Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 414
- Thread Author
- #1
திருச்சூர்-பாண்டியன் பேலஸ்:
" ஸ்சூஊஊஊஊ.... எம்மா ரெட்டை ரோஜாக்களே, நீங்களும் ஏதாவது ரகசியம் மறைத்து வைத்திருந்தால் தயவு செய்து சொல்லிடுங்க".
"ஒருத்தன் என்னன்னாக்க கல்யாணம் பண்ணிட்டேன்னு குண்டு போடுறான்.சிங்கம் என்னவென்றால் ஏதோ தினத்தந்தியில் வரும் கன்னிதீவு போல, ஒரு பெரிய கதையை சொல்லி முடிச்சிருச்சு".
"நீங்க மட்டும் ஏன் அமைதியா இருக்கீங்க. எதா இருந்தாலும் சொல்லிடுங்க. இந்த பிஞ்சு நெஞ்சு இப்பவே தாங்கிக்கொள்கிறேன் என்று ஆது சொல்ல, இப்பொழுது ஆனந்தும்,சிம்ஹன் தாத்தாவும் அவனை முறைத்து பார்த்தனர்".
" ஏண்டா,எதுக்கு இதுங்க ரெண்டும் என்ன இப்படி முறைக்கிது என்க, அதை கேட்ட ருத்ரன், நமக்கு இது என்ன புதுசா என்றான்".
" அப்பொழுது அம்மா என்ற குரல் கேட்டு எல்லாரும் வாசல் பக்கம் பார்க்க, தன வீர சிம்ஹன் வேகமாக வீட்டின் உள்ளே வந்தார்".
" அம்மா என்னாச்சி மா உங்களுக்கு?,இப்ப எப்படி இருக்கு என்று தனது தாயிடம் வந்த தனா கண்ணீரோடு கேட்க, நான் நல்லா இருக்கேன் தனா.எனக்கு ஒன்னும் இல்லை என்றார் கிரிஜா பாட்டி".
" இவரும் வந்தாச்சா, எங்க மேடம் இல்லாம சார் மட்டும் தனியாக வந்திருக்காங்க என்று ருத்ரன் சொல்ல, அதற்கு ஆதுவோ, தெரியலையேடா.கொஞ்சம் பின்னாடி பாரு மேடம் வந்துட்டு இருப்பாங்க என்றான்".
" அங்கிருந்த ஆனந்த் தன் ஆருயிர் நண்பனை கோவமாக பார்த்துக்கொண்டிருந்தார்".
" ஆமா தனா உனக்கு எப்படி தெரியுமென்று சிம்ஹன் தாத்தா கேட்க, இவன் தான் பா சொன்னானென்று ஆனந்தை கைக்காட்டினார்".
" பின்னர் மற்றவர்களை பார்த்து தனா யோசனையானவர், சைலஜாவையும்- கிரிஜாவையும் பார்த்து அதிர, அடேய் மீண்டும் கதை ரிப்பீட்டுடா,எப்பா சாமி என்னை ஆளை விடுங்க".
" நான் போய் நாயர் கடையில் ஒரு டீயை குடிச்சிட்டு வரேனென்று ஆது எழ, ஆது கண்ணா என்று சைலஜா பாட்டி கூப்பிட,அந்த அழைப்பு கிரிஜா பாட்டி கூப்பிடுவது போல இருக்க,திரும்பியவன் நீங்களா கூப்பிட்டதென்று கேட்க, ஆமாம் கண்ணா என்றார்".
" அடேய் கிரி, இரட்டை ரோஜா உன்னை போல கூப்பிடுறாங்கடா என்று ஆது சொல்ல, பின்ன, என் கூட பிறந்தவள் என்னை போல தானே கூப்பிடுவா கண்ணா என்றார் கிரிஜா பாட்டி".
" இந்தப் பகுமானத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.சிங்கம் பேசினதெல்லாம் கேட்டு தலைவலிக்குது. மனுஷன் குடிக்கிறதுக்கு முதல்ல டீய போடுங்க என்றான்".
" ஆது சொன்னதைக் கேட்டு சிரித்த வசு, மலரம்மாயென்று உள்பக்கம் குரல் கொடுக்க,இதோ வசுயென்றவாறு கையில் டிரேயோடு வந்தவர், யாருக்கு காஃபி?, யாருக்கு டீ வேண்டுமென்று கேட்டு கொடுத்தார்".
"அப்பொழுது ஆதுவின் செல்ஃபோனில் ரிங்டோன் சத்தம் கேட்க,அடச்சை நிம்மதியா ஒரு டீயை குடிக்க விடாமல், எந்த கரடி தான் கால் பண்ணுதோயென்று பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க, அதில் ரஞ்சு என்று பெயர் காட்டியது".
"அட்டென் பண்ணியவன் சொல்லுடா கரடி என்க, டேய் எங்கேடா இருக்கயென ரஞ்ஜன் கேட்க,நானா?, இமயமலையில் ஏறி, இப்போ தான் உலக சாதனை பண்ணினேன்".
"அதை கின்னசில் போட ஆட்கள் வந்துட்டு இருக்காங்களென்றான். ஆது சொன்னதை கேட்ட ரஞ்சன், அடேய் தடிமாட்டு முண்டம்,முதல்ல எங்கே இருக்க சொல்லி தொலைடா என கத்த,நாங்களாம் இரட்டை ரோஜா வீட்டில் இருக்கிறோமென்றான்".
"எதேஏஏஏ இரட்டை ரோஜாவா என ரஞ்சன் அதிர,ஆமாம் ஆமாம் பார்க்க அப்படி தான் இருக்கு. ஏண்டா, ஒரு டீயை நிம்மதியா குடிக்க விடாமல், கால் பண்ணி உசுர வாங்குறியே என ஆது சொல்ல, டேய் உடனே பிபிசி பாருடா என்றான்".
"நேர்ல வந்தேன் மூஞ்சி மொகரைய ஒடைச்சிடுவேன்டா.என்னமோ வேலை வெட்டியில்லாதவன் போல, டிவி பார்க்க சொல்லுற என ஆது சத்தம் போட,அடேய் அறிவுகெட்ட முண்டம் சீக்கிரம் பார்த்து தொலைடா என்று ரஞ்சன் போனில் கத்தினான்".
"பின்னர் கையில் இருக்கும் டீயை பார்த்தவன்,அநேகமா அந்த ரெண்டு கருப்பாடுங்க தான் நான் உன்னை குடிக்க கூடாதென்று காண்டு ஏறி சாபம் விட்டிருக்கனுமென்க, அதைக்கேட்ட சிம்ஹன் தாத்தா,டேய் என்றார்".
"குற்றம் உள்ள நெஞ்சி தான் குறு குறுக்குமாம் என்க,ஆதவன் பேசுவதையே வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவிடம்,மேடம் அது ஒரு அரவேக்காடு தப்பா எடுத்துக்காதீங்க என்றார் ஆனந்த்".
"எம்மா ரெட்டை ரோசா, கொஞ்சம் டிவியை ஆன் பண்ணிக்கிறேனென்றவன், டிவி சுவிட்சை ஆன் பண்ணி,அதில் சேனல் ஹிஸ்டிரியில் பிபிசி சேனலை தேடி வைத்தவன்,அங்கு ஸ்கிரீனில் தெரிபவளை பார்த்து,அடேய் வீர் என்று கத்தினான்".
"என்னடா என்று ருத்ரனும் எழுந்து வந்து டிவியை பார்க்க,மற்றவர்களும் என்னதென்று திரும்பி டிவியை பார்க்க,வசுந்தரா பேமிலியை தவிர மற்றவர்களும் ஆதிராஆஆஆஆ என்று அதிர்ந்து போயினர்".
"லைனில் இருந்த ரஞ்சன் பார்த்தியாடா என்க, நீ கட் பண்ணு, பிறகு பேசிக்கலாமென்ற ஆது, ஆதிரா பேசுவதை பார்க்கலானான்".
பிபிசி நியூஸ் நேரலை:
"ஹலோ ஆரா மேடம் கங்கிராட்ஸ் என்றவாறு வெள்ளைக்கார பெண் ஆதிராவை கட்டி அணைக்க,தேங்க்யூ என்றாள்".
"சரி சரி முதல்ல சரா சார் கையால் வின்னர் கப் வாங்குங்கள்.பிறகு பேசிக்கலாமென்க,ஹம் ஓகே என்றவள், சார் ஒரு நிமிஷம், இந்த பரிசை,என்னோட பேமிலி கூட சேர்ந்து வாங்கிக்கிறேனென்று சொல்ல,கண்டிப்பாகம்மா,நீங்கள் கூப்பிடுங்களென்றார்".
"ஆலீஸ்-ஜேம்ஸ் இருவரையும் பார்த்து மேடைக்கு வாங்களென்று கையசைக்க,அவர்களோ ஒருவித பதற்றத்தோடு இருவரும் மேடைக்கு வந்தனர்".
" பின்னர் சரா கப் குடுக்க,மூவரும் இணைந்து வாங்கிக்கொண்டனர்".
"அந்நேரம் சராவிற்கு தொடர்ந்து கால் வர,ஒரு நிமிஷமென்று அங்கிருந்து சென்றார்".
"பின்னர் பரிசு தொகையை போட்டி நடத்தும் ஸ்பான்சர் கொடுக்க, அதையும் இணைந்து வாங்கினர்".
"டேய் எருமைங்களா தள்ளுங்கடா நாங்களும் பார்கணுமென்று ஆனந்தன் சொல்லு, ம்ம் என்றனர்"
" ஓகே... இப்போ பேசலாம் என்க, ஹம் என்று இதழ் பிரிய சிரித்தவளை பார்த்து, ஒருத்தன் அசந்து போனான்".
" உங்க நேம் ஆராவா?,இல்லை புனை பெயரா? என்க, நான் ஆதிரா சுந்தர் . என் பெயரில் இருக்கும் தி என்ற வார்த்தையை எடுத்து விட்டால் ஆரா என்று சொன்னாள்"
"ஆமாம் உங்களோட ப்ரொபஷனல் ஓவியம் தானா? என்க,நோ இது என்னுடைய ஹாபி மட்டும் தான். நான் ஒரு டாக்டர்.கோர்ஸ் முடித்து இப்போ தான் ஒன் மந்த் ஆகுதென்க, வாஆஆஆட்..!!".
"நீங்கள் டாக்டரா?? என்று வெள்ளைக்கார பெண் அதிர, ஹம் என்று சிரித்தாள்.
"டீவியை ஆப் பண்ணிய ஆது, எப்புடிடா?, இவளா அந்த ஆரா?? என்று கண்களை விரித்தான்".
"ருத்ரனுக்கும் அதே அதிர்ச்சி தான்.ஆமாம் டா.நம்ம கடைக்கு ஓவியம் வரைந்து அனுப்பியது, ஜேம்ஸ் தான் டா".
" அது மட்டுமில்லாமல், அங்கு மேகு வீட்டின் ஹால்ல இவளோட டிராயிங் தான் சுவர் முழுவதும் இருக்குடா. நம்ப கடை திறப்பிற்கு கூப்பிட போன போது, நான் பார்த்தேன் டா என்றான்".
"அப்பொழுது, அக்கா,யார் இந்த பொண்ணு?,ரொம்ப அழகா இருக்கிறாளென்று சைலஜா பாட்டி கேட்க,நம்ப பேத்தி தான் சைலு.தனாக்கு அடுத்து பிறந்தது மேகலா".
" மேகலாவோட ஒரே பொண்ணு தான் ஆதிரா.சென்னையில் மெடிசின் படிக்கிறாளென்றார்".
"அதைக்கேட்ட சைலு ஓஓஓ, சூப்பர்கா".
"எனக்கு வசுவும், மைக்கேலும் தான் என்க,பின்னர் தனாவிடம்,நடந்த விஷயத்தை சுருக்கமாக சிம்ஹன் தாத்தா சொல்லி முடித்தார்".
வெற்றி - ஜனனி நினைவுகள்:
"அதன் பின்னர் வந்த நாட்களில், மறந்தும் வெற்றி இருக்கும் திசையை ஜனனி பார்ப்பதில்லை".
மூன்றாவது வருடம் கல்லூரி படிப்பையும் முடித்தவள், முழு நேரமாக வயல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்".
மேல் படிப்பு படி, இல்லை அரசாங்க தேர்வு எழுதென்று மாரியப்பன் எவ்வளவோ சொல்ல, வேண்டாம்பா என்று சொல்லி விட்டாள்.
"துபாயில் இருந்த பாலஜி ஊருக்குள் வர,ராணியை பெண் பார்க்க அழைத்து சென்றார்கள். பார்த்தவுடன் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து விட்டது".
நல்ல நாளில் சொந்தங்கள் சூழ இருவருக்கும் கல்யாணம் முடிந்தது. மீண்டும் ராணியோடு துபாய்க்கு சென்று விட்டான்.
" நான்கு மாதங்கள் செல்ல, ராணி கன்சீவாக இருப்பதாய் பாலாஜி சொல்ல, மருமகளை பார்த்து கொள்வதற்காக கோதண்டமும், அவர் மனைவியும் அங்கு சென்றனர்".
"பத்தாவது மாதம் இறுதியில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது".
" நாட்களும் வேகமாக ஓடியது".
" வெளிநாட்டிற்கு சென்றிருந்த மணியும் ஊருக்குள் வந்தான். வந்தவனுக்கு கல்யாணத்தை முடித்து விடலாமென்று,அவன் பெற்றோர்கள் முன்பே முடிவு செய்ய நாளை பெண் பார்க்க போகலாமென்று மகனிடம் சொல்லினர்".
"அப்பொழுது நண்பர்களை பார்க்க வந்தவன்,அவர்களிடம் பொண்ணு பார்க்க போகும் விஷயத்தை சொல்ல, என்னடா விளையாடுறியா?, நீதான் ஜனனியை லவ் பண்ணுறியே பிறகு எப்படி வேற பொண்ணு பார்க்க என கோபி கேட்க, அட போடா".
"நான் மட்டும் தான் டா ஜனனியை காதலித்தேன்.அந்த புள்ளை அண்ணாவா நினைத்து தான் பழகியிருக்கென்று, அன்று நாம பக்கத்து ஊர் திருவிழாவிற்கு போனோமே ,அன்று தான் தெரியும் என்றான்".
" மணி சொன்னதை கேட்ட வெற்றி என்னடா சொல்லுற என அதிர, ஆமாடா. அன்று நீங்க கிளம்பிய பிறகு, நான் எங்க அம்மா கிட்ட மறைமுகமா ஜனனியை விரும்புவதை சொன்னேன்".
" அதைக்கேட்ட எங்க அம்மா, தொடப்பகட்டை பிஞ்சிடும். உங்கிட்ட பாப்பாங்கள் என்று தானே சொன்னே"
"இன்னொரு முறை இதைப்போல எண்ணம் வச்சிக்கிட்டு புள்ளைங்கள் கிட்ட பழகுனாய், பெத்த புள்ளைனு பார்க்க மாட்டேன் என்று சத்தம் போட்டார்".
" பிறகு வெளிநாட்டிற்கு கிளம்பிட்டு ஜனனி கிட்ட சொல்லும் போது,மணி அண்ணா பார்த்து போ. வேளா வேளைக்கு சாப்பிடுணா. அத்தை-மாமாவை நாங்க பார்த்துக்குறோமென்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணானு சொல்லுச்சிடா".
" அப்பவே என் மனசுல இருந்த அழுக்குலாம் போய்ட்டு டா என்றான்".
" உண்மை தெரிந்த வெற்றி, அய்யோ கடவுளே.பெரிய தப்பு பண்ணிட்டேனே?, அவசரப்பட்டு, அறிவு கெட்டு போய் சுயபுத்தியின்றி எவ்வளவு அசிங்கமா என்னவளை பேசிட்டேனென்று, உள்ளுக்குள் உடைந்து போனான்".
" ஸ்சூஊஊஊஊ.... எம்மா ரெட்டை ரோஜாக்களே, நீங்களும் ஏதாவது ரகசியம் மறைத்து வைத்திருந்தால் தயவு செய்து சொல்லிடுங்க".
"ஒருத்தன் என்னன்னாக்க கல்யாணம் பண்ணிட்டேன்னு குண்டு போடுறான்.சிங்கம் என்னவென்றால் ஏதோ தினத்தந்தியில் வரும் கன்னிதீவு போல, ஒரு பெரிய கதையை சொல்லி முடிச்சிருச்சு".
"நீங்க மட்டும் ஏன் அமைதியா இருக்கீங்க. எதா இருந்தாலும் சொல்லிடுங்க. இந்த பிஞ்சு நெஞ்சு இப்பவே தாங்கிக்கொள்கிறேன் என்று ஆது சொல்ல, இப்பொழுது ஆனந்தும்,சிம்ஹன் தாத்தாவும் அவனை முறைத்து பார்த்தனர்".
" ஏண்டா,எதுக்கு இதுங்க ரெண்டும் என்ன இப்படி முறைக்கிது என்க, அதை கேட்ட ருத்ரன், நமக்கு இது என்ன புதுசா என்றான்".
" அப்பொழுது அம்மா என்ற குரல் கேட்டு எல்லாரும் வாசல் பக்கம் பார்க்க, தன வீர சிம்ஹன் வேகமாக வீட்டின் உள்ளே வந்தார்".
" அம்மா என்னாச்சி மா உங்களுக்கு?,இப்ப எப்படி இருக்கு என்று தனது தாயிடம் வந்த தனா கண்ணீரோடு கேட்க, நான் நல்லா இருக்கேன் தனா.எனக்கு ஒன்னும் இல்லை என்றார் கிரிஜா பாட்டி".
" இவரும் வந்தாச்சா, எங்க மேடம் இல்லாம சார் மட்டும் தனியாக வந்திருக்காங்க என்று ருத்ரன் சொல்ல, அதற்கு ஆதுவோ, தெரியலையேடா.கொஞ்சம் பின்னாடி பாரு மேடம் வந்துட்டு இருப்பாங்க என்றான்".
" அங்கிருந்த ஆனந்த் தன் ஆருயிர் நண்பனை கோவமாக பார்த்துக்கொண்டிருந்தார்".
" ஆமா தனா உனக்கு எப்படி தெரியுமென்று சிம்ஹன் தாத்தா கேட்க, இவன் தான் பா சொன்னானென்று ஆனந்தை கைக்காட்டினார்".
" பின்னர் மற்றவர்களை பார்த்து தனா யோசனையானவர், சைலஜாவையும்- கிரிஜாவையும் பார்த்து அதிர, அடேய் மீண்டும் கதை ரிப்பீட்டுடா,எப்பா சாமி என்னை ஆளை விடுங்க".
" நான் போய் நாயர் கடையில் ஒரு டீயை குடிச்சிட்டு வரேனென்று ஆது எழ, ஆது கண்ணா என்று சைலஜா பாட்டி கூப்பிட,அந்த அழைப்பு கிரிஜா பாட்டி கூப்பிடுவது போல இருக்க,திரும்பியவன் நீங்களா கூப்பிட்டதென்று கேட்க, ஆமாம் கண்ணா என்றார்".
" அடேய் கிரி, இரட்டை ரோஜா உன்னை போல கூப்பிடுறாங்கடா என்று ஆது சொல்ல, பின்ன, என் கூட பிறந்தவள் என்னை போல தானே கூப்பிடுவா கண்ணா என்றார் கிரிஜா பாட்டி".
" இந்தப் பகுமானத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.சிங்கம் பேசினதெல்லாம் கேட்டு தலைவலிக்குது. மனுஷன் குடிக்கிறதுக்கு முதல்ல டீய போடுங்க என்றான்".
" ஆது சொன்னதைக் கேட்டு சிரித்த வசு, மலரம்மாயென்று உள்பக்கம் குரல் கொடுக்க,இதோ வசுயென்றவாறு கையில் டிரேயோடு வந்தவர், யாருக்கு காஃபி?, யாருக்கு டீ வேண்டுமென்று கேட்டு கொடுத்தார்".
"அப்பொழுது ஆதுவின் செல்ஃபோனில் ரிங்டோன் சத்தம் கேட்க,அடச்சை நிம்மதியா ஒரு டீயை குடிக்க விடாமல், எந்த கரடி தான் கால் பண்ணுதோயென்று பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க, அதில் ரஞ்சு என்று பெயர் காட்டியது".
"அட்டென் பண்ணியவன் சொல்லுடா கரடி என்க, டேய் எங்கேடா இருக்கயென ரஞ்ஜன் கேட்க,நானா?, இமயமலையில் ஏறி, இப்போ தான் உலக சாதனை பண்ணினேன்".
"அதை கின்னசில் போட ஆட்கள் வந்துட்டு இருக்காங்களென்றான். ஆது சொன்னதை கேட்ட ரஞ்சன், அடேய் தடிமாட்டு முண்டம்,முதல்ல எங்கே இருக்க சொல்லி தொலைடா என கத்த,நாங்களாம் இரட்டை ரோஜா வீட்டில் இருக்கிறோமென்றான்".
"எதேஏஏஏ இரட்டை ரோஜாவா என ரஞ்சன் அதிர,ஆமாம் ஆமாம் பார்க்க அப்படி தான் இருக்கு. ஏண்டா, ஒரு டீயை நிம்மதியா குடிக்க விடாமல், கால் பண்ணி உசுர வாங்குறியே என ஆது சொல்ல, டேய் உடனே பிபிசி பாருடா என்றான்".
"நேர்ல வந்தேன் மூஞ்சி மொகரைய ஒடைச்சிடுவேன்டா.என்னமோ வேலை வெட்டியில்லாதவன் போல, டிவி பார்க்க சொல்லுற என ஆது சத்தம் போட,அடேய் அறிவுகெட்ட முண்டம் சீக்கிரம் பார்த்து தொலைடா என்று ரஞ்சன் போனில் கத்தினான்".
"பின்னர் கையில் இருக்கும் டீயை பார்த்தவன்,அநேகமா அந்த ரெண்டு கருப்பாடுங்க தான் நான் உன்னை குடிக்க கூடாதென்று காண்டு ஏறி சாபம் விட்டிருக்கனுமென்க, அதைக்கேட்ட சிம்ஹன் தாத்தா,டேய் என்றார்".
"குற்றம் உள்ள நெஞ்சி தான் குறு குறுக்குமாம் என்க,ஆதவன் பேசுவதையே வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவிடம்,மேடம் அது ஒரு அரவேக்காடு தப்பா எடுத்துக்காதீங்க என்றார் ஆனந்த்".
"எம்மா ரெட்டை ரோசா, கொஞ்சம் டிவியை ஆன் பண்ணிக்கிறேனென்றவன், டிவி சுவிட்சை ஆன் பண்ணி,அதில் சேனல் ஹிஸ்டிரியில் பிபிசி சேனலை தேடி வைத்தவன்,அங்கு ஸ்கிரீனில் தெரிபவளை பார்த்து,அடேய் வீர் என்று கத்தினான்".
"என்னடா என்று ருத்ரனும் எழுந்து வந்து டிவியை பார்க்க,மற்றவர்களும் என்னதென்று திரும்பி டிவியை பார்க்க,வசுந்தரா பேமிலியை தவிர மற்றவர்களும் ஆதிராஆஆஆஆ என்று அதிர்ந்து போயினர்".
"லைனில் இருந்த ரஞ்சன் பார்த்தியாடா என்க, நீ கட் பண்ணு, பிறகு பேசிக்கலாமென்ற ஆது, ஆதிரா பேசுவதை பார்க்கலானான்".
பிபிசி நியூஸ் நேரலை:
"ஹலோ ஆரா மேடம் கங்கிராட்ஸ் என்றவாறு வெள்ளைக்கார பெண் ஆதிராவை கட்டி அணைக்க,தேங்க்யூ என்றாள்".
"சரி சரி முதல்ல சரா சார் கையால் வின்னர் கப் வாங்குங்கள்.பிறகு பேசிக்கலாமென்க,ஹம் ஓகே என்றவள், சார் ஒரு நிமிஷம், இந்த பரிசை,என்னோட பேமிலி கூட சேர்ந்து வாங்கிக்கிறேனென்று சொல்ல,கண்டிப்பாகம்மா,நீங்கள் கூப்பிடுங்களென்றார்".
"ஆலீஸ்-ஜேம்ஸ் இருவரையும் பார்த்து மேடைக்கு வாங்களென்று கையசைக்க,அவர்களோ ஒருவித பதற்றத்தோடு இருவரும் மேடைக்கு வந்தனர்".
" பின்னர் சரா கப் குடுக்க,மூவரும் இணைந்து வாங்கிக்கொண்டனர்".
"அந்நேரம் சராவிற்கு தொடர்ந்து கால் வர,ஒரு நிமிஷமென்று அங்கிருந்து சென்றார்".
"பின்னர் பரிசு தொகையை போட்டி நடத்தும் ஸ்பான்சர் கொடுக்க, அதையும் இணைந்து வாங்கினர்".
"டேய் எருமைங்களா தள்ளுங்கடா நாங்களும் பார்கணுமென்று ஆனந்தன் சொல்லு, ம்ம் என்றனர்"
" ஓகே... இப்போ பேசலாம் என்க, ஹம் என்று இதழ் பிரிய சிரித்தவளை பார்த்து, ஒருத்தன் அசந்து போனான்".
" உங்க நேம் ஆராவா?,இல்லை புனை பெயரா? என்க, நான் ஆதிரா சுந்தர் . என் பெயரில் இருக்கும் தி என்ற வார்த்தையை எடுத்து விட்டால் ஆரா என்று சொன்னாள்"
"ஆமாம் உங்களோட ப்ரொபஷனல் ஓவியம் தானா? என்க,நோ இது என்னுடைய ஹாபி மட்டும் தான். நான் ஒரு டாக்டர்.கோர்ஸ் முடித்து இப்போ தான் ஒன் மந்த் ஆகுதென்க, வாஆஆஆட்..!!".
"நீங்கள் டாக்டரா?? என்று வெள்ளைக்கார பெண் அதிர, ஹம் என்று சிரித்தாள்.
"டீவியை ஆப் பண்ணிய ஆது, எப்புடிடா?, இவளா அந்த ஆரா?? என்று கண்களை விரித்தான்".
"ருத்ரனுக்கும் அதே அதிர்ச்சி தான்.ஆமாம் டா.நம்ம கடைக்கு ஓவியம் வரைந்து அனுப்பியது, ஜேம்ஸ் தான் டா".
" அது மட்டுமில்லாமல், அங்கு மேகு வீட்டின் ஹால்ல இவளோட டிராயிங் தான் சுவர் முழுவதும் இருக்குடா. நம்ப கடை திறப்பிற்கு கூப்பிட போன போது, நான் பார்த்தேன் டா என்றான்".
"அப்பொழுது, அக்கா,யார் இந்த பொண்ணு?,ரொம்ப அழகா இருக்கிறாளென்று சைலஜா பாட்டி கேட்க,நம்ப பேத்தி தான் சைலு.தனாக்கு அடுத்து பிறந்தது மேகலா".
" மேகலாவோட ஒரே பொண்ணு தான் ஆதிரா.சென்னையில் மெடிசின் படிக்கிறாளென்றார்".
"அதைக்கேட்ட சைலு ஓஓஓ, சூப்பர்கா".
"எனக்கு வசுவும், மைக்கேலும் தான் என்க,பின்னர் தனாவிடம்,நடந்த விஷயத்தை சுருக்கமாக சிம்ஹன் தாத்தா சொல்லி முடித்தார்".
வெற்றி - ஜனனி நினைவுகள்:
"அதன் பின்னர் வந்த நாட்களில், மறந்தும் வெற்றி இருக்கும் திசையை ஜனனி பார்ப்பதில்லை".
மூன்றாவது வருடம் கல்லூரி படிப்பையும் முடித்தவள், முழு நேரமாக வயல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்".
மேல் படிப்பு படி, இல்லை அரசாங்க தேர்வு எழுதென்று மாரியப்பன் எவ்வளவோ சொல்ல, வேண்டாம்பா என்று சொல்லி விட்டாள்.
"துபாயில் இருந்த பாலஜி ஊருக்குள் வர,ராணியை பெண் பார்க்க அழைத்து சென்றார்கள். பார்த்தவுடன் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து விட்டது".
நல்ல நாளில் சொந்தங்கள் சூழ இருவருக்கும் கல்யாணம் முடிந்தது. மீண்டும் ராணியோடு துபாய்க்கு சென்று விட்டான்.
" நான்கு மாதங்கள் செல்ல, ராணி கன்சீவாக இருப்பதாய் பாலாஜி சொல்ல, மருமகளை பார்த்து கொள்வதற்காக கோதண்டமும், அவர் மனைவியும் அங்கு சென்றனர்".
"பத்தாவது மாதம் இறுதியில் அழகான ஆண் குழந்தையும் பிறந்தது".
" நாட்களும் வேகமாக ஓடியது".
" வெளிநாட்டிற்கு சென்றிருந்த மணியும் ஊருக்குள் வந்தான். வந்தவனுக்கு கல்யாணத்தை முடித்து விடலாமென்று,அவன் பெற்றோர்கள் முன்பே முடிவு செய்ய நாளை பெண் பார்க்க போகலாமென்று மகனிடம் சொல்லினர்".
"அப்பொழுது நண்பர்களை பார்க்க வந்தவன்,அவர்களிடம் பொண்ணு பார்க்க போகும் விஷயத்தை சொல்ல, என்னடா விளையாடுறியா?, நீதான் ஜனனியை லவ் பண்ணுறியே பிறகு எப்படி வேற பொண்ணு பார்க்க என கோபி கேட்க, அட போடா".
"நான் மட்டும் தான் டா ஜனனியை காதலித்தேன்.அந்த புள்ளை அண்ணாவா நினைத்து தான் பழகியிருக்கென்று, அன்று நாம பக்கத்து ஊர் திருவிழாவிற்கு போனோமே ,அன்று தான் தெரியும் என்றான்".
" மணி சொன்னதை கேட்ட வெற்றி என்னடா சொல்லுற என அதிர, ஆமாடா. அன்று நீங்க கிளம்பிய பிறகு, நான் எங்க அம்மா கிட்ட மறைமுகமா ஜனனியை விரும்புவதை சொன்னேன்".
" அதைக்கேட்ட எங்க அம்மா, தொடப்பகட்டை பிஞ்சிடும். உங்கிட்ட பாப்பாங்கள் என்று தானே சொன்னே"
"இன்னொரு முறை இதைப்போல எண்ணம் வச்சிக்கிட்டு புள்ளைங்கள் கிட்ட பழகுனாய், பெத்த புள்ளைனு பார்க்க மாட்டேன் என்று சத்தம் போட்டார்".
" பிறகு வெளிநாட்டிற்கு கிளம்பிட்டு ஜனனி கிட்ட சொல்லும் போது,மணி அண்ணா பார்த்து போ. வேளா வேளைக்கு சாப்பிடுணா. அத்தை-மாமாவை நாங்க பார்த்துக்குறோமென்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணானு சொல்லுச்சிடா".
" அப்பவே என் மனசுல இருந்த அழுக்குலாம் போய்ட்டு டா என்றான்".
" உண்மை தெரிந்த வெற்றி, அய்யோ கடவுளே.பெரிய தப்பு பண்ணிட்டேனே?, அவசரப்பட்டு, அறிவு கெட்டு போய் சுயபுத்தியின்றி எவ்வளவு அசிங்கமா என்னவளை பேசிட்டேனென்று, உள்ளுக்குள் உடைந்து போனான்".