பேரனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவர்,உன்னை வளர்த்ததை நினைத்தால், எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு".

"அப்படியே உன் அம்மாவோட சாக்கடை புத்தி தான் உனக்கு இருக்கு. என் கண்ணு முன்னாடி நிக்காதே, போய் தொலை என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்றார்"

"ஆரா கண்ணுயென அவளிடம் வந்த பாட்டி,ஒரு பொண்ணு தனியா வாழுறது சாதாரண விஷயம் இல்லைடா. அதும் இந்த காலத்துல சொல்லவே வேண்டாம்"

" உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு. நாளைக்கு உன் குழந்தைகள் சமூகத்திற்கு வந்த பிறகு, அவங்களுக்கு அப்பா யாருன்னு கை காட்டணும்".

"இதெல்லாம் யோசித்து நல்ல முடிவாக எடு.உன்னை போய் அந்த பையன் கூட வாழனும்னு சொல்லவே இல்லையே என்க,எப்படி பாட்டி என்னால முடியும் சொல்லுங்க?.

" என் பையன் உன் கூட எத்தனை நாள் இருந்தான், அத்தனை நாளையும் கணக்கு பண்ணி சொல், பணம் கொடுக்கிறேன். என் பையனை விட்டு போய்டு".

" இளம் வயசு, தேவைகள் அதிகம் இருக்கும்.பணத்துக்காக ஒவ்வொரு இரவும் எத்தனை பேர் உன் வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்கனு இவரோட அம்மா கேட்டாங்க பாட்டி.

அதற்கு ஈடு செய்வது போல, இந்த மனுஷனென்று, சொல்ல முடியாமல் கதறி அழுதாள்.

சோபாவில் உட்கார்ந்திருந்த கிரிஜா பாட்டி, எழுந்து தனது பேரனின் அருகில் வந்தவர், உன்னை இப்படியா வளர்த்தேனென்று அவர் பங்கிற்கும் அறைய, சங்கர் தான் வந்து தடுத்தார்.

தன்னை ஆசுவாசப்படுத்தியவள்,
அதான் அவங்க மாமா பொண்ணை கட்டிக்க போறேன்னு சொல்லி டைவர்ஸ் பத்திரத்துல கையெழுத்து போட்டு இருந்தாங்களே, பிறகு இப்ப என்ன என்னை தேடி வந்திருக்காங்க?
என்றாள்.

ஆர்கலி சொன்னதை கேட்டவன்,என்னடி புதுக்கதை சொல்லுற என்று ருத்ரன் அவள் கன்னத்தை பிடித்து கேட்க, எல்லாம் பழைய கதையை தாண்டா சொல்லுறேன் என்று சொன்னாள்".

" என்னாஆஆ டா வா என அதிர்ந்து பார்க்க, உன்ன தாண்டா சொல்றேன் என்றாள். என்னடி வாய் நீளுது என்க,உனக்கு என்னடா மரியாதை. சொல்லுடா உனக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்கு?.

"உன் இஷ்டத்துக்கு ஊருக்கு வந்த,உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணின. உன் இஷ்டத்துக்கு என்று சொல்ல வந்தவள் வார்த்தையை மென்னு முழுங்க, ம்ம் என் இஷ்டத்துக்கு என்று அவள் வயிற்றில் இடிப்பது போல நின்று கேட்டான்.

இருவரையும் பார்த்த வீட்டினர் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டனர். அந்த பெரிய வீட்டில் இப்பொழுது அவர்கள் இருவர் மட்டும் தான் இருந்தனர்.

அவளையே ரசனையோடு பார்த்தவன், ஆமா என் இஷ்டத்துக்கு தான் உன்ன கல்யாணம் பண்ணினேன்.என் இஷ்டத்துக்கு தான் உன்னை இப்படி பிடித்தேனென்று, அவள் தோள் பட்டையை இறுக்கினான்".

"என் இஷ்டத்துக்கு தான் உன்ன கட்டி பிடிச்சேன்.என் இஷ்டத்துக்கு தான் உனக்கு முத்தம் கொடுத்தேன் என்று சொல்லிக்கொண்டே,அடுத்த அவளை பேசவிடாமல் அவள் வாயை தனது முரட்டு உதடால் அடைத்தான்".

"அவனிடமிருந்து திமிறி கொண்டிருந்தவளின் கையை, வளைத்து பிடித்தவன்,இன்னொரு கையால் அவளை தூக்கிக்கொண்டு, அங்கிருந்து அறைக்குள் சென்று கதவை தாழிட்டவன், பொறுமையாக கட்டிலில் இறக்கி விட்டான்".

ஆர்கலி எங்கே..?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top