• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

" தனது மருமகன் சொன்னதைக் கேட்ட வள்ளியோ, வெற்றியை முறைத்து பார்க்க, ஆஹான் என்று சிரித்தான்".


" இங்க பாரு வள்ளி. அடிக்கடி என்னால வர முடியாது. போகிற இடத்தை பற்றி உனக்கே தெரியும். ட்ரைனிங் முடிஞ்சு ரெண்டு வருஷம் கழிச்சு தான் வருவேன்".

"அதுக்கு நடுவுல நிச்சயமா நான் வரமாட்டேன். இங்க நான் காலடி வைக்கும் போது போஸ்டிங்கோட தான் வருவேன் என்று வெற்றி சொல்ல, ரெண்டு வருஷம் எப்படி கண்ணா பார்க்காம இருக்க முடியுமென்று கண் கலங்கினார்".

" அட அழுமூஞ்சி, நீதான் என்ன பார்க்க வருவியே, அப்புறம் என்ன?,அட ஆமா.இதை நான் மறந்தே போயிட்டேனே கண்ணானு, மருமகனின் கன்னத்தை தடவிக்கொண்டு வள்ளி சொல்ல,உனக்கு தான் நிம்மதியா இருக்கும் இல்ல, நான் இல்லாமல்?"

" மருமகன் சொன்னதை கேட்டவர், ஏன் கண்ணு இப்படி சொல்ற?,நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் என்கும் போது வள்ளியின் கண்கள் மீண்டும் கலங்கியது".

" மேலும் இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை".

"ஞாயிற்றுக்கிழமையின் காலையும் வழக்கம் போல் அழகாய் விடிந்தது".

"இன்று தான் மூவரும் ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால், அவரவர் பேக்கிங் முடித்து காலையிலேயே பெட்டியை கொண்டு வந்து ரெடியாக வைத்து விட்டனர்".

"மகனுக்காக கோயிலில் விசேஷ பூஜைக்கு சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார். காலையிலேயே மூவரும் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர்".

" வள்ளியோ, வெற்றிக்கு பிடித்த அனைத்து விதமான உணவுகளையும் செய்து, டேபிள் முழுவதும் நிறைத்திருந்தார்".

"மதிய உணவு வேலை வந்ததும், மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது, நாளைக்கு எல்லாம் நீ அங்கு தனியா சாப்பிடுவாயில்லையா என்று சத்தியமூர்த்தி கேட்க,எப்படிப்பா நான் அங்கே சாப்பிடுவேன்".

"என் மனசுல நீங்களாம் இருக்கும் போது, எப்படி நான் மட்டும் அங்க தனியா சாப்பிடுவேன், நீங்களும் அங்கே என் கூட தான் இருப்பீங்கள், அப்போ உங்களுக்கு அப்படியில்லையா என்கும் போதே வெற்றியின் கண்கள் நீரை பொழிந்தது"

"அதுல என்ன சந்தேகம்?.இந்த அப்பன் நெஞ்சில் நீ தான் ராசா இருக்கடானு சிரித்தார்".

"அந்த நேரம், கோபியும் வீட்டிற்கு வர, வாடா மாப்பிள்ளை. சாப்பிடுனு சத்தியமூர்த்தி சொல்ல, இருக்கட்டும் மாமா. இப்பதான் உங்க தங்கச்சி கையால கஞ்சி தண்ணி குடிச்சிட்டு வரேன்".

"எதேஏஏஏ கஞ்சி தண்ணியானு அதிர்ந்தார். ஆமாம் மாமா,டயர்டா இருக்க போல இருக்குமா, ஹார்லிக்ஸ் போட்டு பால் குடுனு சொன்னேன்".

" அதை தான் அந்த லட்சணத்தில்,உங்க தங்கச்சி போட்டு கொடுத்ததுனு கோபி சிரிக்க, இருக்கும்டா இருக்கும்.மாலா தப்பு பண்ணிடுச்சி, சுடு தண்ணீரை எடுத்து மூஞ்சில ஊத்தியிருக்கணுமென்று வள்ளி சொல்ல, சித்தி நீயுமா என்றான்".

" அடேய்,ஓடுறது,மேயுறது, பறக்குறதுனு எல்லாம் இருக்கு, ஒரு வாய் சாப்பிடென்று வெற்றியும் கூப்பிட, எனக்கு இப்போ வேண்டாம்டா".

" கொஞ்ச நேரம் கழித்தே சாப்பிட்டுக்குறேன் என்றவன், மாமா சாப்பிட்டு முடிச்சிட்டு நம்ப தேங்காய் லோடு கணக்கு பாருங்களெனறான்".

"ஏம்பா, அதான் ஆயிரம் தடவை நீ பார்க்குறாயே, அது போதாது என்பதால், நான் வேற பார்க்கணுமானு சத்தியமூர்த்தி கேட்க,மாமா, இன்றோடு மாசம் முடியுது".

சரிப்பா, சாப்பிட்டு வரட்டுமா?, இல்லை இப்படியே எந்திரிச்சி வரட்டுமா?

ஏன் மாமா ஏன்னு பாவமாக பார்த்தான்.

"அதேபோல் சத்தியமூர்த்தியும் சாப்பிட்டு வர, தன் கையிலிருந்த நோட்டை நீட்டினான்".

" அனைத்தையும் பார்த்து முடிக்க, ஒரு மணி நேரம் ஆனது".

" பின்னர், வந்த பணத்தை பேங்கில் போட்டு விட்டதாக சொல்லியவன், மாமா இந்த முறை அந்த சிவபிரகாசத்துக்கு ரெண்டு லோடு தேங்காய் அதிகமா வேண்டுமாம்".

" அப்படியா, சரி பார்த்து அனுப்புப்பா".

" அப்புறம் நானும் உன் சித்தியும் வெற்றி கூட போய்ட்டு வரோம்பா என்க, நான் பார்த்துக்குறேன் மாமா, நீங்க நல்லபடியாக போய்ட்டு வாங்களென்றான்".

" நேரமும் கடந்து சென்றது, மூவரும் தயாராகி பூஜையறைக்குள் சென்று சாமியை கும்பிட, சத்தியமூர்த்தி மற்றும் வள்ளியின் கால்களில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தான்"

" நல்லா இரு சாமி என்றனர்".

" பின்னர், சாமி ரூமிலிருந்து வெளியே வந்த வெற்றி, ஹாலில் இருக்கும் தனது முன்னோர்களின் ஃபோட்டோவிற்கு முன்பு நின்று வணங்கியவன், வெளியே வர கோபியும் காரில் தயாராக இருந்தான்".

" சத்தியமூர்த்தி முன்பக்கம் ஏறிக்கொள்ள, வெற்றியும், வள்ளியும் பின்னாடி சீட்டில் ஏறியதும் வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன்,கோவை ஏர்போர்ட்டை நோக்கி ஓட்டிச் சென்றான்".

" என்ன மாமா, மகனை போலீஸ் ஆக்கிட்டு தான் மறு வேலையை பாக்குறீங்க போலனு கோபி கேட்க, ஆமாடா".உன்னையும் தானேடா எக்ஸாம் எழுதுவென்று தலையால தண்ணீர் குடிச்சேன், எங்கேஏஏ முடிஞ்சதென்றார்".

திருச்சூர்:

நேரம் போனதே தெரியாமல் ஆர்கலி வேலை பார்த்துக் கொண்டிருக்க,பாப்பா, பாப்பா என்ற மேனேஜர் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்".

" மணி பாருமா என்க, மாலை 5.30 என காட்டியது.எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்கு வார சம்பளம் என்பதால், வேலையாட்களும் வாசலில் வந்து நின்றனர்".

" பாப்பா, நான் பேர் படிக்குறேன், நீ ஆளை பார்த்துக்கோனு மேனேஜர் சொல்ல, சரிங்க சாரென்றாள்".

"மேனேஜர் ஒவ்வொருவராக பெயரை கூப்பிட, அவர்கள் எத்தனை நாட்கள் வேலைக்கு வந்திருக்காங்கள், லீவ் எடுத்தார்களானு செக் பண்ணியவள், சம்பளத்தை கணக்கு பண்ணி கொடுத்தாள்".

" மீதம் உள்ள பணத்தை டிராவில் வைத்து பூட்டியவள், இந்தாங்க சாரென்று சாவியை மேனேஜரிடம் கொடுத்து விட்டு, தனது ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டவள், வருகிறேன் சாரென்று சொல்லிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கலானாள்".

"மாலை வேளையில் இப்படி காலார நடந்து செல்வது, ஆர்கலிக்கு பிடித்தமானது".

" எஸ்டேட்டிற்கு வேலைக்கு வந்த சிறிது நாட்களிலே, வீட்டிற்கு போகும் வழியில் உள்ள கடைகளில் இருப்பவர்களுக்கு, ஆர்கலியும் பழக்கமானாள்".

" ரோட்டில் நடந்து கொண்டிருந்தவள், சேச்சி சேச்சி( சகோதரி) என்ற குரலில் திரும்பி பார்க்க,பத்து வயது மதிக்க தக்க பெண்ணொருத்தி ஓடிவருவது தெரிந்தது".

" சொல்லு மானு என்று ஆர்கலி கேட்க, தன் கையிலிருந்த கவரை நீட்டியவள், பாட்டி கொடுத்தாங்களென்க,ஓகே மானு பாய் என்றவாறு நடந்து சென்றாள்".

" அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தவள், தனது அறைக்குள் சென்று ஃப்ரஷ் ஆகி வெளியே வர,அம்முனு கூப்பிட்டுக்கொண்டே சைலஜா பாட்டி, ஹார்லிக்ஸோடு வந்தவர், இதை குடிடா என்றார்".

" வாங்கி குடித்து முடித்தவள்,மானு கொடுத்த கவரை நீட்ட,உள்ளே இருந்த முந்திரிகொத்தை எடுத்து, ஆர்கலியிடம் ஒன்றை நீட்டி விட்டு, தானும் சாப்பிட்டார்".

"சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்து விட்டு டிவி யை ஆன் பண்ணி பார்க்க ஆரம்பித்தவள், அதில் மூழ்கிப்போனாள்".

"வசுவும் ஆபிஸிலிருந்து வந்து விட்டார்".

"மகளை பார்த்த சைலஜா பாட்டி, வசு காஃபி என்க, குடுமா என்றவாறு, ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தவர், கண்ணை மூடி சாய்ந்து கொண்டார்".

" மனதிற்குள்ளே இன்று நடந்த நிகழ்வுகள் படமாய் விரிய, கிட்ட தட்ட என் வாழ்க்கை கதைதானென்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்க, வசு அம்மாடி வசுயென்ற அம்மாவின் குரலில் கண்ணை திறந்தவர், அவர் நீட்டிய காஃபியை வாங்கிக்கொண்டார்".

"மகளின் முகத்திலிருக்கும் சோடையை பார்த்த சைலஜாவிற்கு, ஏதோ சரியில்லை என்பது புரிந்தது".

" திரும்பி ஆர்கலியை பார்க்க, அவளோ சமையல் நிகழ்ச்சியை நோட் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது".

" தன் மகளின் அருகில் உட்கார்ந்த சைலஜா, என்ன ஆச்சுமா?.ஏதாவது பிரச்சனையா?".

"காஃபியை குடிக்காமல் கையில் வைத்துக் கொண்டிருந்த வசுவோ ஆமாம்மென்கும் போதே, வசுவின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியது".

" மகளின் கண்ணீரை பார்த்தவர், என்னம்மா, ஏன் இப்படியென்று கண்ணீரை துடைத்து விட்டவர், என்னனு சொல்லு?".

" அம்மா... இன்றைக்கு ஒரு லட்டர் வந்துச்சி, என் கதை போலவே. குழந்தையோட அப்பாவை அப்பாயென்று உலகத்திற்கு சொல்ல, அனுமதி வேண்டி பெட்டிசன் போட்டுருக்காங்க ஒரு தாய்".

" இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஆணுக்கு கல்யாணம் ஆகி குடும்பம் இருக்கு, இவங்க யாருனே தெரியாது என்று சொல்லிட்டார்ம்மா".

" அதை கேட்ட அதிர்ச்சியில் அந்த அம்மா அதே இடத்தில் இறந்துட்டாங்க.அந்த பையன் தான் போலிஸ்கு போகாமல் குறை தீர்ப்பு முகாமான இன்றைக்கு வந்து பெட்டிசன் குடுத்துருக்கான்மா".

" அப்போ என் பொண்ணுக்கும் அதே நிலமை தானேனு வசு கதறி அழ,அவர் சத்தத்தில் டீவி பார்த்துக் கொண்டிருந்த ஆர்கலியும் பதறி போய் அங்கு வந்தவள், என்னாச்சி மேடமென்றாள்".

" அது வந்துடா அம்மு என்றவாறே சைலஜா பாட்டி பேச்சில் தடுமாற, வசுக்கு தெரிஞ்ச அம்மா ஒருத்தவங்க இறந்துட்டாங்க அம்மு என்றவாறு அங்கு வந்தார் மைக்கேல்".

"ஓஓஓ இவ்வளவு தானா மாமா, நான் வேற பயந்துட்டேன் என்கும் போது தான் வசுக்கும் சுதாரிப்பு வந்தது".

" ரொம்ப வேண்டியவங்க அம்மு என்றபடியே தன் கண்ணை துடைத்தவர், நீ போய் டிவி பாரு அம்முயென்று அனுப்பி வைத்தார்".

" இல்லைங்க மேடம், நீங்க அழுததும் மனசுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்றவள், வசுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்".

" இதற்கு பெயர் தான்,தான் ஆடா விட்டாலும், தன் தசை ஆடும் என்பது போலயென்று, மைக்கேலும், சைலஜாவும் மனதிற்குள் நினைத்துக்கொண்டனர்".

"அப்பொழுது எஸ்டேட்டிற்கு போயிருந்த சுந்தரபாண்டியனும் வீட்டிற்குள் வந்தவர், அங்கிருந்த நால்வரையும் பார்த்து என்னாச்சு?, ஏன் உம்மென்று இருக்கீங்களென்றார்".

" அது வந்து தாத்தா, திடீர்னு மேடம் ரொம்ப அழுதுட்டாங்களென்று ஆர்கலி சொல்ல,என்னாஆஆ என்று பதறியவர்,வசு எதாவது பிரச்சினையானு கேட்க, வசுந்தராவோ தனது தந்தையை முறைத்து பார்த்தார்".
 
Last edited by a moderator:
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சென்னை -சிம்ஹன் பேலஸ்:

"எல்லாரையும் ஒரு பார்வை பார்க்க, நீ வாயை திறந்து சொல்லி தான் ஆக வேண்டுமென்ற தோரணையில் அவர்கள் இருந்தனர்".


" இறுதியாய் மகனை பார்க்க, ருத்ரனோ கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துக்கொண்டு, தனது ஃபோனில் எதையோ தீவிரமாக பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது".

"கடைசியாக தனது மகனை பார்த்தது எப்போதென்று? தேவி யோசனை பண்ணி பார்க்க,ருத்ரனை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்தாக ஞாபகம் வந்தது".

" அதன் பின்னர் தேவியும், தனாவும் ருத்ரனை பார்க்க வில்லை".

" பார்க்கவில்லை என்பதை விட, அதற்கு ருத்ரன் வழி வகுக்கவில்லை என்பது, ருத்ரன் மட்டுமே அறிந்த உண்மை".

" எல்லாரும் அவரவர் பங்கிற்கு கேட்டாச்சு, தனது மகன் மட்டும் எதுவும் பேசாமல் இருக்கிறானென்று நினைத்ண உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தாள்".

" என்ன தேவி, மௌனவிரதமானு கிரிஜா பாட்டி கேட்கும் போதே, சோபாவில் உட்கார்ந்திருந்த ருத்ரனோ வேகமாய் எழுந்தவன், தாத்தா குயிக் குயிக்".உடனே நாம எஸ். எஸ் மருத்துவமனைக்கு போகணுமென்று சொல்லியவாறே வெளியே சென்றான்".

" வீரா என்றவாறே தாத்தா பாட்டி இருவரும் பேரனின் பின்னாடியே எழுந்து வாசலுக்கு வர, அங்கே ருத்ரனோ,காரை ஸ்டார்ட் பண்ணி தயாராக இருப்பது தெரிந்தது".

" இருவரும் பின் கதவை திறந்து ஏறியதும், கார் அங்கிருந்து சீறிப்பாய்ந்தது".

"ஒரு மணி நேரத்தில் எஸ். எஸ். மருத்துவமனையின் பார்க்கிங்கிற்குள் நுழைந்தவன், வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி செல்ல, முதியவர்களும் அவனோடே இறங்கி சென்றனர்".

" நேராக ரிசப்ஷனிற்கு சென்றவன், டாக்டர். வர்ஷனை பார்க்கணுமென்று சொல்ல, சார் நீங்கள் மிஸ்டர்.ராம் சாரோட நண்பரா?".

" ஆமாம் நான் ருத்ர வீர சிம்ஹனென்று சொல்ல, சார் உங்களுக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. இங்கிருந்து ரைட்ல கட் பண்ணி போனால், செகண்ட் ரூம்".

" தேங்க்யூ மேடமென்றவன், அவள் சொன்ன திசையில் சென்று பார்க்க, அங்கே டாக்டர் வர்ஷனென்ற போர்டு இருந்தது".

" கதவை லேசாக தட்க, வாங்களென்ற குரல் கேட்டு ருத்ரன் உள்ளே செல்ல, ஹாய் டாக்டர். நான் ருத்ரன், இவங்க என்னோட தாத்தா பாட்டி என்றான்".

" அவர்களை பார்த்து லேசாக சிரித்தவர், டிடெக்டிவ் தீனா நேற்று தான் வந்து போனார், ராம்கு நீங்க நெருங்கிய ப்ரண்ட்ஸ்னு கேள்வி பட்டேனென்றவர், ஆர்கலி இங்கு வந்ததையும், டிரீட்மெண்ட் முடிந்து, வசுந்தரா சுந்தரபாண்டியன் என்பவர் டிஸ்சார்ஜ் பண்ணி கூப்பிட்டு போனதையும் சொன்னவர், இது தான் அவங்க அட்ரஸென்று , ஹாஸ்பிட்டல் ரெக்கார்டில் இருந்ததை நோட் பண்ணி கொடுத்தார்".

" அதை வாங்கியவன்,தேங்க்யூ சோ மச் டாக்டர் என்றபடியே, அவரிடம் சொல்லிக்கொண்டு, வெளியே வந்துவன் தனது மூச்சை பெரிதாக இழுத்து விட்டான்".

" வீரா என்று சிம்ஹன் தாத்தா கூப்பிட, என் பொண்டாட்டிய பற்றி டிடெக்டிவிடம் சொல்லி விசாரிக்க சொல்லியிருந்தேன்".

"அவள் இருக்கும் அட்ரஸ் இது தானென்று, தாத்தாவிடம் அந்த பேப்பரை நீட்டினான்".

" நீயே படித்து பாருப்பாயென்றார்".

" ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவன், பேப்பரில் உள்ள அட்ரஸை படிக்க, அதில், வசுந்தரா சுந்தரபாண்டியன் மாவட்ட கலெக்டர், பாண்டியன் பேலஸ், திருச்சூர் என்றிருந்தது".

"தாத்தா அவள் திருச்சூர்ல தான் ஒளிஞ்சிருக்கிறாள்.இங்கையே இருங்க. நான் போய் காரை இங்கு எடுத்து வருகிறேனென்று சொல்லியபடி, அங்கிருந்து சென்றான்".

"போகும் பேரனை பார்த்த சிம்ஹன் தாத்தா, இவனுக்கு இவ்வளவு கோவம் ஆகாதென்றார்".

" அப்படியே உங்களை போலவே வந்துருக்கான்".

" என்ன நடந்துச்சினு தேவி கிட்ட கேட்பதற்குள் இங்கே இழுத்துட்டு வந்துட்டான்,தாத்தனை போல தான் பேரனுக்கும் புத்தியென்றார் கிரிஜா பாட்டி".

" மனைவியின் பேச்சை கேட்ட சிம்ஹன் தாத்தா, ஏண்டி, உன் பேரன் எது பண்ணினாலும் அதுக்கு என்னையே குற்றம் சொன்னால் என்னடி அர்த்தம்".

" நானா உன் பேரனை திருட்டு கல்யாணம் பண்ணிக்க சொன்னேனென்க,எது திருட்டு கல்யாணம்?, சட்டப்படி பண்ணியிருக்கான் என் பேரனென்று கிரிஜா சொல்லும் போதே, அங்கு காரோடு ருத்ரனும் வந்து சேர்ந்தான்".

"ம்ம் சீக்கிரம் ஏறுங்கள், இன்னும் ஒன் ஹவர்ல நமக்கு கொச்சினுக்கு ஃப்ளைட் என்றவன், இருவரும் காரில் ஏறியதும் அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தை நோக்கி பறந்தான்".

" பேரனின் வேகத்தை பார்த்து முதியவர் இருவரும் விழி பிதுங்கி போயினர்".

" வேகமாக ஓட்டினாலும் ஜாக்கிரதையாகவே ஏர்போர்ட்டிற்குள் வந்தவன், அங்கு வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த தீனாவிடமிருந்து டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, கார் சாவியை கொடுத்தவன், வந்து பாக்குறேன் ஜி என்றபடியே அவனை கட்டி அணைத்து விட்டு, ஏர்போர்ட்டின் உள்ளே சென்றான்".

" ச்சூஊஊஊ நம்மை என்ன சின்ன புள்ளைங்கனு நினைச்சிட்டு இருக்கானாயென்று கிரிஜா பாட்டி கேட்க, ஹாஹாஹா என்று சிரித்த சிம்ஹன் தாத்தா, என்னடி கிழவி முட்டி வலிக்குதா?".

" ஆமாம், நான் கிழவி, அய்யாக்கு இப்போ தான் 12 வயது".

"ரெண்டு பேரும் எதாவது குடிக்கிறீங்களாயென்று ருத்ரன் கேட்டுக்கொண்டே நடக்க, எந்த பதிலும் இல்லாததால் உங்களை தான் கேட்கிறேனென்று திரும்பி பார்க்க, சற்று தூரத்தில் இருவரும் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது".

" வேகமாக அவர்களிடம் வந்தவன், உங்களை இங்கு நின்று சண்டை போடவா கூப்பிட்டு வந்தேனென்று, பல்லை கடித்தான்".

" நல்லா கேளு வீரா".

" எப்போ பாரு இவருக்கு என் கூட சண்டைக்கு வருவதே வேலையென்று கிரிஜா பாட்டி சொல்ல, ஆமாம். நீங்க அப்படியே வாயில்லா பூச்சியென்க, இப்பொழுது சிம்ஹன் தாத்தா சிரித்தார்".

"எதாவது சாப்பிடுங்களென்று சொல்ல, இருவரும் வேண்டாமென்று மறுத்து விட்டனர்".

" சரி,வாங்க ஃப்ளைட்டிற்கு நேரமாகிட்டு என்றவன், செக்கிங்கையும், வழக்கமான பார்மாலிட்டீஸையும் முடித்ததும், அவர்களுக்கான ஃப்ளைட் வந்து விட்ட அறிவிப்பு வந்தது ".

" ஒருமணி நேரம் வானில் பறந்து வந்த ஃப்ளைட், கொச்சின் ஏர்ப்போர்ட்டில் லேண்டானது".

"அங்கையும் செக்கிங் முடித்துக்கொண்டு மூவரும் வெளியே வர, இவர்களுக்காக தீனா ஏற்பாடு செய்திருந்த கார் ரெடியாக இருந்தது".

" அதில் மூவரும் ஏறிக்கொண்டதும், கார் திருச்சூரை நோக்கி ஓடியது".

" கையில் கட்டியிருந்த வாட்ச்சில் மணியை பார்க்க, மதியம் 1.30 என்று காட்ட, அண்ணா எதாவது நல்ல வெஜ் ஹோட்டலா பார்த்து நிறுத்துங்களென்று டிரைவரிடம் சொல்ல,சரிங்க தம்பியென்றார்".

" அதைப்போலவே டிரைவரும் ஹோட்டலில் நிறுத்த, நீங்களும் சாப்பிட வாங்கயென்று மூவரும் கூப்பிட, டிரைவரோ வேண்டாமென்று மறுத்து விட்டார்".

" உள்ளே வந்த முவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, பில்லிற்கான பணத்தை கார்டு மூலயமாய் கொடுத்தவன், போகலாமென்றான். பின்னர் மூவரும் காரில் வந்து ஏற, மீண்டும் அவர்கள் பயணம் தொடங்கியது".

" களைப்பின் பயனாய் பெரியவர்கள் இருவரும் சீட்டில் சாய்ந்து தூங்கி விட, ருத்ரனோ உள்ளுக்குள் உள்ள கோவத்தை, அமைதியாக இருப்பது போல எரிய விட்டுக்கொண்டிருந்தான்".

" ஷார்ட் ரூட்டை பயன்படுத்தி விரைவாகவே திருச்சூருக்குள் வந்து சேர்ந்த டிரைவரோ, சார் அட்ரஸ் சொல்லுங்களென்க, கலெக்டர் வீடென்றான்".

" சரிங்க சார் என்றவர், அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு, அந்த பெரிய பங்களாவின் முன்பு வந்து ஹாரன் அடிக்க, அங்கிருந்த வாட்ச்மேன் கதவை திறந்து விட்டார்".

" வேலையாட்கள் கார்டனில் வேலை செய்வது தெரிந்து, அவர்களிடம் இறங்கி சென்றவன், கலெக்டர் மேடத்தை பார்க்கணுமென்று சொல்ல, இருங்கள் தம்பி, கேட்டு வரேனென்று சொல்லி ஒருவர் உள்ளேச் சென்றார்".

திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:

"மகளின் பார்வையில் கீழே குனிந்து கொண்ட சுந்தரபாண்டியன், எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்தார்".

" கேஸ் விஷயமா பேசிக்கொண்டிருந்தோங்களென்ற சைலஜா, கணவருக்கு சூடான இஞ்சி டீயை கொண்டு வந்து கொடுத்தார்".

" அப்பொழுது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, மைக்கேல் எழுந்து போய் பார்த்தவர், வாங்க வாங்க என்றபடியே அவர்களை அழைத்து வந்தார்".

" யாரென்று இவர்களும் பார்க்க, தாரா எஸ்டேட்டின் பக்கத்து எஸ்டேட்டான, நாயர் எஸ்டேட்டின் ஓனரான விஷால் நாயரும், அவர் மனைவி, மற்றும் அவர்களுடைய ஒரே மகன், கவின் நாயரும் உள்ளே வந்தனர்".

" வந்த மூவரையும் பார்த்தவர்கள், வாங்கனு சொல்லி விட்டு, பின்னர் பரஸ்பரம் நலன் விசாரித்துக்கொண்டார்கள்".

"வந்திருந்தவர்களுக்கு சூடான காஃபியும், சிற்றுண்டியையும் குடுக்க, பேசிக்கொண்டே சாப்பிட்டவர்கள், பாண்டியன் சார்,ஒரு முக்கியமான விஷயமாக தான் வந்தோமென்றனர்".

"சொல்லுங்க நாயர், என்ன விஷயமென்று சுந்தரபாண்டியன் தாத்தா கேட்க, எல்லாம் நல்ல விஷயம் தான்".

" அட... எதுக்கு இந்த பீடிகை".

" விஷயத்தை பட்டுனு சொல்லுங்களென்று கிரிஜா பாட்டி கேட்க, அது வந்துமா, ஆர்கலியை என் மகன் கவீனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு".

" கல்யாணத்தை பற்றி எண்ணமில்லாமல் மருந்து மாத்திரை, ஹாஸ்பிட்டலென்று இருந்தவன், ஆர்கலியை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுறான்".

" எனக்கு இருக்கிறது ஒரே பையன், அவனுடைய நியாயமான ஆசையை நிறைவேற்றுவது தானே, பெற்றோராகிய எங்களுடைய கடமையென்று, நாயரும் அவர் மனைவி பாயலும் சொன்னார்கள்".

" இவர்கள் சொன விஷயத்தை கேட்டு, வீட்டில் உள்ள நால்வரும் அதிர்ந்து போனார்கள்".

" எல்லாரும் ஆர்கலியை பார்க்க, அவளோ பேயறைந்த போல நின்றாள்".

" சுந்தரபாண்டியன் மனைவிக்கு கண்ணை காட்ட, தனது பேத்தியின் அருகில் போன கிரிஜா பாட்டி, அம்முனு அவளின் தோளை தொட, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து தனது அறைக்குள் சென்று விட்டாள்".

" ஆர்கலிக்கு வெட்கம் பேலயென்று கவீன் சிரித்தான்".

" மற்றவர்களோ,நாயருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இருந்தனர்".

" என்ன பாண்டியன், நீங்க எதுவுமே பேசாமல் இருக்கீங்க என்கும் போது, வேலையாள் ஒருவர் உள்ளே வந்து, அய்யா, சின்னம்மாவை பார்க்க யாரோ வந்திருக்காங்களென்றார்".

"வசுவையானு மைக்கேல் கேட்க, ஆமாங்க தம்பியென்றார்".

" சரிங்கண்ணா, அவங்களை உள்ளே கூப்பிட்டு வாங்களென்று சொல்லிய வசுந்தரா, நாயரிடம் திரும்பி,சார் உங்கள் கேள்விக்கு உடனே எங்களால் பதில் சொல்ல முடியாது".

" கொஞ்சம் டைம் கொடுங்கள், ஆர்கலியிடம் பேசி விட்டு, உங்களுக்கு பதில் சொல்லுகிறோமென்று சொல்ல, சரி வசுமா".

"ஒன்னும் அவசரமில்லை, உங்கள் காதில் விஷயத்தை போட்டு வைக்க தான் வந்தோம்.யோசித்து நல்ல முடிவாக சொல்லுங்களென்று மூவரும் அங்கிருந்து வெளியே சென்றனர்".

ஆர்கலி எங்கே?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top