Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
எஸ். எஸ். மருத்துவமனை சென்னை:
"டாக்டர் வெளியே வந்து என்ன சொல்லப்போகிறாரோ?" என்ற பதற்றத்தில், வசுந்தராவும் நின்று கொண்டிருந்தார்.
"அவ்வப்பொழுது,தனது கையிலிருக்கும் வாட்சில் மணியை பார்க்கவும் தவறவில்லை."அம்மா துர்காதேவி, என் பொண்ணுக்கு எதுவும் ஆகிடக்கூடாதும்மா.
"இத்தனை வருஷம் கழித்து, இன்று தான் என் பொண்ணை கண்ணில் காட்டியிருக்கிறாய்,அந்த சந்தோஷத்தைக் கூட என்னால் அனுபவிக்க முடியாமல் பண்ணிட்டியே?".
"ஏன்?,எனக்கு மட்டும்,இப்படியொரு தலையெழுத்தென்று, சத்தமின்றி அழுதார்".
"மேலும் சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல, ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டரை கண்டவர், 'டாக்டர், என் பொண்ணுக்கு இப்போ எப்படியிருக்கென்றூ?' அழுகையோடு கேட்டார்."
"மேடம், கொஞ்சம் அமைதியாகுங்க."
நீங்க பதற்றப்படும் அளவிற்கு, அவங்களுக்குப் பெரிய பிரச்சினையில்லை.அதிர்ச்சியும், பசியும் சேர்ந்து மயங்கி விழும் போது, கீழே இருந்த கல்லில் அடிபட்டதால்தால் நெற்றியில் அந்த காயம்.
"அடுத்து,உங்களுக்கொரு சந்தோஷமான விஷயம், உங்க பொண்ணு கன்சீவாக இருக்காங்கள்".
இவ்வளவு நேரம் டாக்டர் சொன்னதை கேட்ட வசுந்தராவிற்கு, இப்பொழுது கேட்ட விஷயத்தை நினைத்து அழுவதா, இல்லை சந்தோஷப்படுவதானு தெரியவில்லை.
"அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்த டாக்டர், இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு மயக்கம் தெளிந்துவிடும்."பிறகு, நீங்க தாராளமாக கூப்பிட்டு போகலாமென்று சொல்லி விட்டு, அங்கிருந்து சென்றார்.
கதவை திறந்து உள்ளே வந்த வசுந்தரா, பெட்டில் படுத்திருக்கும் தன் மகளைக் கண்டவர், கைகள் நடுங்க, அவள் தலையின் மேல் பொறுமையாக தனது கையை வைத்து தடவி விட, கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
"இந்த பாவி வயிற்றில் பிறந்த பாவத்திற்கு, எத்தனை கொடுமையை அனுபவித்தாயோயென்று தெரியலையே?" என்று, உள்ளுக்குள் கதறி அழுதார்.
அப்பொழுது அவர் செல்லிற்கு கால் வரும் சத்தம் கேட்க, கையிலிருந்த செல்லை பார்க்க, அதில், "அப்பா" என்ற பெயர் "டிஸ்பிளேயில் தெரிந்தது."
அட்டென் பண்ணியவர், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அம்மாடி வசு, என் பேத்தியைப் பார்த்திட்டியாமா?.
அவள் எப்படி இருக்காமா?.
"நீ யாரென்று அவளுக்குத் தெரிந்து என்னம்மா சொன்னாள்" என்று கேள்விகளை அடுக்கினார் வசுந்தராவின் அப்பா சுந்தரபாண்டியன்.
"வசுந்தராவோ தனது அப்பாவின் கேள்விக்கு, 'என் பொண்ணை பார்த்து விட்டேன்' என்று சொல்லி, அழைப்பை கட் பண்ணினார்."
பின்னர் தனது அண்ணனுக்கு கால் பண்ணியவர், ஆப்பிள் ஜூஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு செகன்ட் ஃப்ளோரில் இருக்கும் எமர்ஜென்சி வார்டிற்கு வரச்சொல்லி ஃபோனை வைத்தார்.
"சிறிது நிமிடங்கள் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்டு, எழுந்து சென்று கதவை திறந்து பார்க்க, கையில் ஜூஸோடு மைக்கேல் நின்று கொண்டிருந்தார்."
அம்மா வசு இந்தாமானு நீட்ட, "தேங்க்ஸ்ணா" என்றவாறே வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவர், அங்கிருந்த டேபிள் மேல் ஜூஸை வைத்து விட்டு, பெட்டில் படுத்திருப்பவள் கண் விழிக்கப்போகும் நேரத்திற்காக காத்திருந்தார்.
"மனதுக்குள் எரிமலை வெடித்துக்கொண்டிருந்தாலும், கற்ற தியானம் பலனை கொடுக்க, அங்கிருந்த சேரில் மகளின் முகத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்."
மேலும் ஒரு மணி நேரம் கடந்து சென்றிருக்க, பெட்டில் படுத்திருந்தவள் பொறுமையாக தன் கண் விழிகளை உருட்டுவது தெரிந்து, சேரிலிருந்து எழுந்த வசுந்தரா, மகளின் அருகே செல்ல, கண்களை திறந்தவளுக்கு எதிரே இருக்கும் உருவம் சரியாக தெரியவில்லை.
"மீண்டும் கண்களை மூடி திறந்தவளுக்கு, தற்பொழுது வசுந்தரா நிற்பது தெரிய, இவங்கள் யாரென்று யோசனையாக பார்த்தாள்."
அவளின் பார்வையை வைத்து, தன்னை யாரென்று தெரியாமல் இருக்கிறாள் என்பது புரிய, உள்ளுக்குள் ஈட்டியால் குத்தும் வலிகளிருந்தாலும், அதை மறைத்துக்கொண்டவர், அவளைப் பார்த்து லேசாக சிரித்தார்.
"மேடம் நான் எப்படி இங்கே?" என்று அந்த அறையை சுற்றி பார்த்துக்கொண்டே கேட்க, தன் மகள் தன்னை மேடம் என்றழைப்பதை கேட்டு, வசுந்தராவின் நெஞ்சுக்குள் இடி விழுந்தது போலிருந்தது.
அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்தவள், பெட்டிலிருந்து எழ, தலை சுற்றுவது போல இருக்க, மீண்டும் பெட்டிலே உட்கார்ந்தாள்.
அவளின் செய்கையில் சுதாரித்த வசுந்தரா, டேபிளின் மேலிருந்த ஆப்பிள் ஜூஸை எடுத்து அவளின் முன்பு நீட்டியவர், "இதை குடிமா" என்றார்.
பெண்ணுக்கே உரிய அச்சம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, வேண்டாமென்று மறுத்தாள்.
நம்பிக்கையில்லையா என்றவாறே கொஞ்சம் ஜூஸை தனது வாயில் ஊற்றிக்கொண்ட வசுந்தரா, இப்பொழுது குடி ஆர்கலி என்கவும், இதுவரை தன் வாழ்வில் பார்க்காத ஒருவர், ஆர்கலியென்னும் தனது பெயரை சொன்னதைக்கேட்டு, மான்விழிகளிரெண்டும் விரிய அதிர்ந்து போனாள்.
இலங்கை...
R. S. Groups...
பார்க்கிங்கில் வந்து நின்ற காரிலிருந்த கதவை திறந்து இறங்கியவன், அங்கிருந்த லிப்டில் ஏறி, பதினொன்றாவது தளத்திற்கான பட்டனை அழுத்த, கதவை மூடிய ஃலிப்டும் சிறிது நொடிகளில் மேலே வந்து நிற்க, அதிலிருந்து வெளியேறினான்.
ஷூவின் சத்தமே, வந்து கொண்டிருப்பவனின் மனநிலையை அங்கிருப்பவர்களுக்கு திகிலை மூட்டியது.
யாரையும் பார்க்காமல் எம். டி. என்ற போர்டு கொண்ட அறைக்கதவை திறந்து உள்ளே வந்தவன், அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்ட சிறிது நிமிடத்தில், கதவை தட்டும் சத்தம் கேட்டது.
எஸ் என்ற கணீர் குரல் கேட்டு, கதவை திறந்து உள்ளே வந்த சுந்தரை, இமைக்காமல் பார்த்தான் ருத்ர வீர சிம்ஹன்.
"வீரா, இது எப்படி நடந்ததென்று எனக்கு தெரியாதுப்பா. என்னை நம்புப்பா," என்கும் சுந்தரை பார்த்தவனின் பார்வையோ மேலும் திகிலை மூட்டியது.
ஓகே ஃபைன் அங்கிள்.உங்களுக்கு தெரியாது இல்லையா,சரி நீங்க போங்களென்று சொல்லிய குரலில் எதைக்கண்டாரோ,உங்க நல்லதுக்காக தான் இப்படி செய்தது தம்பியென்று குனிந்து நின்றார்.
"எப்போ நடந்தது அங்கிள்?" என்றவனுக்கு தம்பி ருத்ரா, "நான் வெறும் அம்பு தான் சாமி."
"உன் தாய்மாமன் சொல்றது உண்மை. எனக்கு வேற எதுவும் தெரியாதுப்பா".
அப்படிங்களா அங்கிள்? சரி, இப்போ அவள் எங்கே போனாளென்றான்.
" சத்தியமா எனக்கு தெரியாது ருத்ரா."
"கோர்டில் டைவர்ஸ் கிடைச்சதும், அந்த பேப்பரை வாங்கிக்கொண்டு, நானும் இங்கு வந்து விட்டேன்."
"ஆர்கலியை நான் பார்க்கவில்லை ருத்ரா, இதுதான் உண்மையென்றார்."
"சரிங்க மாமா, டைவர்ஸ்கு அப்ளே பண்ணியது யாரு?" என்றான்.
"என் தங்கச்சி தேவி என்றார்."
"என்னா அம்மாவா" என்று அதிர்ந்தான் ருத்ரன்!.
வாங்க இந்த கதையில் யாரெல்லாம் இருக்காங்க என்று பார்க்கலாம்...
ஹீரோ: ருத்ர வீர சிம்ஹன்
அப்பா: தன வீர சிம்ஹன்
அம்மா: விஷாலா தேவி
தாத்தா: வீர சிம்ஹன்
பாட்டி: கிரிஜா
நண்பன்: ஆதவன்
தாய் மாமா: சுந்தர்
அத்தை: மேகலா
மாமன் மகள்: ஆதிரா
ஊர்: இலங்கை













ஹீரோயின்: ஆர்கலி
அம்மா: வசுந்தரா
அப்பா: சத்தியமூர்த்தி
தாத்தா: சுந்தர பாண்டியன்
பாட்டி: சைலஜா
ஊர்: கேரளா
கதைக்குள்ளே போகலாம்.
"டாக்டர் வெளியே வந்து என்ன சொல்லப்போகிறாரோ?" என்ற பதற்றத்தில், வசுந்தராவும் நின்று கொண்டிருந்தார்.
"அவ்வப்பொழுது,தனது கையிலிருக்கும் வாட்சில் மணியை பார்க்கவும் தவறவில்லை."அம்மா துர்காதேவி, என் பொண்ணுக்கு எதுவும் ஆகிடக்கூடாதும்மா.
"இத்தனை வருஷம் கழித்து, இன்று தான் என் பொண்ணை கண்ணில் காட்டியிருக்கிறாய்,அந்த சந்தோஷத்தைக் கூட என்னால் அனுபவிக்க முடியாமல் பண்ணிட்டியே?".
"ஏன்?,எனக்கு மட்டும்,இப்படியொரு தலையெழுத்தென்று, சத்தமின்றி அழுதார்".
"மேலும் சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல, ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டரை கண்டவர், 'டாக்டர், என் பொண்ணுக்கு இப்போ எப்படியிருக்கென்றூ?' அழுகையோடு கேட்டார்."
"மேடம், கொஞ்சம் அமைதியாகுங்க."
நீங்க பதற்றப்படும் அளவிற்கு, அவங்களுக்குப் பெரிய பிரச்சினையில்லை.அதிர்ச்சியும், பசியும் சேர்ந்து மயங்கி விழும் போது, கீழே இருந்த கல்லில் அடிபட்டதால்தால் நெற்றியில் அந்த காயம்.
"அடுத்து,உங்களுக்கொரு சந்தோஷமான விஷயம், உங்க பொண்ணு கன்சீவாக இருக்காங்கள்".
இவ்வளவு நேரம் டாக்டர் சொன்னதை கேட்ட வசுந்தராவிற்கு, இப்பொழுது கேட்ட விஷயத்தை நினைத்து அழுவதா, இல்லை சந்தோஷப்படுவதானு தெரியவில்லை.
"அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்த டாக்டர், இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு மயக்கம் தெளிந்துவிடும்."பிறகு, நீங்க தாராளமாக கூப்பிட்டு போகலாமென்று சொல்லி விட்டு, அங்கிருந்து சென்றார்.
கதவை திறந்து உள்ளே வந்த வசுந்தரா, பெட்டில் படுத்திருக்கும் தன் மகளைக் கண்டவர், கைகள் நடுங்க, அவள் தலையின் மேல் பொறுமையாக தனது கையை வைத்து தடவி விட, கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
"இந்த பாவி வயிற்றில் பிறந்த பாவத்திற்கு, எத்தனை கொடுமையை அனுபவித்தாயோயென்று தெரியலையே?" என்று, உள்ளுக்குள் கதறி அழுதார்.
அப்பொழுது அவர் செல்லிற்கு கால் வரும் சத்தம் கேட்க, கையிலிருந்த செல்லை பார்க்க, அதில், "அப்பா" என்ற பெயர் "டிஸ்பிளேயில் தெரிந்தது."
அட்டென் பண்ணியவர், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அம்மாடி வசு, என் பேத்தியைப் பார்த்திட்டியாமா?.
அவள் எப்படி இருக்காமா?.
"நீ யாரென்று அவளுக்குத் தெரிந்து என்னம்மா சொன்னாள்" என்று கேள்விகளை அடுக்கினார் வசுந்தராவின் அப்பா சுந்தரபாண்டியன்.
"வசுந்தராவோ தனது அப்பாவின் கேள்விக்கு, 'என் பொண்ணை பார்த்து விட்டேன்' என்று சொல்லி, அழைப்பை கட் பண்ணினார்."
பின்னர் தனது அண்ணனுக்கு கால் பண்ணியவர், ஆப்பிள் ஜூஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு செகன்ட் ஃப்ளோரில் இருக்கும் எமர்ஜென்சி வார்டிற்கு வரச்சொல்லி ஃபோனை வைத்தார்.
"சிறிது நிமிடங்கள் சென்று கதவு தட்டும் சத்தம் கேட்டு, எழுந்து சென்று கதவை திறந்து பார்க்க, கையில் ஜூஸோடு மைக்கேல் நின்று கொண்டிருந்தார்."
அம்மா வசு இந்தாமானு நீட்ட, "தேங்க்ஸ்ணா" என்றவாறே வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவர், அங்கிருந்த டேபிள் மேல் ஜூஸை வைத்து விட்டு, பெட்டில் படுத்திருப்பவள் கண் விழிக்கப்போகும் நேரத்திற்காக காத்திருந்தார்.
"மனதுக்குள் எரிமலை வெடித்துக்கொண்டிருந்தாலும், கற்ற தியானம் பலனை கொடுக்க, அங்கிருந்த சேரில் மகளின் முகத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்."
மேலும் ஒரு மணி நேரம் கடந்து சென்றிருக்க, பெட்டில் படுத்திருந்தவள் பொறுமையாக தன் கண் விழிகளை உருட்டுவது தெரிந்து, சேரிலிருந்து எழுந்த வசுந்தரா, மகளின் அருகே செல்ல, கண்களை திறந்தவளுக்கு எதிரே இருக்கும் உருவம் சரியாக தெரியவில்லை.
"மீண்டும் கண்களை மூடி திறந்தவளுக்கு, தற்பொழுது வசுந்தரா நிற்பது தெரிய, இவங்கள் யாரென்று யோசனையாக பார்த்தாள்."
அவளின் பார்வையை வைத்து, தன்னை யாரென்று தெரியாமல் இருக்கிறாள் என்பது புரிய, உள்ளுக்குள் ஈட்டியால் குத்தும் வலிகளிருந்தாலும், அதை மறைத்துக்கொண்டவர், அவளைப் பார்த்து லேசாக சிரித்தார்.
"மேடம் நான் எப்படி இங்கே?" என்று அந்த அறையை சுற்றி பார்த்துக்கொண்டே கேட்க, தன் மகள் தன்னை மேடம் என்றழைப்பதை கேட்டு, வசுந்தராவின் நெஞ்சுக்குள் இடி விழுந்தது போலிருந்தது.
அவர் அமைதியாக இருப்பதைப் பார்த்தவள், பெட்டிலிருந்து எழ, தலை சுற்றுவது போல இருக்க, மீண்டும் பெட்டிலே உட்கார்ந்தாள்.
அவளின் செய்கையில் சுதாரித்த வசுந்தரா, டேபிளின் மேலிருந்த ஆப்பிள் ஜூஸை எடுத்து அவளின் முன்பு நீட்டியவர், "இதை குடிமா" என்றார்.
பெண்ணுக்கே உரிய அச்சம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, வேண்டாமென்று மறுத்தாள்.
நம்பிக்கையில்லையா என்றவாறே கொஞ்சம் ஜூஸை தனது வாயில் ஊற்றிக்கொண்ட வசுந்தரா, இப்பொழுது குடி ஆர்கலி என்கவும், இதுவரை தன் வாழ்வில் பார்க்காத ஒருவர், ஆர்கலியென்னும் தனது பெயரை சொன்னதைக்கேட்டு, மான்விழிகளிரெண்டும் விரிய அதிர்ந்து போனாள்.
இலங்கை...
R. S. Groups...
பார்க்கிங்கில் வந்து நின்ற காரிலிருந்த கதவை திறந்து இறங்கியவன், அங்கிருந்த லிப்டில் ஏறி, பதினொன்றாவது தளத்திற்கான பட்டனை அழுத்த, கதவை மூடிய ஃலிப்டும் சிறிது நொடிகளில் மேலே வந்து நிற்க, அதிலிருந்து வெளியேறினான்.
ஷூவின் சத்தமே, வந்து கொண்டிருப்பவனின் மனநிலையை அங்கிருப்பவர்களுக்கு திகிலை மூட்டியது.
யாரையும் பார்க்காமல் எம். டி. என்ற போர்டு கொண்ட அறைக்கதவை திறந்து உள்ளே வந்தவன், அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்ட சிறிது நிமிடத்தில், கதவை தட்டும் சத்தம் கேட்டது.
எஸ் என்ற கணீர் குரல் கேட்டு, கதவை திறந்து உள்ளே வந்த சுந்தரை, இமைக்காமல் பார்த்தான் ருத்ர வீர சிம்ஹன்.
"வீரா, இது எப்படி நடந்ததென்று எனக்கு தெரியாதுப்பா. என்னை நம்புப்பா," என்கும் சுந்தரை பார்த்தவனின் பார்வையோ மேலும் திகிலை மூட்டியது.
ஓகே ஃபைன் அங்கிள்.உங்களுக்கு தெரியாது இல்லையா,சரி நீங்க போங்களென்று சொல்லிய குரலில் எதைக்கண்டாரோ,உங்க நல்லதுக்காக தான் இப்படி செய்தது தம்பியென்று குனிந்து நின்றார்.
"எப்போ நடந்தது அங்கிள்?" என்றவனுக்கு தம்பி ருத்ரா, "நான் வெறும் அம்பு தான் சாமி."
"உன் தாய்மாமன் சொல்றது உண்மை. எனக்கு வேற எதுவும் தெரியாதுப்பா".
அப்படிங்களா அங்கிள்? சரி, இப்போ அவள் எங்கே போனாளென்றான்.
" சத்தியமா எனக்கு தெரியாது ருத்ரா."
"கோர்டில் டைவர்ஸ் கிடைச்சதும், அந்த பேப்பரை வாங்கிக்கொண்டு, நானும் இங்கு வந்து விட்டேன்."
"ஆர்கலியை நான் பார்க்கவில்லை ருத்ரா, இதுதான் உண்மையென்றார்."
"சரிங்க மாமா, டைவர்ஸ்கு அப்ளே பண்ணியது யாரு?" என்றான்.
"என் தங்கச்சி தேவி என்றார்."
"என்னா அம்மாவா" என்று அதிர்ந்தான் ருத்ரன்!.
வாங்க இந்த கதையில் யாரெல்லாம் இருக்காங்க என்று பார்க்கலாம்...
ஹீரோ: ருத்ர வீர சிம்ஹன்
அப்பா: தன வீர சிம்ஹன்
அம்மா: விஷாலா தேவி
தாத்தா: வீர சிம்ஹன்
பாட்டி: கிரிஜா
நண்பன்: ஆதவன்
தாய் மாமா: சுந்தர்
அத்தை: மேகலா
மாமன் மகள்: ஆதிரா
ஊர்: இலங்கை
ஹீரோயின்: ஆர்கலி
அம்மா: வசுந்தரா
அப்பா: சத்தியமூர்த்தி
தாத்தா: சுந்தர பாண்டியன்
பாட்டி: சைலஜா
ஊர்: கேரளா
கதைக்குள்ளே போகலாம்.