• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

காரை செட்டுக்குள் கொண்டு போய் நிறுத்தி விட்டு,வேகமாக வீட்டின் உள்ளே வந்த வெற்றிக்கு,அங்கு தனது குடும்பத்தாரின் ஃபோட்டோவிற்கு முன்பு, சத்தியமூர்த்தி கண்கலங்கி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"அப்பா என்று கூப்பிட்டவரே அவரின் தோளின் மேல் சாய்ந்து கொண்டவன், இந்த காதலால் நம்ம குடும்பம் சீரழிந்தது போதும் என்ற எண்ணத்தில் தான்பா,நான் இதைப் பற்றி உங்க கிட்ட சொல்லவில்லை".

" இந்த காதலால் தானேப்பா, இன்னைக்கு நீங்க தனி மரமா நிக்குறீங்க,இதையெல்லாம் நினைத்து தான்,உங்க கிட்ட என்னால சொல்ல முடியவில்லைனு அந்த கம்பீரமான ஆண்மகனான வெற்றிவேல் கண் கலங்கினான்".

"மகனின் பேச்சைக் கேட்டவர்,என்ன பேச்சு பேசுற வெற்றி?,காலம் ரொம்ப கடந்து போய்விட்டதுப்பா".

"எவ்வளவோ மாற்றங்கள் மனித மனதிற்குள்ளும்,ஊருக்குள்ளேயும் வந்துடுச்சு".

"அன்று என்னோட தாத்தா இருந்த பிடிவாதத்துக்கு,என்னோட அப்பா அம்மாவை இழந்தேன்".

" உன் அம்மாவை( வசுந்தரா) வேண்டுமென்று நான் பிரியவில்லை, அதை சொல்வதற்கான வேளையும் இப்போது இல்லை".

" போதும்டா".

" இன்னும் எத்தனை காலத்திற்கு நான் உசுரோட இருக்கப்போறோன்?, எனக்கு பிறகு நீ குடும்பம்-குட்டியாக வாழ வேண்டும் தம்பி".

ஒருவேளை,ஜனனி நம்ம வீட்டில் வேலை பார்க்கும் ஒருவர் பொண்ணு என்பதால்,உனக்கு கௌரவ குறைச்சலாக இருக்கா?.

" அதைக்கேட்டவனோ,அப்பா என்று பதறியவன்,அந்த கடவுள் சத்தியமாக ஒரு பொழுதும் அவர்களை நான் வேலைக்காரர்களாக பார்க்கவில்லை".
நீங்கள் என்னை அப்படி வளர்கவில்லைப்பா".

"பிறகு என்னப்பா,எதுக்கு உனக்கு இந்த தடுமாற்றம் என்றார் சத்தியமூர்த்தி".

"அப்பா,அது வந்துப்பானு வெற்றி பேச்சை இழுக்க,ம்ம் நீயே சொல்லு".

" உன் ஆசை என்னனு எனக்கு தெரியும்டா மகனே".

" உன்னை மார்லையும்,தோளிலையும் போட்டு வளர்த்தவன் இந்த அப்பன்".

" என் புள்ளையோட ஆசை,கனவுலாம் இந்த கிழவனுக்கு தெரியாதா?என்று சத்தியமுர்த்தி கேட்க,ஏதேஏஏஏஏ கிழவனாஆஆஆஆஆ".

" என்னப்பா நக்கலா".

" பாக்குறவங்க எல்லாம்,உங்க அப்பா இன்னும் யங் மேனா இருக்காறேனு பொறாமை படுறாங்க என்று சொல்லி வெற்றி சிரிக்க,மகன் சொன்னதை கேட்டவரும் சிரித்து விட்டு, அப்படிங்குற என்றவாறே,ஹாலில் இருந்த கண்ணாடிக்கு முன்பு போய் நின்று பார்த்தார்".

" என்னப்பா,என்றும் பதினாறாக இருக்கிறேன்னு நக்கலா என்றான்".

" டேய் டேய் டேய் உடனே பேச்சை மாற்றாதடா".

"என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவேயில்லையே".

" இப்போ உனக்கு உண்மை தெரியணும் அதானே என்று வெற்றி பல்லை கடிக்க, எஸ் டா என்றார்".

"உன்னை, வள்ளி,அப்புறம் அப்புறம் அவளையும் விட்டு பிரிந்து போக மனசு இல்லாம தான்பா,எனக்கு புடிச்ச ஐபிஎஸ் வேலைக்கு கூட நான் முயற்சி பண்ணலை என்று,கீழே குனிந்து கொண்டு வெற்றி சொல்ல, தெரியும்பா".பிறகு, திடீர்னு எப்படி ஐயாவுக்கு ஞானோதயம் வந்து,போலீஸ் எக்ஸாம் எழுதுனீங்க?".

ம்ம்,நீதான் எல்லார்கிட்டயும் பெருமையா சொல்றியே, என் பையன் ஐபிஎஸ் ஆகப் போறான்,என் கண்ணு ஐபிஎஸ் ஆக போறான்னு.சரி என் ஆசை நிராசையா போகட்டும். எனக்காக வாழுற உன் ஆசையாவது நிறைவேறட்டும் என்ற எண்ணத்தில் தான் பா நான் எக்ஸாம் எழுதினேன்.

நிச்சயமா நான் பாஸ் பண்ணுவேன். உன் பையன் ஐபிஎஸ் ஆகப்போவதை நீ பார்க்க போற என்று சொல்லி,மூர்த்தியின் தோளில் சாய்ந்து கொண்டான்.

27 வயது ஆண் மகன் இன்னும் குழந்தையாக இருக்கிறியேடானு மகனின் கண்ணீரை துடைத்தவர்,காதல் என்ன சாதாரண விஷயம்னு நினைத்து விட்டாயா?.வேணும்னா எடுத்துக்கறதும், வேண்டாம்னா தூக்கி போட்டு போறதுக்கும் அது என்ன போட்டுக் கொள்ளும் சட்டையா?.

" இந்த உலகத்துல எந்த மூலையில போய் நீ ஒளிஞ்சி நின்னாலும்,அந்த நினைவுகள் உன்னை சும்மா விடாது".

அப்போ, ஜனனி இல்லாமல் உன்னால் வாழ முடியுமா சொல்லு?.

"அவ இல்லாமல் நிச்சயமா என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாதுப்பா என்று உறுதியாக வெற்றி சொல்ல,பிறகு ஏன்டா அவள் மனசை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறாய்?.

அப்பா,அவள் சின்ன பொண்ணுப்பா, வீணாக அவள் மனதில் ஆசையை வளர்த்து கஷ்டப்படுத்த,எனக்கு துளியும் மனசு வரலைப்பா.

ஹாஹாஹா என்று சிரித்தவர்,இந்த குடும்ப நிர்வாகத்தையே பாக்குறவளா சின்ன பொண்ணு?.

அப்பா அது வந்தென்று வெற்றி நெளிந்தான்.

"சரி போனதை விடு,நல்ல நாள் பார்த்து மாரியப்பன் கிட்ட இதை பற்றி அப்பா பேசுறேன் கண்ணு".

எனக்குனு இருக்குறது நீ தானடா, உன் சந்தோஷம் தான் எனக்கு பெருசென்று கண்கலங்கி சொல்லி விட்டு,அங்கிருந்து தனது அறையை நோக்கி சென்றவர்,கதவை திறந்து உள்ளே போனார்.

போகும் தனது சித்தப்பாவை பார்த்தவனுக்கு கவலையாக இருந்தது.

தன்னை வளர்பதற்காக,சித்தப்பாவும், வள்ளியும்,இத்தனை வருஷமாக கல்யாணமே வேண்டாமென்று இருந்து விட்டார்களே என்பதை நினைத்தவனுக்கும் கண்கள் கலங்கியது.

இலங்கை இரத்தினபுரி:

"கிரிஜாஆஆஆஆஆ,முதல்ல அவனை முழுவதுமாக பேச தான் விடுமா".
உன் பேரன் ஒன்னும் பன்னிரெண்டு வயசு பாலகன் இல்லை.நேரத்திற்கு ஏற்றப்போல தனது வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கும் பக்குவமும்,வயதும் அவனுக்கு இருக்கின்றது.

" சும்மா, இந்த பால்வாடி பயலை டிரீட் பண்ற போல பண்ணாதே என்று மனைவியை கண்டித்த சிம்ஹன் தாத்தா,நீ மேற்கொண்டு சொல்லு வீரா என்றார்".

" ஓகே தாத்தா என்றவன், தாத்தா கனடாவில் நானும்,ஆதுவும் ஒரு வருஷம் ஒர்க் பண்ணிட்டு தான் இங்கே வந்தோம்".

நாங்க அங்கு இருக்கும் போதே, இந்த பிஸ்னஸ் பிளானை ரெடி பண்ணிட்டு தான் வந்தோம்".இப்போதைக்கு எங்க ரெண்டு பேர்கிட்டயும்,பத்து லட்சம் இருக்கின்றது".

" மேற்கொண்டு பேங்கில் லோனுக்கு அப்ளை பண்ணலான்னு இருக்கோம்".

" ஸ்யூரிட்டி கேட்குறாங்க".

" அதுக்கு தன்னோட லேன்ட் டாக்குமெண்ஸை அங்கிள்( ஆதவன் என்ற ஆதுவின் அப்பா)தரேன்ணு சொல்லிருக்காங்க".

" பிறகு அட்வான்ஸ் கொடுக்க பத்து லட்சமும்,திங்க்ஸ் வாங்கி ஷாப் ஓப்பன் பண்ணவும்,இப்போதைக்கு உடனடியா பணம் வேண்டும்".

" பேங்க் லோன் கண்டிப்பாக கிடைத்ததும்,நான் அந்த பணத்தை கொடுத்துடுவேன்".

" நாங்க பார்த்திருக்கும் பில்டிங், மெயின்ல இருப்பதால்,அந்த இடத்திற்கு ஏகப்பட்ட போட்டி நிறைய வருத்துங்க தாத்தா".

" அதனால் தான் முதல்ல அட்வான்ஸை குடுத்து புக் பண்ணிக்குங்கனு இடத்தோட ஓனர் சொல்லுறாரென்று,இருவரிடமும் ருத்ரன் சொல்லி முடித்தான்"

" சிறிது நொடிகள் அங்கு அமைதியே நிலவியது".

" தனது தாத்தா- பாட்டி இருவரையுமே, ருத்ரன் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்".

" வெல்டன் மை பாய் என்று கைத்தட்டியவர்,பேரனை நோக்கி தனது இரண்டு கைகளையும் நீட்ட, சேரிலிருந்து எழுந்து வந்தவனை, கட்டிக்கொண்டார்".

"தன் வீட்டு பெரியவர்கள் சேர்த்து வச்ச சொத்தில் முன்னேறனுமென்று நினைக்காமல்,உனக்கான ஒரு பாதையை உருவாக்க நினைத்ததே, இந்த தாத்தாக்கு பேரானந்தம் வீரா".

" ஓகே வீரா.நீ கேட்ட போல,இருபது லட்சம் உனக்கு கடனாக நான் தரேன்".

" இரண்டு வருஷத்தில்,
வட்டியோடு நீ என்கிட்ட வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கணும்".

" இதற்கு சம்மதமா?".

" என்னாஆஆஆ வட்டி போட்டு தரணுமா,மாமா என்ன விளையாட்டுங்க இது?,என்னமோ என் பேரனை ஆறுமாசம் கடன்காரன் போல நடத்துறீங்க,இது கொஞ்சம் கூட நல்லாவேயில்லை சொல்லிட்டேனென்று கோவமாக சொல்லியவாறு அங்கிருந்து கிரிஜா பாட்டி எழுந்து சென்றார்"

" போகும் மனைவியை பார்த்தவர், அவள் கிடக்குறா வீரா,எனக்கு ஒரு முக்கியமான ஃபோர்டு மீட்டிங் இருக்கு,நான் வரேனென்று கிளம்பிச்சென்றார்".

" டார்லிங் உங்க சிங்கம் போயாச்சு என்று ருத்ரன் குரல் கொடுக்க, வேகமாக வெளியே வந்த கிரிஜா பாட்டி,சக்சஸ் என்று பேரனுக்கு ஹை- பை கொடுத்தார்".

" ம்ம்,எப்படி வீரா உன் பாட்டியோட நடிப்பு?".

" அடி தூள் தான் என்றான்".

முதல் நாள் இரவு தனது பாட்டியிடம் விஷயத்தை சொல்ல,கண்டிப்பா நீ வெளியே கடன் வாங்க தாத்தா ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.அதனால் இப்படி ஐடியா பண்ணலாமென பாட்டியும்,பேரனும் சேர்ந்தே இந்த பிளானை போட்டனர்.

" அதுவும் நன்றாக சிம்ஹன் தாத்தாவிடம் வொர்கவுட் ஆனது".

" அப்பொழுது,வீரா,அடேய் வீரா தடிமாடு எங்கடா இருக்கே என்ற குரலோடு ஆதவன் உள்ளே வந்தான்".

" ஹாலில் இருந்த இருவரையும் பார்த்தவன்,உங்க வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கீங்க?, இங்க தான் இருக்கேன்னு ரெண்டு பேரும் சொன்னால் என்னவாம் என்றபடியே மேலே இருக்கும் ஹாலிற்கு வந்தான்".

" அங்கு வந்தவனை பார்த்து பாட்டி முறைத்துக்கொண்டிருக்க,அய்யோ பேங்கிற்கு போகணுமென்று சொன்னானே என்று தலையில் தட்டிக்கொண்டே வீரா தனது அறைக்குள் வேகமாக சென்றான்".

" இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருக்கும் கிரிஜா பாட்டியை பார்த்தவன்,என்னடா கிரி,இவ்வளவு பாசமா பாக்குற??என்றபடியே அங்கிருந்த ஃஷோபாவில் உட்கார்ந்தான்".

" அப்புறம் கிரி, சிங்கம் உலாவ போயாச்சா என்றவனை, ஃஷோபாவின் மேல் இருந்த அலங்கார தலகாணியால் அடித்தார்".

" நோ கிரி நோ வயலன்ட், மீ பாவமென்றவனின் தலையில் குட்டியவர்,பிச்சுபுடுவேன்டா படுவா".

" நீ தான் என் கூட ஷாப்பிங்கிற்கு வரும் ஆளா?".

" என்னடா கிரி செய்ய, திடீர்னு எதிர்த்த வீட்டு சேட்டு பொண்ணு நம்ப வீட்டுக்கு வந்துட்டாள்.அவ கொஞ்சம் பார்க்க வெள்ளை பனியாரம் போல உருண்டையா இருந்தாலும்,கொஞ்சம் அழகா இருப்பாளா,அதான் இலவசமா கொஞ்சம் சைட் அடிச்சிக்கிட்டே பேசுனேன்,அதுல நேரம் போயிட்டு".

அந்த நேரம் ரெடியாகி அங்கே வந்த வீரா,போலாமாடா என்க,இருப்பா, ஆது கண்ணா எதுவுமே சாப்பிடவில்லை என்றவர்,ஆதவன் பக்கம் திரும்பி, ஆது என்ன சாப்பிடுறப்பா என்க, வயிறு ஃபுல்லா இருக்கு கிரி,அதனால் எனக்கு எதுவும் வேண்டாமென்றான்".

" அப்படியா, நேற்று தான் மோத்திசூர் லட்டு செஞ்சேன்,உன் பங்கை எடுத்து தனியே பேக் பண்ணி வச்சிருக்கேன் என்றவர்,சரி நீ போ கண்ணா".

" என்ன கிரி சொல்லுற?, லட்டாஆஆஆஆ?,அட என்னடா கிரி, உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை".

"இதை நான் உள்ளே வந்த உடனே சொல்லியிருக்க வேண்டியது தானே என்றவன்,வா வா கிரி என்று பாட்டியின் தோளில் கையை போட்டு கிச்சனை நோக்கிச்சென்றான்".

" போகும் இருவரையும் பார்த்த ருத்ரன்,இரண்டும் சரியான லட்டு பைத்தியங்களென்று தனது தலையில் அடித்துக்கொண்டான்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கோவை:

மகளின் ஃபோட்டோவை தடவி பார்த்த வசு,அண்ணா உன் மருமகளை பாருணா என்றவாறே,ஆர்கலியின் ஃபோட்டோவை மைக்கேலின் முன்பு நீட்டினார்.

" வசு நீட்டிய ஃபோட்டோவை வாங்கி பார்த்த மைக்கேலுக்கு,சைலஜா அம்மாவின் முகம் தான் நினைவுக்கு வந்தது".

அப்படியே பெரியம்மா போலவே என் மருமகள் இருக்காள்மா".

"அதற்கு வசுந்தராவும்,ஆமா அண்ணா என்று தலையசைத்தார்".

" ஃபாதர் நாங்கள் சென்னைக்கு போய்,ஆர்கலியை தேடுறோம், உங்களுக்கும் எதாவது செய்தி கிடைத்தால்,கொஞ்சம் சிரமம் பார்க்காமல் தயவுசெய்து இந்த நம்பருக்கு சொல்லுங்கள் என்றபடியே தனது ஃபோன் நம்பரை வசுந்தரா கொடுத்தார்".

" கண்டிப்பாகம்மா,ஆண்டவர் கிருபையில் எல்லாம் நன்மைக்கே தான்".இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், இப்படி ஒரு லெட்டர் இருக்கும் விஷயம்,எனக்கும் தெரிந்தது".

" உங்க அப்பா இந்த இல்லத்திற்கு வருடம் தவறாமல் பெரிய ஃபண்ட் கொடுக்கும் நபர்னு,இங்கு உள்ள ரெக்கார்டு சொல்லியது".

" அதற்கு பின்னர் தான் நேற்று கால் பண்ணி,ஃபாதர் விஷயத்தை பற்றி சொன்னேன் என்றார்".

"ரொம்ப நன்றிங்க ஃபாதர் என்றவர், எந்த உதவி வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ஃபாதர்".

"கண்டிப்பாக இந்த இல்லத்திற்கு என்னால் ஆனதை செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இருவரும் சென்னையை நோக்கி கிளம்பினர்".

" அண்ணா, இப்போ கிளம்பிருக்கோமே,நாம சென்னை போக எப்படியும் இரவு ஆகிடுமாயென்று வசு கேட்க, கண்டிப்பாக ஆகும் மா".

" இப்போவே மணி மூன்று ஆகின்றது".

" அப்படி இப்படி,டிராபிக் எல்லாத்தையும் கணக்கு பண்ணி பார்த்தால்,நாம சென்னைக்கு போக எப்படியும் நள்ளிரவுக்கு மேல ஆகிடும் வசு".

" ஒன்னு பண்ணலாம்,நீ ஃப்ளைட்ல போய்டு,அங்க இருக்கும் நம்ப கெஸ்ட் ஹவுஸ்ல போய் இரும்மா,நான் கார் எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்துவிடுகிறேன்".

" மைக்கேல் சொன்னதை கேட்ட வசுவோ,பரவாயில்லைணா, இத்தனை வருஷம் எதுவுமே தெரியாமல் இருந்தவளுக்கு,இப்போ எனக்கு மகள் இருக்கும் உண்மை தெரிந்து விட்டது".

" எல்லா சூழலிலும் என்னோட கூடவே இருந்தது நீங்க தான்ணா, ஒன்னும் அவசரம் இல்லை ரெண்டு பேருமே போகலாம்ணா உங்க மருமகளை தேட என்று வசு சொல்ல,இந்த அனாதை பாவிக்கு எவ்வளவு பெரிய வாழ்க்கையை கொடுத்துருக்கியேம்மா என்று சொல்லி,மைக்கேல் கண் கலங்கினார்".

" அண்ணாஆஆஆ இன்னொரு முறை இப்படி நீங்க பேசுனீங்க,பிறகு உங்களிடம் கடைசிவரையிலும் நான் பேசவே மாட்டேன் சொல்லிட்டேன்".

"அய்யோ வசு இந்த அண்ணனை மன்னிச்சிடுமா,இனி இப்படி சொல்ல மாட்டேன்.சரி,நாம போற வழியில மாத்துக்க டிரஸ் வாங்கிக்கலாம் என்றவர்,காரை சென்னை நோக்கி ஓட்டினார்".

" இரண்டு மணி நேரம் கடந்து சென்ற பின்னர்,போகும் வழியில் இருந்த கலை டெக்ஸ்டைல்ஸ் பார்கிங்குற்குள் போய் காரை நிறுத்தியவர்,அம்மாடி வசு நீ போய் உனக்கு டிரஸ் வாங்கிட்டு வாம்மா".

" அண்ணா நீங்களும் வாங்க, உங்களுக்கும் வேண்டுமேனு வசு சொல்ல,இல்ல வேண்டாம். எப்போதும் கார்ல எனக்கு ரெண்டு செட் டிரஸ் ரெடியா இருக்கும் மா,நீ மாஸ்க் போட்டு கிட்டு போய்ட்டு வா".

" சரிங்க அண்ணா என்றவாறே முகத்தில் மாஸ்கை போட்டுக்கொண்டு, அங்கிருந்து படியில் ஏறி கடைக்குள்ளே செல்ல,கடை சிப்பந்திகளோ வாங்க மேடம் வணக்கம் என்றார்".

" வணக்கம்,காட்டன் புடவை செக்க்ஷன் எங்கே?,செகண்ட் ஃப்ளோர் மேடமென்றார்".

" ஓகே என்றபடியே படியில் ஏறி மேலே வந்தவர்,அங்கு இருக்கும் ஃபோர்டு நேமில் புடவை பிரிவுகளை பார்த்து செல்ல,வாங்க மேடம், சொல்லுங்க உங்களுக்கு என்ன விலையில் வேண்டுமென்று கேட்டார்?".

" நீண்ட வருடங்களுக்கு பிறகு,இன்று தான் தனக்கான துணியை வாங்க கடைக்கு வந்திருப்பதால்,வசுக்கு எதை என்ன விலையில் எடுப்பதென்று புரியவில்லை".

" தம்பி நீங்களே நல்ல புடவையாகவே எடுத்து போடுங்க என்றார்".

" ஓகே மேடம் என்றவர்,வசுவின் கம்பீரமான தோற்றத்தையும் அவர் கட்டிருக்கும் புடவையையும் பார்த்து,அதற்கு ஏற்ற போல புடவை எடுத்து போட்டார்".

" வழக்கம் போல தான் கட்டும் வகை புடவைகளை பார்த்த வசு,அதில் இருந்த ஊதா பூ மற்றும் இளஞ்சிவப்பு நிற புடவைகளை எடுத்தவர்,அதற்கு மேட்சானவைகளையும் வாங்கிக்கொண்டு காருக்குள் வர, முக்கால் மணி நேரம் ஆனது".

" பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இருவரும் ஆளுக்கொரு காஃபியை வாங்கி குடித்து விட்டு,அங்கிருந்து சென்னை செல்லும் பாதையில் காரை ஓட்ட தொடங்கினார் மைக்கேல்".

பொள்ளாச்சி:

இன்று அவர்களது நெல் வயலில், களை எடுக்கும் வேலை நடப்பது, அப்பொழுது தான் வெற்றிக்கு நினைவு வந்தது.

" அய்யோ என்று தலையில் அடித்துக்கொண்டவன்,அடேய் வெற்றி சரியான நேரத்திற்கு டீ கொடுக்கலை என்றால்,அந்த ராக்கம்மா பாட்டி பேசியே கொன்னுடுவாள்டா".

" மணி என்னனு தெரியலையே? என்று புலம்பிக்கொண்டே கிச்சனிற்குள் செல்ல,அங்கே அவனுடைய அத்தையான வள்ளியம்மை,வேலையாட்களுக்கு போட்ட டீயை,கேனில் ஊற்றிக்கொண்டிருந்தார்".

" அத்தை, நல்ல காரியம் செய்த என்றபடியே வள்ளியம்மையிடம் வந்தவன்,அங்கிருந்த டைல்ஸ் சிலாப்பின் மேல் ஏறி உட்கார்ந்தான்".

" வள்ளியோ அவனுக்கு முன்பு தட்டை நீட்ட,வாங்கியவன் நீ சாப்டியாத்தை என்க,எதுவும் பதில் சொல்லாமல் தனது வேலையை வள்ளியம்மை பார்த்துக் கொண்டிருந்தார்".

" ஓஓஓ வள்ளி அம்மணி கோவமா இருக்காங்களாக்கும்? சரி தான் என்றவன்,குழம்பு ஊற்று என்க, வாணலில் இருந்த சாம்பாரை எடுத்து இட்லியின் மேலே ஊற்றியவர், அதனோடு சட்னியும் வைக்க,ம்ம் என்றபடியே சாப்பிட்டு முடித்தான்".

" சரி போகலாமா என்க, கையில் வேலையாட்களுக்கு போட்ட டீயும், பஜ்ஜியும் இருக்கும் கூடையோடு வெளியே சென்றவர்,அண்ணா என்று சத்தியமூர்த்தியின் ரூம் வாசலில் நின்று கூப்பிட,சொல்லு வள்ளியென்றார்".

" அண்ணா வேலை செய்யுறவங்களுக்கு டீ எடுத்துட்டு போறேன்,டைனிங் டேபிள் மேல உங்களுக்கு டிபன் எடுத்து வச்சிருக்கேன்,மறந்துடாம சாப்பிடுங்க".

"அப்புறம்,ஊர்க்காரவங்க கோயில் விஷயமாக வரேன்னு சொல்லி இருக்காங்க என்க,சரிமா என்ற சத்தியமூர்த்தி,நீங்க பார்த்து போங்க,மற்றதை நான் பாத்துக்குறேன்".

" சரிணா என்று சொல்லி வெளியே வந்தவரின் முன்பு வெற்றி தனது வண்டியை நிறுத்த,பின் சீட்டில் ஏறி உட்கார்ந்ததும்,இருவரும் அங்கிருந்து தங்களது வயலை நோக்கிச்சென்றனர்".

" எத்தனை முறை தான் நான் சொல்ல,இந்த பூஜை, புனஸ்காரமெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட புடிக்காதுனு".அது தெரிஞ்சும்,நீ கோயிலுக்கு வரைலைனு கோச்சிக்கிட்டா என்ன அர்த்தம் வள்ளியென்றான்.

வள்ளியம்மையோ எதுவும் பதில் பேசாமல் அமைதியாக வந்தார்.

அய்யோஓஓஓ இப்படி ஊமை போல வந்தா என்ன அர்த்தம்?.

இப்போ என்ன?,உனக்கு நான் கோயிலுக்கு வரனும் அவ்வளவு தானே,சரி சரி வள்ளி,நாளைக்கு நாம மருத மலைக்கு போகலாம் சரியா என்க,இவ்வளவு நேரம் அமைதியாக வந்து கொண்டிருந்த வள்ளி,தனது அண்ணன் மகனிடம் நிஜமாவா?என்றார்.

" ஆமாத்தை என்றான்".

" பேசிக்கொண்டே தங்கள் விவசாய நிலத்தில் இருக்கும் மோட்டார் கொட்டாயின் அருகில் வந்து வண்டியை நிறுத்த,தூரத்து பச்சை வயல் வரப்பும், மெல்லிய காற்றும் இருவரையும் வரவேற்தது".

" அத்தை நீ இங்கையே இரு,நான் போய் சத்தம் கொடுக்குறேன் என்று சொல்லும் போதே,அவனுக்கு ஃபோனுக்கு கால் வர அட்டென் பண்ணி பேச ஆரம்பித்தான்".

கண்ணம்மா ஆச்சி உங்க பட்டத்தில் தான் அதிகமா களை தேங்கி இருக்கு பாருங்க என்று ஜனனி சொல்ல, ஆமாடியம்மா,இதோ வந்துட்டா முதலாளியம்மா என்றார்.

ஆச்சி என்று பல்லை கடித்தவளை பார்த்தவர்,தொடப்பகட்டைக்கு எதுக்குடி பட்டுக்குஞ்சமென்க,ஒரு நாளைக்கு பார்க்க தான் போற என்று சொல்லிக்கொண்டே தனது வேலையை ஜனனி செய்ய, மற்றவர்களோ இந்த பாட்டி பேத்தி சண்டைக்கு என்றைக்கு தான் முடிவோ என்றனர்.

" ஜனனியோ,பக்கத்தில் வேலை செய்பவர்களிடம்,அக்கா கதைய பேசிகிட்டே வேலைய பாருங்களென்றாள்".

" ஏம்புள்ள சனனி காலேசுக்கு போய் படிச்சவள்,எதுக்குத்தா இந்த சேத்துல இறங்கிகிட்டு,அதான் கண்ணம்மா சொல்லுறதை தான் காது கொடுத்து கேளேன்டியம்மா என்றார் ராக்காம்மா பாட்டி"

" ஓஓஓ தோழிக்கு வக்காலத்தாக்கும் என்றவள்,இந்த வேலை தான ஆச்சி நமக்கு மூன்று வேளையும் சோறு போடும் சாமி, இது இல்லாமலா நான் காலேஜ்கு போனேன்?".

"என்னடியம்மா செய்ய,இந்த உலகத்தில் என் மவள் மல்லிகா உசுரோட இருந்தால் இந்த நிலமை வந்துருக்குமா என்று சொல்லி கண்ணம்மா பாட்டி கண் கலங்கினார்".

" அடியேய் ராக்கு,நம்ப வித்தாழ கள்ளி விறகு வெட்ட போனாலாம்,கத்தாழை முள்ளு கொத்தோட தச்சிதுனு,உம் பேத்தி வியாக்கினம் பேசுறாள்".

" அதை உதறி தள்ளிட்டு போவியா, அதை விட்டு விட்டு, நீ ஏன் கண்ணு கலங்குற என்று, தனது ஆருயிர் தோழியும் சம்பந்தியுமான கண்ணம்மா பாட்டியை, ராக்கம்மா பாட்டி சமாதானம் செய்தார்".

" அடியேய் சனனி..உச்சி வெயில் மண்டைய பொளக்குது,இங்க டீ தண்ணிக்கு வழியில்லை,ஆனால் பேச்சு மட்டும் ஏழு சீமை வரைக்கும் போகுதேயென்றார் இன்னொரு பாட்டி".

"நல்லா கேளுக்கா என்றார் ராக்கம்மா பாட்டி".

" அப்பொழுது,அக்கா வாங்க டீ குடிக்கலாமென்று வெற்றியின் குரல் கேட்டது".

" இதோ பேராண்டி வந்தாச்சே என்றார் கண்ணம்மா பாட்டி".

" தன் மனதிற்கினியவன் குரல் காதுக்குள் தித்தித்தாலும்,தன் கடமையில் கண்ணாக இருந்த ஜனனியை,அடியேய் சனனி போதும் வாடி என்றார் ராக்கம்மா பாட்டி".

" மற்றவர்களோ வயலில் இருந்து வரப்பில் ஏறி மேலே வந்தவர்கள், வாய்க்கால் நீரில் கை கால்களை கழுவி விட்டு,வள்ளி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்".

" ஏப்புள்ள ஜனனி, வாடி போகலாமென்றாள் கீதா".

" ம்ம் என்றவள் செய்த வேலையை போட்டு விட்டு,தனது தோழியோடே வரப்பில் ஏறி நடந்து வந்தாள்".

" பச்சை கலர் பாவாடை சட்டையும், அதன் மேலே ரோஸ் கலர் தாவணியும், வெயில் படாதவாறு தலையில் துண்டை கட்டிக்கொண்டு,தனது இடது பக்கம் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகியவாறு,கண்ணாடி வளையல் குலுங்க,நெற்றியில் வியர்வை மொட்டுக்கள் பூத்திருக்க, குங்குமக்கலர் ஸ்டிக்கர் பொட்டை வைத்து,நீண்ட பின்னல் ஆட சற்று தொலைவில் நடந்து வந்து கொண்டிருப்பவளை பார்த்த வெற்றி, அழகிடி என்று ரசித்து பார்த்தான்".

"இந்தா புள்ளை ஜனனி,அங்க பாருடி. வெற்றி அண்ணன் உன்னையே தான் டி பார்த்துக்கிட்டு நிக்கிது என்று தனது தோழியின் காதில் கீதா கிசு கிசுக்க, ஜனனியோ யாருக்கோ சொல்வது போல எதுவும் சொல்லாமல் தண்ணியில் முகத்தையும்,கை,காலில் உள்ள சேற்றையும் கழுவிக்கொண்டிருந்தாள்".

ஆர்கலி எங்கே....?
 
Member
Joined
Nov 8, 2025
Messages
51
படிச்ச கதை அப்படிங்கறதால கொஞ்சம் பாஸ்ட்டா படிக்க முடியுது இதுல கொஞ்சம் புதுமையை பொருத்தங்களேன் பாப்பா
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
படிச்ச கதை அப்படிங்கறதால கொஞ்சம் பாஸ்ட்டா படிக்க முடியுது இதுல கொஞ்சம் புதுமையை பொருத்தங்களேன் பாப்பா
அப்புறம் கதையே மாறிடுமே ணா😍😍😍
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top