Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
"நீர் துளியின் சிலிர்ப்பில் கீதா நிமிர, வாங்கிக்கோனு கண்களால் சைகை செய்தான்".
"அன்புவின் கண்ணசைவில் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல், அவனிடமிருந்து தாமரை பூவை வாங்கிக் கொண்டவளின் இதழோரம், லேசாக சிரிப்பு வந்தது".
"முன்னாடியே கரையில் ஏறிய இருவரும், ஈரம் போக வேண்டும் என்பதற்காய், போட்டிருந்த துணிகளை அங்கு மரத்தின் மறைவில் போய் பிழிந்து முடித்து வந்தவர்கள், போகலாமென்று வேணி குரல் கொடுக்க ,வா என்று அவர்கள் பின்னாடியே சென்றான்".
"கீதாவும் கையில் உள்ள தாமரைப்பூவை, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே சென்றாள்".
"அதற்கு பின்னர் வந்த நாட்களில், இருவருக்கும் வார்த்தையில்லா பார்வையில் பேச்சுகள் தொடர்ந்தன".
"இதோடு இருவரும் வந்து பத்து நாட்களுக்கு மேலானது. பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் ஜனனி சிணுங்கி கொண்டே தான் போவாள்".
"மாலை வழக்கம் போல பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவள், அங்கிருந்த தனது பெரியம்மா, பெரியப்பா, தம்பியை பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தாள்".
"பின்னர் பொதுவான நலன் விசாரிப்போடு பேசிக்கொண்டிருந்தனர்".
"மாரியப்பனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர், வாங்க சகலை, வாம்மா மலரு என்றார்".
"பேசிக்கொண்டே இரவு உணவை வேணி சமைத்து முடிக்க, சகலை அன்புக்கு, வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு.அங்க இங்க புரட்டி ஒன்னு( ஒரு லட்சம்) கையில இருக்கு. நல்ல நம்பிக்கையான மனுஷன் தான்".
"நம்பி அனுப்புங்கணு சொல்லுறார். அதானென்று பேச்சை இழுக்க, அம்மா என்கவும்,கையில் ஒரு சுருக்கு பையோடு வெளியே வந்தவரிடம், அங்க குடுமா என்றார்".
எய்யா கந்தா, இதுல உன் மச்சினிச்சியோடது, உன் மவளுக்கு சேர்த்ததுணு, எல்லாம் பாக்க போனால் அஞ்சு பவுனு வரும்யா.இதை வச்சி அன்புவை அனுப்புய்யா. ஊட்டுல இருக்குறது தானே.
"அம்மா.... இது பேருதவினு கந்தன் சொல்ல, எய்யா என்னா பேச்சி இது. இதை முதல்ல புடிய்யா என்றவர், கந்தனின் கையை இழுத்து அதில் சுருக்கு பையை வைத்தார்".
"அப்பொழுது, அங்கு வந்த கண்ணம்மா பாட்டி, மலரு இந்தா என்றவர், சுருக்கு பையிலிருந்து பணச்சுருளை எடுத்து கொடுத்தார்".
"இது எம் பேத்திங்களுக்காக சேர்த்து வச்சது மலரு. இந்த ஆத்தாவால முடிஞ்சது".
"அம்மா என்று மலர் கண்கலங்க, ஏம்புள்ள பெத்த ஆத்தா உசுரோட இல்லைணா என்ன, சின்னாத்தா இருக்கேன்,கலங்காத".
"போய் ஆக வேண்டியதை பாருங்க என்றவர், எய்யா அன்புனு கூப்பிட, இவ்வளவு நேரம் நடப்பதையெல்லாம் வாசல் படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், கண்ணம்மா பாட்டியிடம் வந்தான்".
"அப்பாடி, பார்த்து சூதானமா இருய்யா. வயித்துக்கு சாப்புடு, பொறுப்பு உள்ள உன் குணத்துக்கு, நல்லதே நடக்கும் சாமி".
"சரி நேரம் ஆகிட்டு சாப்பிட்டு படுங்க. காலையில சின்னது பள்ளிகூடம் போகணுமேனு கந்தன் சொல்ல, பின்னர் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து, ஆளுக்கொரு இடத்தில் படுத்து விட்டனர்".
"வழக்கம் போல் அதிகாலையிலே எழுந்த மலர், வீட்டு வேலையை முடித்து அடுப்பை பற்ற வைத்து சமையல் வேலையை ஆரம்பித்தார்".
"கந்தனும் எழுந்து வந்து மனைவியை பார்த்தவர், மலரு வாளிய கொண்டு வா, டீ வாங்கிட்டு வரேன்".
"பிள்ளைகளை தவிர மற்ற மூவரும் எழுந்து போய் முகத்தை கழுவிக்கொண்டு திண்ணையில் உட்கார, கந்தனும் டீ வாளியோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்".
"டீயை குடித்து விட்டு அவரவர் வேலையை பார்க்கலானர்.ஜனனி பள்ளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்க, அவளுக்கு டிபன் பாக்ஸில் வேணி சாப்பாட்டை வைத்துக் கொண்டிருந்தாள்".
"காலை உணவை அனைவருக்கும் பரிமாற,வேக வேகமாக சாப்பிட்டு முடித்த ஜனனி, எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்".
"சகலை நான் போய் மற்ற வேலைய முடிச்சிட்டு வரேன். இன்னும் ரெண்டு நாள் பள்ளிகூடம் லீவ் தான்".
"வேலை முடிந்ததும் வந்துடுறேன் என்க, சரி சகலை என்றவாறே பெரிய வீட்டை நோக்கி சென்றார்".
"இரண்டு நாட்கள் சென்று வேணியும், அன்புவும் மலரோடு ஊருக்கு கிளம்பினர்".
"நாட்களும் வேகமாக ஓடியது".
"அன்புக்கு மெடிக்கல் டெஸ்ட் முடிந்து, விசா, டிக்கெட் எல்லாம் வந்து விட்டது".
"இன்னும் இரண்டு நாட்களில் பிளைட் ஏற வேண்டும் . அதற்கு முன்பு ஊருக்கு போய் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வரலாமென்று பொள்ளாச்சிக்கு வந்தனர்".
"பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, நல்லபடியா போய்டு வாப்பா என்றனர்".
"சரி என்று தலையசைத்தவன், சோமு மாமா வீட்டிலும் சொல்லிட்டு வரேன் என்க, போய்ட்டு வாப்பா என்றனர்".
"ம்ம் என்றபடியே கீதா வீட்டை நோக்கி வந்தன், அத்தை என்று கூப்பிட்டுக்கொண்டே தோட்டத்திற்கு செல்ல, கீதா அப்பொழுது தான் குளித்து முடித்து, கீற்று மறைவில் உள்ள பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்".
"அவனை பார்த்து திடுக்கிட்டவள், பின் சுதாரித்து வாங்களென்று வீட்டிற்குள் செல்ல,உள்ளே வந்தவன், அத்தை இல்லையா? என்றான்".
"பெரிய வீட்டில் தவுடு குடுக்க போயிருக்கென்று கதவு மறைவில் நின்று கொண்டு கீதா சொல்ல,ஓஓஓ.இன்னும் ரெண்டு நாள்ல நான் கிளம்புறேனென்க, அதைக்கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது".
"வெளியே வாடி என்கவும், ம்ம் என்றபடி கதவை தாண்டி வந்தவளின் கையை எட்டி பிடித்து இழுத்தவன், தன்னோடு அணைத்துக்கெண்டு, வர வரைக்கும் காத்திருடி".
"வந்ததும் மூனு முடிச்சை போடுறேனென்று அவள் நெற்றியில் முத்தம் வைக்க, கீதாவின் உடல் சிலிர்ப்பது அன்புக்கு தெரிந்தது".
"மேலும் அவளை சோதிக்காமல் தன்னிடமிருந்து அவளை விலக்கியவன், வரேன்னு சென்று விட்டான்".
இரத்தினபுரி பிளாஷ் பேக்
கோயம்புத்தூர்:
"ஃபாதர் சொன்னதைக்கேட்ட ருத்ரனோ மனதிற்குள் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வீட்டிற்கு வந்தவன், சிவனிடம் விஷயத்தை சொல்ல,தம்பி ஏன் இவ்வளவு அவசரமென்றார்".
"அப்பா, இங்க உள்ள பழக்க வழக்கம் எனக்கு தெரியலை. ஒரு மனிதாபிமானத்தில் தான் அந்த பொண்ணை காப்பாற்ற அப்படி செய்தேன்".
"அதை காரணம் காட்டி, போற வர பொறுக்கி பசங்க,தப்பு தப்பா பேசியதால் தான் அவள் சூசைட் பண்ண முயற்சி பண்ணிருக்காளென்றான்".
"லட்சுமியும் சிவனும் என்ன கண்ணு சொல்லுறனு பதற,அப்படித்தான் லெட்டர் எழுதி வைத்திருப்பதாக ஃபாதர் சொல்லுகிறார்".
"ரொம்ப சின்ன பொண்ணா இருக்கேப்பானு சிவன் சொல்ல, நான் ஒன்னும் இப்பவே அவள் கூட வாழ போறது இல்லைங்கப்பா.படிச்சு முடிக்கட்டும் அதுக்கப்புறம் வந்து கூப்பிட்டு போறேன். இப்போ எந்த ஆதாரமும் இல்லாமல், அவளை என்னால் இலங்கைக்கு நிரந்தரமாக கூப்பிட்டு போக முடியாது".
"இனி இதைப்போல் முடிவு அவள் எடுக்க கூடாதுங்கப்பா. அது மட்டும் தான் என் எண்ணம்.இப்போதைக்கு சர்ச்சில் தான் கல்யாணம் பண்றது.நாளைக்கு ஈவ்னிங் நான் இலங்கை போகணும்".
"அது உங்களுக்கு தெரியும் தானே?.
"பிசினஸ் அங்க இருக்கு.அவளுக்கும் கொஞ்சம் பக்குவம் வரட்டும்.அதுக்கு பிறகு நான் அவளை கூட்டிட்டு போறேன் பா என்க,அதுவும் சரியென்று பட்டது".
"நண்பர்களும் அவன் முடிவிற்கு சரி என்று தான் சொல்ல, ஆனால் ஆதுக்கு மட்டும் இது தெரியவில்லை".
"இருவரில் ஒருவர் உடனே வாங்கடா என்று ரஞ்சன் அவசரமாக அழைக்க,கல்யாணம் முடிந்த அன்றே கிடைத்த ஃப்ளைட்டில் ஆது சென்று விட்டான்".
"வீட்டில் யாருக்கும் தெரியாமல் இது தேவையா? என்று மீண்டும் நண்பர்கள் கேட்க, எல்லாத்தையும் நீங்க பாத்துட்டு தான இருக்கிறீங்கள்டா?".
" நண்பனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவர்கள், ஓகே என்று சொல்லி விட்டனர்".
"ஃபாதரிடம் சென்று பேச, இந்த வயதில் இது தவறு தான் ஆனால்,அந்த பையன் மேல நம்பிக்கையிருக்கு.அதனால் இதற்கு நான் சம்மதிக்குறேனென்று சொல்லிவிட்டார்".
"காலையில் அந்த ஆசிரம சர்ச்சிலே கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.தன் கழுத்தில் உள்ள செயினை கழட்டிய ருத்ரன் அவளுக்கு போட்டு விட்டான்".
"அவளும், கொடுக்கப்பட்ட ரிங்கை எடுத்து ருத்ரனுக்கு போடும் போது,ஆர்கலியின் உடம்பிற்குள் ஒரு வித நடுக்கம் வந்தது".
"பின்னர் நண்பர்களும், சிவன் வீட்டில் இருந்த சொந்தக்காரர்களும், அங்கிருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தனர்".
"ஆர்கலி கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேனென்றவன், அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்றவன், இங்க பாருமா, நான் இன்று இலங்கைக்கு செல்ல வேண்டும்".
"இப்போதைக்கு உனக்கு வயசு இல்லை.நம்மளோட திருமணத்தை சட்டப்படி ரிஜிஸ்டர் பண்ணுவதற்காக, இன்னும் இரண்டு வருடத்தில் வருகிறேன்".
"நீ நல்லா படிமா.எது வேண்டுமானாலும் எனக்கு கால் பண்ணென்று சொல்லி விட்டு வெளியே வந்தவன், ஃபாதரிடமும் சொல்லிக் கொண்டு அன்று மாலையே அவரவர் நாட்டிற்கு சென்றனர்".
"மேலும் இரண்டு வருடங்கள் கடந்து சென்றது.அவ்வப்போது ஆர்கலியின் நினைவு வரும்போதெல்லாம், அந்த மோதிரத்தை நெஞ்சில் அணைத்துக்கொள்வான்".
"தன்னவள் இப்பொழுது எப்படி இருப்பாள்? என்பதை நினைக்கும் நேரமெல்லாம், மனமும் ஒருவித எதிர்பார்போடு இருந்தது".
"பிசினஸ் விஷயமாக லண்டன் போகும் நேரம் வந்தது.ரஞ்சனும், ஆதுவும் இன்னொரு இடத்தில் பிராஞ்ச் ஓப்பன் பண்ண வேண்டிய வேலையில் பிஸியாக இருப்பதால், ருத்ரன் போக வேண்டியதாக இருந்தது".
"சரி என்று ருத்ரனே அங்கு கிளம்பியவன்,லண்டனிற்கு வந்து வேலை சீக்கிரம் முடிய, உடனே இந்தியாவிற்கு கிளம்பி விட்டான்".
"கோவைக்கு வந்து இறங்கியவனை, ராம் வந்து அணைத்துக்கொண்டான். பின்னர் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
பொதுவான நலம் விசாரிப்புகளுக்கு பின்னர், ஃபாதரை சென்று பார்த்தனர்.
"இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்தவனை கண்ட ஃபாதருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.ஆர்கலி தற்பொழுது இரண்டாம் வருடம் இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறாள்".
"மதியத்திற்கு மேலே தான் கல்லூரி முடிந்து வருவாளென்று ஃபாதர் சொல்ல, பின்னர் அவரிடம் வந்த விஷயத்தையும் சொன்னான்".
"மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு,ராம் அங்கிருந்து கிளம்பி விட்டான்".
"வழக்கம் போல் கல்லூரி முடித்து வந்தவளுக்கு, ஏதோ படபடப்பாக இருப்பது போலிருந்தது".
"என்னாச்சு நமக்கென்று யோசனையோடு உள்ளே வந்தவள், வழக்கம் போல வேலைகளை செய்து கொண்டிருந்தாள்".
"அப்பொழுது ஃபாதர் கூப்பிடுவதாத ஒரு சின்ன பெண் வந்து சொல்ல, சரிடா என்றவள், சர்ச்சிற்குளா போக, அங்கிருப்பவனை பார்த்து அதிர்ந்து போனாள்".
"ருத்ரனுக்கும் அதே அதிர்வு தான். பொம்மை போல் சிறு பெண்ணாக, இரட்டை ஜடையில் பார்த்த முகம் தான் அவன் நெஞ்சில் நன்கு பதிவானது".
"திருமணத்தில் அவள் வெள்ளை கவுன் போட்டிருந்ததால், பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை".
"அன்று ராம் நலுங்கிற்கு புடவை கட்டி வந்த உருவமோ, சற்று அவள் வயதை கூட்டி காட்டியது என்றாலும், முதல் முறை ஜாக்கிங் சென்ற போது பார்த்தவளின் தோற்றமே மனதில் பசுமரத்தில் பதிந்த ஆணியை போல பதிந்து போனது".
ஆர்கலி எங்கே...?
"நீர் துளியின் சிலிர்ப்பில் கீதா நிமிர, வாங்கிக்கோனு கண்களால் சைகை செய்தான்".
"அன்புவின் கண்ணசைவில் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல், அவனிடமிருந்து தாமரை பூவை வாங்கிக் கொண்டவளின் இதழோரம், லேசாக சிரிப்பு வந்தது".
"முன்னாடியே கரையில் ஏறிய இருவரும், ஈரம் போக வேண்டும் என்பதற்காய், போட்டிருந்த துணிகளை அங்கு மரத்தின் மறைவில் போய் பிழிந்து முடித்து வந்தவர்கள், போகலாமென்று வேணி குரல் கொடுக்க ,வா என்று அவர்கள் பின்னாடியே சென்றான்".
"கீதாவும் கையில் உள்ள தாமரைப்பூவை, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே சென்றாள்".
"அதற்கு பின்னர் வந்த நாட்களில், இருவருக்கும் வார்த்தையில்லா பார்வையில் பேச்சுகள் தொடர்ந்தன".
"இதோடு இருவரும் வந்து பத்து நாட்களுக்கு மேலானது. பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் ஜனனி சிணுங்கி கொண்டே தான் போவாள்".
"மாலை வழக்கம் போல பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவள், அங்கிருந்த தனது பெரியம்மா, பெரியப்பா, தம்பியை பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தாள்".
"பின்னர் பொதுவான நலன் விசாரிப்போடு பேசிக்கொண்டிருந்தனர்".
"மாரியப்பனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர், வாங்க சகலை, வாம்மா மலரு என்றார்".
"பேசிக்கொண்டே இரவு உணவை வேணி சமைத்து முடிக்க, சகலை அன்புக்கு, வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு.அங்க இங்க புரட்டி ஒன்னு( ஒரு லட்சம்) கையில இருக்கு. நல்ல நம்பிக்கையான மனுஷன் தான்".
"நம்பி அனுப்புங்கணு சொல்லுறார். அதானென்று பேச்சை இழுக்க, அம்மா என்கவும்,கையில் ஒரு சுருக்கு பையோடு வெளியே வந்தவரிடம், அங்க குடுமா என்றார்".
எய்யா கந்தா, இதுல உன் மச்சினிச்சியோடது, உன் மவளுக்கு சேர்த்ததுணு, எல்லாம் பாக்க போனால் அஞ்சு பவுனு வரும்யா.இதை வச்சி அன்புவை அனுப்புய்யா. ஊட்டுல இருக்குறது தானே.
"அம்மா.... இது பேருதவினு கந்தன் சொல்ல, எய்யா என்னா பேச்சி இது. இதை முதல்ல புடிய்யா என்றவர், கந்தனின் கையை இழுத்து அதில் சுருக்கு பையை வைத்தார்".
"அப்பொழுது, அங்கு வந்த கண்ணம்மா பாட்டி, மலரு இந்தா என்றவர், சுருக்கு பையிலிருந்து பணச்சுருளை எடுத்து கொடுத்தார்".
"இது எம் பேத்திங்களுக்காக சேர்த்து வச்சது மலரு. இந்த ஆத்தாவால முடிஞ்சது".
"அம்மா என்று மலர் கண்கலங்க, ஏம்புள்ள பெத்த ஆத்தா உசுரோட இல்லைணா என்ன, சின்னாத்தா இருக்கேன்,கலங்காத".
"போய் ஆக வேண்டியதை பாருங்க என்றவர், எய்யா அன்புனு கூப்பிட, இவ்வளவு நேரம் நடப்பதையெல்லாம் வாசல் படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், கண்ணம்மா பாட்டியிடம் வந்தான்".
"அப்பாடி, பார்த்து சூதானமா இருய்யா. வயித்துக்கு சாப்புடு, பொறுப்பு உள்ள உன் குணத்துக்கு, நல்லதே நடக்கும் சாமி".
"சரி நேரம் ஆகிட்டு சாப்பிட்டு படுங்க. காலையில சின்னது பள்ளிகூடம் போகணுமேனு கந்தன் சொல்ல, பின்னர் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து, ஆளுக்கொரு இடத்தில் படுத்து விட்டனர்".
"வழக்கம் போல் அதிகாலையிலே எழுந்த மலர், வீட்டு வேலையை முடித்து அடுப்பை பற்ற வைத்து சமையல் வேலையை ஆரம்பித்தார்".
"கந்தனும் எழுந்து வந்து மனைவியை பார்த்தவர், மலரு வாளிய கொண்டு வா, டீ வாங்கிட்டு வரேன்".
"பிள்ளைகளை தவிர மற்ற மூவரும் எழுந்து போய் முகத்தை கழுவிக்கொண்டு திண்ணையில் உட்கார, கந்தனும் டீ வாளியோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்".
"டீயை குடித்து விட்டு அவரவர் வேலையை பார்க்கலானர்.ஜனனி பள்ளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்க, அவளுக்கு டிபன் பாக்ஸில் வேணி சாப்பாட்டை வைத்துக் கொண்டிருந்தாள்".
"காலை உணவை அனைவருக்கும் பரிமாற,வேக வேகமாக சாப்பிட்டு முடித்த ஜனனி, எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்".
"சகலை நான் போய் மற்ற வேலைய முடிச்சிட்டு வரேன். இன்னும் ரெண்டு நாள் பள்ளிகூடம் லீவ் தான்".
"வேலை முடிந்ததும் வந்துடுறேன் என்க, சரி சகலை என்றவாறே பெரிய வீட்டை நோக்கி சென்றார்".
"இரண்டு நாட்கள் சென்று வேணியும், அன்புவும் மலரோடு ஊருக்கு கிளம்பினர்".
"நாட்களும் வேகமாக ஓடியது".
"அன்புக்கு மெடிக்கல் டெஸ்ட் முடிந்து, விசா, டிக்கெட் எல்லாம் வந்து விட்டது".
"இன்னும் இரண்டு நாட்களில் பிளைட் ஏற வேண்டும் . அதற்கு முன்பு ஊருக்கு போய் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வரலாமென்று பொள்ளாச்சிக்கு வந்தனர்".
"பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, நல்லபடியா போய்டு வாப்பா என்றனர்".
"சரி என்று தலையசைத்தவன், சோமு மாமா வீட்டிலும் சொல்லிட்டு வரேன் என்க, போய்ட்டு வாப்பா என்றனர்".
"ம்ம் என்றபடியே கீதா வீட்டை நோக்கி வந்தன், அத்தை என்று கூப்பிட்டுக்கொண்டே தோட்டத்திற்கு செல்ல, கீதா அப்பொழுது தான் குளித்து முடித்து, கீற்று மறைவில் உள்ள பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்".
"அவனை பார்த்து திடுக்கிட்டவள், பின் சுதாரித்து வாங்களென்று வீட்டிற்குள் செல்ல,உள்ளே வந்தவன், அத்தை இல்லையா? என்றான்".
"பெரிய வீட்டில் தவுடு குடுக்க போயிருக்கென்று கதவு மறைவில் நின்று கொண்டு கீதா சொல்ல,ஓஓஓ.இன்னும் ரெண்டு நாள்ல நான் கிளம்புறேனென்க, அதைக்கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது".
"வெளியே வாடி என்கவும், ம்ம் என்றபடி கதவை தாண்டி வந்தவளின் கையை எட்டி பிடித்து இழுத்தவன், தன்னோடு அணைத்துக்கெண்டு, வர வரைக்கும் காத்திருடி".
"வந்ததும் மூனு முடிச்சை போடுறேனென்று அவள் நெற்றியில் முத்தம் வைக்க, கீதாவின் உடல் சிலிர்ப்பது அன்புக்கு தெரிந்தது".
"மேலும் அவளை சோதிக்காமல் தன்னிடமிருந்து அவளை விலக்கியவன், வரேன்னு சென்று விட்டான்".
இரத்தினபுரி பிளாஷ் பேக்
கோயம்புத்தூர்:
"ஃபாதர் சொன்னதைக்கேட்ட ருத்ரனோ மனதிற்குள் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வீட்டிற்கு வந்தவன், சிவனிடம் விஷயத்தை சொல்ல,தம்பி ஏன் இவ்வளவு அவசரமென்றார்".
"அப்பா, இங்க உள்ள பழக்க வழக்கம் எனக்கு தெரியலை. ஒரு மனிதாபிமானத்தில் தான் அந்த பொண்ணை காப்பாற்ற அப்படி செய்தேன்".
"அதை காரணம் காட்டி, போற வர பொறுக்கி பசங்க,தப்பு தப்பா பேசியதால் தான் அவள் சூசைட் பண்ண முயற்சி பண்ணிருக்காளென்றான்".
"லட்சுமியும் சிவனும் என்ன கண்ணு சொல்லுறனு பதற,அப்படித்தான் லெட்டர் எழுதி வைத்திருப்பதாக ஃபாதர் சொல்லுகிறார்".
"ரொம்ப சின்ன பொண்ணா இருக்கேப்பானு சிவன் சொல்ல, நான் ஒன்னும் இப்பவே அவள் கூட வாழ போறது இல்லைங்கப்பா.படிச்சு முடிக்கட்டும் அதுக்கப்புறம் வந்து கூப்பிட்டு போறேன். இப்போ எந்த ஆதாரமும் இல்லாமல், அவளை என்னால் இலங்கைக்கு நிரந்தரமாக கூப்பிட்டு போக முடியாது".
"இனி இதைப்போல் முடிவு அவள் எடுக்க கூடாதுங்கப்பா. அது மட்டும் தான் என் எண்ணம்.இப்போதைக்கு சர்ச்சில் தான் கல்யாணம் பண்றது.நாளைக்கு ஈவ்னிங் நான் இலங்கை போகணும்".
"அது உங்களுக்கு தெரியும் தானே?.
"பிசினஸ் அங்க இருக்கு.அவளுக்கும் கொஞ்சம் பக்குவம் வரட்டும்.அதுக்கு பிறகு நான் அவளை கூட்டிட்டு போறேன் பா என்க,அதுவும் சரியென்று பட்டது".
"நண்பர்களும் அவன் முடிவிற்கு சரி என்று தான் சொல்ல, ஆனால் ஆதுக்கு மட்டும் இது தெரியவில்லை".
"இருவரில் ஒருவர் உடனே வாங்கடா என்று ரஞ்சன் அவசரமாக அழைக்க,கல்யாணம் முடிந்த அன்றே கிடைத்த ஃப்ளைட்டில் ஆது சென்று விட்டான்".
"வீட்டில் யாருக்கும் தெரியாமல் இது தேவையா? என்று மீண்டும் நண்பர்கள் கேட்க, எல்லாத்தையும் நீங்க பாத்துட்டு தான இருக்கிறீங்கள்டா?".
" நண்பனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவர்கள், ஓகே என்று சொல்லி விட்டனர்".
"ஃபாதரிடம் சென்று பேச, இந்த வயதில் இது தவறு தான் ஆனால்,அந்த பையன் மேல நம்பிக்கையிருக்கு.அதனால் இதற்கு நான் சம்மதிக்குறேனென்று சொல்லிவிட்டார்".
"காலையில் அந்த ஆசிரம சர்ச்சிலே கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.தன் கழுத்தில் உள்ள செயினை கழட்டிய ருத்ரன் அவளுக்கு போட்டு விட்டான்".
"அவளும், கொடுக்கப்பட்ட ரிங்கை எடுத்து ருத்ரனுக்கு போடும் போது,ஆர்கலியின் உடம்பிற்குள் ஒரு வித நடுக்கம் வந்தது".
"பின்னர் நண்பர்களும், சிவன் வீட்டில் இருந்த சொந்தக்காரர்களும், அங்கிருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தனர்".
"ஆர்கலி கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேனென்றவன், அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்றவன், இங்க பாருமா, நான் இன்று இலங்கைக்கு செல்ல வேண்டும்".
"இப்போதைக்கு உனக்கு வயசு இல்லை.நம்மளோட திருமணத்தை சட்டப்படி ரிஜிஸ்டர் பண்ணுவதற்காக, இன்னும் இரண்டு வருடத்தில் வருகிறேன்".
"நீ நல்லா படிமா.எது வேண்டுமானாலும் எனக்கு கால் பண்ணென்று சொல்லி விட்டு வெளியே வந்தவன், ஃபாதரிடமும் சொல்லிக் கொண்டு அன்று மாலையே அவரவர் நாட்டிற்கு சென்றனர்".
"மேலும் இரண்டு வருடங்கள் கடந்து சென்றது.அவ்வப்போது ஆர்கலியின் நினைவு வரும்போதெல்லாம், அந்த மோதிரத்தை நெஞ்சில் அணைத்துக்கொள்வான்".
"தன்னவள் இப்பொழுது எப்படி இருப்பாள்? என்பதை நினைக்கும் நேரமெல்லாம், மனமும் ஒருவித எதிர்பார்போடு இருந்தது".
"பிசினஸ் விஷயமாக லண்டன் போகும் நேரம் வந்தது.ரஞ்சனும், ஆதுவும் இன்னொரு இடத்தில் பிராஞ்ச் ஓப்பன் பண்ண வேண்டிய வேலையில் பிஸியாக இருப்பதால், ருத்ரன் போக வேண்டியதாக இருந்தது".
"சரி என்று ருத்ரனே அங்கு கிளம்பியவன்,லண்டனிற்கு வந்து வேலை சீக்கிரம் முடிய, உடனே இந்தியாவிற்கு கிளம்பி விட்டான்".
"கோவைக்கு வந்து இறங்கியவனை, ராம் வந்து அணைத்துக்கொண்டான். பின்னர் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".
பொதுவான நலம் விசாரிப்புகளுக்கு பின்னர், ஃபாதரை சென்று பார்த்தனர்.
"இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்தவனை கண்ட ஃபாதருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.ஆர்கலி தற்பொழுது இரண்டாம் வருடம் இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறாள்".
"மதியத்திற்கு மேலே தான் கல்லூரி முடிந்து வருவாளென்று ஃபாதர் சொல்ல, பின்னர் அவரிடம் வந்த விஷயத்தையும் சொன்னான்".
"மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு,ராம் அங்கிருந்து கிளம்பி விட்டான்".
"வழக்கம் போல் கல்லூரி முடித்து வந்தவளுக்கு, ஏதோ படபடப்பாக இருப்பது போலிருந்தது".
"என்னாச்சு நமக்கென்று யோசனையோடு உள்ளே வந்தவள், வழக்கம் போல வேலைகளை செய்து கொண்டிருந்தாள்".
"அப்பொழுது ஃபாதர் கூப்பிடுவதாத ஒரு சின்ன பெண் வந்து சொல்ல, சரிடா என்றவள், சர்ச்சிற்குளா போக, அங்கிருப்பவனை பார்த்து அதிர்ந்து போனாள்".
"ருத்ரனுக்கும் அதே அதிர்வு தான். பொம்மை போல் சிறு பெண்ணாக, இரட்டை ஜடையில் பார்த்த முகம் தான் அவன் நெஞ்சில் நன்கு பதிவானது".
"திருமணத்தில் அவள் வெள்ளை கவுன் போட்டிருந்ததால், பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை".
"அன்று ராம் நலுங்கிற்கு புடவை கட்டி வந்த உருவமோ, சற்று அவள் வயதை கூட்டி காட்டியது என்றாலும், முதல் முறை ஜாக்கிங் சென்ற போது பார்த்தவளின் தோற்றமே மனதில் பசுமரத்தில் பதிந்த ஆணியை போல பதிந்து போனது".
ஆர்கலி எங்கே...?