Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 467
- Thread Author
- #1
வனிச்சூர்:
வேலையை முடித்து எல்லாரும் கலைந்து செல்ல கண்ணன் செல்லதுரை செழியன் மூவரும் ஒரு முறை கரும்பு தோப்பை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த போரிலேயே குளித்தவர்கள் பின்னர் மோட்டாரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
கண்மணியும் கவிதாவும் ஹாலில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க ஷமீராவோ இருவருக்கும் பஜ்ஜி சுட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கவும் அந்த நேரம் இவர்கள் இருவரும் உள்ளே வர என்னடி என் பொண்டாட்டிய வேலை வாங்குறீங்களானு செழியன் கேட்க, யோவ் மாமா உன் வேலையை பாருயா...
என் அக்கா எங்களுக்கு செய்யுது உனக்கு எங்க பத்திக்கிட்டு போகுது என்று கவிதா சொல்ல,இங்க தாண்டி பத்திகிட்டு போகுது என்று தனது நெஞ்சை காட்டி செழியன் சொல்லவும் போய் கடப்பாரையை எடுத்து குத்திக்க சரியாயிடும் என்றாள்.
என்னா வாய் என்றவாறு படியில் ஏறி மேலே போன செழியன் அங்கிருந்து மனைவியை கண்ணசைத்து மாடிக்கு வா என்று சொல்ல அவளோ முடியாது என்று தலையை அசைத்தாள்.
ஒழுங்கா வந்துடுது என்று விரலைக் காட்டி சொல்லிவிட்டு செழியன் மேலே போக,அதா உன் புருஷன் கண்ணாலே கூப்பிடுறாரு போக வேண்டியது தானே என்று கண்மணி சொல்ல, ஏன்டி இப்படி என்று ஷமீரா சிரிக்க நீங்க நடத்துங்க.
உங்க காட்டில் இப்ப மழை பெய்யுது நனைஞ்சு தானே ஆகணும் என்று அவளும் சிரிக்க போடி என்றவாறு கண்மணி முதுகில் ஷமீரா ஒரு அடியை வைத்தாள்.
சரி நான் போய் உங்க மாமாக்கு டீ கொடுத்துட்டு வரேன் என்று சொல்ல, ரொமான்ஸ் பண்ண போறேன்னு சொல்லிட்டு போக்காக என்று கவிதா சிரிக்கவும்,பேச்சை பாரு என்று சிரித்துக் கொண்டே கிச்சனுக்கு போனவள் கணவனுக்கு சூடாக டீயும் பஜ்ஜியும் எடுத்துக்கொண்டு மாடியில் இருக்கும் ரூமிற்குள் போக,செழியனோ கண்ணாடி முன்பு நின்று தலை சீவிக் கொண்டிருந்தான்.
இந்தாங்கள் டீ என்று எட்டி நின்று நீட்ட,ஏன் கிட்ட வந்து கொடுக்க மாட்டீர்களோ என்பவனை பார்த்தவள் உங்களைப் பற்றி தெரிந்ததால தான் இந்த முன்னெச்சரிக்கை என்றாள்.
செல்லம் மாமா பயங்கரமா வேலை செஞ்சுட்டு ரொம்ப டயர்டா வந்துருக்கேன்.சோ இப்போ ரொமான்ஸ்கு பிரேக் விடுறேன்.கிட்ட கொண்டு வந்து குடு டி என்கவும் ஷமீராவும் பாவம் பார்த்து கிட்ட போய் கொடுக்க அங்கிருந்த கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டேவன் நீ என்க நான் காபி குடிச்சிட்டேனென்றாள்.
சரி சரி என்றவன் செல்லம் நாளைக்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வராங்க என்கவும் யாருங்க என்றாள்.ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கிறேனே என்க,யோவ் பேர சொல்லாம மொட்டையா இப்படி சொன்னா என்ன அர்த்தம் என்று ஷமீரா முறைக்க அட ஆமா...
ஏய் நான் சொல்லி இருக்கிறேனே டெல்லியில் வெற்றியும் கபியும் இருக்கிறார்கள்னு.அவங்க ரெண்டு பேரும் பேமிலியோட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க டி என்றான்.
அப்படியா சந்தோஷம் தான்.குழந்தை கூட பிறந்துச்சு பாக்க போனீங்க இல்லையா என்கவும் ஆமா டி.போன வருஷம் பிறந்துச்சு.வெற்றிக்கு மூணு வயசு பையன் இருக்கிறது தான் உனக்கு தெரியுமே என்கவும் ஆமா சொல்லிருக்கீங்க.
சரிங்க வரட்டும் சந்தோஷம் தானே என்கவும் ஆமாடி இரண்டு பேரும் பார்த்தா போலீஸ் ஆபீஸர் போல இருக்காது அவ்வளவு லந்து கொடுப்பார்கள்.இங்க இருக்கிற வரைக்கும் அவங்கள நல்லபடியா கவனிக்கணும் டி என்க,சரிங்க,இதை நீங்க சொல்லணுமா என்றாள்.
பொள்ளாச்சி:
போன் ரிங்டோன் சத்தம் கேட்கவும் கண்மூடி சோபாவில் உட்கார்ந்திருந்த பாயல் டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்துப் பார்க்க,அதில் வசு என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவர் வசு நல்லா இருக்கியா?
என்ன ஆச்சு என்க...அந்த அமர்நாத்தை தூக்கி உள்ள வச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன் என்கவும் கண்டிப்பாக வசு.இத்தனை வருஷம் அவன் ஆடுன வரைக்கும் போதும்.
அவனுக்கு தண்டனை கிடைத்த பிறகு தான் அந்த மண்ணுல நான் கால் வைப்பேன் என்று பாயல் சொல்லவும் கண்டிப்பா டி.இத்தனை வருஷம் எனக்கு தெரியாம போயிடுச்சு.என்ன மன்னிச்சிடுடி.நீ ஊருக்கு போனதும் உன்னை காண்டாக்ட் பண்ண முடியாமல் போயிடுச்சு அதனாலதான் இந்த நிலைமை என்கவும்,விடு வசு.
பாண்டியன் அங்கிள் சொன்ன போல விதியின்னு ஒன்னு இருக்கேடி என்று சொல்லும் போதே பாயலின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.
பணத்தை வைத்து இத்தனை வருஷம் தப்பிச்சிட்டான் இந்த முறை நம்ம புள்ளைங்க அவனை தப்பிக்க விட மாட்டாங்க பாயல்...
நீ சாப்பிட்டு நிம்மதியா இரு புரியுதா என்கவும்,இன்னும் ரெண்டு நாள்ல அந்த சம்பவத்தோடு நினைவு நாள் வருதே...20 வருஷமாக தான் கோமாவில் இருந்துட்டேனே என்று கண்கலங்க,விடு பாயல்...
போனது பற்றி பேசி ஒன்றும் புண்ணியம் இல்லை.ருத்ரன்-ரூபா இருவருக்கும் நீ வேண்டும் டி.தன்ராஜ் கிட்ட தான் நீ உயிரோட இருப்பதை சொல்ல வேண்டாமென்று சொல்லிட்ட,சோ இவர்களை பற்றி யோசி என்றவர் தோழியிடம் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தார்.
ரூமிற்கு போன பாயல் கபோர்டில் இருந்த பேகை திறக்க அதில் பழைய ஆல்பம் ஒன்று இருந்தது.அதை எடுக்கும் போதே கண்கள் கலங்க கண்ணை மூடி கண்ணீரை வெளியேற்றியவர் ஆல்பத்தை திறந்து பார்க்க கடந்த கால நினைவுகள் எல்லாம் பாயலுக்கு வந்து சென்றது.
தனது இரண்டாவது அக்கா ஹீரல் அவர் கணவர் வம்சிகன் புகைப்படத்தை பார்த்து சத்தமின்று கதறி அழுதவர் உங்களோட சாவுக்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேனென்று அந்த ஆல்பத்தை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணை மூட கண்ணில் இருந்து கண்ணீர் ஆராய் பெருக்கெடுத்து ஓடியது.
அப்பொழுது பாயலுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்கவும் கண்ணை திறந்தவர் பெட்டின் மேல் இருந்த போனை எடுத்துப் பார்க்க பேட்டா என்று வரவும் அட்டென்ட் பண்ணியவர் ருத்ரா எப்படிப்பா இருக்கீங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே நல்லா தானே இருக்கீங்க என்று பதறவும்,சாச்சி எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க, நாங்க நல்லா இருக்கிறோம்.
ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக தான் கால் பண்ணினேன் என்கவும் சொல்லு பேட்டா.ரூபா ஜூலி தீபன் நல்லா இருக்காங்களா?
யாருக்கும் ஒன்னும் இல்லையேப்பா என்க ஐயோ சாச்சி இது சந்தோசமான விஷயம்.நீங்க நானியாகிட்டிங்க என்க, நிஜமாவா என்று தனது வேதனையை மறந்து பாயல் சந்தோஷத்தில் கேட்க, ஆமா சாச்சி.
உங்க மருமகள் கன்சிவாக இருக்கிறாள்.அடுத்த வாரம் நானும் தீபனும் மதுரையில் இருக்கும் மெடிக்கல் காலேஜில் ஜாயின் பண்றோம் என்று சொல்ல,அப்படியா ரொம்ப சந்தோஷம் பேட்டா என்றவர் ஜூலி கிட்ட போனை கொடு என்று மகனிடம் சொல்ல ருத்ரனும் தனது மனைவியிடம் ஃபோனை கொடுத்து பேச சொன்னான்.
அவர்களும் பேசிக்கொண்டிருக்க எஸ்தருக்கு அவர் யார் என்று தெரியாததால் அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்ன ரூபா தீபனிடமும் பேசிவிட்டு போனை வைத்தவர் ஹூரல் உன் மருமகள் வயித்துல வந்து பிறக்க போறியா என்று சந்தோஷப்பட்டவர் அம்மா துர்கா தேவி 24 வருஷத்துக்கு முன்னாடி தான் எங்க குடும்பத்தை கைவிட்ட,இனியாவது என் பிள்ளைகளுக்கு துணையாக இருமா என்று வேண்டிக் கொண்டார்.
டெல்லி-ருத்ரன் வீடு:
எஸ்தரின் பார்வையை கண்டு அமைதியாக சிரித்த ருத்ரன், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் இருக்கிறது போல எங்களோட வாழ்க்கையிலையும் ஆறாத கொடுமையான ரகசியம் இருக்குங்கத்தை.
அது சொல்ல வேண்டிய நேரம் வரும்போது நிச்சயமா உங்ககிட்ட நான் சொல்லுவேன் என்கும்போது அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட...
அதை பார்த்த எஸ்தர் ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு என்பதை புரிந்து கொண்டவர் கண்ணா அழாதப்பா உனக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்ப சொல்லு.
அத்தை உன்னை தப்பா நினைக்க மாட்டேன் என்கவும் சரிங்கத்தை என்றவன் மதுரைக்கு போக போறது பற்றி சொல்ல ரூபாவும் ஜூலியும் ஆர்கியுமென்ட் பண்ணியவர்கள் பின்னர் அவர்கள் வேலை விஷயமாக தானே போகிறார்கள் என்று சம்மதித்தனர்.
எஸ்தருக்கு மதுரை என்ற பெயரை கேட்டவுடன் தூக்கிவாரி போட்டது.ஐயோ நாம இவர்களோடு மதுரைக்கு போனால் ஷமீராவுக்கு தெரியுமா என்று யோசித்தவர் வாய்ப்பே இல்லை.அந்த ஊருக்கும் ஷமீரா இருக்கும் ஊருக்கும் தான் ரொம்ப தூரமாச்சே...
மகளுக்கு நாம் வீட்டை விட்டு வந்த விஷயம் தெரியக்கூடாது.புருஷன் கூட சந்தோஷமா வாழட்டும் என்று நினைத்துக் கொண்டவர் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.
வெற்றி-கபிலன் வீடு:
காரை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே வர இருவரின் மனைவிகளான ஆதிராவும் ஜனனியும் அவரவர் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தனர்.
குழந்தைகள் இருவரும் அவர்கள் அப்பாவை பார்த்ததும் தாயின் மடியில் இருந்து இறங்கி ஓடிப்போய் இருவரின் கால்களை கட்டிக் கொண்டனர்.
ரியா-ஜனனி இன்னைக்கு நைட் நம்ம மதுரைக்கு போறோம்.
தேவையானதை பேக்கிங் பண்ணிக்குங்க.பத்து நாள் உங்க கூட தான் இருக்க போறோம் என்று வெற்றி சொல்லவும் ஜனனியோ தனது கணவன் சொல்வதை கேட்டு முறைத்துப் பார்க்க...
வெற்றியோ மனைவியின் பார்வையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன் மாமா உன் கூட தாண்டி இருக்க போறேன் என்க,ரியா மரியதையா உன் அண்ணன் வாயை மூட சொல்லு. இல்லன்னா எனக்கு இருக்கிற கடுப்புக்கு சாப்பாட்டு குண்டானை எடுத்து அந்த ஆள் மண்டையை பொளந்துருவேன் என்றாள்.
அண்ணா உண்மைய சொல்லுங்க எந்த கேஸ் விஷயமாக இப்ப மதுரைக்கு போறீங்க என்று ரியா கேட்க பாத்தியா டா என் பொண்டாட்டி எப்படி பாயிண்ட் புடிக்கிறாள்..
டாக்டருக்கு படிக்க வேண்டிய ஆளே இல்லடா வக்கீலுக்கு படிச்சிருக்க வேண்டியவள்.தப்பி தவறி பாரின்ல போய் மெடிசின் படிச்சிட்டாளென்று கபிலன் பெருமையாக சொல்ல...
தூ என்று துப்பிய ரியா நீ போட்ட சோப் போதும் மாமா.மூடிக்கிட்டு வேலைய பாரு என்கவும் அடிப்பாவி என்னடி மாமாவை இப்படி அசிங்கப்படுத்துற என்று கபிலன் பதற...
உன்னையெல்லாம் கட்டையால் சாத்தனும் வாயால பேசுறேனே அதுவரைக்கும் சந்தோஷப்படுயா.
ஒவ்வொரு வாட்டியும் உன் கேஸ் விஷயமா தான் போக பிளான் பண்ற. கடைசி நேரத்தில் நீங்கள் இரண்டு பேரும் எஸ்ஸாகிடுறிங்க.இந்த முறையும் அதே பிளான்தானே என்கவும் ஐயோ செல்லம் அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது டி இதோ டிக்கெட் என்று காட்டினான்.
வேலையை முடித்து எல்லாரும் கலைந்து செல்ல கண்ணன் செல்லதுரை செழியன் மூவரும் ஒரு முறை கரும்பு தோப்பை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த போரிலேயே குளித்தவர்கள் பின்னர் மோட்டாரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
கண்மணியும் கவிதாவும் ஹாலில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க ஷமீராவோ இருவருக்கும் பஜ்ஜி சுட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கவும் அந்த நேரம் இவர்கள் இருவரும் உள்ளே வர என்னடி என் பொண்டாட்டிய வேலை வாங்குறீங்களானு செழியன் கேட்க, யோவ் மாமா உன் வேலையை பாருயா...
என் அக்கா எங்களுக்கு செய்யுது உனக்கு எங்க பத்திக்கிட்டு போகுது என்று கவிதா சொல்ல,இங்க தாண்டி பத்திகிட்டு போகுது என்று தனது நெஞ்சை காட்டி செழியன் சொல்லவும் போய் கடப்பாரையை எடுத்து குத்திக்க சரியாயிடும் என்றாள்.
என்னா வாய் என்றவாறு படியில் ஏறி மேலே போன செழியன் அங்கிருந்து மனைவியை கண்ணசைத்து மாடிக்கு வா என்று சொல்ல அவளோ முடியாது என்று தலையை அசைத்தாள்.
ஒழுங்கா வந்துடுது என்று விரலைக் காட்டி சொல்லிவிட்டு செழியன் மேலே போக,அதா உன் புருஷன் கண்ணாலே கூப்பிடுறாரு போக வேண்டியது தானே என்று கண்மணி சொல்ல, ஏன்டி இப்படி என்று ஷமீரா சிரிக்க நீங்க நடத்துங்க.
உங்க காட்டில் இப்ப மழை பெய்யுது நனைஞ்சு தானே ஆகணும் என்று அவளும் சிரிக்க போடி என்றவாறு கண்மணி முதுகில் ஷமீரா ஒரு அடியை வைத்தாள்.
சரி நான் போய் உங்க மாமாக்கு டீ கொடுத்துட்டு வரேன் என்று சொல்ல, ரொமான்ஸ் பண்ண போறேன்னு சொல்லிட்டு போக்காக என்று கவிதா சிரிக்கவும்,பேச்சை பாரு என்று சிரித்துக் கொண்டே கிச்சனுக்கு போனவள் கணவனுக்கு சூடாக டீயும் பஜ்ஜியும் எடுத்துக்கொண்டு மாடியில் இருக்கும் ரூமிற்குள் போக,செழியனோ கண்ணாடி முன்பு நின்று தலை சீவிக் கொண்டிருந்தான்.
இந்தாங்கள் டீ என்று எட்டி நின்று நீட்ட,ஏன் கிட்ட வந்து கொடுக்க மாட்டீர்களோ என்பவனை பார்த்தவள் உங்களைப் பற்றி தெரிந்ததால தான் இந்த முன்னெச்சரிக்கை என்றாள்.
செல்லம் மாமா பயங்கரமா வேலை செஞ்சுட்டு ரொம்ப டயர்டா வந்துருக்கேன்.சோ இப்போ ரொமான்ஸ்கு பிரேக் விடுறேன்.கிட்ட கொண்டு வந்து குடு டி என்கவும் ஷமீராவும் பாவம் பார்த்து கிட்ட போய் கொடுக்க அங்கிருந்த கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டேவன் நீ என்க நான் காபி குடிச்சிட்டேனென்றாள்.
சரி சரி என்றவன் செல்லம் நாளைக்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வராங்க என்கவும் யாருங்க என்றாள்.ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கிறேனே என்க,யோவ் பேர சொல்லாம மொட்டையா இப்படி சொன்னா என்ன அர்த்தம் என்று ஷமீரா முறைக்க அட ஆமா...
ஏய் நான் சொல்லி இருக்கிறேனே டெல்லியில் வெற்றியும் கபியும் இருக்கிறார்கள்னு.அவங்க ரெண்டு பேரும் பேமிலியோட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க டி என்றான்.
அப்படியா சந்தோஷம் தான்.குழந்தை கூட பிறந்துச்சு பாக்க போனீங்க இல்லையா என்கவும் ஆமா டி.போன வருஷம் பிறந்துச்சு.வெற்றிக்கு மூணு வயசு பையன் இருக்கிறது தான் உனக்கு தெரியுமே என்கவும் ஆமா சொல்லிருக்கீங்க.
சரிங்க வரட்டும் சந்தோஷம் தானே என்கவும் ஆமாடி இரண்டு பேரும் பார்த்தா போலீஸ் ஆபீஸர் போல இருக்காது அவ்வளவு லந்து கொடுப்பார்கள்.இங்க இருக்கிற வரைக்கும் அவங்கள நல்லபடியா கவனிக்கணும் டி என்க,சரிங்க,இதை நீங்க சொல்லணுமா என்றாள்.
பொள்ளாச்சி:
போன் ரிங்டோன் சத்தம் கேட்கவும் கண்மூடி சோபாவில் உட்கார்ந்திருந்த பாயல் டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்துப் பார்க்க,அதில் வசு என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவர் வசு நல்லா இருக்கியா?
என்ன ஆச்சு என்க...அந்த அமர்நாத்தை தூக்கி உள்ள வச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன் என்கவும் கண்டிப்பாக வசு.இத்தனை வருஷம் அவன் ஆடுன வரைக்கும் போதும்.
அவனுக்கு தண்டனை கிடைத்த பிறகு தான் அந்த மண்ணுல நான் கால் வைப்பேன் என்று பாயல் சொல்லவும் கண்டிப்பா டி.இத்தனை வருஷம் எனக்கு தெரியாம போயிடுச்சு.என்ன மன்னிச்சிடுடி.நீ ஊருக்கு போனதும் உன்னை காண்டாக்ட் பண்ண முடியாமல் போயிடுச்சு அதனாலதான் இந்த நிலைமை என்கவும்,விடு வசு.
பாண்டியன் அங்கிள் சொன்ன போல விதியின்னு ஒன்னு இருக்கேடி என்று சொல்லும் போதே பாயலின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.
பணத்தை வைத்து இத்தனை வருஷம் தப்பிச்சிட்டான் இந்த முறை நம்ம புள்ளைங்க அவனை தப்பிக்க விட மாட்டாங்க பாயல்...
நீ சாப்பிட்டு நிம்மதியா இரு புரியுதா என்கவும்,இன்னும் ரெண்டு நாள்ல அந்த சம்பவத்தோடு நினைவு நாள் வருதே...20 வருஷமாக தான் கோமாவில் இருந்துட்டேனே என்று கண்கலங்க,விடு பாயல்...
போனது பற்றி பேசி ஒன்றும் புண்ணியம் இல்லை.ருத்ரன்-ரூபா இருவருக்கும் நீ வேண்டும் டி.தன்ராஜ் கிட்ட தான் நீ உயிரோட இருப்பதை சொல்ல வேண்டாமென்று சொல்லிட்ட,சோ இவர்களை பற்றி யோசி என்றவர் தோழியிடம் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தார்.
ரூமிற்கு போன பாயல் கபோர்டில் இருந்த பேகை திறக்க அதில் பழைய ஆல்பம் ஒன்று இருந்தது.அதை எடுக்கும் போதே கண்கள் கலங்க கண்ணை மூடி கண்ணீரை வெளியேற்றியவர் ஆல்பத்தை திறந்து பார்க்க கடந்த கால நினைவுகள் எல்லாம் பாயலுக்கு வந்து சென்றது.
தனது இரண்டாவது அக்கா ஹீரல் அவர் கணவர் வம்சிகன் புகைப்படத்தை பார்த்து சத்தமின்று கதறி அழுதவர் உங்களோட சாவுக்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேனென்று அந்த ஆல்பத்தை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணை மூட கண்ணில் இருந்து கண்ணீர் ஆராய் பெருக்கெடுத்து ஓடியது.
அப்பொழுது பாயலுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்கவும் கண்ணை திறந்தவர் பெட்டின் மேல் இருந்த போனை எடுத்துப் பார்க்க பேட்டா என்று வரவும் அட்டென்ட் பண்ணியவர் ருத்ரா எப்படிப்பா இருக்கீங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே நல்லா தானே இருக்கீங்க என்று பதறவும்,சாச்சி எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க, நாங்க நல்லா இருக்கிறோம்.
ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக தான் கால் பண்ணினேன் என்கவும் சொல்லு பேட்டா.ரூபா ஜூலி தீபன் நல்லா இருக்காங்களா?
யாருக்கும் ஒன்னும் இல்லையேப்பா என்க ஐயோ சாச்சி இது சந்தோசமான விஷயம்.நீங்க நானியாகிட்டிங்க என்க, நிஜமாவா என்று தனது வேதனையை மறந்து பாயல் சந்தோஷத்தில் கேட்க, ஆமா சாச்சி.
உங்க மருமகள் கன்சிவாக இருக்கிறாள்.அடுத்த வாரம் நானும் தீபனும் மதுரையில் இருக்கும் மெடிக்கல் காலேஜில் ஜாயின் பண்றோம் என்று சொல்ல,அப்படியா ரொம்ப சந்தோஷம் பேட்டா என்றவர் ஜூலி கிட்ட போனை கொடு என்று மகனிடம் சொல்ல ருத்ரனும் தனது மனைவியிடம் ஃபோனை கொடுத்து பேச சொன்னான்.
அவர்களும் பேசிக்கொண்டிருக்க எஸ்தருக்கு அவர் யார் என்று தெரியாததால் அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்ன ரூபா தீபனிடமும் பேசிவிட்டு போனை வைத்தவர் ஹூரல் உன் மருமகள் வயித்துல வந்து பிறக்க போறியா என்று சந்தோஷப்பட்டவர் அம்மா துர்கா தேவி 24 வருஷத்துக்கு முன்னாடி தான் எங்க குடும்பத்தை கைவிட்ட,இனியாவது என் பிள்ளைகளுக்கு துணையாக இருமா என்று வேண்டிக் கொண்டார்.
டெல்லி-ருத்ரன் வீடு:
எஸ்தரின் பார்வையை கண்டு அமைதியாக சிரித்த ருத்ரன், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் இருக்கிறது போல எங்களோட வாழ்க்கையிலையும் ஆறாத கொடுமையான ரகசியம் இருக்குங்கத்தை.
அது சொல்ல வேண்டிய நேரம் வரும்போது நிச்சயமா உங்ககிட்ட நான் சொல்லுவேன் என்கும்போது அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட...
அதை பார்த்த எஸ்தர் ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு என்பதை புரிந்து கொண்டவர் கண்ணா அழாதப்பா உனக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்ப சொல்லு.
அத்தை உன்னை தப்பா நினைக்க மாட்டேன் என்கவும் சரிங்கத்தை என்றவன் மதுரைக்கு போக போறது பற்றி சொல்ல ரூபாவும் ஜூலியும் ஆர்கியுமென்ட் பண்ணியவர்கள் பின்னர் அவர்கள் வேலை விஷயமாக தானே போகிறார்கள் என்று சம்மதித்தனர்.
எஸ்தருக்கு மதுரை என்ற பெயரை கேட்டவுடன் தூக்கிவாரி போட்டது.ஐயோ நாம இவர்களோடு மதுரைக்கு போனால் ஷமீராவுக்கு தெரியுமா என்று யோசித்தவர் வாய்ப்பே இல்லை.அந்த ஊருக்கும் ஷமீரா இருக்கும் ஊருக்கும் தான் ரொம்ப தூரமாச்சே...
மகளுக்கு நாம் வீட்டை விட்டு வந்த விஷயம் தெரியக்கூடாது.புருஷன் கூட சந்தோஷமா வாழட்டும் என்று நினைத்துக் கொண்டவர் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.
வெற்றி-கபிலன் வீடு:
காரை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே வர இருவரின் மனைவிகளான ஆதிராவும் ஜனனியும் அவரவர் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தனர்.
குழந்தைகள் இருவரும் அவர்கள் அப்பாவை பார்த்ததும் தாயின் மடியில் இருந்து இறங்கி ஓடிப்போய் இருவரின் கால்களை கட்டிக் கொண்டனர்.
ரியா-ஜனனி இன்னைக்கு நைட் நம்ம மதுரைக்கு போறோம்.
தேவையானதை பேக்கிங் பண்ணிக்குங்க.பத்து நாள் உங்க கூட தான் இருக்க போறோம் என்று வெற்றி சொல்லவும் ஜனனியோ தனது கணவன் சொல்வதை கேட்டு முறைத்துப் பார்க்க...
வெற்றியோ மனைவியின் பார்வையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன் மாமா உன் கூட தாண்டி இருக்க போறேன் என்க,ரியா மரியதையா உன் அண்ணன் வாயை மூட சொல்லு. இல்லன்னா எனக்கு இருக்கிற கடுப்புக்கு சாப்பாட்டு குண்டானை எடுத்து அந்த ஆள் மண்டையை பொளந்துருவேன் என்றாள்.
அண்ணா உண்மைய சொல்லுங்க எந்த கேஸ் விஷயமாக இப்ப மதுரைக்கு போறீங்க என்று ரியா கேட்க பாத்தியா டா என் பொண்டாட்டி எப்படி பாயிண்ட் புடிக்கிறாள்..
டாக்டருக்கு படிக்க வேண்டிய ஆளே இல்லடா வக்கீலுக்கு படிச்சிருக்க வேண்டியவள்.தப்பி தவறி பாரின்ல போய் மெடிசின் படிச்சிட்டாளென்று கபிலன் பெருமையாக சொல்ல...
தூ என்று துப்பிய ரியா நீ போட்ட சோப் போதும் மாமா.மூடிக்கிட்டு வேலைய பாரு என்கவும் அடிப்பாவி என்னடி மாமாவை இப்படி அசிங்கப்படுத்துற என்று கபிலன் பதற...
உன்னையெல்லாம் கட்டையால் சாத்தனும் வாயால பேசுறேனே அதுவரைக்கும் சந்தோஷப்படுயா.
ஒவ்வொரு வாட்டியும் உன் கேஸ் விஷயமா தான் போக பிளான் பண்ற. கடைசி நேரத்தில் நீங்கள் இரண்டு பேரும் எஸ்ஸாகிடுறிங்க.இந்த முறையும் அதே பிளான்தானே என்கவும் ஐயோ செல்லம் அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது டி இதோ டிக்கெட் என்று காட்டினான்.