• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை❣️

பகுதி- 6

மறுநாள் காலை வழக்கம் போல் கிளம்பி நாகராஜன் தன் வீட்டில் இருந்து வெளியே வந்தவனின் மினி வேனில் டிரைவர் இருக்கையில் கதிர்வேலன் அமர்ந்து இருந்தார்.

'கிளம்பாலாமா வாத்தி?' என்றபடி தன் முன் வந்து நின்ற ரோஜாவை ஆயாசமாகப் பார்த்து,'ம்மா... நீங்க எங்க வரீங்க' என கேட்டார் கதிர்வேலன்.

'நேத்து நைட் நீ போதையில இருந்ததால உனக்கு எதுவும் நினைவில இருக்காது கதிரு, உன் அண்ணன் தான் உன் தங்கச்சியையும் நம்மகூட சிவகங்கைக்கு அழைச்சிட்டு போக சொன்னாரு' என்ற நாகராஜன், பொருட்களை எல்லாம் வண்டியில் சரியாக அடுக்கி வைத்தார்

'ஓகோ! நம்ம சிவகங்கைக்கு போக போறோமா' என கதிர்வேலன் கேக்க,
'எங்க போக போறோம்னு தெரியாம தான் மைனர் கணக்கா டிரைவர் சீட்ல உக்காந்து இருக்கியா?' என கேட்டான் நாகராஜன்.

'வாத்தி...முல்லை ஊருக்கு போனதுல இருந்து ஒரு போன் கூட பண்ணல, அதான் பெரியவரு உங்ககூட என்னையும் சிவகங்கைக்கு போய் முடிந்தால் முல்லையை பார்த்துட்டு வர சொன்னாரு'என்ற ரோஜா வேனில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.

'அவளை போனதும் நான் கூட அண்ணனுக்கு போன் பண்ண சொன்னேனே! ஏன் அவ போன் பண்ணல' என்று கதிர்வேலன் கேக்க,'இதையே தான் பெரியவர் கூட கேட்டாரு' என்றாள் ரோஜா.

'சரி சரி... இங்கேயே நின்னு பேசிகிட்டு இருந்தா, அப்புறம் நம்ம நிச்சியதுக்கு போகாம கல்யாணத்துக்கு தான் போக வேண்டியது வரும்,சீக்கிரமா வண்டியை எடு கதிரு' என நாகராஜன் சொல்ல,
சிவகங்கையில் உள்ள முருகர் கோவிலுக்கு மினி வேன்னில் இவர்கள் மூவரும் பொருட்களுடன் பயணித்தார்கள்.

'ஆமா...சிவகங்கையில இருந்து எப்படி உனக்கு ஆர்டர் கிடைச்சுது' என்று கதிர்வேலன் கேக்க,'திடிர் நிச்சியமா கதிரு, அதான் என்னால வந்து பண்ணி தர முடியுமான்னு கேட்டாங்க, நானும் சரி வரேன்னு சொல்லிட்டேன்' என்றான் நாகராஜன்.

'ஏன் வாத்தி... அந்த ஸ்ரீனி மறுபடியும் எதாவது உங்ககிட்ட பிரச்சனை பண்ணினானா?' என்று ரோஜா கேட்க,
'அவன் கட்டில்ல இருந்து எழுந்து நடக்கவே மூணு மாசம் ஆகும்" என்று சொன்னார் கதிர்வேலன்.

'ஸ்ரீனியா! அது யார்?' என்று நாகராஜன் கேக்க, காலேஜ் படிக்கும் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் ஸ்ரீனிவாசனை பற்றியும், அவனை கதிர்வலன் அடித்ததை பற்றியும் ரோஜா சொன்னாள்.

'அடப்பாவி, படிக்க வந்த பொண்ணுகிட்ட இப்படியா பண்ணுவான் பாடையில போற பன்னாடை' என்று நாகராஜன் ஆதங்கத்துடன் ஸ்ரீனி என்கிற ஆசிரியரை கடிந்து கொண்டு வந்தவன்,ஆழ்ந்த யோசனையில் வண்டியை இயக்கும் கதிர்வேலனை கேள்வியிடன் நோக்கினான்.

'என்ன கதிரு என்ன யோசனை' என நாகராஜன் கேட்க,
'ரவா லட்டு ஏதோ பிரச்சனையில மாட்டிக்கிட்டாள்' என்றார் கதிர்வேலன்.

'என்னடா நீ! குறி சொல்லுற மாதிரி பேசுற!' என்று நாகராஜன் கேக்க,'இல்ல... எனக்கு உள்ளுக்குள்ள அப்படி தான் தோணுது' என்றவாறு மினி வேனை வேகமாக விரட்டினார்.

'என்ன வாத்தி சொல்லுறிங்க! அதனால தான் முல்லை யாருக்குமே போன் பண்ணலையா!' என்ற ரோஜா தன் அலைபேசியில் இருந்து மீண்டும் முல்லையின் அலைபேசிக்கு அழைத்து பார்க்க, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக பதில் வந்தது.

ஏதோ ஒன்று சரியில்லை என்ற மனநிலையில் கதிர்வேலன் மினி வேனை சிவகங்கை கோவில் வாசலில் நிறுத்தியதும்,' ஐயா வேன் வந்துடுது' என்று அங்குள்ள ஒருவர் இன்னொருவரை பார்த்து சத்தமாக சொன்னார்.

'கதிரு... நீ வண்டியில உக்காரு, நான் பொருளை இறக்கி வச்சிட்டு லிஸ்ட்டை கொடுத்து அட்வான்ஸ் வாங்கிட்டு வரேன்' என்றபப்டி நாகராஜன் கோவிலுக்குள் செல்ல,

அதே தருணம் தூரத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் நின்று இருந்த தன் மாமன் முருகனை வேனில் அமர்ந்தப்படி பார்த்த ரோஜா,'வாத்தி அங்க பாருங்க முருகன் மாமா' என்றாள்.

'இந்த மீசைகாரன் இங்க என்ன பண்ணுறான். காலையில உண்டை கட்டி சாப்பிட வந்து இருப்பானா!' என்ற கதிர்வேலனுக்கு முருகன் என்றாலே ஆகாது.

அதுவும் முருகனின் இரண்டாவது மனைவி பார்வதி என்றால் அறவே ஆகாத பட்சத்தில், இந்த நொடி வரை முல்லைக்கு இன்று அவசர நிச்சயம் நடக்க போகிற விஷயம் பாண்டியனின் குடும்பத்துக்கு தெரியாமல் போனது.

நாகராஜன் அங்குள்ள ஆட்களுடன் சேர்ந்து வேனில் உள்ள பொருட்களை எல்லாம் இறக்கி வைத்தவன்,
அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு வேனுக்கு திரும்பியவன் காதில்,

'அவ அடம் பிடிச்சா சூடா கம்பியை காய வச்சி அவ காலுல சூடு வையு' என்று முருகன் அலைபேசியில் யாருடனோ கோவமாக பேசும் வார்த்தையைக் கேட்டு வேகமாக கதிர்வேலனை நோக்கி ஓடி வந்தான் நாகராஜன்.

'கதிரு... அந்த மீசைகாரர் உன் மாமன் தானே'என்று நாகராஜன் கேக்க,'அந்த ஆளு தான்' என்றார் கதிர்வேலன்.

'டேய்... அவரு யாருக்கோ சூடு வைக்க சொல்லி போன்ல பேசிகிட்டு இருக்காரு டா, நீ சொன்னது போல ஒருவேளை உன் மாமன் பொண்ணுக்கு எதாவது பிரச்சனையா' என்று நாகராஜன் கேட்க, கதிர்வேலனின் முகமோ இறுக்கமாக மாறியது.

வேனில் அமர்ந்து இருக்கும் கதிர்வேலனும் ரோஜாவும் முல்லைக்கு என்னானது என்று யோசிக்கும் தருணம்,
'கதிரு... அங்க பாரு காருல யார் வந்து இறங்குறாங்கன்னு' என்றான் நாகராஜன்.

பட்டு வேஷ்டி சட்டையில் ஜோராக கேசவன் வந்து இறங்கி இருக்க, அப்போது தான் கதிர்வேலனுக்கு மட்டுப்பட்டது இங்கே நிச்சியம் நடக்க போவதே கேசவனுக்கும் முல்லைக்கும் தான் என்று.

தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள எண்ணி கதிர்வேலன் வேனில் இருந்து இறங்க ஏத்தணித்தவரின் கையை பிடித்து அமர்த்தினாள் ரோஜா.

'என்னாச்சு வாத்தி!? இவ்ளோ வேகமா எங்க போறீங்க?'

'இந்த கேசவனும் மீசை காரனும் சேர்ந்து என்னமோ சண்டி தனம் பண்ண போறாங்க, அதான் நான் என்னன்னு கேக்க போறேன்'

'அவசரப்படாதீங்க, எனக்கும் அந்த சந்தேகம் இருக்க தான் செய்யுது. ஆனா இப்போ நம்ம துடுக்கு தனமா எதையாவது பண்ணினா அது தப்பா போக கூட வாய்ப்பு இருக்கு, அதனால இங்கேயே காத்து இருப்போம்"என்று ரோஜா சொல்ல, கதிர்வேலனின் மனதோ இயல்புக்கு மாறாக எதையோ உணர்த்திக்கொண்டே இருந்தது.

'இல்ல இல்ல... இங்க இருந்து நேரத்தை விரயமாக்க வேண்டாம். பேசாம நம்ம மீசைகாரன் வீட்டுக்கே போய் அங்க என்ன சூழ்நிலைன்னு பாப்போம்' என்ற கதிர்வேலன் யாருடைய பேச்சையையும் காதில் வாங்காமல் மினி வேனில் முல்லையின் வீட்டை நோக்கி பயணித்தார்.

********************************

முல்லையின் வீட்டில் பார்வதி ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்க,
'எனக்கு உங்க தம்பியை பிடிக்கல, ஏன் அவரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை இம்சை பண்ணுறீங்க' என்று முல்லை கண்களில் கண்ணீருடன் வாதாடிக்கொண்டு இருந்தாள்.

'என்ன நீ!?
சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க!,
நீ மட்டும் என் தம்பியை கண்ணாலம் பண்ணிக்கலைனா உன் அப்பன் உன்னை கொன்னே போட்டுடுவான், பரவாயில்லையா' என்ற பார்வதியை பார்த்து கட்டில் இருந்து வேகமாக எழுந்தாள் முல்லை.

'என்னை அவரால ஒன்னும் பண்ண முடியாது, எனக்கு எதாவதுனா என் மாமா என் அப்பாவை சும்மா விட மாட்டாரு' என்ற முல்லையை பார்த்து ஏளனமாக சிரித்தாள் பார்வதி.

பார்வதியின் அந்த சிரிப்பில் நஞ்சு கலந்து இருந்தது.
எங்களை மீறி பாண்டியனால் என்ன பண்ணிட முடியும் என்ற ஆணவம் நிறைந்த சிரிப்பு அது.

'இங்க பாரு முல்லை, நான் பொறுமையா பேசிகிட்டு இருக்கேன், இதுவரை நான் உனக்கு சித்தியா நடந்துகொண்டது இல்லை, என்னை அப்படி பார்க்கணும்னு நீ ஆசைப்படாதே' என்ற பார்வதியை பார்த்து,

'நீங்க எனக்கு அம்மாவாக கூட தான் நடந்துகொண்டது இல்லை, ஏன்? இதே நான் உங்க சொந்த பொண்ணா இருந்தா இப்படி தான் என் சம்மதம் இல்லாம எனக்கு பிடிக்காத ஆளை கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணுவிங்களா' என்று கேட்டாள் முல்லை.

'நீ ரொம்ப பேசுற! என்ன எனக்கு பிள்ளை இல்லைனு குத்தி கட்டுறியா' என்று பார்வதி கோவமாக கேக்க,

'நல்ல வேளை உங்களுக்கு ஒரு பிள்ளை இல்லை, அப்படி மட்டும் உங்களுக்கு பிள்ளை இருந்திருந்தால்! அந்த குழந்தையுடைய வாழ்க்கையையும் நீங்க கேள்விக்குறியாக்கி இருப்பீங்க' என்று முல்லை சொல்லி முடிக்கும் முன்னே பார்வதி முல்லையை அறைந்திருந்தார்.

இதுவரை தன் மீது கை வைக்காத பார்வதியின் கோபத்தை முதல் முறை பார்த்த முல்லைக்கு அழுகைதான் வந்தது.

'இப்ப எதுக்கு என்ன அடிச்சீங்க' என்று முல்லை கேட்க,'என்னது அடிக்கிறதா!? உன் காலில் சூடு வச்சு! உன்ன கோவிலுக்கு இழுத்துட்டு வர சொல்லி இருக்கான். என்ன பண்ணவா!? சொல்லுடி சூடு வைக்கவா?' என்ற பார்வதி வேகமாக கொள்ளை பக்கம் சென்று, கொழுந்துவிட்டு எரியும் கட்டையை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தவரை பார்த்து முல்லைக்கு பயம் தான் வந்தது.

'இங்க பாரு...இப்போதைக்கு உனக்கும் என் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற திட்டமே எங்களுக்கு இல்லை. ஆனா நீ திருச்சில இருந்து நேரா இங்க வராம குன்னக்குடிக்கு போயி உன் மாமன் கூட கூத்தடிச்சிட்டு வந்திருக்க பாரு! அதனால தான் உன் அப்பா உனக்கு சீக்கிரமா என் தம்பி கூட கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்காரு' என்று பார்வதி சொல்லும் பொழுது தான் முல்லை குன்னக்குடி சென்ற விஷயம் முருகனுக்கு தெரிந்திருக்கிறது என்று அறிந்து கொண்டாள் முல்லை.

'ஓ!! அப்போ உங்களுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சு போச்சா?' என்று முல்லை கேட்க,

"தெரியும் தெரியும்...அந்த பாண்டியனுடைய இரண்டாவது பையன் கூட நீ அடிக்கிற கூத்தெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்' என்று பார்வதி சொல்ல,

'இங்க பாருங்க...நான் பாண்டியன் மாமா வீட்டுக்கு தான் மருமகளா போக போறேன், நீங்க யாரு என்ன சொன்னாலும் உங்க தம்பியை மட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்' என்று முல்லை சொல்லி முடிக்கும் முன்னே,

'உனக்கு அவ்வளவு வாயா போச்சா!' என்ற பார்வதி சற்றும் தாமதிக்காமல் தன் கையில் இருந்து எரிக்கட்டையை எடுத்து முல்லையை சூடு வைக்க எத்தனித்தவளின் கையைப் பிடித்து தடுத்திருந்தார் கதிர்வேலன்.

**********************

இந்த சமயத்தில் யார் நம்மை காப்பாற்ற கூடும் என்று தவித்திருந்த முல்லைக்கு தன் கண்முன்னே கதிர்வேலனை பார்த்ததும்தான் நிம்மதி பிறந்தது.

கதிர்வேலனுடன் ரோஜாவும் வந்திருக்க 'ஐயோ முல்லை என்ன ஆச்சு?' என்ற ரோஜா, முல்லையை பார்த்து பதறினாள்.

'இங்க என்ன நடக்குது! என்னமோ சின்ன பிள்ளையை சூடு காட்டி பயமுறுத்துற மாதிரி அவளை பயமுறுத்திக்கிட்டு இருக்கீங்க...பெரிய மனுஷி தானே நீங்க!உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா' என்று கதிர்வேலன் பார்வதியை கேட்க,

'டேய்...கையை எடுடா, என்ன உன் காதலியை காப்பாத்த பெரிய ஆபத்து பாண்டவன் மாதிரி வந்து இருக்கியா' என்று கேட்டார் பார்வதி.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
'எங்க மறுக்கா சொல்லு... நீ சொல்றது நல்லா தான் இருக்கு' என்று கதிர்வேலன் சொல்ல,

'என்ன திமிரா...டேய் யாருடா அங்க இருக்கிங்க!! இங்க பாருங்க வீடு புகுந்து இவன் சண்டித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கான். இவன் அடிச்சு வெளியே தூக்கி வீசுங்க. ஏய் இந்தா... முல்லை மேலே இருந்து கையை எடு'
என்ற பார்வதி ரோஜாவின் கையை தட்டி விட்ட வேகத்தில் கதிர்வேலன் பார்வதியை அடிக்க கை ஓங்கினார்.

'வாத்தி வாத்தி...பிரச்சனைய பெருசாக்க வேண்டாம். முல்லை...என்ன உனக்கு கேசவன் கூட நிச்சயதார்த்தம் பண்ண ஏற்பாடு பண்றாங்களா?'என்று ரோஜா கேட்க,'ம்...' என்று கண்களில் கண்ணீருடன் தலையாட்டினாள் முல்லை.

'ஏன் அத்த... விருப்பம் இல்லாத பெண்ணை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்களே! உங்களுக்கு இதெல்லாம் நியாயமா இருக்கா' என்று ரோஜா கேக்க,

'என் வீட்டு பெண்ணை நான் யாருக்கு வேணா கல்யாணம் பண்ணி வைப்பேன் அதை கேக்க நீ யாரு டி' என்ற பார்வதி மீண்டும் கீழே இருந்த கொல்லிக்கட்டையை கையில் எடுத்தார்.

'உங்க கல்யாணம் மட்டும் தான் உங்க விருப்பப்படி நடக்கும், மத்தபடி நீங்க பெத்த பிள்ளையா இருந்தால் கூட அவங்க விருப்பத்துக்கு மாறாக நீங்க அவங்களுக்கு கல்யாணம் பண்ணக்கூடாது' என்று கதிர்வேலன் சொன்னதும்,

'நல்லா சொல்லுங்க மாமா சார்! இவங்க எனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணுறாங்க, நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலைனா என் காலுல சூடு வைப்பேன்னு மிரட்டுறாங்க' என்ற முல்லை கண்கள் கலங்கிய நிலையில் பேசுவதை பார்த்த கதிர்வேலன்

'ச்சு ச்சு... பாவம் பாப்பாவை எப்படி பயமுறுத்திருக்காங்க' என்று பரிதாப பட்டார்.

'வாத்தி..பாவம் பாக்குற நேரமா இது! மேற்கொண்டு இப்போ என்ன பண்ணலாமுன்னு சொல்லுங்க' என்று ரோஜா கேக்க,

'நீங்க என்ன பண்ண போறீங்க! இருங்க எங்க வீட்டு அடி ஆளுங்க உங்கள என்ன பண்ண போறாங்கன்னு பாரு' என்ற பார்வதி அங்குள்ள அடையாட்களை ஏவி விட்டு கதிர்வேலனை அடிக்கும்ப்படி கட்டளையிட்டாள்.

'யாரு இவங்க என்னை அடிப்பாங்களா!' என்று கிண்டலான தோரணையில் கேக்கும் கதிர்வேலனை பார்த்த அடியாட்கள்,

'வாத்தியாரே... நீங்க இங்க என்ன பண்ணுறீங்க' என்று கேட்டுக்கொண்டே கையில் இருந்த ஆயுதங்களை கீழே வீசியப்படி பவ்யாமாக நின்று இருந்தார்கள்.

தன் வீட்டில் உள்ள அடியாட்கள் கதிர்வேலனை அடிப்பார்கள் என்று எண்ணிய பார்வதிக்கு ஏமாற்றமாக போனதும்,'டேய்... அவனை அடிக்க உங்களை கூப்பிட்டா நீங்க என்னடா அவன்கிட்ட பம்பிகிட்டு இருக்கீங்க' என்று காட்டு கத்து கத்தினார் பார்வதி.

'அம்மா... நாங்க இன்னைக்கு அடியாளா இருக்கவே எங்க வாத்தியார் தான் அம்மா காரணம். நாங்க எப்படி அம்மா இவரை அடிப்போம்' என்று ஒருவர் சொல்ல,
'ஏன் அடிச்சு தான் பாரேன் " என்றார் கதிர்வேலன்.

'வாத்தியாரே! நீங்க எங்க குரு... நாங்க உங்க பக்கம் கூட வர மாட்டோம்' என்ற அடியாட்கள் ஓரமாக ஒதுங்கி நின்றார்கள்.

இவர்களை நம்பினால் இனி வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த பார்வதி சற்றும் தாமதிக்காமல் முருகனை தன் கைபேசி வாயிலாக அழைக்க, பார்வதியின் கையில் இருந்த போனை பிடுங்கி கதிர்வேலன் நடு வீட்டில் தூக்கி போட்டு உடைத்தார்.

கதிர்வேலனின் கோவத்தை கண்டு முல்லை ரோஜாவின் பின்னே மறைந்து கொள்ள,'டேய் என்ன பிரச்சனை பண்ணுறியா? இப்போ என்னை அடிச்சு போட்டுட்டு முல்லையை தூக்கிகிட்டு போக போறியா' என்ற பார்வதியை பார்த்து தன் சுண்டு விரலை கடித்தபடி,'ஐ... இது நல்லா இருக்கே!' என்றார் கதிர்வேலன்.

'வாத்தி...இவங்க சொன்ன மாதிரி...' என்று ரோஜா பேசும் முன்னே,'நான் ரவா லட்டை தூக்கவா?' என்று கேட்டார் கதிர்வேலன்.

'ஏன்!? முல்லைக்கு நடந்து வர தெரியுதா!அதெல்லாம் நீங்க தூக்க வேண்டாம், முல்லை நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம்' என்றாள் ரோஜா.

'என்ன... என்னை மீறி உங்கனால முல்லையை அழைச்சிட்டு போக முடியுமா!' என்று பார்வதி கேக்க,'ஏன் முடியாதா!?' என்ற ரோஜா, முல்லையின் கையை பிடித்து வாசலுக்கு அழைத்து சென்றாள்.

'ஏய் ஏய்...நில்லுடி' என்று கத்திய பார்வதி,அசிங்கமான சொற்களைக்கொண்டு ரோஜாவை திட்டியதும், கோவம்க்கொண்ட கதிர்வேலன் அருகே இருந்த ஆட்களை பார்த்து 'இவங்க மூக்குல ஒரு குத்து விடு டா' என்று பார்வதியை சுட்டிக்காட்டினார்.

அடியாட்கள் கதிர்வேலனின் கட்டளையை கேட்டு தயக்கத்துடன் நின்றிருக்க,'இப்போ நீ அடிக்கிறியா! இல்ல உன்னை நான் அடிக்கவா' என்று கதிர்வேலன் கேட்டதும்... சற்றும் தாமதிக்காமல் அருகே இருந்த ஒருவன் பார்வதியின் மூக்கை பார்த்து ஓங்கி குத்தியதும் அவரின் மூக்கில் இருந்து ரத்தம் பொல பொல என்று ஊற்றியது.

'ஐயோ அம்மா...' என்று கதறிய பார்வதி மூக்கை பிடித்துக் கொண்டு கத்தியதும்,
'என் எதிரிலேயே என் அம்மாவை தப்பா பேசுவியா! நான்தான் உன்னை அடிச்சிருக்கணும், பொம்பளைங்க மேல கை வைக்க கூடாதுன்னு நான் ஒரு பாலிசி வச்சிருக்கேன், அடுத்த முறை இதே மாதிரி வாய் ஆடுனா, அடுத்த குத்து வாயில தான் கிடைக்கும்' என்ற கதிர்வேலன்,

'ம்மா...அந்த ரவா லட்ட அழைச்சுகிட்டு வாங்க,நம்ம வீட்டுக்கு போகலாம்' என்றவாறு முருகனின் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இனியும் இந்த வீட்டில் இருந்தால் தான் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணிய முல்லை... ரோஜாவுடன் முருகனின் வீட்டில் இருந்து வெளியேறினாள்.

*****************

கோவிலில் முல்லைக்கும் கேசவனுக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பட்டு செய்திருந்த நிலையில், இந்த நொடி முல்லை கதிர்வேலனுடன் வெளியே செல்வதை முருகனுக்கு தெரிவிக்க முடியாமல் பார்வதி மூக்கில் ரத்தத்துடன் வலியால் துடித்துக் கொண்டு இருந்தார்.

இங்கே நடக்கும் காட்சிகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த முருகனின் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களில் ஒருவர் முருகனுக்கு தகவலை தெரிவித்தனர்.

கதிர்வேலன் வீட்டுக்கு வந்ததை கேள்விப்பட்ட முருகன் சற்றும் சாமதிக்காமல் கேசவனுடன் தன் வீட்டை அடையும் காட்டிலும் கதிர்வேலனும் ரோஜாவும் முல்லையை அழைத்துக் கொண்டு குன்னக்குடிக்குக் கிளம்பி இருந்தார்கள்.

கதிர்வேலன், ரோஜாவுடன் மினி வேனில் பயணிக்கும் முல்லை கண்கள் கலங்கிய நிலையில் அமர்ந்து இருந்தாள்.

'வாத்தி... நாகா எங்கே' என்று ரோஜா கேக்க,'அவனை பாத்திரம் பொருளை எல்லாம் வேற வண்டி வச்சி எடுத்துக்கிட்டு ஊருக்கு வர சொல்லிட்டேன்' என்றார் கதிர்வேலன்.

'முல்லை அழாத! அதான் நாங்க உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போக போறோமே, ஏன் இன்னும் அழற' என்று ரோஜா கேக்க,

'நீங்க மட்டும் வரலைனா, அந்த கேசவன் கூட என் அப்பா எனக்கு நிச்சயம் பண்ணி வச்சிருப்பாரு' என்ற முல்லை தன் சுடிதார் துப்படாவில் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

என்னதான் அடி தடி ஆளாக இருந்தாலும் கதிர்வேலனுக்கு முல்லையும் ரோஜாவும் அழுதால் மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியாது.

பொதுவாக ஆண் பெண் வேதம் இன்றி பெரியவர்கள் சிறியவர்கள் வித்தியாசம் இன்றி மரியாதை கொடுத்தால் மட்டுமே மரியாதையுடன் பேசும் கதிர்வேலனுக்கு முருகன் என்றாலே வெப்பங்காயை போல கசக்க தான் செய்யும்.

சிறு வயதில் இருந்தே முல்லையின் அன்னை வள்ளியின் மறைவுக்கு முருகன் தான் காரணம் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பாண்டியனின் குடும்பத்துக்கு எப்படியாவது முல்லையை தன் வீட்டுக்கு மருமகளாக வர வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த நிலையில், இன்று அதற்க்கு அடிக்கல் நட்டு வைக்கும் விதமாக ரோஜாவும் கதிர்வேலனும் முல்லையை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தார்கள்.

வழியெல்லாம் அழுதுக்கொண்டு இருந்த முல்லை,'ஆமா... நீங்க ரெண்டு பேரும் எப்படி சரியான நேரத்தில எங்க வீட்டுக்கு வந்தீங்க!? ஓ... ஜீவா மாமா தான் என்னை போய் காப்பாற்ற சொன்னாரா!?' என்று முல்லை கேட்டதும், கதிர்வேலன் கீரை மாற்றி வண்டியை அதிவேகமாக விரட்டினார்.

தன் இளைய அண்ணனின் கோபத்தையும் ஆதங்கத்தையும் உணர்ந்து இருந்த ரோஜா, 'இல்ல முல்ல! நாங்க வேற விஷயமா தான் வந்தோம். ஆனால் வாத்தித்தான் நீ நேத்துல இருந்து போன் பண்ணாததால உனக்கு என்னமோ பிரச்சனையா இருக்கும்னு சொன்னாரு, அதான் ஒரு எட்டு உன் வீட்டுக்கு வந்து பார்த்தோம் 'என்று சொன்னாள் ரோஜா.

'நேத்து மாமா சார் என்னை குன்னக்குடியிலிருந்து சிவகங்கை பஸ்ஸில் ஏத்தி விட்டதுமே வீட்ல இருக்கிற எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சுடுச்சு, அதனாலதான் அப்பா பிளான் பண்ணி என்னுடைய போனை அவர் வாங்கி வச்சிக்கிட்டாரு, அதான் ஜீவா மாமாக்கு என்னால போன் பண்ணவே முடியல' என்ற முல்லையை Front மிரரில் பார்த்துக் கொண்டு இருந்தார் கதிர்வேலன்.

'சரி சரி கவலைப்படாத! நம்ம வீட்டுக்கு போனதும் மீதி கதையை பேசிக்கலாம்' என்று ரோஜா சொல்ல,

'ரோஜா உன்கிட்ட போன் இருந்தா குடுக்குறியா! நேத்துல இருந்து நான் ஜீவா மாமா கிட்ட பேசவே இல்ல' என்று வருத்தமாக சொன்னாள் முல்லை.

ஜீவானந்தத்தை பற்றி முல்லை பேச பேச கதிர்வேலன் வண்டியை வேகமாக விரட்டினார்.

'நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் முல்லை, இப்பவே பெரியவர்கிட்ட இதெல்லாம் சொன்னால் அவரு வருத்தப்படுவாரு' என்று ரோஜா சொன்னதும், முல்லையும் அமைதியாக இவர்களுடன் பயணித்தாள்.

**************************
சிவகங்கையில்
பார்வதியின் மூக்கை உடைத்து முல்லையை தன்னோடு அழைத்து சென்ற கதிர்வேலனின் மீது முருகனுக்கு அலாதி கோவம் ஏற்பட, சற்றும் தாமதிக்காமல்
'தன் ஒரே பெண்ணை வீடு புகுந்து வலுகட்டாயமாக பாண்டியனின் இளைய மகன் கதிர்வேலன் கடத்தி சென்று இருக்கின்றான்' என்று சிவகங்கை காவல் நிலையத்தில் முருகன் பாண்டியன் மீது புகார் கொடுக்க,

கதிர்வேலன், ரோஜா, முல்லை என்று மூவரும் குன்னக்குடியில் உள்ள இவர்களின் வீட்டை சென்றடையும் முன்னே பாண்டியனின் இல்லத்தில் காவலர்கள் நிரம்பி இருந்தார்கள்.

காவலர்களுடனேயே முருகன், பார்வதி மற்றும் கேசவன் என்று முருகனின் பக்கத்திலிருந்து சொந்தங்கள் சிலரும் பாண்டியனின் இல்லத்திற்கு வந்திருந்தார்கள்.

பஞ்சாயத்து விஷயமாக பக்கத்து ஊருக்கு சென்று வந்த ஜீவானந்தமும் பாண்டியனும் என்னானதோ ஏதானதோ என்ற பதட்டத்தில் வீடு வந்து சேர்ந்தவர்களின் முன்னே,
'எங்கடா எங்க வீட்டுப் பொண்ணு ?' என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினார் முருகன்.

'மாமா பார்த்து மரியாதையா பேசுங்க! என்ன வார்த்தை எல்லாம் தடிக்குது?' என்ற ஜீவானந்தம் முருகனிடம் மரியாதையாகவே பேசும் தருணம்,

'உனக்கெல்லாம் என்னடா மரியாதை, உன்னோட தம்பி என் பொண்ண காதலிச்சி எங்க வீட்ல இருந்து அவளை கடத்திட்டு போயிட்டான்' என்ற முருகனின் வார்த்தையை கேட்டு ஜீவானந்தத்திற்கு கோபம் ஏற்பட்டது.

'மாமா இவனுங்ககிட்ட என்ன பேச்சு!நம்ம இந்த பாண்டியணை தூக்கி உள்ள வச்சா அந்த சண்டி பையன் தானா நம்ம முல்லையை நம்மகிட்ட ஒப்படைப்பான்' என்ற கேசவன் பாண்டியணை நெருங்கும் சமயம் ஜீவானந்தம் கேசவனை தடுத்து நிறுத்தினார்.

ஜீவானந்தத்தை கோவமாக முறைத்து 'யோவ் போலீஸ்... இவன் என் மேலேயே கை வைக்கிறான் நீ என்னையா வேடிக்கை பாக்குற' என்ற கேசவன் ஜீவானந்தத்தின் சட்டையை பிடிக்கும் தருணம், எங்கிருந்தோ பறந்து வந்த சிலம்பம் கலி கேசவனின் தலையை பதம் பார்த்தது.

~தொடரும் 🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top