Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
குழலி தன் கடந்த கால வாழ்க்கையை நினைவகத்தில் இருந்து எடுத்தார்.
(வாசகர்கள்,
என்னடா, ஏதோ கேலரியில் இருந்து போட்டோவை எடுத்தது போல் சொல்கிறானே என்று சொல்வது எனக்கு கேட்டது.)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.
திருமலை புரம் -
பேருந்து நிலையம்.

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்...
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்து சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று
தினமும் முல்லைச் சரம் கொண்டு சூடினான்

என சிற்றூந்தில் பாடல் ஒலித்ததை ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இரசித்து கொண்டு இருந்த குழலியிடம், ஒரு இளைஞன் பேருந்துக்கு வெளியே இருந்து, " ஹலோ இந்த பேருந்து கோமதியாள் புரம் போகுமா" என்று கேட்க,
குழலி அதைக் கேட்டு விட்டு, ம்ம் என்பது போல தலையை மட்டும் ஆட்டி விட்டு, மீண்டும் பாடலை இரசிக்க ஆரம்பித்தாள். பாடலில் உள்ள வரிகள் போல் இந்த வள்ளியை தேடி வந்த வடிவேலன் அந்த இளைஞன் பூங்குன்றன் தான்.
பூங்குன்றன் பற்றி பார்ப்போம்.
பூங்குன்றன் அவன் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை கிடைத்தது.
அதுவும் அவன் விரும்பிய செய்தி சேகரிக்கும் வேலையே அவனுக்கு கிடைத்தது. அந்த நாளிதழின் பெயர்.'கருடப்பார்வை '
ஆனால் அந்த பத்திரிக்கை நிறுவனம் இன்னும் மக்களிடம் நன்கு அறிமுகம் ஆகாமல் உள்ள புதிய நிறுவனம்.
அதில் மற்ற நாளிதழ்களில் வராத செய்திகளை தேடிக் கண்டுபிடித்து அதை தங்கள் நாளிதழில் போட்டு மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்பது நிறுவனரின் விருப்பமும் கொள்கையும்.
அதன் தலைமை அலுவலகம், தென்காசி மாவட்டம்
சங்கரநயினார் புரத்தின் நகர கிழக்கு எல்லை முடியும் உள்ள ஒரு பகுதியில் உள்ள ஒரு சின்ன கட்டிடம் தான். அங்கே ஊழியர்கள் என்று பார்த்தால் நிறுவனரையும் சேர்த்து மொத்தமே 25 பேர் தான். அதில் பூங்குன்றன் அந்த நிறுவனத்தில், நிறுவனரின் இடத்தில் இருந்து, அதற்கு கீழ் நிலையில் உள்ள ஒருவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஊழியர் தான்.
பூங்குன்றனின் பெற்றோர் அவன் மேல் நிலை வகுப்பு படிக்கும் போதே தவறி விட்டார்கள். பூங்குன்றன் உடன் பிறந்த ஒரே ஒருவர், அதுவும் அண்ணன் தான் பூங்குன்றனை மேற்கொண்டு ஒரு இளநிலை பட்டம் பெறும் வரை படிக்க வைத்தார்.
பூங்குன்றன் நாளிதழில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.
அவனின் விருப்பமும் மற்ற நாளிதழ்களில் வராத செய்திகளை தேடிக் கண்டுபிடித்து, அது மக்களுக்கு பயன் படும் படி இருந்தால் அந்த செய்தியை அச்சில் ஏற்ற பரிந்துரை செய்வான். அது மக்களுக்கு பயன் படாது என்று தெரிந்தால் அதை அச்சில் ஏற்ற அனுமதிக்க மாட்டான்.
அதை நிறுவனரும் மறுக்காமல் சரி என்று பூங்குன்றனுக்கு ஆதரவாக செய்வார்.
இப்போதும் ஒரு புதிய செய்தி மற்றும் மற்ற எந்த நாளிதழில் வராத ஒரு செய்தியை அறிந்து அதை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள, கோமதியாள் புரத்திற்கு செல்கிறான்.
கோமதியாள் புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12 ம் வகுப்பில் அரையிறுதி தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற முடியாமல் போனதை பற்றி யாருக்கும் தெரியாத தகவல், பூங்குன்றனுக்கு மட்டும் கிடைத்தது.
அதனால் அங்கே போய், ஒட்டுமொத்த மாணவர்கள் தேர்ச்சி பெறாததற்கு என்ன காரணம் என்று அறிவதற்கும் அதைப் பற்றி, பத்திரிக்கையில் ஒரு கட்டுரை போடுவதற்காகவும் கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கிறான்.
பேருந்தில் குழலி அமர்ந்து இருந்த இருக்கைக்கு நேர் எதிரே உள்ள இருக்கைக்கு பின்னாடி உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தான் பூங்குன்றன்.
பூங்குன்றன், சிற்றுந்து நடத்துனரிடம், தான் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லி,தனக்கான பயணச்சீட்டை வாங்கி கொண்டு விட்டு நடத்துநரிடம் " அந்த இடம் வந்தால் எனக்கு சொல்லுங்க, நான் இந்த ஊருக்கு புதுசு" என்று சொல்ல, நடத்துனரும் மற்ற பயணிகளுக்கு பயண சீட்டு கொடுக்கும் மும்முரத்திலும் " சரி" என்றார்.
பூங்குன்றன், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்து நிற்கும் போது, அவன் நடத்துநரை திரும்பி திரும்பி பார்ப்பான்.
இதை குழலி கவனித்து கொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிறுத்தம் வரும் போது, பூங்குன்றன் நடத்துநரையும் , அருகில் உள்ளவர்களிடம் ஏதோ கேட்பதையும் வைத்து, குழலி, பூங்குன்றன் இந்த பகுதிக்கு அறிமுகம் இல்லாத புதியவர் என்று புரிந்து கொண்டாள்.
அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் போது, பூங்குன்றன் எழுந்து, நடத்துநரிடம் கேட்கலாம் என்று நினைக்கும் போது, குழலி " நீங்கள் இறங்க வேண்டிய இடம் இன்னும் இரண்டு நிறுத்தங்கள் கழித்து வரும். நானும் அங்கே தான் இறங்கு வேன்"
என்றாள்.
பூங்குன்றன், ' நம்மிடமா இந்த பெண் பேசினார் ' என்று யோசித்து கொண்டு இருக்கும் போது, நடத்துநர் பேருந்தை கிளம்ப சொல்ல, இரண்டு விசில் ஊதிவிட்டு, பூங்குன்றனைப் பார்த்து, " அதான் அந்த பாப்பாவே செல்லிடுச்ச்சுல்ல, உட்காருங்க" என்று சொல்லி விட்டு அவர் பயணிகளை எண்ணிக்கை சோதனை செய்தார்.
பூங்குன்றன், குழலி பக்கம் திரும்பி " நன்றி" என்று சொல்லி, குழலி பரவாயில்லை என்பது போல தலையை ஆட்டினாள்.
பூங்குன்றன் இப்போது அடுத்து வரும் நிறுத்தங்களைப் பார்க்காமல், குழலியைவே பார்த்து கொண்டு இருந்தான். ஏனெனில் அவள் இறங்கும் போது, இவனும் இறங்க வேண்டும் என்பதற்காக.!
பேருந்தில் பாடல் மாறியது.

வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா
எனக்கு ஒரு வரம் தருவாயா
என் காதலியை கொண்டு வருவாயா

ஆனால் குழலிக்கு அதை இரசிக்க விருப்பம் இல்லை. பூங்குன்றன் இவளையே பார்த்து கொண்டு இருந்ததால், அவளால் பாடலை இரசிக்க முடியவில்லை. ஆனால் பூங்குன்றன் இப்போது பாடலை இரசித்து கொண்டு இருந்தான்.
கோமதியாள் புரம் நிறுத்தம் வந்ததும் நடத்துநர் விசில் ஊதிவிட்டு, பூங்குன்றனிடம் " தம்பி இதான் நீங்கள் கேட்ட இடம்" பூங்குன்றன் என்றதும், சரி என்று சொல்லி விட்டு,
குழலியைப் பார்க்க, அவள் இறங்காமல் இருக்க, பூங்குன்றன் மீண்டும் நடத்துநரைப் பார்க்க,
நடத்துநர்" இதான் கோமதியாள்புரம், நீ எங்கே போகனும் "என்று கேட்க, பூங்குன்றன் வேகமாக" இங்கே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி" என்று சொல்ல, நடத்துநர்" அது அடுத்த நிறுத்தம் " என்று சொல்லி விட்டு பேருந்தை கிளம்ப இரண்டு விசில் ஊதினார்.
அடுத்த நிறுத்தம் வரும் போது குழலி எழுந்தாள். பூங்குன்றனைப் பார்த்தாள். அவன் பின் பக்க வாசல் வழியாக இறங்குவதற்காக தயாராக நின்று கொண்டு இருந்ததை பார்த்து கொண்டு இருக்கும் போது, பேருந்து நின்றது.
குழலி இறங்கி அவள் வீடு இருக்கும் இடத்தைப் பார்த்து சென்றாள்.
பூங்குன்றன் அங்கே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை பார்த்து சென்றான்.
தொடரும்,
(வாசகர்கள்,
என்னடா, ஏதோ கேலரியில் இருந்து போட்டோவை எடுத்தது போல் சொல்கிறானே என்று சொல்வது எனக்கு கேட்டது.)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.
திருமலை புரம் -
பேருந்து நிலையம்.


புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்து சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று
தினமும் முல்லைச் சரம் கொண்டு சூடினான்


என சிற்றூந்தில் பாடல் ஒலித்ததை ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இரசித்து கொண்டு இருந்த குழலியிடம், ஒரு இளைஞன் பேருந்துக்கு வெளியே இருந்து, " ஹலோ இந்த பேருந்து கோமதியாள் புரம் போகுமா" என்று கேட்க,
குழலி அதைக் கேட்டு விட்டு, ம்ம் என்பது போல தலையை மட்டும் ஆட்டி விட்டு, மீண்டும் பாடலை இரசிக்க ஆரம்பித்தாள். பாடலில் உள்ள வரிகள் போல் இந்த வள்ளியை தேடி வந்த வடிவேலன் அந்த இளைஞன் பூங்குன்றன் தான்.
பூங்குன்றன் பற்றி பார்ப்போம்.
பூங்குன்றன் அவன் ஆசைப்பட்ட மாதிரியே ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை கிடைத்தது.
அதுவும் அவன் விரும்பிய செய்தி சேகரிக்கும் வேலையே அவனுக்கு கிடைத்தது. அந்த நாளிதழின் பெயர்.'கருடப்பார்வை '
ஆனால் அந்த பத்திரிக்கை நிறுவனம் இன்னும் மக்களிடம் நன்கு அறிமுகம் ஆகாமல் உள்ள புதிய நிறுவனம்.
அதில் மற்ற நாளிதழ்களில் வராத செய்திகளை தேடிக் கண்டுபிடித்து அதை தங்கள் நாளிதழில் போட்டு மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்பது நிறுவனரின் விருப்பமும் கொள்கையும்.
அதன் தலைமை அலுவலகம், தென்காசி மாவட்டம்
சங்கரநயினார் புரத்தின் நகர கிழக்கு எல்லை முடியும் உள்ள ஒரு பகுதியில் உள்ள ஒரு சின்ன கட்டிடம் தான். அங்கே ஊழியர்கள் என்று பார்த்தால் நிறுவனரையும் சேர்த்து மொத்தமே 25 பேர் தான். அதில் பூங்குன்றன் அந்த நிறுவனத்தில், நிறுவனரின் இடத்தில் இருந்து, அதற்கு கீழ் நிலையில் உள்ள ஒருவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஊழியர் தான்.
பூங்குன்றனின் பெற்றோர் அவன் மேல் நிலை வகுப்பு படிக்கும் போதே தவறி விட்டார்கள். பூங்குன்றன் உடன் பிறந்த ஒரே ஒருவர், அதுவும் அண்ணன் தான் பூங்குன்றனை மேற்கொண்டு ஒரு இளநிலை பட்டம் பெறும் வரை படிக்க வைத்தார்.
பூங்குன்றன் நாளிதழில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.
அவனின் விருப்பமும் மற்ற நாளிதழ்களில் வராத செய்திகளை தேடிக் கண்டுபிடித்து, அது மக்களுக்கு பயன் படும் படி இருந்தால் அந்த செய்தியை அச்சில் ஏற்ற பரிந்துரை செய்வான். அது மக்களுக்கு பயன் படாது என்று தெரிந்தால் அதை அச்சில் ஏற்ற அனுமதிக்க மாட்டான்.
அதை நிறுவனரும் மறுக்காமல் சரி என்று பூங்குன்றனுக்கு ஆதரவாக செய்வார்.
இப்போதும் ஒரு புதிய செய்தி மற்றும் மற்ற எந்த நாளிதழில் வராத ஒரு செய்தியை அறிந்து அதை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள, கோமதியாள் புரத்திற்கு செல்கிறான்.
கோமதியாள் புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 12 ம் வகுப்பில் அரையிறுதி தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற முடியாமல் போனதை பற்றி யாருக்கும் தெரியாத தகவல், பூங்குன்றனுக்கு மட்டும் கிடைத்தது.
அதனால் அங்கே போய், ஒட்டுமொத்த மாணவர்கள் தேர்ச்சி பெறாததற்கு என்ன காரணம் என்று அறிவதற்கும் அதைப் பற்றி, பத்திரிக்கையில் ஒரு கட்டுரை போடுவதற்காகவும் கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கிறான்.
பேருந்தில் குழலி அமர்ந்து இருந்த இருக்கைக்கு நேர் எதிரே உள்ள இருக்கைக்கு பின்னாடி உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தான் பூங்குன்றன்.
பூங்குன்றன், சிற்றுந்து நடத்துனரிடம், தான் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லி,தனக்கான பயணச்சீட்டை வாங்கி கொண்டு விட்டு நடத்துநரிடம் " அந்த இடம் வந்தால் எனக்கு சொல்லுங்க, நான் இந்த ஊருக்கு புதுசு" என்று சொல்ல, நடத்துனரும் மற்ற பயணிகளுக்கு பயண சீட்டு கொடுக்கும் மும்முரத்திலும் " சரி" என்றார்.
பூங்குன்றன், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்து நிற்கும் போது, அவன் நடத்துநரை திரும்பி திரும்பி பார்ப்பான்.
இதை குழலி கவனித்து கொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிறுத்தம் வரும் போது, பூங்குன்றன் நடத்துநரையும் , அருகில் உள்ளவர்களிடம் ஏதோ கேட்பதையும் வைத்து, குழலி, பூங்குன்றன் இந்த பகுதிக்கு அறிமுகம் இல்லாத புதியவர் என்று புரிந்து கொண்டாள்.
அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் போது, பூங்குன்றன் எழுந்து, நடத்துநரிடம் கேட்கலாம் என்று நினைக்கும் போது, குழலி " நீங்கள் இறங்க வேண்டிய இடம் இன்னும் இரண்டு நிறுத்தங்கள் கழித்து வரும். நானும் அங்கே தான் இறங்கு வேன்"
என்றாள்.
பூங்குன்றன், ' நம்மிடமா இந்த பெண் பேசினார் ' என்று யோசித்து கொண்டு இருக்கும் போது, நடத்துநர் பேருந்தை கிளம்ப சொல்ல, இரண்டு விசில் ஊதிவிட்டு, பூங்குன்றனைப் பார்த்து, " அதான் அந்த பாப்பாவே செல்லிடுச்ச்சுல்ல, உட்காருங்க" என்று சொல்லி விட்டு அவர் பயணிகளை எண்ணிக்கை சோதனை செய்தார்.
பூங்குன்றன், குழலி பக்கம் திரும்பி " நன்றி" என்று சொல்லி, குழலி பரவாயில்லை என்பது போல தலையை ஆட்டினாள்.
பூங்குன்றன் இப்போது அடுத்து வரும் நிறுத்தங்களைப் பார்க்காமல், குழலியைவே பார்த்து கொண்டு இருந்தான். ஏனெனில் அவள் இறங்கும் போது, இவனும் இறங்க வேண்டும் என்பதற்காக.!
பேருந்தில் பாடல் மாறியது.


எனக்கு ஒரு வரம் தருவாயா
என் காதலியை கொண்டு வருவாயா


ஆனால் குழலிக்கு அதை இரசிக்க விருப்பம் இல்லை. பூங்குன்றன் இவளையே பார்த்து கொண்டு இருந்ததால், அவளால் பாடலை இரசிக்க முடியவில்லை. ஆனால் பூங்குன்றன் இப்போது பாடலை இரசித்து கொண்டு இருந்தான்.
கோமதியாள் புரம் நிறுத்தம் வந்ததும் நடத்துநர் விசில் ஊதிவிட்டு, பூங்குன்றனிடம் " தம்பி இதான் நீங்கள் கேட்ட இடம்" பூங்குன்றன் என்றதும், சரி என்று சொல்லி விட்டு,
குழலியைப் பார்க்க, அவள் இறங்காமல் இருக்க, பூங்குன்றன் மீண்டும் நடத்துநரைப் பார்க்க,
நடத்துநர்" இதான் கோமதியாள்புரம், நீ எங்கே போகனும் "என்று கேட்க, பூங்குன்றன் வேகமாக" இங்கே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி" என்று சொல்ல, நடத்துநர்" அது அடுத்த நிறுத்தம் " என்று சொல்லி விட்டு பேருந்தை கிளம்ப இரண்டு விசில் ஊதினார்.
அடுத்த நிறுத்தம் வரும் போது குழலி எழுந்தாள். பூங்குன்றனைப் பார்த்தாள். அவன் பின் பக்க வாசல் வழியாக இறங்குவதற்காக தயாராக நின்று கொண்டு இருந்ததை பார்த்து கொண்டு இருக்கும் போது, பேருந்து நின்றது.
குழலி இறங்கி அவள் வீடு இருக்கும் இடத்தைப் பார்த்து சென்றாள்.
பூங்குன்றன் அங்கே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை பார்த்து சென்றான்.
தொடரும்,