• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதூர்வேதமங்கலம்:

" ஆட்டோ சத்தம் கேட்டு வாசல் பக்கம் பார்க்க,ஆர்கலியும், கருப்பாயியும் உள்ளே வந்தனர்".

"பிள்ளைகள் இருவரும் சாப்பிட்டு, ஹாலில் தூங்க,சங்கரும், பாட்டியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்".

" கையை கழுவிட்டு வந்து சாப்பிடுங்களென்ற பாட்டி, இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைக்க, நீங்க சாப்டீங்களா? என்றவாறு இருவரும் சாப்பிட்டு முடித்தனர்".

" மனைவியை பார்த்த சங்கர்,ஏ புள்ள வீட்டுக்கு போகலாமா?, சரி மாமா என்றவர், ஆளுக்கொரு புள்ளையை தூக்கி தோளில் போட்டவர்கள்,இருவரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து சென்றார்கள்".

" சிறிது நேரம் பாட்டியிடம் பேசியிருந்து விட்டு, ஆர்கலியும் உள்ளே போய் படுத்து விட்டாள்".

காலை கதிரவனும் வழக்கம் போல கிழக்கே உதயமானது.

" ஆர்கலியும் தயாராகி ஸ்கூலிற்கு சென்று விட்டாள்".

" வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, கணவருக்கு மதிய உணவையும் சமைத்து வைத்த கருப்பாயி, வீட்டை பூட்டி, வழக்கமாய் வைக்கும் இடத்தில் சாவியை வைத்து விட்டு, பாட்டியிடம் வந்து சேர்ந்தார்".

" என்ன கண்ணு வேலையெல்லாம் முடிஞ்சிதானு கேட்டுக்கொண்டே பிளவுஸ் துணியை வெட்டியவரிடம், ஆச்சி ஒரு விஷயமென்க, சொல்லு கண்ணு".

"பின்னர் பாட்டியிடம் டாக்டர் சொன்னதையெல்லாம் சொல்ல, அதைக்கேட்டவருக்கு கண்கள் கலங்கியது".

" ஆச்சி என்னாச்சி?,என்னத்தை கண்ணு சொல்லயென்றவர், ஆரா கண்ணுக்கு விவாகரத்து ஆகி 5 மாசம் ஆகுதென்கவும், என்ன ஆச்சி சொல்லுறீங்கனு பதறினார்".

" ஆமா கண்ணு, ஏழை பொண்ணாம், அதனால மருமகளா ஏத்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்கனு பாட்டி கண் கலங்க,அந்த பையன் ஒன்னுமே சொல்லலையா? ".

" ம்கும்.... பையன் தான் விவாகரத்து கேட்டது கண்ணு. விதி என்பதா இல்லை மனிதர்கள் செய்த சதினு சொல்வதானே தெரியலை".

" ஆச்சி சொல்லியதை கேட்ட கருப்பாயிக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை".

" இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல ஆச்சி என்று வருத்தப்பட்டவர், நம்ம வீட்டு பொண்ணு கூட வாழுறதுக்கு அவங்களுக்கு கொடுத்து வைக்கல, முடிஞ்சதை பத்தி இனி பேச வேண்டாம்".

"இனிமே ஆராமா வை நம்ப நல்லா பாத்துக்கலாம் ஆச்சி. கடவுள் அந்த பொண்ணுக்கு நல்ல வழி வச்சிருப்பானென்று பட்டன் கட்டும் வேலையை பார்க்க தொடங்கினார்".

" பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆர்கலியோ வயிற்றில் குழந்தைகள் உதைக்கும் அசைவை உணர, சில நொடி அமைதியானவள், அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்".

" ஓகே.. இவ்வளவு நேரம் பாடம் நடத்துனேன் இல்லையா, அதில் இருந்து சில கேள்வியை போர்டில் எழுதுறேன். அதற்கு பதில் எழுதுங்களென்று சொல்லியவள், எழுந்து போய் சிறு சிறு கூட்டல் கணக்குகளை எழுதினாள்".

" யோசித்து நிதானமா பதில் எழுதணும். யாரும் யாரையும் காப்பியடிக்க கூடாதென்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தவள், இயற்கை காற்று மேல பட, மனம் சிறிது லேசான போல இருந்தது".

"அவள் வெளியே நிற்பதை பார்த்த ஜீவிதா டீச்சர்,என்னாச்சி என்க, சும்மா தான் கா. குழைந்தைகள் அசைவு தெரிஞ்சிதா, அதான் வெளியே வந்து நிற்கிறேன்".

" ம்ம் புள்ளைங்களுக்கு இப்போ பிரேக் விடும் நேரம் தான், இரு ஆயாம்மா கிட்ட சொல்லி லெமன் ஜூஸ் ஒன்னு வாங்கி வரேனென்று , அங்கிருந்து சென்றார்".

"இடைவேளைக்கான பெல் சத்தம் கேட்டதும், பிள்ளைகள் வகுப்பை விட்டு வெளியே ஓடி வந்தார்கள்".

"ஆர்கலிக்கு ஸ்கூலுக்கு எதிரே ஆயா விற்கும் மிளகாய் பொடி போட்ட நெல்லிக்காய் சாப்பிட ஆசை வந்தது".

" பிள்ளைகள் இருக்கும் போது போனால்,டீச்சரும் நம்மை போலவென்று நினைத்து சிரிப்பார்களென்று எண்ணியவள்,அங்கிருந்தே எதிரில் இருக்கும் நெல்லிக்காயை பார்த்துக் கொண்டிருந்தாள்".

"சிறிது நிமிடத்தில் ஜீவிதா டீச்சரும் லெமன் ஜூஸோடு அங்கு வந்தவர், இதை குடிமா என்க, வாங்கி குடித்தாள்.பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்".

"அப்பொழுது அவர்களிடம் வந்த ஒரு மாணவியோ, டீச்சர் இதை ஆயா கொடுக்க சொன்னாங்க என்க, யாருமானு ஆர்கலி கேட்கவும்,எதிரில் இருக்கும் ஆயா கடையை காட்டி சொல்லி விட்டு,ஒரு பேப்பர் பொட்டலத்தை நீட்ட, அதை வாங்கி பிரித்துப் பார்க்க அதில் நெல்லிக்காய் இருந்தது".

"சந்தோஷமாக ஒன்னை எடுத்து வாயில் போட்டவள், பாட்டி கடையை பார்க்க, சாப்பிடுமா என்று பாட்டி அங்கிருந்து தலையசைத்தார்".

கலசங்காடு:

"தலை சுத்துதுனு மருமகள் சொல்லியதை கேட்டவர், ஒருவேளை அப்படி இருக்குமா?என்று மனசுக்குள் கணக்கு பண்ணிக்கொண்டு, ஏம்மா லீலா,வீட்டு தூரம் எப்போ ஆனம்மா, இரண்டு மாசம் ஆகுதுங்கத்தை என்றாள்".

"செந்தூரா என் வீட்டுக்கு நீ வந்துட்டியாப்பா என்றவர்,சரி லீலா. வா பக்கத்துல தான் மருத்துவச்சி அம்மா இருக்காங்க.ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாமென்க, சரிங்கத்தை என்றாள்".

" அதன் பின்னர் இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு, பக்கத்து தெருவிலிருக்கும் மருத்துவச்சியான சாலா பாட்டி வீட்டிற்கு வர, அங்கு சிலருக்கு பச்சிலை கொடுத்துக் கொண்டிருந்தார்".

" சிறிது நிமிடம் சென்று இவர்கள் உள்ளே போக,வாத்தா, ஏது இம்புட்டு தூரமென்க, அம்மா, மருமவள் தலை சுத்துதுனு சொல்லுது, ரெண்டு மாசம் தூரம் போகலையாம்.மாரியாத்தா என்றபடியே லீலாவின் கையை பிடித்து நாடி பார்த்தவர், நல்ல சேதி தான் தா".

"குடும்பம் தழைச்சிருக்கு,மருமகள் உண்டாகிருப்பதாக பாட்டி சொல்ல,தனது இடுப்பிலிருக்கும் சுருக்குப்பையிலருந்து காசை எடுத்து இந்தாங்கம்மா என்று கொடுத்தவர், மருமகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்".

" ஏப்புள்ள எதாவது குடிக்க கொண்டு வரட்டுமா என்க, ஒன்னும் வேணாத்தை.நேரம் ஆகிட்டு, மாமாவும் உங்க புள்ளையும் மதிய சாப்பாட்டுக்கு வந்துடுவாங்களே என்றவள், சமையல் அறைக்குள் நுழைந்தாள்".

" சாமி அறைக்கு போன மீனாட்சி, எங்குலம் நல்ல படியா பூமிக்கு வர நீங்கள் அருள் புரியணுமென்று வேண்டியவர், மருமகளோடு சமையலை செய்ய தொடங்கினார்".

"லீலாவின் மனதிற்குளிருக்கும் சந்தோஷத்தை சொல்ல வார்த்தையில்லை.எப்போ கணவன் வருவானென்று வாசல் பக்கம் ஒரு கண்ணை வைத்திருந்தாள்".

" வேகவேகமாக கேசரி கிண்டிய மீனாட்சி, லீலா இந்தாமானு மருமகளுக்கு ஒரு வாய் ஊட்டியவர், என்ன சாப்பிட ஆசப்படுறியோ அத்தை கிட்ட கேளுத்தா என்றார்".

" மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்த கணவரிடம், மீனாட்சி விஷயத்தை சொன்னார். அதைக்கேட்ட வீரையன் அப்பனே முருகா என்றார்".

" பின்னர் சிறிது நேரத்தில் ஜெய்யும் வர, அவன் சாப்பிடும் வரை அமைதியாகயிருந்த லீலாவை கண்டவன்,என்ன உம்முனு இருக்க?".

" ஒன்னும் இல்லைங்க என்றாள்.பின்னர் எழுந்து போய் கையை கழுவியவன், வழக்கம் போல சிறிது நேரம் மதியத்தில் படுத்து விட்டு மாலை 5 மணிக்கு மேல தான் கடைக்கு போவான்".

" உள்ளே போய் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருக்க, லீலாவும் சாப்பிட்டு அறைக்குள் வந்தவள், கதவை தாழிட்டு தயங்கி நின்றாள்".

" என்னடி புதுசா ரூமிற்கு வர போல நிக்கிற?, உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் என்க, ம்ம் சொல்லு.அதுல என்ன தயக்கமென்றான்".

"கணவனின் அருகில் வந்தவள், அவன் காதில் விஷயத்தை சொல்ல, அதைக்கேட்ட ஜெய்யிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை".

"அதன் பின்னர் வந்த நாட்கள் மசக்கையின் அவதிகளோடும், கணவர் வீட்டின் அன்பிலும் லீலா திக்குமுக்காடி போனாள்".

"விஷயம் கேள்வி பட்ட உடனே நகுலன் மகளை பார்க்க வந்து விட்டார்.பத்து நாட்கள் மகளோடு இருந்து விட்டு தான் மீண்டும் இலங்கைக்கு சென்றார்".

" அதன் பின்னர் வந்த நாட்களில் வீரையன், மீனாட்சி, ஜலால், அவர் மனைவி, ஜெய்யின் நண்பர்கள் குடும்பத்தினர்களென்று, எல்லாரும் அவரவர் கையில் கிடைத்ததை எல்லாம் லீலாவிற்கு சாப்பிட வாங்கியும், செய்தும் கொடுத்தனர்".

" ஏழாவது மாதம் ஆரம்பமானது. மனைவியிடம் அழகு மேலும் கொஞ்சம் கூடி இருக்க, ஜெய் தான் அவஸ்தை பட்டு போனான்".

" அவனை கண்டு லீலாவிற்கு சிரிப்பு தான் வந்தது. "

"மாதங்களும் வேகமாக கடந்தது. ஒன்பதாவது மாதத்தில் வளையல் காப்பு வைத்துக் கொள்ளலாமென்று முன்பே நகுலனிடம் சொல்லி விட்டனர்".

" அம்மாவசையிலிருந்து ஏழாவது நாளை கணக்கு பண்ண ஞாயிற்றுக்கிழமை வந்தது. எல்லாருக்கும் வசதியாக இருக்கும் என்பதால், அந்த நாளையே பிக்ஸ் பண்ணினார்கள்".

" சொந்த பந்தம், தெரிந்தவர்களுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்லி விட்டனர்".

"தாய் வீட்டிலிருந்து தான் ஒன்பது வகை சாதம் சீர் வரணுமென்பதால், நான் தான் செய்வேனென்று ஜலால் சொல்லி விட, கொஞ்சம் என்னையும் கூட்டு சேர்த்துக்குங்கணா என்றார் நகுலன்".

" சமையலுக்கு ஆட்களை வைத்து ஒன்பது விதமான சாதத்தை செய்து கொண்டு, தெரிந்த சிலரையும் கூப்பிட்டு சீர் வரிசைகளோடு பக்கத்து தெருவிலிருக்கும் ஜெய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்".

" வந்தவர்களை வீரையனும், ஜெய்யும் வரவேற்து உட்கார வைத்தனர்.பரமுவிடமும், பன்னீரிடமும் நீங்க எப்படா இதை போல விசேஷத்திற்கு கூப்பிட போறிங்களென்க..."

" என் மச்சான் மவளை( ஜெய்) தான் கட்டலானு இருக்கோமென்க, அகராதி புடிச்ச பயலுங்க என்றனர்"

"நல்ல நேரம் தொடங்கியதும், சுமங்கலி பெண்கள் வந்து, லீலாவிற்கு இரண்டு கைகளிலும் வளையலை போட்டு, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்".

" பங்ஷனை வெகு விமர்சையாக கொண்டாடினர். லீலாவின் தந்தையும் ஜீவானந்தமும் ஆனந்த கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்".

"சம்பிரதாயப்படி வளையல் போட்ட பெண் தாய் வீட்டிற்கு சென்று வரணும் என்பதால், ஜலாலும் அவர் மனைவியும் லீலாவை வீட்டிற்கு அழைத்து போய் ஒரு வாரம் வைத்திருந்தனர்".

"காலை, மாலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சி மருமகளை போய் பார்த்துட்டு வந்து கொண்டிருந்தார்".

" ஒரு வாரம் கடந்து செல்ல காலையிலே ஜெய்யும் மாமன் வீட்டிற்கு வந்தான். என்ன மாப்பிள்ளை என்க, அதான் உங்க மகள் ஒரு வாரம் இருந்தாளே, இப்போ கூப்பிட்டு போறேன் மாமா என்க, ஜலால் தனது மருமகனை பார்த்து சிரித்தார்".

" அதுக்குனு இவ்வளவு காலையிலேவா என்றவர், சாப்பிட்டு பிறகு கூப்பிட்டு போப்பா".

" அதைப்போலவே காலை டிபன் முடிந்ததும்,ஜலால் தம்பதியிடம் சொல்லிக்கொண்டு மனைவியோடு தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்"

" பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வயிறு கீழே இறங்க தொடங்கியது.எப்போ வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாமென மருத்துவச்சி பாட்டி சொல்லியிருக்க, மீனாட்சியும் தயாராகவே இருந்தார்".

"பிரசவத்திற்கு ஒரு வாரம் இருக்க, இரவில் தூங்கிக்கொண்டிருந்த லீலாவிற்கு வலி வந்தது.சில நேரத்தில் சூட்டு வலியாகவும் இருக்குமென்று, மீனாட்சி முன்னவே சொல்லியிருக்க, அதுதானென்று இருந்து விட்டாள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கபிலன்-ரியா நினைவுகள்:

" காரில் அமைதியாக வரும் மருமகனை பார்த்த தேவராஜ், என்னப்பா காதல் புறா தனியா வந்துடுச்சினு வருத்தமா? என்க, தனது மாமாவின் கிண்டலை கேட்டவன், எதே என்றான்".


" மருமகனின் முகத்தை பார்த்து சிரித்துவிட்டார்".

" நான்கு மணி நேர பயணத்தில் இருவரும், சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

" டிரைவரை பத்திரமாக வீட்டுக்கு போகும்படி சொல்லி விட்டு,இருவரும் லக்கேஜோடு உள்ளே போனவர்கள், ஃபார்மாலிட்டீஸ் முடித்து காத்திருக்க, அவர்களுக்கான விமானம் வந்து விட்டதாக சில நிமிடத்தில் அறிவிப்பு வந்தது".

" இருவரும் உள்ளே போய் அவர்களுக்கான இருக்கையில் உட்கார,சிறிது நிமிடத்தில் விமானமும் ஹைதராபாத் நோக்கி பறந்தது".

" நல்லவிதமாக ஹைதராபாத் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள், ஏற்கனவே புக் பண்ணியிருந்த ரூமில் போய் தங்கியவர்கள், காலையில் ட்ரைனிங் நடக்கும் இடத்திற்கு வந்த பிறகு தான், சத்தியமூர்த்தியை சந்தித்தது".

" அப்பொழுது இருமல் சத்தம் கேட்க, இவ்வளவு நேரம் தன் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கியிருந்த கபிலன், நிகழ் உலகிற்கு வந்தவன், திரும்பி பார்க்க,விஷாலிடமிருந்து தான் இருமல் வந்தது".

" பின்னர் ஃபோனில் மணியை பார்க்க, நள்ளிரவு 3 மணி என்று காட்டியது .சிறிது நேரம் தூங்குவோமென்று கண்ணை மூடினான்".

"நண்பர்கள் மூவரும் அவரவர் பர்த்தில் தூங்குவதை கண்ட ரியா, தனது ஃபோனிலுள்ள மாமனின் ஃபோட்டோவை பார்த்தாள்".

"நிச்சயத்தின் போது எடுத்த புகைப்படங்களை தீபன் தான் அவளின் மொபைலுக்கு அனுப்பி வைத்தான்".

" சில மணி நேரம் தான் ஆகின்றது இருவரும் வெவ்வேறு பயணத்திற்கு கிளம்பி, ஆனால் ரொம்ப நாள் விலகி இருப்பது போல ரியாவிற்கு தோன்றியது".

" என் மேல் உங்களுக்கு எவ்வளவு அன்பு மாமா, என்றோ நான் சொன்ன வார்த்தைக்காக, இன்று அதை நிறைவேற்ற போயிருக்கீங்களே, நீங்கள் கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோனு தெரியவில்லை".

" பார்வைக்கு பகட்டா டிப் டாப்பா இருப்பது தான் வாழ்க்கைனு, இந்த முட்டாள் இருந்துட்டேன் மாமா".

" எத்தனையோ முறை உங்க மனசு நோகுற போல நான் நடந்துருக்கேன். அப்போலாம் கிராமத்தான், சேற்றுல இருந்து வந்தவன்னு எண்ணம்".

"இப்போ உங்களோட உண்மையான அன்பை புரிஞ்சிக்கிட்டேன். லவ் யூ மாமாயென்று கபிலன் போட்டோவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு தூங்கலானாள்".

இனி..... கோயம்புத்தூர்

" மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ்,இரவு பதினோரு மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷனில் வந்து நின்றது".

" இது தான் லாஸ்ட் ஜங்ஷன் என்பதால் அனைவரும் இறங்கினர். அலாரம் வைத்து படுத்ததால்,நண்பர்கள் நால்வரும் தங்கள் லக்கேஜோடு கீழே இறங்கி, பிளாட்பார்மிலிருந்து வெளியே வந்தவர்கள், அங்கிருந்த டாக்ஸியில் ஏறி ஹோட்டலுக்கு சென்றனர்".

" சிறிது நிமிடத்தில் ஹோட்டல் வர, டாக்ஸியில் இருந்து கீழே இறங்கியவர்கள் வெல்கம் என்ற சத்தம் கேட்டு தீபனை தவிர மற்ற மூவரும் அதிர்ந்து பார்த்தார்கள்".

" திரும்பி தீபனை பார்க்க, சர்ப்ரைஸ் என்றான்".

" அங்கே இவர்களோடு படித்த இன்னும் சில நண்பர்கள் இருந்தனர்".

" கங்கிராட்ஸ் ரியா என்று கட்டி அணைத்து வாழ்த்துக்கள் சொல்ல, ஹேய் சாரி காய்ஸ். திடீர்னு பிக்ஸ் ஆகிட்டு, அதான் உங்களிடம் சொல்ல முடியவில்லை,இட்ஸ் ஓகே டி".

" இந்த எருமை மாடு சொல்லுச்சியென தீபனை கையை காட்டினார்கள்".

" சரி சரி நேரம் ஆகிட்டு வாங்க முதல்ல சாப்பிடலாமென்று மேகா சொல்ல, தின்னி மூட்டையே என்றான் மித்ரன்".

" ஆமா இவ சாப்டாம வாய மூடிட்டு வேடிக்கை பார்ப்பவன், ஆமாண்டி என்றான். ஓஓஓ திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பஞ்சாயத்தைனு ஆதிரா கேட்க, சரி சரி வாங்க முதல்ல பிரஷ் ஆகிட்டு சாப்பிடலாம் என்று நண்பர்கள் 10 பேரும் அவர்கள் புக் பண்ணிய அந்த பெரிய அறைக்குள் சென்றனர்"

" பிரஷ் ஆகி வந்தவர்கள்,வாங்கி வைத்த உணவை பேசிக் கொண்டே சாப்பிட முடித்து, ஆளுக்கு ஒரு பெட்டில் படுத்து தூங்கினர்".

" நன்கு தூக்கத்தில் இருந்தவர்களை மித்ரனும், வினோத்தும் எழுப்பினார்கள். அடேய் எதுக்குடா இப்படி மிட் நைட்ல எழுப்பற? என்று பிரியா கேட்க, அடி எருமை மாடு காலையிலேயே கிளம்பினால் தாண்டி, டிராபிக் இல்லாமல்,சீக்கிரமா மலையேறி நம்ம ஊட்டிக்கு போக முடியும் ,எழுந்திரிங்களென்று, நண்பர்களை இருவரும் எழுப்பி விட்டனர்"

" ரோஜா எல்லாரும் குளிச்சிட்டு வந்த பிறகு என்ன எழுப்புடி என்று மேகா சொல்ல, அதைக்கேட்ட ஆர்த்தியோ இந்த தூங்கு மூஞ்சிய கட்டிக்கிட்டு எவன் தான் பாடுபட போறானோனு தலையில் அடித்துக் கொண்டாள்".

" நீங்க முதல்ல குளிச்சிட்டு ரெடியா இருங்க.பிறகு நாங்கள் தயாராகிறோம் என்றபடி ஆண்கள் நான்கு பேரும் வெளியே போனவர்கள், சிறிது நிமிடத்தில் ஒரு பிளாஸ்கில் காஃபி வாங்கிட்டு வந்து கொடுத்து சென்றனர்".

" அதே போல தோழிகள் ஐந்து பேரும் குளித்து தயாராக, ஆர்த்தி போய் மேகாவை அடித்து எழுப்ப, பதறி எழுந்தவள், தோழியை முறைத்துக்கொண்டு வேகமாக ரெஸ்ட்ரூமிற்குள் போனவள், குளித்துவிட்டு வந்து ரெடி ஆனதும், மித்ரனுக்கு கால் பண்ணிய ஹேமா, வாங்கடா என்றாள்".

" நண்பர்கள் உள்ளே வந்ததும், தோழிகள் வெளியே உள்ள ஷோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு, அடுத்து என்ன பிளான்னு டிஸ்கஸ் பண்ணினர்".

வெற்றி- ஜனனி நினைவுகள்:

கோதண்டமும்- சத்தியமூர்த்தியும் பேசிக்கொண்டிருக்க, அங்கு வந்த வெற்றி, பனி அதிகமாயிருக்கு, உள்ளே வாங்களென்க, வா கண்ணு என்றவர், ஒரு விஷயம் கேட்கணுமென்றார்".

" சொல்லுங்க மாமா என்க, ராணி அம்மணிய நம்ப பாலாஜிக்கு பாக்கலானு மனசுக்கு ஒரு எண்ணம் கண்ணு".பொண்ணை பார்த்ததும் உங்கத்தைக்கும் எனக்கும் புடிச்சிருக்கு. மேற்கொண்டு அம்மணி ஊட்ல பேசலாமானு கோதண்டம் கேட்க, தாரளமா பேசலாம் மாமா".

" ராணிக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு தான் இருக்காங்களென்று வெற்றி சொல்ல, அப்படியா கண்ணு, சந்தோஷம்".எப்படியும் கோயில் திருவிழா முடிஞ்சி தான் அம்மணி ஊட்டுக்கு போகும், அதற்கு முன்ன ஒரு எட்டு போய் நாம அவங்க ஊட்ல பேசிட்டு வந்துரலாமா,பேசலாம் மாமா என்றான்".

" நீ என்னடா மூர்த்தி சொல்றனு நண்பனிடம் கேட்க, அதான் மாமனும் மருமகனுமே பேசுகிறீர்களேடா. இதுல நான் என்ன சொல்ல போறேன்".

"ராணி ரொம்ப தங்கமான பொண்ணு. தாராளமா நம்ம பாலாஜிக்கு கட்டி வைக்கலாமென்க,எதுக்கும் ஒரு எட்டு போய் பொண்ணு கேட்டு பார்க்கலாமேடா".

"அதுக்குள்ள வேற யாராவது முந்திக்கிட்டாங்கன்னா என்ன பண்றது?,என்னமோ தெரியலை. கோயிலுக்கு வரும் போது அந்த பொண்ணு முகம் தான் முதல்ல தெரிஞ்சது".

"நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்கும்னு பட்டது டா. அதனால தான் டா என்கவும், சரிடா. உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்".
நாளைக்கே நாம போயிட்டு வரலாம் என்க,பின்னர் மூவரும் மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு அங்கிருந்து சென்றனர்".

"மறுநாள் காலையிலே வெற்றி, மூர்த்தி, கோதண்டம் அவர் மனைவி பரணி ஆகிய நால்வரும், வள்ளியிடம் சொல்லிக்கொண்டு பழனிக்கு சென்றார்கள்".

" வெற்றி தான் கார் ஓட்டினான்".

" போகும் வழியிலே காலை டிபனை முடித்துக்கொண்டார்கள்".

" ஆமாடா, பொண்ணோட பொருளாதாரத்தை எல்லாம் எதுவுமே கேட்கலையே டா கோதண்டம் என்க, நம்ம கிட்டே இன்னும் நாலு தலைமுறைக்கு சொத்து இருக்கே மூர்த்தி.பொண்ணு கொடுத்தாங்கன்னா போதும் டா. அவங்க செல்வாக்கு நிலைமையை பத்தி, நமக்கு என்ன கவலை".

"கட்டுன புடவையோட வரட்டும்.வீட்டுக்கு நமக்கு மருமவள் மகாலட்சுமியா தான் வேண்டும்.நம்ப பவித்ராவுக்கு எதாவது கேட்டாங்களா?, இல்லை தானே டா". நாம பார்த்து செய்யலையா, இந்த காலத்தில் நல்ல குணமுள்ள பெண்கள் கிடைப்பது தான், குதிரைக்கு கொம்பு முளைத்த கதையா இருக்கு".

" நம்ப வீட்டுக்கே கூட படிச்ச புள்ளைய மருமவன் கூட்டிட்டு வந்துருக்காறென்றால், அம்மணி குணம் எப்படினு சொல்லவா வேண்டுமென்றார்".

" பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு 1 1/4 மணி நேரம் என்றாலும்,காலை உணவை சாப்பிட காரை நிறுத்தியதால், அங்கே அரை மணி நேரமானது".

இரண்டு மணி நேரம் பயணத்தில் பழனிக்கு வந்து சேர்ந்தவர்கள், அங்கிருந்து ராணி வீட்டிற்கு செல்லும் வழியில் காரை திருப்பியவன், கம்பர் தெருவென்ற போர்டு இருந்த தெருவிற்குள் சென்றவன், கடைசியாக இருந்த வீட்டின் முன்பு போய் நிறுத்தினான்".

" கார் ஹாரனின் சத்தம் கேட்டு உள்ளே இருந்த வேலையாள் கதவை திறந்து விட, உள்ளே போய் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு இறங்குங்களென்றான்".

"பின்னர் நால்வரும் கீழே இறங்கினர். அங்கிருந்து சுற்றி பார்த்த கோதண்டம், என்னடா பெரிய இடம் போல என்க,சத்தியமூர்த்தியோ,வாடா பார்த்துக்கலாமென்றார்".

" ம்ம் என்றவர்கள் அங்கிருந்து வீட்டை நோக்கி சென்றார்கள். சில அடி தூரத்தில் இவர்கள் வருவதை பார்த்த ராணியின் அண்ணன், வெற்றியும் சத்தியமூர்த்தியிடம், வாடா, வாங்கப்பா என்றவன், மற்ற இருவரையும் வாங்க வாங்கயென்று வீட்டினுள்ளே அழைத்து போய் உட்கார வைத்தவன், அம்மா என்று குரல் கொடுத்தான்".

" இதோப்பா என்று அங்கு வந்த பார்வதி அண்ணா, வெற்றி என்று அதிர்ந்தவர் பின்னர் வாங்க வாங்க என்றார்".

" சொல்லவே இல்லையே என்றவர், வள்ளி நல்லா இருக்கா? என்க,ம்ம் அத்தையும் மருமகள் அட்டகாசம் தாங்க முடியலைமானு வெற்றி சொல்ல, ராணியின் அண்ணா ராகவோ சிரித்து விட்டான்".

"அப்பாவுக்கு போன் பண்ணு அண்ணா வந்திருக்காங்க என்று சொல்லும் போது,மூர்த்தி என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்த ராஜதுரை, கோதண்டம் தம்பதியினரையும் பார்த்து வாங்க என்றார்.அவர்களும் தலையை யோசித்து வரோம் என்றனர்".

அப்புறம் கோயில் பூஜை எல்லாம் எப்படி போகுது ?.

உன் பொண்ணு என்ன அட்டகாசம் பண்ணுகிறாளாலென்று சத்தியமூர்த்தி கிட்ட கேட்க, அப்பா அந்த கேள்வியை என்கிட்ட கேட்கணுமென்றான் வெற்றி".

" வாஸ்தவமென்று சிரித்தவர் பார்வதி குடிக்க கொண்டு வந்து கொடுத்தியா என்க, ம்ம் தங்கச்சி கொடுத்துச்சு என்றார் சத்தியமூர்த்தி".

" அப்புறம்ணா, ஒரு நல்ல விஷயம் பேசிட்டு போகலாமென்று தான் வந்தோம்ன சத்தியமூர்த்தி சொல்ல, சொல்லுப்பா என்றார்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top