Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
இரத்தினபுரி-ஆனந்தன் பேலஸ்:
"காரின் ஹாரன் சத்தம் கேட்டு வாட்ச்மேன் கதவை திறந்து விட,உள்ளே ஓடி போய் போர்டிக்கோவிலில் வந்து நின்றது".
"பின்னர் மூவரும் இறங்கி வீட்டில் உள்ளே செல்ல, அங்கே ஆனந்தன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்".
"கார் சத்தம் கேட்டு வாசல் பக்கம் திரும்பியவர்,ரஞ்சனை பார்த்து புருவத்தை சுருக்கி, ரஞ்சன் தானே என்க,ஆமாம் அங்கிள்".
"எத்தனை வருஷம் ஆச்சுப்பா உன்னை பார்த்து என்றவர் முதல்ல ஃப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்க டா என்றவறோ,வேலையாளிடம் மூவருக்கும் டின்னர் எடுத்து வைக்க சொன்னார்".
"வாடா என்றபடி மாடிக்கு சென்ற சிறிது நிமிடத்தில் மூவரும் கீழே வர, வேலையாள் அவர்களுக்கு உணவை பரிமாறினர்".
"சாப்பிடும் போது ரஞ்சனுக்கு கண்கள் கலங்கியது. அவனை நண்பர்கள் இருவரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்".
"என்னமோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்கு புரிந்தது".
"பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து, ஆனந்தனுடன் சொல்லிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர்".
"ரஞ்சா, வீட்ல எல்லாரும் எப்படி இருக்கிறார்களென நண்பர்கள் இருவரும் கேட்க,அவனோ எதுவும் சொல்லாமல் சத்தமிட்டு அழுதான்".
"என்னடா ஆச்சுனு ருத்ரன் கேட்க, அம்மா உயிரோட இல்லடா என்றான்".
"என்ன என்று இருவரும் அதிர்ந்து கேட்க, எதைடா சொல்ல என்றவன், தனது வாழ்வில் நடந்ததை நண்பர்களுடன் சொல்ல தொடங்கினான்".
"கடைசியா எக்ஸாம் எழுதிட்டு,உங்க கிட்ட சொல்லிட்டு நான் வீட்டிக்கு போனேன் டா, அப்போ வாசல்ல ஒரே கூட்டமா இருந்துச்சி".
"என்ன நம்ப வீட்டில் இவ்வளவு கூட்டம் இருக்கென்று ஓடிப்போய் பார்க்கும் போது,அம்மா...அம்மானு தடுமாறியவன்,மாலை போட்டு படுத்திருந்தாங்கள்டா".
"அம்மானு நான் கத்தி கதறி அழுதேன்டா. கொஞ்ச நேரத்தில் பாடியை எடுத்துட்டு போய்ட்டாங்கள்".
"அப்பொழுது தான்,ராகினி அங்க இல்லைனு எனக்கு தெரிஞ்சதுடா".
"ராகினி ராகினினு நான் அழுதுக்கொண்டே வீடு முழுவதும் தேட, வேலையாள் தான் சொன்னார் டா, பாப்பா ஹாஸ்பிட்டலில் இருக்குதுனு".
"என்ன சொல்றீங்கனு அழ, அப்போ தான் டா அவர் நடந்ததை சொன்னார்".
"ரஞ்சனின் அப்பாவிற்கு டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம்.அதனால் அடிக்கடி வெளியூர் போய்விடுவார் குடும்பத்தையும், பிள்ளைகளையும், ரஞ்சனோட அம்மா தான் பார்த்துக்கொள்வது".
"நேற்று காலையில், ராகினிக்கு அம்மா சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்கும் போது, அப்பாவும் அவர் கூட ஒரு பொம்பளையும் வந்துருக்காங்க".
"தனது புருஷன் கூட வந்திருப்பதால், யாரோ தெரிந்சவங்கனு நினைத்து, வாங்கனு சொல்லியிருக்காங்க.வந்த பொம்பளை ஷோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ம்ம் சீக்கிரம்னு சொன்னாளாம்".
"என்ன விஷயம்னு புரியாமல் கணவனை பார்க்க,அவர் எதுவும் சொல்லமால் கீழே குனிந்து கொண்டு, இந்த வீட்டை விட்டு போய்டுனு சொல்லிருக்கிறார்".
"என்ன விளையாட்டுங்கனு அந்த ஆள் சட்டை பிடித்து அம்மா கேட்க, ஏய் என் புருஷன் கிட்ட என்னடி உனக்கு பேச்சினு, அந்த பொம்பளை அம்மாவை பிடித்து இழுத்து தள்ள,அருகாலில் போய் விழுந்தவங்க திரும்ப எந்திரிக்கலையாம்".
"ராகினி அம்மானு கத்திட்டு மயங்கினவள் தான் எழலையாம். உடனே அந்த ஆள் வேலைக்காரவங்களை மிரட்டி, படிக்கட்டில் தடுக்கி விழுந்து இறந்துட்டதா சொல்ல சொல்லிட்டான்".
"நான் போய் ஹாஸ்பிட்டலில் பார்க்கும் போது, ராகினி அதிர்ச்சியில் மயங்குனவள் தான், இன்று வரை கண் விழிக்கலைடா.அம்மா காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால் வீட்டிலையும் அவங்களை சேர்த்து கொள்ளவில்லையாம்".
"அதன் பிறகு, கரஸ்ல டிகிரி படிச்சிக்கிட்டே,கிடைத்த வேலைக்கு போய்ட்டு, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில் தான் அவளுக்கு வைத்தியம் பாத்துட்டு இருக்கேன்டா".
"கையில் காசு இல்லாமல்,நேற்றிலிருந்து வெறும் தண்ணிய தான் குடிச்சிட்டு இருந்தேனா, அதான் மயங்கிட்டேன்டானு கதறி அழுதான்".
"ரஞ்சனின் கதையை கேட்ட நண்பர்களும் கண் கலங்கினர்".
"ஏண்டா முட்டாள், ஒரு முறை வந்து எங்களை பார்த்திருக்கலாமே என்க, வந்தேன் டா, அன்று தான் நீங்க கனடா போனதாக, வீட்டில் இருந்த வாட்ச்மேன் சொன்னாரு.நீங்க இல்லாமல் நான் போய் எப்படிடா ஹெல்ப் கேட்க?".
அறிவு கெட்டவனே, நாம என்ன அப்படியாடா பழகினோம்?.
"சரி போனது போய் தொலையட்டும்டா, காலையில் போய் ராகினிய நல்ல ஹாஸ்பிட்டலில் சேர்க்கலாம்,ரெண்டு பேரும் சேர்ந்து தான் சிம்ஹானந்த் ஷோரும் வச்சிருக்கோம்".
"வாடா நீயும் ஒரு பார்ட்னராக சேரு, உன் ஐடியாவை முதலீடா போடுடானு நண்பர்கள் சொல்ல, வேண்டாம்டா".
"முதலாளி என்ற ஆசையெல்லாம் அம்மா போன உடனே போய்ட்டு.வேலை குடுங்கடா செய்யுறேன், சரி நீ நம்ப ஷோரூமிலே டிசைனிங் செக்க்ஷன்ல நாளைக்கு வந்து ஜாயின்ட் பண்ணுடா".
"ஏற்கெனவே அங்க ரெண்டு பேர் இருக்காங்க என்றான் ருத்ரன்".
"சரிடா என்றவர்கள் பள்ளிக்கால கதையை பேசிக்கொண்டு, மொட்டை மாடியிலே தூங்கி விட்டனர்".
பொள்ளாச்சி:
"ஜனனிக்கு அன்பு உடன் நிச்சயதார்த்தமென்று எப்போ கீதாவுக்கு தெரிந்ததோ,அப்பொழுதிலிருந்து தோழியிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்".
"இதைப் பற்றி வெற்றிக்கு சொன்னாயென்றால், நான் உயிரோடு இருக்க மாட்டேனென்று, ஒரே வார்த்தையில் தோழியின் வாயை அடைத்த ஜனனி, வழக்கம் போல வேலையை பார்க்க தொடங்கினாள்".
"நிச்சயதார்த்த நாளும் வந்தது. காலையிலே ரேடியோ செட்டுக்காரர் வந்து,இளையராஜா பாட்டை ஒலிக்க விட்டார்.சமையல் வேலைக்கும் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.அவர்கள் போட்ட லிஸ்டில் உள்ள பொருட்களையெல்லாம் சோமுவும், இன்னொருத்தரும் தோட்டத்தில் கொண்டு போய் கொடுத்தனர்".
"சமையல் மாஸ்டரோ, உதவி செய்ய வந்த இரண்டு பெண்களிடம், சாம்பாருக்கு,பொரியலுக்கு தேவையான காய்கறிகளை கொடுத்து அரிய சொன்னார்".
"நல்ல நேரம் பார்த்து விட்டு அடுப்பில் சூடத்தை ஏற்றி சாமியை வணங்கியவரோ வேலையை தொடங்கினார்.
"நேரமும் கடந்து கொண்டிருந்தது".
"சொந்த பந்தங்களும்,வந்து கொண்டிருந்தனர்.மாப்பிள்ளை வீட்டாரும் அங்கு வந்து சேர்ந்தனர்".
"வந்தவர்களை, சோமு தம்பதியும், மாரியப்பன், ராக்கம்மா பாட்டி, கண்ணம்மா பாட்டி ஆகியோர் வரவேற்தனர்".
"அன்புவை பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேலானதால், சிலர் அவனோடு பேசி நலம் விசாரித்தனர்".
"வந்தவர்களுக்கு ஒரு ஆள், குடிக்க மோர் கொடுத்துக்கொண்டிருந்தார்".
"உள்ளே இருந்த தங்கையை பார்க்க வந்த வேணி, ஜனா என்க,அக்காவின் குரலைக்கேட்டு திரும்பி பார்த்தவள் வாக்கா என்றாள்".
"பின்னர் குழந்தையை வாங்கி கொஞ்சும் தங்கையை பார்த்த வேணிக்கு, தங்கள் வீட்டிற்கே தங்கை வரப்போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தது".
"முதல் நாள் மேட்டுப்பாளையம் சென்ற வெற்றி ஊருக்குள் வர, பாட்டு சத்தம் கேட்டது".
என்ன ஊர்ல பாட்டு சத்தம் கேட்குது?.
"யார் வீட்டில் விசேஷம்னு தெரியலையேனு யோசனையோடு வீட்டிற்கு வந்தவன், புல்லட்டை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றான்".
"அந்த நேரம், வள்ளியும் தயாராகி தனது ரூமில் இருந்து வெளியே வந்த வள்ளியோ மருமகனை பார்த்து விட்டு, வா கண்ணா, அந்த பையன் நல்ல படியாக பிளைட் ஏறிட்டானா".
"ம்ம் என்றவன்,ஊருக்குள் பாட்டு சத்தம் கேட்குதே, யார் வீட்டில் என்க, ஜனனிக்கு நிச்சயதார்த்தம், அப்பா போயாச்சி, நானும் போய்ட்டு வரேனென்று அங்கிருந்து வெளியே சென்றார்".
"என்னாஆஆஆஆ அவளுக்கு நிச்சயதார்த்தமா?".
"அது எப்படி என்று பல்லை கடித்தவன், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வர, தூரத்தில் வள்ளி போவது தெரிந்தது".
"வண்டியை எடுத்தவன், நேராக ஜனனி வீட்டை நோக்கிச்சென்றான்".
"அங்கே ஜனனிக்கு வாங்கிய பட்டுப்புடவை, மேக்கப் பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தை மலரும், அவர் கணவர் கந்தனும் இணைந்து மாரியப்பனிடம் கொடுக்க போக, நிறுத்துங்க என்று சத்தம் கேட்டது".
"பந்தலில் இருந்த எல்லாரும் வாசல் பக்கம் பார்க்க,அங்கே அய்யனார் கணக்காய் வெற்றி நின்று கொண்டிருந்தான்".
"வாங்க தம்பியென்று மாரியப்பன் சொல்ல, யாரைக்கேட்டு அவளுக்கு வேற ஒருத்தரோடு நிச்சயம் பண்ணுறீங்க?".
"என் பொண்ணுக்கு பண்ண, நான் யாரை தம்பி கேட்க வேண்டுமென்று அவர் சொல்ல,உங்க மகளுக்கு கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது என் கூட மட்டும் தான்".
"இதனால் கூட்டத்தில் அங்கங்கே சலசலப்பு உண்டானது".
"சத்தியமூர்த்தியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்".
"தம்பி நீங்க என்ன சொல்லுறீங்கனு மாரியப்பன் கேட்க, ஜனனி என்னோட பொண்டாட்டி என்றவன், ஏய் வெளியே வாடி என்று கத்தினான்".
"அவனின் சத்தம் கேட்டு உள்ளுக்குள் திகில் இருந்தாலும், தைரியமாய் வெளியே வந்தவள், என்ன விஷயமென்றாள்?".
"நான் உன்னை விரும்புறேன்னு தெரிஞ்சும் நீ எப்படிடி வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட சம்மதிக்கலாமென்று அவளை அறைய வர,அவன் கையை தடுத்தவள்,என்னை கல்யாணம் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?".
பத்து பைசா சம்பாரிக்க துப்பு இருக்கா?.
இல்லை சொல்லும் படி எதாவது வேலை?.
"பாட்டன் சொத்துல வாழுற நீயே தெண்டச்சோறு, உனக்கு நான் கேடா?.
என் மாமன் வெளிநாடு போய் உழைத்து முன்னேறினவர், நீங்க?.
"சொல்லுங்க?,படிப்பை தவிர உங்களுக்கு சொந்தம்னு நீங்க சம்பாரித்ததில் என்ன இருக்கென்றாள்".
"அத்தனை பேருக்கு முன்னாடி, ஜனனி கேட்ட கேள்வியால் நிலைகுலைந்து போகவும்,என்ன வெற்றி சார், எங்கே போச்சு உங்க வாய் சவடால் என்றாள்".
"அப்பொழுது போஸ்ட் மேன் வாசலில் வந்து நின்று, வெற்றி தம்பி என்று கூப்பிட்டார்".
"எல்லாரும் அவரை பார்க்க, தம்பி ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குப்பானு பேனாவை நீட்ட, கையெழுத்து போட்டு வாங்கியவன், அவர் கொடுத்த பழுப்பு நிற கவரை திறந்து, உள்ளே இருந்த லட்டரை படித்தவன், நிதானமாக ஜனனியின் எதிரில் போய் நின்று, லெட்டரை அவளிடம் நீட்டினான்".
"அதை வாங்கி படிக்கும் போதே, தனது கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவள் கழுத்தில் போட,எல்லாரும் அங்கு நடப்பதை பார்த்து அதிர்ந்தனர்".
"பின்னர் கீழே இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்தவன்,எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, இந்த நிமிஷத்தில இருந்து இவ என் பொண்டாட்டி".
"அப்பா போஸ்டிங் முடித்து இந்த மண்ணில் நான் கால் வைக்கும் போது, எங்க கல்யாணம் நடக்குற போல ஏற்பாடு பண்ணுங்களென்றான்".
"கந்தனுக்கோ சொல்லொன்னா கோவம் வந்தது".
"இங்க பாருங்க தம்பி, என்னமோ வந்தீங்க,உங்க இஷ்டத்திற்கு எல்லாம் முடிவு பண்ண நாங்களாம் யாரு?.
"யாரைக்கேட்டு இப்படி ஒரு செயல் செய்தப்பானு கோவமாக கேட்க, அவர் கேள்வியில் உள்ள நியாயம் மற்றவர்களுக்கும் சரியென பட்டது".
"நடந்தது நடந்து போயிடுச்சி அடுத்தது ஆக வேண்டியதை பாருங்கப்பா".
"எப்போ கழுத்துல போட்டிருந்த செயினை கழட்டி சின்னதம்பி ஜனனி புள்ளை கழுத்துல போட்டுச்சோ, அப்பவே அதுக்கு உரிமையானதா ஆகியாச்சு என்றார் ஊரில் வயதான ஒருவர்".
" பின்னர் சிறிது நேரம் அந்த இடத்தில் சலசலப்பு அதிகமாக எல்லாரையும் பார்த்த சத்தியமூர்த்தி, எழுந்து நின்று கையெடுத்து கும்பிடவும், அதை பார்த்து பதறினர்".
"காரின் ஹாரன் சத்தம் கேட்டு வாட்ச்மேன் கதவை திறந்து விட,உள்ளே ஓடி போய் போர்டிக்கோவிலில் வந்து நின்றது".
"பின்னர் மூவரும் இறங்கி வீட்டில் உள்ளே செல்ல, அங்கே ஆனந்தன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்".
"கார் சத்தம் கேட்டு வாசல் பக்கம் திரும்பியவர்,ரஞ்சனை பார்த்து புருவத்தை சுருக்கி, ரஞ்சன் தானே என்க,ஆமாம் அங்கிள்".
"எத்தனை வருஷம் ஆச்சுப்பா உன்னை பார்த்து என்றவர் முதல்ல ஃப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்க டா என்றவறோ,வேலையாளிடம் மூவருக்கும் டின்னர் எடுத்து வைக்க சொன்னார்".
"வாடா என்றபடி மாடிக்கு சென்ற சிறிது நிமிடத்தில் மூவரும் கீழே வர, வேலையாள் அவர்களுக்கு உணவை பரிமாறினர்".
"சாப்பிடும் போது ரஞ்சனுக்கு கண்கள் கலங்கியது. அவனை நண்பர்கள் இருவரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்".
"என்னமோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்கு புரிந்தது".
"பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து, ஆனந்தனுடன் சொல்லிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர்".
"ரஞ்சா, வீட்ல எல்லாரும் எப்படி இருக்கிறார்களென நண்பர்கள் இருவரும் கேட்க,அவனோ எதுவும் சொல்லாமல் சத்தமிட்டு அழுதான்".
"என்னடா ஆச்சுனு ருத்ரன் கேட்க, அம்மா உயிரோட இல்லடா என்றான்".
"என்ன என்று இருவரும் அதிர்ந்து கேட்க, எதைடா சொல்ல என்றவன், தனது வாழ்வில் நடந்ததை நண்பர்களுடன் சொல்ல தொடங்கினான்".
"கடைசியா எக்ஸாம் எழுதிட்டு,உங்க கிட்ட சொல்லிட்டு நான் வீட்டிக்கு போனேன் டா, அப்போ வாசல்ல ஒரே கூட்டமா இருந்துச்சி".
"என்ன நம்ப வீட்டில் இவ்வளவு கூட்டம் இருக்கென்று ஓடிப்போய் பார்க்கும் போது,அம்மா...அம்மானு தடுமாறியவன்,மாலை போட்டு படுத்திருந்தாங்கள்டா".
"அம்மானு நான் கத்தி கதறி அழுதேன்டா. கொஞ்ச நேரத்தில் பாடியை எடுத்துட்டு போய்ட்டாங்கள்".
"அப்பொழுது தான்,ராகினி அங்க இல்லைனு எனக்கு தெரிஞ்சதுடா".
"ராகினி ராகினினு நான் அழுதுக்கொண்டே வீடு முழுவதும் தேட, வேலையாள் தான் சொன்னார் டா, பாப்பா ஹாஸ்பிட்டலில் இருக்குதுனு".
"என்ன சொல்றீங்கனு அழ, அப்போ தான் டா அவர் நடந்ததை சொன்னார்".
"ரஞ்சனின் அப்பாவிற்கு டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம்.அதனால் அடிக்கடி வெளியூர் போய்விடுவார் குடும்பத்தையும், பிள்ளைகளையும், ரஞ்சனோட அம்மா தான் பார்த்துக்கொள்வது".
"நேற்று காலையில், ராகினிக்கு அம்மா சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்கும் போது, அப்பாவும் அவர் கூட ஒரு பொம்பளையும் வந்துருக்காங்க".
"தனது புருஷன் கூட வந்திருப்பதால், யாரோ தெரிந்சவங்கனு நினைத்து, வாங்கனு சொல்லியிருக்காங்க.வந்த பொம்பளை ஷோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ம்ம் சீக்கிரம்னு சொன்னாளாம்".
"என்ன விஷயம்னு புரியாமல் கணவனை பார்க்க,அவர் எதுவும் சொல்லமால் கீழே குனிந்து கொண்டு, இந்த வீட்டை விட்டு போய்டுனு சொல்லிருக்கிறார்".
"என்ன விளையாட்டுங்கனு அந்த ஆள் சட்டை பிடித்து அம்மா கேட்க, ஏய் என் புருஷன் கிட்ட என்னடி உனக்கு பேச்சினு, அந்த பொம்பளை அம்மாவை பிடித்து இழுத்து தள்ள,அருகாலில் போய் விழுந்தவங்க திரும்ப எந்திரிக்கலையாம்".
"ராகினி அம்மானு கத்திட்டு மயங்கினவள் தான் எழலையாம். உடனே அந்த ஆள் வேலைக்காரவங்களை மிரட்டி, படிக்கட்டில் தடுக்கி விழுந்து இறந்துட்டதா சொல்ல சொல்லிட்டான்".
"நான் போய் ஹாஸ்பிட்டலில் பார்க்கும் போது, ராகினி அதிர்ச்சியில் மயங்குனவள் தான், இன்று வரை கண் விழிக்கலைடா.அம்மா காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால் வீட்டிலையும் அவங்களை சேர்த்து கொள்ளவில்லையாம்".
"அதன் பிறகு, கரஸ்ல டிகிரி படிச்சிக்கிட்டே,கிடைத்த வேலைக்கு போய்ட்டு, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில் தான் அவளுக்கு வைத்தியம் பாத்துட்டு இருக்கேன்டா".
"கையில் காசு இல்லாமல்,நேற்றிலிருந்து வெறும் தண்ணிய தான் குடிச்சிட்டு இருந்தேனா, அதான் மயங்கிட்டேன்டானு கதறி அழுதான்".
"ரஞ்சனின் கதையை கேட்ட நண்பர்களும் கண் கலங்கினர்".
"ஏண்டா முட்டாள், ஒரு முறை வந்து எங்களை பார்த்திருக்கலாமே என்க, வந்தேன் டா, அன்று தான் நீங்க கனடா போனதாக, வீட்டில் இருந்த வாட்ச்மேன் சொன்னாரு.நீங்க இல்லாமல் நான் போய் எப்படிடா ஹெல்ப் கேட்க?".
அறிவு கெட்டவனே, நாம என்ன அப்படியாடா பழகினோம்?.
"சரி போனது போய் தொலையட்டும்டா, காலையில் போய் ராகினிய நல்ல ஹாஸ்பிட்டலில் சேர்க்கலாம்,ரெண்டு பேரும் சேர்ந்து தான் சிம்ஹானந்த் ஷோரும் வச்சிருக்கோம்".
"வாடா நீயும் ஒரு பார்ட்னராக சேரு, உன் ஐடியாவை முதலீடா போடுடானு நண்பர்கள் சொல்ல, வேண்டாம்டா".
"முதலாளி என்ற ஆசையெல்லாம் அம்மா போன உடனே போய்ட்டு.வேலை குடுங்கடா செய்யுறேன், சரி நீ நம்ப ஷோரூமிலே டிசைனிங் செக்க்ஷன்ல நாளைக்கு வந்து ஜாயின்ட் பண்ணுடா".
"ஏற்கெனவே அங்க ரெண்டு பேர் இருக்காங்க என்றான் ருத்ரன்".
"சரிடா என்றவர்கள் பள்ளிக்கால கதையை பேசிக்கொண்டு, மொட்டை மாடியிலே தூங்கி விட்டனர்".
பொள்ளாச்சி:
"ஜனனிக்கு அன்பு உடன் நிச்சயதார்த்தமென்று எப்போ கீதாவுக்கு தெரிந்ததோ,அப்பொழுதிலிருந்து தோழியிடம் பேசுவதை நிறுத்தி விட்டாள்".
"இதைப் பற்றி வெற்றிக்கு சொன்னாயென்றால், நான் உயிரோடு இருக்க மாட்டேனென்று, ஒரே வார்த்தையில் தோழியின் வாயை அடைத்த ஜனனி, வழக்கம் போல வேலையை பார்க்க தொடங்கினாள்".
"நிச்சயதார்த்த நாளும் வந்தது. காலையிலே ரேடியோ செட்டுக்காரர் வந்து,இளையராஜா பாட்டை ஒலிக்க விட்டார்.சமையல் வேலைக்கும் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.அவர்கள் போட்ட லிஸ்டில் உள்ள பொருட்களையெல்லாம் சோமுவும், இன்னொருத்தரும் தோட்டத்தில் கொண்டு போய் கொடுத்தனர்".
"சமையல் மாஸ்டரோ, உதவி செய்ய வந்த இரண்டு பெண்களிடம், சாம்பாருக்கு,பொரியலுக்கு தேவையான காய்கறிகளை கொடுத்து அரிய சொன்னார்".
"நல்ல நேரம் பார்த்து விட்டு அடுப்பில் சூடத்தை ஏற்றி சாமியை வணங்கியவரோ வேலையை தொடங்கினார்.
"நேரமும் கடந்து கொண்டிருந்தது".
"சொந்த பந்தங்களும்,வந்து கொண்டிருந்தனர்.மாப்பிள்ளை வீட்டாரும் அங்கு வந்து சேர்ந்தனர்".
"வந்தவர்களை, சோமு தம்பதியும், மாரியப்பன், ராக்கம்மா பாட்டி, கண்ணம்மா பாட்டி ஆகியோர் வரவேற்தனர்".
"அன்புவை பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேலானதால், சிலர் அவனோடு பேசி நலம் விசாரித்தனர்".
"வந்தவர்களுக்கு ஒரு ஆள், குடிக்க மோர் கொடுத்துக்கொண்டிருந்தார்".
"உள்ளே இருந்த தங்கையை பார்க்க வந்த வேணி, ஜனா என்க,அக்காவின் குரலைக்கேட்டு திரும்பி பார்த்தவள் வாக்கா என்றாள்".
"பின்னர் குழந்தையை வாங்கி கொஞ்சும் தங்கையை பார்த்த வேணிக்கு, தங்கள் வீட்டிற்கே தங்கை வரப்போவதை நினைத்து சந்தோஷமாக இருந்தது".
"முதல் நாள் மேட்டுப்பாளையம் சென்ற வெற்றி ஊருக்குள் வர, பாட்டு சத்தம் கேட்டது".
என்ன ஊர்ல பாட்டு சத்தம் கேட்குது?.
"யார் வீட்டில் விசேஷம்னு தெரியலையேனு யோசனையோடு வீட்டிற்கு வந்தவன், புல்லட்டை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றான்".
"அந்த நேரம், வள்ளியும் தயாராகி தனது ரூமில் இருந்து வெளியே வந்த வள்ளியோ மருமகனை பார்த்து விட்டு, வா கண்ணா, அந்த பையன் நல்ல படியாக பிளைட் ஏறிட்டானா".
"ம்ம் என்றவன்,ஊருக்குள் பாட்டு சத்தம் கேட்குதே, யார் வீட்டில் என்க, ஜனனிக்கு நிச்சயதார்த்தம், அப்பா போயாச்சி, நானும் போய்ட்டு வரேனென்று அங்கிருந்து வெளியே சென்றார்".
"என்னாஆஆஆஆ அவளுக்கு நிச்சயதார்த்தமா?".
"அது எப்படி என்று பல்லை கடித்தவன், வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வர, தூரத்தில் வள்ளி போவது தெரிந்தது".
"வண்டியை எடுத்தவன், நேராக ஜனனி வீட்டை நோக்கிச்சென்றான்".
"அங்கே ஜனனிக்கு வாங்கிய பட்டுப்புடவை, மேக்கப் பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தை மலரும், அவர் கணவர் கந்தனும் இணைந்து மாரியப்பனிடம் கொடுக்க போக, நிறுத்துங்க என்று சத்தம் கேட்டது".
"பந்தலில் இருந்த எல்லாரும் வாசல் பக்கம் பார்க்க,அங்கே அய்யனார் கணக்காய் வெற்றி நின்று கொண்டிருந்தான்".
"வாங்க தம்பியென்று மாரியப்பன் சொல்ல, யாரைக்கேட்டு அவளுக்கு வேற ஒருத்தரோடு நிச்சயம் பண்ணுறீங்க?".
"என் பொண்ணுக்கு பண்ண, நான் யாரை தம்பி கேட்க வேண்டுமென்று அவர் சொல்ல,உங்க மகளுக்கு கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது என் கூட மட்டும் தான்".
"இதனால் கூட்டத்தில் அங்கங்கே சலசலப்பு உண்டானது".
"சத்தியமூர்த்தியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்".
"தம்பி நீங்க என்ன சொல்லுறீங்கனு மாரியப்பன் கேட்க, ஜனனி என்னோட பொண்டாட்டி என்றவன், ஏய் வெளியே வாடி என்று கத்தினான்".
"அவனின் சத்தம் கேட்டு உள்ளுக்குள் திகில் இருந்தாலும், தைரியமாய் வெளியே வந்தவள், என்ன விஷயமென்றாள்?".
"நான் உன்னை விரும்புறேன்னு தெரிஞ்சும் நீ எப்படிடி வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட சம்மதிக்கலாமென்று அவளை அறைய வர,அவன் கையை தடுத்தவள்,என்னை கல்யாணம் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?".
பத்து பைசா சம்பாரிக்க துப்பு இருக்கா?.
இல்லை சொல்லும் படி எதாவது வேலை?.
"பாட்டன் சொத்துல வாழுற நீயே தெண்டச்சோறு, உனக்கு நான் கேடா?.
என் மாமன் வெளிநாடு போய் உழைத்து முன்னேறினவர், நீங்க?.
"சொல்லுங்க?,படிப்பை தவிர உங்களுக்கு சொந்தம்னு நீங்க சம்பாரித்ததில் என்ன இருக்கென்றாள்".
"அத்தனை பேருக்கு முன்னாடி, ஜனனி கேட்ட கேள்வியால் நிலைகுலைந்து போகவும்,என்ன வெற்றி சார், எங்கே போச்சு உங்க வாய் சவடால் என்றாள்".
"அப்பொழுது போஸ்ட் மேன் வாசலில் வந்து நின்று, வெற்றி தம்பி என்று கூப்பிட்டார்".
"எல்லாரும் அவரை பார்க்க, தம்பி ரிஜிஸ்டர் தபால் வந்திருக்குப்பானு பேனாவை நீட்ட, கையெழுத்து போட்டு வாங்கியவன், அவர் கொடுத்த பழுப்பு நிற கவரை திறந்து, உள்ளே இருந்த லட்டரை படித்தவன், நிதானமாக ஜனனியின் எதிரில் போய் நின்று, லெட்டரை அவளிடம் நீட்டினான்".
"அதை வாங்கி படிக்கும் போதே, தனது கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவள் கழுத்தில் போட,எல்லாரும் அங்கு நடப்பதை பார்த்து அதிர்ந்தனர்".
"பின்னர் கீழே இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்தவன்,எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, இந்த நிமிஷத்தில இருந்து இவ என் பொண்டாட்டி".
"அப்பா போஸ்டிங் முடித்து இந்த மண்ணில் நான் கால் வைக்கும் போது, எங்க கல்யாணம் நடக்குற போல ஏற்பாடு பண்ணுங்களென்றான்".
"கந்தனுக்கோ சொல்லொன்னா கோவம் வந்தது".
"இங்க பாருங்க தம்பி, என்னமோ வந்தீங்க,உங்க இஷ்டத்திற்கு எல்லாம் முடிவு பண்ண நாங்களாம் யாரு?.
"யாரைக்கேட்டு இப்படி ஒரு செயல் செய்தப்பானு கோவமாக கேட்க, அவர் கேள்வியில் உள்ள நியாயம் மற்றவர்களுக்கும் சரியென பட்டது".
"நடந்தது நடந்து போயிடுச்சி அடுத்தது ஆக வேண்டியதை பாருங்கப்பா".
"எப்போ கழுத்துல போட்டிருந்த செயினை கழட்டி சின்னதம்பி ஜனனி புள்ளை கழுத்துல போட்டுச்சோ, அப்பவே அதுக்கு உரிமையானதா ஆகியாச்சு என்றார் ஊரில் வயதான ஒருவர்".
" பின்னர் சிறிது நேரம் அந்த இடத்தில் சலசலப்பு அதிகமாக எல்லாரையும் பார்த்த சத்தியமூர்த்தி, எழுந்து நின்று கையெடுத்து கும்பிடவும், அதை பார்த்து பதறினர்".