Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
கலசங்காடு-இலங்கை:
"மீனாட்சி கார் வந்துடுச்சி. ரெண்டு பேரும் வாங்களென்று வீரையன் குரல் கொடுக்க, எங்க தான் மா போறோமென்றபடியே வெளியே வந்த ஜெய், செருப்பை போட்டுக்கொண்டு மெயின் ரோட்டிற்கு சென்றான்".
"அங்கே,காரின் முன் சீட்டில் ஜலால் உட்கார்ந்து இருப்பது தெரிந்து, மாமா எங்க தான் உங்க மச்சான் கூட்டிட்டு போறார் என்று கேட்டுக்கொண்டே, காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தான்".
" போனால் தெரியும் மருமகனேயென்று அவர் சிரிக்க ,கார் அங்கிருந்து இரத்தினகிரியை நோக்கி சென்றது".
"ஜெய் வீட்டிலிருந்து அரை மணி நேர பயணம் தான் இரத்தினகிரிக்கு".
"ஊரின் பெயரை பார்த்தவன், இந்த அப்பா இங்க ஏன் கூட்டிட்டு போறாரு?,ஒருவேளை ஜீவா வீட்டுக்கு இருக்குமா?என யோசனையோடு இருக்கும் போது, அங்கு வலது பக்கமிருந்த வீட்டின் முன்பு போய் கார் நின்றது".
"காலிங் பெல்லை ஜலால் அழுத்த,சிறிது நொடியில் ஜீவானந்த் வந்து கதவை திறந்தான்".
"அங்கிருந்த ஜீவாவை பார்த்து ஜெய் திகைக்க,இந்த வீட்டில் இவன் எப்படி ? என யோசிக்க,வாங்க வாங்களென்றவனோ நண்பனை கட்டிக்கொண்டான்".
" வாடா என்று உள்ளே அழைத்து போய்,நால்வரையும் உட்கார வைக்க, நகுலனும் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்".
"ஜெய்க்கு தான் இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அப்பொழுது லீலா என்று நகுலன் குரல் கொடுக்க,எந்த வித வீண் அலங்காரங்களும் இல்லாமால், கண்ணுக்கு உறுத்தாத கலரில் புடவை கட்டி, தலை பின்னி, நெற்றியில் சிறிய சிகப்புகலர் பொட்டும், கழுத்தில் மெல்லிய செயினும், கைகளில் கண்ணாடி வளையல்களுமாய் அங்கு வந்தவளை பார்த்த ஜெய் வீட்டாருக்கு, மனது திருப்தியானது".
" டீ இருக்கும் டிரேவை அனைவரிடமும் நீட்ட, அவர்களும் எடுத்துக்கொண்டனர். ஜெய் தான் ஏதோ மந்திரிச்சி விட்ட கோழி போலவே இருந்தான்".
" அம்மா லீலா, இதான் என் பையன் ஜெய சிம்ஹன்".
" என் பையன் என்பதற்காக சொல்லவில்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. கடைசி வரை உன்னை நல்லபடியா பார்த்துக்கும் அளவுக்கு, அவனுக்கு திறமையும், பொறுப்பும் இருக்குமா என்றார் வீரையன்".
" அவர் சொன்னதை கேட்ட லீலா, சரிங்கப்பா என்றாள். அவள் அப்பா என்று அழைத்ததே ஜெய் பெற்றோருக்கு பூரித்து போனது".
"அப்புறம் சம்பந்தி, நாம முன்னாடியே பேசின போல பண்ணிடலாமா என்க, கண்டிப்பாகங்க என்ற நகுலன், தாயில்லாமல் வளர்ந்த பொண்ணு".
" உங்களுக்கு நான் சொல்லி தெரியனுமென்று இல்லைங்க என்க, அண்ணா இனி புள்ளையை பற்றி உங்களுக்கு கவலை வேண்டாமென்று மீனாட்சி சொல்ல, அது போதுமா என்றார்".
" ஜீவாவிற்கு தான் நண்பனின் நிலையை கண்டு சிரிப்பு வந்தது".
"மீனாட்சியோ தனது கையில் கொண்டு வந்த பேகை லீலாவிடம் நீட்ட, அவளும் வாங்கிக்கொண்டாள்".
" பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்".
" வீட்டிற்கு வரும் வரை அமைதியாகவே இருந்தான். ஓஓ இதற்கு தான் வந்தீங்களா என்க, ஆமாம்பா ஏற்கனவே நானும் ஜலாலும் வந்து பேசி முடிச்சிட்டோமென்று , மகனின் தலையில் அலுங்காமல் ஒரு குண்டை போட்டார் வீரையன்".
"என்னப்பா சொல்றீங்கனு ஜெய் அதிர, ஆமாம்பா நீ இங்கு வந்த மறாவது வாரமே, நானும் ஜலால் மட்டும் வந்து பாத்துட்டு, அவங்க அப்பா கிட்ட எல்லாம் பேசிட்டு போனோம்".
"கல்யாணம் நம்ம ஊர்ல தான் வைக்கிறது.சொந்த பந்தங்கள் நமக்கு அங்க இருக்கு. அதுதானே முறை".
" உம்மா போட்டோ காட்டினாள்.உனக்கு பொருத்தமா இருக்கும். எதுக்கு பொண்ணு விஷயத்தை தள்ளி போடணும்?,எனக்கு மனசு பிடிச்சிடுச்சி, அதான் உன் மாமனை கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன்".
உங்களுக்கு என்ன தோணுதோ அதையே செய்யுங்கள் என்றவன், சரி இப்ப நான் போய் கடையை திறக்கிறேன் என்றான்.
"ம்ம்,நாங்களும் இன்னைக்கு சாய்ந்திரமே கிளம்புறோம் பா. அடுத்த வாரம் நீயும் ஊருக்கு வந்து சேர்ந்திடு. இன்னும் மூணு வாரத்துல கல்யாணம்".
" எதேஏஏஏ, மூணு வாரத்துல கல்யாணமா என்று ஜெய் அதிர, ஆமாப்பா.முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சிருக்கு. எவ்வளவோ வேலை இருக்கென்ற வீரையன், என்ன மச்சான் நீ என்னமோ வாயை மூடிகிட்டே இருக்க என்க, அதான் நீயே பேசுறியே மாப்பிள்ளை என ஜலால் சொல்ல அதுசரி".உங்க வாய்ல இருக்கும் முத்து கொட்டிடாமல், அண்ணனும் தங்கச்சியும் பாதுகாப்பா பார்த்துக்குங்கடா என்றார்".
' பின்னர் மூவரிடமும் சொல்லிக் கொண்டு ஜெய் கடைக்கு செல்ல, இவர்களும் ஊருக்கு தயாரானார்கள்".
" நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடியது. திருமண நாளுக்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் லீலா வீட்டினர் கலசங்காட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
"அவர்கள் அனைவரும் ஜலால் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள்".
" முதல் நாள் பரிசம் போட்டு பொண்ணழைப்பு முடிந்து, ஜலால் வீட்டிலிருந்து லீலாவை அழைத்து வந்தனர்".
" இலங்கையிலிருந்து வந்த சில நெருங்கிய உறவுகள், தமிழ்நாட்டில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களை, ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்".
" இரவு உணவை முடித்துக்கொண்டு கிடைத்த இடத்தில் அங்கங்கே சொந்த பந்தங்கள் படுத்து விட்டனர்".
" விடியலும் அழகாய் தொடங்கியது".
"வீட்டின் முன் பக்கம் உள்ள காலி இடத்தில் தான் கல்யாணம் என்பதால், பந்தல் போட்டு, அழகாய் அந்த இடத்தை அலங்கரித்திருந்தனர்".
" காலை 7 ல் இருந்து 8 மணிக்கு முகூர்த்தம் என்பதால், அந்த இடமே பரபரப்பாக இருந்தது".
" வழக்கமான சம்பிரதாயங்கள் முடிய, நல்ல நேரத்தில் அனைவரின் ஆசியோடும் லீலாவின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு,தன் மனைவியாக ஜெய் ஏற்றுக்கொண்டான்".
" மகளுக்கு தேவையான சீர்வரிசைகளை கல்யாண பந்தலிலே நகுலனும், ஜீவாவும் கடை பரப்பியிருக்க, பார்த்தவர்கள் சிலர் பெரு மூச்சு விட்டு சென்றார்கள்".
" மீதம் உள்ள சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து, இருவருக்கும் முதலிரவையும் அன்றே ஏற்பாடு செய்திருந்தார்கள்".
" இரவும் நெருங்க, ஜலாலின் பெண்ணும், இன்னொரு பெண்மணியும் லீலாவை அலங்கரித்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வைத்து, ஜெய்யின் அறைக்கு அனுப்பி வைத்தனர்".
" பயத்தோடே உள்ளே வந்தவளை பொறுமையாக பேசியே அவளை இயல்பாக்கியவன், முதலில் இருவரும் புரிந்து கொள்வோம், பிறகு வாழ்க்கையை தொடங்கலாமென்க, சரியென்றாள்".
வெற்றி-ஜனனி நினைவுகள்:
"கோவத்தை அடக்க வெற்றியோ பெரும்பாடு பட்டான்".
" பின்னர் பக்கத்து ஊருக்கான பஸ் வர அதில் அனைவரும் ஏறிக்கொண்டனர்".
" ஜனனியோ அவ்வப்போது எதிரில் நிற்கும் வெற்றியை நிமிர்ந்து பார்க்க, ஆனால் அவன் முன்னால் நின்ற மணியோ, பார்த்திங்களாடா, எப்படி பாக்குறானு என்றான்".
" பல்லை கடித்தவன், பஸ் கம்பியை பிடுத்து இறுக்கி, கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கொண்ட வெற்றியின் நிலையை, கோபியால் புரிந்து கொள்ள முடிந்தது".
" நண்பன் வாய்விட்டு ஜனனியை விரும்புவதை சொல்லவில்லை என்றாலும், சில நாட்களாக அவனிடம் இருந்த மாற்றத்தை வைத்து நண்பனுடைய காதலை கண்டறிய முடிந்தது".
"ஆனாலும் அவனிடம் இதுவரை கேட்கவில்லை. இப்பொழுது மணி வேறு இப்படி சொல்வதும், அதற்கு ஏற்ற போல ஜனனியின் செய்கையையும் பார்த்த கோபிக்கும் ,என்ன செய்வதென்று ஒன்னும் புரியவில்லை".
" முக்கால் மணி நேரத்தில் பக்கத்து ஊரில் வந்து பஸ்ஸில் நிற்க, அனைவரும் இறங்கிக் கொண்டனர்".
" அவ்வப்போது ஜனனி திரும்பி தற்செயலாக வெற்றியை பார்க்க, அது மணியை தான் பார்ப்பதாக வெற்றியும், மணியும், கோபியுமே நினைத்துக் கொண்டனர்".
" கோயிலுக்கு செல்லும் வழிகள் எல்லாம் திருவிழா கடைகளும், அதில் மக்கள் கூட்டமும் இருந்தது.ஒரு பக்கம் ராட்டினங்களும், பஞ்சு மிட்டாய் கடையில் சிறு பிள்ளைகள் கூட்டமும், ஐஸ் வண்டிகளும், பலூன் விற்பவர்களும், கோயிலுக்கு வந்தவர்களுமென்று,எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது".
"கமலா நடுவில் செல்ல, கீதா, ஜனனி இருவரின் கையும் பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். எங்க அம்மாவுக்கு மருமகள் மேல எவ்வளவு அக்கறை பாருங்களென்று மேலும் எரிகின்ற தீயில், மணி பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருந்தான்".
" கோயிலுக்கு சென்றவர் சாமியை தரிசனம் செய்து விட்டு, அம்மாடி நான் வேண்டுதலையை முடிச்சிட்டு வந்துடுறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்களென்க,அதற்கு கீதாவோ,அத்தை நாங்க போய் வளையல் மணிலாம் பார்க்கிறோமேயென்றாள்".
" அப்படிங்குறீங்க, எப்படி தனியா அனுப்ப என்றவர், மகனை தேட,சற்று தூரத்தில் மணி வெற்றி கோபி மூவரும் நிற்பதை கண்டு, மணி மணி என்றார்".
" அம்மாவின் குரலை கேட்டவன் இருங்கடா வரேனென்று அங்கு வந்தவன், என்னம்மா என்க,தம்பி பாப்பாங்க கூட கடைக்கு போய்ட்டுவாப்பா".
" பாப்பாளுங்க வளையல்லாம் வாங்கணுமாம் என்க,அம்மா சொன்னதை கேட்டு சந்தோசமானவன், சரிமா நான் கூட்டிட்டு போறேன். நீ வேண்டுதலை முடிச்சுட்டு வா என்றவன், நண்பர்களிடம் கண்ணை காட்டிவிட்டு அவர்களோடு சென்றான்".
"இவனுங்களும் பின்னாடியே செல்ல வளையல் கடைக்கு புகுந்தவர்கள், ஜனனி தனக்கு தேவையான வளையல்களை எடுத்து பார்க்கும் போது, இது நல்லா இருக்கும் அது நல்லா இருக்குமென்று மணியும் எடுத்துக்காட்ட,வெற்றிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை".
"விட்டால் இருவரையும் அடித்து தொலைத்து விடும் அளவுக்கு அவனுக்கு வெறி வந்தது. இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால் அடி நிச்சயமென்பதை உணர்ந்தவன், கோபி சத்தியமா இதெல்லாம் என்னால பார்க்க முடியலடா".
"வீட்டுக்கு போகலாமா என்க, ஏண்டா? திருவிழா பார்க்க வந்து விட்டு,எதுக்கு இப்படி சொல்ற என்க, இல்லை எனக்கு ஏதோ ஒரு மாதிரியா இருக்கு. வா நம்ப போகலாம்".
"இல்லனா நீ அவன் கூட பார்த்துட்டு வா நான் வீட்டுக்கு போறேன்னு சொல்ல, இல்ல நானும் வரேன் என்றவன், மணி என்று கூப்பிட என்னடா என்றான்".
"நீங்க பாத்துட்டு வாங்கடா வெற்றிக்கு தலை வலிக்கிற போல இருக்காம், நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்டா, சரிடா நீங்க போங்க, நான் வருகிறேன் என்றான்".
" என்னாச்சி இவங்களுக்கு?, நல்லா தானே வந்தாங்கள். ஏன் திடீர்னு போறாங்களென்று யோசனையோடு இருந்த ஜனனியோ பொருட்களை பார்ப்பதில் கவனத்தை செலுத்தவில்லை".
" ஜனனிக்கு மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்தால், கீதாவிற்கு சந்தேகம் வரும் என்பது புரிந்து, பாப்பா இது உனக்கு நல்லா இருக்குடாயென்று, கீதாவிற்கும் பொருட்களை செலக்ட் பண்ணி சொல்ல,மணியின் செய்கையை கண்டு, தோழிகள் இருவருக்கும் ஏதும் தவறாக படவில்லை".
"மீனாட்சி கார் வந்துடுச்சி. ரெண்டு பேரும் வாங்களென்று வீரையன் குரல் கொடுக்க, எங்க தான் மா போறோமென்றபடியே வெளியே வந்த ஜெய், செருப்பை போட்டுக்கொண்டு மெயின் ரோட்டிற்கு சென்றான்".
"அங்கே,காரின் முன் சீட்டில் ஜலால் உட்கார்ந்து இருப்பது தெரிந்து, மாமா எங்க தான் உங்க மச்சான் கூட்டிட்டு போறார் என்று கேட்டுக்கொண்டே, காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தான்".
" போனால் தெரியும் மருமகனேயென்று அவர் சிரிக்க ,கார் அங்கிருந்து இரத்தினகிரியை நோக்கி சென்றது".
"ஜெய் வீட்டிலிருந்து அரை மணி நேர பயணம் தான் இரத்தினகிரிக்கு".
"ஊரின் பெயரை பார்த்தவன், இந்த அப்பா இங்க ஏன் கூட்டிட்டு போறாரு?,ஒருவேளை ஜீவா வீட்டுக்கு இருக்குமா?என யோசனையோடு இருக்கும் போது, அங்கு வலது பக்கமிருந்த வீட்டின் முன்பு போய் கார் நின்றது".
"காலிங் பெல்லை ஜலால் அழுத்த,சிறிது நொடியில் ஜீவானந்த் வந்து கதவை திறந்தான்".
"அங்கிருந்த ஜீவாவை பார்த்து ஜெய் திகைக்க,இந்த வீட்டில் இவன் எப்படி ? என யோசிக்க,வாங்க வாங்களென்றவனோ நண்பனை கட்டிக்கொண்டான்".
" வாடா என்று உள்ளே அழைத்து போய்,நால்வரையும் உட்கார வைக்க, நகுலனும் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்".
"ஜெய்க்கு தான் இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அப்பொழுது லீலா என்று நகுலன் குரல் கொடுக்க,எந்த வித வீண் அலங்காரங்களும் இல்லாமால், கண்ணுக்கு உறுத்தாத கலரில் புடவை கட்டி, தலை பின்னி, நெற்றியில் சிறிய சிகப்புகலர் பொட்டும், கழுத்தில் மெல்லிய செயினும், கைகளில் கண்ணாடி வளையல்களுமாய் அங்கு வந்தவளை பார்த்த ஜெய் வீட்டாருக்கு, மனது திருப்தியானது".
" டீ இருக்கும் டிரேவை அனைவரிடமும் நீட்ட, அவர்களும் எடுத்துக்கொண்டனர். ஜெய் தான் ஏதோ மந்திரிச்சி விட்ட கோழி போலவே இருந்தான்".
" அம்மா லீலா, இதான் என் பையன் ஜெய சிம்ஹன்".
" என் பையன் என்பதற்காக சொல்லவில்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. கடைசி வரை உன்னை நல்லபடியா பார்த்துக்கும் அளவுக்கு, அவனுக்கு திறமையும், பொறுப்பும் இருக்குமா என்றார் வீரையன்".
" அவர் சொன்னதை கேட்ட லீலா, சரிங்கப்பா என்றாள். அவள் அப்பா என்று அழைத்ததே ஜெய் பெற்றோருக்கு பூரித்து போனது".
"அப்புறம் சம்பந்தி, நாம முன்னாடியே பேசின போல பண்ணிடலாமா என்க, கண்டிப்பாகங்க என்ற நகுலன், தாயில்லாமல் வளர்ந்த பொண்ணு".
" உங்களுக்கு நான் சொல்லி தெரியனுமென்று இல்லைங்க என்க, அண்ணா இனி புள்ளையை பற்றி உங்களுக்கு கவலை வேண்டாமென்று மீனாட்சி சொல்ல, அது போதுமா என்றார்".
" ஜீவாவிற்கு தான் நண்பனின் நிலையை கண்டு சிரிப்பு வந்தது".
"மீனாட்சியோ தனது கையில் கொண்டு வந்த பேகை லீலாவிடம் நீட்ட, அவளும் வாங்கிக்கொண்டாள்".
" பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்".
" வீட்டிற்கு வரும் வரை அமைதியாகவே இருந்தான். ஓஓ இதற்கு தான் வந்தீங்களா என்க, ஆமாம்பா ஏற்கனவே நானும் ஜலாலும் வந்து பேசி முடிச்சிட்டோமென்று , மகனின் தலையில் அலுங்காமல் ஒரு குண்டை போட்டார் வீரையன்".
"என்னப்பா சொல்றீங்கனு ஜெய் அதிர, ஆமாம்பா நீ இங்கு வந்த மறாவது வாரமே, நானும் ஜலால் மட்டும் வந்து பாத்துட்டு, அவங்க அப்பா கிட்ட எல்லாம் பேசிட்டு போனோம்".
"கல்யாணம் நம்ம ஊர்ல தான் வைக்கிறது.சொந்த பந்தங்கள் நமக்கு அங்க இருக்கு. அதுதானே முறை".
" உம்மா போட்டோ காட்டினாள்.உனக்கு பொருத்தமா இருக்கும். எதுக்கு பொண்ணு விஷயத்தை தள்ளி போடணும்?,எனக்கு மனசு பிடிச்சிடுச்சி, அதான் உன் மாமனை கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன்".
உங்களுக்கு என்ன தோணுதோ அதையே செய்யுங்கள் என்றவன், சரி இப்ப நான் போய் கடையை திறக்கிறேன் என்றான்.
"ம்ம்,நாங்களும் இன்னைக்கு சாய்ந்திரமே கிளம்புறோம் பா. அடுத்த வாரம் நீயும் ஊருக்கு வந்து சேர்ந்திடு. இன்னும் மூணு வாரத்துல கல்யாணம்".
" எதேஏஏஏ, மூணு வாரத்துல கல்யாணமா என்று ஜெய் அதிர, ஆமாப்பா.முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சிருக்கு. எவ்வளவோ வேலை இருக்கென்ற வீரையன், என்ன மச்சான் நீ என்னமோ வாயை மூடிகிட்டே இருக்க என்க, அதான் நீயே பேசுறியே மாப்பிள்ளை என ஜலால் சொல்ல அதுசரி".உங்க வாய்ல இருக்கும் முத்து கொட்டிடாமல், அண்ணனும் தங்கச்சியும் பாதுகாப்பா பார்த்துக்குங்கடா என்றார்".
' பின்னர் மூவரிடமும் சொல்லிக் கொண்டு ஜெய் கடைக்கு செல்ல, இவர்களும் ஊருக்கு தயாரானார்கள்".
" நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடியது. திருமண நாளுக்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் லீலா வீட்டினர் கலசங்காட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
"அவர்கள் அனைவரும் ஜலால் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள்".
" முதல் நாள் பரிசம் போட்டு பொண்ணழைப்பு முடிந்து, ஜலால் வீட்டிலிருந்து லீலாவை அழைத்து வந்தனர்".
" இலங்கையிலிருந்து வந்த சில நெருங்கிய உறவுகள், தமிழ்நாட்டில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களை, ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்".
" இரவு உணவை முடித்துக்கொண்டு கிடைத்த இடத்தில் அங்கங்கே சொந்த பந்தங்கள் படுத்து விட்டனர்".
" விடியலும் அழகாய் தொடங்கியது".
"வீட்டின் முன் பக்கம் உள்ள காலி இடத்தில் தான் கல்யாணம் என்பதால், பந்தல் போட்டு, அழகாய் அந்த இடத்தை அலங்கரித்திருந்தனர்".
" காலை 7 ல் இருந்து 8 மணிக்கு முகூர்த்தம் என்பதால், அந்த இடமே பரபரப்பாக இருந்தது".
" வழக்கமான சம்பிரதாயங்கள் முடிய, நல்ல நேரத்தில் அனைவரின் ஆசியோடும் லீலாவின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு,தன் மனைவியாக ஜெய் ஏற்றுக்கொண்டான்".
" மகளுக்கு தேவையான சீர்வரிசைகளை கல்யாண பந்தலிலே நகுலனும், ஜீவாவும் கடை பரப்பியிருக்க, பார்த்தவர்கள் சிலர் பெரு மூச்சு விட்டு சென்றார்கள்".
" மீதம் உள்ள சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து, இருவருக்கும் முதலிரவையும் அன்றே ஏற்பாடு செய்திருந்தார்கள்".
" இரவும் நெருங்க, ஜலாலின் பெண்ணும், இன்னொரு பெண்மணியும் லீலாவை அலங்கரித்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வைத்து, ஜெய்யின் அறைக்கு அனுப்பி வைத்தனர்".
" பயத்தோடே உள்ளே வந்தவளை பொறுமையாக பேசியே அவளை இயல்பாக்கியவன், முதலில் இருவரும் புரிந்து கொள்வோம், பிறகு வாழ்க்கையை தொடங்கலாமென்க, சரியென்றாள்".
வெற்றி-ஜனனி நினைவுகள்:
"கோவத்தை அடக்க வெற்றியோ பெரும்பாடு பட்டான்".
" பின்னர் பக்கத்து ஊருக்கான பஸ் வர அதில் அனைவரும் ஏறிக்கொண்டனர்".
" ஜனனியோ அவ்வப்போது எதிரில் நிற்கும் வெற்றியை நிமிர்ந்து பார்க்க, ஆனால் அவன் முன்னால் நின்ற மணியோ, பார்த்திங்களாடா, எப்படி பாக்குறானு என்றான்".
" பல்லை கடித்தவன், பஸ் கம்பியை பிடுத்து இறுக்கி, கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கொண்ட வெற்றியின் நிலையை, கோபியால் புரிந்து கொள்ள முடிந்தது".
" நண்பன் வாய்விட்டு ஜனனியை விரும்புவதை சொல்லவில்லை என்றாலும், சில நாட்களாக அவனிடம் இருந்த மாற்றத்தை வைத்து நண்பனுடைய காதலை கண்டறிய முடிந்தது".
"ஆனாலும் அவனிடம் இதுவரை கேட்கவில்லை. இப்பொழுது மணி வேறு இப்படி சொல்வதும், அதற்கு ஏற்ற போல ஜனனியின் செய்கையையும் பார்த்த கோபிக்கும் ,என்ன செய்வதென்று ஒன்னும் புரியவில்லை".
" முக்கால் மணி நேரத்தில் பக்கத்து ஊரில் வந்து பஸ்ஸில் நிற்க, அனைவரும் இறங்கிக் கொண்டனர்".
" அவ்வப்போது ஜனனி திரும்பி தற்செயலாக வெற்றியை பார்க்க, அது மணியை தான் பார்ப்பதாக வெற்றியும், மணியும், கோபியுமே நினைத்துக் கொண்டனர்".
" கோயிலுக்கு செல்லும் வழிகள் எல்லாம் திருவிழா கடைகளும், அதில் மக்கள் கூட்டமும் இருந்தது.ஒரு பக்கம் ராட்டினங்களும், பஞ்சு மிட்டாய் கடையில் சிறு பிள்ளைகள் கூட்டமும், ஐஸ் வண்டிகளும், பலூன் விற்பவர்களும், கோயிலுக்கு வந்தவர்களுமென்று,எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது".
"கமலா நடுவில் செல்ல, கீதா, ஜனனி இருவரின் கையும் பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். எங்க அம்மாவுக்கு மருமகள் மேல எவ்வளவு அக்கறை பாருங்களென்று மேலும் எரிகின்ற தீயில், மணி பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருந்தான்".
" கோயிலுக்கு சென்றவர் சாமியை தரிசனம் செய்து விட்டு, அம்மாடி நான் வேண்டுதலையை முடிச்சிட்டு வந்துடுறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்களென்க,அதற்கு கீதாவோ,அத்தை நாங்க போய் வளையல் மணிலாம் பார்க்கிறோமேயென்றாள்".
" அப்படிங்குறீங்க, எப்படி தனியா அனுப்ப என்றவர், மகனை தேட,சற்று தூரத்தில் மணி வெற்றி கோபி மூவரும் நிற்பதை கண்டு, மணி மணி என்றார்".
" அம்மாவின் குரலை கேட்டவன் இருங்கடா வரேனென்று அங்கு வந்தவன், என்னம்மா என்க,தம்பி பாப்பாங்க கூட கடைக்கு போய்ட்டுவாப்பா".
" பாப்பாளுங்க வளையல்லாம் வாங்கணுமாம் என்க,அம்மா சொன்னதை கேட்டு சந்தோசமானவன், சரிமா நான் கூட்டிட்டு போறேன். நீ வேண்டுதலை முடிச்சுட்டு வா என்றவன், நண்பர்களிடம் கண்ணை காட்டிவிட்டு அவர்களோடு சென்றான்".
"இவனுங்களும் பின்னாடியே செல்ல வளையல் கடைக்கு புகுந்தவர்கள், ஜனனி தனக்கு தேவையான வளையல்களை எடுத்து பார்க்கும் போது, இது நல்லா இருக்கும் அது நல்லா இருக்குமென்று மணியும் எடுத்துக்காட்ட,வெற்றிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை".
"விட்டால் இருவரையும் அடித்து தொலைத்து விடும் அளவுக்கு அவனுக்கு வெறி வந்தது. இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால் அடி நிச்சயமென்பதை உணர்ந்தவன், கோபி சத்தியமா இதெல்லாம் என்னால பார்க்க முடியலடா".
"வீட்டுக்கு போகலாமா என்க, ஏண்டா? திருவிழா பார்க்க வந்து விட்டு,எதுக்கு இப்படி சொல்ற என்க, இல்லை எனக்கு ஏதோ ஒரு மாதிரியா இருக்கு. வா நம்ப போகலாம்".
"இல்லனா நீ அவன் கூட பார்த்துட்டு வா நான் வீட்டுக்கு போறேன்னு சொல்ல, இல்ல நானும் வரேன் என்றவன், மணி என்று கூப்பிட என்னடா என்றான்".
"நீங்க பாத்துட்டு வாங்கடா வெற்றிக்கு தலை வலிக்கிற போல இருக்காம், நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்டா, சரிடா நீங்க போங்க, நான் வருகிறேன் என்றான்".
" என்னாச்சி இவங்களுக்கு?, நல்லா தானே வந்தாங்கள். ஏன் திடீர்னு போறாங்களென்று யோசனையோடு இருந்த ஜனனியோ பொருட்களை பார்ப்பதில் கவனத்தை செலுத்தவில்லை".
" ஜனனிக்கு மட்டும் பொருட்களை தேர்ந்தெடுத்தால், கீதாவிற்கு சந்தேகம் வரும் என்பது புரிந்து, பாப்பா இது உனக்கு நல்லா இருக்குடாயென்று, கீதாவிற்கும் பொருட்களை செலக்ட் பண்ணி சொல்ல,மணியின் செய்கையை கண்டு, தோழிகள் இருவருக்கும் ஏதும் தவறாக படவில்லை".