Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சூர்- மைக்கேல் பிளாஷ் பேக்:
பீகார்- கயை மாவட்டம்:
"மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த மைக்கேல், மனைவியின் முகத்திலிருக்கும் யோசனையை கவனிக்க தவறவில்லை".
" இவளுக்கு என்னாச்சி?, உடம்பு எதாவது சரியில்லையா?,கொஞ்ச நாட்களாகவே ஏதோவொரு யோசனையில் இருக்காள்".
" என்ன விஷயமென்று வாயை திறந்து சொன்னால் தானே, மனுஷனுக்கு தெரியுமென்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்".
" கணவன் தன்னை கவனிப்பது கூட தெரியாமல், தனது யோசனையிலே ஷாலி உழன்டுக் கொண்டிருந்தாள்".
" சாப்பிட்டு முடித்து கையை கழுவியவன், ஏன் ஜானு,உனக்கு எதாவது குறை வைத்திருக்கிறேனா? என்க, அய்யோ திவாரி, ஏன் இப்படி?".
" கர்பிணி பெண்ணோட ஆசைகளை எல்லாம், நிறைவேற்றனுமென்று படே தாதி( பெரியபாட்டி) சொன்னாங்க.இதுவரை நீ எதையுமே என்னிடம் கேட்டதில்லை. இப்போ கேட்கிறேன், உன் மனசுல அப்படி ஆசைகள் இருக்கா?, அதை சொல்லு."உனக்கு என்ன வேண்டும் கேளுடி. நானும் பாக்குறேன், கொஞ்ச நாளாக நீ சரியில்லை".
"எப்போ பார்த்தாலும் ஏதோ ஒரு உலகத்தில் இருக்கிறாய். என்ன விஷயமென்று சொன்னால் தானே எனக்கு தெரியும்".
"ஒரு வேளை இவனால் முடியாதென்று நினைத்து விட்டாயா?".
"ஏன் திவாரி இப்படி பேசுற?, குறையென்று எனக்கு எதுவுமேயில்லை.நீ என்னை எப்படி பார்த்துக்கிறனு இந்த ஊர்ல இருக்கவங்களுக்கு தெரியும்".
"உன்னை குறை சொன்னால், கடவுளுக்கே பொறுக்காது".
" இந்த வெங்காய பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.ஒழுங்கா சொல்லுடினு கடுமையாக கேட்டான்".
"கணவனின் கோப குரலை கேட்ட ஷாலி, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நல்லதில்லைனு,உன் கிட்ட ஒன்னு சொல்லணும் திவாரி.அதைக்கேட்டு நீ கோவப்படக்கூடாது என்க,ஏய் விஷயத்தை முதல்ல சொல்லுடி, மற்றதை பிறகு பார்க்கலாமென்றான்".
" எனக்கு,எனக்குனு இழுக்க, ம்ம் உனக்கென்று மைக்கேலும் கேட்க, எங்க வீட்டு பக்கத்திலிருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு போய், ஒரு முறை அம்மனை சேவிக்கணும்னு தோணுது".
" மனைவி சொன்னதை கேட்டவன்,ப்பூஊஊஊ".
"இவ்வளவு தானா டி".
" அதுக்கென்ன ஜானு, இன்றைக்கே போகலாமென்றவன், கரீமிற்கு கால் பண்ணியவன் அடேய் நானும் உன் பாபியும் கோயில் வரை போய் வருகிறோம், நீ ஒர்க் ஷாப்பை பார்த்துக்கோ என்று சொல்லி ஃபோனை வைத்தான்".
" இங்கே பாருடி, எதா இருந்தாலும் நீ சொன்னால் தான் எனக்கு தெரியும். வாத்திச்சி மண்டைக்குள்ளே விஷயத்தை வச்சிக்கிட்டால், கண்டு பிடிக்கும் அளவிற்கு இந்த மெக்கானிக் படிக்கவில்லைடி".
" இனி எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லணும்".
" ஓகே வா,சரி ஜானு... கொஞ்சநேரம் நான் படுக்குறேன், நீ ரெடியாகிட்டு சொல்லுனு உள்ளே போய் மெத்தையில் படுத்து கண்ணை மூட,அசதியும், கை கால் வலியிலையும், மைக்கேலிற்கு உறக்கம் வந்தது".
" ஷாலியும் குளித்து முடித்தவள் தயாராகி மணியை பார்க்க, மாலை ஐந்து என்று காட்டியது.பின்னர் உள்ளே ரூமிற்குள் வந்தவள், திவாரி, திவாரினு கணவனின் தோளில் தட்டினாள்".
" ம்ம் என்றபடியே எழுந்தவனிடம் மணியாகிட்டு என்க,இதோடினு டவலை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவன்,வேக வேகமாக குளித்து வெளியே வர, ஷாலியும் அவனுக்கு டிரஸை எடுத்து பெட்டில் வைத்திருக்க, அதை போட்டுக்கொண்டு தயாராகினான்".
" இருவரும் மெயின் ரோட்டிற்கு வந்தவர்கள்,ஜானு அவ்வளவு தூரம் வண்டியில் உன்னால் உட்கார முடியுமா?, கார் இல்லை ஆட்டோவில் போகலாமா என்க, நம்ப வண்டியே போதுமென்றாள்".
"பின்னர் அங்கிருந்த பைக்கில் ஏறி, இருவரும் கோயிலை நோக்கிச் சென்றனர்".
" ஒருமணி நேர பயணமோ மேலும், அரைமணி நேரம் தாமதமானது".
" அய்யோ திவாரி, எதுக்கு தான் இப்படி வண்டியை உருட்டுறாயென்று ஷாலி கேட்க, அடிப்பாவி".உனக்கு சேப்டி இல்லைனு தான் டி".
ம்கும்... அந்த பையனை பாரு, உன்னை முந்திக்கொண்டு சைக்கிளில் போறானென்று சிரித்துவிட்டாள்.
" ஏண்டி சொல்ல மாட்டாய், உன்னை அலுங்காமல், குலுங்காமல் கூப்பிட்டு போக நினைத்தேன்டி".
" ஓஓஓ இதில் மட்டும் தான் அலுங்கல், குலுங்கலோ என்க, ஏய் ச்சீ ச்சீ.கோயிலுக்கும் போகும் போது தப்பா பேசாதடினு சிரித்தான்".
" அடப்பாவி திவாரி என்றாள்.பின்னர் பேசிக்கொண்டே இருவரும் கோயிலுக்கு வந்து சேர இரவு ஏழு மணியானது. இவர்கள் போன நேரம், அம்மனுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது".
" தெரிந்தவர்கள் சிலர் கோயிலுக்குள் வந்த போது, ஷாலியை பார்த்து நலம் விசாரித்தனர்".
"தனது வீட்டிலிருந்து யாராவது வருவார்களாயென்று பார்வையால் ஷாலி அலசிக்கொண்டிருந்தாள்".
" மனைவியின் தேடல் எதுவென்று மைக்கேலுக்கு புரிந்தாலும், அவள் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்பது தான், சற்று யோசைனாயாக இருந்தது".
" சரி அம்மனுக்கு அலங்காரம் முடிந்து பூஜை ஆரம்பிக்க, இன்னும் நேரம் இருக்கின்றது".
" ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன், இங்க தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார், அவரை பார்த்துட்டு வருகிறேன் ஜானு என்க, சரி என்றாள்".
" ஐந்து நிமிடம் நடந்து செல்லும் தூரம் தான் என்றாலும், தயக்கத்தின் காரணமாய் மேலும் சில நிமிடங்களானது".
" கண்ணை மூடியவன் இனி கடவுள் விட்ட வழியென்று நினைத்து விட்டு, ஹாலிங்பெல்லை அழுத்தினான்".
" சிறிது நொடியில் கதவு திறக்க, அங்கிருந்த ஷாலியின் அப்பாவோ மைக்கேலை பார்த்து அதிர்ந்தவர், பின்னர் உள்ளே வாங்க என்றார்".
" ஷாலியின் அம்மாவும் கிச்சனிலிருந்தே வெளியே வந்தவர், மைக்கேலை பார்த்து விட்டு, பார்வையால் யாரையோ தேடினார்".
" என்னை மன்னிச்சிடுங்களென்று இருவரின் காலில் விழுந்தவன், ஷாலியின் நிலையை சொன்னான்".
" அதைக்கேட்ட இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது, எந்திரிப்பானு சொல்லி விட்டு, உள்ளே போய் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர், ஷாலிய நீங்க நல்லா பார்த்துக்குறீங்களென்று கேள்வி பட்டோமென்றனர்".
" சரி வா கோயிலுக்கு போகலாமென்று ஷாலியின் அப்பா சொல்ல, சரிங்க என்றவாறே கிச்சனிற்குள் சென்ற ஷாலியின் அம்மா,வீட்டிலிருந்த பதார்த்தங்கள் சிலவற்றை எடுத்து ஒரு கவரில் போட்டவர், போலாமென்க மூவரும் வீட்டை பூட்டிக்கொண்டு கோயிலுக்குள் வந்தார்கள்".
"மூவரும் கோயிலுக்குள் நுழைய அம்மனுக்கு ஆரத்தி காட்டுவது தெரிந்தது, கண்ணை மூடி சாமியிடம் ஷாலி வேண்டிக்கொண்டிருக்க, இவர்கள் அருகில் வந்தது தெரியவில்லை".
" பொறுமையாக மகளின் தோளில் ஷாலியின் அம்மா கையை வைக்க, அந்த ஸ்பரிசத்தில் பட்டென்று கண்ணை திறந்தவள், அங்கிருந்த தாயையும்,அப்பாவையும் பார்த்தவளின் கண்கள் அதிர்சியில் உறைந்தாலும், கண்ணீரை சிந்த மறக்கவில்லை".
" எட்டு மாதங்களுக்கு பிறகு பார்க்கும் மகளின் கன்னத்தை தடவிக்குடுத்த ஷாலியின் அம்மாவின் கண்களும் கலங்கியது".
" ஷாலி என்று மகளின் தலையை தடவி விட, மம்மா( அம்மா) என்றவாறே அவரின் தோளில் சாய்ந்து அழுதாள்".
" அவளின் அழுகையை பார்த்த மைக்கேலுக்கு, ஏதோ ஓர் மூலையில் வலித்தது".
" அவனின் முகச்சுனக்கத்தை பார்த்தவள், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேனென்றவள், திவாரி வா என்றபடியே அவன் கையை எட்டி பிடித்தவள், எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்களென்று பெற்றவர்களின் காலில் விழுந்தாள்".
" ஏன்டா இப்படியென்றவர் மகளையும், மருமகனையும் தூக்கி விட்ட ஷாலியின் அப்பா, மனைவியிடம் கண்ணை காட்ட, ம்ம் என்றவர், கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டி மகளுக்கு போட்டு விட்டார்".
" பின்னர் மகளிடம் கர்பத்தை பற்றியும், எத்தனை மாசம் ஆகுதென்று கேட்டுக்கொண்டார்".
பொள்ளாச்சி பெரிய வீடு:
"வெற்றி கண்ணுனு வள்ளியம்மை கூப்பிட்டதும், சிறு பிள்ளை போல அவர் மடியின் மேல் வந்து தலைவைத்து படுத்தவன், மன்னிச்சிடு என்றான்".
"வலிக்குதா சாமியென்று வள்ளியம்மை கேட்க, ஆமா... மனசாட்சி இல்லாமல்
நல்லா அடிச்சிட்டு, வலிக்குதா, இல்லை இனிக்குதானு கேள்வியா?".
" சரி... சரி... அத்தை ஏதோ கோவத்தில் தான் சும்மா எரும்பு கடிக்குற போல தட்டுனேன்".
" எதேஏஏஏ... ".
" இதா எரும்பு கடிச்சது?, நல்லா பாருனு வெற்றி தனது கன்னத்தை காட்ட, இரண்டு பக்கமும் லேசாக வள்ளியின் கைவிரல் தடம் இருந்தது".
" ஆள பார்த்தா முருங்கக்காய் போலிருக்க, அடி என்னமோ இடி மாதிரி விழுது என்றவன், ஆனாலும் உன் கோவம் நல்லா இருந்துச்சி வள்ளினு சிரித்தான்".
" அட படுவாயென்று மருமகனின் தோளில் தட்டிய வள்ளி,அடுத்த முறை வேண்டுமானால் கட்டையால அடிக்குறேன்".
" ஆக,வள்ளியம்மை மேடம் ஒரு முடிவோட தான் இருக்கீங்களென்று வெற்றி சொல்ல, ஆமாடா என்றார்".
" பின்னர் , அண்ணா... ஜனனி, கீதாவையும் கூப்பிட்டு போகலாமானு வள்ளியம்மை கேட்க, நம்ப ஊர்ல அந்த வழக்கம் இல்லையே மா".
" ம்ம்.. வேண்டுமென்றால் இப்படி பண்ணலாம், இதைப்போல கோயிலுக்கு போறோம்,விருப்பம் உள்ளவங்க வாங்களென்று சொல்லுவோம்".
" மாரியப்பன் நிச்சயமா கோயிலுக்கு வருவார், ஏனென்றால் அவருக்கு முருகன் மேல பக்தி அதிகம்".
" சத்தியமூர்த்தி சொன்ன போலவே, ஊருக்குள் செய்தி பரவ, கோயிலென்றதும், பாதி பேர் கிளம்பி விட்டனர்".
" அனைவரையும் அழைத்துச்செல்ல, அவர்களுடை டிரான்ஸ்போர்டிலிருந்து இரண்டு பஸ்ஸும் வந்தது".
"நல்ல நேரத்தில் அரோகரா போட்டுக்கொண்டு, பொள்ளாச்சியிலிருந்து திருச்செந்தூரை நோக்கி கிளம்பினர்".
" முன்பக்கம் உள்ள சீட்டில் சத்தியமூர்த்தியும், மாரியப்பன், சோமு மூவரும் உட்கார்ந்து கொண்டு, டிரைவருடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தனர்"
" வெற்றியும், அவனுடைய நண்பன் உட்கார்ந்திருந்த சீட்டிற்கு பின்னாடி நான்கு சீட்டுகள் தள்ளி, கீதாவும், ஜனனியும் உட்கார்ந்திருந்தனர்" .
" இன்னுமா உன் கோபம் போகவில்லையென்று தன் அருகில் உட்கார்ந்திருந்த நண்பனிடம் வெற்றி கேட்க,கோபியோ( நண்பன்) வெற்றி சொல்வது காதில் விழுந்தாலும் கண்டுக்கொள்ளாமல், ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்"
" திங்கட்கிழமை நான் ஹைதராபாத் போகணும்".
" வர இரண்டு வருஷமாகும், அதுவரை நீ தான் இங்கு அப்பாவையும், அத்தையையும் பார்த்துக்கணுமென்று சொல்லி, கோபியின் கையை பிடிக்க, எல்லா வெங்காய வெண்ணையும் எங்களுக்கு தெரியுமென்றவன், வெற்றியிடமிருந்து தனது கையை உருவிக்கொண்டான்".
" எப்பா வேலு( பஸ் டிரைவர்), டீ கடைய பார்த்து நிறுத்துப்பானு சோமு சொல்ல, சரிணா என்றார்.
" அதைப்போலவே ரோட்டோரமாய் இருந்த டீகடையின் அருகில் பஸ்ஸை நிறுத்தினார்,பஸ்ஸில் தூங்கியவர்களை தவிர மற்றவர்கள் கீழே இறங்கி அவரவருக்கு தேவையானதை வாங்கி குடித்தனர்".
" பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்க, இரண்டு பஸ்ஸும், காலை ஆறு மணிக்கு திருச்செந்தூருக்கு போய் சேர்ந்தது".
பீகார்- கயை மாவட்டம்:
"மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த மைக்கேல், மனைவியின் முகத்திலிருக்கும் யோசனையை கவனிக்க தவறவில்லை".
" இவளுக்கு என்னாச்சி?, உடம்பு எதாவது சரியில்லையா?,கொஞ்ச நாட்களாகவே ஏதோவொரு யோசனையில் இருக்காள்".
" என்ன விஷயமென்று வாயை திறந்து சொன்னால் தானே, மனுஷனுக்கு தெரியுமென்று தனக்குள்ளே பேசிக்கொண்டான்".
" கணவன் தன்னை கவனிப்பது கூட தெரியாமல், தனது யோசனையிலே ஷாலி உழன்டுக் கொண்டிருந்தாள்".
" சாப்பிட்டு முடித்து கையை கழுவியவன், ஏன் ஜானு,உனக்கு எதாவது குறை வைத்திருக்கிறேனா? என்க, அய்யோ திவாரி, ஏன் இப்படி?".
" கர்பிணி பெண்ணோட ஆசைகளை எல்லாம், நிறைவேற்றனுமென்று படே தாதி( பெரியபாட்டி) சொன்னாங்க.இதுவரை நீ எதையுமே என்னிடம் கேட்டதில்லை. இப்போ கேட்கிறேன், உன் மனசுல அப்படி ஆசைகள் இருக்கா?, அதை சொல்லு."உனக்கு என்ன வேண்டும் கேளுடி. நானும் பாக்குறேன், கொஞ்ச நாளாக நீ சரியில்லை".
"எப்போ பார்த்தாலும் ஏதோ ஒரு உலகத்தில் இருக்கிறாய். என்ன விஷயமென்று சொன்னால் தானே எனக்கு தெரியும்".
"ஒரு வேளை இவனால் முடியாதென்று நினைத்து விட்டாயா?".
"ஏன் திவாரி இப்படி பேசுற?, குறையென்று எனக்கு எதுவுமேயில்லை.நீ என்னை எப்படி பார்த்துக்கிறனு இந்த ஊர்ல இருக்கவங்களுக்கு தெரியும்".
"உன்னை குறை சொன்னால், கடவுளுக்கே பொறுக்காது".
" இந்த வெங்காய பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.ஒழுங்கா சொல்லுடினு கடுமையாக கேட்டான்".
"கணவனின் கோப குரலை கேட்ட ஷாலி, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நல்லதில்லைனு,உன் கிட்ட ஒன்னு சொல்லணும் திவாரி.அதைக்கேட்டு நீ கோவப்படக்கூடாது என்க,ஏய் விஷயத்தை முதல்ல சொல்லுடி, மற்றதை பிறகு பார்க்கலாமென்றான்".
" எனக்கு,எனக்குனு இழுக்க, ம்ம் உனக்கென்று மைக்கேலும் கேட்க, எங்க வீட்டு பக்கத்திலிருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு போய், ஒரு முறை அம்மனை சேவிக்கணும்னு தோணுது".
" மனைவி சொன்னதை கேட்டவன்,ப்பூஊஊஊ".
"இவ்வளவு தானா டி".
" அதுக்கென்ன ஜானு, இன்றைக்கே போகலாமென்றவன், கரீமிற்கு கால் பண்ணியவன் அடேய் நானும் உன் பாபியும் கோயில் வரை போய் வருகிறோம், நீ ஒர்க் ஷாப்பை பார்த்துக்கோ என்று சொல்லி ஃபோனை வைத்தான்".
" இங்கே பாருடி, எதா இருந்தாலும் நீ சொன்னால் தான் எனக்கு தெரியும். வாத்திச்சி மண்டைக்குள்ளே விஷயத்தை வச்சிக்கிட்டால், கண்டு பிடிக்கும் அளவிற்கு இந்த மெக்கானிக் படிக்கவில்லைடி".
" இனி எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லணும்".
" ஓகே வா,சரி ஜானு... கொஞ்சநேரம் நான் படுக்குறேன், நீ ரெடியாகிட்டு சொல்லுனு உள்ளே போய் மெத்தையில் படுத்து கண்ணை மூட,அசதியும், கை கால் வலியிலையும், மைக்கேலிற்கு உறக்கம் வந்தது".
" ஷாலியும் குளித்து முடித்தவள் தயாராகி மணியை பார்க்க, மாலை ஐந்து என்று காட்டியது.பின்னர் உள்ளே ரூமிற்குள் வந்தவள், திவாரி, திவாரினு கணவனின் தோளில் தட்டினாள்".
" ம்ம் என்றபடியே எழுந்தவனிடம் மணியாகிட்டு என்க,இதோடினு டவலை எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவன்,வேக வேகமாக குளித்து வெளியே வர, ஷாலியும் அவனுக்கு டிரஸை எடுத்து பெட்டில் வைத்திருக்க, அதை போட்டுக்கொண்டு தயாராகினான்".
" இருவரும் மெயின் ரோட்டிற்கு வந்தவர்கள்,ஜானு அவ்வளவு தூரம் வண்டியில் உன்னால் உட்கார முடியுமா?, கார் இல்லை ஆட்டோவில் போகலாமா என்க, நம்ப வண்டியே போதுமென்றாள்".
"பின்னர் அங்கிருந்த பைக்கில் ஏறி, இருவரும் கோயிலை நோக்கிச் சென்றனர்".
" ஒருமணி நேர பயணமோ மேலும், அரைமணி நேரம் தாமதமானது".
" அய்யோ திவாரி, எதுக்கு தான் இப்படி வண்டியை உருட்டுறாயென்று ஷாலி கேட்க, அடிப்பாவி".உனக்கு சேப்டி இல்லைனு தான் டி".
ம்கும்... அந்த பையனை பாரு, உன்னை முந்திக்கொண்டு சைக்கிளில் போறானென்று சிரித்துவிட்டாள்.
" ஏண்டி சொல்ல மாட்டாய், உன்னை அலுங்காமல், குலுங்காமல் கூப்பிட்டு போக நினைத்தேன்டி".
" ஓஓஓ இதில் மட்டும் தான் அலுங்கல், குலுங்கலோ என்க, ஏய் ச்சீ ச்சீ.கோயிலுக்கும் போகும் போது தப்பா பேசாதடினு சிரித்தான்".
" அடப்பாவி திவாரி என்றாள்.பின்னர் பேசிக்கொண்டே இருவரும் கோயிலுக்கு வந்து சேர இரவு ஏழு மணியானது. இவர்கள் போன நேரம், அம்மனுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது".
" தெரிந்தவர்கள் சிலர் கோயிலுக்குள் வந்த போது, ஷாலியை பார்த்து நலம் விசாரித்தனர்".
"தனது வீட்டிலிருந்து யாராவது வருவார்களாயென்று பார்வையால் ஷாலி அலசிக்கொண்டிருந்தாள்".
" மனைவியின் தேடல் எதுவென்று மைக்கேலுக்கு புரிந்தாலும், அவள் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்பது தான், சற்று யோசைனாயாக இருந்தது".
" சரி அம்மனுக்கு அலங்காரம் முடிந்து பூஜை ஆரம்பிக்க, இன்னும் நேரம் இருக்கின்றது".
" ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன், இங்க தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார், அவரை பார்த்துட்டு வருகிறேன் ஜானு என்க, சரி என்றாள்".
" ஐந்து நிமிடம் நடந்து செல்லும் தூரம் தான் என்றாலும், தயக்கத்தின் காரணமாய் மேலும் சில நிமிடங்களானது".
" கண்ணை மூடியவன் இனி கடவுள் விட்ட வழியென்று நினைத்து விட்டு, ஹாலிங்பெல்லை அழுத்தினான்".
" சிறிது நொடியில் கதவு திறக்க, அங்கிருந்த ஷாலியின் அப்பாவோ மைக்கேலை பார்த்து அதிர்ந்தவர், பின்னர் உள்ளே வாங்க என்றார்".
" ஷாலியின் அம்மாவும் கிச்சனிலிருந்தே வெளியே வந்தவர், மைக்கேலை பார்த்து விட்டு, பார்வையால் யாரையோ தேடினார்".
" என்னை மன்னிச்சிடுங்களென்று இருவரின் காலில் விழுந்தவன், ஷாலியின் நிலையை சொன்னான்".
" அதைக்கேட்ட இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது, எந்திரிப்பானு சொல்லி விட்டு, உள்ளே போய் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர், ஷாலிய நீங்க நல்லா பார்த்துக்குறீங்களென்று கேள்வி பட்டோமென்றனர்".
" சரி வா கோயிலுக்கு போகலாமென்று ஷாலியின் அப்பா சொல்ல, சரிங்க என்றவாறே கிச்சனிற்குள் சென்ற ஷாலியின் அம்மா,வீட்டிலிருந்த பதார்த்தங்கள் சிலவற்றை எடுத்து ஒரு கவரில் போட்டவர், போலாமென்க மூவரும் வீட்டை பூட்டிக்கொண்டு கோயிலுக்குள் வந்தார்கள்".
"மூவரும் கோயிலுக்குள் நுழைய அம்மனுக்கு ஆரத்தி காட்டுவது தெரிந்தது, கண்ணை மூடி சாமியிடம் ஷாலி வேண்டிக்கொண்டிருக்க, இவர்கள் அருகில் வந்தது தெரியவில்லை".
" பொறுமையாக மகளின் தோளில் ஷாலியின் அம்மா கையை வைக்க, அந்த ஸ்பரிசத்தில் பட்டென்று கண்ணை திறந்தவள், அங்கிருந்த தாயையும்,அப்பாவையும் பார்த்தவளின் கண்கள் அதிர்சியில் உறைந்தாலும், கண்ணீரை சிந்த மறக்கவில்லை".
" எட்டு மாதங்களுக்கு பிறகு பார்க்கும் மகளின் கன்னத்தை தடவிக்குடுத்த ஷாலியின் அம்மாவின் கண்களும் கலங்கியது".
" ஷாலி என்று மகளின் தலையை தடவி விட, மம்மா( அம்மா) என்றவாறே அவரின் தோளில் சாய்ந்து அழுதாள்".
" அவளின் அழுகையை பார்த்த மைக்கேலுக்கு, ஏதோ ஓர் மூலையில் வலித்தது".
" அவனின் முகச்சுனக்கத்தை பார்த்தவள், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேனென்றவள், திவாரி வா என்றபடியே அவன் கையை எட்டி பிடித்தவள், எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்களென்று பெற்றவர்களின் காலில் விழுந்தாள்".
" ஏன்டா இப்படியென்றவர் மகளையும், மருமகனையும் தூக்கி விட்ட ஷாலியின் அப்பா, மனைவியிடம் கண்ணை காட்ட, ம்ம் என்றவர், கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டி மகளுக்கு போட்டு விட்டார்".
" பின்னர் மகளிடம் கர்பத்தை பற்றியும், எத்தனை மாசம் ஆகுதென்று கேட்டுக்கொண்டார்".
பொள்ளாச்சி பெரிய வீடு:
"வெற்றி கண்ணுனு வள்ளியம்மை கூப்பிட்டதும், சிறு பிள்ளை போல அவர் மடியின் மேல் வந்து தலைவைத்து படுத்தவன், மன்னிச்சிடு என்றான்".
"வலிக்குதா சாமியென்று வள்ளியம்மை கேட்க, ஆமா... மனசாட்சி இல்லாமல்
நல்லா அடிச்சிட்டு, வலிக்குதா, இல்லை இனிக்குதானு கேள்வியா?".
" சரி... சரி... அத்தை ஏதோ கோவத்தில் தான் சும்மா எரும்பு கடிக்குற போல தட்டுனேன்".
" எதேஏஏஏ... ".
" இதா எரும்பு கடிச்சது?, நல்லா பாருனு வெற்றி தனது கன்னத்தை காட்ட, இரண்டு பக்கமும் லேசாக வள்ளியின் கைவிரல் தடம் இருந்தது".
" ஆள பார்த்தா முருங்கக்காய் போலிருக்க, அடி என்னமோ இடி மாதிரி விழுது என்றவன், ஆனாலும் உன் கோவம் நல்லா இருந்துச்சி வள்ளினு சிரித்தான்".
" அட படுவாயென்று மருமகனின் தோளில் தட்டிய வள்ளி,அடுத்த முறை வேண்டுமானால் கட்டையால அடிக்குறேன்".
" ஆக,வள்ளியம்மை மேடம் ஒரு முடிவோட தான் இருக்கீங்களென்று வெற்றி சொல்ல, ஆமாடா என்றார்".
" பின்னர் , அண்ணா... ஜனனி, கீதாவையும் கூப்பிட்டு போகலாமானு வள்ளியம்மை கேட்க, நம்ப ஊர்ல அந்த வழக்கம் இல்லையே மா".
" ம்ம்.. வேண்டுமென்றால் இப்படி பண்ணலாம், இதைப்போல கோயிலுக்கு போறோம்,விருப்பம் உள்ளவங்க வாங்களென்று சொல்லுவோம்".
" மாரியப்பன் நிச்சயமா கோயிலுக்கு வருவார், ஏனென்றால் அவருக்கு முருகன் மேல பக்தி அதிகம்".
" சத்தியமூர்த்தி சொன்ன போலவே, ஊருக்குள் செய்தி பரவ, கோயிலென்றதும், பாதி பேர் கிளம்பி விட்டனர்".
" அனைவரையும் அழைத்துச்செல்ல, அவர்களுடை டிரான்ஸ்போர்டிலிருந்து இரண்டு பஸ்ஸும் வந்தது".
"நல்ல நேரத்தில் அரோகரா போட்டுக்கொண்டு, பொள்ளாச்சியிலிருந்து திருச்செந்தூரை நோக்கி கிளம்பினர்".
" முன்பக்கம் உள்ள சீட்டில் சத்தியமூர்த்தியும், மாரியப்பன், சோமு மூவரும் உட்கார்ந்து கொண்டு, டிரைவருடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தனர்"
" வெற்றியும், அவனுடைய நண்பன் உட்கார்ந்திருந்த சீட்டிற்கு பின்னாடி நான்கு சீட்டுகள் தள்ளி, கீதாவும், ஜனனியும் உட்கார்ந்திருந்தனர்" .
" இன்னுமா உன் கோபம் போகவில்லையென்று தன் அருகில் உட்கார்ந்திருந்த நண்பனிடம் வெற்றி கேட்க,கோபியோ( நண்பன்) வெற்றி சொல்வது காதில் விழுந்தாலும் கண்டுக்கொள்ளாமல், ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்"
" திங்கட்கிழமை நான் ஹைதராபாத் போகணும்".
" வர இரண்டு வருஷமாகும், அதுவரை நீ தான் இங்கு அப்பாவையும், அத்தையையும் பார்த்துக்கணுமென்று சொல்லி, கோபியின் கையை பிடிக்க, எல்லா வெங்காய வெண்ணையும் எங்களுக்கு தெரியுமென்றவன், வெற்றியிடமிருந்து தனது கையை உருவிக்கொண்டான்".
" எப்பா வேலு( பஸ் டிரைவர்), டீ கடைய பார்த்து நிறுத்துப்பானு சோமு சொல்ல, சரிணா என்றார்.
" அதைப்போலவே ரோட்டோரமாய் இருந்த டீகடையின் அருகில் பஸ்ஸை நிறுத்தினார்,பஸ்ஸில் தூங்கியவர்களை தவிர மற்றவர்கள் கீழே இறங்கி அவரவருக்கு தேவையானதை வாங்கி குடித்தனர்".
" பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்க, இரண்டு பஸ்ஸும், காலை ஆறு மணிக்கு திருச்செந்தூருக்கு போய் சேர்ந்தது".