• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
421
வெற்றி- ஜனனி நினைவுகள்:

"மணியின் கல்யாண நாளும் வந்தது.எல்லாரும் மண்டபத்தில் இருக்க, ஜனனி மட்டும் உடல் முடியலையென்று சொல்லி வீட்டிலே இருந்து விட்டாள்".


“கீதாவை பார்த்தவன், பாப்பா என்று கூப்பிட,இதோணா என்று அங்கு வந்தவளிடம்,ஜனனி எங்கேடா? என்க,அவள் வரலைணா. வீட்டில் தான் இருக்கிறாளென்றாள்".

"ஓஓஓ என்றவன்,அங்க வீட்ல வேறு யாராவது இருக்காங்களா என்க, இல்லைணா.எல்லாரும் இங்க தான் இருக்காங்களென்க,ம்ம் சரி பாப்பு என்று சொல்லியபடி அங்கிருந்து சென்றான்".

"கீதாவிற்கு மட்டும் இருவருக்குள் ஏதோ இருப்பது புரிந்து,எப்படியே அந்த மாரியாத்தா புண்ணியத்தில் நல்லா இருக்கட்டுமென்று சொல்லிக்கொண்டாள்".

"வேகமாக ஜனனி வீட்டிற்கு செல்ல,அங்கே கதவு லேசாக ஒருகளித்து சாத்தியிருப்பதை கண்டு,உள்ளே போய் பார்க்க,ஜனனி தோட்டத்தில் சமைப்பது தெரிந்தது".

"காலடி சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்த ஜனனி,அங்கு வருபவனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை".

"இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று அவன் முகத்தை பார்த்தவள், அதிர்ச்சியில் எழுந்து,வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டாள்".

"அய்யோ ஜனனி உண்மை தெரியாமல் உன்னை ரொம்ப தப்பா பேசிட்டேன் டி.

தயவு செய்து என்னை மன்னிச்சிடென்றவன்,அவள் கையை பிடிக்க,அவனிடமிருந்து தனது கையை உதறியவள்,அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகை எடுத்து, வெற்றி பிடித்த இடத்தில் வைத்தாள்".

"ஏய் என்னடி பண்ணுற என பதறியவன்,அவளிடமிருந்து விறகை பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு, அய்யோ வாடி ஹாஸ்பிட்டல் போகலாமென்று பதற,வலித்தாலும் பல்லை கடித்து பொறுத்தவள், வாசலை நோக்கி அவனுக்கு கையை காட்டினாள்".

"ஏய் தயவு செய்து என்னைமன்னிச்சிடுடி.இப்படிலாம் பண்ணாதடி என்று கத்தியவன், பிளீஸ் வா ஹாஸ்பிட்டல் போகலாமென்க,காய் அரிந்து விட்டு ஓரமாக வைத்திருந்த அருவாள்மனையை எட்டி எடுத்தவள், தனது கழுத்தில் வைத்துக்கொண்டு மீண்டும் வாசல் பக்கம் தனது கையை நீட்டினாள்".

"அய்யய்யோஓஓஓ என்று பதறியவன் வேண்டாம்டி வேண்டாம்.உனக்கு ஒன்னு என்றால் சத்தியமா நான் உயிரோட இருக்கமாட்டேன் என்று கதறியவன்,பிளீஸ் அதை எடுடி என்று அவளிடம் போக,ஜனனியோ கழுத்தில் இருந்ததை எடுத்து ஓங்க போக,வேண்டாம் வேண்டாம்".

"நான் போய்டுறேன் டி. போய்டுறேனென்று கண்ணீரோடு சொல்லி விட்டு,அங்கிருந்து சென்று விட்டான்".

"அதன் பின்னர்,கடந்த இரண்டு வருடங்களாக,ஜனனியிடம் எத்தனையோ முறை வெற்றி மன்னிப்பு கேட்டு விட்டான்.ஆனால் அவள் ஒருமுறை கூட அவன் முகத்தை பார்த்து பேசியதும் இல்லை,அவனுக்கு எந்த பதிலும் அவள் சொல்லியதில்லை".

"பிறகு தான் அவளுக்கு அன்பு கூட நிச்சயம் நடக்கப்போவதை தடுத்து நிறுத்தி,ஊரறிய இருவருக்கும் நிச்சயம் நடந்தது".

"கோயிலுக்கு சென்று வந்த மறுநாள், மாலை வேளையில் வெற்றி பேக்கிங் பண்ணிக்கொண்டிருக்க, அவன் ரூம் வாசலில் யாரோ நிற்பதாக தோண,வாசல் பக்கம் திரும்பி பார்த்தான்".

"அங்கே ஜனனி தான் நின்று கொண்டிருந்தாள்.எதுவும் சொல்லாமல் பொறுமையாக உள்ளே வந்தவள்,சற்று தயங்கியபடியே அவனருகில் வந்து தனது வலது கையை நீட்ட,அதில் விபூதி, குங்குமம் இருந்தது".

"சாமியோடது என்பதால் அதை எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டவன்,மரியாதையா இங்க இருந்து போய்டு என்க,சாரிங்க என்றாள்".

"வேகமாக தனது பல்லை கடித்தவன் வெளியே போடி என்க,அன்னைக்கு எல்லாருக்கும் முன்னாடி என அவள் சொல்ல வர,வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவன், மாறி மாறி அவள் கன்னத்தில் அறைந்தான்".

"உனக்கு பிடிக்கலைனா எத்தனையோ வழி இருக்குடி.அதில் எதாவது ஒன்றை சொல்லியிருக்கலாம்.அதை விட்டு எங்கப்பாவை எல்லாருக்கும் முன்பு கைகூப்பி மன்னிப்பு கேட்க வைக்கும் சூழலுக்கு கொண்டு வந்த பாரு, அப்பவே உன் மேல இருந்த காதல் எனக்குள் செத்து போய்ட்டு".

"பிறகு ஏண்டா நிச்சயம் பண்ணினனு கேட்குறியா?,வேற ஒருத்தி கூடலாம் கற்பனையிலும் என்னால் வாழ முடியாது.அந்த ஒரே எண்ணம் மட்டும் தான்".

"ஓ நீ ஆசைப்பட்ட போல வேலை கிடைச்சிடுச்சு என்றதும்,என்னை தேடி வந்துட்டியோ,இந்த நேரத்துல என்கிட்ட உனக்கு என்ன எதிர்பார்ப்பென்று அவள் தலைமுதல் கால் வரை பார்த்தவன், நான் கொலைகாரன் ஆகுறதுக்குள் இங்கிருந்து போய்டுடி என வாசல் பக்கமாய் தள்ளி விட்டான்".

" இரவு வெகு நேரம் வரை தூங்காமல் மாடியில் நடந்தவன், அதிகாலையில் தான் அறைக்குள் வந்து படுத்தான்".

"பின்னர் கோபியோடு காரில் ஏறி போகும் போது, எங்கையாவது ஜனனி கண்ணில் படுறாளா என பார்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது".

" டேய் தடிமாடு என்ற விஷாலின் சத்தத்தில், இத்தனை நேரம் கடந்த கால நினைவுகளில் இருந்து கண்ணை திறந்து வெற்றி பார்க்க, அங்கே கொலை வெறியில் விஷால் முறைத்துக் கொண்டிருந்தான்".

" என்னடா என்க, பரதேசி பயலே,அலாரம் வைத்து எங்கள் இருவரையும் எழுப்பி விட்டுட்டு, நீ என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்க என்க, ஹீஹீஹீ".

" இன்னைக்கு முதல் நாள் ட்ரெய்னிங் இல்லையா, அதான் நாம டைமிற்கு போகணுமென்று வைத்தேன் என்றவன்,சரி சரி நான் போய் குளிச்சிட்டு வரேனென்று ரெஸ்ட் ரூமிற்குள் வெற்றி செல்ல,விஷாலோ தன் தலையில் அடித்துக்கொண்டான்".

"நாட்களும் வேகமாய் செல்ல,முதல் கட்ட ட்ரைனிங் முடிய மூன்று மாதம் ஆனது".

" இந்த மூன்று மாதத்திற்குள் நண்பர்கள் மூவரும் பலத்த சவால்களை மற்றவர்களிடமிருந்து சந்தித்து, திறமையாய் அனைத்திலும் தேறி வந்தனர்".

" மூன்றாம் மாதம் முடிந்து இரண்டு நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்க, அவரவர் வீட்டிலிருந்து பார்க்க வந்திருந்தார்கள்".

" வள்ளி தான் அழுது புலம்பிக்கொண்டிருக்க, உன் மருமகன் நல்ல முறையில் செலக்ட் ஆகி வரணுமா?, வேண்டாமாயென நீயே முடிவு பண்ணென்று போனில் சொல்ல, சரி கண்ணா என சொல்லிவிட்டார் வள்ளியம்மை".

பொள்ளாச்சி:

" விடிந்து வெகு நேரமாகியும் எழாமல் தூங்கி கொண்டிருக்கும் பேத்தியை பார்த்த ராக்கம்மா பாட்டி, என்னாச்சு இவளுக்கு?, இவ்வளவு நேரம்லாம் தூங்க மாட்டாளே".

" ஒரு வேளை உடம்புக்கு முடியலையா என நினைத்தபடி அவளருகில் வந்து கீழே குனிந்தவர், ஜனனியின் நெற்றியில் கை வைத்து பார்த்தவர், காய்ச்சல் எதுவும் இல்லை".

" சரி தூங்கட்டுமென்று சொன்னவர் வீட்டு வேலையை செய்து முடித்து விட்டு, வயலுக்கு எடுத்து போக வாளியில் சாப்பாடும், சின்ன கப்பில் இரவு வைத்த மீன் குழம்பையும் வைத்து மூடியவர், எய்யா மாரி சோறு எடுத்து வைக்கட்டுமா என்க..

"திண்ணையில் உட்கார்ந்திருத்த மாரியப்பன், இப்போ வேண்டாம் மா. புள்ளை சத்தத்தையே காணுமே? என்றார்".

" அதிசயமா இருக்குய்யா. உன் மவள் இன்னும் தூங்குறாளென்றவர், பழைய சாதத்தை சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் போய் கழுவி வைக்க, ராக்கு என்று கண்ணம்மா பாட்டி கூப்பிடும் சத்தம் கேட்டது".

சதூர்வேதமங்கலம்:

" அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்க, வழக்கம் போல ஆர்கலிக்கும் நாட்கள் போனது".

"பாட்டியும் ஊருக்குள் நன்கு பேமஸானார்கள்.இரவு பகலென்று கண் விழித்து துணி தைப்பதை கண்ட ஆர்கலி, எதற்கு பாட்டி உங்களுக்கு இந்த வேலை எனக்கேட்டு சத்தம் போட, சரி சரி இனி இரவில் தைக்கல கண்ணு என்க, ஆஆஆ என்று கத்தினாள்".

" ஆரா கண்ணு, உன் கோவமெல்லாம் காதில் வாங்குற என் பேரபிள்ளைகளுக்கும் வரும். அதனால் தான் தாயை போல பிள்ளை, நூலை போல சேலையென்பார்களென்று பாட்டி பழமொழியை சொன்னார்"

" அதைக்கேட்டவள் நீங்கள் இருக்கீங்களேயென்று சிரித்து விட்டாள். ரொம்ம சிரமப்படாதீங்க பாட்டி. உங்களுக்கு பொழுது போக வேண்டுமென்று தான் இதற்கு நான் சம்மதம் சொன்னேன்".

" நீங்களென்னவென்றால் முழு நேர டெய்லரா இருக்கீங்க. உடம்பு என்ன ஆவதென்று ஆர்கலி வருத்தப்பட்டு சொல்ல, கண்ணு கண்ணு, நீ வருத்தப்படாத சாமி".

"உன் மனசு கலங்கினாள் இந்த பாவி நெஞ்சு தாங்காதும்மாயென்று பாட்டி கண் கலங்க, அப்போ இனி அதிக நேரம் மிஷின்ல உட்காராதீங்க".

"ரெஸ்ட் எடுங்களென்றவள், அண்ணீஈஈஈ நாளைக்கு இருக்கென்று பல்லை கடித்தவள், பின்னர் இரவு உணவை இருவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் பேசியிருந்தவர்கள், லைட்டை ஆப் பண்ணி படுத்தனர்".

"நாட்களும் வேகமாக ஓடியது.அன்று பாட்டியும் கருப்பாயியும் மதிய சாப்பாடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஆச்சி உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்க,ம்ம் கேளு கண்ணு என்க".

"ம்ம், ஆராமாக்கு ஏழாவது முடிஞ்சி எட்டாவது மாசம் ஆரம்பிச்சிடுச்சி. ஒன்பதுல வளையல் போடணுமேயென்க, ஆமா கண்ணு".

"நல்ல நாள் பார்த்து செஞ்சிடலாமென பாட்டி சொல்ல,எங்களுக்கொரு ஆசையிருக்கென்று கருப்பாயி சொல்ல,அட என்ன கண்ணு?, நீ சொல்ல வந்ததை சொல்லுமா என்றார்".

"எங்களால் முடிந்ததை வைத்து நாங்களே ஆராமாவுக்கு வளையல்காப்பு பண்ணலானு இருக்கோமென்க, அதைக்கேட்ட பாட்டிக்கு கண்கள் கலங்கி போனது".

"சிறிய வருமானத்தில் வாழும் வாழ்க்கை தான்,ஆனால் மனமோ எத்தனை பெரியதென்று நினைத்தவர்,அதற்கு என்ன கண்ணு".

"ஆமா பின்ன அப்பன் வீட்ல தானே வளையல்காப்புக்கு செஞ்சிட்டு வரணும்.அது தானே நம்ப உலக வழக்கமென்க, ஆமாம் ஆச்சி"

"அதனால் என் புருஷனே அவர் தங்கச்சிக்கு செய்முறை செய்வாரென்று சொல்லிய கருப்பாயி, நாள் மட்டும் பார்கணுமென்று சொல்லியபடியே சாப்பிட்ட பாத்திரங்களை சிங்கிள் கழுவி காய வைத்து விட்டு,ஹாலிலே முந்தானையை விரித்து அதில் படுத்துக்கொண்டார்".

"அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்த ஆர்கலியிடம், கருப்பாயி சொன்ன விஷயத்தை பாட்டி சொல்ல,போன பிறவி பந்தம் தான் போல பாட்டி".

"உசுரு இருக்கும் வரை இவங்களை மறக்க முடியாதென்றாள்.ஏங்க பாட்டி, அதுக்கு அதிக செலவு ஆகுமே. அண்ணனுக்கு பணம் கொஞ்சம் கொடுக்கலாமே என்க, அதை நான் சொல்லாம இருப்பேனா கண்ணு?.

"உன் அண்ணன்காரன் என்ன சொன்னான் தெரியுமா , என் பாசத்தை பணத்தால் விலை பேசாதீங்க ஆச்சி".

"இந்த ஏழை பயலால் முடிந்ததை என் தங்கச்சிக்கு செய்யுறேன்னு ,கோவமா சொல்லிட்டு இங்கிருந்து போய்ட்டான் கண்ணு என்றவர்,அவன் ஆசை போல பண்ணட்டும் கண்ணு என்க,சில நொடி யோசித்த ஆர்கலி சரிங்க பாட்டியென்றாள் ".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
421
திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:

" கிரிஜா, நாளை மறுநாள், களுத்துறையில் உள்ள பாரடைஸ் வில்லாவில், ஆதிரா போட்டியில் ஜெயித்ததற்காக உன் மகளும், மருமகனும் பார்ட்டி அரேஞ் பண்ணியிருக்காங்களாம்".


" நேர்ல வந்து சொல்லவில்லைனு தப்பாக எடுத்துக்க வேண்டாம். அத்தையும், நீங்களும் வாங்க மாமானு சுந்தர் சொன்னாருமா என்றார் சிம்ஹன் தாத்தா".

" அதே போல் ஆனந்தனுக்கும், தனாவிற்கும் சுந்தர் போன் பண்ணி, பார்டிக்கு வர சொல்லி அழைத்திருந்தார்".

"சைலு, மேகலாவிற்கு நாங்கள் இங்கு வந்ததை பற்றி எதுவும் தெரியாதுமா. அதுவும் இல்லாமல், ஆதிராவை தனது அண்ணன் மகனுக்கு கட்டணுமென்று, மேகலாவிற்கு மனதிற்குள் ஆசை இருக்கு".

" ஆனால், வீராக்கு கல்யாணம் ஆனது பற்றி மேகலாவிற்கு சுந்தர் சொல்லவில்லை. அதும் இல்லாமல் சுந்தர் வேறு யாரும் இல்லை, தனாவோட மச்சான் தான்".

" தனா இங்கு சென்னையிலே செட்டில் ஆக, சுந்தர் எங்களை பற்றி யோசித்து அங்கேயே தங்கியாச்சி".

" தனாவோட ஒரே பையன் தான் ருத்ரன், அதைப்போல மேகலாவிற்கும் ஆதிரா மட்டும் தான்".

" தனாவோட பொண்டாட்டிக்கும் அண்ணன் மகளை தன்னோட மகனுக்கு கட்டணும்னு எண்ணம் இருக்கு".

" நடுவில் தவிர்க்க முடியாத சூழலில் ருத்ரன்- ஆர்கலி திருமணமாகிவிட்டது.இந்த விஷயம் போன வாரம் தான் எங்களுக்கே தெரியும்".

" ஒன்னு மட்டும் எனக்கு புரியுது. என்னமோ நடந்துருக்கு. அதனால் ஆர்கலி இங்கு இருந்து போயாச்சி,சரி தானா என கேட்க?, மற்றவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை".

"மாமா அது வந்தென்று சைலஜா பாட்டி தடுமாற, வேண்டாம் பாப்பு. ருத்ரனுக்கும் ஆர்கலிக்கும் மட்டும் தான் என்ன நடந்திருக்கென்பது தெரியும்".

" அவன் பொண்டாட்டியை தேடி தான் இங்கு வந்தான்.ஆனால் எதுவும் நடக்காத போல, இங்கேயிருந்து போன போதே எனக்கு சம்திங் ராங்னு புரிந்து விட்டது".

" இத்தனை வருஷத்திற்கு பிறகு என்னோட செல்ல பாப்புவை குடும்பமாக பார்த்துட்டேன். அது போதும் கண்ணம்மா.

" உங்களுக்காக நம்ப வீடு எப்போதும் காத்திட்டு இருக்கும். இன்றைக்கே நாங்க கிளம்புறோம்".

" விரைவில் இதற்கு ஒரே நல்ல முடிவு தெரியுமென்றவர், உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லை. நம்புயென்க, மாமாயென்று அவர் கையை பிடித்துக்கொண்டு சைலஜா பாட்டி கதறி அழுதார்".

" பின்னர் நேரம் கடந்து செல்ல, நால்வரிடமும் சொல்லிக்கொண்டு அவர்களும் இலங்கைக்கு கிளம்பினார்கள்".

" தனாவும் இவர்களோடே செல்ல, விஷாலா தேவியை சென்னையிலிருந்து நேரடியாக இலங்கைக்கு வரச் சொல்லிவிட்டார்".

" நால்வருக்கான ஃப்ளைட் வந்ததும், அவர்களும் அங்கிருந்து செல்ல, இவர்கள் நால்வரும் காரில் ஏறி திருச்சூரை நோக்கி வந்தனர்".

" ஏன் பா, அம்மு பற்றி எதாவது தெரிந்ததா?, என்க, இல்லைப்பா என்றார்".

" நாட்களும் வாரங்கள், மாதங்களாக கடந்து சென்றது. இன்றோடு ஆர்கலி வீட்டை விட்டு சென்று, மூன்று மாதங்கள் ஆகி விட்டது".

" ஆனாலும் அவள் எங்கே போனாளென்று கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரே வழி தான் இருக்கென்று மைக்கேல் சொல்ல, என்னணா சொல்லு என்றார் வசுந்தரா".

" நீ என்ன பண்ணுறயென்றால், அந்த ட்ரெயின்ல ரிசர்வேஷன்ல போனவங்க லிஸ்டை மட்டும் வாங்கி கொடு. அதில் டிக்கெட் புக் பண்ணியவங்க போன் நம்பர் இருக்கும்.அதை வைத்து அவர்கள் அட்ரஸை தேடி, அவர்களிடம் ஆர்கலியை பற்றி கேட்கலாம்".

" கண்டிப்பா யாராவது ஒருவர் பார்த்திருப்பாங்களென்க, இது சரி வருமா அண்ணா? என வசு கேட்க, கடைசி வழி.ஒரு முயற்சி பண்ணி பார்ப்போமே டா".

" நேரடியா நானே போகிறேன்.நீ ஜாக்கிரதையா வேலைக்கு போய் வா என்க, மைக்கேலின் உறுதியான பேச்சை கேட்டவர்கள், வேறு வழியின்றி சரியென்க, மறுநாளே லிஸ்டை வாங்கி கொடுக்க, மூவரிடமும் சொல்லிக்கொண்டு, மைக்கேலும் ஆர்கலியை தேடி பயணமானார்".

" முதல் மூன்று வாரங்கள், ஆர்கலியை பற்றி உருப்படியான தகவல்கள் மைக்கேலுக்கு கிடைக்கவில்லை".

" லிஸ்டின் படி கடைசியாக இருந்த அட்ரஸ் விழுப்புரம். கடவுளே ரொம்ப சோதிக்காதே என மனதிற்குள் வேண்டிக்கொண்டவர், விழுப்புரத்திற்கு பயணமானார்".

"சென்னையிலிருந்து விழுப்புரம் தாலுக்கா செஞ்சிக்கு வந்து சேர, மாலை ஐந்து மணியானது. அங்கிருந்த டீ கடையில் டீ குடித்துக்கொண்டே, இந்த அட்ரஸ் எங்கே என கேட்க, கடைகாரரும் படித்து விட்டு, இப்படியே போனீங்களென்றால் பிள்ளையார் கோயில் வரும்".

" அதிலிருந்து நாலாவது தெருவில் இடது பக்கம் திரும்பினால் அங்க கடைசி வீடு என்றார். ரொம்ப நன்றிணா என்றவாறு டீக்கு காசை கொடுத்து விட்டு, அவர் சொன்ன போலவே மைக்கேலும் வந்து சேர்ந்தார்".

" காரிலிருந்து இறங்கி, பேகோடு அங்கிருந்த கிரில் கேட்டை திறந்து சென்ற மைக்கேல், அம்மா, அம்மா என்று கூப்பிட, சில நொடியில் யாருப்பா என்றவாறு வயதான பாட்டி வந்தார்".

" அம்மா, இது விசாலாட்சி அம்மா வீடு தானே என்க, ஆமாப்பா. என்னோட மருமகள் தான். உள்ளே வாங்க தம்பி என்றவர், விசாலம், புள்ள விசாலம் என உள் பக்கமாய் குரல் கொடுத்தார்"

இலங்கை- களுத்துறை:

"இன்னமுமா மேகலா ரெடியாகுற? என சுந்தர் கேட்க, இதோ வந்துட்டேங்க என அவரும் குரல் கொடுக்க, ம்கும்".

" பத்து நிமிஷமா இதை தான் சொல்லிட்டுருக்காளென்றவர், ஏன் ஆலீஸ் அப்படி என்ன தான் உன் ப்ரண்ட் பண்ணுறாள்?, கொஞ்சம் போய் கூப்பிட்டு வா மா".

" நேரம் போய்ட்டு இருக்கே, எல்லாரும் வந்து, அங்க நாம் இல்லையென்றால் என்ன நினைப்பாங்கள்? என்க, இதோ வந்துட்டேனென்று மேகலா வர, மனைவியின் அழகில் வழக்கம் போல மயங்கியவர், ம்ம் போலாம் என்றார்".

"காரில் ஏறியவர்கள், பத்து நிமிட பயணத்தில்,மூவரும் பார்ட்டி நடக்கும் பாரடைஸ் வில்லாவிற்குள் வந்து சேர்ந்தனர்".

" வாயிலில் உள்ள அலங்காரமே வாவ் சொல்ல வைத்தது. அழகா இருக்குணா என ஆலீஸ் சொல்ல, எல்லாம் உன் புருஷன் கைவண்ணம் தான்மா என்றார்".

" பின்னர் மூவரும் உள்ளே போயினர். சில நிமிடத்தில் அழைத்தவர்களெல்லாரும் அங்கு வர ஆரம்பித்தனர்".

" வருபவர்களை சுந்தர் தம்பதி வரவேற்க, ஜேம்ஸ் தம்பதி அவர்களுக்கான இருக்கையை காட்டி உட்கார வைத்தனர்".

" அப்பொழுது ஒரு கார் வேகமாக வந்து நிற்க, அதிலிருந்து சிம்ஹன் தம்பதியினரும், ருத்ரனும் இறங்க, அடுத்து வந்த காரிலிருந்து, ஆனந்த், ஆது, ரஞ்சன் இறங்க, மற்றொரு காரிலிருந்து தன வீர சிம்ஹனும், விஷாலா தேவியும் இறங்கி வந்தார்கள்".

" சுந்தரும், மேகலாவும் வந்தவர்களை வாங்க வாங்க என்றனர். ஜேம்ஸூம், ஆலீஸூம் அங்கு வர, பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்தவர்கள், வாங்க டைம் ஆகிட்டென்று உள்ளே அழைத்து சென்றனர்".

" அடேய் பார்ட்டி வேற லெவலா இருக்குடா என ஆது சொல்ல, ஆமாடா. நான்கு வருஷம் கழித்து மகள் வந்ததும், சந்தோஷத்தில் மிதக்குறாங்களென்றான் ருத்ரன்".

" நண்பர்கள் மூவரும் ஒரு பக்கம் உட்கார, வெய்ட்ர் வந்து அவர்களுக்கு குடிக்க கூல்டிரிங்ஸை கொடுத்துச்செல்ல, ஒரு பக்கம் ஆர்கெஸ்டா இசைக்க, நண்பர்கள் மூவரும் ரசித்து பார்த்தனர்".

" ஒருத்தனின் உள்ளம் மட்டும் எங்கே அவளென்று தேடி அலைந்தது".

"அப்பொழுது,ஆர்கெஸ்டாவில் இருந்து மகளுக்கான ஒரு பாட்டை பாட, எல்லாரும் வாசல் பக்கம் பார்க்க, சிகப்பு நிற நீளமான கவுனில் வைரங்கள் ஜொலிக்க, தேவதை போல ஆதிரா நடந்து வர, அனைவரும் கைகளை தட்டி வரவேற்தனர்".

" அவளாடா இதெவென்று ருத்ரன் கேட்க, ஆம்டா. அந்த அடங்கா பிடாரியே தான். ஆனால் இவள் இவ்வளவு அமைதி இல்லையேடா என்று ஆது சொல்ல, அதற்கு ரஞ்சனோ, மெடிசின் படித்திருக்காள். படிப்பே ஆளை மாற்றும்டா என்றான்".

" ஆமாடா வீரா. ரஞ்சு சொல்வது உண்மை தான். பிடாரி சேலஞ் பண்ணிய போல, செய்து காட்டிட்டாள் டா என ஆது சொல்ல, ருத்ரன் ம்ம் என்க, என்னடா, அத்தை மகளை பார்த்ததும் மயங்கிட்டியா என ஆது கேட்க, அடிச்சேன், பல்லு முப்பத்திரெண்டும் தெரிச்சிடுமென்றான்".

"ருத்ரன் சொல்லியதை கேட்ட ஆது, எம்புட்டு பாசம் மச்சி. சரி சரி பொங்காத. கூல் கூல் என்க, ஏண்டா வாயை மூடிட்டு இரேனென்று ரஞ்சன் சொல்ல, நீயுமாடா? எனக்கேட்டான் ஆதவன்".

" பின்னர் வந்தவர்களை வரவேற்து சுந்தர் பேசி விட்டு, ஓவியசங்கத்தின் தலைவரிடம் மைக்கை கொடுக்க, அவரும் ஆதிராவை பாராட்டி தள்ளினார்".

" மேலும் சில கெஸ்டுங்களும் ஆதிராவை பாராட்டி வாழ்த்தி கிப்ட்டை கொடுத்து கீழே வர, பஃபே முறையில் அவர்களுக்கான உணவும் தயாராக, வந்தவர்களும் தேவையானதை வாங்கி சாப்பிட்டனர்".

" இப்பொழுது சிம்ஹன் தம்பதியினர் ஸ்டேஜிற்கு செல்ல, இருவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பேத்தியை , கட்டி அணைத்து முத்தமிட்ட தம்பதியினர், பேத்திக்கான கிப்டை கொடுத்தனர்".

" அதேப்போல் ஆனந்த், தனா-விஷாலாதேவி வர, அத்தையை பார்த்தவள் லேசாக சிரித்தாள். மருமகளோடு விதவிதமாக ஃபோட்டோவை எடுத்த விஷாலா தேவி, தனது சோஷியல் மீடியா புரொபைலில் போட்டோக்களை போஸ்ட் பண்ண, ஏகப்பட்ட லைக்ஸ் வந்து குமிந்த வண்ணமிருந்தது".

" பின்னர் நண்பர்கள் மூவரும் ஸ்டேஜிற்கு வர, தன்னவனை நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்த்த ஆதிராவிற்கு, கை கால்கள் நடுங்கியது".

" ஆறு வருடங்களிற்கு பிறகு தன்னவனின் கம்பிர உருவத்தை மனதிற்குள் புகைப்படமெடுத்தாள்"

" ஹாய் பிடாரியென்று ஆது கூப்பிட,
கிரக்கத்திலிருந்து கலைந்தவள், சொன்ன போலவே உலக அளவில் புகழ் பெற்று விட்டேன்".

" எங்கே என்னுடைய பரிசென்க, அவள் முன்பு ரஞ்சனும் ருத்ரனும் இணைந்து கிப்ட் பாக்ஸை நீட்டினர்".

" தேங்க்யூ என்றவாறு வாங்கியவள், சிறிது தடுமாற்றத்தோடு மூவரிடமும் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தவள், எதோ ஒரு உணர்வில் வாசல் பக்கம் திரும்ப, அங்கு வருபவர்களை பார்த்து விழி விரித்தவள், எக்ஸ்க்யூஸ் மீ என்று சொல்லிக்கொண்டு அவர்களை நோக்கி ஓடினாள்".

" பிடாரிக்கு பைத்தியம் எதாவது புடிச்சிட்டா டா, இப்படி ஓடுறாளென்று ஆது சொல்ல, தடி மாடு அங்கே பாருடா என ரஞ்சன் ஆதுவின் தலையில் தட்டி சொல்ல, அங்கே இருந்த மூவரையும், ஆதிரா அணைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது".

ஆர்கலி எங்கே...??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top