• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
66
44. கர்ணா மெய் இருவரின் ஊடலும்...
மிதுனின் கோபமும்...

பாண்டவர் இல்லம்...

அலுவலகத்தில் தன்னைப் பார்க்க வந்த லீனாவிடம்... சாரி மிஸ் லீனா எதுவும் என்னிடம் சொல்ல வேண்டாம்.... பிசினஸ் விஷயமாக பேசக்கூடிய மனநிலையில் நான் இப்போது இல்லை. அதனால் எந்த விஷயமாக இருந்தாலும் தன் தம்பி லிபினிடம் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு, அலுவலகத்தில் இருந்து வேகமாக வந்த கர்ணா நேராக யாரையும் பார்க்காமல் தன் மெய்யின் அறைக்கு சென்றான்.

அங்கு அவளோ கர்ணாவை நினைத்து தன் உள்ளங்கையில் கர்ணா வெட்ஸ் ????? ஹார்ட்டின் வரைந்து அதற்குள் ... அவனுடைய முகத்தை இருப்பது போல் நினைத்துக் கொண்டு அத்தான்... ப்ளீஸ் நான் உங்களுக்கு வேண்டாம்...‌ என்னால் இயல்பான தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியும் என்று தோன்றவில்லை.

அந்த மிருகம் எனக்குள் ஏற்படுத்திய காயங்கள் அனைத்தையும் சரோஜா அம்மாவின் புண்ணியத்தால் அதாவது மனதில் இருந்த காயங்களை தாண்டி வாழ்க்கையில் இயல்பான ஒரு பெண்ணாக நடமாட ஆரம்பித்து விட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் குளிக்கும் போது... என் உடம்பை நான் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் உணர்வுகள்... என்னால் எப்படி முடியும்... அத்தான் நான் உனக்கு வேண்டாம்..

எனக்கு காதல் எல்லாம் செட் ஆகாது, எனக்கு காதலிக்கவும் தெரியாது. அதே மாதிரி எனக்கு எந்த ஃபீலிங்க்ஸும் கிடையாது... அதனால அத்தான் தயவு செய்து என்னை உன் வழிக்கு கொண்டு வரணும் என்று நினைக்காமல்... தயவு செய்து உன் வாழ்க்கையை நீ வாழ பாரு அத்தான்.

ஓகே ரொம்ப நேரம் உன்னையே நினைச்சு கிட்டே இருக்கேன்.. பொசுக்குன்னு நீ பேசாம என் முன்னாடி வந்து நின்னுகிட்டு.. நீ லவ் பண்ற நான் லவ் பண்றேன்னு ராமாயணத்தை ஆரம்பிச்சுராத.. முதலில் இந்த பெட் விட்டு எந்திரிக்கணும்... படுக்க வச்சுட்டு போனாலும் போனாரு அவர் கூட இருக்கிற மாதிரியே இருக்கு என்று சொல்லி கொண்டே தன் கையை கீழே இறக்கி நிமிர்ந்து பார்க்க...

அவள் அருகில் அவளின் அத்தான் அமர்ந்து இருந்தான்.

கடவுளே நினைச்சு நினைச்சு உங்களை வரவெச்சிட்டேனா... அத்தான் இப்ப நீங்க ஆபீஸ்ல தானே இருக்கீங்க... ஆனால் எனக்கு நீங்க என் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது போலவே இருக்கு. ரொம்பவே என்னை குழப்பி விட்டு விட்டீர்கள். போங்க அத்தான் எனக்கு இப்ப காய்ச்சல் சரியாயிடுச்சு.. நான் போய் அம்மாவை பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இறங்க நினைத்து எழுந்த அமர...

அவளை அப்படியே கட்டிலில் சரித்து..
அவளின் மீது தன் மொத்த எடையேயும் போட்டு அவளை தனக்கு அடியில் ஆக்கிரமித்தான்.

ஐயோ மாமா என்ன பண்றீங்க? நீங்க நிஜமாகவே வீட்டுக்கு வந்துட்டீகளா? வேணாம் மாமா என் மேல் இருந்து இறங்கு மாமா. யாராவது வந்தால் தப்பாக நினைப்பார்கள். அதுவும் இல்லாமல் நீ என்னிடம் இப்படி நடந்து கொள்வதால் எல்லாம் நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ளவே மாட்டேன். எனக்கு எந்த உணர்ச்சிகளும் இல்லை. உணர்வுகளும் இல்லை. உயிர் இருக்கும்.
உணர்வில்லா பொருள் நான் அவ்வளவு தான்' என்று தன் மீது ஒரு ஆடவன் படுத்து இருக்கிறான் என்ற உணர்வே இல்லாதது போல்... அவனிடம் நீயே பாரு எனக்கு நீ என் மேல் படுத்து இருந்தும் கூட எந்த ஒரு ஃபீலிங்ஸ்மே இல்லை என்று சொன்னாள் அழகி.

அவள் இதுவரை பேசியதை கேட்டுக் கொண்டு இருந்த கர்ணா...

ஓ எந்த ஃபீலிங்ஸ் இல்லாமல் தான் இவ்வளவு நேரம் மூச்சுக்கு 300 தடவை அத்தான் அத்தான் என்று இல்லாத என்னிடம் பேசிக் கொண்டு இருந்தாயா? என்று அவளின் உள்ளங்கையில் அவள் வரைந்து வைத்து இருந்த வரைபடத்தை பார்த்து விட்டு...

கர்ணா வெட்ஸ் ????

அதில் இருந்த கொஸ்டின் மார்க்ஸ் அனைத்தையும் அழகாக மெய் என்று எழுதினான். எழுதி விட்டு அதே உள்ளங்கையில் தன் இதழை பதித்தான்.

அந்த நிமிடம் அவளுக்குள் ஏற்பட்ட சலனங்களை கால் பெருவிரலை கட்டிலில் வைத்து அழுத்தி அடக்கிக்கொண்டு ... எதுவும் தெரியாதது போல் மரக்கட்டையாக படுத்து இருந்தாள்.

அவளின் முயற்சி புரிந்தவன்... அவள் கால்களுக்குள் தன் கால்களை கலக்க விட்டு... அவளின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான். அவனின் சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட..

தன் இரு கைகளையும்... கட்டிலில் வைத்து அழுத்தம் கொடுத்து அமைதியாக இருந்தால் அப்பவும்.

அவளின் மேல் படுத்து இருப்பவனுக்கு தெரியாதா அவளின் உணர்வுகள். இப்போது அவளின் இதழ்களை தன்னுடைய இதழ்களால் வருடிவிட்டான்.

ப்ளீஸ் மாமா தயவு செய்து என்னை விட்டு கீழே இறங்கு மாமா என்று சொன்னாள் அழகி.

ஏன்.. ஏன்... டி இறங்கனும் நான்... உனக்கு தான் ஒரு ஃபீலிங்ஸ் கிடையாதே... மரக்கட்டை தானே பிறகு என்ன?.. எனக்கு வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அவளின் இதழில் இப்பொழுது தன் நாவால் கோலம் போட...

பொறுமை மொத்தமும் இழந்தவள், ஐயோ அத்தான் ப்ளீஸ் என்னை விட்டு கீழே இறங்கு என்று அவனை தள்ள பார்த்தாள்...

பாரு... டா ... என்னோட செல்லத்துக்கு கிட்ட இருந்து அத்தான் என்ற அழைப்பு எல்லாம் வருகிறது... இந்த அத்தானை உனக்கு அம்புட்டு பிடிக்குமா என்று கேட்டான்.

ஐயோ அத்தான் ப்ளீஸ் இறங்கி போ... எனக்கு காய்ச்சல் வந்த உடம்பு உனக்கே தெரியும் தானே... இப்படி என் மீது பாரம் மொத்தத்தையும் போட்டு படுத்து இருக்கிறாயே... நான் பாவம் இல்லை.. என்று தன் மூஞ்சியை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள் அழகி...

பர்பாமென்ஸ் பத்தல மெய்... இப்ப வரை அழகி மட்டும் தான் இங்கு இருக்கிறாள். இந்த கர்ணாவின் மெய் இன்னும் வெளியில் வரவில்லை என்று சொன்னான். அவள் வந்தால் நான் போய் விடுவேன் என்று சொன்னான் கர்ணா.

என்ன அத்தான் உளறுகிறாய்... எனக்கு ஒன்றும் புரியவில்லை.. ப்ளீஸ் இறங்கு அத்தான். அம்மா வந்து விடப் போகிறார்கள்... அவர்கள் பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள். என்னைப் பற்றி தவறாக நினைத்தாலும் எனக்கு பரவாயில்லை உன்னை பற்றி ஏதேனும் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?.. இறங்குவது அத்தான் என்று கெஞ்சிக்கொண்டு படுத்து இருந்தாள் அழகி.

இங்கே பாரு மெய்.. நான் நினைத்தால் இந்த நிமிடம் உன் ஆடைகளுக்கு விடுதலை அளித்து... நீ தயங்கும் விஷயங்கள் ஒவ்வொன்றிற்கும் என்னால் பதில் அளிக்க முடியும். இன்று காலையில் உன்னை சுத்தப்படுத்தி உனக்கு ஆடை மாற்றிய போதே என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து இருக்கலாம்.. ஆனால் எனக்கு தேவை உன்னுடைய மனசு..

அந்த மனதில் இருக்கும் பயங்கள் அனைத்தையும் போக்கி... உன் முழு மனதோடு சம்மதம் சொல்லி, பெரியவர்கள் முன்னிலையில் உன் கழுத்தில் தாலி கட்டி என்னவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தான்.. இப்ப வரை நானும் அமைதியாக இருக்கிறேன்.

தயவு செய்து வீணான மன குழப்பங்களை போட்டு.. உன் மனதிற்குள் குழப்பிக் கொள்ளாதே... இவ்வளவு நாட்கள் வாழ்க்கையை எப்படி இயல்பாக வாழ்ந்தாயோ அப்படியே இரு... உனக்கான காதல்.. காதலோடு இணைந்த காமம் எப்படி என்று, அதை என் அண்ணன்கள் மூன்று பேருக்கும் திருமணமாகும் வரை அழகாக நான் சொல்லித் தருகிறேன். பிறகு நம் திருமணம் உன் சம்மதத்தோடு நடைபெறும் அதுவரை பொறுமையாக இந்த அத்தானின் சேட்டைகளை தாங்கிக் கொள் என்று சொல்லி அவளுடைய வெற்றியில் அழகான முத்தம் ஒன்றை வைத்தவன்.. இந்த முத்தம் நான் உனக்கு எல்லாமும் ஆகவும் இருப்பேன் ஒரு அப்பாவாக என்பதற்கு அடையாளம்.

அப்படியே மெதுவாக கன்னத்தில் இறங்கி கன்னத்தில் முத்தமிட்டு... இது உன் அம்மாவாக என்றும் உனக்கு நான் கொடுக்கும் அன்பு முத்தம்...

பிறகு அவள் கைகளை எடுத்து அவள் கைகளில் முத்தமிட்டு... என்றும் என்றென்றும் பிரியாமல் இந்த கைகளோடு கைகள் கோர்த்து இருப்பேன் என்று சொல்லாமல் செல்வதற்காகவே உனக்கு இடும் முத்தம் ஒரு தோழனாக...

மீதி இருக்கும் எல்லா இடங்களும் உன் காதலனாக உன் கணவனாக ஆன பின்பு எனக்கு மட்டுமே சொந்தமாகும்.
அதன் பிறகு நான் இடம் ஒவ்வொன்றும் வேற விதம், அதை உன் கழுத்தில் தாலி கட்டிய பிறகு... சொல்கிறேன். இப்போது நான் கிளம்புகிறேன் என்று அவர்கள் கன்னத்தில் ஒரு தாயாக முத்தமிட்டு எழுந்தான்.

அழகியோ கண் மூடி கர்ணா தந்த முத்தமும் அதற்கு அவன் கொடுத்த விளக்கம் ஒவ்வொன்றையும் தனக்குள்ளே ரசித்துக் கொண்டே இருந்தவள்... நேரம் காலம் மறந்து அப்படியே படுத்து இருந்தாள்.

கர்ணா எப்போது உள்ளே வந்தான்.. இப்போது இப்படியே செல்லும் நேரம் என்ன என்று கூட யோசிக்காமல்... வெளியே வந்து தன் அறைக்கு சென்றான்.

அவன் மேலே செல்வதை ஹாலில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த மிதுன்...

என்ன நாம் இங்கு வந்து உட்கார்ந்து அறை மணி நேரம் இருக்குமே... நான் இங்கு வந்து அமர்ந்ததில் இருந்து இவன் வரவே இல்லை... ஆனால் இப்போது அழகி ரூமில் இருந்து வெளியில் அதுவும் சிரித்த முகத்தோடு போகிறான். என்ன நடக்கிறது இங்கே அச்சச்சோ என்று பயந்து போய் எழுந்தான்... மிதுன்.

அப்போது சரியாக சரோஜா அங்கு வந்தவர்... என்னாச்சு மிதுன் ஏன் இப்போது பதட்டமாக எழுந்து எங்கே போகிறாய் என்று கேட்டார்.

அத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஆனால் இதை சொல்லாமல் இருந்தால் எனக்குள் சரியான முடிவு எடுக்க முடியாது அதனால் தான் உங்களிடம் சொல்கிறேன் என்று அவன் கர்ணாவை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்பே....

சரோஜாவே ... கர்ணா, அழகி இருவரின் உறவு முறை பற்றி தானே நீ குழப்பிக் கொள்கிறாய் என்று கேட்டார்.

ஆமாம் அத்தை என்று அவனும் சிறிது ஆச்சரியப்பட்டாலும் அது தான் என்று ஒத்துக் கொண்டான்.

சரி வா நாம் இருவரும் என்னுடைய அறைக்கு சென்று பேசுவோம் என்று தன் அறைக்கு அழைத்து சென்றார்.

உள்ளே சென்று சரோஜாவின் கட்டிலில் அத்தையின் அருகிலேயே அமர்ந்தவன், என்ன அத்தை உங்களுக்கு ஏற்கனவே ஏதோ விஷயம் தெரிந்தது போல் பேசுகிறீர்கள். இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டான் மிதுன்.

மிதுன் கண்ணா அத்தை சொல்வதை பொறுமையாக கேள். நம் கர்ணாவிற்கு அழகிய மிகவும் பிடித்து இருக்கிறது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான் என்று சொன்னார்.

ஐயோ அத்தை அவர்கள் இருவரும் காதலிக்கட்டும் கல்யாணம் செய்து கொள்ளட்டும், எனக்கு அது பற்றி கவலை எனக்கு கொஞ்சம் கூட இல்லை. அவனை விட நான் ஐந்து வயது பெரியவனாக இருந்தாலும் அவனுக்கும் வயது 25 ஆகிவிட்டது. நான் அதை எல்லாம் குறை சொல்லவே இல்லை...
ஆனால்... ???....

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...


நாளைய பதிவில் சனாதன் சஞ்சனா இருவரையும் தேடும் உறவுகள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top