Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
" வழக்கம்போல் ஆர்கலி பள்ளிக்கு சென்று வர,பாட்டி துணி தைப்பதை தெரிந்து, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், எனக்கும் சட்டை தைத்து தர முடியுமாயென்று கருப்பாயிவிடம் கேட்டு அனுப்பினார்கள்".
"ஆச்சியும் தச்சி கொடுக்கிறேனென்றார்".
"அதே போல் இரண்டு பேரின் பிளவுஸ் துணியை வாங்கிட்டு வந்து கொடுக்க பாட்டியும் தைத்துவிட,அதை போட்டு பார்த்தவர்கள்,சரியாக இருக்கென்று பணத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்".
"விஷயம் தெரிந்து ஊர்மக்களோ நேரடியாக வீட்டுக்கு வந்தே கொடுக்க ஆரம்பித்தனர்".
" ஓர் நாள் பாட்டி துணி தைத்துக் கொண்டிருக்க,ஆச்சி நானும் சும்மா தான் இருக்கேன். எனக்கும் சொல்லிக் கொடுங்களஎன்று கருப்பாயி கேட்க,சரி கண்ணு".
"நீ முதல்ல எம்மிங் பண்றதுக்கு, காஜா கட்டுறது, பட்டன் கட்டுறதுலாம் எப்படினு கத்துக்கோமா என்று பாட்டி சொல்லிக் கொடுத்தார்".
"முதலில் தடுமாறிய கருப்பாயி, பிறகு போக போக பழகிக் கொண்டார். இருவரும் பேச்சு துணையோடு துணிகளை தைப்பதும், தோட்டத்தில் இருக்கும் காய்கறி செடிகளை பராமரிப்பதுமாய் பொழுது போய்க் கொண்டிருந்தது".
" எதுக்கு இந்த வேலையெல்லாமென ஆர்கலி தான் சொல்லிக் கொண்டேயிருக்க தனது பேச்சிலேயே அவளை சரி கட்டினார் பாட்டி".
"ஆர்கலியும், பாட்டியும் சதூர்வேதமங்கலத்துக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று, மதிய உணவு நம்ம வீட்டில் தான் என ஆர்கலி சொல்லிவிட்டதால், கருப்பாயி தனது இரண்டு பிள்ளைகளையும் அங்கு கூட்டிட்டு வந்திருந்தார்".
" பிள்ளைகள் இருவரும் ஆர்கலிக்கு பயந்து கொண்டு முன் பக்கமாகவே விளையாண்டனர்".
" அப்போது, அம்மாடி ஆராவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும். இங்க வந்து ரெண்டு மாசம் ஆயிடுச்சு என்க, கடந்த இரண்டு மாதமாக செக்கப்பிற்கு செல்லவில்லையேனு அப்பொழுது தான் ஆர்கலிக்கும் ஞாபகம் வந்தது".
" ஆராமா சாயந்திரம் போகலாமா?, சரிங்கண்ணி என்றாள். பின்னர் அசைவ உணவை சமைத்து சாப்பிட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்தவர்கள், தயாராகி, பிள்ளைகளை ஆச்சியிடம் விட்டு விட்டு,பாட்டியிடம் சொல்லிக் கொண்டு, டவுனில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றனர்".
" அண்ணா, நாகேஷ்வரி டாக்டர் கிட்ட போங்களென்று கருப்பாயி சொல்ல சரிமா என்றவர், அதைப்போல பாண்டியன் மருத்துவமனையின் முன்பு போய் ஆட்டோவை நிறுத்தினார்".
" தங்கச்சிமா முடிச்சிட்டு சொல்லுங்க வரேனென்று ஆட்டோக்காரர் அங்கிருந்து சென்றார்".
" நல்ல கைராசியான டாக்டர் ஆராமா, சுற்றி இருக்கும் எல்லாரும் இவங்க கிட்ட தான் பெரும்பாலும் வருவாங்க என்றவாறு உள்ளே சென்றவர், ரிசப்ஷனில் இருப்பவரிடம் டோக்கன் கேட்க, பேரு சொல்லுங்க என்றார்".
" ஆர்கலி என்க, 20 வது டோக்கனை கொடுக்க, வாங்கிக்கொண்டு, அங்கு காலியாக இருந்த சேரில் போய் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்".
"இவர்களும்,இன்னும் அங்கு காத்திருந்தவர்களும், சுவற்றில் ஒளிபரப்பான படத்தை பார்த்து நேரத்தை கடத்தினர்".
" அரை மணி நேரம் கடந்திருக்க, கூட்டமும் அதிகமானது".
" கர்பிணி பெண்களும், குழந்தையோடுமே பலர் வருவதும் போவதுமாக இருந்தவர்".
" டோக்கன் நம்பர் 20 என்று பெல் சத்தத்தோடு கேட்க, இருவரும் எழுந்து கதவை திறந்து உள்ளே போக, நடுத்தர வயதில், கருணை முகத்தோடும், மிகவும் எளிமையாக இருந்த டாக்டர் நாகேஷ்வரி இவர்களை பார்த்து சிரித்தார்".
" சொல்லுங்களென்க, பாப்பா மாசமா இருக்குங்க மேடம், அதான் காட்டிட்டு போகலானு வந்தோமென்க, சரி என்றவறே, ஆர்கலியிடம் டீட்டைல்ஸை கேட்டு தெரிந்து கொண்டவர், உள்ளே போய் படுங்க என்க, ஆர்கலியும் அங்கிருந்த கதவை திறந்து உள்ளே சென்றவள், ஸ்டூலின் மேல் ஏறி பெட்டில் படுத்தாள்".
" சில நொடியில் டாக்டரும், நர்சும் உள்ளே வந்தனர். பின்னர் செக் பண்ணி பார்த்தவர், ஒருக்களித்து எழுந்திரிச்சிங்குங்களென்று சொல்லி விட்டு, வாஸ்பேஷனில் கையை கழுவியவர், அங்கிருந்து வெளியே சென்றார்".
" புடவையை சரி பண்ணி கட்டிக்கொண்ட ஆர்கலி, கதவை திறந்து வந்து கருப்பாயின் பக்கத்து இருக்கையில் உட்கார, வரும் ஞாயிற்று கிழமை ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் மா".
" உடம்பில் நீர் குறைவா இருக்குற போல தெரியுது. நல்லா தண்ணி குடிங்க, வேற எதாவது ஒவ்வாமை இருக்கா?, இல்லைங்க டாக்டர் என்றாள்".
" ஓகே என்றவர் வேக்சின் போட்டுக்குங்களென்று ஆர்கலியின் இடுப்பில் போட்டு விட்டார்".
" ரெகுலரா சாப்பிடும் விட்டமின் மாத்திரை போதுமென்றவர், சீட்டில் எழுதி கொடுக்க, தேங்க்யூ டாக்டரென்று இருவரும் அந்த அறையிலிருந்த கதவை திறந்து வெளியே வந்தவர்கள், டாக்டர் பீஸை அங்கிருந்தவரிடம் கொடுத்து விட்டு மெயின் கேட்டிற்கு வந்தனர்".
"அப்பொழுது அக்கா அக்கா என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, கருப்பாயியை பார்த்த அந்த நர்ஸ், மேடம் உங்களை கூப்பிடுறாங்களென்றாள்".
" அப்படியாமா என்றவர், ஆராமா நீ ஆட்டோக்கு போன் போட்டு வர சொல்லு, நான் போய் என்னனு கேட்டு வரேனென்று உள்ளே சென்றவர், கதவை திறந்து போய் டாக்டர் என்க, வாங்கம்மா".
" உங்க கூட வந்த பொண்ணுக்கு நீங்க எப்படி வேண்டும் என்க,அண்ணிங்க மேடம். ஓகே மா என்றவர்,ரொம்ப பலகீனமா இருக்காங்க".
" சரியா சாப்பிடுறாங்களா?, ஏதோ ஒரு பிரச்சினையை மனசுல வச்சி அதிலே இருக்காங்க போல, நார்மலா இருக்க போல இருந்தாலும், அவங்க அப்படி இல்லை மா".நல்லா தூங்க சொல்லுங்க,நேரம் கிடைக்கும் போது, அக்கம் பக்கம் இருக்கும் இடத்திற்கு கூப்பிட்டு போங்கள்".
" ஆமா அந்த பொண்ணு வீட்ல இருக்காங்களா?, இல்லை வேலைக்கு போறாங்களா?, டீச்சரா இருக்குங்க மேடம்".
" ஓ என்றவர் வீட்டுக்காரர்?, தம்பி வெளிநாட்டில் இருக்குதுங்க, ம்ம் ஒருவேளை அவங்க கூட இல்லை என்ற வருத்தமாக கூட இருக்கலாம்".
" சரி இதுலாம் இந்த நேரத்தில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் தான், பார்த்துங்குங்க என்கவும், ரொம்ப நன்றிங்க மேடம் என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்".
"என்ன அண்ணி ,எதுக்கு கூப்பிட்டாங்க? என்று ஆர்கலி கேட்க,இல்லமா நம்ம பின்னாடி வீட்ல இருக்காங்க இல்ல கமலா அக்கா. அவங்களுக்கு இவங்க தான் ஆபரேஷன் பண்ணாங்க.அதை பத்தி விசாரிச்சாங்க என்று சமாளித்தார்".
வெற்றி- ஜனனி நினைவுகள்:
" அதன் பின்ன வந்த நாட்களெல்லாம் ஜனனி ஒருத்தி இருப்பதை வெற்றி கண்டு கொள்ளவே இல்லை. அவளும் யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள்ளே கவலையானது".
"நாட்களும் வேகமாக ஓடியது 12th ரிசல்ட் வர, கீதாவும் ஜனனியும் பாஸ் பண்ணி, ஒரே காலேஜில், ஒரே கோர்ஸில் சேர்ந்து விட்டனர்".
"கல்லூரி செல்ல தொடங்கிய இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவர்கள் ஊரில் கோயில் திருவிழா ஆரம்பமானது. அதற்காக,வெற்றி தனது தோழியான ராணியையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்".
" ஜனனியும்,கீதாவும் தாமரை குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது,ஜனா, வெற்றி அண்ணா வீட்டிற்கு ஒரு அக்கா வந்திருக்காங்கடி".
" நேற்று மல்லிப்பூ பறிக்க நான் பெரிய வீட்டிற்கு போனேனா, அப்போ ரெண்டு பேரும் அங்க திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்கடி. ரெண்டு பேருக்கும் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு தெரியுமாடி என்க, என்னடி சொல்ற என்று ஜனனி உள்ளுக்குள் அதிர்ந்தாலும், சாதாரணமாக கேட்டாள்".
"ஆமாடி அண்ணன் கூட படிச்ச பொண்ணாம்".
"எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா?,இரண்டு பேரும் நேத்து கோயிலுக்கு ஜோடியாக ஒரே கலர்ல டிரஸ் போட்டு வந்தாங்க. பார்க்கும் போது அவ்வளவு சூப்பரா இருந்துச்சஎன்று கீதா சொல்ல சொல்ல, ஜனனியின் உள்ளுக்குள், கோவமும்,பொறாமையும் உருவாகிக் கொண்டிருந்தது".
"சாமிக்கு இன்னைக்கு பெரிய வீட்டு படையல் தான். சாயந்திரம் அந்த அக்கா வெற்றி அண்ணன் கூட வருவாங்க பாரேன் என்கவும், சரிடி என்றாள்".
"அதே போல் கோயிலில் பூஜை ஆரம்பமானது. ஊர் மக்கள் எல்லாரும் கோயில் படையலுக்கு வர தொடங்கினர். இன்று பெரிய வீட்டு படையல் என்பதால் எல்லாருக்குமே கோயிலில் தான் இரவு உணவு ".
" யாரும் எந்த வித பாகுபாடில்லாமல், இந்த பந்தியில் கலந்து கொள்வது காலங்காலமாக தொடர்கின்றது".
" மற்றவர்கள் அவர்களால் முடிந்ததை பிரசாதமாக கொடுப்பார்கள். இன்னும் ஒரு சிலர் ஊர் மக்கள், வெற்றியின் வீட்டு வழக்கம் போல சாப்பாடும் போடுவார்கள்".
"ஜனனியும் வேக வேகமாக தயாராகி நிற்க, கீதாவும் அவள் அம்மா கலாவோடு வர, பின்னர் பாட்டிகள் இருவரும் கதை பேசிக்கொண்டு முன்னே செல்ல, இவர்கள் மூவரும் பின்னே சென்றனர்".
" அங்கங்கே கட்டியிருந்த ஸ்பீக்கரில் ஈஸ்வரி அம்மாவின் குரலில்,அம்மன் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது"
ஜனனியின் பார்வையோ அப்போ அப்போ வாசல் பக்கமே இருந்தது. சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல, யாரோ ஒருவர் பெரிய வீட்டிலிருந்து வந்து விட்டார்கள் என்று குரல் கொடுக்க, வாசல் பக்கம் திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனாள்".
"வெற்றி பட்டு வேஸ்டி சட்டையிலும், ராணி பட்டுப்புடவை, நகைகளிலும், அழகியாய் ஜொலிக்க, இவர்களோடு பேசிக்கொண்டு கோபியும் முன்னே வர, வள்ளியும், சத்தியமூர்த்தியும் பின்னாடி நடந்து வருவதை பார்த்து, அங்கே இருந்து சிலர்கள் சின்ன தம்பிக்கு பார்த்த பொண்ணு போல".
" தம்பிக்கு ஏத்த போல நல்லா இருக்குயா ஜோடி பொருத்தமென்று பேசிக்கொண்டனர். அதையெல்லாம் கேட்க, ஜனனிக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது".
"ஜனனியின் பார்வையோ வெற்றி-ராணியை விட்டு அங்கும் இங்கும் அகலவில்லை".
"ஆனால்,தூரத்தில் வரும் போதே ஜனனி அங்கு நிற்பதை வெற்றி பார்த்தாலும் கண்டுகொள்ளவே இல்லை. ராணியிடமே பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டும் இருப்பதை பார்க்க பார்க்க, ஜனனிக்கு மிளகாயை அரைத்து பூசியது போல் இருந்தது".
" திடிரென்று வெற்றி ஜனனியை பார்க்க, அவள் முகம் கோபத்தில் இருப்பது தெரிந்து, இவள் ஏன் நம்மை இப்படி முறைத்து பார்க்கிறாளென்று
யோசனையோடு இருந்தவனை பூசாரி அடித்த மணியின் சத்தம் கலைத்தது”
" அப்பொழுது சத்தியமூர்த்தி என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே பக்கத்து ஊரில் இருக்கும் அவரின் நண்பர் குடும்பம் நின்று கொண்டிருந்தது".
" வழக்கம்போல் ஆர்கலி பள்ளிக்கு சென்று வர,பாட்டி துணி தைப்பதை தெரிந்து, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும், எனக்கும் சட்டை தைத்து தர முடியுமாயென்று கருப்பாயிவிடம் கேட்டு அனுப்பினார்கள்".
"ஆச்சியும் தச்சி கொடுக்கிறேனென்றார்".
"அதே போல் இரண்டு பேரின் பிளவுஸ் துணியை வாங்கிட்டு வந்து கொடுக்க பாட்டியும் தைத்துவிட,அதை போட்டு பார்த்தவர்கள்,சரியாக இருக்கென்று பணத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்".
"விஷயம் தெரிந்து ஊர்மக்களோ நேரடியாக வீட்டுக்கு வந்தே கொடுக்க ஆரம்பித்தனர்".
" ஓர் நாள் பாட்டி துணி தைத்துக் கொண்டிருக்க,ஆச்சி நானும் சும்மா தான் இருக்கேன். எனக்கும் சொல்லிக் கொடுங்களஎன்று கருப்பாயி கேட்க,சரி கண்ணு".
"நீ முதல்ல எம்மிங் பண்றதுக்கு, காஜா கட்டுறது, பட்டன் கட்டுறதுலாம் எப்படினு கத்துக்கோமா என்று பாட்டி சொல்லிக் கொடுத்தார்".
"முதலில் தடுமாறிய கருப்பாயி, பிறகு போக போக பழகிக் கொண்டார். இருவரும் பேச்சு துணையோடு துணிகளை தைப்பதும், தோட்டத்தில் இருக்கும் காய்கறி செடிகளை பராமரிப்பதுமாய் பொழுது போய்க் கொண்டிருந்தது".
" எதுக்கு இந்த வேலையெல்லாமென ஆர்கலி தான் சொல்லிக் கொண்டேயிருக்க தனது பேச்சிலேயே அவளை சரி கட்டினார் பாட்டி".
"ஆர்கலியும், பாட்டியும் சதூர்வேதமங்கலத்துக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்டது. ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று, மதிய உணவு நம்ம வீட்டில் தான் என ஆர்கலி சொல்லிவிட்டதால், கருப்பாயி தனது இரண்டு பிள்ளைகளையும் அங்கு கூட்டிட்டு வந்திருந்தார்".
" பிள்ளைகள் இருவரும் ஆர்கலிக்கு பயந்து கொண்டு முன் பக்கமாகவே விளையாண்டனர்".
" அப்போது, அம்மாடி ஆராவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும். இங்க வந்து ரெண்டு மாசம் ஆயிடுச்சு என்க, கடந்த இரண்டு மாதமாக செக்கப்பிற்கு செல்லவில்லையேனு அப்பொழுது தான் ஆர்கலிக்கும் ஞாபகம் வந்தது".
" ஆராமா சாயந்திரம் போகலாமா?, சரிங்கண்ணி என்றாள். பின்னர் அசைவ உணவை சமைத்து சாப்பிட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்தவர்கள், தயாராகி, பிள்ளைகளை ஆச்சியிடம் விட்டு விட்டு,பாட்டியிடம் சொல்லிக் கொண்டு, டவுனில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றனர்".
" அண்ணா, நாகேஷ்வரி டாக்டர் கிட்ட போங்களென்று கருப்பாயி சொல்ல சரிமா என்றவர், அதைப்போல பாண்டியன் மருத்துவமனையின் முன்பு போய் ஆட்டோவை நிறுத்தினார்".
" தங்கச்சிமா முடிச்சிட்டு சொல்லுங்க வரேனென்று ஆட்டோக்காரர் அங்கிருந்து சென்றார்".
" நல்ல கைராசியான டாக்டர் ஆராமா, சுற்றி இருக்கும் எல்லாரும் இவங்க கிட்ட தான் பெரும்பாலும் வருவாங்க என்றவாறு உள்ளே சென்றவர், ரிசப்ஷனில் இருப்பவரிடம் டோக்கன் கேட்க, பேரு சொல்லுங்க என்றார்".
" ஆர்கலி என்க, 20 வது டோக்கனை கொடுக்க, வாங்கிக்கொண்டு, அங்கு காலியாக இருந்த சேரில் போய் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்".
"இவர்களும்,இன்னும் அங்கு காத்திருந்தவர்களும், சுவற்றில் ஒளிபரப்பான படத்தை பார்த்து நேரத்தை கடத்தினர்".
" அரை மணி நேரம் கடந்திருக்க, கூட்டமும் அதிகமானது".
" கர்பிணி பெண்களும், குழந்தையோடுமே பலர் வருவதும் போவதுமாக இருந்தவர்".
" டோக்கன் நம்பர் 20 என்று பெல் சத்தத்தோடு கேட்க, இருவரும் எழுந்து கதவை திறந்து உள்ளே போக, நடுத்தர வயதில், கருணை முகத்தோடும், மிகவும் எளிமையாக இருந்த டாக்டர் நாகேஷ்வரி இவர்களை பார்த்து சிரித்தார்".
" சொல்லுங்களென்க, பாப்பா மாசமா இருக்குங்க மேடம், அதான் காட்டிட்டு போகலானு வந்தோமென்க, சரி என்றவறே, ஆர்கலியிடம் டீட்டைல்ஸை கேட்டு தெரிந்து கொண்டவர், உள்ளே போய் படுங்க என்க, ஆர்கலியும் அங்கிருந்த கதவை திறந்து உள்ளே சென்றவள், ஸ்டூலின் மேல் ஏறி பெட்டில் படுத்தாள்".
" சில நொடியில் டாக்டரும், நர்சும் உள்ளே வந்தனர். பின்னர் செக் பண்ணி பார்த்தவர், ஒருக்களித்து எழுந்திரிச்சிங்குங்களென்று சொல்லி விட்டு, வாஸ்பேஷனில் கையை கழுவியவர், அங்கிருந்து வெளியே சென்றார்".
" புடவையை சரி பண்ணி கட்டிக்கொண்ட ஆர்கலி, கதவை திறந்து வந்து கருப்பாயின் பக்கத்து இருக்கையில் உட்கார, வரும் ஞாயிற்று கிழமை ஸ்கேன் பண்ணி பார்க்கலாம் மா".
" உடம்பில் நீர் குறைவா இருக்குற போல தெரியுது. நல்லா தண்ணி குடிங்க, வேற எதாவது ஒவ்வாமை இருக்கா?, இல்லைங்க டாக்டர் என்றாள்".
" ஓகே என்றவர் வேக்சின் போட்டுக்குங்களென்று ஆர்கலியின் இடுப்பில் போட்டு விட்டார்".
" ரெகுலரா சாப்பிடும் விட்டமின் மாத்திரை போதுமென்றவர், சீட்டில் எழுதி கொடுக்க, தேங்க்யூ டாக்டரென்று இருவரும் அந்த அறையிலிருந்த கதவை திறந்து வெளியே வந்தவர்கள், டாக்டர் பீஸை அங்கிருந்தவரிடம் கொடுத்து விட்டு மெயின் கேட்டிற்கு வந்தனர்".
"அப்பொழுது அக்கா அக்கா என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, கருப்பாயியை பார்த்த அந்த நர்ஸ், மேடம் உங்களை கூப்பிடுறாங்களென்றாள்".
" அப்படியாமா என்றவர், ஆராமா நீ ஆட்டோக்கு போன் போட்டு வர சொல்லு, நான் போய் என்னனு கேட்டு வரேனென்று உள்ளே சென்றவர், கதவை திறந்து போய் டாக்டர் என்க, வாங்கம்மா".
" உங்க கூட வந்த பொண்ணுக்கு நீங்க எப்படி வேண்டும் என்க,அண்ணிங்க மேடம். ஓகே மா என்றவர்,ரொம்ப பலகீனமா இருக்காங்க".
" சரியா சாப்பிடுறாங்களா?, ஏதோ ஒரு பிரச்சினையை மனசுல வச்சி அதிலே இருக்காங்க போல, நார்மலா இருக்க போல இருந்தாலும், அவங்க அப்படி இல்லை மா".நல்லா தூங்க சொல்லுங்க,நேரம் கிடைக்கும் போது, அக்கம் பக்கம் இருக்கும் இடத்திற்கு கூப்பிட்டு போங்கள்".
" ஆமா அந்த பொண்ணு வீட்ல இருக்காங்களா?, இல்லை வேலைக்கு போறாங்களா?, டீச்சரா இருக்குங்க மேடம்".
" ஓ என்றவர் வீட்டுக்காரர்?, தம்பி வெளிநாட்டில் இருக்குதுங்க, ம்ம் ஒருவேளை அவங்க கூட இல்லை என்ற வருத்தமாக கூட இருக்கலாம்".
" சரி இதுலாம் இந்த நேரத்தில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் தான், பார்த்துங்குங்க என்கவும், ரொம்ப நன்றிங்க மேடம் என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்".
"என்ன அண்ணி ,எதுக்கு கூப்பிட்டாங்க? என்று ஆர்கலி கேட்க,இல்லமா நம்ம பின்னாடி வீட்ல இருக்காங்க இல்ல கமலா அக்கா. அவங்களுக்கு இவங்க தான் ஆபரேஷன் பண்ணாங்க.அதை பத்தி விசாரிச்சாங்க என்று சமாளித்தார்".
வெற்றி- ஜனனி நினைவுகள்:
" அதன் பின்ன வந்த நாட்களெல்லாம் ஜனனி ஒருத்தி இருப்பதை வெற்றி கண்டு கொள்ளவே இல்லை. அவளும் யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள்ளே கவலையானது".
"நாட்களும் வேகமாக ஓடியது 12th ரிசல்ட் வர, கீதாவும் ஜனனியும் பாஸ் பண்ணி, ஒரே காலேஜில், ஒரே கோர்ஸில் சேர்ந்து விட்டனர்".
"கல்லூரி செல்ல தொடங்கிய இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவர்கள் ஊரில் கோயில் திருவிழா ஆரம்பமானது. அதற்காக,வெற்றி தனது தோழியான ராணியையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்".
" ஜனனியும்,கீதாவும் தாமரை குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது,ஜனா, வெற்றி அண்ணா வீட்டிற்கு ஒரு அக்கா வந்திருக்காங்கடி".
" நேற்று மல்லிப்பூ பறிக்க நான் பெரிய வீட்டிற்கு போனேனா, அப்போ ரெண்டு பேரும் அங்க திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்கடி. ரெண்டு பேருக்கும் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு தெரியுமாடி என்க, என்னடி சொல்ற என்று ஜனனி உள்ளுக்குள் அதிர்ந்தாலும், சாதாரணமாக கேட்டாள்".
"ஆமாடி அண்ணன் கூட படிச்ச பொண்ணாம்".
"எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா?,இரண்டு பேரும் நேத்து கோயிலுக்கு ஜோடியாக ஒரே கலர்ல டிரஸ் போட்டு வந்தாங்க. பார்க்கும் போது அவ்வளவு சூப்பரா இருந்துச்சஎன்று கீதா சொல்ல சொல்ல, ஜனனியின் உள்ளுக்குள், கோவமும்,பொறாமையும் உருவாகிக் கொண்டிருந்தது".
"சாமிக்கு இன்னைக்கு பெரிய வீட்டு படையல் தான். சாயந்திரம் அந்த அக்கா வெற்றி அண்ணன் கூட வருவாங்க பாரேன் என்கவும், சரிடி என்றாள்".
"அதே போல் கோயிலில் பூஜை ஆரம்பமானது. ஊர் மக்கள் எல்லாரும் கோயில் படையலுக்கு வர தொடங்கினர். இன்று பெரிய வீட்டு படையல் என்பதால் எல்லாருக்குமே கோயிலில் தான் இரவு உணவு ".
" யாரும் எந்த வித பாகுபாடில்லாமல், இந்த பந்தியில் கலந்து கொள்வது காலங்காலமாக தொடர்கின்றது".
" மற்றவர்கள் அவர்களால் முடிந்ததை பிரசாதமாக கொடுப்பார்கள். இன்னும் ஒரு சிலர் ஊர் மக்கள், வெற்றியின் வீட்டு வழக்கம் போல சாப்பாடும் போடுவார்கள்".
"ஜனனியும் வேக வேகமாக தயாராகி நிற்க, கீதாவும் அவள் அம்மா கலாவோடு வர, பின்னர் பாட்டிகள் இருவரும் கதை பேசிக்கொண்டு முன்னே செல்ல, இவர்கள் மூவரும் பின்னே சென்றனர்".
" அங்கங்கே கட்டியிருந்த ஸ்பீக்கரில் ஈஸ்வரி அம்மாவின் குரலில்,அம்மன் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது"
ஜனனியின் பார்வையோ அப்போ அப்போ வாசல் பக்கமே இருந்தது. சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல, யாரோ ஒருவர் பெரிய வீட்டிலிருந்து வந்து விட்டார்கள் என்று குரல் கொடுக்க, வாசல் பக்கம் திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போனாள்".
"வெற்றி பட்டு வேஸ்டி சட்டையிலும், ராணி பட்டுப்புடவை, நகைகளிலும், அழகியாய் ஜொலிக்க, இவர்களோடு பேசிக்கொண்டு கோபியும் முன்னே வர, வள்ளியும், சத்தியமூர்த்தியும் பின்னாடி நடந்து வருவதை பார்த்து, அங்கே இருந்து சிலர்கள் சின்ன தம்பிக்கு பார்த்த பொண்ணு போல".
" தம்பிக்கு ஏத்த போல நல்லா இருக்குயா ஜோடி பொருத்தமென்று பேசிக்கொண்டனர். அதையெல்லாம் கேட்க, ஜனனிக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது".
"ஜனனியின் பார்வையோ வெற்றி-ராணியை விட்டு அங்கும் இங்கும் அகலவில்லை".
"ஆனால்,தூரத்தில் வரும் போதே ஜனனி அங்கு நிற்பதை வெற்றி பார்த்தாலும் கண்டுகொள்ளவே இல்லை. ராணியிடமே பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டும் இருப்பதை பார்க்க பார்க்க, ஜனனிக்கு மிளகாயை அரைத்து பூசியது போல் இருந்தது".
" திடிரென்று வெற்றி ஜனனியை பார்க்க, அவள் முகம் கோபத்தில் இருப்பது தெரிந்து, இவள் ஏன் நம்மை இப்படி முறைத்து பார்க்கிறாளென்று
யோசனையோடு இருந்தவனை பூசாரி அடித்த மணியின் சத்தம் கலைத்தது”
" அப்பொழுது சத்தியமூர்த்தி என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே பக்கத்து ஊரில் இருக்கும் அவரின் நண்பர் குடும்பம் நின்று கொண்டிருந்தது".