• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
சீமக்கரை!

"உச்சியில் இருக்கும் வெயில் மேற்கே இறங்குவதற்கு முன்பாகவே கிண்டல்கள்,கேலியோடு அறுப்பு வேலையை முழுவதுமாக முடித்தனர்".


விடிந்தால் பொங்கல் என்பதால், இரண்டு நாட்கள் சென்ற பிறகே டிராக்டரை வைத்து அடித்து,நெல்லை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என்று முன்பே செல்வமும் முடிவு செய்து விட்டார்.

வயலில் வேலை செய்து விட்டு கலைந்த ஆட்களெல்லாரும்,நெல் சுணை போக ஏரிக்கரையை நோக்கி சென்றனர் குளிப்பதற்காக.

டேய் நாமளும் குளிச்சிட்டே போய்டலாமா?,ம்ம் என்றான் கதிர். வேலையாட்களோடே இவர்களும் ஏரிக்கரையை நோக்கி சென்றனர்.

" கரையின் அருகே நெருங்க நெருங்க இவ்வளவு நேரம் உள்ளுக்குள் அமைதியாக இருந்த தாமரையின் நினைவுகள் மேலே எழும்பியது".

"அன்று நடந்த நிகழ்ச்சியை மீண்டும் நினைவில் ஓட்டிக்கொண்டே நடந்தவனுக்கு இதழோரம் சிரிப்பு வந்தது".

"அவனின் கரத்திலிருந்து தனது கையை விடுவிக்க பெரிதாக ஒன்றும் தாமரை போராடவில்லை".

லேசாக தான் பிடித்திருந்தான்,ஆனால் அதுவே அவளுக்கு தடத்தை பதித்திருந்தது.முடிக்கு என்ன போட்டு வளக்குறானு தெரியலையேனு உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.

அடேய்....மாப்பு என்ற சத்தம் கேட்ட பிறகு தான்,குளிக்கும் படித்துறையை தாண்டி போய்க் கொண்டிருக்கின்றோம் என்பது கதிருக்கு புரிந்தது.

அய்யோ....!

எதாவது சொல்லி சமாளிடா.இல்லை மானத்தை வாங்குவான்னு மனதிற்குள் சொல்லிக்கொண்டவன்"...,பார்வையை சுழற்றி பார்க்க,வலது பக்கம் இருக்கும் முள் வேலியில் முதல் நாள் இரவு வள்ளி அப்பாயி கேட்ட தூதுவளை செடி படர்ந்திருப்பது கண்ணில் பட்டது.

"ஹப்பாடா தப்பிச்சோம்"....என்று முணுமுணுத்தவன்,கதிறருக்கும் அருவாளால் வைத்தியத்திற்கு தேவையான அளவிற்கு அறுத்து எடுத்தவன் கீழே சிதறி கிடந்த வைக்கோல்களை சிறு கயிறாக திரித்து, கொடியோடா ஏரிக்கரைக்கு வந்தான்.

"அப்பாயி நேற்று கேட்டுச்சிடா"அதானென்க,அய்யோஓஓஓஓ என் செல்லத்துக்கு சளியானு வேலு கேட்க,இது அப்பாக்குடா,ஓஓஓ அய்யனாருக்கா என்றவன்,மேல் படிக்கட்டிலிருந்து நீருக்குள் அம்பாய் பாய்ந்தான் வேலு....

தண்ணிக்குளிருந்து எழுந்த தாத்தாவோ,அகராதி புடிச்சவன்னு சொல்லிக்கொண்டே படிக்கட்டின் அருகே வந்தவர்,நெற் கதிர் சொணை போக கையால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டிருந்தார்.

கதிரும் ஏரிக்குள் இறங்க,மீண்டும் சிறு வயது போல நண்பர்கள் இருவரும் நீந்தி அக்கரையை தொட்டு விட்டு,மீண்டும் இக்கரைக்கு திரும்பி வந்தவர்கள் வீட்டை நோக்கி சென்றனர்.

மாப்பு...ரெடியா கிட்டு வண்டிய எடுத்து வா,போய்ட்டு கரும்பை ஏத்திட்டு வந்துரலாம்னு வேலு சொல்ல,சரிடானு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

சொல்லியது போலவே மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கதிர் வரும் போது,வழக்கமாக அவர்களோடு கரும்பு வாங்க வருபவர்களும் வண்டியில் ஏறிக் கொண்டனர்.

வேலுவும் இவர்களுக்காக காத்திருக்க, மணி சத்தத்தோடு மாட்டுவண்டி வந்தது.அவனருகில் வந்து வண்டியை நிறுத்த,டயர் வழியாக மேலே ஏறியவன், கதிரின் அருகில் அம்ர்ந்து கொண்டான்.

பின்னர் பேச்சு கிண்டலோடு வழக்கமாக வாங்கும் கரும்பு தோப்புக்குள் செல்ல,அங்கே தெரிந்தவர்கள் சிலரும் கரும்பு கட்டுகளோடு எதிரில் வந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் கதிரு என்க, சொல்லுணா,வீட்ல அண்ணி புள்ளைங்களாம் நல்லா இருக்காங்களா?,எல்லாரும் நல்லா இருக்காங்கடா தம்பி என்றவாறு வேலுவை பார்த்து மாப்பு எங்கேடா இந்த பக்கம்?

அது வந்து மாமா,இங்க பன்னிக்கு பள்ளி கூடம் திறந்து இருக்காங்கனு கேள்விப்பட்டேன்,அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.

"கொழுப்பெடுத்த பயடா நீ" என்றவருக்கு, பின்ன என்னைய்ய?.எதுக்கு வந்துருக்கோம்னு தெரிஞ்சே நக்கலு வேண்டி கடக்கு என்றவனிடம்,எலேய்...

"எங்கத்தை மவனை நாங்க கிண்டல் பண்ணாம வேற யாரல?பண்ணனும்", பையனா பொறந்ததால நீ தப்பிச்சே.இல்லை என் பொண்டாட்டியா ஆகிருப்படி.

"அதற்கு வேலுவோ",ஏன் மாமா ஏன் இப்படினு முறைக்க,உண்மைய சொன்னேன்டானு சிரித்தவர், சரிடா,வாங்கடா ஒரு எட்டு வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரலாம் என்கவும், இருக்கட்டும்,இன்னொரு நாளைக்கு வரோம் மாமா என்றான்.

பின்னர் அவரிடம் சொல்லிக் கொண்டு வண்டியில் இருந்து இறங்கி மாடுகளை அவிழ்த்து,மாட்டு வண்டியின் முனையின் இரண்டு பக்கமும்,இரண்டு மாடுகளை கட்டி விட்டு கரும்பு தோப்பிற்குள் சென்றனர்.

தேனூர் L.T. Matric school....

"ஐந்து பேருக்கும் உள்ளுக்குள் ஒரே விஷயம் தான் தோன்றியது".தங்களுக்கு வேலை இல்லை என்பதை தான் சொல்லப்போகிறார்கள் என்று.

"நம்ப ஜானோ பக்கத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதை கண்டுக்கொள்ளாமல்",காற்றில் பறக்கும் தேவியின் காதோர முடியையும்,பார்பி டால் போல் எதிரில் நின்று கொண்டிருப்பவளை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

"அவன் மனசாட்சியோ,அடேய் உங்கப்பன் மிலிட்ரிக்கு தெரிஞ்சிது தோலை உறித்துடுவார் என்றது".

"அதற்கு இந்த பயபுள்ளையோ... எல்லாம் அவர் வயசுல பண்ணியதை தான் நானும் பண்ணுறேன் என்றான் மனதிற்குள்".

ம்ம் நீ நடத்து ராசானு மனசாட்சி சென்று விட,மீண்டும் சைட் அடிக்கும் வேலையை ஜானும் தொடந்தான்.

தேவியோ,தன்னை ஒருவன் ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பது அறியாமல் நின்று கொண்டிருந்தாள்.

"அதற்கு காரணமோ ஜான் போட்டிருக்கும் கூலிங் கிளாஸ் தான்". இவர்களை கூப்பிட போகிறார்கள் என்று தெரிந்த உடனே, பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டான்".

"மகனின் செயலை விசித்திரமாக மிலிட்டரி பார்க்க,கண்ணுல ஏதோ அன்னீசியா இருக்க போல உறுத்துது என்க,ஓகே என்று தனது வேலையை பார்க்க தொடங்கினார் லாரன்ஸ்".

"ஹப்பாடா"....எப்படியோ இந்த மிலிட்டரி கிட்ட இருந்து தப்பிச்சடா ஜானென சொல்லிக் கொண்டான்.

உங்களை இங்கு வர சொல்லியதற்கு காரணம் என்று லாரன்ஸ் அமைதியாக, "வேலை இல்லையென்று சொல்ல எதுக்குடி இவருக்கு இவ்வளவு அக்கப்போறு" என்றாள் தோழியிடம் பொறுமையாக ரேவதி.

நீங்க ஐந்து பேரும் யு. ஜி டிகிரி தான்மா முடிச்சிருக்கீங்க.ஆனால் உங்களோட பர்பார்மென்ஸ் நல்லா இருந்தது. இப்போதைக்கு உங்களுக்கு கே.ஜி ஸ்டூடன்ஸ்கு கிளாஸ் எடுக்க போஸ்டிங் தரோம்.

ஒரு வேளை,முடிந்தால் கரஸ்ல பி. எட்..பண்ணுங்க,அப்போ வேண்டுமானால் உங்களுக்கு அடுத்த லெவலுக்கான வகுப்பை அலார்ட் பண்ண முடியும்.இல்லை இதையே தொடர்கிறேன்னு சொன்னாலும் பிரச்சினை இல்லைங்கம்மா. "இனி,...முடிவு உங்கள் கையில் தான்".

அவர் சொன்னதை கேட்ட பிறகு தான் இவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. தேவியும்,ரேவதியும்,கே. ஜி.. போதும் என்க,மற்ற மூவருக்கும் வேலை மிக அவசியம் என்பதால்,"சொன்ன போலவே கோர்ஸ் படித்து விடுகிறோம் சார் என்றனர்".

"பின்னர் ஐவருக்கும் வேலைக்கான லட்டரை கொடுத்தவர்,பொங்கல் ஹாலிடே முடிந்து ஸ்கூல் ரீ ஓப்பன் ஆவதையும்,பள்ளியின் வேலை நேரம் மற்றும் சம்பளம்,மேலும் சில நடைமுறை வழக்கங்கள் பற்றிய விவரங்களெல்லாம் இதில் அடங்கி இருக்கின்றது என்க,தேங்க்யூ சார் என்றவாறு வெளியே வந்தனர்".

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என்ன தேய்ஞ்சா போய்டுவாள்...?

"விட்டா போதும்னு ஓடிட்டாளே இந்த பார்பி டால்?"...என்று மனதிற்குள் தேவியை திட்டிக்கொண்டான் ஜான்.

ராமு.... தங்கச்சியை கூப்பிட்டு கிட்டு வீட்டுக்கு வா என்று லாரன்ஸ் சொல்ல, ம்ம் என்று சிரித்தார்.

என்னடா...நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ சிரிக்கிறனு லாரன்ஸ் கேட்க,நீயும் ஜூலி கூட வரலாம்டா தப்பே இல்லை என்றார்.

வரலாமே என்றவர்,சரி ராமு கிளம்பளாமா என்றபடி லாரன்ஸ் சேரிலிருந்து எழுந்து கொண்டே கேட்க, ஹம் டா என்றபடியே அவரின் பின்னாடியே ராமனும் செல்ல,வெளியே வந்த ஜான்,பார்பிடாலை தேடினான்.

ஜேம்ஸ் ரூமை லாக் பண்ணிடுப்பா என்று ராமன் சொல்ல,சரிங்க சார் என்று உள்ளே போய் லைட்,பேன், ஏ. சி. சுவிட்களை நிறுத்தி விட்டு வந்து கதவை பூட்டினான்.

பின்னர் மூவரும் பேசிக்கொண்டே கார் இருக்கும் இடத்திற்கு வந்தவர்கள் காரில் ஏறி வீட்டை நோக்கி சென்றனர்.

இந்த வேலை கிடைக்காம போய்டுமோனு நினைத்தோமெ என்றவாறு மரத்தின் கீழே நின்று தேவியும் ரேவதியும் பேசிக்கொண்டிருந்தனர்.

எனக்கும் அந்த எண்ணம் இருந்துச்சி ரேவா.அந்த சார் முகம் தெளிவா இருந்துச்சு.அப்போ நமக்கு வேலை உண்டு,ஆனால் வேறு ஏதோ டுவிஸ்ட் இருக்குனு இருந்தேன் டி.அதைப்போல தான் நடந்துருக்குனு தேவி சொன்னாள்.

ம்ம்...நேரத்தை போக்க தான் இந்த வேலைக்கு வந்தோம்."இந்த டிகிரி வாங்குவதற்குள் நாக்கு தள்ளியதே போதும்டி".

"இனியும் படிப்புலாம் நமக்கு செட்டாகாது" என்ற ரேவதியின் பேச்சை கேட்டு தேவிக்கு சிரிப்பு வந்தது.

நீ அண்ணாவை வர சொல்லலையாடி?என ரேவா கேட்க,"உன்னை பஸ் ஸ்டாப்பில் விட்ட பிறகு அண்ணனை அங்கு வர சொல்லிக்குறேன்டி".

சரிடி... முதல்ல வேலை கிடைத்ததை அவர் கிட்ட சொல்லுறேன்னு சொல்லிக் தனது ஹேண்ட் பேகில் இருந்த போனை எடுத்த ரேவதி கணவருக்கு கால் பண்ண,உடனே அட்டென் பண்ணியவனிடம் விஷயத்தை சொல்ல,மனைவிக்கு வாழ்த்துக்கள் சொன்னார்.

பின் தேவியை பற்றி சொல்லி விட்டு போனை கொடுக்க,அதை வாங்கியவள், அண்ணா நல்லா இருக்கீங்களா என்க?, ஒற்றை பிள்ளையாய் பிறந்தவனுக்கு அண்ணன் என்று அழைத்தது நெஞ்சுக்குள்ளே சொல்ல முடியாத உணர்வை தந்தது.

ஹலோ ஹலோ அண்ணா... என மீண்டும் தேவி கூப்பிட,நினைவுக்கு வந்தவன்,தங்கை என்று உரிமையோடு அவளிடம் பேசி விட்டு போனை வைத்தான்.

வாயேண்டி....வீடு வரைக்கும் வந்துட்டு போயேன்? என்று தேவி கூப்பிட, இருக்கட்டும்டி.இனி ஒன்றாக தானே வேலை பார்க்கப் போகிறோம்.அப்போ, அடிக்கடி வீட்டுக்கு வருவேன். நீ கவலையே படாதே என்றாள் ரேவதி.

பள்ளியில் இருந்து பத்து நிமிடம் நடக்கும் தொலைவு தான் என்பதால், இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்து தேனூர் பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றனர்.

இவர்கள் போன நேரத்திற்கு ஏனாதிக்கு செல்லும் பஸ்ஸும் வந்தது.நீ போ என்று தேவி சொல்ல,இருக்கட்டும் டி. அண்ணாவை வர சொல்லு,நீ போன பிறகு நான் போகிறேனென்று சொன்னாள்.ஏனென்றால்,எப்படியும் அரை மணி நேரம் சென்று தான் இந்த பஸ் எடுப்பார்கள் என்பது தெரிந்ததால் தான் ரேவதி அப்படி சொன்னாள்.

சரி என்று தேவியும் தனது ஃபோனில் இருந்து தேவ்க்கு கால் பண்ணியவள், பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக சொல்ல, உடனே வரேன் என்று சொல்லி கட் பண்ணினான்..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
ஏனாதி!

மாப்பு என்னடா இவ்வளவு கூட்டாமா இருக்கு?எந்த காலம்டா நாம வாங்கி கிட்டு ஊர் போய் சேர போறதுக்குள்ளே பொங்கலே முடிஞ்சிடும் போலடா என்றான் வேலு.

என்னடா செய்ய?,"சுற்று வட்டாரத்துல இவங்க மட்டும் தானே பொங்கல் கரும்பு விளைய வைக்குறாங்க".அப்போ கூட்டம் இருக்க தான செய்யும்.இந்த வருஷம் நாம தாமதமா வந்துருக்கோம் டா,அதான் இப்படி என்றான் கதிர்.

சூழல் அப்படி என்று பேசிக்கொண்டே தோப்பிற்குள் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு முன்னே இருபது மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது.
அதில் சில வண்டிகளில் பொங்கல் கரும்பை வேலையாட்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

மாப்பு உள்ள போய் பாக்கலாம் என்க, அதான் நல்லது.கிட்ட போனால் தான் சரி வரும் என்றபடியே இவர்களெல்லாரும் கரும்பு கட்டு அடுக்கி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.

அங்கே வந்தவர்களை பார்த்த தோப்பு முதலாளி என்னல இந்த வருஷம் இவ்வளவு ஆடி அசைஞ்சி வாரீக?நான் நினைச்சேன் மதுரை,நெல்லைக்கு போய்ட்டீங்களோனு என்க,வேலுவோ, மீசைக்கு எவ்வளவு நக்கலை பாருடானு கதிரின் காதில் விழும்படி சொன்னான்.

ம்ம்...என்றவன்,வயல்ல வேலைங்க செட்டியார்,அதான் நேரமா வர முடியலை,தெரியும்ல.சீமக்கரைல இருந்து வந்தவங்க கிட்ட கேட்டேன் உங்களை காணுமேனு,அவைக தான் சொன்னாங்க என்றவர்,ரொம்ப நேரமா நிக்கிறாங்க,அவைங்கள அனுப்பிட்டு வாரம்ல என்று மீண்டும் வேலையை தொடர்ந்தார் செட்டியார்.

முன்ன இருந்த வண்டிகளுக்கு கரும்பை ஏற்றி முடித்து அனுப்பவே, இரவு ஆனது.ஆனாலும், "அந்த இடம் மட்டும் பகல் போல் வெளிச்சமாக இருந்தது".

வருடா வருடம் இப்படி நடப்பதால், கரும்பு வெட்டும் நாளுக்கு முன்பாகவே,கரும்பு தோப்பிலிருந்து வேளியே செல்லும் பாதை வரைக்கும் ஆட்களை வைத்து டியூப் லைட் கட்டி விட சொல்லிடுவார்.

இவர்களுக்கான முறை வர இரவு எட்டை தாண்டியது.பின்னர் வேண்டிய கரும்பு கட்டுகளை ஆளுக்கொன்றாக தூகிக்கொண்டு போய் வண்டியில் வைக்க,விரைவாகவே வேலை முடிந்தது.

எவ்வளவு ஆச்சென்று கணக்கை போட்டவர் இந்தாங்கல என்று சீட்டை நீட்ட,அதை வாங்கிய கதிர் எவ்வளவு என்று பார்த்து விட்டு பாக்கெட்டில் இருந்து பணத்தை எண்ணிக்கொடுத்தான்.

சிரித்துக்கொண்டே வாங்கியவர், வழக்கம் போல விலையை குறைத்து விட்டு மீதி பணத்தை கொடுத்தவர், பார்த்து போய்ட்டு வாங்கல,வரோம் செட்டியார் என்று இவனுங்களும் சொல்லிக்கொண்டு வண்டி இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

கதிரு வண்டிய நான் ஓட்டுறேனென்று இவர்களோடு வந்த ஒருவர் சொல்ல, சரிணா என்றவன்,மாடுகளை வண்டியில் பூட்டி விட்டு , மற்றவர்களோடு பின்னாடி ஏறிக்கொள்ள,கரும்பு வண்டியும் சீமக்கரையை நோக்கி சென்றது.

செட்டியாருக்கு செம வேட்டை போல இந்த வருஷமென்று வண்டியில் இருந்த ஒருவர் சொல்ல,ஆமா மாமா.எவ்வளவு கூட்டம் பாருயா,இன்னும் வந்து கிட்டு தான் இருக்காங்க என்றான் வேலு.

ஆமாணா...வருஷத்துக்கு ஒரு முறை தான இந்த தொழிலு,நம்பளை போல முப்போதும் விளைச்சல் இல்லையேணானு கதிர் சொல்ல,நீ சொல்லுறது சரி தாண்டா தம்பி என்றவர்,எலே... நம்ப முத்தையன் டீ கடையில வண்டிய நிறுத்துடா என்றார் வண்டி ஓட்டிக்கொண்டிருப்பவரிடம்.

ஆமா மாமா..."பசி காதை அடைக்குதென்று வேலு சொல்ல",அட சண்டாளப்பாவி!.

அஞ்சு கட்டு கரும்பை யானை போல மேஞ்சி தள்ளுனவனுக்கு இன்னும் பசிக்குதா?என்று அவர் சொல்ல, மற்றவர்களுக்கு அதைக்கேட்டு சிரிப்பு வந்தது.

ஆமாய்யா.நான் மட்டும் தான் சாப்பிட்டேன் நீங்க எல்லாம் என் வாயவே பார்த்துகிட்டு இருந்தீங்க பாரென வேலு சொல்ல,ஏண்டா...நீ தேனை திங்கும் போது அதில் கொஞ்சம் வழிஞ்சதை நாங்க தொட்டு நக்கினது தப்பா?

தப்பே இல்லை மாமா...ஆனால் வழிஞ்சதை தொட்டேன்னு சொன்னப்பாரு அது தான் மாமா தாங்க முடியலை."ரெண்டு கட்டு கரும்பை நீ ஒரு ஆளே திண்ணு தீர்த்துட்டு",என்னா பேச்சு இப்போ?.

விடுடா...விடுடா...மாப்பு.அரசியல்ல இதுலாம் சாதாரண விஷயம் என்று கதிர் சொல்ல,நீ அப்படி தான் டா சொல்லுவ.ஏன்னா,உன் அண்ணனாச்சே உங்களுக்கு சகஜமா தான் டா இருக்குமென்று வேலு முறைக்க,மாமா...டீ கடை வந்துருச்சி என்றார் வண்டி ஓட்டிய ஆள்.

பின்னர் அவரைத்தவிர அனைவரும் இறங்கி போய் டீயை குடித்து விட்டு, வண்டியில் இருப்பவருக்கும் வாங்கி வந்ததனர்.

அவரும் குடித்து முடித்து விட்டு வண்டியை ஓட்ட இவர்கள் சீமக்கரை பஸ் ஸ்டாப் கிட்ட வரும் போதே இரவு பதினொன்றை ஆனது.மாமா என்று வண்டி ஓட்டுபவரை கூப்பிட்டார் ஒருவர். அவர் கூப்பிடும் காரணம் புரிந்து,ம்ம் என்க,இவரும் அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

மற்றவர்களோ அசதியாக இருப்பதால், கரும்பு கட்டின் மேலே படுத்துவிட்டனர்.
எல்லாரும் தூங்கிட்டானுங்களா?என்க, ஆமா மாமா என்றார் அருகில் இருந்தவர்.சரி...சாமி விபுதி வெத்தலை பொட்டனுத்துல இருக்கு,எடுத்து கொஞ்சம் வண்டில தூவி விடு,பாட்டை போன்ல சத்தமா வை என்றார்.

அவர் சொன்ன போலவே செய்து முடித்தவர்,சிறிது விபூதியை எடுத்து இரண்டு மாட்டின் மேலும் கைக்கு எட்டிய வரை தடவி விட்டார்.

ஏன் மாமா....தெரிஞ்சி தான் தயாரா வந்தியா?என்று வண்டி ஓட்டுபவரிடம் கேட்க,ஆமாடா,வீட்ல நாம வண்டி ஏறும் போதே நேரம் ஆவும்னு தெரிஞ்சிட்டு.

இன்னைக்கு போவியலுக்கு ( போகிப்பண்டிகை)செத்தவங்களுக்கு சிலர் கறி சோறு ஆக்கி படைப்பாங்க. எதாவது காத்து கருப்பு அலையும்.

பயலுங்க கிட்ட சேட்டை பண்ணி இவனுங்க பயந்து மாடு மெரண்டுச்சி அவ்வளவு தான் எல்லார் சோலியும் முடிஞ்சுது.எவன் எவனுக்கு மூஞ்சி மொகரை பேரும்னு சொல்ல முடியாது".

"அதனால் தான் பெரியவன( கதிர்) வண்டி ஓட்ட வேண்டானு நான் உட்கார்ந்தேன்"என்று அவர் சொல்லும் போதே,அந்த காட்டுப்பாதையில் அவர்கள் பின் பக்கமாக ஜல்,ஜல் என்ற சத்தம் இருவருக்கும் கேட்டது .

மாமா என்று அருகிலிருப்பவர் அழைக்க,எல்லாம் காதுல விழுதுடா,சுடுகாட்டு பாதைய தாண்டிட்டோம்னா பயம் இல்லை.

ஆனால்,அதுக்குள்ளே இவனுங்க முழித்து கொள்ளாம இருக்கனும் என்றவர்,சரி இறுக்கமா புடிச்சிக்கோ என்று சொல்லி விட்டு,மாடு ஓட்ட கையில் வைத்திருக்கும் தார் குச்சியின் முனையில் இருக்கும் ஊசியால் இரண்டு மாடுகளின் பின்புறமாக ஓங்கி குத்த,வலி தாங்காத மாடுகள் பாரத்தை பொருட்படுத்தாமல் வேகம் எடுத்தது.

நீலகிரி....

அடேய் மலமாடு...அதான் ஆன்ட்டி கேட்குறாங்களே?,வாய் திறந்து பதில் சொன்னால் முத்து கொட்டி விடுமா?என்றாள் பவி.

"குண்டு பூசணி சும்மா இருடி"என்றான்.

ஓஓஓஓ....ஐயாவுக்கு வெட்கமா?என்றவள்,ஆன்ட்டி புதுசா என்னமோ பண்றான்?,இதெல்லாம் என்னால தாங்கவே முடியலை என்க மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தது.

"மானத்தை வாங்குகிறாளே இந்த குண்டச்சினு மனதிற்குள் சொல்லிக்கொண்டவன்,ஒரு நாளைக்கு உனக்கு இருக்குடி என்று பொறுமையாக சொல்ல,"போடா புடலங்காய் என்றாள் பவி".

அப்பொழுது,வேதா கேட்ட போல சுக்கு டீயை போட்டு எடுத்துட்டு வந்தவர், ஆளுக்கு ஒரு குவளையில் கொடுக்க, நால்வரும் வாங்கி குடித்து முடித்தனர். பின்னர்,மயிலா என்று வேதா கூப்பிட, சொல்லுங்க நர்சம்மா.

ஒரு நல்ல விஷயமா தான் உன்னை பார்த்துட்டு போகலானு வந்தேனென்று வேதா சொல்ல,சொல்லுங்கம்மா.

மருது பற்றி அண்ணன் வீட்டில பேசிட்டேனென்கவும், அப்படிங்கலாமா,என்னம்மா சொன்னாங்க?என்று "ஒரு வித கலக்கத்தோடே கேட்டார்".

அவரின் முகத்ததில் இருக்கும் கலக்கம் புரிந்து,எல்லாம் நல்ல விஷயம் தான். வீட்ல எல்லாருக்கும் மருதுக்கு தாமரைய கட்டி வைக்க சம்மதமென்று சொல்ல, நிஜமாவாமா என்று ஆச்சரியப்பட்டார்!.

"நிஜமா தான் சொல்றேன்".தாமரை தான் உனக்கு மூத்த மருமகள், சந்தோஷமா இப்போ?,அந்த மலையம்மன் புண்ணியத்துல பெருத்த சந்தோசம்மா என்றவாறு மகனை பார்க்க,அவனால் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியவில்லை".

மருது தற்பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் என்பதை,அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பே காட்டிக் கொடுத்தது.

ஆனால் ஒரு விஷயம் என்று வேதா தயங்க,என்னங்கம்மா?எதாக இருந்தாலும் சொல்லுங்கம்மா என்று மயிலா பதற்றமாக கேட்க," நீ பதற்றப் படுற அளவுக்கு ஒன்னும் கிடையாது".

"தாமரைக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க வேண்டாமாம்".அவளுடைய கனவு,படிப்பு உனக்கு தெரியும் தானே?.

ம்ம் பாப்பா பத்தி எனக்கு தெரியாதாம்மா? அது விருப்பப்பட்ட போல இந்த உலகத்துல எந்த மூலைக்கு வேணாலும் போயிட்டு வரட்டும்மானு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,நம்ம காலத்துல தான் வீட்டுக்குள்ளே பூட்டி வச்சுட்டாங்க.

இப்ப இருக்கிற பொண்ணுங்களுக்கு அவங்க ஆசைப்பட்டது நியாயமா இருந்தாக்க,அதுக்கு குடும்பம் உறுதுணையாக இருக்கணுமா என்று மயிலா சொல்வதை பெருமிதமாக பார்த்தனர்.

மருது நீ என்ன சொல்லுறப்பா??என்று வேதா கேட்க, "தாமரை விருப்பம் தான் எனக்கும் மா" என்று முதல் முறையாக அம்மா என்று அழைத்தான்

அவனின் அம்மா என்றழைப்பில் வேதாவுக்கு ஒருவிதமான தாய்மை உணர்வு வந்து சென்றது.

அப்புறம்,பொங்கல் முடிஞ்ச பிறகு முறைப்படி பொண்ணு கேட்ட வர சொல்லிருக்காங்க என்க, "இன்னைக்கு ரொம்ப சந்தோஷமான விஷயமாகவே சொல்லிக்கிட்டே இருக்கீங்களேம்மா".

இதுக்காகவே ஏதாச்சு இனிப்பு செஞ்சு உங்க வாயில கொடுக்கணும் போல இருக்கென்கவும்,அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்றவர், "இதை நேரடியா உன்கிட்ட சொல்லிட்டு போக தான் நான் வந்ததே".அப்புறம் மயிலா,மருதுவோட அப்பா வந்த பிறகு ஒரு போன் பண்ணு.

நான் வந்து நேரிலே இதை பற்றி பேசுகிறேன்னுவேதா சொல்ல, இருக்கட்டும்மா,அவர் கிட்ட நானே இதை சொல்லிக்கிறேன் என்ற மயிலாவின் வார்த்தைக்கு,இல்ல இல்ல அது மரியாதை இல்லை.

அவர் வந்த பிறகு சொல்லு, நான் வரேன் என்ற வேதாவோ அங்கிருந்து பவியோடு தனது வீட்டை நோக்கி சென்றார்.

பவி... அடுத்து உனக்கு தான் டா பாக்கனும்.நீயும் இந்த கல்லூளி மங்கன் போல எதையாவது மனசுல வச்சிருந்தா சொல்லிடு டி. பஸ் செலவாது மிச்சமாகும் என நடந்து கொண்டே வேதா சொல்ல, ஏன், ஏன்,ஏன் ஆன்ட்டி இப்படி?

"இதுவரை எந்த புண்ணாக்கு மண்டையன் மேலயும் அப்படி ஒரு எண்ணம் வரலையே என்றாள் பவி". அவள் சொன்னதை கேட்ட வேதாவோ சத்தமிட்டு சிரித்தார்


கண்மணி வருவாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top