• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
தீமையே 🔱வெ[கொ]ல்லும்

படலம் - 2(2)

கதிர் வேலன் கோவமாக தன் வீட்டில் இருந்து வெளியேறியதும்,' இந்த கோவக்கார பயலுக்கு முதல்ல ஓரு கால் கட்டு போடணும்' என்றார் சித்ரா தேவி @ தேவி பாட்டி.

'மூத்தவன் வெங்கட் இருக்கும் போது இளையவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணுறது' என்று கதிரின் சின்ன மாமா ஆறுமுகம் கேட்க...தன் மூத்த மகன் விநாயகத்தை பாவமாக பார்த்தார் தேவி பாட்டி.

'என் பையனுக்கு மட்டும் எல்லாம் நல்லதா நடந்து இருந்தா... அவனும் இந்நேரம் பிள்ளை குட்டியோட சந்தோசமா வாழ்ந்து இருப்பான்' என்று தேவி பாட்டி கண்கள் கலங்க,

'சித்து...சித்து சாப்பிட்டியா' என்று அவர் சுவற்றில் வரைந்து வைத்து இருக்கும் சிறுமியின் ஓவியத்தை பார்த்து பேசிக்கொண்டு இருந்தார் கதிரின் பெரிய மாமா விநாயகம்.

'ஏன் டா ஆறுமுகம்... பேசாம உன் அண்ணனை நாட்டு மருந்து சாப்பிட அழைச்சிட்டு போகலாமா' என்று தேவி பாட்டி தன் இளைய மகனை கேட்க,

'அம்மா... நாங்களே கைக்கு வர வேண்டிய இடம் வேற யாருக்கோ போயிடுது என்ற கோவத்துல உக்காந்து இருக்கோம்..நீ அது புரியாம பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற கதையை பேசிக்கிட்டு இருக்க' என்று கதிரின் அம்மா பரமேஸ்வரி தன் அன்னையை கடிந்துகொண்டாள்.

'ஏம்மா கோவப்படுற... கிட்டத்தட்ட 20 வருஷமா அந்த வீனா போன டாக்டர் கொடுத்த மருந்தை தானே விநாயகத்துக்கு கொடுத்துகிட்டு இருக்கோம்.ஆனா பாரு இவனுக்கு ஒரு சதவீதம் கூட குணமாகவே இல்லையே' என்று தேவி பாட்டி கவலைக்கொண்டார்.

தன் தாயின் தவிப்பை ஆறுமுகம் உணர்ந்து இருக்க...'ஆமா... இப்போ இவரு குணமாகி மட்டும் நாளைக்கு படம் நடிச்சி நாளைய மறுநாள் தலைவராக போறாரு பாரு... போ மா... போய் வேற எதாவது வேலை இருந்தா பாரு' என்று கதிரின் பெரியம்மா சாமுண்டிஸ்வரி ஏளனமாக பேசினாள்.

'ஏதோ மா... பெத்த வயிறு பத்தி எரியுது. அந்த ஆதங்கத்துல தான் கேட்டேன். சரி சரி நீங்க கோவபடாதீங்க' என்ற தேவி பாட்டி விநாயகம் இருக்கும் அறையை எட்டி பார்த்து கண்கள் கலங்கியவாரு அங்கிருந்து சென்று இருந்தார்.

தன் அண்ணனின் அவல நிலையை பார்த்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் ஆறுமுகம் தன் அறைக்கு செல்ல... அங்கே அவரின் மனைவி வள்ளி கோவிலுக்கு தயாராகிக்கொண்டு இருந்தார்.

தன் கணவனின் வாடிய முகத்தை பார்த்த வள்ளி,' என்னாச்சுங்க... மறுபடியும் உங்க தங்கச்சிங்க உங்கள எதாவது சொன்னாங்களா' என்று கேட்டாள்.

'அவங்க பேசுறது எல்லாம் பெரிய விஷயமா... அதெல்லாம் இல்ல வள்ளி. ஆனா அண்ணன் பாவம் வள்ளி' என்று ஆறுமுகம் கண்கள் கலங்க.'ஆமா...உங்க அண்ணன் பாவம் உங்க தங்கச்சிங்களை மட்டும் இல்ல... என் அண்ணன்களை கூட சும்மா விடாது' என்றாள் வள்ளி.

'என் அண்ணனை குணப்படுத்த நான் எதாவது பண்ணனும்னு தோணுது. ஆனா என்ன பண்றதுனே தெரியல' என்று ஆறுமுகம் புலம்ப...'20வருஷம் கடந்து இப்போவாது உங்களுக்கு ஒரு நல்லது தோன்றி இருக்கே.. ம் சந்தோசம் தான்' என்றாள் வள்ளி.

'ஆனா எப்படி அண்ணனுக்கு உதவ முடியும்' என்ற ஆறுமுகம் யோசனையில் முழுகி இருக்க...'அது தெரியாம தானே நானும் 20 வருஷமா இந்த கொடுமையை எல்லாம் பார்த்துகிட்டு இருக்கேன்' என்றாள் வள்ளி.

'இல்ல வள்ளி... இனி அப்படி இருக்க கூடாது. நம்ம பக்கத்துல இருந்து அண்ணனை குணப்டுத்த என்ன பண்ணுமோ அதை பண்ணியே ஆகணும்' என்ற ஆறுமுகம் தீர்க்கமான முடிவுடன் தன் அறையில் இருந்து வெளியேறியவனை ஆச்சிராயமாக பார்த்தாள் வள்ளி.

✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம் இதே நேரம்.
சென்னை தாம்பரம் பகுதியில் வாழ்ந்து வரும் முருகனின் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை பற்றி பார்ப்போம்.

வெளிநாட்டு நிறுவனமான VCR கம்பெனியில் வேலை பார்க்கும் முருகனின் மனைவி பார்வதி இன்று மருத்துவமனை வளாகத்தில் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள்.

“அம்மா… அழாதீங்க. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது,” என்று மெதுவாக பார்வதியின் தோளைத் தழுவி ஆறுதலிட்டான் கந்தன். பதினைந்து வயதுதான், ஆனாலும் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் பெரியவர்களின் தைரியம் இருக்கும் அவனுக்கு.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா கந்தா… உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது தானே?”
என்ற பார்வதியின் குரல் அதிர்ந்து, கண்கள் ஈரமாயின.

“அப்பாவுக்கு எதுவுமே ஆகாது. அதான் அண்ணனும் அக்காவும் டாக்டரைப் பார்க்கப் போயிருக்காங்களே…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, மருத்துவரின் அறை கதவு திறந்தது.

தூரத்தில் இருந்து கந்தனின் அண்ணன் வெற்றி மாறன் வெளியே வருவதைக் கண்டதும்,
“அம்மா… அதோ அண்ணன் வரார்!” எனக் கந்தன் வேகமாக ஓடி சென்றான்.

“அண்ணா! டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டவுடன்,
“அப்பாவை இன்னைக்கே வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போகலாம்னு சொன்னார்,” என்ற மாறன் சிரிப்பதைப் போல முயற்சித்தான்.

ஆனால் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை,லேசான கவலையின் நிழல் மட்டும் தான் இருந்தது.

'உண்மையா அண்ணா... அப்பாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா' என்று கந்தன் கேட்க, மாறனின் பின்னால் மெதுவாக வெளியே வந்தாள் ரத்தின முல்லை.

முல்லையின் கண்களில் கலக்கம் தெளிவாய் தெரிந்த நிலையில்...
பார்வதி உடனே ஓடி வந்து
“முல்லை … என்னம்மா? டாக்டர் என்ன சொன்னார்?” என்றாள்.

ரத்தின முல்லை ஒரு நொடிக்கு சொற்களைத் தேடியவள்.
“அப்பாவுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்ல அம்மா … ஆனா…” என்று சொல்லி நிறுத்தினாள்.

“ஆனா என்ன? சொல்லு மா என்னாச்சு … என் இதயம் நிக்கற மாதிரி இருக்கு…” என்று பார்வதி அவள் கையைப் பற்றினாள்.

ஆழ்ந்த மூச்சை விட்டபடி முல்லை தொடர்ந்தவள்,
“அப்பாவுக்கு வாதப்பிடிப்பு அதிகமா இருக்கு. வேலைக்குப் போகக்கூடாதாம். இரண்டு மூணு வாரம் நல்லா ஓய்வு எடுத்தா சரியாகிடும். இப்போ இதற்கு மேல எதுவும் கவலைப்பட வேண்டாம்.”என்றாள் முல்லை.

அந்தச் சொல்லைக் கேட்டு பார்வதியின் கண்களில் இருந்த பயம் மெதுவாக கரைய,
கந்தன் நிம்மதியாக சிரிக்க..
“அதான் சொன்னேனே அம்மா! அப்பாவுக்கு ஒன்றுமே ஆகாது.” என்றாள் முல்லை.

“அம்மா, நீங்கதான் ரொம்ப பயப்படுறீங்க…” என்ற மாறனின் கையை பிடித்து..
“உன் அப்பாவுக்கு காலையில சட்டுன்னு நெஞ்சு வலி வந்ததும் நீயும் உன் தங்கச்சியும் கூட தான் பயந்து போயிட்டிங்க. நான் என் பயத்தை வெளிப்படுத்திட்டேன்,நீங்க உளுக்குள்ள வச்சிக்கிட்டீங்க” என்று அழுகையும் சிரிப்பும் கலந்த குரலில் சொன்னாள் பார்வதி.

பார்வதியின் வார்த்தையைக் கேட்டு மூவரும் சிரிக்க...
அந்த சிரிப்பில் நிம்மதி இருந்தாலும், ரத்தின முல்லையின் நெஞ்சுக்குள் அமைதியான ஒரு கசப்பு இருக்க தான் செய்தது.

“நாம அப்பாவை அழைச்சிட்டு வீட்டுக்கு போகலாமா அம்மா?” என கந்தன் கேட்க,
“போகலாம்டா … நம்ம முதல்ல வீட்டுக்கு போய் அப்பாவை கவனிக்க வீட்டில எல்லாத்தையும் சரி பணணும்,” என்ற பார்வதி கண்ணீரை துடைத்துக்கொண்டாள்

இப்போதைக்கு தன் அம்மாவுக்கு எந்த உண்மையும் தெரிய வேண்டாம் என்று எண்ணிய மாறன்...'அம்மா... நீங்க கந்தனை அழைச்சிட்டு ஷேர் ஆட்டோல போயிடுங்க. நானும் பாப்பாவும் அப்பாவை ஆட்டோல அழைச்சிட்டு வரோம்' என்றான்.

'சரி பா... நாங்க முன்னாடி கிளம்புறோம்... நீங்க ஜாக்கிரதையா வாங்க' என்ற பார்வதி கந்தனை அழைத்துக்கொண்டு மருத்துவ மனையில் இருந்து வெளியேறினார்.

பார்வதியும் கந்தனும் செல்லும் வரை தன் கண்ணீரை இழுத்து பிடித்து இருந்த முல்லை, அவர்கள் சென்றதும் வெடித்து அழுதவள்,'அண்ணா... அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது தானே' என்று அழ ஆரம்பித்து இருந்தாள்.

தன் தங்கையின் கண்ணீரை பார்த்து மாறனின் விழிகளும் ஈரமாகி போக..
'அதான் டாக்டர் ஆப்ரேஷன் பண்ண time கொடுத்து இருக்காரே மா... நம்ம அதுக்குள்ள அப்பாவை காப்பாத்திடலாம்' என்றான் .

'ஆனா... அவ்ளோ பணத்துக்கு நம்ம எங்க போவோம்' என்று முல்லை கேட்க...
'அதெல்லாம் இப்போ பேச வேண்டாம் பாப்பா... முதல்ல அப்பாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.' என்ற மாறனுக்கும் பணத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்ற கவலை இருக்க தான் செய்தது.

'அது இல்ல அண்ணா... சாதாரண ஆப்பரேஷனா கூட பரவாயில்ல... இது என்னமோ வெளிநாட்டுக்கு எல்லாம் போய் அப்பாவுக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல... எனக்கு ரொம்ப பயமா இருக்கு' என்ற முல்லை மேலும் கண்கள் கலங்கினாள்.

'நீ அழாத பாப்பா.. அம்மாவுக்கு தெரிஞ்சா அப்புறம் நம்ம அவங்களையும் சேர்த்து சமாளிக்கணும். நீ முதல்ல கண்ணை தொட... சரி வா அப்பாவை போய் பார்க்கலாம்' என்ற வெற்றி மாறன் சிகிச்சை அறைக்குள் இருக்கும் முருகனை பார்க்க முல்லையை அழைத்து சென்றான்.

முருகன் கட்டிலில் படுத்து இருக்க.. அவரின் நிலையை பார்த்து கண்கள் கலங்கிய முல்லை...' அப்பா...' என்று அழைத்தபடி ஓடிப்போய் முருகனை கட்டி அணைத்துக் கொண்டாள்.

'முல்ல... என்னமா!! என்னாச்சு... ஏன் இப்படி அழற... அப்பாவுக்கு ஒன்னுமில்ல டா' என்று முருகன் முல்லைக்கு தைரியம் கொடுக்க...
'பாப்பா... சொல்றேன் தானே... அழாத மா' என்றான் மாறன்.
 
Last edited:
Joined
Feb 6, 2025
Messages
111

'அப்பா உங்களுக்கு ஒன்னுமில்ல அப்பா... நீங்க நல்லா தான் இருக்கீங்க' என்று மேலும் முல்லை கண்கள் கலங்க,'ஆமா மா எனக்கு ஒண்ணுமில்ல டா நான் நல்லா தான் இருக்கேன்' என்றார் முருகன்.

'அப்பா... வாங்க நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்' என்று மாறன் தன் தந்தையை அழைக்க...'டாக்டர் என்ன சொன்னாரு மாறா' என கேட்டார் முருகன்.

'ஏன் அப்பா.. உங்க உடம்புல இவ்ளோ பிரச்சனையை வச்சிக்கிட்டு ஏன் எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல' என்ற மாறனின் வார்த்தையில் முருகனின் முகம் அதிர்ச்சி அடைந்தது.

'மாறா.. உன் அம்மா எங்க... அவளுக்கு என்னோட பிரச்சனை தெரியாது தானே' என்று முருகன் பயம் கொள்ள...'அம்மாவும் தம்பியும் வீட்டுக்கு போயிட்டாங்க' என்றாள்
முல்லை.

'நல்ல வேளை... உன் அம்மாவுக்கு மட்டும் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குறது தெரிஞ்சா அவ உயிரையே விட்டுடுவா' என்ற முருகனை மாறன் முறைத்து பார்க்க...
'அப்பா... ஏன் இப்படி காலமெல்லாம் எங்களுக்காக ஓடி ஓடி உங்க உடம்ப கெடுத்து வச்சிருக்கீங்க' என்று கேட்டாள் முல்லை.

'நான் ஓடாம என் பிள்ளைங்களை யார் பார்த்துப்பாங்க. ஏதோ நான் நல்ல இடத்துல வேலை பாக்குறதால உன் அண்ணனை வக்கீளுக்கும்,உன்னை டாக்டர்க்கும் படிக்க வைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டா போதும். கந்தனை போலீஸ் ஆக்கி பார்த்துடுவேன்.' என்றார் முருகன்.

'போதும் அப்பா... உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒரு வாழ்கை இருக்கே... அப்போ அந்த வாழ்க்கையை நீங்க வாழவே வேண்டாமா' என்று மாறன் கேட்க...

'அதுக்கென்னப்பா... இதோ நீ தலை தூக்கியதும் உன் தங்கச்சி தம்பியை பார்த்துப்ப... அப்புறமா நாங்க எங்க வாழ்க்கையை பார்த்துக்க வேண்டியது தான்' என்றார் முருகன்.

'அப்பா... முதல்ல நம்ம வீட்டுக்கு போகலாம். இனி நீங்க வேலைக்கு போக வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்' என்று மாறன் சொல்ல...
'ஐயோ இல்ல மாறா... நான் இல்லைனா பெரியபாப்பா கை ஓடைஞ்ச மாதிரி ஆகிடும். நான் நாளைக்கே மலேசியாக்கு போகணும்' என்றார் முருகன்.

'அப்பா... இனிமே அண்ணன் சொல்ற மாதிரி கேளுங்க.வாங்க முதல்ல வீட்டுக்கு போகலாம்' என்ற முல்லை முருகனை அழைத்துக்கொண்டு இளமாறனுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினாள்.

முருகனின் வயது 55.
இவரது மனைவி பார்வதி.
கணவனின் வார்த்தை தான் வேதவாக்கு என்று வாழும் பெண்மணி.

இவருக்கு வெற்றிமாறன், ரத்தினமுல்லை, கந்தன் என்று மூன்று பிள்ளைகள் இருக்க,
முருகன் இன்று வரை வெளிநாட்டில் ஓட்டுனராக வேலை செய்து தான் தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

வருடத்திற்கு மூன்று முறையாவது தன் குடும்பத்தை பார்த்திட வேண்டும் என்ற ஆசையில் இந்த முறை முருகன் ஊருக்கு வந்து இருக்க... வந்த இடத்தில் அவருக்கு தீராத நெஞ்சு வலி ஏற்பட்டு அவரின் பிள்ளைகள் அவரை மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.

வெளிநாட்டில் வேலை செய்யும் முருகன் தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியதால் அவர்களை விடுதியில் சேர்த்து அவர்கள் படிப்பில் முதன்மையாக வர என்ன தேவையோ அதை இந்த நொடி வரை அளவுக்கு அதிகமாக செய்து வந்தார்.

ஓரளவு பிள்ளைகள் படிப்பை முடிக்க...மூன்று பேரும் மீண்டும் தங்கள் வீட்டுக்கே திரும்பி இருந்தவர்கள். இனி வீட்டில் இருந்து படிப்பை தொடர முடிவு செய்து இருந்த நிலையில் தான் முருகனுக்கு இப்படியொரு உடல் உபாதை வந்து சேர்ந்தது.

முருகன் இப்படி ஒரு நிலைமையில் இருக்க...தங்களால் அப்பாவை எப்படி காப்பாற்ற முடியும் என்ற பயத்தில் வெற்றிமாறன் மற்றும் ரத்தின முல்லை ஆகிய இருவரும் தவித்து போனார்கள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம்...தங்கள் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய இடத்தை எப்படி வேறொருவரிடம் செட்டியார் விற்று பணம் பார்த்தார் என்ற கோவத்தில் கதிர் நேராக செட்டியாரின் வீட்டுக்குள் நுழைந்தவன் அங்கே மரியாதை இல்லாமல் அனைவரையும் ஒருமையில் பேசிக்கொண்டு இருந்தான்.

கதிரின் தற்குறி தனமான வாய் சவடாலை கேட்டு...'ஹே.. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்' என்ற பெண்ணின் குரல் கேட்கும் திசையை கதிர் திரும்பி பார்க்க... அங்கே கர்வத்துடன் அமர்ந்து இருந்தாள் CR.

'Hey who are you?' என்று இன்னோரு பெண்ணின் குரல் கேட்க,'தம்பி... என்னப்பா பிரச்சனை' என்று கேட்டார் செட்டியார்.

கதிரின் எதிரே CR கம்பிரமாக இருக்கையில் அமர்ந்து இருக்க... அவள் பின்னே நின்று இருந்த பெண் தான் PA ஈஷா.

'யோவ் கிழவா...உனக்கு என்ன தில் இருந்தா எங்களுக்கு வர வேண்டிய இடத்தை ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு பொம்பளைங்ககிட்ட வித்து பணம் பார்த்து இருப்ப' என்று கதிர் செட்டியாரை மரியாதை இல்லாமல் பேசினான்.

கதிரின் வார்த்தைகளில் PA ஈஷாவின் முகம் மாறி,'ஹேய்...' என்று அவள் கோவம் படும் முன்னே, தன் கையை நீட்டி PA வை அதே இடத்தில் நிறுத்தினாள் CR.

'இல்ல மேடம்... அந்த ஆளு இவரை மரியாதை இல்லாம பேசுறாரு' என்ற ஈஷாவை பார்த்து எதுவும் சொல்லாமல் தன் கைபேசியை எடுத்து எதையோ மும்முரமாக செய்துகொண்டு இருந்தாள் CR.

'தம்பி... நான் என்ன பா பண்ணுறது, உங்க அப்பாவும் பெரியப்பாவும் அடி மட்ட விலைக்கு கேக்குறாங்க பா. எனக்கு கட்டுப்படி ஆகல தம்பி' என்ற செட்டியாருக்கு ஏற்கனவே கதிரின் மூர்க்க குணம் தெரிந்து தான் இருந்தது.

'பணம் பத்தலைனா கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு யாரோ பொட்டச்சி கேட்டான்னு அவளுக்கு வித்துருக்க' என்று கேட்டான் கதிர்.

'ஹே...என்ன நீ மரியாதை இல்லாம பேசுற' என்று ஈஷா கதிரை கோபத்துடன் நெருங்க.
'நான் அப்படி தாண்டி பேசுவேன். யாரு டி நீங்க... ஊர் விட்டு ஊர் வந்து எங்களுக்கு சமமா மால் கட்டுற அளவுக்கு நீங்க பெரிய ஆளா' என்று கதிர் கேட்க...
'தம்பி தம்பி பிரச்சனை வேணாம் பா' என்றார் செட்டியார்.

'ஹாங்க்... பிரச்சனை வேணா தானே... அப்போ உடனே இதுங்களுக்கு வித்த இடத்தை சித்ரா தேவி பேருக்கு மாத்திக் கொடு, வேணும்னா இவங்க உனக்கு கொடுத்த பணத்தை நான் உனக்கு தூக்கி வீசுறேன்' என்று கதிர் சொன்னதும்.
கதிரை முறைத்து பார்த்தாள் ஈஷா.

இங்கே இத்தனை பிரச்சனை நடத்துக்கொண்டு இருக்க...தன் கைபேசியை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்த CR.
'Yes...' என்றவள்...
கைபேசியை ஓரமாக வைத்து விட்டு,
'What's a ப்ரோப்லேம்?' என்று ஈஷாவை பார்த்து கேட்டாள்.

'அம்மா...காலையில நீங்க இந்த இடத்தை வாங்கும் போது ரெண்டு பேர் வந்து பிரச்சனை பண்ணாங்களே... அவங்க வீட்டு பையன் தான் இவரு' என்றார் செட்டியார்.

கதிரை மேல் இருந்து கீழ் வரை கண்களால் அளவேடுத்த CR.
புருவம் உயர்த்தி,' என்ன?' என்று கேள்வி எழுப்ப...'உன்கிட்ட எல்லாம் எனக்கு பேச்சு இல்ல... ஏய் கிழவா... இவளுங்களுக்கு வித்த இடத்தை ஒழுங்கு மரியாதையா எங்க பேர்ல மாத்திக்கொடு' என்று மிரட்டினான் கதிர்.

அவனின் கோவத்தை பார்த்து செட்டியார் பயந்து இருக்க...
'மேடம்... நமக்கு 2pm மணிக்கு பிலைட்... நம்ம கிளம்பலாமா' என்று கேட்டாள் ஈஷா.

'YES..' என்ற CR... மேற்கொண்டு அங்கே நிற்காமல் கதிரை கடந்து செல்ல...'ஏய் இந்தாடி... என்ன பெரிய ராங்கி மாதிரி நான் கேக்குற கேள்விக்கு பதில் தராமல் போயிக்கிட்டு இருக்க... நில்லுடி' என்ற கதிரை அவள் கோவமாக முறைக்க...
'என்னடி லுக்கு' என்றான் கதிர்.

தன் கை கடிகாரத்தை பார்த்த CR.
'ஈஷா...come on lets go' என்றதும், கதிர் தன் எதிரே இருக்கும் பெண்ணின் கையை கோவமாக பற்றியவன்...'பேசிக்கிட்டே இருக்கேன் எங்கடி போற... இருந்து உன் பேர்ல வாங்குன இடத்தை எங்க பேர்ல முடிச்சி கொடுத்துட்டு போ' என்றான்.

தன் கையை கதிர் பற்றியதும் அவனை பார்த்த ஈஷா,'ஏய் ஏய் யூ ஸ்டுபிட் என்ன பண்ற' என்று பதறிய நிலையில்...
ஈஷாவை பார்த்து தன் கையை நீட்டி அவள் பதற்றத்தை தடுத்தவ CR.. கதிரை கோவபார்வை பார்த்தாள்.

'என்னடி லுக்கு... வா... வந்து ஒழுங்கு மரியாதையா நீ வாங்குன சொத்தை எங்க பேர்ல மாத்திக்கொடு' என்ற கதிரை பார்த்து, மெலிதாக சிரித்த CR அவன் சற்றும் எதிர்பாராத சமயம் தன் இடது கையால் அவன் தோள் பட்டையில் ஒரு அடி அடிக்க,'ஏய்... யாரு மேல கை வைக்கிற' என்ற கதிர் CR யை அடிக்கும் முன்னே தன் வலது கைக்கொண்டு கதிரின் நெத்தி பொட்டை பார்த்து ஒரு சுண்டு
சுண்டினாள் CR.

பெண்ணவள் அடித்த வேகத்தில் கதிர் சட்டென்று மயங்கி சோபாவில் விழுந்தவனை பார்த்து CR மேலும் மெலிதாக சிரித்தவளின் முகம் சட்டென்று கோவமாக மாறியது.

'இனி இதே நிலைமைதான் உங்க குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும். நீங்க பண்ண துரோகத்துக்கு கூடிய சீக்கிரம் நீங்கள் பதில் சொல்லி ஆகணும்.உங்களை நான் பதில் சொல்ல வைப்பேன்' என்றவளை செட்டியார் புரியாமல் பார்த்து இருந்தார்.

'மேடம் மேடம்... வாங்க நம்ம கிளம்பலாம்' என்று ஈஷா பதற்றம் அடைய...அவளை பார்த்து மீண்டும் ஏளனமாக சிரித்த CR.
'நாம் இனி எங்கேயும் கிளம்ப வேண்டாம்... நாம் இங்கேதான் இருக்கப் போகிறோம்' என்றவள்,

தன் கையில் இருந்த செல் போனை ஈஷாவிடம் கொடுக்க... சற்று முன்னே தான் VCR என்ற பெயரில் இதே ஊரில் CR.என்று அனைவராலும் அழைக்கப்படும் சித்ர ராங்கி பெரிய பங்காளவை பதிவு செய்து இருக்கும் ஆவணத்தை பார்த்து ஈஷாவின் முகம் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.

'முருகன் அங்கிளுக்கு அந்த புது பங்களா அட்ரஸை watsup பண்ணிடு' என்ற சித்ரராங்கியின் அம்மா எங்கே?
சிறு வயதில் இவளுக்கு நேர்ந்த கொடூரம் என்ன?
எங்கோ பிறந்து வளர்ந்த முல்லையும் கதிரும் எப்படி சந்திக்க போகிறார்கள்?
என்ற கேள்விகளோடு சேர்த்து இன்னும் பல சுவரிசியமான பாகங்களை படிக்க எழுத்தின் வடிவில் என்னோடு இணைந்து இருங்கள்.

-உங்கள் நான் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top