Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதாரா!
வேதாவின் நினைவில் அழுது கொண்டிருந்தவள்,எப்பொழுது தூங்கினாளென்று தெரியாது.
வழக்கம் போல் அதிகாலை விழிப்பு வரவும் குளித்து முடித்து நீண்ட கூந்தலை இரண்டு சைடிலிருந்தும் சிறிது முடியை எடுத்து கிளிப் போட்டவள், பின்னர் ஈரம் போக விரித்து விட்டு, கீழே வந்து வாசலை கூட்டி விட்டு கோலத்தை போட்டாள்.
அப்பொழுது முன் கதவை திறந்து வாக்கிங் போவதற்காக வந்த மாறன்,அங்கிருந்தவளை பார்த்து அசந்து போனான்.
நீண்ட முடி மயில் தோகை போல படர்ந்து விரிந்து தரையில் புரள, நளினமாக கோலம் போடுபவளை ரசித்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தனது அம்மா வரும் காலடி சத்தம் கேட்டு சுதாரித்தவன், அடேய் இது தப்புடா. உன்னை நம்பி தான், இவளை உன் தங்கச்சி அனுப்பி வைத்திருக்கிறாளென அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.
வாசலுக்கு வந்த பூரணி எந்திரிச்சிட்டியாடாமா என்க,ஆமாம்மா. வழக்கம் போல விழிப்பு வந்துட்டு.இனி இந்த வேலையை நான் பார்த்துக்குறேன், நீங்க சிரமப்படாதீங்க.
சரிடாமா.வா காஃபி ரெடியா இருக்கு என்க, இதோ வந்துட்டேன் என்றபடியே அவரோடு உள்ளே வந்தாள்.
இரண்டு கப்பில் காஃபியோடு வந்தவர், டைனிங் டேபிளின் மீது வைத்து விட்டு, பூனாவில் கிடைக்கின்ற சினாக்ஸை எடுத்து வந்து வைத்தார்.
டீ, காஃபி கூட இதை சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்றவரிடம், இதற்கு பேர் என்னம்மா? என்க.
காரி,பட்டர்..நம்ப ஊர் சைடில் வறுக்கி போல தான், ஆனால் அவ்வளவு ஹார்டா இருக்காது சாப்பிட்டு பாரு.இது இல்லைனா லீனா வீட்டையோ ரெண்டாக்கிடுவாளென சிரித்தார்.
பின்னர் சமையலறைக்குள் வந்தவள், முதல் நாள் இரவு மாறன் கேட்டது போல பீட்ரூட் சப்பாத்தியும், பன்னீர் பட்டர் மசாலாவும் செய்தவள், விஸ்வத்திற்காக, உடைத்த கோதுமையில் புலாவும், அதற்கு தேங்காய் சட்னியையும் செய்து முடிக்க, அம்மா காஃபி என்றபடியே மாறன் வந்தான்.
சரிங்கம்மா நான் போய் ரெடியாகிட்டு வரேனென்றவள் அனார்கலி மாடல் சுடிதாரை போட்டுக்கொண்டு, காய்ந்த தலைமுடியை அழகாய் பின்னி அப்பாயின்மென்ட் லட்டரை எடுத்து ஹேண்ட் பேகில் வைத்துக்கொண்டாள்.
நெற்றியில் சின்ன பொட்டை மட்டும் வைத்தவள், பேகையும், ஃபோனையும் எடுத்துக்கொண்டு கீழே வர, விஸ்வம் பூஜையறையில் ஸ்லோகம் படித்துக்கொண்டிருந்தார்.
ஹேண்ட் பேகை டைனிங் டேபிளின் மேல் வைத்து விட்டு, சாமியறைக்கு முன்பு போய் கண் மூடி நிற்க,அம்மாடி தாமரை அபிராமி அந்தாதி ஒன்னு பாடென விஸ்வம் சொல்ல, நானா என்று அதிர்ந்து கண்ணை திறக்க,ம்ம் என்றவர், சாமியை நோக்கி வணங்க, சரணம் மட்டும் அவள் பாட, அந்த குரலில் மூவரும் மெய் மறந்து போயினர்.
சூடம் ஏந்திய தட்டோடு வெளியே வந்தவர், இனி நீதான் தினமும் சாமிக்கு முன்னாடி எதாவது சரணமோ இல்லை பல்லவியோ பாட வேண்டும்.
இதை உன்னுடைய வழக்கமாக வைத்துக் கொள்ளென தட்டிலிருந்த, விபூதி குங்குமத்தை அவள் நெற்றியில் பூசியவர்,தீர்க்க சுமங்கலியாக இருமா என்றார்.
அந்த சுமங்கலி என்ற வார்த்தையை கேட்டவள் அதிர்ந்து, பின் சுதாரித்து கொண்டாள்.பின்னர் இருவரும் சாப்பிட்டு காரில் ஏரி ஆபிஸை நோக்கிச்சென்றனர்.
கார் பார்க்கிங்கில் வந்து நிறுத்தியவன் ஆல் த பெஸ்ட் என்க, தேங்க்யூ சாரென சொல்லிக்கொண்டு கதவை திறந்து இறங்கியவள், அங்கிருந்த லிப்டில் ஏறி டிசைனிங் தளத்திற்கு சென்றாள்.
காரிலிருந்து இறங்கியவன், திமிரு புடிச்சவள், சாராம் சார். ஏன் மாறனு சொன்னாள் தேய்ஞ்சு போய்டுவாளோனு மனதிற்குள் திட்டிக்கொண்டே தனது தளத்திற்கு வந்தவன், அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
டிசைனிங் செக்க்ஷனுக்கு வந்தவள் அங்கிருந்த மேனேஜரிடம் அப்பாயின்மென்ட் லெட்டரை காட்ட, வாங்கி படித்தவர், அவரும் ஆல் த பெஸ்ட் சொல்லி விட்டு,வேலையில் முன் அனுபவம் இருந்தாலும் கம்பெனி ரூல்ஸ் படி ஒன் மந்த் டிரைனிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
அவளோடு இன்னும் சிலரும் வந்து ஜாயின்ட் பண்ணிக்கொண்டார்கள்.
சீமக்கரை....
அதிர்ந்து நிற்கும் செல்வத்தை பார்த்த வீட்டினர்கள்,இருக்கும் சூழலை மறந்து சிரித்தனர்.
என்ன மச்சான் பேயறைஞ்ச போல நிக்குறனு பெருமாள் கேட்க,எலே நீங்க ரெண்டு பேரும் எப்போல வந்தீங்க என்கவும்,ம்ம் அது வந்து 30 வருஷம் ஆகிட்டு என்றான் ரிது வர்ஷன்.
எலே ரெண்டு புள்ளை பெத்துட்டாலும் உன் குசும்புக்கு கொறைச்சல் இல்லை என்ற செல்வமோ குடும்பத்தை பற்றி அவர்களிடம் விசாரித்தார்.
அங்கு வந்த ராதா சாப்பாடு ரெடி என்க,அப்பு முதல்ல சாப்டுங்க, பிறகு எல்லாத்தையும் பேசிக்கொள்ளலாம் என்றார் பிரகாசம் தாத்தா.
பார்வதி, சீதா, ராதா மூவரும் பரிமாற அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்
அம்மாடி நீங்களும் சாப்பிடுங்க என்றார் வள்ளி அப்பாயி.
மாப்பு என்று ரிது கூப்பிட,வெளியே போனவன் சிறிது நிமிடத்தில் கவரோடு உள்ளே வந்து, அதில் இருந்த பணத்தை நீட்ட, நீயே சாமிக்கிட்ட வச்சிடு அப்பு என்றார் பெருமாள்.
சரிங்க மாமா என்றவன் சாமி ஃபோட்டோக்கள் அருகில் சென்றவன், அங்கிருந்த சிந்து ஃபோட்டோவை பார்த்து, ரிது என்று கத்தினான்.
மித்ரனின் சத்தத்தில்,என்னாச்சு என்றபடி முற்றத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் சாமியறைக்கு ஓடி வந்தனர்.
என்னாச்சுடானு ரிதுவர்ஷன் கேட்க, கையை நீட்டி மித்ரன் காட்டியதை பார்த்த ரிது வர்ஷனும் அதிர்ந்தவனின் வாயிலிருந்து வந்த சிந்து ஆன்ட்டி என்ற பேரை கேட்டு வீட்டினர் அதிர்ந்தனர்.
அப்பு இப்போ நீ என்ன பேரு சொன்ன? என்று பிரகாசம் தாத்து கேட்க, தாத்தா இவங்க,இவங்க சிந்து ஆன்ட்டி.
ரிது உனக்கு இவங்களை தெரியுமா? அவனிடம் வந்து பார்வதி கேட்க,அய்யோ அத்தை ஆன்ட்டிய எங்களுக்கு நல்லா தெரியும்.
என்னப்பா சொல்லுற என்றபடியே நெஞ்சை பிடித்துக்கொண்டு வள்ளி அப்பாயி கீழே உட்கார,அத்தை உங்களுக்கு என்னாச்சென்று சீதா பதற,ஒன்னும் இல்லத்தா.
அப்பு நல்லா பார்த்து சொல்லு சாமி, உண்மையிலே உனக்கு இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண்ணை தெரியுமானு மீண்டும் வள்ளி அப்பாயி கேட்க,ஆமா அப்பாயி.
அவர்கள் எல்லாரும் அதிர்ந்து நிற்பதை பார்த்து மித்ரனுக்கும், வர்ஷனுக்கும் ஒன்னும் புரியவில்லை.
உங்க எல்லாருக்கும் என்னாச்சு?.
எதுக்கு உயிரோட இருக்கும் ஆன்டிக்கு போய் மாலை போட்டு வச்சிருக்கீங்களென மித்ரன் கேட்க, என்ன சிந்து உயிரோட தான் இருக்கா என்று சந்தோஷத்தில் அதிர்ந்தனர்
ஆமாம்பா என்ற வர்ஷன், ஒரு நிமிஷம் இருங்க என்றபடியே தனது ஃபோனை எடுத்து, குழந்தைகள் பர்த்டேவில் எடுத்த ஃபோட்டோஸ், மற்றும், மித்ரன் நிச்சயத்தில் எடுத்த ஃபோட்டோவில் இருக்கும் சிந்துவை காட்டினான்.
பார்த்த வீட்டினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
முதல்ல எனக்கு சொல்லுங்க,எதுக்கு இப்படி ஒரு செயலென்று வர்ஷன் கேட்க, மித்ரனுக்கும்,வர்ஷனுக்கும் மீண்டும் ஒரு முறை நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தனர்.
கேட்ட இருவருக்கும் அதிர்ச்சியே தான்.
கதிரை பார்த்த வர்ஷன், என்னைப்போலவே கல்யாணம் பண்ணிருக்கியேடானு மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.
அடேய் கதிர்,உங்கிட்ட இப்படி ஒரு செயலை நான் எதிர் பார்க்கவில்லை என்ற வர்ஷன், சரி இனி ஆக வேண்டியதை பாக்கலாம்.
உலகம் ரொம்ப சின்னதாகிட்டு, எந்த மூலையில் தாமரை இருந்தாலும் கண்டு பிடித்திடலாம் என்றவன், தனது ஃபோனிலிருந்து நவீனுக்கு கால் பண்ணினான்.
கடைசி ரிங் கட் ஆகுறதுக்குள் அட்டென் பண்ணிய நவீனிடம், எங்கடா இருக்க என்க,மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் என்றான் நவீன்.
உனக்கு ஏற்ற வேலைதான், ஆன்ட்டி ஹாஸ்பிட்டலுக்கு போயாச்சானு வர்ஷன் கேட்க?,என்னடா வெறுப்பேத்துரியா?.மூனும் சேர்ந்து பொண்ணை பாரு, புண்ணாக்கை பாருனு இழுத்துட்டு வந்துருக்குங்கடா.
அவளுக்கு மேக்கப் ஐட்டம் வாங்கி கொடுக்கவே நான் இன்னும் ஓவர் டைம் பாக்கனுமென்று நவீன் புலம்பினான்.
நண்பன் சொன்னதைக்கேட்டு சிரித்த வர்ஷன், இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணுடா நேரடியா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கவும்,அடப்பாவி...
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டுனு நவீன் பாட, மச்சி இந்த நடிப்பை எல்லாம் சிவாஜி காலத்திலே பார்த்தாச்சி பார்த்தாச்சி என்றவன் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டா.
என்னவென்று சொல்லுடானு நவீன் கேட்க, கொஞ்சம் அங்கிருந்து எந்திரிச்சி வெளியே வா.ம்ம் என்று அதேப்போல வந்தவனிடம் சுருக்கமாக விஷயத்தை சொல்லி விட, அனைத்தையும் கேட்ட நவீனுக்கு அதிர்ச்சி தான்.
சரி மச்சி மீதிய நான் பார்த்துக்குறேன் தமிழ்நாட்டில் மீட் பண்ணலாம்டா என்றாவாறு கட் பண்ணினான்.
நவீன் தன்னோட பிஸ்னஸ் பார்ட்னர் என்றும் அனேகமா இன்னும் இரண்டு நாளில் நவீன் ஆன்ட்டியோடு இங்கு வருவான்.என்ன கேட்க்கனுமோ தாராளமா கேளுங்கப்பா.
ஆனால் அவங்களை வெறுத்துடாதீங்க என்ற வர்ஷன், மிஸ்டர்.ஜான் தியோல் எதற்கு அக்ரிமென்டில் சைன் பண்ணாம வந்தீங்க? என்றான்.
இது என்னடா புது குழப்பமென்று எல்லாரும் பார்த்தனர்.
அப்பு என்ன சொல்லுறனு வள்ளி அப்பாயி கேட்க,ஆமாம் அப்பாயி, ஜான் எனக்கு ஆஸ்திரேலியாவிலே தெரியும்.
அவரை இன்டர்வியூ பண்ணியதே நான் தான். எல்லாம் ஒத்து வந்த நேரத்தில் திடீர்னு ஆளைக்காணும்.கான்டக்ட் பண்ண முடியலை. அதும் இல்லாமல் யாருக்கும் இவரை பற்றிய முழு விவரமும் அங்கு தெரியலை என்க..
பின்னர் ஜானே தனது தந்தையின் உடல் நிலை பற்றி சொல்லியவன்,அதனால் தான் உங்கள் கூட பிஸ்னஸ் டீல் வைக்க முடியவில்லை.அப்போ இருந்த நிலமையில் என்னால் இன்பார்ம் பண்ண முடியவில்லை சார், சாரி என்று சொல்லி வருத்தப்பட,அச்சோ
இப்போ அங்கிளுக்கு எப்படி இருக்கென்று மித்ரனும், வர்ஷனும் கேட்க, சர்ஜரி பண்ணியாகனும்.
அதனால் தான் கிடைத்த டிக்கெட்டில் இந்தியாக்கு வந்துட்டேன் சார்.
அடேய் இவன் என்னடா ஸ்கூல் புள்ளைங்க போல சாரு மோருனு, அந்த ரெண்டு வளர்ந்த மாடுகளுக்கு எப்படியோ உனக்கும் அப்படிதானென்ற வர்ஷன், சர்ஜரி எங்கே பண்ணலானு இருக்கீங்க என்க.
மதுரையில் தான்.
சரி ஒன்னும் பிரச்சினை இல்லை. நம்ம சகலை கார்டியாலஜிஸ்ட் தான். அடுத்த வாரம் குன்னூருக்கு வரான்.அங்கிள் ரிப்போர்டை எனக்கு மெயில் பண்ணு, அவன் கிட்ட சஜசன் பண்ணிக்கலாம்.
அசாம்லே பேமஸ் கார்டியாலஜிஸ்ட் நிகிலேஷ் சந்தர். ஷாலினியோட அத்தைப்பையன் தான் என்ற வர்ஷன், மேலும் சிறிது நேரம் வீட்டினரோடு பேசிக்கொண்டிருந்து விட்டு,மித்ரனும், வர்ஷனும் அங்கிருந்து கிளம்பினர்.
டேய் பனைமரம், வர்ஷன் அண்ணா கம்பனிக்காடா டீலிங் பேச போயிருந்தனு அதிர்சியோடு வேலு கேட்க,என்னோட புராஜெக்ட் அவங்களுக்கு பிடிச்சிட்டுடா. மேற்கொண்டு இன்வெஸ்ட் பண்றதை பற்றி யோசித்து முடிவு பண்ணலானு இருக்கும் போது தான், மிலிட்ரிக்கு இப்படினு அம்மா கால் பண்ணி சொல்லுச்சி.
வேதாவின் நினைவில் அழுது கொண்டிருந்தவள்,எப்பொழுது தூங்கினாளென்று தெரியாது.
வழக்கம் போல் அதிகாலை விழிப்பு வரவும் குளித்து முடித்து நீண்ட கூந்தலை இரண்டு சைடிலிருந்தும் சிறிது முடியை எடுத்து கிளிப் போட்டவள், பின்னர் ஈரம் போக விரித்து விட்டு, கீழே வந்து வாசலை கூட்டி விட்டு கோலத்தை போட்டாள்.
அப்பொழுது முன் கதவை திறந்து வாக்கிங் போவதற்காக வந்த மாறன்,அங்கிருந்தவளை பார்த்து அசந்து போனான்.
நீண்ட முடி மயில் தோகை போல படர்ந்து விரிந்து தரையில் புரள, நளினமாக கோலம் போடுபவளை ரசித்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தனது அம்மா வரும் காலடி சத்தம் கேட்டு சுதாரித்தவன், அடேய் இது தப்புடா. உன்னை நம்பி தான், இவளை உன் தங்கச்சி அனுப்பி வைத்திருக்கிறாளென அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.
வாசலுக்கு வந்த பூரணி எந்திரிச்சிட்டியாடாமா என்க,ஆமாம்மா. வழக்கம் போல விழிப்பு வந்துட்டு.இனி இந்த வேலையை நான் பார்த்துக்குறேன், நீங்க சிரமப்படாதீங்க.
சரிடாமா.வா காஃபி ரெடியா இருக்கு என்க, இதோ வந்துட்டேன் என்றபடியே அவரோடு உள்ளே வந்தாள்.
இரண்டு கப்பில் காஃபியோடு வந்தவர், டைனிங் டேபிளின் மீது வைத்து விட்டு, பூனாவில் கிடைக்கின்ற சினாக்ஸை எடுத்து வந்து வைத்தார்.
டீ, காஃபி கூட இதை சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்றவரிடம், இதற்கு பேர் என்னம்மா? என்க.
காரி,பட்டர்..நம்ப ஊர் சைடில் வறுக்கி போல தான், ஆனால் அவ்வளவு ஹார்டா இருக்காது சாப்பிட்டு பாரு.இது இல்லைனா லீனா வீட்டையோ ரெண்டாக்கிடுவாளென சிரித்தார்.
பின்னர் சமையலறைக்குள் வந்தவள், முதல் நாள் இரவு மாறன் கேட்டது போல பீட்ரூட் சப்பாத்தியும், பன்னீர் பட்டர் மசாலாவும் செய்தவள், விஸ்வத்திற்காக, உடைத்த கோதுமையில் புலாவும், அதற்கு தேங்காய் சட்னியையும் செய்து முடிக்க, அம்மா காஃபி என்றபடியே மாறன் வந்தான்.
சரிங்கம்மா நான் போய் ரெடியாகிட்டு வரேனென்றவள் அனார்கலி மாடல் சுடிதாரை போட்டுக்கொண்டு, காய்ந்த தலைமுடியை அழகாய் பின்னி அப்பாயின்மென்ட் லட்டரை எடுத்து ஹேண்ட் பேகில் வைத்துக்கொண்டாள்.
நெற்றியில் சின்ன பொட்டை மட்டும் வைத்தவள், பேகையும், ஃபோனையும் எடுத்துக்கொண்டு கீழே வர, விஸ்வம் பூஜையறையில் ஸ்லோகம் படித்துக்கொண்டிருந்தார்.
ஹேண்ட் பேகை டைனிங் டேபிளின் மேல் வைத்து விட்டு, சாமியறைக்கு முன்பு போய் கண் மூடி நிற்க,அம்மாடி தாமரை அபிராமி அந்தாதி ஒன்னு பாடென விஸ்வம் சொல்ல, நானா என்று அதிர்ந்து கண்ணை திறக்க,ம்ம் என்றவர், சாமியை நோக்கி வணங்க, சரணம் மட்டும் அவள் பாட, அந்த குரலில் மூவரும் மெய் மறந்து போயினர்.
சூடம் ஏந்திய தட்டோடு வெளியே வந்தவர், இனி நீதான் தினமும் சாமிக்கு முன்னாடி எதாவது சரணமோ இல்லை பல்லவியோ பாட வேண்டும்.
இதை உன்னுடைய வழக்கமாக வைத்துக் கொள்ளென தட்டிலிருந்த, விபூதி குங்குமத்தை அவள் நெற்றியில் பூசியவர்,தீர்க்க சுமங்கலியாக இருமா என்றார்.
அந்த சுமங்கலி என்ற வார்த்தையை கேட்டவள் அதிர்ந்து, பின் சுதாரித்து கொண்டாள்.பின்னர் இருவரும் சாப்பிட்டு காரில் ஏரி ஆபிஸை நோக்கிச்சென்றனர்.
கார் பார்க்கிங்கில் வந்து நிறுத்தியவன் ஆல் த பெஸ்ட் என்க, தேங்க்யூ சாரென சொல்லிக்கொண்டு கதவை திறந்து இறங்கியவள், அங்கிருந்த லிப்டில் ஏறி டிசைனிங் தளத்திற்கு சென்றாள்.
காரிலிருந்து இறங்கியவன், திமிரு புடிச்சவள், சாராம் சார். ஏன் மாறனு சொன்னாள் தேய்ஞ்சு போய்டுவாளோனு மனதிற்குள் திட்டிக்கொண்டே தனது தளத்திற்கு வந்தவன், அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
டிசைனிங் செக்க்ஷனுக்கு வந்தவள் அங்கிருந்த மேனேஜரிடம் அப்பாயின்மென்ட் லெட்டரை காட்ட, வாங்கி படித்தவர், அவரும் ஆல் த பெஸ்ட் சொல்லி விட்டு,வேலையில் முன் அனுபவம் இருந்தாலும் கம்பெனி ரூல்ஸ் படி ஒன் மந்த் டிரைனிங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
அவளோடு இன்னும் சிலரும் வந்து ஜாயின்ட் பண்ணிக்கொண்டார்கள்.
சீமக்கரை....
அதிர்ந்து நிற்கும் செல்வத்தை பார்த்த வீட்டினர்கள்,இருக்கும் சூழலை மறந்து சிரித்தனர்.
என்ன மச்சான் பேயறைஞ்ச போல நிக்குறனு பெருமாள் கேட்க,எலே நீங்க ரெண்டு பேரும் எப்போல வந்தீங்க என்கவும்,ம்ம் அது வந்து 30 வருஷம் ஆகிட்டு என்றான் ரிது வர்ஷன்.
எலே ரெண்டு புள்ளை பெத்துட்டாலும் உன் குசும்புக்கு கொறைச்சல் இல்லை என்ற செல்வமோ குடும்பத்தை பற்றி அவர்களிடம் விசாரித்தார்.
அங்கு வந்த ராதா சாப்பாடு ரெடி என்க,அப்பு முதல்ல சாப்டுங்க, பிறகு எல்லாத்தையும் பேசிக்கொள்ளலாம் என்றார் பிரகாசம் தாத்தா.
பார்வதி, சீதா, ராதா மூவரும் பரிமாற அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்
அம்மாடி நீங்களும் சாப்பிடுங்க என்றார் வள்ளி அப்பாயி.
மாப்பு என்று ரிது கூப்பிட,வெளியே போனவன் சிறிது நிமிடத்தில் கவரோடு உள்ளே வந்து, அதில் இருந்த பணத்தை நீட்ட, நீயே சாமிக்கிட்ட வச்சிடு அப்பு என்றார் பெருமாள்.
சரிங்க மாமா என்றவன் சாமி ஃபோட்டோக்கள் அருகில் சென்றவன், அங்கிருந்த சிந்து ஃபோட்டோவை பார்த்து, ரிது என்று கத்தினான்.
மித்ரனின் சத்தத்தில்,என்னாச்சு என்றபடி முற்றத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் சாமியறைக்கு ஓடி வந்தனர்.
என்னாச்சுடானு ரிதுவர்ஷன் கேட்க, கையை நீட்டி மித்ரன் காட்டியதை பார்த்த ரிது வர்ஷனும் அதிர்ந்தவனின் வாயிலிருந்து வந்த சிந்து ஆன்ட்டி என்ற பேரை கேட்டு வீட்டினர் அதிர்ந்தனர்.
அப்பு இப்போ நீ என்ன பேரு சொன்ன? என்று பிரகாசம் தாத்து கேட்க, தாத்தா இவங்க,இவங்க சிந்து ஆன்ட்டி.
ரிது உனக்கு இவங்களை தெரியுமா? அவனிடம் வந்து பார்வதி கேட்க,அய்யோ அத்தை ஆன்ட்டிய எங்களுக்கு நல்லா தெரியும்.
என்னப்பா சொல்லுற என்றபடியே நெஞ்சை பிடித்துக்கொண்டு வள்ளி அப்பாயி கீழே உட்கார,அத்தை உங்களுக்கு என்னாச்சென்று சீதா பதற,ஒன்னும் இல்லத்தா.
அப்பு நல்லா பார்த்து சொல்லு சாமி, உண்மையிலே உனக்கு இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண்ணை தெரியுமானு மீண்டும் வள்ளி அப்பாயி கேட்க,ஆமா அப்பாயி.
அவர்கள் எல்லாரும் அதிர்ந்து நிற்பதை பார்த்து மித்ரனுக்கும், வர்ஷனுக்கும் ஒன்னும் புரியவில்லை.
உங்க எல்லாருக்கும் என்னாச்சு?.
எதுக்கு உயிரோட இருக்கும் ஆன்டிக்கு போய் மாலை போட்டு வச்சிருக்கீங்களென மித்ரன் கேட்க, என்ன சிந்து உயிரோட தான் இருக்கா என்று சந்தோஷத்தில் அதிர்ந்தனர்
ஆமாம்பா என்ற வர்ஷன், ஒரு நிமிஷம் இருங்க என்றபடியே தனது ஃபோனை எடுத்து, குழந்தைகள் பர்த்டேவில் எடுத்த ஃபோட்டோஸ், மற்றும், மித்ரன் நிச்சயத்தில் எடுத்த ஃபோட்டோவில் இருக்கும் சிந்துவை காட்டினான்.
பார்த்த வீட்டினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
முதல்ல எனக்கு சொல்லுங்க,எதுக்கு இப்படி ஒரு செயலென்று வர்ஷன் கேட்க, மித்ரனுக்கும்,வர்ஷனுக்கும் மீண்டும் ஒரு முறை நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தனர்.
கேட்ட இருவருக்கும் அதிர்ச்சியே தான்.
கதிரை பார்த்த வர்ஷன், என்னைப்போலவே கல்யாணம் பண்ணிருக்கியேடானு மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.
அடேய் கதிர்,உங்கிட்ட இப்படி ஒரு செயலை நான் எதிர் பார்க்கவில்லை என்ற வர்ஷன், சரி இனி ஆக வேண்டியதை பாக்கலாம்.
உலகம் ரொம்ப சின்னதாகிட்டு, எந்த மூலையில் தாமரை இருந்தாலும் கண்டு பிடித்திடலாம் என்றவன், தனது ஃபோனிலிருந்து நவீனுக்கு கால் பண்ணினான்.
கடைசி ரிங் கட் ஆகுறதுக்குள் அட்டென் பண்ணிய நவீனிடம், எங்கடா இருக்க என்க,மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் என்றான் நவீன்.
உனக்கு ஏற்ற வேலைதான், ஆன்ட்டி ஹாஸ்பிட்டலுக்கு போயாச்சானு வர்ஷன் கேட்க?,என்னடா வெறுப்பேத்துரியா?.மூனும் சேர்ந்து பொண்ணை பாரு, புண்ணாக்கை பாருனு இழுத்துட்டு வந்துருக்குங்கடா.
அவளுக்கு மேக்கப் ஐட்டம் வாங்கி கொடுக்கவே நான் இன்னும் ஓவர் டைம் பாக்கனுமென்று நவீன் புலம்பினான்.
நண்பன் சொன்னதைக்கேட்டு சிரித்த வர்ஷன், இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணுடா நேரடியா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கவும்,அடப்பாவி...
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டுனு நவீன் பாட, மச்சி இந்த நடிப்பை எல்லாம் சிவாஜி காலத்திலே பார்த்தாச்சி பார்த்தாச்சி என்றவன் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டா.
என்னவென்று சொல்லுடானு நவீன் கேட்க, கொஞ்சம் அங்கிருந்து எந்திரிச்சி வெளியே வா.ம்ம் என்று அதேப்போல வந்தவனிடம் சுருக்கமாக விஷயத்தை சொல்லி விட, அனைத்தையும் கேட்ட நவீனுக்கு அதிர்ச்சி தான்.
சரி மச்சி மீதிய நான் பார்த்துக்குறேன் தமிழ்நாட்டில் மீட் பண்ணலாம்டா என்றாவாறு கட் பண்ணினான்.
நவீன் தன்னோட பிஸ்னஸ் பார்ட்னர் என்றும் அனேகமா இன்னும் இரண்டு நாளில் நவீன் ஆன்ட்டியோடு இங்கு வருவான்.என்ன கேட்க்கனுமோ தாராளமா கேளுங்கப்பா.
ஆனால் அவங்களை வெறுத்துடாதீங்க என்ற வர்ஷன், மிஸ்டர்.ஜான் தியோல் எதற்கு அக்ரிமென்டில் சைன் பண்ணாம வந்தீங்க? என்றான்.
இது என்னடா புது குழப்பமென்று எல்லாரும் பார்த்தனர்.
அப்பு என்ன சொல்லுறனு வள்ளி அப்பாயி கேட்க,ஆமாம் அப்பாயி, ஜான் எனக்கு ஆஸ்திரேலியாவிலே தெரியும்.
அவரை இன்டர்வியூ பண்ணியதே நான் தான். எல்லாம் ஒத்து வந்த நேரத்தில் திடீர்னு ஆளைக்காணும்.கான்டக்ட் பண்ண முடியலை. அதும் இல்லாமல் யாருக்கும் இவரை பற்றிய முழு விவரமும் அங்கு தெரியலை என்க..
பின்னர் ஜானே தனது தந்தையின் உடல் நிலை பற்றி சொல்லியவன்,அதனால் தான் உங்கள் கூட பிஸ்னஸ் டீல் வைக்க முடியவில்லை.அப்போ இருந்த நிலமையில் என்னால் இன்பார்ம் பண்ண முடியவில்லை சார், சாரி என்று சொல்லி வருத்தப்பட,அச்சோ
இப்போ அங்கிளுக்கு எப்படி இருக்கென்று மித்ரனும், வர்ஷனும் கேட்க, சர்ஜரி பண்ணியாகனும்.
அதனால் தான் கிடைத்த டிக்கெட்டில் இந்தியாக்கு வந்துட்டேன் சார்.
அடேய் இவன் என்னடா ஸ்கூல் புள்ளைங்க போல சாரு மோருனு, அந்த ரெண்டு வளர்ந்த மாடுகளுக்கு எப்படியோ உனக்கும் அப்படிதானென்ற வர்ஷன், சர்ஜரி எங்கே பண்ணலானு இருக்கீங்க என்க.
மதுரையில் தான்.
சரி ஒன்னும் பிரச்சினை இல்லை. நம்ம சகலை கார்டியாலஜிஸ்ட் தான். அடுத்த வாரம் குன்னூருக்கு வரான்.அங்கிள் ரிப்போர்டை எனக்கு மெயில் பண்ணு, அவன் கிட்ட சஜசன் பண்ணிக்கலாம்.
அசாம்லே பேமஸ் கார்டியாலஜிஸ்ட் நிகிலேஷ் சந்தர். ஷாலினியோட அத்தைப்பையன் தான் என்ற வர்ஷன், மேலும் சிறிது நேரம் வீட்டினரோடு பேசிக்கொண்டிருந்து விட்டு,மித்ரனும், வர்ஷனும் அங்கிருந்து கிளம்பினர்.
டேய் பனைமரம், வர்ஷன் அண்ணா கம்பனிக்காடா டீலிங் பேச போயிருந்தனு அதிர்சியோடு வேலு கேட்க,என்னோட புராஜெக்ட் அவங்களுக்கு பிடிச்சிட்டுடா. மேற்கொண்டு இன்வெஸ்ட் பண்றதை பற்றி யோசித்து முடிவு பண்ணலானு இருக்கும் போது தான், மிலிட்ரிக்கு இப்படினு அம்மா கால் பண்ணி சொல்லுச்சி.