• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர்- மைக்கேல் பிளாஷ்பேக்:

பீகார்-கயை மாவட்டம்

"மனம் விட்டு பேசியவர்கள், நேரம் ஆகுதென்று கிளம்பும் போது, கண்டிப்பாக வீட்டிற்கு வரணுமென்று மைக்கேலும்,ஷாலியும் சொல்ல, நிச்சயமாக வரோமென்றனர்".


"வீட்டிற்கு வாங்கோ, சாப்பிட்டு காலையில் போகலாமென்று ஷாலியின் பெற்றோர்கள் சொல்ல, ஷாலியும் கணவனை பார்த்தாள்".

" ம்ம் என்று மைக்கேல் தலையாட்ட, சரிம்மா என்றவள், மைக்கேலின் வலது கையோடு தனது கரத்தை கோர்த்துக்கொண்டவள், பெற்றோர்களோடு பேசிக்கொண்டே தனது வீட்டை நோக்கிச்சென்றாள்".

"எட்டு மாதங்களுக்கு பிறகு, தனது வீட்டிற்குள் வந்த ஷாலிக்கு கண்கள் கலங்கியது".

"மம்மா, நான் சமைக்கிறேன் என்றவள், கிச்சனிற்குள் சென்று வேகவேகமாக சமையலை செய்ய தொடங்கினாள்".

"மகளின் செயல்களை இருவரும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்".

"இங்கு இருந்தவரை கிச்சனிற்கு சாப்பிட மட்டும் தான் ஷாலி வருவாள். அப்படியாப்பட்ட மகள், இன்று குடும்பம் என்று வந்த பின்னர் பொறுப்பு வந்து விட்டதை நினைத்து மகிழ்ந்தனர்".

"அரை மணி நேரத்தில் சமையலை முடித்து வெளியே வர, ஷாலியின் தங்கையும் டியூஷனில் இருந்து வீட்டிற்கு வந்தவள், தனது அக்காவை பார்த்து பஹன்னு( அக்கா அல்லது சகோதரி) அதிர்ந்தாள்".

"தங்கையை பார்த்த ஷாலி இதழ்களை விரித்து சிரித்து விட்டு, அவளருகில் சென்று ஷமி என்று தோளை தொட , ஷாலியின் வயிற்றோடு கட்டிக்கொண்டவள், போ நான் உன்கிட்ட பேசமாட்டேனென்று அழுதாள்".

" சரினு ஷாலி சொல்லவும் அழுது கொண்டிருந்த ஷமியோ அக்காவை முறைத்து பார்த்தாள்".

" என்னை மறந்துட்டேயில்லைனு ஷமி அழ,உன்னை எப்படி டி மறப்பேனென்று ஷாலியும் அழுதாள்".

" அக்கா தங்கை இருவரின் பாச கடலில் நாங்க மூழ்கிவிடுவதற்குள், வயிற்றுக்கு ஏதாவது போட்டால், நல்லாயிருக்குமென்றான் மைக்கேல்".

" பின்னர் தன் கையாலே சமைத்த உணவுகளை பெற்றோருக்கும், தன் உடன் பிறப்புக்கும் பரிமாறிவிட்டு, இந்தா திவாரியென்று கணவனுக்கும் தட்டில் உணவை வைத்து நீட்டினாள்".

"நீ சாப்பிடு முதலில் என்றவன், மற்றவர்கள் அருகில் இருப்பதை மறந்து, உணவை அள்ளி அவளின் வாய் முன்பு நீட்ட, ஷாலியோ திரு திருவென்று விழித்தாள்".

" அவள் பார்வை போன திசையை பார்த்து தலையில் தட்டிக் கொண்டு கீழே குனிந்து சாப்பிட்டான்".

"ஷாலியின் பெற்றோர்களோ சிரித்துவிட்டு, மகளின் சமையலை பாராட்டி கொண்டே சாப்பிட முடித்தனர்".

"ஜானு நேரம் ஆகிட்டென்று மைக்கேல் சொல்ல,பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்".

"வண்டியில் போகும் போது, என்ன ஜானு மனசுக்கு திருப்தி தானேயென்று மைக்கேல் கேட்க, கணவனின் தோளில் சாய்ந்து முத்தமிட்டுக்கொண்டே,ரொம்ப சந்தோஷம் திவாரி".

"இன்னும் எவ்வளவு நேரமாகும், நம்ம வீட்டுக்கு போகணு கேட்கும் போது,மைக்கேல் தனது வண்டியை சடன்பிரேக் போட்டு நிறுத்தினான் ".

என்ன ஆச்சுங்க?

மைக்கேல் எதுவுமே சொல்லாமல் இருப்பதை பார்த்து, வண்டியிலிருந்து இறங்கி முன்பக்கம் பார்த்தவளோ அதிர்ந்து போனாள்".

"10 பேர் கையில் அருவாளோடு நின்று கொண்டிருந்தனர். என்ன திவாரி ரொம்ப சந்தோஷமா இருக்க போலயென்று சிங் சொல்லும் போது, பின்னாலிருந்து ஒருவன்,கரிமை அவர்கள் முன்பு தள்ளி விட்டான்".

"பலவித காயங்களோடு, ரத்தம் வழிய,பாய் என்றவாறு கரீம் அவர்களுக்கு முன்பு வந்து விழுந்தான்".

"ஐயோ கரீமென்று வயிற்றுப் பிள்ளையோடு ஷாலி அவனிடம் வேகமாக போக, எங்கிருந்தோ வந்த கத்தி, ஷாலியின் கழுத்தை துண்டாக்கி சென்றது".

" ஜானு என்று அதிர்ந்த மைக்கேலுக்கு, அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை".

"மூன்று நாட்களுக்கு பிறகு மைக்கேல் கண்விழித்து பார்க்க, அவன் பக்கத்தில் வசுந்தரா உட்கார்ந்திருந்தார்".

"அப்பொழுது,அங்கு வந்த டாக்டர், மைக்கேலை செக் பண்ணி பார்த்து விட்டு, இனி எந்த பிரச்சினையும் இல்லை மேடம்.காயங்கள் ஆற தான் சில நாட்கள் ஆகும்".

"ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் நார்மலாக தானிருக்கிறது.இன்னும் ஒன் வீக் ஹாஸ்பிட்டலில் இருக்கட்டும், கால் கட்டு பிரித்ததும் நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாமென்று அங்கிருந்து சென்றார்".

"வசுந்தரா சுந்தரபாண்டியனென்று மைக்கேல் சொல்ல,ஆமாம்ணா".

" ஏன்மா என்னை காப்பாற்றினாய்?, அப்படியே விட்டுருக்கலாமே?, அவளோடு நானும் போயிருப்பேனேயென்று கதறி அழுதான்".

"வசுந்தராவும்,அவன் அழட்டுமென்று அமைதியாக இருந்தாள்".

" சிறிது நிமிடங்கள் சென்று மைக்கில் அழுகை ஓரளவுக்கு ஓய்ந்திருக்க,அண்ணா உங்களை பற்றி எல்லாமே எனக்கு தெரியும். எப்படி என்று கேட்கிறீர்களா? கடைசி நேரத்தில் கரீம் சொல்லி விட்டு தான் இறந்து போனான்".

என்னாஆஆஆஆஆ!

"கரீமும் இறந்துவிட்டானானு அழுதான்".

" அண்ணா", இப்போ நாம கேரளாவில் இருக்கிறோமென்று வசு சொல்ல, என்ன?,எப்படி பீகார்லயிருந்து இங்க வந்தோம்னு அதிர்ச்சியானான்!!

"அண்ணா நல்லபடியா குணமாகி வாங்க, மற்றதை வீட்டில் போய் பேசிக்கொள்ளலாமென்று வசு சொல்ல, இனி நான் உசுரோட இருந்து என்னமா புண்ணியம்?".யாருக்காக நான் வாழணுமென்று, விரக்தியாக சொன்னான்".

" இந்த தங்கச்சிக்காகணா".

" ரெண்டு முறை நீங்க என் உயிரை காப்பாற்றியிருக்கீங்களென்று தெரியும்ணா".

" இது... இது... உனக்கு எப்படிமா தெரியுமென்று மைக்கேல் கேட்க, கரீம், மற்றும் என்னோட பி. ஏ. இருவரும் தான் சொன்னார்கள்".

"உங்களை காப்பற்றச்சொல்லி உதவி கேட்கும் போது தான், கரீம் இதை பற்றி சொன்னான்".

" அண்ணா, நம்ப உயிரு நாம் நினைக்கும் போதெல்லாம் போய்விடாது, ஏதோ ஒரு காரணத்திற்காக தான் உங்களை அந்த கடவுள் என் கண்ணில் காட்டியிருக்கின்றார்".

" நீங்கள் முழுமனதோடு திருந்தி, ஏழு மாதம் ஆகிறதென்று எனக்கு தெரியும்".

"சட்டப்படி அந்த கஞ்சா மன்னன் தவறானவனாக இருந்தாலும், என் மனசாட்சி படி திருந்திய நீங்கள் குற்றவாளியில்லை".

" உடம்பை பார்த்துக் கொள்ளுங்களென்று அங்கிருந்து சென்றாள்".


திருச்செந்தூர்:

"இரண்டு பஸ்ஸும், பக்தர்கள் இலவசமாக தங்கும் விடுதியிருக்கும் இடத்தில் வந்து நின்றது".

"சீக்கிரமா குளித்து ரெடியாகி வாங்க, காலை தரிசனத்திற்கு போகலாமென்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிங்கைய்யானு பஸ்ஸிலிருந்து இறங்கியவர்கள் அந்த விடுதியின் உள்ளே சென்றனர்".

"அனைவரும் குளித்து தயாராகி வர காலை எட்டு மணிமானது".

"பின்னர்,அங்கிருந்து கோயிலை நோக்கி நடந்து சென்றனர்".

"கோயிலில் ஏதோ விசேஷ நாள் என்பதால், பக்தர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவேயிருந்தது".

" நடந்து போகும் போது ஓரிடத்தில் கூட்டமாக இருக்க,என்னவென்று கோபி விசாரிக்கவும், யாரோ சித்தர் வந்திருப்பதாகவும், பெயர் சொல்லி அழைத்து அவர்களுக்கு ஏதோ சொல்வதாக சொன்னார்".

" நாமளும் போகலாமாடினு கீதா கேட்க, ஜனனி தன் தோழியை முறைத்து பார்த்தாள்".

" அந்த கூட்டத்தை கடந்து செல்லும் போது, சத்தியமூர்த்தி, வள்ளியம்மை என்று உரக்க சத்தத்தில் சித்தர் கூப்பிட்டார்".

"தங்களது பெயராயென்று இருவரும் யோசனையாக, மீண்டும் இருவரின் பெயரை சித்தர் கூப்பிட,அப்பா அந்த பெரியவர், உன்னையும், அத்தையையும் தான் கூப்பிடுகிறாரென்றான்".

" எங்களை ஏன்டா அவர் கூப்பிடப்போறாரென்று வெற்றியிடம் சொல்ல, உங்களை தானென்று மீண்டும் குரல் வந்தது".

" கூட்டத்தை விலக்கிக்கொண்டு இருவரும் அங்கு செல்ல, சுமார் என்பது வயது முதியவர், நீண்ட தாடி, சடை விழுந்த முடிகளோடு,ஒடிசலான தேகத்தோடு, காவி உடையை அணிந்து, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார்".

"வள்ளியம்மை என்க, சாமி என்றவாறே பயபக்தியோடு சித்தரின் முன்பு போய் நிற்க, தீர்க்க சுமங்கலியா வாழ்வ, நேரம் வரும் போது உன் கழுத்தில் மாங்கல்யம் ஏறும், இது இறைவனின் செயல்".

" சித்தர் சொன்னதைக்கேட்டு, வள்ளிக்கு மட்டுமில்லை, வந்திருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி தான்".

"சத்தியமூர்த்தினு சித்தர் சொல்ல, சொல்லுங்கைய்யா என்றார். ஹாஹாஹா என்று சிரித்தவர்,ரசகியங்கள் அம்பலமாகும், தொலைத்தது பசுங்கன்றோடு வரும்".

"நலமோடு வாழ்வாய்".

" மேலும் சிலரின் பேரை கூப்பிட்டு அருள்வாக்கு சொல்லினார்".

" எப்படி இது சாத்தியமென்று?அண்ணன் தங்கை இருவரும் உள்ளுக்குள்ளே கேள்வியை எழுப்பிக்கொண்டனர்".

" மூன்று மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னர் செந்தூர் ஆண்டவனை மனதார தரிசித்து விட்டு, வெளியே வந்தவர்கள்,சிலர் அங்கிருந்த இடத்தில் உட்கார, மற்றவர்கள் நேராக கடற்கரையை நோக்கிச்சென்றனர்".

" உட்கார்ந்திருந்த மற்றவர்களெல்லாரும், காலையில் சித்தர் சொல்லியதை பற்றி பேசிக்கொண்டனர்".

" இவர்கள் பேச்சில் மூழ்க, ஜனனி, கீதா இன்னும் சில பெண்கள் அங்கிருந்த கடைகளை நோக்கிச்சென்றனர்".

" ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்துக்கொண்டே,தேவையானதை வாங்கிக்கொண்டே சென்றனர்".

"அப்பொழுது வெற்றியும், கோபியும் பேசிக்கொண்டே கோயிலை சுற்றி உள்ள கடைகளை வேடிக்கை பார்த்து செல்ல, தடிமாடுங்களா என்ற சத்தம் கேட்டு நண்பர்கள் இருவரும் திரும்பி பார்க்க, இவர்களின் கல்லூரி தோழியான ராணியோ, அவளது இடுப்பில் கையை வைத்து முறைத்து நின்றாள்".

" ஏய்.... பப்ளிமாஸென்று கோபி சொல்ல, தூ என்று துப்பியவள், சராமரியாக திட்ட தொடங்கினாள்".

" அய்யோ தாயே போதும் நிறுத்தென்று இருவரும் அவளை நோக்கி கையை கூப்ப,ம்ம் என்றவள், பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்".

" ஆமா, நீ எப்போ துபாய்லயிருந்த வந்த பப்ளிமாஸென்று வெற்றி கேட்க, மீண்டும் திட்ட தொடங்கியவள், கையில் இருந்த ஃபோனில் அவர்களின் குருப் சேட் மெசேஜை ஓப்பன் பண்ணி காட்ட, ஹிஹிஹி மறந்துட்டோமென்றனர்".

" எங்கே அந்த பாவப்பட்ட ஜீவனென்று கோபி கேட்க,வந்துட்டேனென்று சொல்லிக்கொண்டே கையில் இரண்டு வயது ஆண் குழந்தையோடு வந்தான் ராணியின் கணவர் பாலாஜி".

" எப்படி பாஸ் இருக்கீங்களென்று வெற்றியும், கோபியும் கேட்க, நல்லா இருக்கேனென்ற பாலாஜி, அவர்களையும் விசாரித்தான்".

"பின்னர் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த கதையை பாலாஜி சொல்ல, சரி வாங்களென்று இருவரையும் அழைத்துக்கொண்டு சத்தியமூர்த்தி இருக்கும் இடத்திற்கு வந்தனர்".

" அப்பாயென்று ராணி அழைக்க, ராணி என்றவர், வாம்மா, வாங்க தம்பி என்றவாறே எழுந்து போய் பாலாஜிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டவர், எப்போ வந்தீங்கனு நலம் விசாரித்து பேசிக்கொண்டனர்".

" வெற்றியின் வேலைக்காக தான் வந்தோம்மாயென்று சத்தியமூர்த்தி சொல்ல, நண்பர்களை கொலைவெறியோடு ராணி பார்க்க,போச்சு என்றனர்".

" பின்னர் கோபியே சுருக்கமாக சூழலை பற்றி தோழியிடம் சொல்ல, ராணியும் சமாதானமானாள்".

" கடலுக்கு போயிருந்தவர்களும் வந்து சேர, வள்ளியத்தை என்றவாறு கட்டிக்கொண்டாள்".

"கண்ணூஊஊ நல்லா இருக்கியா தங்கமென்றவர், அந்த செந்தூரன் தான் உன்னை காண வச்சிருக்கானென்று,கோயில் திசையை பார்த்து கும்பிடு போட்டார்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இரத்தினபுரி- பிளாஷ்பேக்:

பொள்ளாச்சி:

"ஆமா இவள் கோயில் பட்டி வீரலெட்சுமி, அண்ணனுக்காக வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்தேட்டாளென்று மனைவியை பார்த்து ராம் சொல்ல, அங்கிருந்த சிவம், தன் மகனை பார்த்து,மகனே அடக்கி வாசிக்கிறது ரொம்ப நல்லதென்றார்.


" அதற்குள் வரலெட்சுமி பாலும் பழமும் கலந்து எடுத்து வர,மணமக்கள் இருவரையும் அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் செய்து முடித்தனர்".

" அங்கு நடக்கும் விஷயங்களை, ஃபாதர் ஒரு பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்தார்".

" லெட்சுமி என்று சிவம் கூப்பிட, இதோங்க என்றவாறே அங்கு வந்தவர், ராம் என்று மகனிடம் கையில் உள்ள தாம்பூலத்தை நீட்ட, அதிலிருந்த பெட்டியை திறந்தவன், கைசெயினையும், கழுத்து செயினையும் எடுத்து, மச்சான் முறையில் ருத்ரனிற்கு போட்டு விட்டான்".

" பின்னர்,சிவமும், லெட்சுமியும் சேர்ந்து இன்னொரு நகை பெட்டியை எடுத்தவர்கள், இது பொறந்த வீட்டு சீதனமென்று ஆர்கலியிடம் நீட்ட, ஆர்கலியோ அவர்கள் அன்பில் திக்குமுக்காடிப்போனாள்".

" ஏன்மா இதெல்லாமென்று ஆர்கலி கேட்க, தன் மனைவியை பார்த்த ருத்திரன்,வாங்கிக்கோயென்றான்".

" ஓஓஓ இப்பவே என் தங்கச்சி, புருஷன் பேச்சை கேட்க ஆரம்பிச்சாச்சாயென்று ராம் சொல்ல, அதற்கு மற்றவர்கள் சிரித்து விட்டனர்".

" பின்னர் ஃபாதரிடம் வந்த சிவன், தம்பி இன்னும் இரண்டு நாளில் இலங்கைக்கு செல்லணும், அதுவரை புள்ளை எங்களோடு இருக்கட்டுமென்க,ஃபாதர் யோசனையானார்".

"அப்போ, நான் மேல ஒரு வார்த்தை கேட்டு சொல்கிறேனென்க,அந்நேரம் ருத்ரன் ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".

" தனது பாக்கெட்டிலிருந்த ஃபோனை எடுத்து பார்க்க,ஆது என்று வந்தது".

"சிறிது நொடிகள் யோசனைக்கு பிறகு அட்டென் பண்ண, அங்கு சொல்லப்பட்ட செய்தியில் என்னாஆஆஆ என்று அதிர்ந்து எழுந்தான்".

" மேலும் சிங்களத்தில் பேசி விட்டு ஃபோன் அழைப்பை கட் பண்ணியவன், ராம் நான் உடனே இலங்கைக்கு போகணும்டா".

" அங்க நிலமை சரியில்லையென்று பதற்றமாக சொல்ல, டேய் முதல்ல விஷயத்தை சொல்லுடா? என்று நண்பனின் தோளில் தட்டி நார்மலாக்க, அத்தை மகள் பாய்சன் சாப்பிட்டாளென்றும், தனது அத்தை மேகாவிற்று ஹார்ட் அட்டாக் வந்து ஐசியுவில் இருப்பதாக, ஒருவழியாக ருத்ரன் சொல்லி முடிக்க, அவன் கண்ணிலிருந்து நீர் வழிந்தோடியது".

" ருத்ரன் சொல்லியதை கேட்வர்களுக்கு அங்குள்ள சூழல் புரிந்தது. சரி நான் டிக்கெட் பார்க்கிறேன்டா. நீ ரிலாக்ஸா இருடானு தனது போனிலிருந்து ஏர்போர்டில் வேலை பார்க்கும் உறவினருக்கு கால் பண்ணிய ராம், இலங்கைக்கு செல்ல டிக்கெட் வேண்டுமென்க, திருச்சியிலிருந்து வேண்டுமானால் செல்லலாம்".

" அங்கு தான் இப்போதைக்கு அவைலபிள் இருக்கென்றார்.சரிங்க மாமா என்றவன், திருச்சியிலிருந்து இலங்கைக்கு ப்ளைட் டிக்கெட் போட்டான்".

"விஷயத்தை ராம் சொல்ல, சரிப்பாயென்றவர், இப்போ கிளம்பினால் தான், நீங்க ஏர்போர்டிற்கு செல்ல சரியாக இருக்குமென்றார்".

" ருத்ரா வாடா என்றவாறே நண்பனை அழைத்துக்கொண்டு மேலே உள்ள ரூமிற்கு போனவன், பெட்டியில் அவன் பொருட்களை எடுத்து வைத்து விட்டு, போட்டிருந்த டிரஸை மாற்றிக்கச் சொன்னான்".

" இயந்திரகதியில் ராம் சொன்னதையெல்லாம் ருத்ரன் செய்து முடித்து கீழே வர, ஆர்கலி உனக்கு நிலமை புரியுது தானேனு ராம் கேட்க, நீங்க நல்லபடியா உங்க மச்சானை அனுப்பி வைங்கணா என்றாள்".

" யாரிடமும் சொல்லிக்கொண்டு செல்லும் மனநிலையில் ருத்ரன் இல்லையென்பது அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது".

" நானும் வரேங்களென்று மிதிலா சொல்ல, சரி வா என்க, ஆர்கலியையும் கூப்பிட்டு போகலாங்களேயென்றாள்".

" ஃபாதரை பார்க்க, அவரும் தலையசைத்தார்".

"டிரைவர் சீட்டில் ராமும், அவனுக்கருகில் மிதிலாவும், பின்னாடி சீட்டில் ருத்ரனும், ஆர்கலியும் உட்கார, கார் அங்கிருந்து திருச்சியை நோக்கிச்சென்றது".

" எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவனமாகவும், வேகமாகவும் காரை ஓட்டிக்கொண்டு, திருச்சி ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தான்".

" ருத்ரா என்று கூப்பிட,ம்ம் டா என்றவன்,பக்கத்தில் இருந்த மனைவியை பார்த்தவன் ஆர்கலி தப்பா எதுவும் நினைக்காதே".

" விரைவில் வருகிறேனென்று அவளை ஒரு முறை அணைத்தவன் கண்ணிலிருந்த கண்ணீர் அவள் தோள்பட்டையில் விழுந்தது".

"பின்னர் ராம், மிதிலாவிடம் சொல்லிக்கொண்டு உள்ளே சென்றவன், செக்கிங்கை முடித்துக்கொண்டு காத்திருக்க, அவனுக்கான ஃப்ளைட் வந்ததாக அறிவிப்பு வந்ததும், மூவரையும் பார்த்து கையசைத்து விட்டு ஃப்ளைட்டை நோக்கிச் சென்றான்".

" இலங்கை வந்து சேர்ந்து விட்டதாக சொன்னவன், அதன் பின்னர் அங்குள்ள சூழலில் மூழ்கிப்போனான்".மேகலாவும், ஆதிராவும் குணமாகி வீட்டிற்கு வர மூன்று வாரங்களானது".

" அதன் பின்னர்,அவ்வப்போது ஆர்கலியிடம் ஃபோனில் பேசிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான்".

" பிஸினஸூம் நல்லா போவதால், அடுத்தடுத்த பிரான்ச் ஓப்பன் பண்ணுவதில் பிஸியானதால், இரண்டு வருடங்களாய், அவனால் இந்தியாவிற்கு செல்ல முடியவில்லை".

" ஆர்கலியும் யுஜி டிகிரியோடு, பி. எட். படிப்பை முடித்து விட்டதும், சென்னையில் வேலை தேடி செல்வதாக ஃபாதர் சொல்ல, அவளை வேலைக்கு அனுப்ப வேண்டாமென்று ருத்ரன் சொல்லி விட்டான்".

" ஆனால், ஆர்கலியோ, ஃபாதரிடம் போராடி சண்டை போட்டு, வேலை தேடி சென்னைக்கு போய்விட்டதாக, ருத்ரனிற்கு கால் பண்ணி சொன்னார்".

" இரண்டு வாரங்களிற்கு பிறகு ஆர்கலிக்கு வேலை கிடைத்து விட்டதாகவும், வாரத்தில் ஒரு நாள் போன் பேசுவதாகவும், அதும் பொது தொலைபேசியிலிருந்து பேசுவதாகவும் ருத்ரனிற்கு ஃபாதர் சொல்லினார்".

" அப்பொழுது ராம் தனது இரண்டாவது குழந்தையின் காது குத்தும் விழாவிற்காக, ஃபோன் பண்ணி நண்பர்களை கூப்பிட,இது தான் சமயமென்று ருத்ரனும் இந்தியாவிற்கு கிளம்பி வந்தவன், ஃபாதரை பார்க்க போவதாக ருத்ரன் சொல்ல, அவர் இறந்து இரண்டு வாரம் ஆகி விட்டதாக சொல்லினர்".

" ராமும் குடும்பத்தோடு கனடாவில் இருப்பதால், கோவையில் நடந்த விஷயங்கள்,அவன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை".

" அப்போ ஆர்கலி எங்கே தான் வேலை பார்பாளென்று ருத்ரன் கேட்க, ஃபாதருக்கு மட்டும் தான் தெரியுமென்று சொல்லி விட்டனர்".

" மற்ற நண்பர்கள் வெளியே பேசிக்கொண்டிருந்ததால், ருத்ரன் ஆர்கலி பற்றி பேசியது தெரியாமல் போய்விட்டது" .

"எதுக்கும் ஆசிரமத்தில் இருக்கும், சமையல்கார அம்மாவை விசாரிக்கலாமென்று ராம் சொல்ல,சரிடா நீ போய் விசாரி".

" ஆது இருக்கான்".

"நடந்ததை பற்றி இதுவரை நான் அவன் கிட்ட சொல்லவேயில்லைடா என்க,சரிடா நான் பார்த்துக்குறேனென்று ஆசிரமத்திற்கு சென்ற ராமும் விசாரிக்க,அந்த அம்மாவோ ஏதோ பாரிஸாமே, அங்க தான் வேலை பார்ப்பதாக ஃபாதர் பேசும் போது கேட்டேனென்றார்".

" ருத்ரனிடம் வந்து விஷயத்தை சொல்லவும், சரிடா. குட்டிங்க பங்ஷன் நல்லபடியா முடியட்டும், மற்றதை பிறகு பார்க்கலாமென்று சொல்லி விட்டான்".

"குழந்தைகளின் பங்ஷனும் நல்லபடியாக முடிய, நண்பர்களெல்லாரும் ஊட்டி போக பிளான் பண்ணினர்".

" அந்த நேரம் ருத்ரனின் அப்பா தன வீர சிம்ஹன் கால் பண்ண அட்டென் பண்ணி பேசி முடித்தவன், நீங்க ஊட்டிக்கு போய்விட்டு வாங்கடா".

" நான் சென்னை வரை போய் வருகிறேனென்று சொல்லும், ருத்ரனை ஆதுவோ விசித்திரமாக பார்த்தான்".

" நீயும் வரியானு ருத்ரன் கேட்க, எனக்கு ஊட்டிக்கு போகணுமென்று சொல்லிவிட்டான்".

" ஆதுக்கு தனது பெற்றோரை பிடிக்காதென்பது, ருத்ரனிற்கு நன்கு தெரிந்தே தான் கூப்பிட்டான்".

" பிறகு ராமும் நண்பர்களோடு ஊட்டிக்கு செல்ல, ருத்ரன் சென்னைக்கு வந்து சேர்ந்தவன், அங்கிருந்த ஹோட்டலில் தங்கிக்கொண்டு, பாரிஸ் பக்கம் உள்ள ஏரியாவில் ஆர்கலியை தேடி அலைந்தான்".

" மூன்று நாட்கள் ஆகியும், ஆர்கலி இருக்கும் இடத்தை,ருத்ரனால் கண்டு பிடிக்க முடியவில்லை".

" பின்னர்,ராமிடம் ஆர்கலியை கண்டு பிடிக்க சொல்லி விட்டு,இலங்கைக்கு வந்து விட்டேனென்று,இதுவரை நடந்த அனைத்தையும்,தனது தாத்தா பாட்டியிடம் கண்ணீரோடு சொல்லி முடித்தான்".

பிளாஷ் பேக் முடிந்து விட்டது,இனி....

" தங்களது பேரன் சொல்லியதையெல்லாம் கேட்ட சிம்ஹன் தாத்தாவும், கிரிஜா பாட்டியும் மலைத்து போய் உட்கார்ந்திருந்தனர்".

" தாத்தா இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியுமென்று ருத்ரன் கேட்க, ஏழு மணிக்கு சென்னைக்கு போக ஃப்ளைட்.போய் ரெடியாகுற வேலையை பாரென்று பேரனிடம் சொன்னவர், கிரிஜா,தேவையானதை எடுத்து வைத்துக்கொள்".

" நான், நம்ப எஸ்டேட் வரைக்கும் போய் வருகிறேனென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்".

கடலூர் மாவட்டம்- சதூர்வேதமங்கலம்:

"சதூர்வேதமங்கலம் பேருராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறதென்று உள்ள போர்டை ,ஆதிரா படித்து பார்த்தாள்".

" மேலும் சிறிது நிமிடங்கள் சென்று, அந்த பெரிய வீட்டின் முன்பு போய் ஹாரனை அடிக்கவும் கண்ணனும் அங்கிருந்த பெரிய இரும்பு கதவை திறந்து விட, கார் உள்ளே போய் அங்கிருந்த போர்டிகோவில் நின்றது".

" இந்த சிறிய வீட்டிற்கு மீண்டும் தங்களை வரவேற்கிறேன் இளவரசியென்று ஆதிராவிடம் சொல்ல, இது சிறிய வீடாணாஆஆஆஆஆ என்று கண்களை விரித்தாள்".

"மீண்டும் இரும்பு கதவை சாற்றி விட்டு, அங்கு வந்த கண்ணன், ரியா, ஆதிவாங்கடா என்றார்".

" ஆதிரா அவர் காலில் விழுந்து,நல்லா இருக்கீங்களாப்பா என்றாள்".

" நல்லா இருடா கண்ணு என்றவர், அப்பா நல்லா இருக்கேன், அங்க வீட்டில் மேகலா, சுந்தர், ருத்ரன், சிம்ஹன் மாமா, கிரிஜா அத்தை நல்லா இருக்காங்களா?".

" ரியா தன் மாமனின் தோளில் சாய,குட்டிமா என்று தன் மருமகளை ஒரு கையால் அணைத்தவர், இன்னொரு கையால் ஆதிராவை அணைத்துக்கொண்டு வீட்டினுள்ளே சென்றார்".

"அப்பா, புட் கண்ட்ரோல் ரெகுலரா பாலோவ் பண்ணுறீங்களாயென்று ஆதிரா கேட்க, கண்ணன் திருதிருவென்று முழித்தார்".

" உன் ராமனை பாருமா எப்படி முழிக்கிறதையென்று கபிலன் தேவிகாவிடம் சொல்லி சிரித்தான்".

" ரொம்ப கன்ட்ரோல் தான் ஆதி என்றான் கபிலன்".

" ஆளை பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்றாள் ரியா".

" நீயுமா குட்டிமாயென்றவாறு மருமகளை பார்த்தார்".

" ஹாஹாஹா என்று கபிலன் சிரிக்க, மகனை பார்த்து முறைத்தவர், சரி சரி நேரமாகிட்டு, போய் படுங்கம்மா, காலையில் பேசிக்கலாமென்று சொல்லி தனது அறையை நோக்கிச்சென்றார்".

" பார்த்துக்கோமா, உன் ராமன் பதில் சொல்ல முடியாமல் எப்படி தப்பித்து ஓடுவதையென்று கபிலன் சொல்ல, தேவகியும் சிரித்துக்கொண்டே,ஏம்பா இப்படி என்றார்".

" சரிடா போய் படுங்களென்று கபிலன் சொல்ல, அவரவர் அறைக்குச்சென்றனர்".

" வீட்டின் உள்ளேயிருந்த மாடிப்படியில் ஏறி மேலே வந்தவர்கள், இடது பக்கமாக உள்ள தனது அறைக்கு சென்றவன், ஆதி உன் அண்ணிகாரி ரூமிற்கு அடுத்த ரூம் உன்னுடையதுடா என்றவாறு தனது ரூம் கதவை திறந்து உள்ளே சென்று விட்டான்".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top