• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கலசங்காடு:

" சரிடா மழை விட்டுறுச்சி, நான் வீட்டிற்கு கிளம்புறேனென்று ஜெய் எழ, இந்தாடா, இதை வீட்டில் கொடுடாயென, ஒரு பையில் மீன்களை போட்டு பரமு கொடுக்க, மீதி மீன்களையும் எடுத்துக்கொண்டு, மர வீட்டை பூட்டியவாறு மூவரும் வீட்டிற்கு வந்தனர்".


" அடுத்த மழை வருவதற்குள் வீட்டிற்கு போய்விடணுமென்று, வேகமாக தனது பைக்கை ஓட்டினான்".

"ஜெய்யும் வீட்டிற்குள் வந்து சேர, மீண்டும் மழை ஆரம்பமானது. என்னப்பா பரமுவும், பன்னீரும் எப்படி இருக்காங்க? என்று மீனாட்சி கேட்க,நல்லா இருக்கானுங்க என்றவன், இந்தாமா என்று பையை நீட்ட, அதை வாங்கிக் கொண்டார்".

" அதன் பின்னர் ஜெய்யும் தந்தையோடு அவர்கள் நகை கடைக்கு செல்ல ஆரம்பித்தான்".

" அவ்வப்போது இலங்கையில் இருக்கும் ஜீவாவிடம் பேசி,கடையை பற்றியும் விசாரித்துக்கொண்டான்".

" இதோடு ஜெய் கலசங்காடு வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது.ஆனால் மறந்தும் லீலாவின் பேச்சை மூவரும் எடுக்கவில்லை".

" அன்றிரவு மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அப்பா நாளைக்கு கப்பல் இலங்கைக்கு கிளம்புது, நானும் அதில் கிளம்புறேனென்று ஜெய் சொல்ல, சரிப்பா".

" அப்புறம் வெள்ளி பார் உள்ளே பெட்டியில் இருக்கு,உனக்கு தேவையானதை எடுத்து வச்சிக்கோ, பணமும் அங்கையே இருக்கு, எடுத்துக்கோ என்றவர், கையை கழுவி விட்டு எழுந்து,தனது அறைக்குள் சென்று விட்டார்".

" அய்யா, இட்லி பொடி, புளி காய்ச்சல், ஊறுகாய், ரவா லட்டு எல்லாம் பையில எடுத்து வச்சிட்டேன், வேற என்ன வேண்டுமென மீனாட்சி கேட்க, பருப்பு பொடி மட்டும் பண்ணிடுமா. வேற எதுவும் வேண்டாமென்றான்".

"சரிப்பா என்றவர்,கிச்சனை நோக்கி செல்ல, அய்யோ மீனாட்சி முதல்ல சாப்பிடு. நாளைக்கு சாயங்காலம் தான் கப்பல், அதனால் காலையிலே பண்ணிக்கலாம், இப்போ ஒன்னும் அவசரமில்லையென்று ஜெய் சொல்ல, அது வந்துப்பா என்று சிரித்தார்".

" முதல்ல உட்கார்ந்து சாப்பிடு வா என்றான். ம்ம் என்றபடியே சாப்பிட்டு எழ ஜெய்யும் அம்மாவிற்கு உதவி செய்தான்".

" சரி போய் படு என்றவர், இரவு விளக்கை போட்டு விட்டு செல்ல, ஜெய்யும் தனது அறைக்கு சென்று படுத்துவிட்டான்".

" லேசான தூறலோடு விடியலும் தொடங்கியது".

" மகன் இன்று ஊருக்கு போவதால், மீனாட்சி பரபரப்பாகவே வேலை செய்து கொண்டிருந்தார்".

" நேரமும் கடந்து கொண்டேயிருந்தது. மதிய உணவை சாப்பிட்டு முடித்தவன் எல்லாம் சரி பார்த்து, பேகுகளை முற்றத்தில் எடுத்து வந்து வைத்தான்".

" வீட்டிலிருந்து துறைமுகத்திற்கு செல்ல இரண்டு மணி நேரம் என்பதால், இப்பொழுது கிளம்பினால் சரியாய் இருக்கும் என்றவன், முதல் நாள் சொல்லிய ஆட்டோ வருகிறதா என பார்த்துக்கொண்டிருக்க,ஆட்டோவும் வாசலில் வந்து நின்றது".

" பின்னர் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு ஏறி உட்கார, ஆட்டோவும் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது".

" ஜெய்யும் இலங்கைக்கு வந்து இரண்டு வாரங்களானது.ஆனால் மறந்தும் கல்யாணப்பேச்சை ஜீவாவும் ஜெய்யும் பேசிக்கவில்லை".

"விடிந்தால் தீபாவளி என்பதால் கடையில் கூட்டமும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வியாபாரத்தை முடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு ஜெய் வர, நள்ளிரவு இரண்டு மணியானது".

" வழக்கமாக பைக் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வண்டியை லாக் பண்ணியவன், வீட்டிற்கு செல்லும் சந்து வழியாக வந்தவன்,வீட்டின் முன்பு லைட் எரிவதை பார்த்து யோசனையோடே வர, வாசல் கதவு திறந்திருப்பதும் தெரிந்தது".

"எவனாவது திருடன் வந்துட்டானா என்று வேகமாக வந்தவன், உள்ளே இருந்தவர்களை பார்த்து அதிர்ந்து விட்டு,வாங்க வாங்க, எப்போ வந்தீங்களென்றான்".

" முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த மீனாட்சி, மதியம் வந்தோம் பா, போய் கை கால் கழுவிட்டு வா ஜெய் என்று ஜலால் பாய் சொல்ல, சரி மாமா என்றவன், நீங்களாம் சாப்டீங்களா?, ஜெய்யின் அப்பா வீரையனோ ஆச்சுப்பா".

"நீ போய் சாப்பிடு என்றவர்,மீனாட்டி சாப்பாடு எடுத்து வை, போ என்றவாறு, முறுக்கு அச்சில் மாவை வைத்து பிழிய, ஜலால் அதை வாணலில் உள்ள எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்தார்".

" திருப்தியாக சாப்பிட்டவன், ஒரு வார்த்தை சொல்லவேயில்லையேமா என்க, அப்பா தான் திடீர்னு கிளம்பலாம்னு சொன்னார் பா".

" அதான் வரும் போதே, வீட்டில் அரைச்ச அரிசி மாவு இருந்துச்சி எடுத்துட்டு வந்தேன். சுட்டு வச்சா நீயும் ரெண்டு சாப்டுவியேப்பா என்ற மீனாட்சி, கிச்சன் லைட்டை ஆப் பண்ணிட்டு ஹாலிற்கு வந்து பார்க்க, கணவரும், அண்ணனும் வேலையை முடித்திருந்தனர்".

" சரி சரி ரொம்ப நேரம் ஆகிட்டு போய் படுங்களென்ற ஜலால், ஹாலிலே பாயை விரித்து படுக்க, அவருக்கு பக்கத்தில் வீரையனும் படுத்து விட்டார்".

" ஜெய்யும் உள்ளே இருக்கும் பெட்ரூமில் போய் படுத்தவன், அசதியின் காரணமாய் தூங்கிவிட்டான்".

"நன்கு உறக்கத்தில் இருந்தவனுக்கு மணி சத்தமும், பட்டாசு சத்தமும், சாம்பிராணி வாசனையும் தூக்கத்தை கலைக்க,எழுந்து ஃபோனில் மணியை பார்க்க, காலை ஆறு மணி என்று காட்டியது".

" மூன்று மணி நேரம் தான் தூங்கியிருக்கோமா என்றவாறு சோம்பலை முறித்தவன், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவோமென்று படுத்துவிட்டான்".

" ஜெய்யீ தம்பி ஜெய்யீ என மீனாட்சி எழுப்ப, கண் விழிக்காமலே சொல்லுமாயென்றவனிடம், எந்திரிச்சி பல்லை விளக்கிட்டு சாப்பிடுப்பா என்றார்".

" ப்ரஷ் ஆகி வெளியே வந்தவனிடம் டீயை கொடுத்தவர், சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிடுப்பா".

" அப்பா எங்கையோ போகணும் கிளம்பி இருங்களென்னு சொல்லிட்டு, அண்ணா கூட வெளியே போயிருக்கார் என்றவர்,கிச்சனிற்குள் சென்று விட, என்னடா இது?, ஒரே மர்மமா இருக்கேயென்றவன், டீயை குடித்து விட்டு குளிக்க சென்றான்".

" சிறிது நிமிடத்தில் குளித்து தயாராகி வந்தவனுக்கு, வெண் பெங்கலையும் சட்னியும் பரிமாறினார்.உன் கை பக்குவமே பக்குவம் தான் மீனாட்சி".

"நீ மட்டும் ஒரு ஹோட்டல் ஆரம்பித்தாயென்று வச்சிக்கோயேன், டாப்ல போய்டுவ போ என்க, மகனின் பேச்சை கேட்டு சிரித்தவர், போப்பா, உனக்கு எப்போதும் விளையாட்டு தானென்னார்".

வெற்றி - ஜனனி நினைவுகள்:

" அதன் பின்னர் வந்த நாட்களில் ஓரப்பார்வையில் ரசித்தே இருவருக்கும் நாட்கள் சென்றது".

" அப்பொழுது ஜனனியும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை எழுதி முடித்திருந்தாள்".

" வீட்டில் சும்மாவே இருக்க போரடிக்குதென்று பாட்டிகளோடு வயலுக்கு செல்ல, அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், வயலில் இறங்கி வேலையை கற்றுக்கொண்டாள்".

" இப்படியே இவர்கள் நாட்கள் செல்ல,காதலை வாய்விட்டு சொல்லவில்லை என்றாலும், இருவரும் உணர்ந்து கொண்டனர்".

" அந்நேரம் தான் பக்கத்து தெருவிற்கு இவர்களின் பால்ய நண்பனான மணி, பாட்டி வீட்டிலிருந்து படித்து முடித்து ஊருக்குள் வந்தவன் பார்வையில் ஜனனி பட, அவளை விரும்ப ஆரம்பித்தான்".

" ஜனனியும் தெரிந்தவன் என்பதால் அவனை பார்க்கும் போது சிரித்து வைக்க, மணியோ தனது நண்பர்களிடம் ஜனனியும் நானும் காதலிக்கிறோமென்று சொல்ல, அதை கேட்ட வெற்றிக்கு கொலை வெறியானது".

" என்னடா சொல்லுற என்க, ஆமாடா அவளும் தான் என்னை விரும்புறா. நீ வேண்டுமானால் நாளைக்கு பாரு, என்னோட நம்ப செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவிற்கு வருவாளென்க, வெற்றியால் அவன் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதே தெரியவில்லை".

"மனம் முழுவதும் குழப்பமும் கோபமும் போட்டி போட,எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வீட்டிற்கு சென்றான்".

" இரவு வீட்டில் சாப்பிடும் போது, அப்பா நாளைக்கு பக்கத்து ஊர்ல திருவிழா, நானும், கீதாவும் போய் வரட்டுமாயென்று ஜனனி கேட்க, நீங்க மட்டுமா மா? என்று மாரியப்பன் யோசனையானார்".

" அப்பொழுது பெரியாத்தா என்ற குரலோடு, மணியும் அவன் அம்மாவும் வீட்டிற்குள் வந்தனர்".

" உள்ளே வந்தவர்களை பார்த்த ராக்கம்மா பாட்டி வா கமலா,வா சாப்பிடு என்க, சாப்டுட்டு தான் வரேன். திடீர்னு கழுத்து மடக்குனு சத்தம் கேட்டுது, அங்க இங்க திரும்ப முடியலத்தா என்க, தண்ணீர் படுறதுக்கு முன்னவே வழிக்கணும்தா என்றவர், செத்த இரு கையை கழுவிட்டு வரேனென்று எழுந்து சென்றார்".

" என்ன மருமவளே, அத்தகாரிய ஒரு வாய் சாப்ட சொல்லமாட்டியா?, அத்தை உங்க வீட்டில் நான் சாப்பிட சொல்லணுமா என்க, பார்ரா என்ணன் மவள் எப்படி பாயிண்டை புடிக்கிறதே என்று கமலா சிரித்தார்".

" எத்தா கமலா இங்க வாயென்க, அவரும் திண்ணையில் வந்து உட்கார, கையில் சிறுது எண்ணெய்யை எடுத்த ராக்கம்மா பாட்டி, கமலாவின் கழுத்தில் தடவி விட்டு, பேச்சுக் கொடுத்துக்கொண்டே சுளுக்கை எடுத்து விட்டு, இப்போ கழுத்தை திருப்பி பாறென்க, கமலாவும் இடம் வலம் திருப்பி விட்டு, சரியாகிட்டுமா என்றார்".

" பின்னர் கோயில் விழாவை பற்றி பேச்சு வர, உன் அண்ணன் மவளும் திருவிழாக்கு போகணும்னு தான் சொல்லிட்டு இருக்காளென்றவருக்கு, நான் போறேன் மா.சாமிக்கு வேண்டுதலை வச்சிருந்தேன் அதை செய்யணும், நான் போகும் போது கூப்பிட்டு போறென்க, சரித்தா என்றார்".

மறுநாள் விடியல் ஆரம்பமானது.காலை சாப்பாட்டை முடித்த கீதாவும் ஜனனியும் தயாராகி வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருக்க, கமலாவும் வந்தார்".

" மருமவளுங்காளா போகலாமாத்தா என்க, அத்தை நீ வச்சிருக்கிறது ஒரு மவன், நாங்க ரெண்டு பேரு இருக்கோம். வேண்டும்னா மாமாக்கு இன்னொரு கல்யாணத்தை பண்ணினால், முறப்பையன் வருவாரென்று கீதா சொல்ல,அடிப்பாவி".

" அத்தகாரி வாழ்க்கைக்கு இப்படி சூனியம் வைக்கிறியேனு கமலா சொல்ல, எல்லாம் ஒரு பொது சேவை தானத்தை".

"இது மட்டும் மாமாக்கு தெரிஞ்சா,ரொம்ப சந்தோஷப்படுவாரென்று கீதா சிரிக்க,இருக்கும்டி இருக்கும். உன்னையும், உன் மாமனையும் பிரி கட்டாமால் விட மாட்டேன் டி என்றார்".

"பின்னர் கலாவிடமும், பாட்டியிடமும் சொல்லிக் கொண்டு கமலா கூட இருவரும் பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றாளுங்கள்".

"அங்கு மணியோ வெற்றியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.பாரு இப்ப எங்க அம்மா கூட வருவாள் என்று சொல்ல, அவனும் ரோட்டில் நின்று பார்த்துக் கொண்டிருக்க,கமலா கூட ஜனனி சிரித்து பேசிக்கொண்டு வருவது, தூரத்திலிருந்தே தெரிந்தது".

" அதுமட்டுமில்லாமல் ஜனனியின் நேரம் போல, அன்று என்று பார்த்து, ஜனனியும் மணியும் ஒரே கலர்ல டிரஸ் போட்டதை கவனித்த வெற்றிக்கு, கோவம் தலைக்கு ஏறியது".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதூர்வேதமங்கலம்:

"இயற்க்கை சூழலை ரசித்துக்கொண்டே, அந்த தாரோட்டில் ஆர்கலி நடந்து சென்றாள்".ஊருக்குள் புது முகம் என்பதால்,சிலர் அவளை புருவத்தை சுருக்கி பார்த்தனர்".


" பத்து நிமிட நடையில் பள்ளிக்கூடம் இருக்கும் இடத்திற்கு வந்தவள், அந்த சூழலை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை".

" இரண்டு புறமும் நீண்டு வளர்ந்த மரங்களும், அதற்கு நடுவில் அழகுக்கான சிறுசிறு பூச்செடிகளும் பாதைகள் இரண்டு சைடும் இருக்க, அதை பார்த்துக் கொண்டே சென்றவள், எதிரே வந்தவர் மேல் இடிக்கும் முன், மேடமென்ற சத்தத்தில் சுதாரித்தவள்,தலைமை ஆசிரியரை பார்க்கணுமென்றாள்".

" அந்த கடைசி ரூமென்று சொல்ல, தேங்க்ஸ் என்றவள்,அந்த வராண்டாவில் நடந்து சென்று,அங்கு தலைமையாசிரியர் அறை என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்ததை பார்த்து, அங்கு சென்றாள்".

" வாசலில் நின்றே எஸ்கியூஸ்மி சார் என்க, பள்ளியின் தலைமை ஆசிரியரான ராதாகிருஷ்ணன், நிமிர்ந்து பார்த்தவர், எஸ் வாங்க என்றார்".

" உள்ளே வந்தவள், குட் மார்னிங் சார். நான் ஆர்கலி சத்தியமூர்த்தி.புதுசா வந்திருக்கும் டீச்சர் என்று தனது லெட்டரை நீட்டினாள்".

" வாங்க, வெல்கம் டீச்சர் என்று எதிரில் இருந்த சேரை காட்டினார்".

" தேங்க்யூ சார் என்று அதில் உட்கார்ந்து கொண்டவள், கண்களால் அந்த அறையை சுற்றி பார்க்க, அங்கே பிள்ளைகள் வாங்கிய ஷீல்டு, அறிஞர்களின் புகைப்படங்கள், மற்றும்,பள்ளியில் வேலை செய்பவர்களின் பெயர்களும் இருந்தது".

" லெட்டரை படித்து முடித்தவர், பிரேயர் ஆரம்பிக்கணும்,வாங்க மிஸ், ஓகே சார் என்று எழுந்தவள் அவரோடு பள்ளியின் பின் பக்கமிருக்கும் கிரவுண்டிற்கு வர, பெல் அடித்ததும், மாணவர்களும் வரிசையில் வந்து நின்றார்கள்".

" பிரேயர் சாங் முடிந்ததும்,அன்றைய திருக்குறளை சொல்லி முடித்து பின்பு, ஆர்கலியை ஹெட் மாஸ்டரும் அறிமுகப்படுத்தி வைத்தார்".

"பின்னர் ஆர்கலியிடம் திரும்பிய ஹெட்மாஸ்டர்,ஆல் தி பெஸ்ட் டீச்சர்,உங்க டூட்டியை நீங்க ஆரம்பிங்களென்று தனது அறைக்கு சென்று விட, மாணவர்களும் அவரவர் வகுப்பிற்குள் சென்றனர்"

"வகுப்பிற்குள் சென்றவள், பிள்ளைகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களை பற்றியும் தெரிந்து கொண்டாள்".

"முதல் நாள் என்பதால், எந்த வகுப்பிற்கும் அவள் பாடம் நடத்தவில்லை. மாணவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் நேரம் போனது".

"மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தவளுக்கு சூடான சாதம், சாம்பார், பொரியலோடு பாட்டி பரிமாறினார். பாட்டி நீங்க சாப்பிடவில்லையா என்க, நீ சாப்பிடு கண்ணு.நான் பிறகு சாப்பிடுகிறேனென்று சொல்லிவிட்டார்".

" சாப்பிட்டு முடித்து மீண்டும் பள்ளிக்கு சென்று விட்டாள். மற்றொரு ஆசிரியரோ என்ன மிஸ் சாப்டாச்சா என்க,ஆச்சு மிஸ்".

"மாலை கடைசி இரண்டு பீரியட் பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பதால், அவர்கள் எல்லாரும் கிரவுண்டில் விளையாண்டு கொண்டிருக்க, பிள்ளைகள் மேல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு, ஆர்கலியும் அந்த டீச்சரும் பேசிக் கொண்டிருந்தார்கள்".

"பிறகு அந்த டீச்சர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.தனது பெயர் ஜீவிதா என்றும், பக்கத்து ஊரிலிருந்து வருவதாகவும், இரண்டு குழைந்தளென்று சொன்னவர், நீங்க எந்த ஊர் மிஸ்? என்க, கோயம்புத்தூர் என்றாள்".

" கோயம்புத்தூராஆஆ என்று அதிர்ந்தவர், அங்கிருந்தா இவ்வளவு தூரத்திற்கு வேலைக்கு வந்திருக்கிறீர்கள்?, ஆமா மிஸ்".

"விளம்பரத்தை பார்த்தோம் நானும் பாட்டியும் தான் வந்திருக்கிறோமென்று ஆர்கலி சொல்ல, அவரோ,அப்போ சார் என்க,அவர் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னாள்".

" ஓஓ என்றவர் கன்சீவாக இருக்கீங்கள் போலயென்க, ஆமாம் மிஸ்.5 மாதம் ஆகிறது".

" அப்படியா சந்தோஷமென்றவர் ஸ்கேன்லாம் பார்த்தீங்களா?, குழைந்தை வளர்ச்சி நல்லா இருக்கா?, ஆமாம் மிஸ் ரெண்டு வாரத்திற்கு முன்பு தான் ஸ்கேன் பண்ணினோம்".

" எல்லாம் நார்மல் தான்".

" சந்தோஷம்,உடம்பை பாத்துக் கொள்ளுங்கள். இனி நாம் இணைந்து தான் இந்த பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கப்போறோம்".

" சோ, இனி பிரண்ட்ஸ் என்று அவர் கை கொடுக்க,ஓகே பிரண்ட்ஸ் என்றவள்,டீச்சர் நீங்க ஆர்கலியென்றே தாராளமாக என்னை கூப்பிடலாம்".

"அதைக்கேட்டு சிரித்தவர், பிள்ளைகளுக்கு முன்னாடி மிஸ் என்று சொல்லிக்கொள்ளலாம் என்க,ஓகே டீச்சர் என்றாள்".

" கண்டிப்பாக ஒருநாள் எங்க வீட்டிற்கு நீங்க வரணும் என்று ஜீவிதா கூப்பிட, வரோம் டீச்சர்".

" அதைப்போல நீங்களும் கண்டிப்பாக வீட்டுக்கு வரணும் என்க, நிச்சயமாக. பசங்களுக்கு லீவ் பார்த்து விட்டு,அடுத்த வாரத்தில் வருகிறேன் என்று சொல்லும் போது, பள்ளி விட்டதற்கான பெல் அடிக்கும் சத்தம் கேட்டது".

"பிள்ளைகள் எல்லாரும் அங்கிருந்து சந்தோஷமாக தங்களது பையை எடுத்துக் கொண்டு, வீட்டை நோக்கி சென்றனர்".

"டீச்சர் எப்படி போவீங்க? என்று கேட்க, அவர் வண்டி எடுத்துட்டு வருவாரென்று இருவரும் வாசலுக்கு வந்து பேசிக் கொண்டிருக்க, ஜீவிதாவின் கணவரும் அங்கு வர,அவரிடம் ஆர்கலியை அறிமுகப்படுத்தி வைக்க, பின்னர் அவர் வண்டியில் ஏறி செல்ல, ஆர்கலியும் மாலை நேர சூழலை ரசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்".

" அங்கே கருப்பாயியும், பாட்டியும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க,அவளின் பிள்ளைகளான தீபன்- தீபா இருவரும் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்".

" கேட் திறக்கும் சத்தம் கேட்டு பிள்ளைகள் இருவரும் வாசலை பார்த்தவர்கள், அய்யோ டீச்சர் என்றவாறு கருப்பாயிடம் ஓடி போய் ஒளிந்து கொண்டார்கள்".

" இருவரின் செயல்களை பார்த்த ஆர்கலிக்கு சிரிப்பு வந்தது".

கண்ணன்-ரியா நினைவுகள்:

"மருமகள் கேள்விக்கு சிரித்தவர் இப்பவே பொண்டாட்டிக்கு பயந்த புருஷனாக மாறிக் கொண்டிருக்கிறான் என்க, அத்தை என்று முறைத்தாள்".

" உண்மைய சொன்னா உலகம் நம்பாது என்பது நிஜம் தான் போல, அப்படி தானே ஆதி?,தேவகி கேட்டதற்கு ஆமாமானு ஆதிரா சொல்ல,அடியேய் நீயுமாயென்று ரியா கேட்க, இருப்பதை தான் சொல்லுறோம்டி என்றாள்".

" மேகாவும் தீபனும் கீழே வந்தனர். பின்னர் நால்வரும் பேசிக் கொண்டிருக்கும் போது அடுத்தது என்ன பிளான்? என்று தீபன் கேட்க, எங்கேயாவது வெளியில போலாம்".
திரும்ப எப்போ மீட் பண்ணுவோம் என்பது தெரியாது. அடுத்தது ஹையர் ஸ்டடிஸ்காக நம்ம போயிடுவோம். மேபி 2 ஆர் திரி இயர்ஸ் ஆகலாமென்றாள் மேகா.

" நீ சொல்வதும் சரி தான். வாழ்க்கையிலே இன்னைக்கு தாண்டி உருப்படியான ஒரு விஷயத்தை பேசி இருக்கிறாய்னு தீபன் சொல்ல, அடேய் தீவிட்டி தலையா, நான் பேசுறது எல்லாமே உருப்படியான விஷயம் தாண்டா".

"நீ தாண்டா விளங்காத விஷயமாக சொல்லுவயென்று, அவன் தலையில் மேகா கொட்டினாள்".

"திரும்பவும் உங்க பஞ்சாயத்தா ஸ்சூஊஊஊ என ஆதிரா தலையில் தட்ட,அய்யோ பொறுமைக்கு எடுத்துக்காட்டான இவளே பொங்கிட்டாளே, இனி இந்த பூமி தாங்குமா என்ற மேகாவை, கொஞ்சம் வாயை மூடுடி என்றாள் ரியா".

" ம்ம்...என சைகையில் மேகா ஏதோ சொல்ல, பிசாசு வாயை திறந்து சொல்லுடி என்று ரியா கேட்க, நீ தான் வாயை மூட சொன்னியே,அதான் சைகையில் சொன்னேன்".

"ரியாவோ கொலை வெறியில் அவளை பார்க்க, கூல் பேபி கூல்.அப்போ நீயே சொல்லு?,எங்க போகலாமென்று மேகா கேட்க,பின்னர் தமிழ்நாட்டில் இருக்கும் இடத்தை லிஸ்ட் போடும் போது, ஒரு மனதாக ஊட்டி போகலாமென்று முடிவெடுத்தார்கள்".

"அந்நேரம் தேவராஜ் கீழே வர அவரிடம் விஷயத்தை சொல்லும் போது, நீங்க நாலு பேரு மட்டும் போறீங்களா?, ஆமாம்பா நாங்க ஒன்னும் சின்ன குழந்தைகள் இல்லையே".

"நாங்க மட்டும் தான் போறோமென்று நால்வரும் சொல்ல, நானும் வரேனே என்றார்".

" அதற்கு நோ நோ நோ ஓல்ட் மேன்லாம் வேண்டாமென்று தீபன் சொல்ல, டேய் யாருடா ஓல்ட் மேன் என்று தேவராஜ் சொல்ல, உங்களை தான் பா என்றான்".

"தேவா இந்த அசிங்கம் உனக்கு தேவையா? என்று, தனது கண் முன் விரலை வைத்து தேவராஜ் கேட்க, மற்றவர்கள் சிரித்து விட்டனர்".

"கபிலனும் அங்கு வர, அவனிடம் விஷயத்தை சொல்ல,அவனும் தேவராஜ் சொன்னதையே சொல்ல,முடியாது நாங்கள் மட்டும் தான் போகிறோமென்று பிடிவாதமாக சொன்னார்கள்".

"சரி சரி நல்லபடியா போயிட்டு என்ஜாய் பண்ணுங்க. நானும் நாளைக்கு கிளம்புறேன் என்றான்,அப்போ கார்லே போயிருங்களென்று தேவராஜ் சொல்ல நோ நோ என்றவர்கள், டிரைன்ல போகலாமென்றனர்".

"பின்னர் மயிலாடுதுறையிலிருந்து கோயம்புத்தூருக்கு டிரெயினில் போய், அங்கிருந்து ஊட்டிக்கு பஸ்ஸில் போய்க்கலாம் என்று முடிவு எடுத்து டிக்கெட் புக் பண்ணினர்".

"அன்றைய பொழுது அவர்களுக்கு ஊட்டிக்கு போகும் பேச்சிலே கழிந்தது. பின்னர் அவரவருக்கு தேவையான உடைகளை, பேக்கிங் பண்ணிக் கொண்டார்கள்".

" விடியலும் யாருக்கும் காத்திருக்காமல் ஆரம்பமானது. இன்று மகன் ஹைதராபாத் செல்வதால், அவனுக்கு பிடித்தமான அத்தனை விதமான உணவுகளையும், வேலையாளை வைத்துக் கொண்டு தேவகி செய்து முடித்தார்".

"ரியாவுக்கு மீண்டும் எப்போது தனது மாமாவை பார்ப்போமென்று,ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும், தனக்கு பிடித்தமான ஒன்றை அவன் தேர்ந்தெடுத்ததை நினைத்து மகிழ்ச்சிக்கு அளவே இல்லை".

"எப்படியாவது தனியாக இருவரும் சந்தித்து பேசலாமென்று பார்த்தால், சொந்த பந்தங்களின் வருகையால் அதற்கு வழியில்லாமல் போனது".

"மதிய உணவு சாப்பிட்டு முடிக்க, கபி இப்போ கிளம்பினால் கரெக்டா இருக்குமென்று தேவராஜ் சொல்ல, சரிங்க மாமா என்றவன்,தனது அறைக்கு சென்று கதவை தாழிட, இரு கரம் அவனை பின் பக்கமாக அணைத்துக்கொண்டது".

" தன்னவளின் இந்த திடீர் ஷாக்கில் ஒரு நொடி திகைத்தவன், போய்ட்டு வரட்டுமாடி, ம்ம் என்றாள்".

" பிஜி அங்கே தானே?, ஆமாம் மாமா, ஆதியும் அங்கு தான் பண்ண போறாள், ஓய் பொண்டாட்டி முன்னாடி வாடியென்று, அவள் கையை பிடித்து இழுத்தவன், எதுவும் பேசாமல் இறுக்கி அணைத்துக்கொண்டான்".

" லவ் யூ மாமாயென்கவும்,எதேயென கபிலன் அதிர்ந்தான்".

"அவன் அதிர்வை நிமிர்ந்து பார்த்தவள்,அதான் லவ் மாமா லவ், காதல் பியார்,என்னடி ஷாக் மேல ஷாக் தருகிறாய். இந்த பிஞ்சு நெஞ்சு தாங்காதுடி என்கவும், யோவ் விருமாண்டி, என்னய்யா கொழுப்பா?".

" இல்லைடி நீ சொல்லிருக்கியே அதான், நான் சொல்லாமல் வேற எவள் சொல்லணுமென்று அய்யா வெய்ட் பண்ணுறீங்க என்றவள், தள்ளுயானு அவனை தள்ளி விட்டு, கோவமாக சென்று விட்டாள்".

"அடேய் இப்போ தான் அவளே மனசு வந்து சொல்லியிருக்காள், அது உனக்கு பொறுக்கவில்லையானு கபிலனின் மனசாட்சி அவனை திட்டியது".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top