Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
சென்னை சிம்ஹன் பேலஸ்:
"நான் சொன்னப் போலவே, விருந்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க".
" மறக்காமல், பால் பாயாசத்தில் சுகர் போடுவதற்கு முன்பு,ஒரு கப்பில் தனியா எடுத்து வைங்க".
" அப்புறம், புதுசா கார்பெட்லாம் வரும், ஒழுங்கா கிளீன் பண்ணி,எல்லா ரூமிலையும் மாற்ற சொல்லுங்க".
" நான் லஞ்சிற்கு வந்துடுவேன் என்றவாறு,வீட்டு நிர்வாகத்தை பார்க்கும் மேனேஜரிடம் சொல்லியபடியே,கம்பீரமான நடையோடு படியிலிறங்கி வந்து கொண்டிருந்தார், விஷாலா டெக்ஸ்டைல்ஸின் ஓனர் விஷாலாதேவி".
"வயது ஐம்பதை தாண்டினாலும், யாரும் சொல்ல முடியாது".
" கீழே வந்தவர்,நேராக டைனிங் ஹாலிற்கு சென்று,தனக்கான இருக்கையில் அமர,உணவை பரிமாறினர்".
" தேவையானதை சாப்பிட்டு முடிக்கவும், அம்மா என்றபடியே வேலையாள் ஒருவர்,அவரின் முன்பு காஃபியை வைக்க,எடுத்து குடித்து விட்டு, அங்கிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும், காரும் அங்கிருந்து கிளம்பியது".
" அரைமணி நேர பயணத்தில் தி. நகரில் இருக்கும்,அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் பார்க்கிங் ஏரியாவிற்குள் கார் நுழைந்தது".
" தனக்கான இடத்தில் வந்து கார் நின்றதும்,காரில் இருந்து இறங்கிய தேவி(விஷாலாதேவி) அங்கிருக்கும் லிப்டை நோக்கிச் சென்றார்".
"லிப்ட் பட்டனை பிரஸ் பண்ண,அது ஓப்பன் ஆனதும்,மூன்றாவது தளத்தின் நம்பரை அழுத்த,கதவை மூடிக்கொண்டு மேலே போய் நின்றது".
" லிப்ட் ஓப்பன் ஆனதும் வெளியே வந்த தேவி,அங்கிருந்து ரைட் சைடில் இருக்கும் தனது கேபினிற்கு சென்றவர்,உள்ளே இருந்த சாமி படத்திற்கு முன்பு வணங்கி விட்டு, சேரில் உட்கார்ந்தார்".
" சிறிது நொடிகள் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்க,எஸ் என்று குரல் கொடுக்க,தேவியின் பி.ஏ.ஜாக்குலின் வந்தாள்".
" குட்மார்னிங் மேம்.இன்றைக்கான ஷெட்யூல் என்று சொல்ல வர,நோ நோ".இன்றைக்கு எந்த ஷெட்யூலும் நான் பார்க்க போறதில்லை".
"நான் ஹேப்பி மூடில் இருக்கேன்".அந்த டெண்டர் மட்டும் அட்டென் பண்ணிட்டு,நான் வீட்டிற்கு கிளம்பிடுவேன்".
" மற்றதையெல்லாம், நீயே பார்த்துக்கொள் என்றவாறு சேரிலிருந்து எழுந்த தேவி,நான்காவது தளத்திற்கு செல்லும் படியில் ஏறிச்சென்றவர் டிசைனிங் செக்க்ஷன் என்ற பெயர் பித்தளையில் பொறிக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கதவை திறந்து உள்ளே போக,அங்கிருந்தவர்கள்,தேவிக்கு விஷ் பண்ண,தலையை அசைத்து ஏற்றுக்கொண்டவர்,தனது டேபிளின் முன்பு போய் அமர்ந்து,கண்ணை மூடி ஒரு நிமிடம் தனது இஷ்டமான கடவுளை வேண்டிக்கொண்டார்".
" பின்னர் அங்கிருந்த பென்சிலை எடுத்து, மனதில் தோன்றிய உருவத்தை அங்கிருந்த போர்டில் வரையத் தொடங்கினார்".
" விஷாலா டெக்ஸ்டைல்ஸில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உடைகளை மட்டுமே தயாரிக்கின்றனர்".
" பிறந்ததிலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ள அனைத்து ஆடைகளும்,சீசனுக்கு ஏற்றவாறு இங்கே கிடைத்துவிடும்".
" இந்த டெக்ஸ்டைலை தொடங்கியதிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக, வெற்றிகரமாக தேவிதான் நடத்தி வருகின்றார்".
" தற்பொழுது சம்மர் சீசன் என்பதால், உயர்தர பருத்தியிலான உடைகள் விற்பனையாகிக் கொண்டிருந்தது".
" முதல் தளத்தில் பிறந்த ஒரு வயது குழந்தைகளுக்கும்,இரண்டாம் தளத்தில் பெண் குழந்தைகளுக்கும், மூன்றாம் தளத்தில் ஆபிஸ் மற்றும் நான்காவது தளத்தில் டிசைனிங் செக்க்ஷனும்,ஐந்தாவது தளம் முழுவதும் ஆண் குழந்தைகளுக்காக பிரித்து இருந்தனர்".
" தான் வரைந்த ஓவியத்தை பார்த்தவர்,அங்கிருந்த கலரை தொட்டு வண்ணம் தீட்டி விட்டு, மீண்டும் சற்று தள்ளி நின்று ஓவியத்தை பார்க்க,வாட்டர்மெலன் டிசைனில் பெண் குழந்தைகளுக்கு ஃப்ராக்கும்,ஆண் பிள்ளைகளுக்கு டிராயர் வித் ஸ்லீவ்லெஸ் பனியனும் வரைந்திருந்தார்".
" இதை ரெடி பண்ண சொல்லிடுங்க என்றவாறு,மற்றவர்கள் செய்யும் டிசைனை செக் பண்ணி பார்த்து விட்டு,அதில் உள்ள சிறு திருத்தங்களையும் சொல்லி முடித்தவரின் ஃபோனிற்கு,கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
" டிராயிங் டேபிளின் மேலிருக்கும் ஃபோனை எடுத்து பார்த்தவரின் முகத்தில் புன்னகை வந்தது".கால் கட் ஆவதற்குள் அட்டென் பண்ணிய தேவி,சொல்லுங்க வீர்".
" மைடியர் விஷாஆஆஆஆ டார்லிங்,
எப்படி இருக்க?",இந்த மாமனை மிஸ் பண்ணுறியாடி என்றார்,தேவியின் காதல் கணவர் தன வீர சிம்ஹன்".
" ம்ம் என்றபடியே ஃபோனோடு அங்கிருந்து வெளியே வந்து, படியிலிறங்கி கீழே வந்தார்".
" ஓஓஓ மேடம் டிசைனிங் செக்க்ஷனில் இருந்தீங்களாக்கும் என்றவருக்கு,ம்ம் என்ற பதிலை சொல்லியபடியே,தனது கேபீனை திறந்து உள்ளே வந்த தேவி,என்ன சொன்னீங்க?".
" மிஸ் யூ டி பொண்டாட்டி".
" ஆஹான்".
" சார்,சூரத்திற்கு போய் எத்தனை நாளாகுது?என்று தேவி கேட்க,இரண்டு மணி நேரமாகுதுடி பொண்டாட்டி".என்ன செய்ய,மனுஷனுக்கு அப்படி என்ன சொக்குபொடி கலந்த மந்திரம் போட்டுருக்கியோ?".
" முப்பது வருஷமா அந்த அழகியிடம் மயங்கி போய் இருக்கேன்டி என்று தனா சொல்ல,ஓஓஓஓ சாரை நான் தான் மயக்குனேனாக்கும்?".
" வீர்.... வீரென்று,சார் எங்கே போனாலும்,உங்க பின்னாடியே சுற்றிச்சுற்றி வந்தது மறந்து போய்விட்டது போல தி கிரேட் பிஸ்னஸ் மேன் தன வீர சிம்ஹனுக்கென்று சொன்னார் விஷாலா தேவி".
எஸ்.எஸ்.மருத்துவமனை:
அய்யோஓஓஓ,எதோ ஒரு வேகத்தில் என் மகளென்ற உண்மையை சொல்லி விட்டேன் போலையே..வசு...எதையாவது சொல்லி சமாளியென்று அவரின் மனசாட்சி சொல்லியது".
"ஆமாடா ஆர்கலி,உன்னை என் மகளாக நினைத்து விட்டேன், அதனால் தான் அப்படி சொன்னேன்".
" ஓஓஓ சரிங்க மேடமென்றாள்".
" என்னமா,என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா?,உனக்காக இல்லையென்றாலும் உன் வயிற்றில் வளரும் சிசுவிற்காவது நீ வாழணும்டா என்று,அவள் தலையில் கோதி விட்டார்".
வசுந்தரா சொன்னதை கேட்ட ஆர்கலி, என்னா, சிசுவா என்று அதிர்ந்து போனவள்,என்ன சொல்லுறீங்க? ".
" ஆமாடாமா,டாக்டர் தான் சொல்லிட்டு போனாங்கள்".கடவுளோட பாக்கியத்தை பாறேன், மகளோடு பேரப்பிள்ளையும் எனக்கு கிடைத்திருக்கின்றதே என்று கண் கலங்கினார்".
" யாரென்னு தெரியாத ஒருவர்,இன்று பார்த்த தன் மேல் இவ்வளவு அன்பா என்பதை அவளால் ஏற்க முடியவில்லை".
என் வாழ்க்கை பயணமே எதை நோக்கி என்றே இதுவரை எனக்கு தெரியவில்லை?.இந்த லட்சணத்தில்,என் வயிற்றில் சிசுவா
" கடவுளே ஏன் இந்த சோதனை? ".
" நானே பூமிக்கு பாரமென்று வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருப்பவளுக்கு,இப்படி ஒரு வழியை காட்டியிருக்கின்றாயே?".இதை என்னவென்று சொல்லுவேனென்று பலவாறு தன் மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவளை,அம்மு, அம்மு என்ற குரல் நிகழ்விற்கு கொண்டு வந்தது.
என்னடாமா யோசனை?.
உன்னை பற்றி எந்த விஷயமும் நான் கேட்க மாட்டேன்.நான் மட்டுமில்லை,நம் வீட்டில் இருப்பவர்களும் தான். அம்மாக்கூட வந்துடு அம்மு,உன்னை கண்ணுக்குள்ள வச்சி தாங்குறேனென்று உருகி சொல்லும் வசுந்தராவை பார்த்தவளுக்கு, தன்னை மீறி அழுகை பீரிட்டது.
மேடம் என்றபடியே,வசுந்தராவின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுபவளை,தேற்ற வழியின்றி அவரும் கலங்கி போனார்.
தனது மகளின் இந்த நிலமைக்கு யார் காரணமென்று தெரியவில்லையே?. ஆர்கலிக்கு திருமணம் முடிந்து, சென்னையில் இருப்பதாக மட்டும் தானே தன்னிடம் சொன்னது.மீண்டும் அவரிடம் விசாரிக்க செல்வதற்கு முன்பு,அவரும் இறந்து விட்டார்.ஆர்கலி வாயை திறந்து சொன்னால் மட்டுமே,உண்மை தெரியும்.
"தற்பொழுது அவள் இருக்கும் நிலமைக்கு,எதையும் சொல்ல வழியில்லை".முதலில் என் மகளை நான் கூப்பிட்டு போகிறேன்.
" சிறிது நாட்கள் சென்ற பின்னர், அவளிடம் கேட்டு மற்றதை தெரிந்து கொள்ளலாமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர் அம்மு....நீ இதுவரை அழுதது போதும்.இன்றிலிருந்து,உனக்கு இந்த அம்மா இருக்கேன்".
"நான் உயிரோடு இருக்கும் வரைக்கும்,இனி உன் கண்ணில் ஒரு துளி நீர் வரக்கூடாது".
"உன் வயிற்றில் வளரும் என் பேர பிள்ளைக்காக,புதிய வாழ்க்கையை தொடங்குடா என்றார்".
" இவ்வளவு தூரம் அன்போடு பேசும் வசுந்தராவின் வார்த்தையில் இருக்கும் உண்மையான அன்பை,ஆர்கலியால் புரிந்து கொள்ள முடிந்தது".
"கடவுள் விட்ட வழி இது தான் போல".
" சிறு வயதில் இருந்து பாதர் சொல்லிக்கொடுத்தது போல, காரணமின்றி எதுவும் நமது வாழ்க்கையில் நடக்காது என்ற வார்த்தையை நினைத்துக்கொண்டாள்".
" சென்னையில் இருந்தால், நிச்சயமாக அவன் கண்ணில் பட வாய்ப்பு இருக்கின்றது".இவங்களும் கலெக்டர் என்று சொல்லுறாங்கள்,நம்பி போவோம் என்று முடிவெடுத்தவள்,உங்க கூட நான் வரேன் மேடம்".
" ஆனால்,அங்கு எனக்கு ஒரு வேலை வாங்கி தந்துடுங்க,பக்கத்தில் எங்கையாவது நான் தங்கிக்கொள்கின்றேன்".
" அவள் வரேன் என்று சொன்னதே இப்போதைக்கு போதும்,மற்றது தனது அம்மா பார்த்துக்கொள்ளுவாங்கள் என்ற உண்மையை உணர்ந்த வசுந்தரா,சரிடா அம்மு உன் விருப்பம் போல செய்யுறேன்".
"நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வருகிறேன்,பார்மாலிட்டீஸ் முடிஞ்சதும் நாம போகலாமென்றவர், அங்கிருந்த கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்றார்".
" சிறிதா நொடிகள் கண்ணுக்கு முன்பாக இருக்கும் ஹேண்ட்பேகையே வெறித்து பார்த்தவள்,ஒரு நொடிகள் தனது கண்ணை மூடி திறந்து விட்டு, எழுந்து போய் அந்த பேகை எடுத்து வந்து பெட்டில் உட்கார்ந்தாள்".
" பின்னர் அதன் நடுவில் இருக்கும் ஜிப்பை திறந்து பார்க்க,அதனுள் பழுப்பு நிற கவர் இருந்தது".
" ஒரு முறை அந்த கவரை பார்த்து விட்டு மீண்டும் ஜிப்பை பூட்டியவள்,மற்றொரு ஜிப்பை திறந்து கையை விட,அவள் கையில் அகப்பட்டது பழைய' நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக்' ஃபோன்".
"அதை வெளியே எடுத்தவள்,அதன் பின் கவரை திறந்து,அதனுள் இருந்த சிம்கார்டை கழட்டி,அதை பத்திரமாக ஹேண்ட் பேகில் மறைவாய் உள்ள ஜிப்பில் ஒளிய வைத்தவள்,மீண்டும் ஃபோனை உள்ளே வைத்து பழையபடி ஜிப்பை பூட்டிய ஆர்கலி,பேகை டேபிள் மேல் வைத்து விட்டு,பெட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்".
கதவை திறந்து வெளியே வந்த வசுந்தரா, அங்கிருந்த நர்ஸிடம் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கென்று கேட்க,லெப்ட் சைடில் இருக்கு மேம் என்கவும், உள்ளே போய் சத்தமின்றி அழுதவர்,பின்னர் தனது முகத்தை கழுவி விட்டு,ரிசப்ஷனிற்கு சென்று விஷயத்தை சொல்ல,அங்கிருந்த பார்மில் டீட்டைல்ஸ் பில் பண்ணி பணத்தை கட்டி விட்டு மேலே வந்தார்.
"அம்மு வாடா நாம போகலாமென்க,சரிங்க மேடமென்றவள்,எழுந்து போய் ஹேண்ட்பேகை எடுத்து தனது வலது பக்க தோளில் மாட்டிக்கொண்டு, போகலாம் மேடமென்றாள்".
இருவரும் ஹாஸ்பிட்டலின் உள்ளே இருந்து வெளியே வர,அவர்களுக்கு முன்பு வந்து நின்ற காரை பார்த்தவர், வா அம்மு.நம்ப கார் தான் என்றவாறு பின்கதவை திறந்து ஏற,மற்றொரு கதவு வழியாக ஆர்கலியும் உள்ளே ஏறி உட்கார,போகலாம்ணா என்றார்.
சரிமா என்ற மைக்கேல்,அங்கிருந்து திருச்சூரை நோக்கி காரை ஓட்டத்தொடங்கினார்...
"நான் சொன்னப் போலவே, விருந்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க".
" மறக்காமல், பால் பாயாசத்தில் சுகர் போடுவதற்கு முன்பு,ஒரு கப்பில் தனியா எடுத்து வைங்க".
" அப்புறம், புதுசா கார்பெட்லாம் வரும், ஒழுங்கா கிளீன் பண்ணி,எல்லா ரூமிலையும் மாற்ற சொல்லுங்க".
" நான் லஞ்சிற்கு வந்துடுவேன் என்றவாறு,வீட்டு நிர்வாகத்தை பார்க்கும் மேனேஜரிடம் சொல்லியபடியே,கம்பீரமான நடையோடு படியிலிறங்கி வந்து கொண்டிருந்தார், விஷாலா டெக்ஸ்டைல்ஸின் ஓனர் விஷாலாதேவி".
"வயது ஐம்பதை தாண்டினாலும், யாரும் சொல்ல முடியாது".
" கீழே வந்தவர்,நேராக டைனிங் ஹாலிற்கு சென்று,தனக்கான இருக்கையில் அமர,உணவை பரிமாறினர்".
" தேவையானதை சாப்பிட்டு முடிக்கவும், அம்மா என்றபடியே வேலையாள் ஒருவர்,அவரின் முன்பு காஃபியை வைக்க,எடுத்து குடித்து விட்டு, அங்கிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும், காரும் அங்கிருந்து கிளம்பியது".
" அரைமணி நேர பயணத்தில் தி. நகரில் இருக்கும்,அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் பார்க்கிங் ஏரியாவிற்குள் கார் நுழைந்தது".
" தனக்கான இடத்தில் வந்து கார் நின்றதும்,காரில் இருந்து இறங்கிய தேவி(விஷாலாதேவி) அங்கிருக்கும் லிப்டை நோக்கிச் சென்றார்".
"லிப்ட் பட்டனை பிரஸ் பண்ண,அது ஓப்பன் ஆனதும்,மூன்றாவது தளத்தின் நம்பரை அழுத்த,கதவை மூடிக்கொண்டு மேலே போய் நின்றது".
" லிப்ட் ஓப்பன் ஆனதும் வெளியே வந்த தேவி,அங்கிருந்து ரைட் சைடில் இருக்கும் தனது கேபினிற்கு சென்றவர்,உள்ளே இருந்த சாமி படத்திற்கு முன்பு வணங்கி விட்டு, சேரில் உட்கார்ந்தார்".
" சிறிது நொடிகள் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்க,எஸ் என்று குரல் கொடுக்க,தேவியின் பி.ஏ.ஜாக்குலின் வந்தாள்".
" குட்மார்னிங் மேம்.இன்றைக்கான ஷெட்யூல் என்று சொல்ல வர,நோ நோ".இன்றைக்கு எந்த ஷெட்யூலும் நான் பார்க்க போறதில்லை".
"நான் ஹேப்பி மூடில் இருக்கேன்".அந்த டெண்டர் மட்டும் அட்டென் பண்ணிட்டு,நான் வீட்டிற்கு கிளம்பிடுவேன்".
" மற்றதையெல்லாம், நீயே பார்த்துக்கொள் என்றவாறு சேரிலிருந்து எழுந்த தேவி,நான்காவது தளத்திற்கு செல்லும் படியில் ஏறிச்சென்றவர் டிசைனிங் செக்க்ஷன் என்ற பெயர் பித்தளையில் பொறிக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கதவை திறந்து உள்ளே போக,அங்கிருந்தவர்கள்,தேவிக்கு விஷ் பண்ண,தலையை அசைத்து ஏற்றுக்கொண்டவர்,தனது டேபிளின் முன்பு போய் அமர்ந்து,கண்ணை மூடி ஒரு நிமிடம் தனது இஷ்டமான கடவுளை வேண்டிக்கொண்டார்".
" பின்னர் அங்கிருந்த பென்சிலை எடுத்து, மனதில் தோன்றிய உருவத்தை அங்கிருந்த போர்டில் வரையத் தொடங்கினார்".
" விஷாலா டெக்ஸ்டைல்ஸில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உடைகளை மட்டுமே தயாரிக்கின்றனர்".
" பிறந்ததிலிருந்து பன்னிரெண்டு வயது வரை உள்ள அனைத்து ஆடைகளும்,சீசனுக்கு ஏற்றவாறு இங்கே கிடைத்துவிடும்".
" இந்த டெக்ஸ்டைலை தொடங்கியதிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக, வெற்றிகரமாக தேவிதான் நடத்தி வருகின்றார்".
" தற்பொழுது சம்மர் சீசன் என்பதால், உயர்தர பருத்தியிலான உடைகள் விற்பனையாகிக் கொண்டிருந்தது".
" முதல் தளத்தில் பிறந்த ஒரு வயது குழந்தைகளுக்கும்,இரண்டாம் தளத்தில் பெண் குழந்தைகளுக்கும், மூன்றாம் தளத்தில் ஆபிஸ் மற்றும் நான்காவது தளத்தில் டிசைனிங் செக்க்ஷனும்,ஐந்தாவது தளம் முழுவதும் ஆண் குழந்தைகளுக்காக பிரித்து இருந்தனர்".
" தான் வரைந்த ஓவியத்தை பார்த்தவர்,அங்கிருந்த கலரை தொட்டு வண்ணம் தீட்டி விட்டு, மீண்டும் சற்று தள்ளி நின்று ஓவியத்தை பார்க்க,வாட்டர்மெலன் டிசைனில் பெண் குழந்தைகளுக்கு ஃப்ராக்கும்,ஆண் பிள்ளைகளுக்கு டிராயர் வித் ஸ்லீவ்லெஸ் பனியனும் வரைந்திருந்தார்".
" இதை ரெடி பண்ண சொல்லிடுங்க என்றவாறு,மற்றவர்கள் செய்யும் டிசைனை செக் பண்ணி பார்த்து விட்டு,அதில் உள்ள சிறு திருத்தங்களையும் சொல்லி முடித்தவரின் ஃபோனிற்கு,கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
" டிராயிங் டேபிளின் மேலிருக்கும் ஃபோனை எடுத்து பார்த்தவரின் முகத்தில் புன்னகை வந்தது".கால் கட் ஆவதற்குள் அட்டென் பண்ணிய தேவி,சொல்லுங்க வீர்".
" மைடியர் விஷாஆஆஆஆ டார்லிங்,
எப்படி இருக்க?",இந்த மாமனை மிஸ் பண்ணுறியாடி என்றார்,தேவியின் காதல் கணவர் தன வீர சிம்ஹன்".
" ம்ம் என்றபடியே ஃபோனோடு அங்கிருந்து வெளியே வந்து, படியிலிறங்கி கீழே வந்தார்".
" ஓஓஓ மேடம் டிசைனிங் செக்க்ஷனில் இருந்தீங்களாக்கும் என்றவருக்கு,ம்ம் என்ற பதிலை சொல்லியபடியே,தனது கேபீனை திறந்து உள்ளே வந்த தேவி,என்ன சொன்னீங்க?".
" மிஸ் யூ டி பொண்டாட்டி".
" ஆஹான்".
" சார்,சூரத்திற்கு போய் எத்தனை நாளாகுது?என்று தேவி கேட்க,இரண்டு மணி நேரமாகுதுடி பொண்டாட்டி".என்ன செய்ய,மனுஷனுக்கு அப்படி என்ன சொக்குபொடி கலந்த மந்திரம் போட்டுருக்கியோ?".
" முப்பது வருஷமா அந்த அழகியிடம் மயங்கி போய் இருக்கேன்டி என்று தனா சொல்ல,ஓஓஓஓ சாரை நான் தான் மயக்குனேனாக்கும்?".
" வீர்.... வீரென்று,சார் எங்கே போனாலும்,உங்க பின்னாடியே சுற்றிச்சுற்றி வந்தது மறந்து போய்விட்டது போல தி கிரேட் பிஸ்னஸ் மேன் தன வீர சிம்ஹனுக்கென்று சொன்னார் விஷாலா தேவி".
எஸ்.எஸ்.மருத்துவமனை:
அய்யோஓஓஓ,எதோ ஒரு வேகத்தில் என் மகளென்ற உண்மையை சொல்லி விட்டேன் போலையே..வசு...எதையாவது சொல்லி சமாளியென்று அவரின் மனசாட்சி சொல்லியது".
"ஆமாடா ஆர்கலி,உன்னை என் மகளாக நினைத்து விட்டேன், அதனால் தான் அப்படி சொன்னேன்".
" ஓஓஓ சரிங்க மேடமென்றாள்".
" என்னமா,என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா?,உனக்காக இல்லையென்றாலும் உன் வயிற்றில் வளரும் சிசுவிற்காவது நீ வாழணும்டா என்று,அவள் தலையில் கோதி விட்டார்".
வசுந்தரா சொன்னதை கேட்ட ஆர்கலி, என்னா, சிசுவா என்று அதிர்ந்து போனவள்,என்ன சொல்லுறீங்க? ".
" ஆமாடாமா,டாக்டர் தான் சொல்லிட்டு போனாங்கள்".கடவுளோட பாக்கியத்தை பாறேன், மகளோடு பேரப்பிள்ளையும் எனக்கு கிடைத்திருக்கின்றதே என்று கண் கலங்கினார்".
" யாரென்னு தெரியாத ஒருவர்,இன்று பார்த்த தன் மேல் இவ்வளவு அன்பா என்பதை அவளால் ஏற்க முடியவில்லை".
என் வாழ்க்கை பயணமே எதை நோக்கி என்றே இதுவரை எனக்கு தெரியவில்லை?.இந்த லட்சணத்தில்,என் வயிற்றில் சிசுவா
" கடவுளே ஏன் இந்த சோதனை? ".
" நானே பூமிக்கு பாரமென்று வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருப்பவளுக்கு,இப்படி ஒரு வழியை காட்டியிருக்கின்றாயே?".இதை என்னவென்று சொல்லுவேனென்று பலவாறு தன் மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவளை,அம்மு, அம்மு என்ற குரல் நிகழ்விற்கு கொண்டு வந்தது.
என்னடாமா யோசனை?.
உன்னை பற்றி எந்த விஷயமும் நான் கேட்க மாட்டேன்.நான் மட்டுமில்லை,நம் வீட்டில் இருப்பவர்களும் தான். அம்மாக்கூட வந்துடு அம்மு,உன்னை கண்ணுக்குள்ள வச்சி தாங்குறேனென்று உருகி சொல்லும் வசுந்தராவை பார்த்தவளுக்கு, தன்னை மீறி அழுகை பீரிட்டது.
மேடம் என்றபடியே,வசுந்தராவின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுபவளை,தேற்ற வழியின்றி அவரும் கலங்கி போனார்.
தனது மகளின் இந்த நிலமைக்கு யார் காரணமென்று தெரியவில்லையே?. ஆர்கலிக்கு திருமணம் முடிந்து, சென்னையில் இருப்பதாக மட்டும் தானே தன்னிடம் சொன்னது.மீண்டும் அவரிடம் விசாரிக்க செல்வதற்கு முன்பு,அவரும் இறந்து விட்டார்.ஆர்கலி வாயை திறந்து சொன்னால் மட்டுமே,உண்மை தெரியும்.
"தற்பொழுது அவள் இருக்கும் நிலமைக்கு,எதையும் சொல்ல வழியில்லை".முதலில் என் மகளை நான் கூப்பிட்டு போகிறேன்.
" சிறிது நாட்கள் சென்ற பின்னர், அவளிடம் கேட்டு மற்றதை தெரிந்து கொள்ளலாமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர் அம்மு....நீ இதுவரை அழுதது போதும்.இன்றிலிருந்து,உனக்கு இந்த அம்மா இருக்கேன்".
"நான் உயிரோடு இருக்கும் வரைக்கும்,இனி உன் கண்ணில் ஒரு துளி நீர் வரக்கூடாது".
"உன் வயிற்றில் வளரும் என் பேர பிள்ளைக்காக,புதிய வாழ்க்கையை தொடங்குடா என்றார்".
" இவ்வளவு தூரம் அன்போடு பேசும் வசுந்தராவின் வார்த்தையில் இருக்கும் உண்மையான அன்பை,ஆர்கலியால் புரிந்து கொள்ள முடிந்தது".
"கடவுள் விட்ட வழி இது தான் போல".
" சிறு வயதில் இருந்து பாதர் சொல்லிக்கொடுத்தது போல, காரணமின்றி எதுவும் நமது வாழ்க்கையில் நடக்காது என்ற வார்த்தையை நினைத்துக்கொண்டாள்".
" சென்னையில் இருந்தால், நிச்சயமாக அவன் கண்ணில் பட வாய்ப்பு இருக்கின்றது".இவங்களும் கலெக்டர் என்று சொல்லுறாங்கள்,நம்பி போவோம் என்று முடிவெடுத்தவள்,உங்க கூட நான் வரேன் மேடம்".
" ஆனால்,அங்கு எனக்கு ஒரு வேலை வாங்கி தந்துடுங்க,பக்கத்தில் எங்கையாவது நான் தங்கிக்கொள்கின்றேன்".
" அவள் வரேன் என்று சொன்னதே இப்போதைக்கு போதும்,மற்றது தனது அம்மா பார்த்துக்கொள்ளுவாங்கள் என்ற உண்மையை உணர்ந்த வசுந்தரா,சரிடா அம்மு உன் விருப்பம் போல செய்யுறேன்".
"நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வருகிறேன்,பார்மாலிட்டீஸ் முடிஞ்சதும் நாம போகலாமென்றவர், அங்கிருந்த கதவை திறந்துக்கொண்டு வெளியே சென்றார்".
" சிறிதா நொடிகள் கண்ணுக்கு முன்பாக இருக்கும் ஹேண்ட்பேகையே வெறித்து பார்த்தவள்,ஒரு நொடிகள் தனது கண்ணை மூடி திறந்து விட்டு, எழுந்து போய் அந்த பேகை எடுத்து வந்து பெட்டில் உட்கார்ந்தாள்".
" பின்னர் அதன் நடுவில் இருக்கும் ஜிப்பை திறந்து பார்க்க,அதனுள் பழுப்பு நிற கவர் இருந்தது".
" ஒரு முறை அந்த கவரை பார்த்து விட்டு மீண்டும் ஜிப்பை பூட்டியவள்,மற்றொரு ஜிப்பை திறந்து கையை விட,அவள் கையில் அகப்பட்டது பழைய' நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக்' ஃபோன்".
"அதை வெளியே எடுத்தவள்,அதன் பின் கவரை திறந்து,அதனுள் இருந்த சிம்கார்டை கழட்டி,அதை பத்திரமாக ஹேண்ட் பேகில் மறைவாய் உள்ள ஜிப்பில் ஒளிய வைத்தவள்,மீண்டும் ஃபோனை உள்ளே வைத்து பழையபடி ஜிப்பை பூட்டிய ஆர்கலி,பேகை டேபிள் மேல் வைத்து விட்டு,பெட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்".
கதவை திறந்து வெளியே வந்த வசுந்தரா, அங்கிருந்த நர்ஸிடம் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கென்று கேட்க,லெப்ட் சைடில் இருக்கு மேம் என்கவும், உள்ளே போய் சத்தமின்றி அழுதவர்,பின்னர் தனது முகத்தை கழுவி விட்டு,ரிசப்ஷனிற்கு சென்று விஷயத்தை சொல்ல,அங்கிருந்த பார்மில் டீட்டைல்ஸ் பில் பண்ணி பணத்தை கட்டி விட்டு மேலே வந்தார்.
"அம்மு வாடா நாம போகலாமென்க,சரிங்க மேடமென்றவள்,எழுந்து போய் ஹேண்ட்பேகை எடுத்து தனது வலது பக்க தோளில் மாட்டிக்கொண்டு, போகலாம் மேடமென்றாள்".
இருவரும் ஹாஸ்பிட்டலின் உள்ளே இருந்து வெளியே வர,அவர்களுக்கு முன்பு வந்து நின்ற காரை பார்த்தவர், வா அம்மு.நம்ப கார் தான் என்றவாறு பின்கதவை திறந்து ஏற,மற்றொரு கதவு வழியாக ஆர்கலியும் உள்ளே ஏறி உட்கார,போகலாம்ணா என்றார்.
சரிமா என்ற மைக்கேல்,அங்கிருந்து திருச்சூரை நோக்கி காரை ஓட்டத்தொடங்கினார்...