Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 414
- Thread Author
- #1
லண்டன்:
"உலகெங்கிலும் இருக்கும் பல ஓவியர்கள், இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்".
" தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஆதிராவும் வரைய ஆரம்பித்தாள்".
" ஒருமணி நேரம் சென்று முதல் சுற்று முடிந்ததற்கான பெல் சத்தம் கேட்க, ஓவியத்தை அப்படியே வைத்து விட்டு வெளியே போக சொல்லினர்".
" இரண்டாம் சுற்று மதியம் மூன்று மணிக்கு ஆரம்பமென்றும், தகுதியானவர்களின் பெயர் அரைமணி நேரத்திற்கு முன்பு, டிஸ்பிளேயாகுமென்று சொல்லி விட்டார்கள்".
" கீழே வந்தவளை பேபிமா என ஆலீஸ் கையை பிடிக்க, நல்லா வரைந்திருக்கிறேனென்றாள். அது தெரியும் டா. இந்த முறை உனக்கு தான் இந்த கப் என்றவர், சரி வா, காலையிலும் எதுவுமே சாப்பிடவில்லை".
" இங்கு பக்கத்தில் பர்கர்,பீஸா நல்லா இருக்கும்டா பேபிமா என்க, ம்ம் என்றவாறு மூவரும் அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தனர்".
" சில நிமிடத்தில் சாப்பிட்டு வந்தவர்கள், அடுத்து போட்டி எப்படி இருக்குமென்று ஜேம்ஸ் சொல்லிக்கொடுக்க, போதும் ஜேம்ஸ்".
" பேபிமா பாவம், விடு என ஆலீஸ் சொல்ல, ஓகே என்றார்".
" நேரமும் கடந்து செல்ல, ரிசல்ட் டிக்ளர் ஆனது. ஆதிராவின் பெயர் 1067 வது இடத்தில் இருந்தது".
" இரண்டாவது சுற்றுக்கு 2500 பேர் தேர்வாகி இருந்தனர்".
" மீண்டும் அதே இடத்தில் போட்டி தொடங்கியது. இந்த முறை கொஞ்சம் சிக்கலான ஓவியங்கள் டிஸ்பிளேயானது".
" இதற்கான நேரம் இரண்டு மணி நேரமென்று அறிவித்தார்கள். நேரமும் ஓடிக்கொண்டிருந்தது. ஆதிராவிற்கு சிறிது பதற்றம் தொற்றிக்கொண்ட போது, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது நிமிடம் எடுத்தவள், மீண்டும் வரைய தொடங்கினாள்".
"இப்படியே நான்கு நாட்களாக ஒன்பது சுற்றுகளும் ஒன்னு விட்டு ஒரு நாளென்று முடிந்தது".
" இறுதி போட்டிக்கு தகுதியானவர்கள் பெயர் வர, இன்னும் சிறிது நிமிடம் இருந்தது".
" ஆலீஸோ, ஜீஸஸ் ஜீஸஸ் என் பேபிமா பெயர் இருக்கணுமென்று வாய்விட்டு பிரேயர் பண்ணிக்கொண்டிருந்தார்".
" ஆதிராவோ தனக்குள் உள்ள படபடப்பை வெளிக் காட்டிக்கவில்லை. இதோ இன்னும் ஒன் மினிட் என்று ஜேம்ஸ் சொன்னார்".
" கவுண்டவுன் பண்ணி முடிக்க, மொத்தம் 10 பேர் தேர்வாகியிருந்தனர். ஆதிராவின் பெயர் மூன்றாமிடத்தில் இருக்க, பேபிமாஆஆஆஆ என்று தம்பதிகள் இருவரும் கத்தி கூச்சலிட்டு, ஆதிராவிற்கு முத்த மழையை பொழிந்தனர்".
" ஆதிராவிற்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது. அந்த நேரம் மேகாவிடமிருந்து கால் வர, அட்டென்ட் பண்ணிய ஆலிஸ், மேகு...நம்ம பேபி பைனலுக்கு செலக்ட் ஆயிட்டா என்று கத்தி சொன்னார்".
" ஆலீஸ் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த மேகலாவும் சுந்தரும் கண் கலங்கினார்கள். இதற்காக தானே தன்மகள் நான்கு ஆண்டுகளாக நம்மை பார்க்காமல் இருக்கிறாள் என்று நினைத்தனர்".
" பட்டூஊஊஊ பட்டூஊஊஊ என சுந்தர் கூப்பிட, வார்த்தைகள் கண்ணீராய் வழிய, பெற்றோர்களை ஆதிரா பார்த்தாள்".
" அண்ணா, என் பேபிமாவை அழ வைக்க தான் கால் பண்ணுனீங்களாயென ஆலீஸ் சத்தம் போட்டு விட்டு, பிறகு பேசுறோமென்று சைகையில் சொல்லி அழைப்பை துண்டித்தவர், ஜேம்ஸ் போகலாம் என்க, மூவரும் அங்கிருந்து வீட்டிற்கு செல்லாமல் லாங் டிரைவ் சென்றார்கள்".
" இறுதிப் போட்டிக்கு இன்னும் மூன்று நாள் இருக்க, ஆதிரா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும் என்று தான் இப்படி ஜேம்ஸ் லாங் டிரைவ் கூப்பிட்டு சென்றார்.போகும் வழியில் டின்னரை முடித்தவர்கள் வெகு நேரம் சென்றே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
"மறுநாள் வீட்டில் ஆலிஸ் பிரையர் வைத்திருக்க,ஆலீஸ்க்கு தெரிந்த சிலரை அழைக்க, அவர்களெல்லாரும் வந்து கொண்டிருந்தனர்".
" பின்னர் ஆதிராவிற்காக பிரையர் பண்ண சொல்ல, அவர்களும் அவளை ஆசீர்வதித்தார்கள். வந்தவர்களுக்கு இரவு உணவாக இந்திய உணவுகளை ஆதிராவும், ஆலீஸூம் சேர்ந்து செய்திருந்தனர்".
" மீதமிருந்த இரண்டு நாட்களும் வேகமாக ஓடியது. இன்று ஃபைனல் போட்டி என்பதால், காலையில் பெற்றோர்களிடம் பேசிவிட்டு, ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்".
" பேபி போகலாமா என்று ஜேம்ஸ் கூப்பிட, ம்ம் என்றாள். என்னடா பேபிமா பதற்றமா இருக்கா என ஆலீஸ் கேட்க, அவரை அணைத்துக்கொண்ட ஆதிராவின் முதுகில் தடவி விட்டார்".
" ஆலீஸ் டைம் போகுது என ஜேம்ஸ் சொல்ல,பின்னர் மூவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்".
" பைனலில் மொத்தம் பத்து பேர் தேர்வாகி இருந்தார்கள்".
" பத்து பேருடைய ஓவியங்களை பற்றி தெரிந்தாலும், யார் யார் எந்த ஓவியர் என்பது இதுவரை அவர்களுக்கு தெரியவில்லை".
" போட்டியும் தொடங்கியது. இந்த முறை 10 பேருக்கும் போட்டி மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது".
" ஆதிரா மீண்டும் ஒருமுறை கான்செப்டை மனதிற்குள்ளே வரைந்து பார்த்தவள், தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி விட்டு வரைய தொடங்கினாள்".
" 10 பேரும் அங்கிருந்த எல்இடி டிவியில் டிஸ்ப்ளே ஆகிக் கொண்டிருந்தார்கள். சிலர் மிகவும் பதட்டமாக இருப்பதும் டிவியில் தெரிய, நடுவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்".
" இந்த முறை வரைவதற்காக, மூன்று மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது".
" போட்டி முடிந்ததற்கான பெல் சத்தம் கேட்டதும், வரைந்த ஓவியங்களை அதே இடத்தில் வைத்து விட்டு, போட்டியாளர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தார்கள்".
" ரிசல்ட் நான்கு மணிக்கு லைவ் ஷோ வில் அறிவிக்கப்படும் என்பதால், கலந்து கொண்ட போட்டியாளர்கள், அதற்கு தயாராகும் படி முன்பே சொல்லி இருந்தனர்".
"ஆதிராவும் கீழே வர பதற்றத்தோடு ஆலீஸூம்,ஜேம்ஸூம் அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவளோ தனது முகத்தில் சிரிப்பை காட்ட, அப்போதான் இவர்களுக்கும் திருப்தியாக இருந்தது".
" பைனலில் வந்த போட்டியாளர்களுக்காக, போட்டி நடத்தும் நிர்வாகமே,இரண்டாவது தளத்தில் தனித்தனி ரூம் புக் பண்ணி இருந்தனர். வா பேபிமா ரெடியாகலாமென்று இருவரும் அவளை அழைத்துக்கொண்டு அந்த அறைக்கு சென்றனர்".
"ஆதிரவுக்காக பார்த்து பார்த்து வாங்கிய பட்டுப் புடவையை எடுத்து கட்டில் மேல் வைத்த ஆலீஸ், அதற்கு மேட்சாக வாங்கிய நகைகளையும் எடுத்து வைத்திருந்தார்".
"இதை தான் போடணுமா? என மீண்டும் ஒருமுறை ஆதிரா கேட்க, ஆன்டி நீ புடவை கட்டி பார்த்ததே இல்லை தானே என்க, சரி சரி என்றாள்".
" ஆமாம்,என்ன பைனல் போட்டியை பற்றி எதுவுமே கேட்க மாட்டேங்கறீங்க இருவரும் என்று கேட்க, விடுடா பேபிமா பாத்துக்கலாம்".
" இதுவரை வந்ததே பெரிய விஷயம். அதை பத்தி நாங்க யோசிக்கவில்லை என்றனர் இருவரும். பின்னர் அவர்களுக்கான மதிய உணவு அதே ஃப்ளோரில் இருப்பதாக ரூம் பாய் வந்து சொல்லிச்சென்றான்".
வெற்றி- ஜனனி நினைவுகள்:
" ராணியோ வலியில் அழ, ஒன்னும் இல்லை கண்ணம்மா என்றவன், கோபிக்கு போன் பண்ணி காரை எடுத்து வரச்சொல்ல, சில நிமிடத்தில் அவனும் வர, மூவரும் காரில் ஏறி சென்றனர்".
" பொண்டாட்டிக்கு ஒன்னுனாக்க சின்னவர் எப்படி துடிக்கிறார் என்று சொல்லியபடியே, ராக்கம்மா பாட்டி வயலில் இறங்க, ஜனனிக்கு தான் அதை கேட்க கொலை காண்டு ஆனது".
" இந்த மனுஷன் என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரென்று தெரியவில்லையே. முதல்ல நமக்கு ஒரு முடிவு தெரிய வேண்டுமென்று உள்ளுக்குள் சூளுரைத்தவள், களை எடுக்கும் வேலையை தொடர்ந்தாள்".
" இரண்டு நாள் சென்று, இன்று மஞ்சள் நீர் விளையாட்டு என்பதால், அன்று வயல் வேலை இல்லை. ஜனனிக்கு அன்று நடந்த நிகழ்வு நினைவிற்குள் வந்தது".
" ராணிக்கும் கால் சரியாக,இன்று கோபியின் மேல் இருவரும் கலர் பொடி பூசலாமென்று வெற்றியும், அவளும், முதல் நாள் இரவே பிளான் பண்ணியிருக்க, அதேப்போல் கோபியை இருவரும் துரத்தினர்".
" அந்த நேரம் வாசலுக்கு வந்த ஜனனியின் பார்வையில் ராணி முன்னே ஓட, அவள் பின்னால் வெற்றி ஓடுவது தெரிந்தது".
"வேகமாக அவளும் அவர்கள் பின்னே சென்றாள். கோபியை துரத்திக்கொண்டு ராணியும் வேகமாக ஓடி விட ஓடிக் கொண்டிருந்தவன் காலில் முள் குத்தியதால்,அங்கையே வெற்றி நின்று விட்டான்".
"அது சந்து பகுதி என்பதால் அங்கு ஆள் இருப்பது யாருக்கும் தெரியாது. வேகமாக வந்த ஜனனி அங்கிருப்பவனை பார்த்து என்ன நடக்குது இங்கே?என்க, அவளை பார்த்தவனுக்கு, எரிச்சலாக வந்தது".
" வெற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக போக, எட்டி அவன் சட்டையை பிடித்தவள், உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.இப்படி போனால் என்ன அர்த்தம் என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவள் கன்னத்தில் இரண்டு அறை விட்டான் ".
" எவ்வளவு தைரியம் இருந்தா என் சட்டை மேல கைய வைப்பாய்?, இவ்வளவு தைரியம் யாருடி உனக்கு கொடுத்தா என்று கேட்க, யார் எனக்கு கொடுக்கணும்? என்று கேட்டாள்".
" உன்ன பாக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு ச்சீ போ என வெற்றி சொல்ல, ஓ புதுசா ஒருத்தி வந்த உடனே, அவ கூட கொஞ்சி, குலாவ, கட்டி புரள தான் ஐயாவுக்கு புடிச்சிருக்கு என ஜனனி சொல்ல,அந்த வார்த்தை மேலும் வெற்றிக்கு கோபத்தை கொடுக்க,யாரை பார்த்து என்ன பேசுறயென்று மீண்டும் இரண்டு அறை விட்டவன்,உன்னை போல ஒன்னும் அவளுக்கு சாக்கடை புத்தி கிடையாது".
"நேரத்துக்கு தகுந்த ஆம்பள பிடிக்கிறது உன் புத்தி.உனக்கு என்ன வயசு?,அதுக்குள்ள எத்தனை ஆம்பளைடி கேக்குது என்று அவள் கழுத்தை பிடித்தவன், ஏன் மணி வெளிநாடு போய்விட்டதால் உடம்பு சுகம் கேட்டு தாங்க முடியாமல், என்னை தேடுறியா என மேலும் அவள் தலையில் நெருப்பு வார்த்தைகளை கொட்டினான்".
ஏண்டி அவன் வர வரைக்கும் என்னை பார்த்து பார்த்து நல்லா இளிச்சியே,அப்ப காலேஜ்ல எத்தனை பேருக்கு பல்லை காட்டி ரூட் விட்ட.
"இப்படி ஆம்பளைக்கு அலையுறவள் பேரு என்ன தெரியுமா என்றவன், அவள் காதில் அந்த பெயரை சொல்லி விட்டு, மணி வரவரைக்கும் உனக்கு சந்தோஷம் கொடுக்கிறதுக்கு, எவ்வளவு ரேட்னு யோசிச்சு நாளைக்கு சொல்லென்று, அவளை தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்".
"இவ்வளவு நேரம் தான் நேசித்தவன் பேசிய கேவலமான பேச்சுகளை கேட்ட ஜனனி கண்ணாடியை போல சுத்தமாக உடைந்து போனாள்".
"தூரத்தில் கிடந்த தாவணியை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள், அழுத கண்களை துடைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தனது வீட்டை நோக்கி சென்றாள்".
"உலகெங்கிலும் இருக்கும் பல ஓவியர்கள், இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்".
" தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஆதிராவும் வரைய ஆரம்பித்தாள்".
" ஒருமணி நேரம் சென்று முதல் சுற்று முடிந்ததற்கான பெல் சத்தம் கேட்க, ஓவியத்தை அப்படியே வைத்து விட்டு வெளியே போக சொல்லினர்".
" இரண்டாம் சுற்று மதியம் மூன்று மணிக்கு ஆரம்பமென்றும், தகுதியானவர்களின் பெயர் அரைமணி நேரத்திற்கு முன்பு, டிஸ்பிளேயாகுமென்று சொல்லி விட்டார்கள்".
" கீழே வந்தவளை பேபிமா என ஆலீஸ் கையை பிடிக்க, நல்லா வரைந்திருக்கிறேனென்றாள். அது தெரியும் டா. இந்த முறை உனக்கு தான் இந்த கப் என்றவர், சரி வா, காலையிலும் எதுவுமே சாப்பிடவில்லை".
" இங்கு பக்கத்தில் பர்கர்,பீஸா நல்லா இருக்கும்டா பேபிமா என்க, ம்ம் என்றவாறு மூவரும் அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தனர்".
" சில நிமிடத்தில் சாப்பிட்டு வந்தவர்கள், அடுத்து போட்டி எப்படி இருக்குமென்று ஜேம்ஸ் சொல்லிக்கொடுக்க, போதும் ஜேம்ஸ்".
" பேபிமா பாவம், விடு என ஆலீஸ் சொல்ல, ஓகே என்றார்".
" நேரமும் கடந்து செல்ல, ரிசல்ட் டிக்ளர் ஆனது. ஆதிராவின் பெயர் 1067 வது இடத்தில் இருந்தது".
" இரண்டாவது சுற்றுக்கு 2500 பேர் தேர்வாகி இருந்தனர்".
" மீண்டும் அதே இடத்தில் போட்டி தொடங்கியது. இந்த முறை கொஞ்சம் சிக்கலான ஓவியங்கள் டிஸ்பிளேயானது".
" இதற்கான நேரம் இரண்டு மணி நேரமென்று அறிவித்தார்கள். நேரமும் ஓடிக்கொண்டிருந்தது. ஆதிராவிற்கு சிறிது பதற்றம் தொற்றிக்கொண்ட போது, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது நிமிடம் எடுத்தவள், மீண்டும் வரைய தொடங்கினாள்".
"இப்படியே நான்கு நாட்களாக ஒன்பது சுற்றுகளும் ஒன்னு விட்டு ஒரு நாளென்று முடிந்தது".
" இறுதி போட்டிக்கு தகுதியானவர்கள் பெயர் வர, இன்னும் சிறிது நிமிடம் இருந்தது".
" ஆலீஸோ, ஜீஸஸ் ஜீஸஸ் என் பேபிமா பெயர் இருக்கணுமென்று வாய்விட்டு பிரேயர் பண்ணிக்கொண்டிருந்தார்".
" ஆதிராவோ தனக்குள் உள்ள படபடப்பை வெளிக் காட்டிக்கவில்லை. இதோ இன்னும் ஒன் மினிட் என்று ஜேம்ஸ் சொன்னார்".
" கவுண்டவுன் பண்ணி முடிக்க, மொத்தம் 10 பேர் தேர்வாகியிருந்தனர். ஆதிராவின் பெயர் மூன்றாமிடத்தில் இருக்க, பேபிமாஆஆஆஆ என்று தம்பதிகள் இருவரும் கத்தி கூச்சலிட்டு, ஆதிராவிற்கு முத்த மழையை பொழிந்தனர்".
" ஆதிராவிற்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது. அந்த நேரம் மேகாவிடமிருந்து கால் வர, அட்டென்ட் பண்ணிய ஆலிஸ், மேகு...நம்ம பேபி பைனலுக்கு செலக்ட் ஆயிட்டா என்று கத்தி சொன்னார்".
" ஆலீஸ் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த மேகலாவும் சுந்தரும் கண் கலங்கினார்கள். இதற்காக தானே தன்மகள் நான்கு ஆண்டுகளாக நம்மை பார்க்காமல் இருக்கிறாள் என்று நினைத்தனர்".
" பட்டூஊஊஊ பட்டூஊஊஊ என சுந்தர் கூப்பிட, வார்த்தைகள் கண்ணீராய் வழிய, பெற்றோர்களை ஆதிரா பார்த்தாள்".
" அண்ணா, என் பேபிமாவை அழ வைக்க தான் கால் பண்ணுனீங்களாயென ஆலீஸ் சத்தம் போட்டு விட்டு, பிறகு பேசுறோமென்று சைகையில் சொல்லி அழைப்பை துண்டித்தவர், ஜேம்ஸ் போகலாம் என்க, மூவரும் அங்கிருந்து வீட்டிற்கு செல்லாமல் லாங் டிரைவ் சென்றார்கள்".
" இறுதிப் போட்டிக்கு இன்னும் மூன்று நாள் இருக்க, ஆதிரா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும் என்று தான் இப்படி ஜேம்ஸ் லாங் டிரைவ் கூப்பிட்டு சென்றார்.போகும் வழியில் டின்னரை முடித்தவர்கள் வெகு நேரம் சென்றே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
"மறுநாள் வீட்டில் ஆலிஸ் பிரையர் வைத்திருக்க,ஆலீஸ்க்கு தெரிந்த சிலரை அழைக்க, அவர்களெல்லாரும் வந்து கொண்டிருந்தனர்".
" பின்னர் ஆதிராவிற்காக பிரையர் பண்ண சொல்ல, அவர்களும் அவளை ஆசீர்வதித்தார்கள். வந்தவர்களுக்கு இரவு உணவாக இந்திய உணவுகளை ஆதிராவும், ஆலீஸூம் சேர்ந்து செய்திருந்தனர்".
" மீதமிருந்த இரண்டு நாட்களும் வேகமாக ஓடியது. இன்று ஃபைனல் போட்டி என்பதால், காலையில் பெற்றோர்களிடம் பேசிவிட்டு, ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்".
" பேபி போகலாமா என்று ஜேம்ஸ் கூப்பிட, ம்ம் என்றாள். என்னடா பேபிமா பதற்றமா இருக்கா என ஆலீஸ் கேட்க, அவரை அணைத்துக்கொண்ட ஆதிராவின் முதுகில் தடவி விட்டார்".
" ஆலீஸ் டைம் போகுது என ஜேம்ஸ் சொல்ல,பின்னர் மூவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்".
" பைனலில் மொத்தம் பத்து பேர் தேர்வாகி இருந்தார்கள்".
" பத்து பேருடைய ஓவியங்களை பற்றி தெரிந்தாலும், யார் யார் எந்த ஓவியர் என்பது இதுவரை அவர்களுக்கு தெரியவில்லை".
" போட்டியும் தொடங்கியது. இந்த முறை 10 பேருக்கும் போட்டி மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது".
" ஆதிரா மீண்டும் ஒருமுறை கான்செப்டை மனதிற்குள்ளே வரைந்து பார்த்தவள், தனது இஷ்ட தெய்வத்தை வணங்கி விட்டு வரைய தொடங்கினாள்".
" 10 பேரும் அங்கிருந்த எல்இடி டிவியில் டிஸ்ப்ளே ஆகிக் கொண்டிருந்தார்கள். சிலர் மிகவும் பதட்டமாக இருப்பதும் டிவியில் தெரிய, நடுவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்".
" இந்த முறை வரைவதற்காக, மூன்று மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது".
" போட்டி முடிந்ததற்கான பெல் சத்தம் கேட்டதும், வரைந்த ஓவியங்களை அதே இடத்தில் வைத்து விட்டு, போட்டியாளர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தார்கள்".
" ரிசல்ட் நான்கு மணிக்கு லைவ் ஷோ வில் அறிவிக்கப்படும் என்பதால், கலந்து கொண்ட போட்டியாளர்கள், அதற்கு தயாராகும் படி முன்பே சொல்லி இருந்தனர்".
"ஆதிராவும் கீழே வர பதற்றத்தோடு ஆலீஸூம்,ஜேம்ஸூம் அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவளோ தனது முகத்தில் சிரிப்பை காட்ட, அப்போதான் இவர்களுக்கும் திருப்தியாக இருந்தது".
" பைனலில் வந்த போட்டியாளர்களுக்காக, போட்டி நடத்தும் நிர்வாகமே,இரண்டாவது தளத்தில் தனித்தனி ரூம் புக் பண்ணி இருந்தனர். வா பேபிமா ரெடியாகலாமென்று இருவரும் அவளை அழைத்துக்கொண்டு அந்த அறைக்கு சென்றனர்".
"ஆதிரவுக்காக பார்த்து பார்த்து வாங்கிய பட்டுப் புடவையை எடுத்து கட்டில் மேல் வைத்த ஆலீஸ், அதற்கு மேட்சாக வாங்கிய நகைகளையும் எடுத்து வைத்திருந்தார்".
"இதை தான் போடணுமா? என மீண்டும் ஒருமுறை ஆதிரா கேட்க, ஆன்டி நீ புடவை கட்டி பார்த்ததே இல்லை தானே என்க, சரி சரி என்றாள்".
" ஆமாம்,என்ன பைனல் போட்டியை பற்றி எதுவுமே கேட்க மாட்டேங்கறீங்க இருவரும் என்று கேட்க, விடுடா பேபிமா பாத்துக்கலாம்".
" இதுவரை வந்ததே பெரிய விஷயம். அதை பத்தி நாங்க யோசிக்கவில்லை என்றனர் இருவரும். பின்னர் அவர்களுக்கான மதிய உணவு அதே ஃப்ளோரில் இருப்பதாக ரூம் பாய் வந்து சொல்லிச்சென்றான்".
வெற்றி- ஜனனி நினைவுகள்:
" ராணியோ வலியில் அழ, ஒன்னும் இல்லை கண்ணம்மா என்றவன், கோபிக்கு போன் பண்ணி காரை எடுத்து வரச்சொல்ல, சில நிமிடத்தில் அவனும் வர, மூவரும் காரில் ஏறி சென்றனர்".
" பொண்டாட்டிக்கு ஒன்னுனாக்க சின்னவர் எப்படி துடிக்கிறார் என்று சொல்லியபடியே, ராக்கம்மா பாட்டி வயலில் இறங்க, ஜனனிக்கு தான் அதை கேட்க கொலை காண்டு ஆனது".
" இந்த மனுஷன் என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரென்று தெரியவில்லையே. முதல்ல நமக்கு ஒரு முடிவு தெரிய வேண்டுமென்று உள்ளுக்குள் சூளுரைத்தவள், களை எடுக்கும் வேலையை தொடர்ந்தாள்".
" இரண்டு நாள் சென்று, இன்று மஞ்சள் நீர் விளையாட்டு என்பதால், அன்று வயல் வேலை இல்லை. ஜனனிக்கு அன்று நடந்த நிகழ்வு நினைவிற்குள் வந்தது".
" ராணிக்கும் கால் சரியாக,இன்று கோபியின் மேல் இருவரும் கலர் பொடி பூசலாமென்று வெற்றியும், அவளும், முதல் நாள் இரவே பிளான் பண்ணியிருக்க, அதேப்போல் கோபியை இருவரும் துரத்தினர்".
" அந்த நேரம் வாசலுக்கு வந்த ஜனனியின் பார்வையில் ராணி முன்னே ஓட, அவள் பின்னால் வெற்றி ஓடுவது தெரிந்தது".
"வேகமாக அவளும் அவர்கள் பின்னே சென்றாள். கோபியை துரத்திக்கொண்டு ராணியும் வேகமாக ஓடி விட ஓடிக் கொண்டிருந்தவன் காலில் முள் குத்தியதால்,அங்கையே வெற்றி நின்று விட்டான்".
"அது சந்து பகுதி என்பதால் அங்கு ஆள் இருப்பது யாருக்கும் தெரியாது. வேகமாக வந்த ஜனனி அங்கிருப்பவனை பார்த்து என்ன நடக்குது இங்கே?என்க, அவளை பார்த்தவனுக்கு, எரிச்சலாக வந்தது".
" வெற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக போக, எட்டி அவன் சட்டையை பிடித்தவள், உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.இப்படி போனால் என்ன அர்த்தம் என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவள் கன்னத்தில் இரண்டு அறை விட்டான் ".
" எவ்வளவு தைரியம் இருந்தா என் சட்டை மேல கைய வைப்பாய்?, இவ்வளவு தைரியம் யாருடி உனக்கு கொடுத்தா என்று கேட்க, யார் எனக்கு கொடுக்கணும்? என்று கேட்டாள்".
" உன்ன பாக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு ச்சீ போ என வெற்றி சொல்ல, ஓ புதுசா ஒருத்தி வந்த உடனே, அவ கூட கொஞ்சி, குலாவ, கட்டி புரள தான் ஐயாவுக்கு புடிச்சிருக்கு என ஜனனி சொல்ல,அந்த வார்த்தை மேலும் வெற்றிக்கு கோபத்தை கொடுக்க,யாரை பார்த்து என்ன பேசுறயென்று மீண்டும் இரண்டு அறை விட்டவன்,உன்னை போல ஒன்னும் அவளுக்கு சாக்கடை புத்தி கிடையாது".
"நேரத்துக்கு தகுந்த ஆம்பள பிடிக்கிறது உன் புத்தி.உனக்கு என்ன வயசு?,அதுக்குள்ள எத்தனை ஆம்பளைடி கேக்குது என்று அவள் கழுத்தை பிடித்தவன், ஏன் மணி வெளிநாடு போய்விட்டதால் உடம்பு சுகம் கேட்டு தாங்க முடியாமல், என்னை தேடுறியா என மேலும் அவள் தலையில் நெருப்பு வார்த்தைகளை கொட்டினான்".
ஏண்டி அவன் வர வரைக்கும் என்னை பார்த்து பார்த்து நல்லா இளிச்சியே,அப்ப காலேஜ்ல எத்தனை பேருக்கு பல்லை காட்டி ரூட் விட்ட.
"இப்படி ஆம்பளைக்கு அலையுறவள் பேரு என்ன தெரியுமா என்றவன், அவள் காதில் அந்த பெயரை சொல்லி விட்டு, மணி வரவரைக்கும் உனக்கு சந்தோஷம் கொடுக்கிறதுக்கு, எவ்வளவு ரேட்னு யோசிச்சு நாளைக்கு சொல்லென்று, அவளை தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்".
"இவ்வளவு நேரம் தான் நேசித்தவன் பேசிய கேவலமான பேச்சுகளை கேட்ட ஜனனி கண்ணாடியை போல சுத்தமாக உடைந்து போனாள்".
"தூரத்தில் கிடந்த தாவணியை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள், அழுத கண்களை துடைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தனது வீட்டை நோக்கி சென்றாள்".