Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
சீமக்கரை..
மதுரைக்கு போனவர்கள், நல்ல பதிலோடு வருவார்களென்று நம்பிக்கையோடு வீட்டினர் காத்திருந்தனர்.
நால்வரும் விடியற்காலையில் தேனூருக்கு வந்து சேர்ந்தவர்கள் பின்னர் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஊரை நோக்கி சென்றார்கள்.
மச்சான்,வள்ளியை எப்படி சமாளிக்கிறதென்று ஒரே கவலையாக இருக்கென்று, சைக்கிள் பின்னாடி அமர்ந்திருக்கும் பிரகாசம் வருத்தப்பட்ட
,அதேப்போல் பெருமாளின் சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து வந்த சிவசாமியோ,வேற வழி இல்ல மச்சான், சமாளிச்சு தான் ஆகணும்.
புள்ளைய பற்றி நமக்கும் கவலையா தான் இருக்கு.அவங்க பொம்பளைங்க அழுது தீர்த்துக்குறாங்க.நாம ஆம்பள, கண்ணீர் விடல அவ்வளவு தான்.
சைக்கிளை நிறுத்திட்டு உள்ளே வந்தவர்கள், அங்கிருந்த முற்றத்தில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டனர்.
போனது என்னாச்சுப்பானு வள்ளி கேட்க,செல்வமோ எதுவும் தெரியலை அத்தை என்க,அய்யோ....எம்மவளை உங்களாலையும் கண்டுபிடிக்க முடியலையானு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
நாட்களும் கடந்து சென்றது.
சிந்து தொலைந்ததிலிருந்து பார்வதியும்,கவிதாவும் பள்ளிக்கூடம் போக மாட்டோம் என்று சொல்லிவிட்டனர்.
காலேஜில் படித்துக் கொண்டிருந்த முத்துவும்,லாரன்ஸும் வீட்டிற்கு வர, அப்பொழுது தான் சிந்து காணமல் போன விஷயமே தெரிந்தது.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்து சென்றிருந்தது.
போன வருட விவாசாயத்தில்,பண விஷயமாக பெருமாளுக்கு ஏதோ சந்தேகம் வர,அலமாரியில் அடுக்கியிருந்த நோட்டை எடுக்கும் போது, சில புத்தகங்கள் கீழே விழுந்தது.
எல்லாத்தையும் மீண்டும் எடுத்து அடுக்கும் போது, ஒரு நோட்டு மட்டும் அங்கிருந்த சேரின் கீழே விழுந்து கிடந்தது.
கீழே குனிந்து நோட்டை எடுக்கும் போது, முதல் பக்கத்தில் டாக்டர் சிந்து என்று எழுதியிருந்தது.அதை படித்ததும் தங்கையின் ஞாபகம் வர,குண்டு குண்டான கையெழுத்தில் இருக்கும் பக்கத்தை, சும்மா திருப்பி பார்த்தவரின் கண்ணில் பட்டது அது.
இதயம் வரைந்து அதனுள் வீர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்க, இதயத்திற்கு கீழே வித் யுவர் சிந்து என்று எழுதியிருந்தது.அதை பார்த்ததும் ,இத்தனை நாள் மனதிற்குள் உழன்டு கொண்டிருந்த கேள்விக்கான பதில் கிடைத்தது.
தங்கையின் மேல் கட்டுக்கடங்கா கோபம் வர, பாரு, பாரு என்று கூப்பிட்டுக்கொண்டே முற்றத்திற்கு வந்தார்.
பெருமாளின் குரலை கேட்டு, மாடுகளுக்கு புல்லு கட்டை போட்டுக்கொண்டிருந்த பார்வதியும், கவிதாவும் வேகமாக உள்ளே வந்தனர்.
அண்ணா என்று பார்வதி சொல்ல, இங்கே வா என்றார்.
பெருமாள் முகத்தில் இருந்த கோவத்தை பார்த்து, என்னாச்சுனு தெரியலையே??என்று நடுக்கம் வந்தது.
பயந்து கொண்டே பாருவும் அண்ணனிடம் செல்ல,உன் அக்கா எவன் கூட ஓடிப்போனாள்?.
அண்ணாஆஆஆஆ என்ன சொல்லுற என்றபடி பார்வதி அதிர,எல்லாரும் ஒன்னா தானே பள்ளிக்கூடம் போனீங்க?.அப்போ உங்களுக்கு தெரியாமல்,அவள் ஓடிப்போக வாய்ப்பே இல்லை.உண்மைய ரெண்டு பேரும் சொல்லிடுங்க.
நானே கண்டு பிடிச்சேன், ரெண்டு பேரும் செத்தீங்க என்றவாறு தங்கைகளை மிரட்டும் போது, வயலுக்கு சென்றிருந்த வள்ளியும், பிரகாசமும் வீட்டிற்குள் வந்தனர்.
பிள்ளைகளை பார்த்த பிரகாசம், என்னப்பா என்க, கையில் இருந்த நோட்டை எடுத்து வந்து பெற்றோரிடம் காட்டியவர், இதுங்களுக்கு உண்மை தெரியாம இருக்காதுப்பா.நானே அடிச்சி கொல்றதுக்கு முன்ன நீயே கேளு.
எம்மாடி உங்கக்கா பற்றி எதாவது தெரிஞ்சா சொல்லிடுங்கமானு வள்ளி கேட்க,சத்தியமா எங்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதென தங்கள் குல தெய்வத்தின் படத்தின் முன்பு போய் இருவரும் சத்தியம் செய்தனர்.
ஐயனார் மேல் பொய் சத்தியம் செய்தால் என்ன நடக்கும் என்று சிறு வயதில் அவர்கள் கேட்ட கதையால், எந்த சூழலிலும் சாமியின் மீது பொய்யாக சத்தியம் செய்யமாட்டார்கள்.
இருவரும் சொல்வது உண்மை என்று தெரிந்தவர்,சிந்துவின் ஆடைகள், படித்த புத்தகங்கள், அவள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எடுத்து போய் தோட்டத்தில் போட்டார்.பெரிய மகன் செய்வதையெல்லாம் கண்ணீரோடு பார்த்துக்கொண்டு தான் இருந்தனர் வள்ளியும், பிரகாசமும்.
கீழே போட்ட பொருட்களின் மேல், மண்ணெண்னைய் ஊற்றி தீயை வைத்தவர், இனி இதுங்க ரெண்டு பேர் மட்டும் தான் என் தங்கச்சிங்க.
இந்த நிமிஷத்தில் இருந்து அவள் செத்து போய்ட்டாள்னு, கிணற்றிலிருந்த தண்ணீரை இறைத்து, தனது தலையில் ஊற்றிக்கொண்ட பெருமாள் வீட்டின் உள்ளே சென்று விட்டான்.
பாருவும், கவிதாவும் எரிந்து கொண்டிருந்த தங்கள் அக்காவின் பொருட்களை பார்த்து, சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தனர்.
வீட்டின் உள்ளே வந்த பெருமாளோ, தங்களது முன்னோர்கள் ஃபோட்டோ மாட்டியிருக்கும் இடத்தில், சிந்துவின் ஃபோட்டோவையும் மாட்டி, நெற்றியில் பொட்டை வைத்து சென்றான்.
தாமரையின் நினைவுகள்...
கார் தெருவிலிருந்து காட்டுப்பாதையை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.மேடம் என்று அந்த இளம்பெண் கூப்பிட, தாமரை என்றே சொல்லுங்க என்றாள்.
ஓகே என்றவள், இப்போ நாம் காரிலே நேராக சென்னையில் இருக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்டிற்கு போறோம் அங்கே உங்களுக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு ஃபிளைட்.
நீங்க பூனேல போய் இறங்கியதும், உங்களை பிக்கப் பண்ணிக்க ஆள் ரெடியாக இருப்பாங்கள்.இது தான் பிளான் என்றாள்.
ஓகே என்றவளிடம் புதிய செல்ஃபோனையும்,சிம்கார்டையும் கொடுத்தாள்.
அதை வாங்கியவள் தனது ஃபோனை ஆப் பண்ணி விட்டு, புது ஃபோனில், சிம்கார்டை பொருத்திய சிறிது நிமிடத்திலே, அந்த நம்பருக்கு வெளிநாட்டு நம்பரிலிருந்து கால் வந்தது.
" தாமரை அந்த பெண்ணை பார்க்க, நான் ஜெனி".
" அட்டென் பண்ணி பேசுங்க தாமரை".
" தயக்கத்தோடே அட்டென் பண்ணி காதில் வைக்க, ஹலோ தாமரை என்று லீனாவின் குரல் கேட்டது".
" நான் தான் லீனாக்கா என்க, சேப் தானே?, ஒன்னும் பிரச்சினை இல்லையே?".
" இல்லைங்கக்கா.சென்னைக்கு தான் போய்ட்டு இருக்கோம் என்க, ஜெனி என்னோட ஃப்ரண்டோட தங்கை தான்".
"தைரியமா போ, உனக்கு என்ன வேண்டுமோ நீ ஜெனி கிட்ட கேளு. அவ பார்த்துப்பாள் என்றவள், மேலும் சிறிது நிமிடம் தாமரையிடம் பேசி விட்டு ஃபோன் கால் கட்டானது".
" தாமரை, லீனாக்கா உன்னை பற்றி நிறைய சொல்லிருக்காங்க என்றாள் ஜெனி".
" அதற்கு சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தவளிடம், நான் ஜெனி, கிரைம் பிரான்ச் இன் டெல்லி என்க, என்னாஆஆஆ போலிஸாஆஆஆ என்று அதிர்ந்தாள்".
" எஸ்சூஊஊஊ, ஏன் என்னையெல்லாம் போலிஸ்னு நம்ப முடியலையா?".
" அதற்கு தாமரையே, இல்லை நான் ஏதோ காலேஜ் படிக்கிற பொண்ணோனு நினைச்சிட்டேன்.நீங்க போலீஸ்னு சொன்னதும் கொஞ்சம் ஷாக், அவ்வளவு தான் என்றாள்".
" உன் வயசு தான் நானும். சோ நீ தாராளமா ஜெனினே கூப்பிடு என்க", ஓகே என்றவள், எப்படி இந்த ஊரை கண்டு பிடித்து வந்தீங்க? என்க, ஹாஹாஹா... கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்துச்சி.
பிறகு நம்ப கூகுள் மச்சி தான் வழி காட்டினாரு என்று ஜெனி சொல்ல, அவள் சொன்ன மாடுலேஷனை கேட்டு தாமரைக்கு இப்பொழுது சிரிப்பு வந்தது".
" கார் தேனூரை தாண்டி சென்னை செல்லும் ரோட்டில் இணைந்தது".அப்பொழுது, கார் ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர்,எம்மாடி ஜெனி, டீ, காஃபி குடிக்கிறீங்களா என்றார்".
" ஆமா டிரைவர்... இப்படியே பட்னி போட்டு கொல்லலானு முடிவு பண்ணிட்டீங்களா? என்ற ஜெனி,போற வழியில பார்த்து நிறுத்துங்க என்றவள்
லோட்டஸ் எனக்கு அபிஸியலா கொஞ்சம் மெயில் அனுப்ப வேண்டிய வேலை இருக்கு.
நீ கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு, நான் முடிச்சிட்டு வரேனென்று முன்பக்கம் இருந்த லேப்டாப்பை எட்டி எடுத்து, தனது வேலையை பார்க்க தொடங்கினாள்.
" கண்ணை மூடிய தாமரைக்கு,நேற்று கதிர் பண்ணிய செயல்தான் நினைவுக்கு வந்தது".இப்பொழுது தான் அவள் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டாள்".
" நேற்று அவள் கன்னத்தில் கதிர் மஞ்சள் பூசும் போது வந்த அதிர்வில்,இருட்டில் இடித்து விழுந்த போது வந்த சிலிர்ப்பும், ஏரிக்கரையில் நடந்த நிகழ்வில் வந்த உணர்வும், எல்லாம் ஒன்றாக இருந்தது".
" அப்போ மூன்று இடத்திலும் இருந்தது ஒருவன் தான் என்று தெரிந்து விட்டது".
" ஓஓஓ... நான் யாரென்று தெரிந்து தான், இப்படி நம்மை வேறு வழியில் வளைக்க முடிவு செய்திருக்கிறானென்று, அவளாகவே முடிவு செய்து கொண்டாள்".
" தாமரையோ கதிரின் முகத்தை நினைவு படுத்தி பார்த்தாள்".
"கடல் நீலத்தில் இரண்டு கைகளிலும் லேசாக மடித்து விட்டிருக்க, வெள்ளை வேஷ்டியும், இரண்டு புறமும் முறுக்கி விட்டிருந்த மீசையும், முகத்தில் அளவாக டிரிம் செய்திருந்த தாடியும் அவனை கம்பீரமான ஆண்மகனாக காட்டியது",
"அந்த நேரத்தில்,அவன் இருந்த உருவம், ஆழமாய் அவள் மனதில் பதிந்து விட்டதை, பாவம் தாமரை தான் உணரவில்லை".
" பட்டிக்காட்டான்".
சண்டியர் போல இருக்கான், அதான் இப்படி பண்ணிருக்கான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ச்சை இனி இதை நினைக்க கூடாத கண்ணை திறந்தவள் கடந்து சென்ற நிகழ்வுகளை நினைப்பதை தலையசைத்து கலைத்தாள்.
அம்மாடி... ஏ2பி ஹோட்டல் அங்க இருக்கு, போகலாமா என்றவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தார் டிரைவர்.
வேலையில் மூழ்கியிருந்தவள், ம்ம் என்றபடியே தனது வேலையில் பிஸியாக இருந்தாள் ஜெனி.
லெப்ட் சைடு இன்டிகேட்டரை ஆன் பண்ணிய டிரைவர், காரை திருப்பி, திறந்திருந்த கேட் வழியாக உள்ளே சென்று பார்க்கிங்கில் காரை நிறுத்தினார்.
கார் நிற்பது கூட தெரியாமல் வேலையில் மூழ்கியிருந்தவளை, ஜெனி ஜெனினு தாமரை கூப்பிட,2 மினிட்ஸ் தாமரை.
மெயிலை அனுப்பி விட்டு லேட்டாப்பை ஃஆப் பண்ணியவள், போலாம் என்க, மூவரும் காரில் இருந்து இறங்கி, ஹோட்டலின் உள்ளே சென்றவர்கள் காலியாக இருந்த இருக்கையில் உட்கார, அவர்களிடம் வந்த சர்வர் என்ன வேண்டும் என்றார்?.
மனுஷன் குடிக்கிற போல, ஒட்டகப்பால்ல டீ ஒன்னு கொண்டு வாங்க என்றார் டிரைவர்.அவர் சொன்னதைக்கேட்ட பெண்கள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.
சர்வரோ டிரைவரை முறைத்து பார்க்க, சும்மாப்பா என்றவர், அவருக்கு தேவையானதை சொல்லியவர், நீங்களும் சொல்லுங்க.
இருவரும் அவர்களுக்கு வேண்டியதை சொல்லியதும், சர்வர் அங்கிருந்து சென்றுவிட.யோவ் மாமா, வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்றாள்.
எதே மாமாவாஆஆஆஆ என்று தாமரை அதிர,ஆமா தாமரை, என் உசுர வாங்கவே பொறந்து வளர்ந்த பிசாசு, அது மட்டுமில்லாமல், மூன்று முடிச்சி கழுத்தில் போட்ட புண்ணாக்கு புருஷனென்று ஜெனி சொல்ல,என்ன இவங்க உங்க புருஷனாஆஆஆஆ? என்று மீண்டும் அதிர்ந்தாள்.
மதுரைக்கு போனவர்கள், நல்ல பதிலோடு வருவார்களென்று நம்பிக்கையோடு வீட்டினர் காத்திருந்தனர்.
நால்வரும் விடியற்காலையில் தேனூருக்கு வந்து சேர்ந்தவர்கள் பின்னர் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஊரை நோக்கி சென்றார்கள்.
மச்சான்,வள்ளியை எப்படி சமாளிக்கிறதென்று ஒரே கவலையாக இருக்கென்று, சைக்கிள் பின்னாடி அமர்ந்திருக்கும் பிரகாசம் வருத்தப்பட்ட
,அதேப்போல் பெருமாளின் சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து வந்த சிவசாமியோ,வேற வழி இல்ல மச்சான், சமாளிச்சு தான் ஆகணும்.
புள்ளைய பற்றி நமக்கும் கவலையா தான் இருக்கு.அவங்க பொம்பளைங்க அழுது தீர்த்துக்குறாங்க.நாம ஆம்பள, கண்ணீர் விடல அவ்வளவு தான்.
சைக்கிளை நிறுத்திட்டு உள்ளே வந்தவர்கள், அங்கிருந்த முற்றத்தில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டனர்.
போனது என்னாச்சுப்பானு வள்ளி கேட்க,செல்வமோ எதுவும் தெரியலை அத்தை என்க,அய்யோ....எம்மவளை உங்களாலையும் கண்டுபிடிக்க முடியலையானு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.
நாட்களும் கடந்து சென்றது.
சிந்து தொலைந்ததிலிருந்து பார்வதியும்,கவிதாவும் பள்ளிக்கூடம் போக மாட்டோம் என்று சொல்லிவிட்டனர்.
காலேஜில் படித்துக் கொண்டிருந்த முத்துவும்,லாரன்ஸும் வீட்டிற்கு வர, அப்பொழுது தான் சிந்து காணமல் போன விஷயமே தெரிந்தது.கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்து சென்றிருந்தது.
போன வருட விவாசாயத்தில்,பண விஷயமாக பெருமாளுக்கு ஏதோ சந்தேகம் வர,அலமாரியில் அடுக்கியிருந்த நோட்டை எடுக்கும் போது, சில புத்தகங்கள் கீழே விழுந்தது.
எல்லாத்தையும் மீண்டும் எடுத்து அடுக்கும் போது, ஒரு நோட்டு மட்டும் அங்கிருந்த சேரின் கீழே விழுந்து கிடந்தது.
கீழே குனிந்து நோட்டை எடுக்கும் போது, முதல் பக்கத்தில் டாக்டர் சிந்து என்று எழுதியிருந்தது.அதை படித்ததும் தங்கையின் ஞாபகம் வர,குண்டு குண்டான கையெழுத்தில் இருக்கும் பக்கத்தை, சும்மா திருப்பி பார்த்தவரின் கண்ணில் பட்டது அது.
இதயம் வரைந்து அதனுள் வீர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்க, இதயத்திற்கு கீழே வித் யுவர் சிந்து என்று எழுதியிருந்தது.அதை பார்த்ததும் ,இத்தனை நாள் மனதிற்குள் உழன்டு கொண்டிருந்த கேள்விக்கான பதில் கிடைத்தது.
தங்கையின் மேல் கட்டுக்கடங்கா கோபம் வர, பாரு, பாரு என்று கூப்பிட்டுக்கொண்டே முற்றத்திற்கு வந்தார்.
பெருமாளின் குரலை கேட்டு, மாடுகளுக்கு புல்லு கட்டை போட்டுக்கொண்டிருந்த பார்வதியும், கவிதாவும் வேகமாக உள்ளே வந்தனர்.
அண்ணா என்று பார்வதி சொல்ல, இங்கே வா என்றார்.
பெருமாள் முகத்தில் இருந்த கோவத்தை பார்த்து, என்னாச்சுனு தெரியலையே??என்று நடுக்கம் வந்தது.
பயந்து கொண்டே பாருவும் அண்ணனிடம் செல்ல,உன் அக்கா எவன் கூட ஓடிப்போனாள்?.
அண்ணாஆஆஆஆ என்ன சொல்லுற என்றபடி பார்வதி அதிர,எல்லாரும் ஒன்னா தானே பள்ளிக்கூடம் போனீங்க?.அப்போ உங்களுக்கு தெரியாமல்,அவள் ஓடிப்போக வாய்ப்பே இல்லை.உண்மைய ரெண்டு பேரும் சொல்லிடுங்க.
நானே கண்டு பிடிச்சேன், ரெண்டு பேரும் செத்தீங்க என்றவாறு தங்கைகளை மிரட்டும் போது, வயலுக்கு சென்றிருந்த வள்ளியும், பிரகாசமும் வீட்டிற்குள் வந்தனர்.
பிள்ளைகளை பார்த்த பிரகாசம், என்னப்பா என்க, கையில் இருந்த நோட்டை எடுத்து வந்து பெற்றோரிடம் காட்டியவர், இதுங்களுக்கு உண்மை தெரியாம இருக்காதுப்பா.நானே அடிச்சி கொல்றதுக்கு முன்ன நீயே கேளு.
எம்மாடி உங்கக்கா பற்றி எதாவது தெரிஞ்சா சொல்லிடுங்கமானு வள்ளி கேட்க,சத்தியமா எங்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதென தங்கள் குல தெய்வத்தின் படத்தின் முன்பு போய் இருவரும் சத்தியம் செய்தனர்.
ஐயனார் மேல் பொய் சத்தியம் செய்தால் என்ன நடக்கும் என்று சிறு வயதில் அவர்கள் கேட்ட கதையால், எந்த சூழலிலும் சாமியின் மீது பொய்யாக சத்தியம் செய்யமாட்டார்கள்.
இருவரும் சொல்வது உண்மை என்று தெரிந்தவர்,சிந்துவின் ஆடைகள், படித்த புத்தகங்கள், அவள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் எடுத்து போய் தோட்டத்தில் போட்டார்.பெரிய மகன் செய்வதையெல்லாம் கண்ணீரோடு பார்த்துக்கொண்டு தான் இருந்தனர் வள்ளியும், பிரகாசமும்.
கீழே போட்ட பொருட்களின் மேல், மண்ணெண்னைய் ஊற்றி தீயை வைத்தவர், இனி இதுங்க ரெண்டு பேர் மட்டும் தான் என் தங்கச்சிங்க.
இந்த நிமிஷத்தில் இருந்து அவள் செத்து போய்ட்டாள்னு, கிணற்றிலிருந்த தண்ணீரை இறைத்து, தனது தலையில் ஊற்றிக்கொண்ட பெருமாள் வீட்டின் உள்ளே சென்று விட்டான்.
பாருவும், கவிதாவும் எரிந்து கொண்டிருந்த தங்கள் அக்காவின் பொருட்களை பார்த்து, சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தனர்.
வீட்டின் உள்ளே வந்த பெருமாளோ, தங்களது முன்னோர்கள் ஃபோட்டோ மாட்டியிருக்கும் இடத்தில், சிந்துவின் ஃபோட்டோவையும் மாட்டி, நெற்றியில் பொட்டை வைத்து சென்றான்.
தாமரையின் நினைவுகள்...
கார் தெருவிலிருந்து காட்டுப்பாதையை நோக்கிச்சென்று கொண்டிருந்தது.மேடம் என்று அந்த இளம்பெண் கூப்பிட, தாமரை என்றே சொல்லுங்க என்றாள்.
ஓகே என்றவள், இப்போ நாம் காரிலே நேராக சென்னையில் இருக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்டிற்கு போறோம் அங்கே உங்களுக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு ஃபிளைட்.
நீங்க பூனேல போய் இறங்கியதும், உங்களை பிக்கப் பண்ணிக்க ஆள் ரெடியாக இருப்பாங்கள்.இது தான் பிளான் என்றாள்.
ஓகே என்றவளிடம் புதிய செல்ஃபோனையும்,சிம்கார்டையும் கொடுத்தாள்.
அதை வாங்கியவள் தனது ஃபோனை ஆப் பண்ணி விட்டு, புது ஃபோனில், சிம்கார்டை பொருத்திய சிறிது நிமிடத்திலே, அந்த நம்பருக்கு வெளிநாட்டு நம்பரிலிருந்து கால் வந்தது.
" தாமரை அந்த பெண்ணை பார்க்க, நான் ஜெனி".
" அட்டென் பண்ணி பேசுங்க தாமரை".
" தயக்கத்தோடே அட்டென் பண்ணி காதில் வைக்க, ஹலோ தாமரை என்று லீனாவின் குரல் கேட்டது".
" நான் தான் லீனாக்கா என்க, சேப் தானே?, ஒன்னும் பிரச்சினை இல்லையே?".
" இல்லைங்கக்கா.சென்னைக்கு தான் போய்ட்டு இருக்கோம் என்க, ஜெனி என்னோட ஃப்ரண்டோட தங்கை தான்".
"தைரியமா போ, உனக்கு என்ன வேண்டுமோ நீ ஜெனி கிட்ட கேளு. அவ பார்த்துப்பாள் என்றவள், மேலும் சிறிது நிமிடம் தாமரையிடம் பேசி விட்டு ஃபோன் கால் கட்டானது".
" தாமரை, லீனாக்கா உன்னை பற்றி நிறைய சொல்லிருக்காங்க என்றாள் ஜெனி".
" அதற்கு சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தவளிடம், நான் ஜெனி, கிரைம் பிரான்ச் இன் டெல்லி என்க, என்னாஆஆஆ போலிஸாஆஆஆ என்று அதிர்ந்தாள்".
" எஸ்சூஊஊஊ, ஏன் என்னையெல்லாம் போலிஸ்னு நம்ப முடியலையா?".
" அதற்கு தாமரையே, இல்லை நான் ஏதோ காலேஜ் படிக்கிற பொண்ணோனு நினைச்சிட்டேன்.நீங்க போலீஸ்னு சொன்னதும் கொஞ்சம் ஷாக், அவ்வளவு தான் என்றாள்".
" உன் வயசு தான் நானும். சோ நீ தாராளமா ஜெனினே கூப்பிடு என்க", ஓகே என்றவள், எப்படி இந்த ஊரை கண்டு பிடித்து வந்தீங்க? என்க, ஹாஹாஹா... கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்துச்சி.
பிறகு நம்ப கூகுள் மச்சி தான் வழி காட்டினாரு என்று ஜெனி சொல்ல, அவள் சொன்ன மாடுலேஷனை கேட்டு தாமரைக்கு இப்பொழுது சிரிப்பு வந்தது".
" கார் தேனூரை தாண்டி சென்னை செல்லும் ரோட்டில் இணைந்தது".அப்பொழுது, கார் ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர்,எம்மாடி ஜெனி, டீ, காஃபி குடிக்கிறீங்களா என்றார்".
" ஆமா டிரைவர்... இப்படியே பட்னி போட்டு கொல்லலானு முடிவு பண்ணிட்டீங்களா? என்ற ஜெனி,போற வழியில பார்த்து நிறுத்துங்க என்றவள்
லோட்டஸ் எனக்கு அபிஸியலா கொஞ்சம் மெயில் அனுப்ப வேண்டிய வேலை இருக்கு.
நீ கொஞ்சம் கண்ணை மூடி தூங்கு, நான் முடிச்சிட்டு வரேனென்று முன்பக்கம் இருந்த லேப்டாப்பை எட்டி எடுத்து, தனது வேலையை பார்க்க தொடங்கினாள்.
" கண்ணை மூடிய தாமரைக்கு,நேற்று கதிர் பண்ணிய செயல்தான் நினைவுக்கு வந்தது".இப்பொழுது தான் அவள் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டாள்".
" நேற்று அவள் கன்னத்தில் கதிர் மஞ்சள் பூசும் போது வந்த அதிர்வில்,இருட்டில் இடித்து விழுந்த போது வந்த சிலிர்ப்பும், ஏரிக்கரையில் நடந்த நிகழ்வில் வந்த உணர்வும், எல்லாம் ஒன்றாக இருந்தது".
" அப்போ மூன்று இடத்திலும் இருந்தது ஒருவன் தான் என்று தெரிந்து விட்டது".
" ஓஓஓ... நான் யாரென்று தெரிந்து தான், இப்படி நம்மை வேறு வழியில் வளைக்க முடிவு செய்திருக்கிறானென்று, அவளாகவே முடிவு செய்து கொண்டாள்".
" தாமரையோ கதிரின் முகத்தை நினைவு படுத்தி பார்த்தாள்".
"கடல் நீலத்தில் இரண்டு கைகளிலும் லேசாக மடித்து விட்டிருக்க, வெள்ளை வேஷ்டியும், இரண்டு புறமும் முறுக்கி விட்டிருந்த மீசையும், முகத்தில் அளவாக டிரிம் செய்திருந்த தாடியும் அவனை கம்பீரமான ஆண்மகனாக காட்டியது",
"அந்த நேரத்தில்,அவன் இருந்த உருவம், ஆழமாய் அவள் மனதில் பதிந்து விட்டதை, பாவம் தாமரை தான் உணரவில்லை".
" பட்டிக்காட்டான்".
சண்டியர் போல இருக்கான், அதான் இப்படி பண்ணிருக்கான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ச்சை இனி இதை நினைக்க கூடாத கண்ணை திறந்தவள் கடந்து சென்ற நிகழ்வுகளை நினைப்பதை தலையசைத்து கலைத்தாள்.
அம்மாடி... ஏ2பி ஹோட்டல் அங்க இருக்கு, போகலாமா என்றவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தார் டிரைவர்.
வேலையில் மூழ்கியிருந்தவள், ம்ம் என்றபடியே தனது வேலையில் பிஸியாக இருந்தாள் ஜெனி.
லெப்ட் சைடு இன்டிகேட்டரை ஆன் பண்ணிய டிரைவர், காரை திருப்பி, திறந்திருந்த கேட் வழியாக உள்ளே சென்று பார்க்கிங்கில் காரை நிறுத்தினார்.
கார் நிற்பது கூட தெரியாமல் வேலையில் மூழ்கியிருந்தவளை, ஜெனி ஜெனினு தாமரை கூப்பிட,2 மினிட்ஸ் தாமரை.
மெயிலை அனுப்பி விட்டு லேட்டாப்பை ஃஆப் பண்ணியவள், போலாம் என்க, மூவரும் காரில் இருந்து இறங்கி, ஹோட்டலின் உள்ளே சென்றவர்கள் காலியாக இருந்த இருக்கையில் உட்கார, அவர்களிடம் வந்த சர்வர் என்ன வேண்டும் என்றார்?.
மனுஷன் குடிக்கிற போல, ஒட்டகப்பால்ல டீ ஒன்னு கொண்டு வாங்க என்றார் டிரைவர்.அவர் சொன்னதைக்கேட்ட பெண்கள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.
சர்வரோ டிரைவரை முறைத்து பார்க்க, சும்மாப்பா என்றவர், அவருக்கு தேவையானதை சொல்லியவர், நீங்களும் சொல்லுங்க.
இருவரும் அவர்களுக்கு வேண்டியதை சொல்லியதும், சர்வர் அங்கிருந்து சென்றுவிட.யோவ் மாமா, வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்றாள்.
எதே மாமாவாஆஆஆஆ என்று தாமரை அதிர,ஆமா தாமரை, என் உசுர வாங்கவே பொறந்து வளர்ந்த பிசாசு, அது மட்டுமில்லாமல், மூன்று முடிச்சி கழுத்தில் போட்ட புண்ணாக்கு புருஷனென்று ஜெனி சொல்ல,என்ன இவங்க உங்க புருஷனாஆஆஆஆ? என்று மீண்டும் அதிர்ந்தாள்.