Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
"இந்த வருஷம் வினித் 12 ஆம் வகுப்பாச்சே ஜனனி,ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு உன் தம்பிகாரன் இன்றைக்கும் பள்ளிக்கூடம் போயிருக்கிறான்".
"ஆமாம்மா, இப்போலாம் எல்லா ஸ்கூலிலும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இப்படி நேரம் ஒதுக்குறாங்க".
"அச்சோ நான் பேசிகிட்டே இருக்கேனே என்றவள்,பாட்டி அம்மாக்கு குடிக்க எதாவது கொடுத்தீர்களா?".
"ம்கும்,இப்போ தான் இந்த சித்துராங்கிக்கு தெரிஞ்சிருக்கு என்றவர்,ஏண்டி எங்கள பாத்தா மனுசனா தெரியலையா?
"ஏன் நாங்க எல்லாம் வாங்கி கொடுக்க மாட்டோமாக்குமானு கண்ணம்மா பாட்டி கேட்க,ஜனனியோ,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையென்றாள்".
"ஓஓஓஓ,வேறு எதுக்குடி குறைச்சலென்க,தினமும் என் வாயை புடுங்காமல் உங்களால சும்மாவே இருக்க முடியாதானு பல்லை கடித்தாள்".
" ஏண்டி உன் பல்லு என்ன நாற்றா, இல்லை செடியானு கண்ணம்மா பாட்டி சிரிக்க,தனது சின்னம்மாவும்,தங்கச்சி மகளும் பேசுவதை பார்த்த மலருக்கு சிரிப்பு தாங்கவில்லை".
அண்ணி,இவங்க மூன்று பேர் பஞ்சாயத்தை தீர்க்க இந்த உலகத்திலே ஆள் இருக்கமாட்டாங்கனு மாரியப்பனும் சிரித்தார்".
"ஏத்தா..,அதான் உம்மவகாரி வந்துட்டாளே, அவள் கிட்ட நீயே விஷயத்தை சொல்ல வேண்டியது தானேனு ராக்கம்மா பாட்டி கேட்க, சொல்லணும் தான் அத்தை".
"அப்படி என்ன இந்த மேடம் புதிர் போடுறாங்களென்று தன் பெரியம்மாவிடம் கேட்க,எல்லாம் நல்ல விஷயம் தாண்டா.உங்க பெரியப்பா,அன்புக்கு உன்னை பொண்ணு கேட்க சொல்லுறாங்கடா".
அது விஷயமா தான்,நான் உங்க எல்லார்கிட்டயும் பேசிட்டு போகலானு வந்தேன்".
"இப்படியொரு விஷயத்தை மலர் சொல்லுவாறென்று ஜனனியோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை".
"அடுத்த வாரம் அன்பு சிங்கப்பூர்ல இருந்து வரான் மா".அவனுக்கொரு கல்யாணத்தை பண்ணனும் இல்லாயாடா,நம்ப வீட்டில் பொண்ணு இருக்க,வெளியே ஏன் பார்க்கணும்னு உங்க பெரியப்பா சொல்லிட்டாங்கடா".
அவர் சொல்வதும் சரிதானே ஜனனி.
"எங்க எல்லாருக்கும் இந்த விஷயத்தில் சம்மதம்மா,இப்போ உன் பதிலை நீ தான் சொல்லணுமென்று,முடிவை ஜனனியிடம் விட்டு விட்டார்".
"ஜனனிக்கோ சிறிதும் பேச்சு எழும்பவில்லை".
"மூவரும் ஒருவித ஆர்வத்தோடு என்ன சொல்லப்போகிறாளோனு ஜனனியின் முகத்தையே குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்".
தனது கண்ணை மூடி திறந்தவள், எனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு வெறுப்பும் இல்லைங்கம்மா.எது செய்தாலும் நீங்கள் என் நல்லதுக்கு தான் செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும்.உங்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமென்று சொல்லி விட்டு,வேகமா அங்கிருந்து வீட்டின் உள்ளே சென்று விட்டாள்".
"ஜனனி சொல்லிச்சென்ற பதிலை கேட்ட மூவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை".ஆத்தா மீனாட்சி நீயே நல்லபடியா இதை நடத்திக்குடுத்தா என்றபடி கையைகூப்பி கண்ணம்மா பாட்டி வணங்கினார்".
"உள்ளே வந்த ஜனனி,சுவற்றில் மாட்டியிருந்த தனது தாய் மல்லிகாவின் ஃபோட்டைவை பார்க்க, அவள் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தோடியது".
"அம்மா உனக்கு எது சரின்னு படுதோ அதுவே என் வாழ்க்கையில் நடக்கட்டுமென்று சொல்லியவள், கண்ணை துடைத்துக் கொண்டு சமையற்கட்டிற்குள் சென்றாள்".
"வெளியே உட்கார்ந்திருந்த மூவரும், அடுத்தது என்ன பண்ண வேண்டுமென்று பேச்சை ஆரம்பித்தனர்".
"அந்த நேரம் கீதாவும் அங்கு வந்தாள்".
"வாங்கம்மா,எப்போ வந்தீங்கனு மலரிடம் கேட்க,கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வந்தேன் கீதா".நீ நல்லாருக்கியா?,சோமு மாமா( கீதா அப்பா),கலா நல்லா இருக்காங்களா?.
எல்லாரும் நல்லா இருக்கோம் பெரியம்மா என்றவள்,இரண்டு பாட்டியை பார்த்து முகத்தை இடம் வலம் முறுக்கி காட்டி விட்டு உள்ளே சென்றாள்.
"பாத்துடி,முறுக்கும்போதே, வடக்க மொகரகட்டை இழுத்துக்க போகுதென்றார் ராக்காம்மா பாட்டி".
ராக்கம்மா பாட்டி சொன்னதை கேட்ட கீதா,போனவள் திரும்பி வந்து,உன் வாய்ல வசம்பை தான் வச்சி தேய்க்கணுமென்று சொல்லி விட்டு, மீண்டும் உள்ளே சென்றாள்.
"ஜனா, ஜனா என்றபடியே சமையற்கட்டுக்குள் வர,ம்ம் வாடி இங்க தான் இருக்கேனென்று ஜனனியும் குரல் கொடுத்தாள்".
"அங்கு வந்து சுவற்றின் மேல் சாய்ந்து உட்கார்ந்தவள்,என்னடி,மலரம்மா வந்துருக்கென்றாள்".ஆமா கீதா,பெரியம்மா வந்தே எப்படியும் ரெண்டு வருஷத்திற்கு மேல ஆகுதுடி.
அக்கா கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்ததோட சரி,நாமளும் காலேஜ் போய்விட்டதால் அன்று பார்க்க முடியலையேடி.
ஆமா ஜனா, என்ன சமைக்கிற என்க,இந்த நேரத்தில் வேற என்னத்தைடி ஆக்க,சாம்பாரும் உருளை பொரியல் தான் பண்ணப் போகிறேனென்று ,குழம்பை தாளித்து ஊற்றினாள்.
சரி குடு உருளைய நான் அரிகிறேனென்ற கீதாவோ, எழுந்து போய் அருவாள்மனையும், உருளையும்,அரிந்து போட குண்டானையும் எடுத்து வந்தவள், பொரியலுக்கு அரிய தொடங்கினாள்.
பின்னர் சமையலை முடித்து இருவரும் வெளியே வர,அங்கு கீதாவின் அப்பா அம்மாவும் மலரோடு பேசிக்கொண்டிருந்தனர்.
இரத்தினபுரி:
"ஹேப்பி பர்த்டே பாட்டினு சொல்லிக் கொண்டே மாடி படியிலிருந்து,ருத்ரன் கீழே இறங்கி வந்தான்".
"பேரனை பார்த்து தலையசைத்து ஏற்றுக்கொண்டவர் பூஜையறைக்கு அழைக்க,ம்ம் என்றபடியே சாமியின் முன்பு போய் கண்ணை மூடியவன்,அனைவரும் நல்லாயிருக்கணும்.ஆரம்பிக்கப் போகும் புதிய தொழில் உங்கள் ஆசிர்வாதத்தில் நல்ல முறையில் போக வேண்டுமென்று வணங்கினான்".
"இஷ்ட தெய்வமான கிருஷ்ணனுக்கும்,துர்கை அம்மனுக்கும் ஆரத்தி காட்டி முடித்த கிரிஜா பாட்டி,பேரனிடம் வந்தவர், அவன் நெற்றியில் விபூதி, குங்குமத்தை திலகமிட்டார்".
"பாட்டியின் செயலில் கண்ணை திறந்தவன்,ஆரத்தியை எடுத்து தனது கண்ணில் ஒற்றிக்கொண்டு, சோபாவில் போய் உட்கார்ந்தவன் காஃபி என்று குரல் கொடுத்தான்".
"சிறிது நொடியிலே வேலையாள் ஒருவர்,அவன் முன்பு இருந்த டீப்பாயின் மேல் காஃபியை வைத்துச்சென்றார்".
"குடித்து முடித்தவன்,தாத்தா என்று கூப்பிட்டான்".
"பேப்பர் படித்துக்கொண்டிருந்த சிம்ஹன் தாத்தா,ம்ம் என்றார்".
"ஷோரூம் ஓப்பனிங்கிற்கு அத்தையையும்,மாமாவையும் கூப்பிடணுமென்றான்".
"ஆமாம்,கூப்பிடணுமென்றார் சிம்ஹன் தாத்தா".
"தாத்தா என்று வீரா பல்லை கடிக்க, அதற்கும் ம்ம் என்றார்".இப்போ என்ன பரிட்சைக்கா தயாராகுறீங்க?.
இதே பேப்பரை எவ்வளவு நேரம் தான் படிப்பீங்க என்றவாறே பேப்பரை அவரிடமிருந்து பிடுங்கியவன்,அதை மடித்து டீப்பாயின் மேல் போட்டான்.
இப்போ என்ன தான் வீரா உனக்கு பிரச்சினை?.
"என்னனு விஷயத்தை சொல்ல வேண்டியது தானே".
அதை விட்டு,மனுஷனை பேப்பர் படிக்க விடாமல் இருந்தால் என்னடா அர்த்தமென்றார்?.
"அத்தை வீட்டுக்கு போகணும்".
"பாட்டியும்,நீங்களும் கிளம்புங்க என்றான்".
"போகலாம் வீரா என்றபடியே,அங்கு வந்தார் கிரிஜா பாட்டி".
"பின்னர் காலை டிபனை முடித்துக்கொண்டு, மூவரும் காரில் பயணமாகினர்".
"மூவரும் வந்த கார்,இரண்டு மணி நேர பயணத்தில்,களுத்துறை மாவட்டத்திற்குள் நுழைந்தது".
"மேலும் ஐந்து நிமிட பயணத்தில்,மேகா இல்லத்தின் வாசலில் முன்வு வந்து கார் ஹாரனை அடிக்க,வாட்ச்மேன் வந்து கதவை திறந்ததும்,கார் உள்ளே ஓடிப்போய் நின்றது".
"காரிலிருந்து மூவரும் இறங்கி, அவர்களுக்கு வாங்கிய பொருட்களோடு வீட்டில் உள்ளே சென்றனர்".
"அப்பொழுது தான் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மேகலா,அங்கு வந்து கொண்டிருந்த தனது தாய்,தந்தை,மற்றும் அண்ணன் மகனையும் பார்த்து அதிர்ந்து போய் நின்றார்".
"மேகு என்று சிம்ஹன் தாத்தா கூப்பிட,அவர் குரலில் உணர்வு வந்தவர்,அப்பா என்று வேகமாய் வந்து தாய் தந்தை இருவரின் கையை பிடித்துக்கொண்டார்".
"வாங்கப்பா, வாங்கம்மா,வா கண்ணா என்று வீராவின் கன்னம் தொட்டு சொல்ல,எப்படி இருக்கிற அத்தை?".
"அண்ணன் மகனின் கேள்விக்கு,நல்லா இருக்கிறேன் கண்ணா என்றவர்,பின்னர் மூவரையும் அழைத்து போய் சோபாவில் உட்கார வைத்துவிட்டு,இதோ வருகிறேனென்று அங்கிருந்து கிச்சனிற்குள் சென்றார்".
"வீரா கடைசியா நீ எப்போ இங்கு வந்தயென்று பேரனிடம் தாத்தா கேட்க,கனடா போகுறதுக்கு முன்பு வந்தது தாத்தா".
"ம்ம் என்றவர்,வீடே மாறிடுச்சி போல என்றபடியே எழுந்து போய் ஹாலை சுற்றி பார்க்க,வித விதமான வண்ண ஓவியங்களால் அந்த ஹால் முழவதும் நிரம்பியிருக்க பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது".
"ருத்ரனும் நல்லா இருக்கே ஓவியங்கள் என்று சொல்லி,அதன் அருகில் போய் உற்று பார்த்தவன், கீழே எழுதியிருந்த பெயரை பார்த்து இவங்கள் ஓவியமா என்று அதிர்ந்தான்!!.
அந்த நேரம் கையில் டிரேயோடு ஹாலிற்கு வந்த மேகலா,கண்ணா என்று கூப்பிட்டார்.
ஓவியத்தின் பெயரை பார்த்து அதிர்ந்து போய் நின்றவன், அத்தையின் குரல் கேட்டு,மேகு மேகு இதெல்லாம் என்று அதிர்வாய் கேட்க,ஆமா கண்ணா என்றார்.
என்ன சொல்லுறத்தை?
இந்த ஓவியங்கள் எவ்வளவு பாப்புலர் தெரியுமா?.எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாயென்றான்?.
அண்ணன் மகனின் கேள்விக்கு சிரித்தவர்,வந்து டீயை குடி கண்ணா என்றார்.
ம்ம் பணம் இருக்கென்று இஷ்டத்திற்கு இந்த ஓவியங்களை வாங்கி அலங்கரிச்சிருக்க போலனு சொல்லிக்கொண்டே அங்கு வந்தவன்,மேகலா கொடுத்த டீயை வாங்கி குடித்து முடித்தான்.
சரி மேகு,மாமா எப்போ வீட்டிற்கு வருவாங்க?.ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் வந்தோமென்றான்.
நம்ப தேயிலை எஸ்டேட்டிற்கு தான் போயிருக்காங்க.இப்போ வரும் நேரம் தான் கண்ணா என்றவர்,அதற்குள் அத்தை கிட்ட என்ன விஷயமென்று சொல்லுப்பா.
"ம்ம் என்றவன்,மாமா வரட்டுமே மேகுயென்று தனது அத்தையின் தோளில் சாய,சரி கண்ணா".உன் விருப்பம் என்றபடி,தனது பெற்றோரை பார்த்தவர்,இங்க இருக்கும் மகளை பார்க்க வர, உங்களுக்கு இத்தனை மாசமா?".
"மேகலா,நேரில் வந்து பார்த்தா தான் பாசமா?அதான் பொழுதன்னைக்கும் நீயும் உன் அம்மாவும்,மணி கணக்கில் பேசுறீங்களேமா அது போதாதா என்று சிம்ஹன் தாத்தா சிரித்தார்.
அதுவும்,இதுவும் ஒன்றாங்கப்பா?சொல்லுங்க என்று மேகலா கேட்க,என்னம்மா செய்ய?.
"பொண்ணை கட்டி கொடுத்த வீட்டிற்கு,என்றோ ஒரு நாள் வந்து போவது தான் மரியாதை."
"அப்பொழுது தான் உறவும் சுமூகமாக போகுமென்று சொல்லியவர்,எங்கே இருந்தாலும் எங்களுக்கு உன் ஞாபகம் இல்லாமல் போய்விடுமா? சொல்லு?".
"தந்தை சொன்னதை கேட்ட மேகலா,அய்யோ அப்பா,மகள் வீட்டிற்கு வருவதற்குமா இந்த கொள்கை என்க,கண்டிப்பாகம்மா.உன் அண்ணன் வீட்டிற்கு கூட நான் இதுவரை போகவில்லையேமா என்றதும்,மேகலா வாயை மூடிக்கொண்டார்".
வாங்க,வாங்க என்று சொல்லியவாறே அங்கு வந்தார் மேகலாவின் கணவரும்,ருத்ரனின் தாய் மாமனாகிய சுந்தர்.
நல்லா இருக்கீங்களாயென்று தனது மாமனார் மாமியாரை சுந்தர் விசாரிக்க,இருவரும் நல்லாயிருக்கோம் மாப்பிள்ளை என்றனர்.
"வீரா என்று தனது தங்கை மகனை நோக்கி கை நீட்ட,தனது மாமனை அணைத்துக்கொண்டான்".
"நல்லா இருக்கியா கண்ணா என்றவாறு மருமகனின் தலையை தடவி விட நல்லா இருக்கேன் மாமா, உங்களுக்கு உடம்பு நல்லா இருக்கா?".
உன் அத்தை இருக்கும் போது எனக்கென்ன கண்ணா கவலை என்றவர்,மேகலா சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டியா என்க,ம்ம் ஆச்சுங்க என்று கணவருக்கு பதில் சொன்னார்.
"இந்த வருஷம் வினித் 12 ஆம் வகுப்பாச்சே ஜனனி,ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு உன் தம்பிகாரன் இன்றைக்கும் பள்ளிக்கூடம் போயிருக்கிறான்".
"ஆமாம்மா, இப்போலாம் எல்லா ஸ்கூலிலும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இப்படி நேரம் ஒதுக்குறாங்க".
"அச்சோ நான் பேசிகிட்டே இருக்கேனே என்றவள்,பாட்டி அம்மாக்கு குடிக்க எதாவது கொடுத்தீர்களா?".
"ம்கும்,இப்போ தான் இந்த சித்துராங்கிக்கு தெரிஞ்சிருக்கு என்றவர்,ஏண்டி எங்கள பாத்தா மனுசனா தெரியலையா?
"ஏன் நாங்க எல்லாம் வாங்கி கொடுக்க மாட்டோமாக்குமானு கண்ணம்மா பாட்டி கேட்க,ஜனனியோ,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லையென்றாள்".
"ஓஓஓஓ,வேறு எதுக்குடி குறைச்சலென்க,தினமும் என் வாயை புடுங்காமல் உங்களால சும்மாவே இருக்க முடியாதானு பல்லை கடித்தாள்".
" ஏண்டி உன் பல்லு என்ன நாற்றா, இல்லை செடியானு கண்ணம்மா பாட்டி சிரிக்க,தனது சின்னம்மாவும்,தங்கச்சி மகளும் பேசுவதை பார்த்த மலருக்கு சிரிப்பு தாங்கவில்லை".
அண்ணி,இவங்க மூன்று பேர் பஞ்சாயத்தை தீர்க்க இந்த உலகத்திலே ஆள் இருக்கமாட்டாங்கனு மாரியப்பனும் சிரித்தார்".
"ஏத்தா..,அதான் உம்மவகாரி வந்துட்டாளே, அவள் கிட்ட நீயே விஷயத்தை சொல்ல வேண்டியது தானேனு ராக்கம்மா பாட்டி கேட்க, சொல்லணும் தான் அத்தை".
"அப்படி என்ன இந்த மேடம் புதிர் போடுறாங்களென்று தன் பெரியம்மாவிடம் கேட்க,எல்லாம் நல்ல விஷயம் தாண்டா.உங்க பெரியப்பா,அன்புக்கு உன்னை பொண்ணு கேட்க சொல்லுறாங்கடா".
அது விஷயமா தான்,நான் உங்க எல்லார்கிட்டயும் பேசிட்டு போகலானு வந்தேன்".
"இப்படியொரு விஷயத்தை மலர் சொல்லுவாறென்று ஜனனியோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை".
"அடுத்த வாரம் அன்பு சிங்கப்பூர்ல இருந்து வரான் மா".அவனுக்கொரு கல்யாணத்தை பண்ணனும் இல்லாயாடா,நம்ப வீட்டில் பொண்ணு இருக்க,வெளியே ஏன் பார்க்கணும்னு உங்க பெரியப்பா சொல்லிட்டாங்கடா".
அவர் சொல்வதும் சரிதானே ஜனனி.
"எங்க எல்லாருக்கும் இந்த விஷயத்தில் சம்மதம்மா,இப்போ உன் பதிலை நீ தான் சொல்லணுமென்று,முடிவை ஜனனியிடம் விட்டு விட்டார்".
"ஜனனிக்கோ சிறிதும் பேச்சு எழும்பவில்லை".
"மூவரும் ஒருவித ஆர்வத்தோடு என்ன சொல்லப்போகிறாளோனு ஜனனியின் முகத்தையே குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்".
தனது கண்ணை மூடி திறந்தவள், எனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு வெறுப்பும் இல்லைங்கம்மா.எது செய்தாலும் நீங்கள் என் நல்லதுக்கு தான் செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும்.உங்கள் விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பமென்று சொல்லி விட்டு,வேகமா அங்கிருந்து வீட்டின் உள்ளே சென்று விட்டாள்".
"ஜனனி சொல்லிச்சென்ற பதிலை கேட்ட மூவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை".ஆத்தா மீனாட்சி நீயே நல்லபடியா இதை நடத்திக்குடுத்தா என்றபடி கையைகூப்பி கண்ணம்மா பாட்டி வணங்கினார்".
"உள்ளே வந்த ஜனனி,சுவற்றில் மாட்டியிருந்த தனது தாய் மல்லிகாவின் ஃபோட்டைவை பார்க்க, அவள் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தோடியது".
"அம்மா உனக்கு எது சரின்னு படுதோ அதுவே என் வாழ்க்கையில் நடக்கட்டுமென்று சொல்லியவள், கண்ணை துடைத்துக் கொண்டு சமையற்கட்டிற்குள் சென்றாள்".
"வெளியே உட்கார்ந்திருந்த மூவரும், அடுத்தது என்ன பண்ண வேண்டுமென்று பேச்சை ஆரம்பித்தனர்".
"அந்த நேரம் கீதாவும் அங்கு வந்தாள்".
"வாங்கம்மா,எப்போ வந்தீங்கனு மலரிடம் கேட்க,கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வந்தேன் கீதா".நீ நல்லாருக்கியா?,சோமு மாமா( கீதா அப்பா),கலா நல்லா இருக்காங்களா?.
எல்லாரும் நல்லா இருக்கோம் பெரியம்மா என்றவள்,இரண்டு பாட்டியை பார்த்து முகத்தை இடம் வலம் முறுக்கி காட்டி விட்டு உள்ளே சென்றாள்.
"பாத்துடி,முறுக்கும்போதே, வடக்க மொகரகட்டை இழுத்துக்க போகுதென்றார் ராக்காம்மா பாட்டி".
ராக்கம்மா பாட்டி சொன்னதை கேட்ட கீதா,போனவள் திரும்பி வந்து,உன் வாய்ல வசம்பை தான் வச்சி தேய்க்கணுமென்று சொல்லி விட்டு, மீண்டும் உள்ளே சென்றாள்.
"ஜனா, ஜனா என்றபடியே சமையற்கட்டுக்குள் வர,ம்ம் வாடி இங்க தான் இருக்கேனென்று ஜனனியும் குரல் கொடுத்தாள்".
"அங்கு வந்து சுவற்றின் மேல் சாய்ந்து உட்கார்ந்தவள்,என்னடி,மலரம்மா வந்துருக்கென்றாள்".ஆமா கீதா,பெரியம்மா வந்தே எப்படியும் ரெண்டு வருஷத்திற்கு மேல ஆகுதுடி.
அக்கா கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்ததோட சரி,நாமளும் காலேஜ் போய்விட்டதால் அன்று பார்க்க முடியலையேடி.
ஆமா ஜனா, என்ன சமைக்கிற என்க,இந்த நேரத்தில் வேற என்னத்தைடி ஆக்க,சாம்பாரும் உருளை பொரியல் தான் பண்ணப் போகிறேனென்று ,குழம்பை தாளித்து ஊற்றினாள்.
சரி குடு உருளைய நான் அரிகிறேனென்ற கீதாவோ, எழுந்து போய் அருவாள்மனையும், உருளையும்,அரிந்து போட குண்டானையும் எடுத்து வந்தவள், பொரியலுக்கு அரிய தொடங்கினாள்.
பின்னர் சமையலை முடித்து இருவரும் வெளியே வர,அங்கு கீதாவின் அப்பா அம்மாவும் மலரோடு பேசிக்கொண்டிருந்தனர்.
இரத்தினபுரி:
"ஹேப்பி பர்த்டே பாட்டினு சொல்லிக் கொண்டே மாடி படியிலிருந்து,ருத்ரன் கீழே இறங்கி வந்தான்".
"பேரனை பார்த்து தலையசைத்து ஏற்றுக்கொண்டவர் பூஜையறைக்கு அழைக்க,ம்ம் என்றபடியே சாமியின் முன்பு போய் கண்ணை மூடியவன்,அனைவரும் நல்லாயிருக்கணும்.ஆரம்பிக்கப் போகும் புதிய தொழில் உங்கள் ஆசிர்வாதத்தில் நல்ல முறையில் போக வேண்டுமென்று வணங்கினான்".
"இஷ்ட தெய்வமான கிருஷ்ணனுக்கும்,துர்கை அம்மனுக்கும் ஆரத்தி காட்டி முடித்த கிரிஜா பாட்டி,பேரனிடம் வந்தவர், அவன் நெற்றியில் விபூதி, குங்குமத்தை திலகமிட்டார்".
"பாட்டியின் செயலில் கண்ணை திறந்தவன்,ஆரத்தியை எடுத்து தனது கண்ணில் ஒற்றிக்கொண்டு, சோபாவில் போய் உட்கார்ந்தவன் காஃபி என்று குரல் கொடுத்தான்".
"சிறிது நொடியிலே வேலையாள் ஒருவர்,அவன் முன்பு இருந்த டீப்பாயின் மேல் காஃபியை வைத்துச்சென்றார்".
"குடித்து முடித்தவன்,தாத்தா என்று கூப்பிட்டான்".
"பேப்பர் படித்துக்கொண்டிருந்த சிம்ஹன் தாத்தா,ம்ம் என்றார்".
"ஷோரூம் ஓப்பனிங்கிற்கு அத்தையையும்,மாமாவையும் கூப்பிடணுமென்றான்".
"ஆமாம்,கூப்பிடணுமென்றார் சிம்ஹன் தாத்தா".
"தாத்தா என்று வீரா பல்லை கடிக்க, அதற்கும் ம்ம் என்றார்".இப்போ என்ன பரிட்சைக்கா தயாராகுறீங்க?.
இதே பேப்பரை எவ்வளவு நேரம் தான் படிப்பீங்க என்றவாறே பேப்பரை அவரிடமிருந்து பிடுங்கியவன்,அதை மடித்து டீப்பாயின் மேல் போட்டான்.
இப்போ என்ன தான் வீரா உனக்கு பிரச்சினை?.
"என்னனு விஷயத்தை சொல்ல வேண்டியது தானே".
அதை விட்டு,மனுஷனை பேப்பர் படிக்க விடாமல் இருந்தால் என்னடா அர்த்தமென்றார்?.
"அத்தை வீட்டுக்கு போகணும்".
"பாட்டியும்,நீங்களும் கிளம்புங்க என்றான்".
"போகலாம் வீரா என்றபடியே,அங்கு வந்தார் கிரிஜா பாட்டி".
"பின்னர் காலை டிபனை முடித்துக்கொண்டு, மூவரும் காரில் பயணமாகினர்".
"மூவரும் வந்த கார்,இரண்டு மணி நேர பயணத்தில்,களுத்துறை மாவட்டத்திற்குள் நுழைந்தது".
"மேலும் ஐந்து நிமிட பயணத்தில்,மேகா இல்லத்தின் வாசலில் முன்வு வந்து கார் ஹாரனை அடிக்க,வாட்ச்மேன் வந்து கதவை திறந்ததும்,கார் உள்ளே ஓடிப்போய் நின்றது".
"காரிலிருந்து மூவரும் இறங்கி, அவர்களுக்கு வாங்கிய பொருட்களோடு வீட்டில் உள்ளே சென்றனர்".
"அப்பொழுது தான் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மேகலா,அங்கு வந்து கொண்டிருந்த தனது தாய்,தந்தை,மற்றும் அண்ணன் மகனையும் பார்த்து அதிர்ந்து போய் நின்றார்".
"மேகு என்று சிம்ஹன் தாத்தா கூப்பிட,அவர் குரலில் உணர்வு வந்தவர்,அப்பா என்று வேகமாய் வந்து தாய் தந்தை இருவரின் கையை பிடித்துக்கொண்டார்".
"வாங்கப்பா, வாங்கம்மா,வா கண்ணா என்று வீராவின் கன்னம் தொட்டு சொல்ல,எப்படி இருக்கிற அத்தை?".
"அண்ணன் மகனின் கேள்விக்கு,நல்லா இருக்கிறேன் கண்ணா என்றவர்,பின்னர் மூவரையும் அழைத்து போய் சோபாவில் உட்கார வைத்துவிட்டு,இதோ வருகிறேனென்று அங்கிருந்து கிச்சனிற்குள் சென்றார்".
"வீரா கடைசியா நீ எப்போ இங்கு வந்தயென்று பேரனிடம் தாத்தா கேட்க,கனடா போகுறதுக்கு முன்பு வந்தது தாத்தா".
"ம்ம் என்றவர்,வீடே மாறிடுச்சி போல என்றபடியே எழுந்து போய் ஹாலை சுற்றி பார்க்க,வித விதமான வண்ண ஓவியங்களால் அந்த ஹால் முழவதும் நிரம்பியிருக்க பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது".
"ருத்ரனும் நல்லா இருக்கே ஓவியங்கள் என்று சொல்லி,அதன் அருகில் போய் உற்று பார்த்தவன், கீழே எழுதியிருந்த பெயரை பார்த்து இவங்கள் ஓவியமா என்று அதிர்ந்தான்!!.
அந்த நேரம் கையில் டிரேயோடு ஹாலிற்கு வந்த மேகலா,கண்ணா என்று கூப்பிட்டார்.
ஓவியத்தின் பெயரை பார்த்து அதிர்ந்து போய் நின்றவன், அத்தையின் குரல் கேட்டு,மேகு மேகு இதெல்லாம் என்று அதிர்வாய் கேட்க,ஆமா கண்ணா என்றார்.
என்ன சொல்லுறத்தை?
இந்த ஓவியங்கள் எவ்வளவு பாப்புலர் தெரியுமா?.எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாயென்றான்?.
அண்ணன் மகனின் கேள்விக்கு சிரித்தவர்,வந்து டீயை குடி கண்ணா என்றார்.
ம்ம் பணம் இருக்கென்று இஷ்டத்திற்கு இந்த ஓவியங்களை வாங்கி அலங்கரிச்சிருக்க போலனு சொல்லிக்கொண்டே அங்கு வந்தவன்,மேகலா கொடுத்த டீயை வாங்கி குடித்து முடித்தான்.
சரி மேகு,மாமா எப்போ வீட்டிற்கு வருவாங்க?.ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் வந்தோமென்றான்.
நம்ப தேயிலை எஸ்டேட்டிற்கு தான் போயிருக்காங்க.இப்போ வரும் நேரம் தான் கண்ணா என்றவர்,அதற்குள் அத்தை கிட்ட என்ன விஷயமென்று சொல்லுப்பா.
"ம்ம் என்றவன்,மாமா வரட்டுமே மேகுயென்று தனது அத்தையின் தோளில் சாய,சரி கண்ணா".உன் விருப்பம் என்றபடி,தனது பெற்றோரை பார்த்தவர்,இங்க இருக்கும் மகளை பார்க்க வர, உங்களுக்கு இத்தனை மாசமா?".
"மேகலா,நேரில் வந்து பார்த்தா தான் பாசமா?அதான் பொழுதன்னைக்கும் நீயும் உன் அம்மாவும்,மணி கணக்கில் பேசுறீங்களேமா அது போதாதா என்று சிம்ஹன் தாத்தா சிரித்தார்.
அதுவும்,இதுவும் ஒன்றாங்கப்பா?சொல்லுங்க என்று மேகலா கேட்க,என்னம்மா செய்ய?.
"பொண்ணை கட்டி கொடுத்த வீட்டிற்கு,என்றோ ஒரு நாள் வந்து போவது தான் மரியாதை."
"அப்பொழுது தான் உறவும் சுமூகமாக போகுமென்று சொல்லியவர்,எங்கே இருந்தாலும் எங்களுக்கு உன் ஞாபகம் இல்லாமல் போய்விடுமா? சொல்லு?".
"தந்தை சொன்னதை கேட்ட மேகலா,அய்யோ அப்பா,மகள் வீட்டிற்கு வருவதற்குமா இந்த கொள்கை என்க,கண்டிப்பாகம்மா.உன் அண்ணன் வீட்டிற்கு கூட நான் இதுவரை போகவில்லையேமா என்றதும்,மேகலா வாயை மூடிக்கொண்டார்".
வாங்க,வாங்க என்று சொல்லியவாறே அங்கு வந்தார் மேகலாவின் கணவரும்,ருத்ரனின் தாய் மாமனாகிய சுந்தர்.
நல்லா இருக்கீங்களாயென்று தனது மாமனார் மாமியாரை சுந்தர் விசாரிக்க,இருவரும் நல்லாயிருக்கோம் மாப்பிள்ளை என்றனர்.
"வீரா என்று தனது தங்கை மகனை நோக்கி கை நீட்ட,தனது மாமனை அணைத்துக்கொண்டான்".
"நல்லா இருக்கியா கண்ணா என்றவாறு மருமகனின் தலையை தடவி விட நல்லா இருக்கேன் மாமா, உங்களுக்கு உடம்பு நல்லா இருக்கா?".
உன் அத்தை இருக்கும் போது எனக்கென்ன கண்ணா கவலை என்றவர்,மேகலா சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டியா என்க,ம்ம் ஆச்சுங்க என்று கணவருக்கு பதில் சொன்னார்.