Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
இரத்தினபுரி:
"ஆதுவும், ருத்ரனும் பங்ஷனுக்கு இன்வைட் பண்ணியிருக்க,வந்தவர்களை வரவேற்று பக்கத்தில் இருந்த ஹாலில் உட்கார வைத்தனர்".
"ஓப்பன் பண்ண வேண்டிய ஷோரூமின் முன்பக்கம் முழுவதும் அடைத்திருந்ததால்,எதுவும் தெரியவில்லை".
"காலை எட்டரை மணிக்கெல்லாம் மேகலாவும், சுந்தரும் அங்கு வந்து சேர, நண்பர்கள் இருவரும் தலையசைத்து வரவேற்க, அவர்களும் தலையசைத்து உள்ளே வந்தனர்".
"நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது".
"என்னடா இவர்களை இன்னும் காணுமென்று ஆது கேட்கும் போதே, ஆனந்தன் மற்றும் சிம்ஹன் தாத்தா இருவரின் காரும் முன்னும், பின்னும் வந்து நின்றது".
"ம்ம் இதோ வந்தாச்சுடா என்றான் ருத்ரன்".
"மூவரும் காரிலிருந்து இறங்கி வர, அவர்களையும், கையில் கட்டியிருந்த வாட்சையும், நண்பர்கள் இருவரும் மாறி மாறி பார்த்தனர்".
"ஆது நல்ல நேரம் ஆரம்பிக்கப்போகுதென்று மேகலா சொல்ல,அதற்கு ருத்ரனோ இவங்களை காப்பாத்துறீங்களோ என்றான்".
"பின்னர் பாட்டி கையில் கத்தரிக்கோலை கொடுத்து ரிப்பனை கட் பண்ண சொல்ல, கடவுளிடம் மானசீகமாக வேண்டிக்கொண்ட கிரிஜா பாட்டியும் கட் பண்ண,எல்லாரும் கையை தட்டினர்".
"அப்பொழுது கையில் இருந்த ரிமோட்டை ருத்ரன் பிரஸ் பண்ண, பில்டிங்கை மறைத்திருந்த திரை விலகியது".
"எல்லாரும் என்ரன்ஸை பார்த்து திகைத்தனர். அதைவிட ஷோரூமின் பெயரை பார்த்து வீட்டினருக்கும் அதிர்ச்சி தான்".
"அவ்வளவு கலைநயத்தோடு வாசல் கதவு இருந்தது".ஆனந்தனுக்கும், சிம்ஹன் தாத்தாவிற்கும் எதுவும் சொல்ல முடியவில்லை".
"சிம்ஹானந்த்" என்ற பெயர் பித்தளையில் பளபளத்தது.
"உள்ளே வாங்கள் என்றபடியே சென்றவர்கள், அங்கிருந்த மேட்ச் பாக்ஸை எடுத்த நீட்டிய ஆது,அடேய் கிரி நல்லா வேண்டிக்கிட்டு, ஆளுக்கொரு திரியை ஏற்றுங்களென்றான்".
"இடுப்பளவு இருந்த குத்து விளக்கில், வீட்டினர் ஐவரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கிக்கொண்டு விளக்கை ஏற்றினர்".
"வந்திருந்த கெஸ்ட்களெல்லாரும், ஷோரூமையையும், அங்கிருந்த பொருட்களையும் சுற்றி பார்த்தனர்".
"முதல் வியாபாரத்தை, சிம்ஹன் தம்பதியினரே தொடங்கி வைத்தனர்".
"முதல் தளத்தில் ஷோரூமும், இரண்டாம் தளத்தில், ஆபிஸ் ரும் மற்றும் டிசைனிங் செக்க்ஷன் இருந்தது".
"ஷோரூம் திறந்து சில மாதங்கள் வரை, நஷ்டமில்லாமலே வியாபாரம் ஆனது".
சிறு சிறு பொருட்களை கூட மிக நேர்த்தியாக செய்திருப்பதால், வெளியே நற்பெயர் வாங்கியது".
"கிட்ட தட்ட ஷோரும் திறந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க,ஆனந்தனின் நண்பர் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்கான நகைகளை ஆர்டர் பண்ண வந்திருந்தார்".
"வந்தவர்களை நண்பர்கள் இருவரும் வரவேற்து, எப்படி?, என்ன ரேஞ்சில் வேண்டும் என்க,மகளின் திருமணத்திற்கென்றார்".
"சரிங்க சார் என்றவர்கள், தங்களிடம் உள்ள கேட்லாக்கை எடுத்து காட்டி, இதில் உள்ளதை பாருங்கள் என்றனர்".
"நேரம் கடந்து செல்ல, வந்தவருக்கோ எதை செலக்ட் பண்ண சொல்வதென்றே தெரியவில்லை".அத்தனை நகைகளும், ஒவ்வொரு விதத்தில் அழகாய் இருக்க,தம்பி எனக்கு ஒரே குழப்பாமாக இருக்குப்பானு அவரும் நண்பர்களிடம் சரணடைந்தவரோ என் பொண்ணையே வரச்சொல்லுறேனென்று, ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்ல, அரை மணி நேரத்தில் கல்யாண பெண் தன் தோழியோடு அங்கு வர,அவளிடம் டிசைனை காட்ட,அவளுக்கும் அதே சூழல் தான்".
"பின்னர், முன்னும், பின்னும் புரட்டி புரட்டி பார்த்தவள் ஒரு வழியாக டிசைனை தேர்ந்தெடுத்து காட்ட, அதற்கு அட்வான்சாக பெரிய தொகையை கொடுத்து சென்றனர்".
"இது தான் அவர்களுக்கு கிடைத்த முதல் பெரிய ஆர்டர் என்பதால், ஆதுவும்- ருத்ரனும் இரவு பகல் பாக்காமல் டிசைனை ரெடி பண்ணி, ஆச்சாரியிடம் கொடுத்தனர்".
"நகைகள் ரெடியாக, எப்படியும் இருபது நாட்களுக்கு மேலே தான் ஆகுமென்று, முன்பே சொல்லி விட்டனர்".
"அதைப்போலவே எல்லா நகையும் தயாராகி ஷோரூமிற்கு வந்து சேர, ருத்ரன், ஆர்டர் கொடுத்தவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லவும், இன்னும் சில மணி நேரத்தில் வரோம்பா என்றார்".
"மாலை வேளை நெருங்கிக்கொண்டிருக்க, நண்பர்கள் இருவருக்கும் சிறிது டென்ஷனாக இருந்தது".
"முதல் பெரிய ஆர்டர், இது நல்ல படியாக முடியணுமென, மனதிற்குள் வேண்டிக்கொண்டனர்".
"அவர்களும் ஷோரூமிற்குள் வர, பெட்டியை திறந்து ஆதுவும் நகைகளை காட்ட,அசந்து போயினர்".
"நண்பர்கள் இருவரையும் வெகுவாக பாராட்டி விட்டு, மீதம் இருந்த தொகையை கொடுத்தவர், அங்கிருந்து புறப்பட, கல்யாண பெண்ணிற்கு இந்த அண்ணனுங்களுடைய கிப்ட் என்று, நண்பர்கள் இருவரும் இணைந்து,ஒரு சிறிய கிப்ட் பாக்ஸை கொடுத்தனர்".
"அதை வாங்கியவள் தேங்ஸ்ணா என்றபடியே திறந்து பார்க்க, அதில் பெண்கள் அணியும் வாட்ச் இருந்தது".
"தங்கத்தில், வைர கற்களும், எனாமலில் இயற்கை ஓவியத்தோடு இருக்கவும்,ரொம்ப நல்லாருக்கென்று சொல்லியவர்கள், தங்கள்
பெண்ணோட கல்யாணத்திற்கு வரச்சொல்லி,இருவருக்கும் இன்விடேஷனையும் கொடுத்துச் சென்றனர்".
"கல்யாண நாளும் வந்தது.அந்த ஹாலில் இருந்த பலருக்கு, மணப்பெண் போட்டிருந்த வைர நகைகளை பற்றி தான் எங்கும் பேச்சு.
"கேட்பவர்களுக்கு கடையின் பெயரை சொல்லியே, பெண்ணுடைய அப்பா, அம்மா ஓய்ந்தனர்".
"அதன் பிறகு, இலங்கை முழுவதும் சிம்ஹானந் டைமண்ட் ஷோரும் ரொம்ப பாப்புலரானது".ஒரே வருடத்தில் வாடகைக்கு வாங்கிய இடத்தை சொந்த மாக்கி,ஐந்து மாடி கட்டிடத்தோடு பில்டிங்கை எழுப்பினர்".
"இரண்டு வருடத்தில் வாங்கிய பேங்க் லோன்,மற்றும் தாத்தாவிடம் வாங்கிய பணத்தையும் வட்டியோடு திருப்பி கொடுத்தனர்".
"ஒரு நாள் வழக்கம் போல ஷோரூமை பூட்டி விட்டு, இருவரும் வீட்டிற்கு வரும் போது, ரோட்டில் ஒரு இளைஞன் மயங்கி விழுவதை பார்த்த ஆதுவோ காரை நிறுத்தினான்".
"எதற்கும் முன்னேற்பாடாக இருக்கட்டுமென்று, இருவரும் லைசன்ஸோடு வாங்கிய கன்னை எடுத்து, தங்களது இடுப்பில் சொருகிக்கொண்டே கீழே இறங்கி போய் அந்த இளைஞனை பார்த்து அதிர்ந்தனர்".
"டேய் இது ரஞ்சன்டானு சொல்லிக்கொண்டே, ஆது போய் தண்ணி எடுத்துவா என்று ருத்ரன் கத்த, ஆதுவும் ஓடிப்போய் காரை திறந்து, உள்ளே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, மூடியை திறந்து நண்பனின் முகத்தில் நீரை தெளித்தான்".
"சிறிது நொடிகளில் மயங்கியவன் கண்ணை திறக்க,அங்கிருந்த தனது பள்ளி நண்பர்களை பார்த்து லேசாக சிரித்தான்".
"பின்னர் பொறுமையாக எழுந்தவன், வீரா, ஆது என்று நண்பர்களை கட்டிக்கொண்டவன் உங்களை பார்த்து எத்தனை வருஷம்டா ஆகுதென்க, வாடா வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம்னு ஆது சொல்ல, ம்ம் என்றவாறே மூவரும் காரில் ஏறி ஆனந்தன் பேலஸிற்கு வந்தனர்".
திருச்சூர்
"தாரா எஸ்டேட்டில் வேலைக்குச் சேர்ந்த ஆர்கலிக்கு, இதோடு ஒரு வாரமாகிவிட்டது.வீட்டிலிருந்து கால் மணி நேரம் நடக்கும் தூரம் என்பதால், தினமும் நடந்து சென்று வரேனென்று பிடிவாதமாக சொல்லிவிட்டாள்".
"ஓரளவுக்கு மேல் அவளை வற்புறுத்த, மற்றவர்களுக்கும் மனம் வரவில்லை".
"தாரா எஸ்டேட்டில் ஒருபுறம் பாக்கு தோப்பும்,மற்றொருபுறம் தென்னந்தோப்பும்,மற்றொருபுறம் தேயிலை தோட்டமுமாக இருந்தது".
"ஆர்கலி முதல் முறை அந்த இடத்தை பார்க்கும் போது,அதன் அழகில் அதிசயித்து போனாள்".
" நாளைக்கே வேலைக்கு செல்லப்போவதாக சொல்ல, அவர்களும் சம்மதிக்க, மறுநாளில் அவளை அழைத்துக் கொண்டு சுந்தரபாண்டியனும்- ஷைலஜாவும் எஸ்டேட்டிற்கு வந்தனர்".
"வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களோ,சைலஜா பாட்டி போலவே முக அமைப்போடு வருபவளை பார்த்து ஆச்சரியப்பட்டனர்".
"யார் இந்த பெண்? நம்ம பெரியம்மா போலையே இருக்கிறாளென்று அவர்களுக்குள் கேள்விகள் ஓடியது".
"வேலை நடக்கும் இடத்திற்கு வந்தவர்கள்,அம்மாடி, இந்த மேடம் தான் ஆர்கலி, இவங்க தான் உங்களுக்கு சூப்பர்வைசர் என்றார் சுந்தர பாண்டியன்".
"அவர்களும் சரிங்கையா என்றனர்".
"சரி நீங்க வேலையை பாருங்கள் என்றவர், மற்ற இடத்தை காட்டுவதற்காக, ஆர்கலியை அழைத்து போயினர்".
"தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண்களோ, இந்த பொண்ணு என்னடி நம்ப பெரியம்மா போலவே இருக்கு?".
"ஒரு வேலை அம்மாவோட சொந்தமா இருக்குமோ?, அதான் முக ஒற்றுமை அப்படியே இருக்கு போலனு, அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்".
"ஆர்கலியும் சுந்தரபாண்டியன் தம்பதியரோடு எல்லாவற்றையும் சுற்றி பார்த்தவள்,சரிங்க தாத்தா, நான் வேலையை ஆரம்பிக்கிறேனென்று சொல்ல, சரிமாயென்று இருவரும் அவளோடு ஆபிஸ் இருக்கும் கட்டிடத்தை நோக்கி சென்றனர்".
"பெரிய முதலாளியை பார்த்ததும், மேனேஜர் எழுந்து வந்து வரவேற்தார்".
"அவரிடம் ஆர்கலியின் வேலை பற்றி சொல்ல, சரிங்க சார் என்றார்".
"பின்னர் முதியவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பியதும், மேனேஜரிடம் என்ன வேலை சசெய்யணும் பா என்க".
"அவள் அப்பா என்று அழைத்ததிலே, மேனேஜருக்கு ஆர்கலியின் மேல் நன்மதிப்பு வந்தது".
"அம்மாடி இது பழைய கணக்கு நோட்டுமா, இதில் இருப்பதை சிஸ்டத்தில் ஏற்றணும்,சரிங்கப்பா என்றவள், மனதிற்குள் சாமியை வேண்டிக்கொண்டு முதல் நாள் வேலையை தொடங்கினாள்.ஏற்கெனவே டைப்ரைட்டிங் கோர்ஸ் முடித்திருப்பதால், அவளால் வேகமாக கீபோர்டில் டைப்பிங் பண்ண முடிந்தது".
"அவளுக்கு சந்தேகம் வரும் இடத்தை மற்றும்,பென்சிலால் குறித்து வைத்துக்கொண்டாள்".
"மதிய உணவு இடைவேளை வந்தது கூட தெரியாமல் வேலையில் கவனமாய் இருந்தவளை, மைக்கேலின் குரல் தான் கலைத்தது".
"அம்மு வாடா சாப்பிடலாமென்க, இதோ மாமா என்றவள், சிஸ்டமில் இவ்வளவு நேரம் டைப்பிங் பண்ணியதை சேவ் பண்ணி விட்டு, ஷட்-டவுன் பண்ணிய பிறகு தான் விரல்கள் வலிப்பது தெரிந்தது".
"கையை கழுவி விட்டு வர, இருவருக்குமான உணவு கூடையை, மைக்கேல் பிரித்து வைத்துக்கொண்டிருந்தார்".
"மாமா நான் செய்யமாட்டேனா என்றவாறே அவள் வர,அந்த நேரம் அங்கு வந்த மேனேஜர், மைக்கேலை ஆர்கலி மாமா என்று கூப்பிடுவதை கேட்டு, உங்களுக்கு தெரிந்த பொண்ணாங்க?என்க ".
"என்னோட தங்கச்சி பொண்ணுங்க சார். இவ்வளவு நாள் ஊர்ல படிச்சிட்டு இருந்துச்சி,படிப்பு முடிஞ்சிட்டு அதான் இங்க கூப்பிட்டு வந்தேனென்கவும், ஓஓஓ அப்படியாங்க,சரிங்க சரிங்க".
"வாங்க சாப்பிடலாமென்று இருவரும் மேனேஜரை கூப்பிட, நீங்க சாப்பிடுங்க, நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேனென்று அங்கிருந்து சென்றார்".
"இவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்".
"ரொம்ப நல்ல மனுஷன் அம்மு. கிட்ட தட்ட இருபத்தைந்து வருஷமா இங்க வேலை பாக்குறார்".ஒரே பையன்.இந்த வருஷம் தான் காலேஜ் சேர்ந்திருக்கிறானென்று மேனேஜரை பற்றி மைக்கேல் சொல்ல, ஆர்கலியும் கேட்டுக்கொண்டாள்".
"மாமா உங்க கிட்ட ஒன்னு கேட்க வேண்டுமென்று ஆர்கலி சொல்ல,கேளுடா அம்மு".இந்த மாமன் கிட்ட ஏண்டா தயக்கமென்றார்".
"ம்ம் என்றவள்,யாரென்றே தெரியாதா என் மேல் தாத்தா, அம்மாச்சி, மேடமிற்கு எப்படி மாமா இவ்வளவு பாசம் ?".
"அவங்கள் ஸ்டேட்டஸ் எங்கே?".
ஆசிரமத்தில் வளர்ந்த நான் எங்கே?.
"என்னை போய் இப்படி பாக்குறாங்களே, அதான் எனக்கு புரியலை என்றவள், நீங்க மட்டும் தான் இங்கு இருக்குறீங்கள்".அப்போ,அத்தை எங்கே?.
"என்றோ ஓர் நாள், ஆர்கலியிடமிருந்து, இப்படி ஒரு கேள்வி வருமென்று தெரியும்".அந்த நாள் இன்று என்பதை,மைக்கேல் சிறிதும் எதிர் பார்க்கவில்லை".
"ஆதுவும், ருத்ரனும் பங்ஷனுக்கு இன்வைட் பண்ணியிருக்க,வந்தவர்களை வரவேற்று பக்கத்தில் இருந்த ஹாலில் உட்கார வைத்தனர்".
"ஓப்பன் பண்ண வேண்டிய ஷோரூமின் முன்பக்கம் முழுவதும் அடைத்திருந்ததால்,எதுவும் தெரியவில்லை".
"காலை எட்டரை மணிக்கெல்லாம் மேகலாவும், சுந்தரும் அங்கு வந்து சேர, நண்பர்கள் இருவரும் தலையசைத்து வரவேற்க, அவர்களும் தலையசைத்து உள்ளே வந்தனர்".
"நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது".
"என்னடா இவர்களை இன்னும் காணுமென்று ஆது கேட்கும் போதே, ஆனந்தன் மற்றும் சிம்ஹன் தாத்தா இருவரின் காரும் முன்னும், பின்னும் வந்து நின்றது".
"ம்ம் இதோ வந்தாச்சுடா என்றான் ருத்ரன்".
"மூவரும் காரிலிருந்து இறங்கி வர, அவர்களையும், கையில் கட்டியிருந்த வாட்சையும், நண்பர்கள் இருவரும் மாறி மாறி பார்த்தனர்".
"ஆது நல்ல நேரம் ஆரம்பிக்கப்போகுதென்று மேகலா சொல்ல,அதற்கு ருத்ரனோ இவங்களை காப்பாத்துறீங்களோ என்றான்".
"பின்னர் பாட்டி கையில் கத்தரிக்கோலை கொடுத்து ரிப்பனை கட் பண்ண சொல்ல, கடவுளிடம் மானசீகமாக வேண்டிக்கொண்ட கிரிஜா பாட்டியும் கட் பண்ண,எல்லாரும் கையை தட்டினர்".
"அப்பொழுது கையில் இருந்த ரிமோட்டை ருத்ரன் பிரஸ் பண்ண, பில்டிங்கை மறைத்திருந்த திரை விலகியது".
"எல்லாரும் என்ரன்ஸை பார்த்து திகைத்தனர். அதைவிட ஷோரூமின் பெயரை பார்த்து வீட்டினருக்கும் அதிர்ச்சி தான்".
"அவ்வளவு கலைநயத்தோடு வாசல் கதவு இருந்தது".ஆனந்தனுக்கும், சிம்ஹன் தாத்தாவிற்கும் எதுவும் சொல்ல முடியவில்லை".
"சிம்ஹானந்த்" என்ற பெயர் பித்தளையில் பளபளத்தது.
"உள்ளே வாங்கள் என்றபடியே சென்றவர்கள், அங்கிருந்த மேட்ச் பாக்ஸை எடுத்த நீட்டிய ஆது,அடேய் கிரி நல்லா வேண்டிக்கிட்டு, ஆளுக்கொரு திரியை ஏற்றுங்களென்றான்".
"இடுப்பளவு இருந்த குத்து விளக்கில், வீட்டினர் ஐவரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கிக்கொண்டு விளக்கை ஏற்றினர்".
"வந்திருந்த கெஸ்ட்களெல்லாரும், ஷோரூமையையும், அங்கிருந்த பொருட்களையும் சுற்றி பார்த்தனர்".
"முதல் வியாபாரத்தை, சிம்ஹன் தம்பதியினரே தொடங்கி வைத்தனர்".
"முதல் தளத்தில் ஷோரூமும், இரண்டாம் தளத்தில், ஆபிஸ் ரும் மற்றும் டிசைனிங் செக்க்ஷன் இருந்தது".
"ஷோரூம் திறந்து சில மாதங்கள் வரை, நஷ்டமில்லாமலே வியாபாரம் ஆனது".
சிறு சிறு பொருட்களை கூட மிக நேர்த்தியாக செய்திருப்பதால், வெளியே நற்பெயர் வாங்கியது".
"கிட்ட தட்ட ஷோரும் திறந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க,ஆனந்தனின் நண்பர் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்கான நகைகளை ஆர்டர் பண்ண வந்திருந்தார்".
"வந்தவர்களை நண்பர்கள் இருவரும் வரவேற்து, எப்படி?, என்ன ரேஞ்சில் வேண்டும் என்க,மகளின் திருமணத்திற்கென்றார்".
"சரிங்க சார் என்றவர்கள், தங்களிடம் உள்ள கேட்லாக்கை எடுத்து காட்டி, இதில் உள்ளதை பாருங்கள் என்றனர்".
"நேரம் கடந்து செல்ல, வந்தவருக்கோ எதை செலக்ட் பண்ண சொல்வதென்றே தெரியவில்லை".அத்தனை நகைகளும், ஒவ்வொரு விதத்தில் அழகாய் இருக்க,தம்பி எனக்கு ஒரே குழப்பாமாக இருக்குப்பானு அவரும் நண்பர்களிடம் சரணடைந்தவரோ என் பொண்ணையே வரச்சொல்லுறேனென்று, ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்ல, அரை மணி நேரத்தில் கல்யாண பெண் தன் தோழியோடு அங்கு வர,அவளிடம் டிசைனை காட்ட,அவளுக்கும் அதே சூழல் தான்".
"பின்னர், முன்னும், பின்னும் புரட்டி புரட்டி பார்த்தவள் ஒரு வழியாக டிசைனை தேர்ந்தெடுத்து காட்ட, அதற்கு அட்வான்சாக பெரிய தொகையை கொடுத்து சென்றனர்".
"இது தான் அவர்களுக்கு கிடைத்த முதல் பெரிய ஆர்டர் என்பதால், ஆதுவும்- ருத்ரனும் இரவு பகல் பாக்காமல் டிசைனை ரெடி பண்ணி, ஆச்சாரியிடம் கொடுத்தனர்".
"நகைகள் ரெடியாக, எப்படியும் இருபது நாட்களுக்கு மேலே தான் ஆகுமென்று, முன்பே சொல்லி விட்டனர்".
"அதைப்போலவே எல்லா நகையும் தயாராகி ஷோரூமிற்கு வந்து சேர, ருத்ரன், ஆர்டர் கொடுத்தவருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லவும், இன்னும் சில மணி நேரத்தில் வரோம்பா என்றார்".
"மாலை வேளை நெருங்கிக்கொண்டிருக்க, நண்பர்கள் இருவருக்கும் சிறிது டென்ஷனாக இருந்தது".
"முதல் பெரிய ஆர்டர், இது நல்ல படியாக முடியணுமென, மனதிற்குள் வேண்டிக்கொண்டனர்".
"அவர்களும் ஷோரூமிற்குள் வர, பெட்டியை திறந்து ஆதுவும் நகைகளை காட்ட,அசந்து போயினர்".
"நண்பர்கள் இருவரையும் வெகுவாக பாராட்டி விட்டு, மீதம் இருந்த தொகையை கொடுத்தவர், அங்கிருந்து புறப்பட, கல்யாண பெண்ணிற்கு இந்த அண்ணனுங்களுடைய கிப்ட் என்று, நண்பர்கள் இருவரும் இணைந்து,ஒரு சிறிய கிப்ட் பாக்ஸை கொடுத்தனர்".
"அதை வாங்கியவள் தேங்ஸ்ணா என்றபடியே திறந்து பார்க்க, அதில் பெண்கள் அணியும் வாட்ச் இருந்தது".
"தங்கத்தில், வைர கற்களும், எனாமலில் இயற்கை ஓவியத்தோடு இருக்கவும்,ரொம்ப நல்லாருக்கென்று சொல்லியவர்கள், தங்கள்
பெண்ணோட கல்யாணத்திற்கு வரச்சொல்லி,இருவருக்கும் இன்விடேஷனையும் கொடுத்துச் சென்றனர்".
"கல்யாண நாளும் வந்தது.அந்த ஹாலில் இருந்த பலருக்கு, மணப்பெண் போட்டிருந்த வைர நகைகளை பற்றி தான் எங்கும் பேச்சு.
"கேட்பவர்களுக்கு கடையின் பெயரை சொல்லியே, பெண்ணுடைய அப்பா, அம்மா ஓய்ந்தனர்".
"அதன் பிறகு, இலங்கை முழுவதும் சிம்ஹானந் டைமண்ட் ஷோரும் ரொம்ப பாப்புலரானது".ஒரே வருடத்தில் வாடகைக்கு வாங்கிய இடத்தை சொந்த மாக்கி,ஐந்து மாடி கட்டிடத்தோடு பில்டிங்கை எழுப்பினர்".
"இரண்டு வருடத்தில் வாங்கிய பேங்க் லோன்,மற்றும் தாத்தாவிடம் வாங்கிய பணத்தையும் வட்டியோடு திருப்பி கொடுத்தனர்".
"ஒரு நாள் வழக்கம் போல ஷோரூமை பூட்டி விட்டு, இருவரும் வீட்டிற்கு வரும் போது, ரோட்டில் ஒரு இளைஞன் மயங்கி விழுவதை பார்த்த ஆதுவோ காரை நிறுத்தினான்".
"எதற்கும் முன்னேற்பாடாக இருக்கட்டுமென்று, இருவரும் லைசன்ஸோடு வாங்கிய கன்னை எடுத்து, தங்களது இடுப்பில் சொருகிக்கொண்டே கீழே இறங்கி போய் அந்த இளைஞனை பார்த்து அதிர்ந்தனர்".
"டேய் இது ரஞ்சன்டானு சொல்லிக்கொண்டே, ஆது போய் தண்ணி எடுத்துவா என்று ருத்ரன் கத்த, ஆதுவும் ஓடிப்போய் காரை திறந்து, உள்ளே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து, மூடியை திறந்து நண்பனின் முகத்தில் நீரை தெளித்தான்".
"சிறிது நொடிகளில் மயங்கியவன் கண்ணை திறக்க,அங்கிருந்த தனது பள்ளி நண்பர்களை பார்த்து லேசாக சிரித்தான்".
"பின்னர் பொறுமையாக எழுந்தவன், வீரா, ஆது என்று நண்பர்களை கட்டிக்கொண்டவன் உங்களை பார்த்து எத்தனை வருஷம்டா ஆகுதென்க, வாடா வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம்னு ஆது சொல்ல, ம்ம் என்றவாறே மூவரும் காரில் ஏறி ஆனந்தன் பேலஸிற்கு வந்தனர்".
திருச்சூர்
"தாரா எஸ்டேட்டில் வேலைக்குச் சேர்ந்த ஆர்கலிக்கு, இதோடு ஒரு வாரமாகிவிட்டது.வீட்டிலிருந்து கால் மணி நேரம் நடக்கும் தூரம் என்பதால், தினமும் நடந்து சென்று வரேனென்று பிடிவாதமாக சொல்லிவிட்டாள்".
"ஓரளவுக்கு மேல் அவளை வற்புறுத்த, மற்றவர்களுக்கும் மனம் வரவில்லை".
"தாரா எஸ்டேட்டில் ஒருபுறம் பாக்கு தோப்பும்,மற்றொருபுறம் தென்னந்தோப்பும்,மற்றொருபுறம் தேயிலை தோட்டமுமாக இருந்தது".
"ஆர்கலி முதல் முறை அந்த இடத்தை பார்க்கும் போது,அதன் அழகில் அதிசயித்து போனாள்".
" நாளைக்கே வேலைக்கு செல்லப்போவதாக சொல்ல, அவர்களும் சம்மதிக்க, மறுநாளில் அவளை அழைத்துக் கொண்டு சுந்தரபாண்டியனும்- ஷைலஜாவும் எஸ்டேட்டிற்கு வந்தனர்".
"வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களோ,சைலஜா பாட்டி போலவே முக அமைப்போடு வருபவளை பார்த்து ஆச்சரியப்பட்டனர்".
"யார் இந்த பெண்? நம்ம பெரியம்மா போலையே இருக்கிறாளென்று அவர்களுக்குள் கேள்விகள் ஓடியது".
"வேலை நடக்கும் இடத்திற்கு வந்தவர்கள்,அம்மாடி, இந்த மேடம் தான் ஆர்கலி, இவங்க தான் உங்களுக்கு சூப்பர்வைசர் என்றார் சுந்தர பாண்டியன்".
"அவர்களும் சரிங்கையா என்றனர்".
"சரி நீங்க வேலையை பாருங்கள் என்றவர், மற்ற இடத்தை காட்டுவதற்காக, ஆர்கலியை அழைத்து போயினர்".
"தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண்களோ, இந்த பொண்ணு என்னடி நம்ப பெரியம்மா போலவே இருக்கு?".
"ஒரு வேலை அம்மாவோட சொந்தமா இருக்குமோ?, அதான் முக ஒற்றுமை அப்படியே இருக்கு போலனு, அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்".
"ஆர்கலியும் சுந்தரபாண்டியன் தம்பதியரோடு எல்லாவற்றையும் சுற்றி பார்த்தவள்,சரிங்க தாத்தா, நான் வேலையை ஆரம்பிக்கிறேனென்று சொல்ல, சரிமாயென்று இருவரும் அவளோடு ஆபிஸ் இருக்கும் கட்டிடத்தை நோக்கி சென்றனர்".
"பெரிய முதலாளியை பார்த்ததும், மேனேஜர் எழுந்து வந்து வரவேற்தார்".
"அவரிடம் ஆர்கலியின் வேலை பற்றி சொல்ல, சரிங்க சார் என்றார்".
"பின்னர் முதியவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பியதும், மேனேஜரிடம் என்ன வேலை சசெய்யணும் பா என்க".
"அவள் அப்பா என்று அழைத்ததிலே, மேனேஜருக்கு ஆர்கலியின் மேல் நன்மதிப்பு வந்தது".
"அம்மாடி இது பழைய கணக்கு நோட்டுமா, இதில் இருப்பதை சிஸ்டத்தில் ஏற்றணும்,சரிங்கப்பா என்றவள், மனதிற்குள் சாமியை வேண்டிக்கொண்டு முதல் நாள் வேலையை தொடங்கினாள்.ஏற்கெனவே டைப்ரைட்டிங் கோர்ஸ் முடித்திருப்பதால், அவளால் வேகமாக கீபோர்டில் டைப்பிங் பண்ண முடிந்தது".
"அவளுக்கு சந்தேகம் வரும் இடத்தை மற்றும்,பென்சிலால் குறித்து வைத்துக்கொண்டாள்".
"மதிய உணவு இடைவேளை வந்தது கூட தெரியாமல் வேலையில் கவனமாய் இருந்தவளை, மைக்கேலின் குரல் தான் கலைத்தது".
"அம்மு வாடா சாப்பிடலாமென்க, இதோ மாமா என்றவள், சிஸ்டமில் இவ்வளவு நேரம் டைப்பிங் பண்ணியதை சேவ் பண்ணி விட்டு, ஷட்-டவுன் பண்ணிய பிறகு தான் விரல்கள் வலிப்பது தெரிந்தது".
"கையை கழுவி விட்டு வர, இருவருக்குமான உணவு கூடையை, மைக்கேல் பிரித்து வைத்துக்கொண்டிருந்தார்".
"மாமா நான் செய்யமாட்டேனா என்றவாறே அவள் வர,அந்த நேரம் அங்கு வந்த மேனேஜர், மைக்கேலை ஆர்கலி மாமா என்று கூப்பிடுவதை கேட்டு, உங்களுக்கு தெரிந்த பொண்ணாங்க?என்க ".
"என்னோட தங்கச்சி பொண்ணுங்க சார். இவ்வளவு நாள் ஊர்ல படிச்சிட்டு இருந்துச்சி,படிப்பு முடிஞ்சிட்டு அதான் இங்க கூப்பிட்டு வந்தேனென்கவும், ஓஓஓ அப்படியாங்க,சரிங்க சரிங்க".
"வாங்க சாப்பிடலாமென்று இருவரும் மேனேஜரை கூப்பிட, நீங்க சாப்பிடுங்க, நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேனென்று அங்கிருந்து சென்றார்".
"இவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்".
"ரொம்ப நல்ல மனுஷன் அம்மு. கிட்ட தட்ட இருபத்தைந்து வருஷமா இங்க வேலை பாக்குறார்".ஒரே பையன்.இந்த வருஷம் தான் காலேஜ் சேர்ந்திருக்கிறானென்று மேனேஜரை பற்றி மைக்கேல் சொல்ல, ஆர்கலியும் கேட்டுக்கொண்டாள்".
"மாமா உங்க கிட்ட ஒன்னு கேட்க வேண்டுமென்று ஆர்கலி சொல்ல,கேளுடா அம்மு".இந்த மாமன் கிட்ட ஏண்டா தயக்கமென்றார்".
"ம்ம் என்றவள்,யாரென்றே தெரியாதா என் மேல் தாத்தா, அம்மாச்சி, மேடமிற்கு எப்படி மாமா இவ்வளவு பாசம் ?".
"அவங்கள் ஸ்டேட்டஸ் எங்கே?".
ஆசிரமத்தில் வளர்ந்த நான் எங்கே?.
"என்னை போய் இப்படி பாக்குறாங்களே, அதான் எனக்கு புரியலை என்றவள், நீங்க மட்டும் தான் இங்கு இருக்குறீங்கள்".அப்போ,அத்தை எங்கே?.
"என்றோ ஓர் நாள், ஆர்கலியிடமிருந்து, இப்படி ஒரு கேள்வி வருமென்று தெரியும்".அந்த நாள் இன்று என்பதை,மைக்கேல் சிறிதும் எதிர் பார்க்கவில்லை".