• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
425
சதூர்வேதமங்கலம்:

"மாமா வர மார்கழி பொறந்தால் ஆராக்கு ஒன்பது மாசம் ஆரம்பமாகுது.அதில் இருந்து அம்மாவாசை நாளை கணக்கு பண்ணி தான் வளையல்காப்பு வைக்கணுமென்று கணவனுக்கு உணவை பரிமாறிக்கொண்டே கருப்பாயி சொல்ல,ஹம் சரி புள்ள".

"நீ நாள் பார்த்து சொல்லு.
அப்படியே நம்ப பெரியாச்சி அக்கா கிட்ட என்ன செய்முறை வழக்கம்ணு நல்லா கேட்டு வை".

"என் தங்கச்சிக்கு எந்த ஒரு குறை இல்லாமல் பண்ணனுமென்றார்”.


"ஆரா கண்ணு ,உன் அண்ணன் அவனால முடியுறதை செய்யுறான். அதை சந்தோஷமா ஏற்றுக்க கண்ணு".

"வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு,கையில எதாவது பொருளை குடுத்து அனுப்புறது தான் இப்போ வழக்கமா இருக்கு".

"எப்படியும், இந்த ஊர்ல இருக்க எல்லாரையும் கூப்பிடணும் கண்ணு என்க,அதற்கு ஆர்கலியும் சரிங்க பாட்டி".

"ஆனால் என்ன வாங்கணுமென்று தெரியலையே என ஆர்கலி சொல்ல, நாளைக்கு நம்ப எதிர் வீட்டில் இருக்கும் பெரியாச்சி பொண்ணு கிட்ட கேட்டுக்கலாம்,அவங்களுக்கு இந்த ஊர் வழக்கம் தெரியுமே என்றார்".

"சரிங்க பாட்டி,நீங்க கேட்டு வச்சிடுங்க, நாமளும் அண்ணனை கௌரவபடுத்திடலாமென்றவள்,ம்ம் நீங்கள் டிவி பார்த்தது போதும் ,எந்திரிச்சி போய் படுங்களென்றவாறு தனது அறைக்குள் சென்றாள்".

"வழக்கம் போல இரவு விளக்கை மட்டும் ரூமில் ஆன் பண்ணி விட்டு,டியூப்லைட்டை நிறுத்தியவள் ஜன்னலை திறந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தவள் எல்லாரும் இருந்தும், இப்படி யாரும் இல்லாத அனைதையாக உங்களை வயிற்றில் சுமக்குறேனே".

"நீங்கள் வளர்ந்த பிறகு அப்பாவை பற்றி கேட்டால்?உங்களுக்கு நான் என்ன சொல்லுவேனென்று சத்தமின்றி அழுதாள்".

"நான் தான் பாவப்பட்ட பிறவியென்றால், நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்?போயும் போயும் இந்த பரதேசி வயிற்றில் உருவாகியிருக்கீங்களே?, என்றவள்,ஆனால் ஒன்று செல்லங்களாஉங்களை தப்பான வழியில் இந்த பாவி நான் சுமக்கலை, இந்த உண்மை உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்".

கண்டவங்களுக்கு என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஆனால் வளர்ந்த பின்னர்,நீங்களே உங்கள் பிறப்பை தவறாக நினைச்சிட்டீங்களென்றால்,அன்று தான் உங்க அம்மா, இந்த உலகத்தில் இருக்கும் கடைசி நாளென்று சொல்லி ,சத்தமின்றி கதறி அழ, அவள் நிலை வயிற்றில் உள்ள குழந்தைகள் உணர்ந்தார்கள் போல,உடனே இருவரும் தங்களது காலால் உதைத்தனர்.

"அழுது கொண்டிருந்தவள், குழந்தைகளின் அசைவில் பாட்டி சொன்ன தாயை போல பிள்ளைகள் நினைவு வர,இல்லை, இல்லை".

"நான் ஏன் அழணும்? என தனது கண்ணை துடைத்தவள்,ஒன்னும் இல்லை செல்லங்களா என வயிற்றை தடவி கொடுத்தவள்,சிறிது நேரம் குழந்தைகளிடம் தைரியமான வார்த்தைகளை பேசி விட்டு, தரையிலே கையை மடக்கி அதன் மேல் தலை வைத்து படுத்து விட்டாள்".

"கொக்கரக்கோ என சேவல் கூவும் சத்தம் கேட்டு எழுந்த பாட்டி,மஉன் பக்க வாசல் கதவை திறந்து தண்ணீர் தெளித்து கூட்டி விட்டு வீட்டிற்குள் வர, ஆர்கலியும் தூங்கி எழுந்து வெளியே வந்தாள்".

" பின்னர் அவரவர் வேலையை செய்து முடித்து,பாட்டியிடம் சொல்லிக்கொண்டு ஆர்கலி ஸ்கூலுக்கு சென்று விட, சிலீண்டரை நிறுத்தி விட்டு,வீட்டை பூட்டிக்கொண்டு, எதிரில் இருக்கும் வீட்டின் கதவை திறந்து உள்ளே போனவர்,அம்மாடி பெரியாச்சி என்று கூப்பிட்டார்".

" பாட்டியின் குரலை கேட்ட பெரியாச்சி, வெளியே வந்து பார்த்து,உள்ளே வாங்கம்மா என்க, இருக்கட்டும் கண்ணு. எதாவது வேலையா இருக்கியா கண்ணு என்க, இல்லைமா,இப்போ தான் முடிஞ்சிலு.நீங்க சொல்லுங்களென்றபடி அங்கிருந்த வராண்டாவில் வந்து உட்கார்ந்தார்".

"வந்த விஷயத்தை பாட்டி சொல்ல, அதைக்கேட்டவரும், இங்குள்ள வழக்கத்தை தெளிவாக சொல்ல, சரிம்மா என்று வீட்டிற்கு சென்றவர், நோட்டை எடுத்து, அவர் சொன்ன விஷயங்களை எழுதி வைத்தார்".

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி:

"மாமியாரின் குரலை கேட்ட விசாலாட்சி,இதோ வரேங்கத்தை என்றபடியே,தோட்டத்திலிருந்து உள்ளே வந்தார்".

"அங்கு சேரில் உட்கார்ந்திருந்த மைக்கேல் எழுந்து நின்று வணக்கம்மா என்க,வாங்க வணக்கம் பா. யார் நீங்க?,என்னை எதற்கு பார்க்க வந்துருக்கீங்களென்று கேட்டவர்,மைக்கேல் பதில் சொல்வதற்கு முன்னே கொஞ்சம் இருங்க டீ எடுத்து வரேனென்பா என்க,அய்யோ வேண்டாங்கம்மா".

"அம்மா என்னுடைய பெயர் மைக்கேல்.நான் கேரளாவில் இருந்து வரேன்.மூன்று மாதங்களுக்கு முன்னர்,திருச்சூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட டிரைன்ல நீங்களும் வந்தீங்கள் தானே என்க.. ".

"ஒரு நிமிடம் யோசித்தவர்,ஆமாம் பா. எங்கள் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துட்டு,ரிட்டர்ன் அந்த வண்டியில் தான் வந்தோம் என்றார்".

"சரிங்கம்மா சரிங்கம்மா என்ற மைக்கேல், ஒரு நிமிஷமென்று சொல்லி விட்டு, தனது பேக் ஜிப்பை திறந்து அதிலிருந்த ஆர்கலியின் ஃபோட்டோவை எடுத்தவர், நீங்க வந்த கோச்சில் இந்த பொண்ணை பார்த்தீங்களாயென்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்கமானு ஃபோட்டோவை நீட்டினார்".

ஃபோட்டோவை வாங்கி பார்த்தவர், சில நிமிடம் புருவத்தை சுருக்கி யோசித்த விசாலாட்சி, தம்பி இந்த பொண்ணு மாசமா தானே இருந்துச்சியென்க,மைக்கேலோ ஆமாம் மா என்க,அட தம்பி.. என்னத்தை சொல்லப்பா".

" கொஞ்ச நேரம் அசந்திருந்தாலும் இந்த பொண்ணுகாரி உசுரு அன்னைக்கு போயிருக்கும்யா. திருச்சூர்ல இருந்து வண்டி கிளம்பிட்டு,இந்த பொண்ணு வேகமாக வயிற்று புள்ளையோடு ஓடி வரும்போது எதுவோ தடுக்கி கீழே விழ போக, அங்கிருந்த போலீஸ்காரவங்க தான் பா இதை பார்த்துட்டு ஓடி வந்து புடிச்சாங்க".

பிறகு போலீஸ்காரவங்க டிரைனை நிறுத்தி உள்ளே ஏத்தி விட்டாங்க.

"ஜன்னல் வழியா பார்த்த நாங்களாம் ஒரு நிமிஷம் பதறிட்டோம் பா. கொஞ்ச நேரம் கழித்து எங்க கோச்ல தான் இந்த பொண்ணு வந்து , எதிர் சீட்டில் உட்கார்ந்துச்சி".

"மாசமா இருக்க பொண்ணு இப்படி ஓடி வரலாமாயென,நாங்களாம் சத்தம் போட்டேம்.அதுக்கு அந்த பொண்ணு மன்னிப்பு கேட்டுச்சி".

" நேரமும் கடந்துச்சி நாங்களும் தூங்கிட்டோம்.விடியற்காலை, விருதாச்சலாம் ஜங்ஷன்ல வந்து வண்டி நின்னுச்சி.எங்க அக்கா, மாமா அங்க இறங்கணும்,எங்களை எழுப்பி சொல்லிட்டு அவங்க இறங்கும் போது பார்த்தேன்,இந்த பொண்ணு இறங்கிச்சி தம்பி என,தனக்கு தெரிந்ததை மைக்கேலிடம் சொல்லி முடித்தார் விசாலாட்சி".

இலங்கை- களுத்துறை:

" சொல்லவேயில்லையே என ஆதிரா மூவரிடம் கேட்க,ரியா மட்டும் எதுவும் சொல்லாமல்,ஆதிராவின் கையை விலக்கி விட்டு அங்கிருந்து மேகலாவிடம் சென்றாள்".

"ஓஓஓ மேடம் ரொம்ப கோவமா இருக்காளோ? என தேவகியிடம் கேட்க, ம்ம் என்று சிரித்தார். உங்களுக்கு ஒன்னும் என் மேல கோவம் இல்லையேப்பா, இல்லையேம்மா என ஆதிரா கேட்க, இல்லைடா".

" நாங்களும் டிவியில் பார்த்தோமென்று சொல்லி, இருவரும் கண் கலங்கினர்".

"பார்த்தா சிம்பிலா இருக்குதுங்க, இதுங்களை பார்த்து,ஏன் இவள் இப்படி ஓடுறாளென விஷாலா தேவி, தனது அருகில் இருந்த அண்ணனிடம் கேட்க, சுந்தர் தனது தங்கைக்கு மௌனமாக சிரித்து பதில் சொன்னார்".

" மேகலாவிடம் பேசி விட்டு சுந்தரிடம் வந்த ரியா,ஹாய் அங்கிள் எப்படி இருக்கீங்களென்க, நல்லா இருக்கேன் டா.அப்புறம் வாழ்த்துக்கள்டா மா,கபிலன் தம்பி நல்லா இருக்காங்களா என்க,நலம் என்றவள் பின்னர் தேங்க்யூ அங்கிளென்றாள்".

" சரி சரி உள்ளே வாங்களென்று ஆதிரா இருவரையும் அழைத்து வர, போனில் பார்த்து இருப்பதால், எல்லாரும் சாதாரணமாக பேசிக்கொண்டனர்".

" அப்பொழுது வேகமா ஒரு கார் வந்து வாசலில் நிற்க, பாதுகாப்பு படையினர் சூழ உள்ளே வந்தவரை பார்த்து ஆதிராவும், ரியாவும் நீங்களா என அதிர,எஸ் எஸ் நானே தான் என்றார் தேவ்ராஜ்".

" டேய் யார் டா இது?, ஆள் செம வெய்டான பார்ட்டி போலயென ஆது கேட்க, அப்படி தான் போலடா என்றான் ருத்ரன்".

" வீரா, ஆது, ரஞ்சா என சிம்ஹன் தாத்தா கூப்பிட, எதுக்கு இந்த சிங்கம் நம்மை கூப்பிடுதென்க, போய் கேட்போம் வாங்கடா என ரஞ்சன் சொல்ல,பின்னர் மூவரும் அவர்களிடம் சென்றனர்".

" விஷாலா தேவிக்கு மண்டை காய்ந்தது. யார் இவர்?, இவ்வளவு பாதுகாப்பு சூழ நம்ப வீட்டு பங்ஷனுக்கு வந்துருக்காறென்று யோசித்தவர், சரி அங்கே போனால் தெரிந்து விடுமென்று, தனது வீட்டினரிடம் சென்றார்".

" எல்லாரிடமும் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்த தேவ்ராஜ், எப்படிடா என் சர்ப்ரைஸ் என்க, தூள் மாமா என ஆதிரா சொல்ல, தேங்க்யூ டா ஆதி".

" மேலும் பல புகழ் உன்னை சேர, என் ஆசீர்வாதமென்று ஆதிராவை தோளோடு அணைத்துவிட்டு அவளுக்கான கிப்டை நீட்டினார்".

" உங்கள் ஆசி போல் ஆகட்டும் மாமாயென்றாள். பிறகு அங்கு வந்த மூவரையும் கண்ணன், தேவகி,தேவ்ராஜிற்கு அறிமுகப்படுத்தி வைக்க,அவர்கள் யாரென்று தெரிந்து நண்பர்கள் மூவர் மட்டுமில்லை, இளக்காரமாக பேசிய விஷாலா தேவியும் அதிர்ந்து தான் போனார்".

" ஒருத்தன் மட்டும், தனது பார்வையை ஆதிராவிடமிருந்து விலக்க முடியாமல் திணறினான்".

" இவர்களை தவிர, மற்ற எல்லாரும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப, நேரம் கடந்து விட்டதால், இரவு இங்கையே தங்கிட்டு,காலையில் போய்க்கலாமென்று சொல்லிய மேகலா எல்லாரையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்".

" நண்பர்கள் மூவரும், பக்கத்தில் இருக்கும் ஜேம்ஸ் வீட்டில் தங்கிக்கொள்வதாக சொல்லி விட்டனர்".

" அந்நேரம் ரஞ்சனுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து கால் வர, நான் பேசிட்டு வரேன். நீங்கள் உள்ளே போங்கடா என அனுப்பி வைத்தான்".

" வீரா, ஆது உள்ளே வாங்கப்பா என சொல்லிக்கொண்டு, ஆலீஸ் கதவை திறந்து உள்ளே செல்ல,அங்கிருந்த பெயிண்டிங்கை பார்த்து இருவரும் வாவ் என்றனர்".

" ஓஓஓஓ...,அந்த பிடாரிக்கு குரு தானே நீங்களென்று ஆது சொல்ல, ஹாஹாஹா என்று சிரித்த ஆலீஸ், மேகலா சொல்வது போலவே குரும்புக்காறன் தான் ஆது நீ என்றார்".

"பின்னர், ஹாலில் இருக்கும் பெயிண்டிங்கை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே திரும்பியவன், அங்கிருந்த போட்டோவை பார்த்து, வீர் இவங்க இவங்க என பேச்சில் தடுமாற,அவனின் திணறலை கண்டு, யோசனையான ஜேம்ஸ்,இது என்னுடைய ஒரே தங்கச்சி கிருபா என்கவுஅ,அதைக்கேட்டு, என்னாஆஆ என்று நண்பர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
425
" டேய் ஆது, வீரா என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்த ரஞ்சன், நம்ப ராகினிக்கு நினைவு வந்திடுச்சிடா என்று நண்பர்கள் இருவரையும் கட்டிக்கொண்டான்".

" ரஞ்சன் சொன்னதை கேட்டவர்கள், என்னடா சொல்லுற என்க, ஆமாண்டா காலையில் தான் அவளுக்கு நினைவு வந்துச்சாம். பிறகு எல்லா டெஸ்ட் எடுத்து பார்த்திருக்கிறார்கள்".

"ரொம்ப நேரமா போனுக்கு ட்ரை பண்ணி இருக்காங்க, நாட் ரீச்சபிள் நாட் ரீச்சபிள் வந்துச்சாம்.நாளைக்கு காலையில ஹாஸ்பிடல் வர சொல்லி இருக்காங்கடா என்று சொல்லும் போது, ரஞ்ஜனின் கண்கள் கலங்கியது".

"அப்பொழுது, ரஞ்சா அங்கு என ஆது கைகாட்ட, என்னடா என்றான். கொஞ்சம் மேல பாரு என்று சொல்ல, நண்பர்களை அணைத்திருந்தவன், விலகி வந்து ஆது சொல்லிய சுவற்றைப் பார்க்க,அங்கே தனது அம்மாவின் ஃபோட்டோவை பார்த்தவன், அம்மாஆஆஆ என அதிர்ந்தான்".

"இவ்வளவு நேரம் பார்வையாளராக இருந்த ஜேம்ஸ் தம்பதியினர், ரஞ்ஜனோட அம்மாவா?,ஆது என்னப்பா என்ன விஷயம்? என கேட்க, சார்.ரஞ்சனோட அம்மா தான் அவங்க என்றான் ருத்ரன்".

" என்னாஆஆ என்றவர், தம்பி, ரஞ்ஜன், என் தங்கச்சி எப்படி இருக்கா?,எங்கப்பா இருக்கிறாள், என்று ஜேம்ஸ் போய் ரஞ்சனிடம் கேட்க, தனது தாயின் ஃபோட்டை பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் பதில் சொல்லாமல் வெற்று பார்வையோடு திரும்பி பார்த்தான்".

" சார், உங்களோட தங்கச்சியை பற்றி இத்தனை வருஷம் கழிச்சு தான் ஞாபகம் வந்திருக்கு போல என்க, ஜேம்ஸால் ஒன்னும் பதில் சொல்ல முடியவில்லை".

"தம்பி என் தங்கச்சி இருக்கும் இடத்தை சொல்லுப்பா, அவள் கிட்ட நான் பேசிக்குறேனென்க, எங்க அம்மா உயிரோடு இருந்தா தானே சார்?.

"அவர்கள் போய் சேர்ந்து 12 வருஷம் ஆகிடுச்சு என்க,என்ன என் தங்கச்சி உயிரோடு இல்லையா!!,அய்யோ கிருபா என்று தலையில் அடித்துக் கொண்டு ஜேம்ஸ் கதறி அழுதார்".

"கடைசி வரைக்கும் உன்னை பார்க்க முடியாமல் போய்விட்டதே?.அப்படி என்ன நான் பாவம் பண்ணுனேனென்று, இப்படி எல்லாரும் பாதியிலேயே விட்டு விட்டு போனீர்கள் என்று, ஜேம்ஸ் கதறி அழ, ரஞ்ஜனுக்கு ஒன்றும் புரியவில்லை".

"ஆலீஸ் தனது கணவரின் தோளில் தட்டி சமாதானப்படுத்தினார். அங்கிள்,முதல்ல என்ன நடந்தது என்று தயவு செய்து சொல்லுங்க என ருத்ரன் கேட்க,தம்பி கிருபா என்னோட ஒரே தங்கச்சி".

"நாங்க யாழ்ப்பாணத்தில் இருந்தோம். நான் படிச்சிட்டு லண்டன்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். எங்க அப்பா கிருபாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டதாகவும் கல்யாணத்துக்கு வர சொல்லி எனக்கு லெட்டர் போட்டு இருந்தாரு".

"கல்யாணத்துக்கு நானும் கிளம்பி ஊருக்கு வந்தேன். வீட்டு வாசல்ல ஒரே அழுகை சத்தம்.கல்யாண வீடு அன்று எழவு வீடா இருந்துச்சு".

" யாருக்கு என்னவென்று காரிலிருந்து நான் பதறி இறங்கி உள்ளே போய் பார்க்க, அங்கே, என்னுடைய அம்மா, அப்பா பிணமா படுத்திருந்தாங்க".

" அய்யோனு நான் கதறி அழுதேன்.என்ன நடந்துச்சி கேட்க, என் தங்கச்சி யார் கூடையோ ஓடிப்போய் விட்டதாகவும், கல்யாணம் நின்ற அவமானம் தாங்காமல், இருவரும் சூசைட் பண்ணிக்கிட்டாங்கன்னு சொன்னாங்க, என்னால் நம்பவே முடியல".

"தங்கச்சியோட கல்யாணத்தை பாக்குறதுக்கு ஆசையா வந்தவன் ,எங்க அப்பா அம்மாவுக்கு காரியம் பண்ணும் போல ஆகிட்டு".

" இருவருக்கும் 11 ஆம் நாள் பிரேயர் முடிந்து, என் தங்கச்சியோட ரூம்ல போய் தேடும் போது தான் எஸ்டேட்ல வேலை செஞ்ச மேனேஜரை காதலிச்சிருக்காளென்று விஷயம் தெரிஞ்சது".

"நானும் எங்கெங்கே தேடி பார்த்தேன் எங்கேயுமே அவளை பத்தி தெரியலை. அப்படியே ரெண்டு வருஷம் போச்சு நான் திரும்ப லண்டனுக்கு போகவில்லை".

"இங்க இருக்கும் எல்லாத்தையும் பாத்துட்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது தான் ஆலிஸ் என்ன பார்க்க வந்தாள். ஆலீஸ் வேற யாரும் இல்லை, என் தங்கச்சிக்காக மாப்பிள்ளை பார்த்து இருந்தோமே, அவரோட தங்கச்சி தான்".

"நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாள். வேண்டாம்மா, நான் யாரும் இல்லாத அனாதை. ஏற்கனவே என் தங்கச்சியால உங்களுக்கு பெருத்த அவமானமென்று சொல்ல அவ கேட்கவில்லை".

"பிடிவாதமா என்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டாள். எங்க வாழ்க்கையும் நல்லா போயிட்டு இருக்கும் போது, அவள் கன்சீவ் ஆனாள். அப்போ பக்கத்தில் இருக்கும் ஸ்கூல்ல ஓவிய டீச்சரா வேலை பார்க்க, இவள் போயிட்டு வரும் போது நடந்த ஆக்ஸிடென்ட்ல ஆலீஸோட கர்பப்பையை எடுத்துட்டாங்க".

" அங்கையே இருந்தால் இவளுக்கு மனசு கஷ்டமாக இருக்குமென்று, எல்லாத்தையும் விற்று விட்டு இங்கு வந்தோம். அப்பொழுது தான் பக்கத்து வீட்டில் இருந்த சுந்தர்-மேகலா கூட பழக்கமானது ".



விழுப்புரம்-செஞ்சி:

" விசாலாட்சியின் வார்த்தைகளை கேட்ட மைக்கேல்,தன் இரு கைகளும் கூப்பி எழுந்து நின்றவர், ரொம்ப நன்றிங்கம்மா என்று சொல்லும் போதே, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது".

"தம்பி எதுக்குப்பா இதெல்லாம்?,யார் இந்த பொண்ணு?என்று கேட்க, என்னுடைய தங்கச்சி பொண்ணு தான் மா. புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை, யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு போயிடுச்சு".

"கடந்த மூன்று மாதமாக தேடி அலைஞ்சுகிட்டு இருக்கேன் என மைக்கேல் சொல்ல, கவலைப்படாதப்பா. அந்த கருமாரியம்மன் புண்ணியத்துல பொண்ணு நல்லாதான் இருக்கும் என்று உள்ளே போனவர்,சிறிது நிமிடத்தில் டீ போட்டு எடுத்துட்டு வந்து, தனது மாமியாருக்கு ஒன்றையும் மைக்கேலுக்கு ஒன்றையும் கொடுத்தார்".

"குடித்து முடித்தவர், மிக்க நன்றிங்கம்மா. என் உசுரு இருக்கிற வரைக்கும் இதை நான் மறக்க மாட்டேன் என்க,இதுல என்னப்பா இருக்கு".

"குடும்பத்தோட பொண்ணை வாழ வைப்பா. பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணு போல தான் இருக்கு என்று விசாலம் சொல்ல, கண்டிப்பாகங்கம்மா".

"மூன்று மாதங்களாக, இரவு, பகலென பட்ட கஷ்டத்திற்கு, இப்பொழுது பலன் கிடைத்துவிட்டது. உடனே தனது போனை எடுத்தவர், வசுக்கு கால் பண்ணி விழுப்புரம் வந்ததையும், விசாலாட்சி அம்மா அம்முவை பார்த்ததாகவும், விருதாச்சலத்தில் இறங்கினதாக அவர்கள் சொல்லியதை சொல்லிய மைக்கேல்,நான் போய் அங்கு விசாரிச்சுட்டு உனக்கு விஷயத்தை சொல்லுறேன்".

" பிறகு மற்றதை பேசிக்கலாமென்க, அண்ணா,நானும் வரேன் என்றார். அதற்கு மைக்கேலோ, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் போய் பார்த்துட்டு உனக்கு விஷயத்தை சொல்லுறேன்டா".

"நீ அதுக்குள்ள அவசரப்பட்டு அப்பா அம்மா கிட்ட, இதைப்பற்றி எதுவும் சொல்லிடாதே என்றபடி போனை வைத்தவர் காரை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்து விருதாச்சலத்தை நோக்கி சென்றார்".

" சில மணி நேரத்தில் விருதாச்சலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தவர்,பிளாட்பார்ம் ஓரமாக இருந்த அத்தனை கடைகாரரிடமும், ஆர்கலி ஃபோட்டோவை காட்டி விசாரிக்க, யாரும் தெரியலை, என்று சொன்னார்கள்".

" கடவுளே எல்லார்கிட்டயும் கேட்டோம் யாருக்குமே தெரியலையே என அங்கிருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்து, கண்ணை மூட, அப்பொழுது கொய்யாப்பழம் கொய்யாப்பழம் என்று ஒரு பெண்மணி கூவியபடி வரும் சத்தம் காதில் கேட்டது".

மைக்கேல் அருகில் வந்த அந்த பெண்மணி, ஐயா கொய்யாப்பழம் வேண்டுமா? என்று கேட்டார்".

கண்களை திறந்து பார்த்தவர் அம்மா எத்தனை வருடமாக இங்கு விக்கிறீங்க என கேட்க, கடந்த 40 வருஷமா இந்த ஸ்டேஷன்ல தான் நான் வியாபாரம் செய்யுறேன்பா என்றார்".

"அப்படிங்களா சரி, ஒரு 20 ரூபாய்க்கு கொய்யாப்பழம் குடுங்க என்று சொல்லிவிட்டு, பாக்கெட்டில் இருந்த ஃபோட்டோவை எடுத்து, இந்த பொண்ணை இந்த ஸ்டேஷன்ல பார்த்த ஞாபகம் இருக்கா? என்க, அவரும் பார்த்து விட்டு,இந்தப் பொண்ணையா என்று அந்த பெண்மணி யோசனை பண்ணி பார்த்து விட்டு, ம்ம் பார்த்துருக்கேன்".

" கேரளாவில இருந்து வந்த டிரைன்ல இந்த பொண்ணும், இன்னொரு வயதான அம்மாவும் இறங்கினாங்க. பஸ் ஸ்டேண்டிற்கு எப்படி போகணும்னு வழி கேட்க, நான் தான் தெரிஞ்ச ஆட்டோவில் அனுப்பி வைத்தேன் பா".

" அந்த பொண்ணு மாசமா இருந்துச்சி. வண்டியில் வந்தது ரொம்ப வாந்தி, புடவையெல்லாம் வீணாகிட்டு".

" இங்க ஓய்வறையில் இருக்க சொல்லிட்டு அந்த பாட்டி தான் போய் புடவை வாங்கிட்டு வந்தாங்க. அந்த பொண்ணு கூட கொஞ்ச நேரம் பாதுகாப்பா இருக்க சொல்லி, எனக்கு கொஞ்சம் பணம் குடுத்தாங்க தம்பி".

" நான் வேண்டானு சொல்லிட்டேன். பிறகு அவங்களே கூடையில் இருந்த பாதி பழத்தை வாங்கிக்கிட்டாங்க, அன்று மறக்க முடியாத நாளுப்பா".

" அன்னைக்கு என் வீட்டுக்காரர் இறந்த நாள். பழத்தை விற்று ,அதில் வர காசில் நாலு பேருக்கு சோறு போட்டால் அவர் ஆத்மா சாந்தியடையும், பழம் விற்று விடனும்னு நான் அவர் கிட்ட,வேண்டிகிட்டு வந்தேனென்று சொல்லி கண் கலங்கினார்".

"அழாதீங்கம்மா, ஒன்னு மட்டும் சொல்லுங்கள், அவங்க ரெண்டு பேரும் எந்த ஊருக்கு போனாங்களென்று தெரியுமா? என மைக்கேல் கேட்க, அது ஆட்டோ ஓட்டும் பாலுக்கு தான் தெரியும்".

" அந்த பொண்ணு கையில ஏதோ பேப்பர் வச்சிருந்துச்சி. அதை காட்டி தான் பாலுகிட்ட கேட்டது என்றவாறு, டிரைன் வரும் சத்தம் கேட்டு அந்த பெண்மணி திரும்பியவர், அதோ பாலு என்றார்".

" பாலு, எய்யா பாலு என அவர் சத்தமாக கூப்பிட, சவாரி வந்தவர்களின் பேகை எடுத்துக்கொண்டு வந்த ஆட்டோகாரருக்கு, தன் பெயர் சொல்லி கூப்பிடும் குரல் கேட்டு திரும்பி பார்க்க, அந்த அம்மாவும் இங்கு வா என கையை அசைக்க, ம்ம் என்றான்".

" சிறிது நிமிடத்தில் அங்கு வந்த பாலு, என்ன ஆயா. ஏன் கூப்பிட்ட என்க, பாலுவிடம் அந்த பெண்மணியே விஷயத்தை சொல்ல, முதலில் சரியாக ஞாபகம் வரவில்லை".

" நல்லா யோசனை பண்ணி பாரு பாலு என்க, மீண்டும் யோசனை பண்ணிய பாலுக்கு, நியூஸ் பேப்பர் பற்றி சொல்ல, ஆங்.... ஆயா, சதூர்வேதமங்கலம் போக கேட்டாங்க".

"சேத்தியாதோப்பு குறுக்குரோட்டில் இறங்கி மாறி போங்கணு, நான் தான் பஸ் ஏற்றிவிட்டேன் என்க, தம்பி அந்த பேப்பர்ல வந்த அட்ரஸ் பற்றி எதாவது ஞாபகம் இருக்கா? என்க,ஆமா சார். எதோ பள்ளிக்கூடத்துக்கு டீச்சர் வேலைக்கானது".

" ஒன்னு பண்ணுங்க, இங்க பக்கத்தில் தான் லைப்ரரி இருக்கு, அங்க போய் மூனு மாசத்துக்கு முன்ன உள்ள தமிழ் பேப்பரில் தேடி பார்த்தால், அந்த விளம்பரம் இருக்குமென்றான்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top