பாட்டியும் பேரனும்
"பாட்டி... தாத்தா எப்பவுமே உங்களுக்குப் பயந்து போய் இருக்காங்க! நீங்க அவருக்கு பயப்படாம இருக்கீங்க எப்படி?"
"அதுவா... உங்க தாத்தா அடிமை இந்தியாவில் பிறந்தவர்! நான் சுதந்திர இந்தியாவில் பிறந்தவள்! அதான்."
- ப. உமாமகேஸ்வரி, நெய்வேலி
பால் பாத்திரத்தில் அடியில் பால் ஒட்டாமலிருக்க பாத்திரத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.
ஊறுகாய் கிளறுவதற்கு மர அகப்பையே நல்லது.
கத்தியை சூடாக்கி, 'பிரெ'ட்டை வெட்டினால், பிசிறு இல்லாமல் வெட்டும்.
- எஸ். பத்மினி, கோவை
தனக்கென்ற வாழ்வு
கடல் அலைகளின் ஆர்ப்பரின் நடுவில் மெல்ல மெல்ல தன் முகத்தைக் காட்டும் ஆதவனின் ஒளிக் கதிர்வீச்சில் பிரகாசிக்கும் ஆழியின் அழகில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? என்று சிறுவயது முதல் தன் வீட்டின் பால்கனியில் நின்று ரசிக்கும் சங்கவி கடலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தீராத...