• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
நீலகிரி!

காலையில் எழுந்த வேதா வீட்டிலிருப்பவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லியவர் பவி எழுவதற்குள் காலை டிபனையும் செய்து முடித்தார்.


"அப்பொழுது அன்னோன் நம்பரில் இருந்து கால் வந்தது".

"யார் என்று எடுத்தவர்,"அந்தபுறம் கேட்ட செய்தியில் ஒன்னும் சொல்ல முடியவில்லை".

மீண்டும் ஹலோ..ஹலோ என்பது கேட்க,நாங்கள் உடனே வரோமென்று ஃபோனை வைத்தவர்,தூங்கிக் கொண்டிருக்கும் பவியை பார்த்து விட்டு,கதவை மட்டும் லேசாக சாத்திவிட்டு மருது வீட்டை நோக்கி வேகமாக சென்றார்.

வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த மயிலாவிற்கு தூரத்தில் வேதா வருவது தெரிய,என்னப்பா..,"நர்சம்மா இவ்வளவு வேகமாக வராங்க?".

மயிலா...என்று வந்தவர் விஷயத்தை சொல்ல,"அவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது".சரிங்கம்மா,நாம உடனே கிளம்பலாம்.நீங்களும் போய் கிளம்புங்க என்க,சரி மயிலானு வீட்டுக்கு வந்தவர்,பவியை எழுப்பியவர் நாம ஊருக்கு போகனும் என்றார்".

எந்த ஊருக்கு ஆன்ட்டி?

கோவைக்கு தான் டா.நேரமில்லை உடனே கிளம்பு என்றவர்,உள்ளே சென்று தயாராகி,பீரோவில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வர, பவியும் ரெடியாக இருந்தாள்.

பாட்டிக்கு சீரியஸா இருக்கா ஆன்ட்டி என்க?,ஆமாடா அதான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னாங்கக.

ம்ம்.

"இப்போதான் பாசம் பொத்துக்கொண்டு ஊத்துது போல அந்த கிழவிக்கு".

அப்பொழுது நர்சம்மா என்ற குரல் கேட்க,வா என்று வீட்டை பூட்டி விட்டு, மருது ஓட்டி வந்திருந்த வேனில் ( மருத்துவமனைக்கான பழைய சின்ன வேன்)ஏறிக்கொண்டதும்,வண்டியும் கோவையை நோக்கி ஓடியது.

"இரண்டு மணி நேர பயணத்தில் மருத்துவமனையை வந்து சேர்ந்தனர்".

வேனிலிருந்து இறங்கியவர்கள்,உள்ளே செல்ல,அங்கே,"பவியின் தந்தை வழி உறவினர்கள் நிற்பது தெரிந்தது".

என்னடி பவி,கிழவி புட்டுகிச்சோ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவள், உள்ளே செல்ல,"அவளின் இதயத்துடிப்பு தாருமாறாக துடித்தது".

ஏதோ விபரீதம் நடந்த போல தோன்ற, ஆன்ட்டி என்று வேதாவின் கையை பிடித்தவள்,"மனசு ஒரு மாதிரியா இருக்கென்றாள்".

ஒன்னும் இல்லைனு அவளை அழைத்துக்கொண்டு ஐசியு நோக்கி செல்ல,பாட்டி இங்கேவா இருக்காங்க என்றவளுக்கு?,ம்ம் என்றவர்,அவளை கையோடு பிடித்துக்கொண்டே கதவை திறந்து உள்ளே சென்றார்.

உள்ளே வந்தவள் அங்கு படுத்திருக்கும் உருவத்தை கண்டு அம்மாஆஆஆஆஆ என்று கத்தியபடியே,அருகில் ஓடியவள், அம்மா அம்மா உனக்கு என்னாச்சு?,என்று கதறி அழுதவளை, தேற்ற தெரியாமல் நின்றனர்.

மகளின் கதறலில் கடைசி கட்டத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாயுக்கும் கண்ணில் நீர் வழிந்து ஓட,அங்கிருந்த நர்சை பார்த்தவாறே மேல் மூச்சு வாங்க சைகை காட்டினார்.

அவர் சைகையை புரிந்து கொண்டு,அவர்களிடம் வந்தவர் டேபிளின் மேல் துணியில் மூடி வைத்திருந்த தாலியை எடுக்க,"அதை மருதுவிடம் திக்கி திணறி கொடுக்க சொன்னார்".

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பவியை தவிர மற்றவர்களுக்கு புரிந்தது.

சார் இந்தாங்க என்று தாலிச்செயினை அவன் முன்பு நீட்ட,மருதுவோ அதிர்ந்து நின்றான்.அவனை பார்த்தவர் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்த கையை தூக்க மூடியாமல் தூக்கி கை கூப்ப,அது மேலும் மருதுக்கு தூக்கி வாரி போட்டது.

மகனை நினைத்து மனதிற்குள் உடைந்தவர் தம்பி இதை பவி கழுத்துல கட்டு என்று மயிலா சொல்ல அம்மாஆஆஆஆ என்றான்.

அம்மா என்பது உண்மைனா இதை பவி கழுத்துல கட்டு என்றவரை ஒரு பார்வை பார்த்தவன்,தாலியை வாங்கிக்கொண்டு சுற்றம் மறந்து தாயின் மடியில் சாய்ந்து அழுது கொண்டிருப்பவளை கைப்பிடித்து தூக்கியவன்,அவள் முகத்தை பார்க்காமல் "கையில் இருந்த தாலியை கட்டி முடித்தான்".

அவளின் தாயிற்கு மேல் மூச்சு அதிகமாவது தெரிந்த நர்ஸ் அவரருகே ஓடி வரவும்,உயிரும் பிரிந்தது.

"அவங்க இறந்துட்டாங்க" என்று நர்ஸ் சொல்ல,"அம்மாஆஆஆ!" என்று மயங்கி விழுந்தவளை கூட பார்க்காமல், நடைபிணமாய் வெளியே சென்றான் மருது.

பவி...என்றபடியே வேதாவும் மயிலாவும் அவளை தூக்கி,அங்கிருந்த இன்னொரு பெட்டில் படுக்க வைத்து விட்டு,நர்ஸ் இவள் அதிர்ச்சியில் மயங்கி இருக்கா என்றவர்,மருந்து பெயரை சொல்லி இஞ்ஜக்க்ஷனை போடுங்க என்றார்.

அவர் சொல்லிய மருந்து பெயரை கேட்டவர்,உங்களுக்கு எப்படி தெரியும்?

தன்னை பற்றி சுருக்கமாக சொன்னவன வேதா,முதலில் அவளுக்கு ஊசியை போடுங்களென்று இத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகையை, பவியோட அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு அழுது தீர்த்தனர்

சீமக்கரை தாமரை வீடு..

செப்பு சிலை போல வந்த தாமரையை பார்த்தவர்கள் அழகா இருக்கடா என்க, "காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு" என்று சிரித்தாள்.

தாமரை,அல்லி இந்தாங்க என்று வீட்டில் கட்டிய பூச்சரத்தை இருவருக்கும் கவிதா கொடுக்க,அதை வாங்கி தலையில் வைத்துக்கொண்ட பேத்திகளிடம்,இனி கோயிலுக்கு போகலாமானா அப்பாயி கேட்கவும் ம்ம் என்றாளுங்கள்.

இந்த வருடமாவது மகனும்,மருமகளும் கோயிலுக்கு வருவாங்களானு முதியவர்கள் இருவரும் பார்க்க,வழக்கம் போல அதை கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்".

அப்பாயி நேரமாகுதுனு சிவாவின் குரல் கேட்க,இதோப்பானு பூஜை பொருட்களை பேத்திகளை எடுத்து வர சொல்லி விட்டு கோயிலை நோக்கி சென்றனர்.

அம்மன் கோயில்...

கோயிலுக்கு முன்பு உள்ள இடத்தை கூட்டி,தண்ணி தெளித்து கோலங்கள் போடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கோலத்திற்கு முன்பும் ஒரு ஆள் வந்து நின்று கொண்டு,தங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த முறத்தில் ( மூங்கிலால் பின்னியது)வாழை இலையை விரித்து வைத்து,அதன் நடுவில் சமைத்த பொங்கலையும்,வாழை பழத்தையும் வைத்தனர்.

பின் பூஜை தட்டில் குங்குமம்,விபூதி, சூடம் வைத்து விட்டு,தூபக்காலில் சாம்புராணி போடுவதற்காக எடுத்து வந்த நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் பூஜை தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றது என்று பூசாரி சொல்லி விட்டு செல்ல,மற்றவர்களும் தயாராகினர்.

"கதிர் குடும்பம் முன்பே வந்துவிட்டது".

கலாவும்,சிவசாமியும் வந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு,ஏனோ, இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது போலிருந்தது.

"வள்ளி,சீதா,ராதா,மூவரும் ஒரு வித ஆர்வத்தோடே கவிதா வீட்டிலிருந்து வருபவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்".

அவர்கள் எண்ணத்தை பொய்யாக்காமல்,கையில் பூஜை கூடையோடு,அல்லியோடு பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்த உருவத்தை கண்டு மூன்று பெண்கள் மட்டுமல்ல,பெருமாள்,முத்து,பிரகாசமும் அதிர்ந்து போயினர்!".

கதிருக்கு அந்த நேரம் பார்த்து ஃபோன் வந்ததால்,அவன் வேறு பக்கம் திரும்பி நின்று பேசிக்கொண்டிருக்க, இவர்களுக்கான இடத்தில் வந்து ஆயத்தமாகினர் தாமரை வீட்டினர்.

ஃபோன் பேசி முடித்தவன் மீண்டும் முன்பக்கம் வந்து பார்க்க,கை வளையல் மட்டும் தெரிய பூஜை பொருட்களை எடுத்து வைப்பது தெரிந்தது.

"ம்கும்...என்ற பெருமாளின் கனைப்பில் அதிர்ச்சியில் இருந்து மூன்று பெண்களும் வெளியே வந்தனர்".

"அந்த பொண்ணு யாரு சீதானு மனைவியிடம் பெருமாள் கேட்க, கவிதாவோட பெரிய பொண்ணு தாமரை.

"என்னாஆஆஆஆ என்று முத்துவும், பெருமாளும் அதிர,அதற்கு வளவனோ ஆமாம் பா,கவிதா அத்தை மகள் தாமரை தான்".

"முப்பது வருடங்களுக்கு முன்பு பார்த்த உருவத்தை மீண்டும் அதே சாயலில், அச்சு மாறாமல்,இரட்டை பிறவி போல கண்டதை,இவர்களால் வார்த்தையில் விவரிக்க முடியவில்லை".

நண்பர்களுடன் சில அடி தள்ளி நின்று பேசிக்கொண்டிருக்கும் கதிருக்கு தன் வீட்டினரின் அதிர்ச்சியும்,அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயமும் தெரியவில்லை.

"அப்பொழுது கோயில் உள்ளே இருந்து வெளியே வந்த பூசாரி,எல்லாரையும் பார்த்து ஆரம்பிக்கலாம் என்றவர்,அவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த பூஜை முறத்தை இரண்டு கைகளிலும் ஏந்தியவர்,சூரியன் இருக்கும் திசையை பார்த்து தூக்கி காட்ட,மற்றவர்களும் அவரைப்போல செய்தனர்.

பின்னர்...அவர் சொல்ல தொடங்கினார். உற்றார்,உறவினர்,கொண்டான், கொடுத்தான்,பங்காளி,ஊர்க்காரர், ஆடு, மாடு,கோழி,கொக்கு,ஈ,எறும்பு புல், பூண்டு,செடி,கொடி,நீர்,நிலம், இவைகளை,"எள்ளுக்காய் முள்ளு முறியாமல் இருப்பது போல"இந்த தைத்திங்கள் தொடங்கி,அடுத்த தைத்திங்கள் வரை எங்களை காக்க வேண்டும் சூரிய பகவானே என்க, அவரோடு சேர்ந்து அதைப்போல சொல்லி முடித்தனர்.

"பின்னர்,சூடத்தை ஏற்றி,சூரியனுக்கு காட்டி விட்டு,அருகில் இருக்கும் வீட்டாருக்கும் காட்டினர்.

சாம்பிராணி புகையை சூரியனுக்கு காட்டி விட்டு,இலையில் இருந்த தேங்காயை உடைத்து,நீர் மாற்றி அனைவரும் சூரிய வழிபாடை முடித்தனர்.

பின்னர்,கோயிலின் உள்ளே இருந்த குண்டானை எடுத்து வந்த பூசாரி, எல்லார் வீட்டு பொங்கலிலும் சிறிது அள்ளி,தனது பாத்திரத்தில் போட்டு கொண்டே வந்தவர் அதை உள்ளே இருக்கும் அம்மனிடம் வைத்து வணங்கி விட்டு,எல்லா சாதத்தையும் ஒன்றாக கலந்து,அதை அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து,விபூதி பூசிய பின்,அவரவர் வீட்டிற்கு செல்ல சொல்ல,மக்களும் கலைந்து சென்றனர்.

கதிரோ தன் வீட்டினர் வருவதற்கு முன்பே நண்பர்களை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.

"அடேய்..எதுக்குடா இப்படி இழுத்துட்டு போறான் இவனென்று ஜான் கேட்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும், வாடா பனைமரமென்றான் வேலு".

வேகமாக சென்ற கதிர்,கவிதா வீட்டிற்கு வளைந்து செல்லும் தெரு முனையிலிருந்த புளிய மரத்தின் கீழே போய் நின்று கொண்டான்.

இவன் என்னடா புளியமரத்துக்கும் கீழே போய் நிக்கிறான்னு ஜான் சொல்ல, ம்ம் ..,உன் பங்காளி புளி உலுக்க போறான்.அதை எடுத்து போய் தான் மதியம் சாம்பார் வைக்கனுமென்று வேலு சொல்ல,ஜானோ நண்பனை முறைத்து பார்த்தான்.

"என்னை முறைத்து பார்த்து ஒன்னும் புண்ணியம் இல்லை".உன் பங்காளியோட பார்வை எங்கேயிருக்குனு பாரு?,அப்பொழுது தான் கதிர் முகத்தை பார்த்தான்.

அவன் ஏதோ ஒருவித பரபரப்பாக இருப்பது தெரிந்தது.

என்ன ஆச்சு இவனுக்கு?? என்று யோசனையாகவே அவன் பார்வை சென்ற திசையில் ஜானும் பார்க்க,அங்கே கோயிலில் இருந்து எல்லாரும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

ரைட்டர் வாய்ஸ்....

பொதுவாகவே...நிஜத்திலும் சரி கதையிலும் சரி உண்மை காதல் தோற்பது எனக்கு சுத்தமா புடிக்காது.

அப்படி இருக்கும் போது இங்கே மருதுவிற்கு இப்படி ஒரு சூழலை உருவாக்கியது மனதளவில் எனக்கு ரொம்ப வருத்தம் தான்.

மனமேயில்லாமலே இந்த பகுதியை எழுதினேன்.இது கதை தானே என்று என்னை நானே எவ்வளவோ சமாதான படுத்தியும், எனக்கு..சாதாரண கதை என்று கடந்து போக முடியலை.

கதைப்படி சரி என்றாலும் சீமாவின் மனசாட்சி படி மருதுக்கான முடிவு தப்பு😩😩😩

... சீமா...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தேவி வீடு!

கோயில் பூஜையில் கலந்துக்க கொள்ள முடியவில்லை என்பதை விட, கதிரை பார்த்து ரசிக்க முடியவில்லை என்பது தான் "பெரும் கவலையாக இருந்தது தேவிக்கு".


வழக்கமாக காலையில் எழுந்தவள், பாத்ரூம் செல்ல போக,நள்ளிரவில் தாகம் எடுத்ததால்,தூக்க கலக்கத்தில் குடிக்கும் போது,கீழே சிந்தியிருந்த தண்ணீரில் கால் வைக்க வழுக்கி கீழே விழுந்ததில் சதை பிரண்டு,வீங்க ஆரம்பித்தது.

"ஊருக்குள் இருந்த சித்த வைத்தியரை தேவ் கூப்பிட்டு வந்தான்".அவர் வந்து பார்த்து விட்டு,உள்ளுக்குள் மூன்று வேலை பச்சிலையையும்,காலில் தடவ களிம்பும் கொடுத்தவர்,நாளைக்குள்ளே சரியாகிடும் என்றார்.

"நல்லநாள் அதுவுமாக மகளுக்கு இப்படி ஆகிட்டே என்று வசந்திக்கு கவலையாக இருந்தது".

வீட்லே ஓய்வு எடுமா கோயிலுக்கு நீ வர வேண்டாமென்று கண்ணன் சொல்லி விட்டார்.

நாளைக்கு மாட்டுப் பொங்கல்.அப்போ நம்ம மாடுகளை கோயிலுக்கு ஓட்டிக்கிட்டு போகும் போது நீ வரலாம்மா என்க,சரி என்று அரை மனதாக சம்மதம் சொல்லிவிட்டாள்.

அம்மன் கோயில்!

பெருமாளும்,முத்துவும் நாளைக்கு நடக்கப்போகும் பூஜை பற்றி ஊர்க்காரர்களோடு பேசிக் கொண்டிருக்க,மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்

சீதா,நமக்கு முன்னாடி தான் தாமரை போய்ட்டு இருக்கா.வா போய் ஒரு வார்த்தை பேசிட்டு வரலாம் என்க,ஏம்மா, அவங்களே வந்து உங்களை இதுவரை பார்க்கலை, நீங்க ஏன் போறீங்க?என்றாள் செல்வி.

" மகளை ஒரு பார்வை ராதா பார்க்க, வாய வச்சி கிட்டு சும்மா இருக்க மாட்டியா?".

"நிலவனோ செல்வி காதில் எதுக்கு இந்த விஜயசாந்திய தூண்டி விடுற என்றான்".

நீங்க போங்கம்மா நாங்க பாட்டி கூட வரோமென்று அவளும் சொல்ல,அத்தை என்றார் சீதா.ம்ம் என மருமகளுங்களுக்கு வள்ளி அப்பாயி தலையசைக்க,நானும் வரேன்னு, வளவனும் அவர்களோடு சென்றான்.

அக்கா தங்கை இருவரும் வேக நடையோடு,தங்களுக்கு முன்னே சென்று கொண்டிருக்கும் கலாப்பாட்டியின் பின்னாடி சென்றவர்கள்,சின்னம்மா என்று கூப்பிட,"அந்த குரலில் திரும்பிப் பார்த்தார்".

இவருக்கு முன்னாடி சென்று கொண்டிருந்த அல்லிக்கும்,தாமரைக்கும் பாட்டி நிற்பது தெரியாமல் நடந்து கொண்டிருக்க, தாமரை என்று அப்பாயி கூப்பிட,பாட்டியின் குரலில் திரும்பி பார்த்தவள், அங்கு நிற்கும்" தனது இரண்டு அத்தைகளை பார்த்து விழியை விரித்தாள்".

பின் அவர்களிடம் வந்தவள், அத்தை எப்படி இருக்கீங்க என்று இருவர் கையை பிடித்துக் கொண்டு கேட்க?, சீதா,ராதா இருவருக்கும் பேச்சே வரவில்லை.அத்தை உங்கள தான் கேட்கிறேன்?,எப்படி இருக்கீங்க?.

தாத்தா,அம்மாச்சி,மாமா ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா?,சீதாவோ அவள் கன்னத்தை தொட்டவர்,அப்படியே சிந்து அண்ணி போலவே இருக்கிறம்மா..

ரொம்ப நேரம் ரோட்டில் நின்று பேச முடியாது என்பது புரிந்த சீதா, பூஜை பண்ணனும்."நாளைக்கு நானும், ராதாவும் நம்ப குலதெய்வ கோயிலுக்கு வரோம்".நீ கவிதாக கூப்பிட்டஎன்று தாமரை என்றவர் அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து பின்னாடி சென்றனர்.

போகும் இரண்டு அம்மாக்கள் காதில் விழுமாறு,நான் அத்த வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன் மா என்றான் வளவன்.சரி,சீக்கிரம் வந்துடுப்பானு சென்றனர்.

போகும் அத்தைகளை பார்த்தவள்,ஏன் அப்பாயி அத்தை சரியாக கூட பேசாம போறாங்களென்று தாமரை கேட்க , வளவனோ பாட்டி என்ன சொல்ல போறாரோனு விழித்தான்.

அது ஒன்னும் இல்லத்தா...ஊட்டுல இருக்க சாமிக்கு பூஜை பண்ணனும் இல்லையா?படைக்க நேரம் ஆச்சுனா,உன் மாமனுங்க வந்து திட்டுவானுங்க.

அதனால தான் ரெண்டு பேரும் போறாங்க என்று சமாளித்தவர்,வாங்க நாமளும் போய் படைக்கனும்னு வீட்டை நோக்கி சென்றனர்.

மச்சான் இவன் யாருக்காக இப்படி காத்துட்டு நிக்கிறானென்று ஜான் கேட்க,மண்டைய பொளந்துருவேன்டா பனைமரம்.கண்ணு தெரியும் இல்லை உனக்கு?,இன்னும் கொஞ்ச நேரத்தில் விஷயம் தெரியும் பாருடா என்றான் வேலு.

வேலு சொல்லியதை கேட்டவன், நண்பனை பார்க்க,கதிரோ ஒரு கையால் மேலே இருக்கும் புளி மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டு, பார்வையை எதிரே வரும் ஆட்களை நோக்கி உன்னிப்பாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஜானும் எதிரில் பார்க்க, அங்கே வளவனோடு சிரித்து பேசிக்கொண்டு வருபவளை பார்த்தவன்,யாருடா அந்த பொண்ணு?.

வளவனுக்கும் அந்த புள்ளைக்கும் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கென்று சொல்லி வாய மூடவில்லை,வேலுவோ அவன் காலில் ஓங்கி மிதித்தான்.

அந்த வலியில் அய்யோ...அய்யோ என்று ஜான் கத்த,இவனின் சத்தம் கேட்டு எதிரில் வந்து கொண்டிருந்த தாமரை, வளவன்,மற்றும் அல்லியும் பார்த்தனர்.

வேலுணா....என கூப்பிட்டுக்கொண்டு இவர்களை நோக்கி வருபவளை, "கதிரும் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்".

அளவான எடையில் அச்சில் வார்த்த சிலை போல்,அழகு புதுமையாய், ஆர்பாட்டமில்லாத அழகும்,நடந்து வருகையில் காதோரம் ஆடும் ஜிமிக்கியும்,காற்றில் பறக்கும் முடிகள், அவள் கன்னத்தை தீண்டி செல்வதும்...
குங்குமக்கலருக்கு,தங்க சரிகை போட்ட புடவையில்,தன்னை இத்தனை நாட்கள் பித்தம் கொள்ள செய்தவளை அணு அணுவாய் ரசித்தவனுக்கு, இதயத்துடிப்பு அதிகமாகியது.

வேலுவின் அருகே வந்தவள்,பூஜை கூடையில் இருந்த விபூதியை எடுத்து அவன் நெற்றியில் பூசியவள்,பொங்கல் வாழ்த்துக்கள்ணா என்றவாறு தாமரையும் அங்கிருந்து போனாள்..

புயல் போல வந்து சென்றவளை இமைக்க மறந்து பார்த்தவனுக்கு, காற்றில் வந்த அவள் கூந்தலில் வைத்திருந்த மல்லிகை வாசனையோ, முழுதாய் அவனை தாமரைக்குள் மூழ்க வைத்திருக்க,ஒரு நொடியில் அத்தனையும் கலைந்தது.

இத்தனை நேரம் தன்னவளை உலகம் மறந்து ரசித்தவனுக்கு,தற்பொழுது அவள் மேல் எல்லை இல்லாத கோபம் வந்தது.ஆம்..மீண்டும் வளவனோடு சிரித்து பேசி செல்பவளை பார்த்து தான்.அதை விட கொடுமை,வேலுவை தவிர,பக்கத்தில் நிற்கும் இரண்டு ஜீவன்களை சிறிதும் சட்ட பண்ணவில்லை.

இன்னும் ஒரு நிமிடம் இங்கு நின்றாலும்,"நிச்சயமாக தம்பியை காரணமில்லாமல் அடித்து விடுவோம்" என்ற உண்மை உள்ளத்தில் உறைக்க,கதிரோ அங்கிருந்து வேகமாக சென்றான்.

என்னடா நடக்குதென்று ஜான் கேட்க, எல்லாம் பிறகு சொல்றேன்.உன் பங்காளி காண்டு ஏறி போய்ட்டு இருக்கான்.முதல்ல அவனை போய் பார்க்கலாம்னு ஜானின் கையை பிடித்து வேகமாய் இழுத்துக்கொண்டு வேலு நடக்க,"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்று பாடிக்கொண்டே வந்தான் ஜான்".

வீட்டிற்கு வந்த கதிர் எல்லாரும் பூஜை அறையில் இருப்பதை பார்த்து,மனதை ஒருநிலைப் படுத்தியவன்,முதலில் பூஜையை முடிப்போமென்று, அங்க போய் நின்று கொண்டான்.

அவனுக்கு பின்னாடியே வந்த ஜானும் வேலுவும் அங்கு வந்து நிற்க,வள்ளி அப்பாயி சாமிகளுக்கு சூடத்தை காட்டிவிட்டு,பின் மருமகள், பேரப்பிள்ளைகளுக்கு முன் காட்டினார்.
அவர்களும் சாமியை வேண்டி விட்டு, விபூதி,குங்குமம் இரண்டையும் எடுத்து பூசிக்கொண்டனர்.

பின்னர் அனைவருக்கும் தனது கையாலே பிரசாதத்தை எடுத்து ஆளுக்கு ஒரு வாய் கொடுக்க, அவர்களும் பிரசாதத்தை வாங்கிக் கொண்டனர்.

நம்ப ஜானோ,என்ன அப்பாயி...ஓடுறது, மேயிறது,பறக்குறதுனு,கொடுப்பனு பார்த்தால், பொங்கலை குடுக்குற என்றான்.

எல்லாம் நாளைக்கு தான் அப்பு.

ஏண்டா சர்சிலும் அப்பம் சாப்டுறா, பூஜையிலும் பொங்கலு திங்கிற, தர்கால பிரியாணி மேய்ற,எந்த மதம் தான் டா நீ என்று வேலு கிண்டல் பண்ண,மனித மதம் டா.

சரி அப்பாயி.நாங்க போய் அத்தை வீட்டுல படைச்சிட்டு வரோம் என்று செல்வி சொல்ல,ம்ம் போயிட்டு வாங்க என்றார்.

செல்வி,கதிர்,நிலவன்,ஜான், வேலுவோடு அவன் வீட்டிற்கு செல்ல, இவர்களுக்காக செல்வமும் பார்வதியும் காத்திருந்தனர்."கோயிலிலே ஜானை பார்த்தாலும், அங்கே பேச முடியவில்லை பார்வதியால்".

வீட்டுக்கு வந்தவனை கண்டு வா கண்ணு.எப்ப வந்த?,அப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? என்று கணவன் மனைவி இருவரும் விசாரிக்க, அப்பா நல்லா இருக்கார் என்றவன்,நீங்க எப்படி இருக்கீங்க?என்று இருவரிடமும் நலம் விசாரித்தான்.

அண்ணா,உங்க பாசத்தை புழிஞ்சு தள்ளிடிங்க என்றால்,பூஜையை முடித்து விடலாம்னு செல்வி சொல்ல,வாயாடி வாயாடி என்று சொல்லிக் கொண்டே, வாங்கப்பா என்று சாமி அறைக்கு சென்ற செல்வம்,சாமிக்கு பூஜையை முடித்து விட்டு, அவர்களுக்கு பிரசாதம் கொடுக்க,சிறிது நேரம் அங்கே இருந்து விட்டு கிளம்பினர்.

கதிர் வீடு...

வளவனும், வள்ளி அப்பாயியும் ஷோபாவில் அமர்ந்திருக்க சீதா, ராதா இருவரும் அங்கிருந்த தூணில் சாய்ந்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

என்ன அப்பாயி, உன் பேத்திய பார்த்து விட்டியா?,மனசுல கவலை விட்டுச்சானு வளவன் கேட்க,பாரமே இப்போ தான் அதிகமா ஆகிட்டென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

அவரின் அமைதியை பார்த்தவன், அம்மாஸ்...மருமகள் ஓகே தானே என்க, ம்ம் என்றனர்.

சரி...தாய்க்குலங்களே,ரெண்டு பேரும் என்ன பண்றீங்க என்றால்,உங்க நாத்தனார் மகளை எனக்கு கட்டி வைக்குறீங்க.எனக்கு தாமரைய கட்டிக்க ரொம்ப விருப்பமென்று சொல்லும் போது,சரியாக கதிரும் உள்ளே வந்தான்.

தம்பி சொல்வது நன்கு காதில் விழுந்தது.

வளவன் சொன்னதை கேட்டு இருவரும், நிஜமாவா அப்பு? என்க,பொய்யா சொல்லுறேன்?, நான் தான் ஏற்கெனவே அண்ணன்கிட்டயும், அப்பாயி கிட்டயும் சொல்லிட்டனே.

அப்படியா என்ற இருவரும்,பெரியவன் இருக்கும் போது, உனக்கு எப்படி கட்ட முடியும்?என்றனர்.

அம்மா... அண்ணாக்கு வேற பொண்ணை என்று சொல்லும் போது, வளவாஆஆஆ என்ற கதிரின் குரல் கேட்டது.

மாப்பு என்ற வேலு,கதிரின் கையை பிடிக்க,கோவத்தை கட்டு படுத்தியவன், பூஜைய முடிச்சிட்டு போக வேண்டிய தானே?? என்க, "அத்தைக்கு பொங்கல் வரிசை குடுக்க போனேன்ணா.

ம்ம் என்றபடியே படியில் ஏறி தனது அறைக்கு வந்தவன்,இதுவரை நடந்தது, பார்த்தது எல்லாம் நினைத்து சுவற்றில் ஓங்கி குத்திக்கொண்டிருக்க,கதவை திறந்து உள்ளே வந்த ஜான்,அடேய் என்று ஓடி போய் நண்பனின் கையை பிடித்தான்.

என்னடா பைத்தியம் எதாவது பிடித்து விட்டதானு நண்பனின் கை பார்க்க, அங்கங்கே தோல் இழைந்து,ரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது.

முட்டாள் பயலே என்ன பண்ணி வச்சிருக்கனு டிராவை திறந்து, அதிலிருந்த டெட்டால்,காட்டன், மற்றும் காயத்திற்கு போடும் ஆயில்மெண்டை எடுத்தான்.

பின்னர் காட்டனை சிறிது பிய்த்து எடுத்தவன்,டெட்டாலில் தொட்டு, காயத்தின் மேல் துடைத்து விட்டு, அங்கிருந்த ஆயில்மெண்டை எடுத்து போட்டு விடும் போது, மூவருக்கும் சீதா போட்டு கொடுத்த டீ காபி டம்ளர்களோடு வேலுவும் உள்ளே வந்தான்.

இருவரும் பால்கனியில் இருப்பதை பார்த்து,டேய் காஃபி டா என்றவன் ஜான் ஆயில்மெண்ட் போட்டு விடுவதை பார்த்து,என்ன ஆச்சுடா என்றவாறு அங்கிருந்து சிமெண்ட் கட்டையில் டிரேவை வைக்க, ம்ம் என் பங்காளி பாக்சிங் பண்றான்டா..உதை வாங்க ரெடியாக இருயென்று கதிரை முறைத்தப்படி ஜானும் சொன்னான்.

கண்மணி தொடர்வாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top