• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கடலூர் மாவட்டம்- சதூர்வேதமங்கலம்:

வெகு நேரத்திற்கு மேல் விழித்திருந்து, ஓவியம் வரைந்து விட்டு தூங்கியதால், காலை ஒன்பது மணியாகியும், ஆதிரா எழுந்து கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருந்தாள்.ரியாவும் இரண்டு முறை வந்து பார்த்து சென்று விட்டாள்.


"நன்கு தூங்கிக்கொண்டிருந்தவளுக்கு, காதோரம் ஒலிக்கும் ரிங்டோன் சத்தத்தில் விழிப்பு வந்தது".

"ஃபோனை எடுத்து பார்க்க,டாட் என்று வந்தது.அட்டென் பண்ணியவள் குட்மார்னிங் பா ".

"பட்டூஊஊஊ என்று சுந்தர் அழைக்க, ம்பா என்றவளிடம், குட்மார்னிங் பட்டு செல்லமென்றவர், நல்லபடியாக ஊருக்கு வந்து சேர்ந்தீங்களென்று, கபி தம்பி சொல்லுச்சிடா.அப்புறம் ருத்ரன், மற்றும் உங்க தாத்தா- பாட்டி, மூவரும் இந்தியாக்கு தான் வந்திருக்காங்க".

" அவர்களோடே நீயும் சேர்ந்து இலங்கைக்கு வருகிறாயா?, இல்லை உனக்கு தனியாக டிக்கெட் போட வேண்டுமாடா?".

"அதை கேட்டவளுக்கு தூக்கம் பறந்து போக, என்ன டேட் சொல்லுறீங்களென்று அதிர்ந்து எழுந்தாள்".

" ஆமாடா பட்டூ".

" நேற்று நைட் தான் வந்தாங்களென்றார்".

"ப்பா, நான் இங்கு வந்துருப்பது அவங்களுக்கு தெரியுமா?,இல்லைடா பட்டூ..தெரியாதுடாமா".

" தேங்க்யூ காட் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ப்பா,நான் அடுத்த வாரம் லண்டன் போகணும் பா".

" உலகளவில் போட்டி டிக்ளேர் பண்ணிட்டாங்கள், நானும் பேர் குடுத்துருக்கேன்.அடுத்த மாதம் ஏழாம் தேதி காம்படீஷன் பா, அதுக்கு என்னை பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்".

" என்னால் இப்போ இலங்கைக்கு வர முடியாதுப்பா, நான்கு வருடத்திற்கு முன்பு உங்களிடம் என்ன சொல்லிட்டு, அங்கிருந்து வந்தேனோ, அது நடந்த பிறகு தான், நான் இலங்கைக்கு வருவேன்.இன்னும் நான் ரியாக்கு கூட சொல்லவில்லை பா".

"அதுவும் இல்லாமல், உலகளில் சிறந்த ஓவியரான சரா சார் கையால்,அன்றைக்கு அவார்ட் கொடுக்க போறாங்கப்பா.அன்றைக்கு தான் அவர் யாரென்றும் இந்த உலகத்துக்கு தெரிவிக்கிறாங்கள்".

" நான்கு வருஷமா இதற்கு தானே நான் தயாராகிட்டிருக்கேன், பிறகு எப்படிப்பா தாத்தா பாட்டியோடு நான் அங்கு வரமுடியும்?".

"என் பட்டுக்கே வெற்றி என்றவர், அப்போ நீயும் யாரென்று உலகிற்கு தெரிய படுத்த போறாய் தானே?".

"வின் பண்ணினால் நிச்சயமாக நீங்கள் சொல்வது நடக்கும்பானு மேலும் சிறிது நேரம் தந்தையிடம் பேசி விட்டு அழைப்பை கட் பண்ணியவள், மணியை பார்க்க, காலை பத்து என்று காட்டியது".

" பத்தாகிட்டாஆஆஆ என்று அதிர்ந்து எழுந்தவள், பெட்டை சரி பண்ணி விட்டு, துண்டை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள்".

"அரை மணி நேரத்தில் குளித்து தயாராகி கீழே வர,அங்கு தேவகியும், ரியாவும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது".

"காலடி சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க,ஆதிரா வருவது தெரிய,வாடா ஆதி, நல்லா தூங்கினாயா?,ஆமாம்மா".

"நைட் தூங்க லேட்டாகி விட்டதுமா, அதான் சீக்கிரம் எழமுடியவில்லை, சாரிமாயென்று ஆதிரா சொல்ல,அடடா...".

"அம்மா தாயே.... அகிலாண்டேஷ்வரி, உங்க ராஜமாதா உன்னை ஒன்னும் சொல்லவில்லைடி".

"நீ தான் அவங்க செல்ல பிள்ளையாச்சேனு ரியா ராகம் பாட,அடி வாலு என்று மருமகளின் காதை தேவகி திருகினார்".

"அய்யோஓஓஓ தேவகி, இப்பவே மாமியார் கொடுமையை காட்டுறாயானு ரியா கத்த,தோழியின் பேச்சை கேட்ட ஆதிராவோ அடிப்பாவியென்றாள்".

"அப்பொழுது, ஆதி பாப்பா இந்தாம்மா டீ என்று வேலையாள் சொல்ல, அக்கா நல்லா இருக்கீங்களானு ஆதிரா விசாரிக்க, நல்லா இருக்கேன் பாப்பா".

" நீ நல்லா இருக்கியா?, இப்போ தான் இங்கு வர கண்ணு தெரிஞ்சதா?".

" என்ன செய்ய மாலாக்கா, நானும் வர நினைக்கிறேன், அந்த நேரம் தான் அத்தையும் டான்னு வந்துடுறாங்கள், அதனால் தான் ரெண்டு வருஷமா இங்கு வரமுடியலைக்கா".

"அட விடு பாப்பா. அதான் இப்போ வந்துட்டியே என்றவர், அம்மா காலை சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்கும் போதே, நானும் வந்துட்டேனென்று, கபிலனும் அங்கு வந்து சேர்ந்தான்".

"அப்பா வரலையானு தேவகி கேட்க, சுப்பு பெரியப்பா வந்தார்மா. அவர்கூட பேசிட்டு இருக்காரென்றான்".

" ஓஓ..சரி கை- கால் கழுவிட்டு வா, சாப்பிடலாமென்றபடி கிச்சனுக்குள் சென்றார்".

" ஆதி நல்லா தூக்குனியாடா என்க,கொஞ்ச நேரம் முன்ன தான்ணா எந்திரிச்சேனென்று சொன்னாள்".

" அப்பொழுது அவள் ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க,யாரென்று எடுத்து பார்க்க, அங்கிள் என்று வந்தது".

" ஒரு நிமிஷம்ணா என்றவள், அட்டென் பண்ணி ஹலோ அங்கிள் என்றவாறே அங்கிருந்து சற்று தள்ளி போய் பேசிக்கொண்டிருந்தாள்".

" இப்பொழுது அங்கே கபியும், அவன் எதிரில் ரியாவும் தான் உட்கார்ந்திருந்தனர்".

" ரியா மேல வா, உன் கிட்ட கொஞ்சம் பேசணுமென்றவன், அங்கிருந்து படியில் ஏறி மேலே தனது அறைக்குச் சென்றான்".

" அய்யோஓஓஓஓ".

" இந்த மாயாண்டிய தனியா எப்படி மீட் பண்ணவென்று முணுமுணுத்தவள், நகத்தை கடிக்க, அவள் மேல் வந்து ஏதோ விழுந்தது".

" என்னதென்று பார்க்க, பேப்பர் சுருள் கிடக்க, அதை குனிந்து எடுத்தவள் சுருளை பிரித்து பார்க்க, மேலே வாடி என்று எழுதியிருந்தது".

" இவராயென்று மேலே பார்க்க, வாடி என்றான்".

" முடியாது என்று ரியா தலையசைக்க, ஒரு நிமிடம் அவளை நின்று பார்த்தவன், அங்கிருந்து சென்று விட்டான்".

திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:

"ருத்ரன், சிம்ஹன் தாத்தா, கிரிஜா பாட்டி மூவரும் அந்த பேலஸில் உள்ள தோட்டத்தையும், கண்கவர் பூக்களையும்,அவர்கள் இருக்கும் மன நிலையிலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை".

" அப்பொழுது அவர்களை தாண்டி சென்ற நாயரோ, உனக்கு தான் அவள். கவலை வேண்டாம்பானு அருகில் வந்த இளைஞனிடம் சொல்லியவாறு சென்றது, ருத்ரனின் காதில் நன்கு விழுந்தது".

" இவ்வளவு நேரம் அவளுக்காய் இருந்த தவிப்பு, இப்பொழுது ருத்ரனுக்கு இல்லை".

" இங்கே தாண்டி இருக்க, என் மனசு சொல்லுதுடி என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், அந்த நீண்டு ஓடிய பாதையில் நடந்து சென்றான்".

" என்னங்க இது, வாசலுக்கும் வீட்டுக்குமே மூனு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் போலவேயென்று கிரிஜா பாட்டி சொல்ல, ஆமா மா.ஆனால் அழகா இருக்கு இல்லையா என்றபடியே முதியவர்களும் நடந்து வந்தனர்".

"முன்னால் நடந்து சென்ற ருத்ரன்,பின்னால் வருபவர்களை திரும்பி பார்க்க, இருவரும் வேகமாக அவனருகில் வந்து சேர, மூவரும் ஒன்றாக நடந்தவர்கள், அங்கிருந்த நிலைக்கதவை தாண்டி உள்ளே வர,வீட்டினுள்லிருந்த வசுந்தராவும், மைக்கேலும் மூவரையும் பார்த்து வாங்க என்றனர்".

" மூவரும் வசுக்கு வணக்கமென்று சொல்ல, அவரும் வணக்கம் சொல்லி விட்டு, உட்காருங்களென்று சோபாவை காட்டினார்".

" ருத்ரனோ பார்வையாலே வீட்டை அலசினான்".

" டீ, காஃபி என்று வசு கேட்க, அதுலாம் ஒன்னும் வேண்டாம்மா என்று சொல்லிய கிரிஜா, நாங்க என்கும் போது, அங்கு வந்த சைலஜாவை பார்த்து அதிர்ந்து எழுந்தவர், சைலூஊஊஊ என்றவாறு மயங்கி கீழே விழுந்தார்".

"திடீரென்று நடந்த செயலால், ஒரு நொடி அங்கு இருப்பவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை".

" கிரிஜா என்று சிம்ஹன் தாத்தா கத்திய பிறகு தான், பார்வையால் அந்த வீட்டை இன்வெஸ்டிகேஷன் பண்ணிக்கொண்டிருந்த ருத்ரனுக்கும் பாட்டியின் நிலை தெரிந்தது".

" பதறி எழுந்தவன், பாட்டி என்று கிரிஜாவின் தலையை தூக்கி மடியில் வைக்க, அதற்குள் வேலையாளும் தண்ணீரோடு வந்தவர் இதை தெளிங்க என்றார்".

" அவரிடமிருந்து வாங்கியவன், பாட்டியின் முகத்தில் தண்ணீரை தெளிக்க, கிரிஜாவிடம் எந்த அசைவுமில்லை".

" உடனே தனது கைகளில் பாட்டியை தூக்கியவன், தாத்தா குயிக் என்றவாறே வெளியே செல்ல, அவனுக்கு முன்னால் வெளியே ஓடிய மைக்கேலும், காரோடு அவன் முன்பு வந்து நின்றவர், தம்பி ஏறுங்கப்பா என்றார்".

" பாட்டியோடு ருத்ரன் பின் பக்கமாய் ஏறியவன், தாத்தா என்க, ஒரு பொம்மை போல் சிம்ஹன் தாத்தாவும் முன்பக்கம் காரில் உட்கார, வேகமாக காரும் அங்கிருந்து மருத்துவமனையை நோக்கி ஓடியது".

"வசுந்தராவோ, யார் இவங்க?, எதுக்கு திடீர்னு அம்மா பேரை சொல்லி மயங்கினாங்கள்?, என்றவாறே பின்னால் திரும்பி பார்க்க, அங்கே சைலஜாவும் பேயறைந்த போல நிற்பது தெரிந்தது".

" அம்மா என்றவாறே வேகமாக சென்று சைலஜா தோளை தொட, அவரும் மயங்கி சரிந்தார்".

" அம்மாஆஆஆ என்று வசு கத்த, அந்த சத்தத்தில் சுந்தரபாண்டியனும், வேலையாட்களும் அங்கு ஓடி வர, என்னாச்சு என்னாச்சு என்று பதறினர்".

" அம்மா, அம்மா என்று வசு பதற, அங்கிருந்த தண்ணீரை எடுத்து மனைவியின் முகத்தில் சுந்தரபாண்டியன் தெளித்த சில நொடிகளில், கண்களை உருட்டிக்கொண்டே பொறுமையாக கண்விழித்தவர், கணவரின் முகத்தை பார்த்து, கிரி கிரி என்று கதறி அழுதார்".

" கிரிஜாவா என்று அதிர்ச்சியோடே சுந்தரபாண்டியன் கேட்க, ஆமாம் என்று தலையசைத்தார்".

" இருவரின் சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த வசுக்கு,இங்க என்ன தான் நடக்குதென்று குழம்பிப்போய் இருந்தார்".

" முதல்ல எந்திராமாயென்று மனைவியை கை கொடுத்து தூக்கி விட்டவர், இங்க வா , சோபாவில் உட்காரென்று கைதாங்கலாக மனைவியை உட்கார வைத்தவர், மகளின் பக்கம் திரும்பி,வசு என்னமா நடந்துச்சி என்று கேட்டார்".

"அப்பொழுது, வசுவின் செல்லிற்கு கால் வர, டீப்பாயின் மேலிருந்த ஃபோனை எடுத்து பெயரை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவர், சொல்லுங்கணா என்க, மைக்கேல் விஷயத்தை சொல்லி ஃபோனை வைத்தார்".

" அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வயதான இருவரும், அவங்களோட பேரன் போல,ஒரு இளைஞனும் வந்தாங்க".

" காபி டீ கேட்கும் போது திடீர்னு அம்மா பேரை சொல்லி, மயங்கி விழுந்துட்டாங்கப்பா".

"அண்ணன் தான் அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிருக்கு, அங்க டாக்டர் செக் பண்ணி பார்த்து விட்டு, அவங்களுக்கு சிவியரா அட்டாக் வந்துருக்குனு சொல்லியிருக்காங்களென்றாள்".

" மகள் சொன்னதை கேட்ட சுந்தரபாண்டியனுக்கு, கிரிஜாவா இருக்குமா?, இல்லை கிரிஜா சம்பந்த பட்டவர்களா இருக்குமா?, என்று யோசனை வந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
நாயர் மருத்துவமனை:

"சுந்தரபாண்டியனுக்கு ஒன்னும் புரியவில்லை. சரிமா, முதலில் ஹாஸ்பிட்டலில் போய் பார்க்கிறோம்"

" மற்றதை பிறகு பேசிக்கலாம் என்றவர், சைலு, சைலுவென்று மனைவியின் தோளை தட்ட,சைலஜாவோ எதுவும் பேசாமல்,கண்ணில் நீரோடு தனது கணவரை நிமிர்ந்து பார்த்தார்".

"வாம்மாயென்றபடியே சோபாவிலிருந்து எழுந்த சுந்தரபாண்டியன்,மனைவியின் கையை பிடிக்க,அவரும் எதுவும் சொல்லாமல் எழுந்தார்".

" வசு, நீ வீட்டில் இரு, அம்மு உள்ளே தூங்கிட்டு இருக்காள். நானும் அம்மாவும் போய் வருகிறோமென்று சொல்லியவர், மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல, தந்தையின் செயலை பார்த்த வசு, சம்திங் ராங்".

" அப்பா ஏன் இவ்வளவு பதற்றமா இருக்காங்க?.அதுவும் இல்லாமல் அம்மா ஏன் எதுவுமே பேசவில்லைனு யோசித்த வசுவிற்கு, அப்பொழுது தான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது".

"இங்கு வந்த அந்த அம்மாவும், தன் தாயைப் போலவே இருக்கிறார்களே, இது எப்படி சாத்தியம்?.. ".

" நமக்கு தெரிந்து அம்மாக்கு தான், எந்த உறவும் இல்லையே என்று யோசித்தார்".

" சரி, ஒருவரைப்போல ஏழு பேர் இந்த உலகத்தில் இருப்பாங்களென்று சொல்வார்களே, அப்படி இருக்குமென்று நினைத்தவர், மகளின் அறைக்கதவை திறந்து பார்க்க, அங்கே ஆர்கலி தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது".

" சாப்பிடாமல் தூங்கிட்டாளே என்றவர், மெதுவாக கதவை சாற்றி விட்டு கிச்சனிற்குள் சென்று, அங்கிருந்த வேலையாளிடம், ஆர்கலிக்கு சாப்பாட்டை ஹாட்பேக்கில் போட்டு, அதை கொண்டு போய் அவள் ரூமில் வைக்க சொன்னவர், அங்கிருந்து தனது ஆபீஸ் ரூமிற்குள் நுழைந்து ,தனது வேலையை பார்க்க தொடங்கினார்".

நாயர் மருத்துவமனையின் வாசலில் வந்து கார் நின்றதும், சுந்தரபாண்டியன் தாத்தாவும், சைலஜா பாட்டியும் கதவை திறந்து கீழே இறங்கியவர்கள், உள்ளே சொல்ல, அவர்களுக்கு எதிரே மைக்கேலும் வந்து கொண்டிருந்தார்.

" பின்னர் மூவரும் லிப்டில் ஏறி மூன்றாவது தளத்திற்கு வந்தவர்கள், அங்கிருந்து வலது பக்கமிருக்கும் ஐ. சி. யு வை நோக்கிச்செல்ல, அங்கே சிம்ஹன் தாத்தாவும், ருத்ரனும் கவலையான முகத்தோடு இருப்பது தெரிந்தது".

" அவர்கள் அருகில் வந்த இருவரும், எதுவும் பேசாமல், அமைதியாக இருந்தனர்".

" ஒருவித நடுக்கத்தோடே, சிம்ஹன் தாத்தாவின் எதிரில் போய் சைலஜா பாட்டி நிற்க, கீழே குனிந்திருந்தவர்,எதிரில் நிற்கும் காலடியில் நிமிர்ந்து பார்த்தவர்,நல்லா இருக்கியா சைலு என்க, குற்ற உணர்ச்சியோடு, அவரின் காலில் விழுந்த கிரிஜா பாட்டி, மாமா என்று கதறி அழுதார்".

" தனது தாத்தாவின் காலில் விழுந்து அழுபவரை ருத்ரனும் நிமிர்ந்து பார்த்து விட்டு, தாத்தா யார் இவங்க?,ஏன் அழுறாங்க என்கும் போது, கதவை திறந்து வெளியே வந்த சிஸ்டர், மேடம் இங்க சத்தம் போட்டு அழாதீங்க".

" உள்ளே டிரீட்மெண்ட் போய்ட்டிருக்கு, டாக்டர் சத்தம் போடுறாங்களென்று சொல்லிச் சொல்ல,கிரிஜாவின் தோளில் தட்டிக்கொடுத்து, எந்திரிடாமா என்று சிம்ஹன் தாத்தா சொல்ல, அழுதவாறே நிமிர்ந்தவரின் முகத்தை பார்த்து, ருத்ரனும் அதிர்ந்து போனான்".

" இவங்க இவங்களென்று ருத்ரன் பேச்சில் தடுமாற, உன்னோட பாட்டி தான் பேர் சைலஜா,கிரிஜா கூட பிறந்த இரட்டை பிறவி.வீரா, அன்ட் சைலு, எதுவாக இருந்தாலும், என் பொண்டாட்டி குணமான பிறகு பேசிக்கலாமென்றார்".

"ஒரு மணி நேரம் சென்று, ஐசியு கதவை திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டர்,கிரிஜா பேஷண்ட் கூட வந்தவங்க தானே என்க, எஸ் டாக்டரென்று சிம்ஹன் தாத்தா சொல்ல, ஓகே.என்னோட ரூமிற்கு வாங்களென்று சொல்லிச் சென்றார்".

" டாக்டர் சொல்லியதைக் கேட்டு,மைக்கேலை மட்டும் ஐசியு கிட்டவே இருக்கச்சொல்லி, மற்ற நால்வரும் அவரின் பின்னாலே சென்றனர். தனது இருக்கையில் உட்கார்ந்த டாக்டர் மேனன், பேஷண்டிற்கு நீங்களென்று கேட்க, நான் பேரன்".

"இவங்க என்னோட தாத்தாக்களும், பாட்டியுமென்று, சிம்ஹன், சுந்தரபாண்டியன் மற்றும் சைலஜாவை காட்டிச் சொன்னான்.

" ஓகே மிஸ்டர் என்று டாக்டர் அவனை பார்க்க, நான் ருத்ர வீர சிம்ஹன்".

" ஓகே பைன் என்றவர், உங்க பாட்டிக்கு சிவியர் அட்டாக் வந்திருக்கு. அவங்களுக்கு ஏதோ பயங்கரமான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கென்று நினைக்கின்றேன்".

" இப்போதைக்கு பேஷண்ட் அப்சர்வேஷன்ல இருக்காங்க, நீங்க யாரும் பார்க்க முடியாது".

"நாளைக்கு மார்னிங் வார்டுக்கு மாற்றிய பிறகு நீங்கள் பார்க்கலாம். இனியும் அவங்களுக்கு அதிர்ச்சிகரமான செய்திகளை சொல்லாதீங்க".

" மெடிசின் ரெகுலரா எடுத்துக்க சொல்லுங்க.ஆஞ்சியோ பண்ணி பார்த்ததில், நல்ல வேளை பிளாக் எதுவும் இல்லை.வயதானவங்க பார்த்து நடந்துக்குங்களென்றான்".

" டாக்டர் சொல்லியதையெல்லாம் கேட்டவன், கண்டிப்பாக டாக்டர். இப்போ தூரத்தில் இருந்து பார்த்துக் கொள்ளலாமா என்க, மௌனமாக சிரித்தவர், ஒரு ஒன் ஹவர் கழித்து, டிஸ்டர்ப் பண்ணாமல் போய் பாருங்க".

" தேங்க்யூ டாக்டர் என்றவாறே நால்வரும் வெளியே வந்தவர்கள், ஐசியுவை நோக்கிச்சென்றனர்".

" அம்மா, டாக்டர் என்ன சொன்னாங்களென்று மைக்கேல் கேட்க, சுந்தரபாண்டியன் தான் அவர் சொன்னதையெல்லாம் சொன்னார்".

" அந்த நேரம், ருத்ரனின் செல்போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க, தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்துப் பார்த்தவனுக்கு, அப்பொழுது தான் ஒரு விஷயம் நினைவு வந்துது"

"இன்று எந்த நாள் என்று?,இரண்டு விரலால் நெற்றியை தட்டிக் கொண்டவன், தாத்தாவை பார்க்க,அவரும் என்னாச்சு வீரா? என்று கேட்டார்".

"தாத்தா இன்று லண்டனில் நம்ம பிரான்ச் ஓப்பனிங்கென்று சொல்ல, ஆமாமில்லை. அதை மறந்து விட்டாமோ வீரா.

"ஆமாம் தாத்தா.அது விஷயமாகத்தான் ஆது போன் பண்ணிட்டு இருக்கிறான் என்று ருத்ரன் சொல்ல,அழைப்பு கட்டானது".

" பின்னர் மீண்டும் கால் வர, இந்த முறை ருத்ரன் அட்டென்ட் பண்ணியதும்,தனது வாய்க்கு வந்தபடி, அந்த பக்கமிருந்து ஆதவன் திட்ட ஆரம்பித்தான்".

"நண்பன் திட்டுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ருத்ரன், நான் இப்போ இந்தியாவில் இருக்கிறேனென்று சொல்ல,ஒரு நிமிடம் வரை எந்த சத்தமும் இல்லை".

"லைன்ல தான் இருக்கிறியா என்க, ம்ம் என்ற சத்தம் மட்டும் கேட்டது. எதற்கு திடீரென்று இந்தியா? என்று ஆது கேட்க, அதை பிறகு சொல்கிறேன். இங்க இங்க என்று பேச்சில் தடுமாறியவன், நம்ப கிரியை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கு".

" அதற்கு ஆதுவோ,ஃபோனை தாத்தாவிடம் கொடு என்று சொல்ல, சிம்ஹன் தாத்தாவிடம் ருத்ரனும் ஃபோனை நீட்ட, அதை வாங்கியவர் கண்ணா கேரளாவில் உள்ள திருச்சூரில் இருக்கும், நாயர் மருத்துவமனையில் தான் அட்மிட் பண்ணியிருக்கோம் என்று சொல்லியதும் லைன் கட் ஆனது".

கோவை டூ ஹைதராபாத்:

" மூவருக்குமான பார்மாலிட்டீஸ் முடிந்தது. பின்னர் கோபியை அணைத்து விட்டவன், பார்த்துக்கோடா என்க,மச்சி நல்லபடியா போய்ட்டு வாடா, நான் இருக்குறேனென்று வெற்றியின் முதுகை தட்டிக்கொடுத்தான்".

" கண்ணா வரோமென்று வள்ளியும், சத்தியமூர்த்தியும் கோபியிடம் சொல்லிக்கொள்ள, ம்ம் என்று தலையசைத்தான்".

" பின்னர் மூவருக்குமான ஃப்ளைட் வந்து விட்ட அறிவிப்பு கேட்க, அவர்கள் அங்கிருந்து உள்ளே சென்றனர். அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை ஏர்போர்ட்டின் உள்ளே நின்றவன், திரும்பி வெளியே நடக்க, கோபியின் கண்கள் கலங்கியது".

" நினைவு தெரிந்த நாளிலிருந்து கோபியும், வெற்றியும் பிரிந்ததேயில்லை. முதலாம் வகுப்பிலிருந்து, காலேஜ் முடிக்கும் வரை ஒன்றாக தான் படித்தனர்".

" அதன் பின்னும் எஸ். எம் எக்ஸ்போர்ட்டான, சத்தியமூர்த்தியின் தாத்தாவுடைய தேங்காய் பிஸ்னஸை கோபியிடம் ஒப்படைக்க, கடந்த ஐந்து வருடமாக அவன் தான் பார்த்துக்கொள்கிறான்".

" முதல் முறையா நண்பனுடைய பிரிவை நினைத்து கண்கலங்கியவன், வெளியே இருக்கும் கார் பார்க்கிங்கிற்குள் சென்று கதவை திறந்து உள்ளே உட்கார்ந்து கொண்டு, வெற்றி போகப்போகும் ஃப்ளைட்டிற்காக காத்திருந்தான்".

" பத்து நிமிடத்திற்கு பிறகு ஃப்ளைட் ஒன்று மேலே பறக்க தொடங்கியது தெரிந்ததும், மிஸ் யூ டா என்றவன்,காரை ஸ்டார்ட் பண்ணி, அங்கிருந்து பொள்ளாச்சியை நோக்கிப் புறப்பட்டான்".

" தனது அருகில் உட்கார்ந்திருந்த வெற்றியின் கையை இறுக்கி பிடித்துக்கொண்ட வள்ளி, எப்படி தான் இப்படி அந்தரத்தில் போறாங்கணு தெரியலையே கண்ணு".

" அத்தை சொன்னதை கேட்ட வெற்றியோ, முதல் முறை அப்படி தான் பயமா இருக்கும் வள்ளி. பிறகு போகப் போக, பழகிடுமென்றான்".

" என்னமோ போ, நமக்கு உசுரு கையில இல்லை சாமியென்றவரை, அங்க பாருயென்று சன்னலை காட்ட, இவ்வளவு நேரம் கண்ணை இறுக்கி மூடியிருந்தவர், மருமகன் சொன்ன போல பார்க்க, மேக கூட்டத்திலுள் போவதை பார்த்து கண்களை விரித்தார்".

" பார்த்தியா எவ்வளவு அழகுயென்று வெற்றி சொல்ல, ஆமங்கண்ணு".

" ஒன்னரை மணி நேரம் வானில் பறந்து வந்த இன்டிகோ விமானம், ஹைதராபாத் ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தது".

"மூவரும் அங்கையும் பார்மாலிட்டீஸ் முடித்துக்கொண்டு லக்கேஜோடு வெளியே வர,மாப்புஊஊஊ என்ற குரல் கேட்டது".

" சத்தம் வந்த திசையில் வெற்றி பார்க்க, அங்கே அவனுடைய கல்லூரி நண்பன் விஷால் கையை ஆட்டினான்".

"வேகமாக வந்த விஷால், வெற்றியை அணைத்துக்கொண்டு, சொன்ன போலவே ஐபிஎஸ் ல பாஸ் ஆகிட்டோம்டா மச்சியென்றான்".

" விஷால் சொல்லியதை கேட்ட பிறகு தான் வெற்றிக்கும் இந்த விஷயம் ஞாபகம் வந்தது".

" அப்பா- அம்மா வழக்கம் போல பிஸிடா.சரி விடுடா.உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். பங்காளி(கோபி) தான் டா சர்ப்ரைஸா இருக்கட்டும், சொல்ல வேண்டானு சொன்னான்".

" உங்க சர்ப்ரைஸில் தீய வைக்க, கூட்டுக்களவானிங்களா என்றவன், சரி வாடா ரூமிற்கு போகலாமென்றான்".

" நால்வரும் வெளியே வர,அவர்களுக்கு முன்பாக காரும் வந்து நின்றது. பின்னர் அதில் ஏறியதும், டிரைவர் ஹோட்டலை நோக்கிச் சென்றார்".

" அரைமணி நேர பயணத்தில், அந்த 3 ஸ்டார் ஹோட்டலுக்குள் வந்து சேர்ந்தவர்கள், ஏற்கெனவே புக் பண்ணியதை ஃபோனில் காட்ட, அவர்களுக்கான ரூம் கீ கொடுக்கப்பட்டது".

" பின்னர் அங்கிருந்த லிப்டில் ஏறி 5 வது ஃப்ளோருக்கு வந்தவர்கள், ரூம் நம்பரை செக் பண்ண, எதிரெதிர் ரூமாக இருந்தது".

" வெற்றி பேமிலி ரூம் புக் பண்ணியிருந்ததால், அறையின் உள் புறமாக இருக்கும் பெட் உனக்கு, நானும் அப்பாவும் இந்த பெட்டை ஷேர் பண்ணிக்குறோமென்க,எதுக்குப்பா தனி ரூம்".

" கொஞ்ச நேரத்துக்கு தானே, தரையில் படுத்து எழுந்து போகப்போறோம்.இப்படி வெட்டியா செலவு பண்ணியிருக்கியே என்ன புள்ளையோவென்ற வள்ளி, தன் மருமகனை முறைத்து பார்த்தார்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top