Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
தாமரை வீடு!
வேறு பொண்ணு கிடைக்கலையானு சின்ன பேத்தி கேட்டதற்கு, "என்னம்மா செய்ய? எங்க ஆத்தா அப்பனுக்கு இவளை தான் கண்ணு தெரிஞ்சிருக்கு போல. காலமும் ஓடி போய்ட்டு" என்றார் சிவசாமி தாத்தா.
"ஓ... இந்த தொரைக்கு பொண்ணுங்க அப்படியே வரிசை கட்டி நின்னாளுங்க பாரேனென்று,தனது தோள் பட்டையில் இடித்து காட்டி கலா பாட்டி சொல்ல", தாமரைக்கு சிரிப்பு வர, "வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியாடி? என்க".
"ஏன்....சுதந்திர நாட்டுல எனக்கு பேச உயிமையில்லையா?என்னக்கொடுமை கலா இதுலாம்?என்க,அடியேய், இன்னொரு முறை பேர சொன்ன வெடுக்கு வெடுக்குனு ஆட்டுற அந்த கழுத்து எலும்ப திருவி போட்டுறுவேன்".
"ம்கும்... இந்த அம்மா திருவுர வரைக்கும் நான் கழுத்தை காட்டி கிட்டே இருப்பேன்னு கனவு,ஏழு ஊரு வாய், பாவம் தாத்தா நீ.எப்படி தான் காலத்தை தள்ளுனியோ போ,உன் மன தைரியத்துக்கு கோயில் கட்டி கும்பிடனும் என்றாள் அல்லி".
"சின்ன பேத்தி சொன்னதைக்கேட்டு சிவசாமிக்கு சிரிப்பு வந்தது".சின்ன குட்டி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது என்றவர் பின்னர் பேசிக்கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தனர்".
"அப்பொழுது அங்கு வந்த கவிதா,சாப்பாடு ரெடி வந்து சாப்பிட்டு பிறகு வேலைய பார்க்கலாம் என்க, இன்னும் கொஞ்சம் தான்,ஒரேடியா முடிச்சிட்டு வந்துடுறோம் என்றனர்".
ஒரு வழியாக எல்லா வேலையும் முடிய மதியம் ஆனது.தேவையில்லாத குப்பைகளை ஒரு பக்கம் கொளுத்துவதற்காக அள்ளி வைத்து விட்டு,கிணற்றிலிருந்து நீரை இறைத்து தங்களை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்கு வர,அவர்களுக்கான உணவுகளோடு கவிதாவும் திண்ணையில் காத்திருந்தார்"
"சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து,என்ன செய்யனு பேசிக்கொண்டிருந்தனர்".
அப்பொழுது,வேதாகிட்டயே நீ சொல்லிருக்கலாமே வேலை பற்றினு அன்பு தனது மகளிடம் கேட்க, "என்னோட சம்மதம் இல்லாமல் அத்தையும் மருது வீட்டில் பேசியிருக்க மாட்டாங்கப்பா".
"தனது தங்கைக்கும் மகளுக்கும் உள்ள புரிதலை எண்ணி உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவர்,சரிமா நானே இதைப்பற்றி பேசுறேன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேதாவிடமிருந்து கால் வந்தது".
"அத்தை தான் பா என்றவாறு அட்டென் பண்ணிய அல்லி,அத்தை எப்படி இருக்கீங்க?,நல்லா இருக்கேன் குட்டி, பொங்கல் வேலையெல்லாம் எப்படி போகுது?".
"பெண்டு கழலுது".நான் சும்மா இருந்தால் தான் சில பேர் கண்ணுக்கு ஆகாது என்றாள் கலா அப்பாயியை பார்த்துக்கொண்டே.
தனது தாயை பற்றி தான் மருமகள் சொல்கிறாள் என்பது புரிந்து சிரித்தவர், அப்பா இல்லையாடா?,ம்ம் இதோ தரேன் என்று போய் அன்புவிடம் போனை நீட்ட, சொல்லுமா என்றார்".
"அண்ணா....மயிலாவுக்கு இன்னும் எந்த பதிலும் சொல்லலையேணா,சம்மதம் சொல்லிடுமா என்றவர்,நீயே எல்லாம் பேச வேண்டிய தானே?,நம்ப புள்ளை விருப்பம் தெரியாமல் எப்படிணா நான் வாக்கு கொடுக்க?,மருமகளும் அத்தையும் ஒரேப்போலவே யோசிக்கிறீங்களென்று சிரிக்க", என்னணானு வேதா கேட்க,புள்ளை சம்மதமில்லாமல் நீ எதுவும் பேச மாட்டனு.அதைப்போல தான் இப்போ நீயும் சொல்லுற.
அப்படியாணா என்ற வேதாவிற்கு, "கல்யாணம் மட்டும் இப்ப வேண்டாம் என்று சொல்லுதுமா".சிங்கப்பூர் போய் விட்ட பிறகு அத பத்தி யோசிக்கலாம்னு சொல்லுதுமா என்கவும்,எனக்கும் அது தான்ணா தோணுச்சி.
அவளுடைய கனவு இது தான்.அதை கலைக்க எனக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்ற தங்கையிடம், இதை பற்றி தம்பி வீட்ல பேசிடுமா, "சரிணா என்றார்"
"அப்புறம் மா."..பொங்கல் முடிஞ்ச பிறகு அவர்களை முறைப்படி பொண்ணு பாக்குறதுக்கு வர சொல்லிடு,சரி ணா. நான் அவங்க வீட்ல பேசிட்டு உனக்கு பதில் சொல்றேன் என்றவர்,வீட்டில் இருப்பவர்களிடம் பேசி விட்டு போனை கட் பண்ணினார்".
"தாமரையோ நாளைக்கு பொங்கலுக்கு போடுவதற்காக ஏற்கெனவே தைத்து எடுத்து வைத்த துணியை எடுத்து வந்து அம்மாவிடமும் பாட்டியிடமும் காட்ட,அவர்களுக்கு அந்த புடவை ரொம்ப பிடித்தது".
"அதற்கு மேட்சாக வேதா வாங்கி கொடுத்த நகைகளையும் தாமரை காட்ட, நாளைக்கு பூஜைக்கு இந்த புடவையவே கட்டிக்கடா தங்கம் என்கவும்,ம்ம் சரிம்மா என்றவள் "தங்கைக்கு எடுத்து வந்த டிரஸை தைக்க தொடங்கினாள்".
அப்பொழுது அங்கு வந்த அல்லி, அக்காஆஆஆ ஒரு விஷயம் என்க, சொல்லுடி என்றாள்.
வந்து... வந்து என்க,என்னதுனு சொல்லுடி.இதைப்போலவே இன்னொரு டிரஸ் தைக்க எவ்வளவு நேரம் ஆகும் கா என்க?
" டிரஸ் டிசைன் பொறுத்துடி என்ன மிஞ்சி போனால் கட்டிங்,ஸ்டிச்சிங், அப்படி இப்படினு பார்த்தால் 2 மணி நேரம் ஆகும்,ஓஓஓ...சரிக்கா.
அறுவடை வயல்...
என்னங்க....புள்ளைங்கள கூப்பிட்டு கிட்டு சாப்ட வாங்கனு சொல்லிக்கொண்டே வரப்பில் நடந்து சென்ற பார்வதி,அங்கிருந்த வேப்ப மர நிழலில் கூடையை இறக்கி வைத்தார்.
"அத்தை நான் போய்ட்டு அங்க என்ன நடக்குதுனு பார்த்துட்டு வரேனென்று வளவன் சொல்ல,சாப்பிட்டு போடி அப்பு என்கவும், "சாப்ட்டு தான் வந்தேன் என்றான் வளவன்".
"அங்கு வந்த செல்வம்,என்ன மருமகனே இன்னைக்கு பேக்டரிக்கு போகலையா?, வழக்கமான பொங்கல் லீவு மாமா".
ம்ம் என்றவர்,அதான் ஒத்தை சாப்ட சொல்லுறாளே,நீயும் கொஞ்சம் அந்த வெஷத்தை சாப்ட்டு பாக்க வேண்டியது தானேனு வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் கை, கால் மூஞ்சை கழுவி கொண்டே செல்வம் சொல்ல,கணவரின் பேச்சே கேட்டவர் ஆஹான்...அப்போ நல்லா சமையல் தெரிஞ்சவளையே கட்டிக்க வேண்டியது தானே,எதுக்கு பாரு... நோருனு பின்னாடியே அலைஞ்சீங்க? என்க,என்ன செய்ய?,"பருவத்துல பன்னி குட்டி கூட அழகா தான் தெரியுமென்று சிரித்தார்".
"தெரியும் தெரியும்",ஒரு பயலும் பொண்ணு குடுக்கலை அப்பு இவருக்கு.
ஏதோ எங்கப்பனும்,சித்தப்பனும் தான் நம்ப அத்தை குடும்பமாச்சே போனா போகட்டும்னு பொண்ணு குடுக்க சம்மதிச்சாங்க.அய்யா, "அதை மறந்துட்டாரு போல".
"அப்பொழுது அங்கு வந்த வேலு,எம்மா உன் பஞ்சாயத்து முடிஞ்சிட்டுனா சோறு தரலாமே,வாப்பா என்றவர்,மூவருக்கும் தட்டில் சூடான சாதத்தையும்,அதன் மேல் எண்ணெய் கத்தரிக்காய் கொழம்பை ஊற்றி,"தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரை பொறியலை வைத்து கொடுத்தார்".
"நீயும் சாப்டுடானு வேலு சொல்ல,சாப்டு தான் வந்தேன் மாமா என்ற வளவன், பின்னர் அங்கிருந்து வயலை நோக்கி சென்றான்.இவர்கள் மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து மீண்டும் வயலில் இறங்கி வேலையை தொடங்கினர்".
அப்பொழுது,வேலை செய்து கொண்டிருந்த வேலுவோ தாத்தா தாத்தா என்க,சொல்லுடா என்றார்.
ஆமாம்,நீ உன் வாலிப வயசுல பொண்ணுக்கு ரூட்டு விடுரதுலாம் உண்டா?என்க,எலேய் அறிவு கெட்டவனே என்னடா கேள்வினு மகனை செல்வம் சத்தம் போட,அதற்கு பெரியவரோ,செல்வம் விடுப்பா.என் பேராண்டி தானே கேட்குறான்,அட நீ வேற சித்தப்பா,அயோக்கிய பய, "உன்கிட்ட விசயத்தை வாங்கி கிட்டு ஊட்ல சித்தி கிட்ட போட்டு குடுத்துருவான்".
ஹாஹாஹா என்று சிரித்தவர், இன்னும் புதுசா உன் மவன் போட்டுக்குடுக்க என்ன இருக்கென்றவர்,சின்னஞ்சிறுசுக நாங்க ஏதோ பேசிக்குறோம்,நீ ஏண்டா மவனே அதையெல்லாம் காதுல வாங்குற என்று செல்வத்திடம் சொல்லியவர்,அது ஏகப்பட்ட கழுதை உண்டு டா பேரான்டி.
எங்கே,அதுல ஒன்னை எடுத்து உடு பாக்கலாம்னு வேலு சொல்ல,ம்ம் என்றவர்,அப்போ தான் மீசை முளைக்குற வயசு.பக்கத்து ஊரு வயல்ல தோண்டிகா போடும் வேலைக்கு ஆள் கூப்புட வந்தாங்களா."நானும் இன்னும் சில கூட்டாளிங்களும் வேலைக்கு போனோம்".
"காலைல சீக்கிரமாவே வேலைக்கு போய்ட்டதால பசி வேற வந்துட்டு. அப்போது ஜல்லு ஜல்லுனு கொலுசு சத்தம் கேட்க,வேலை செஞ்சிக்கிட்டே திரும்பி பார்த்தேன்,இடுப்புல பானையும்,தலையில பெரம்பு கூடையோட செப்பு செல போல வந்தாள் பாரு,கண்ண அங்கு இங்க சிமிட்ட முடியல".
"வரப்புல நடந்து வந்தவ,எல்லாரும் வாங்க கூழ குடிச்சிட்டு வேலை பாக்கலானு சொல்ல,அந்த குரலு அப்படியு காதுக்குள்ள போய் என்னமோ பண்ணிச்சி,ஆஹான் பண்ணும் தாத்தா பண்ணும் என்றவன் அப்புறமென வேலு கேட்க,நாங்க ஆறு பேர்,வயல்காரர் ஒருவர்".
"கேழ்வரகு கூழை கரைச்சி பதமா எடுத்து வந்தவ,ஆளுக்கு ஒரு சொம்ப மொண்டு கொடுக்க,பசிக்கு அது தேவாமிர்தமா இனிச்சிது.கண்ணுக்கு முன்னாடி நின்னவளை பாக்க கண்ணு கூசுதுடா பேராண்டி,ஏன் தாத்தா,சூரிய ஒளி கிட்ட நின்னாங்களா என்றான் வேலு?"
அதை கேட்ட தாத்தாவோ, "அட துப்பு கெட்டவனே".....அம்புட்டு பள பளனு இருக்கா.சரி இவள எப்படியாவது கரைக்ட் பண்ணிடலானு மனசுக்குள்ள நினைக்க,வந்து விழுந்துச்சே இடி.
என்ன இடி தாத்தா?,வயலுக்கு சொந்தக்காரனை பார்த்து,மாமா மதியம் சாப்ட ஊட்டுக்கு வரீங்களானு அவ கேட்க,அவரோ இல்லைடி மாமான் வேலைய முடிச்சிட்டு தான் வருவேன். "சாய்ங்காலம் ரெண்டாவது ஆட்டம் படத்துக்கு போகலாம்,நீ ஊட்ல அம்மாட்ட சொல்லிடுனு சொன்னார்".
"எனக்கோ, என்னடா இது விஷயம்னு மண்டை காய, பொறுமையா பேச்சு கொடுத்துக்கிட்டே உங்க சொந்தக்கார புள்ளைபோல, பாசமா இருக்கேனு கேட்க, அந்த ஆளு என் பொண்டாட்டினு சொல்லிட்டாருடா என்று தாத்தா கதையை முடிக்க ,ஹாஹாஹாஹா சோனமுத்தா போச்சா தாத்தா" என்று சிரித்தான் .
"சித்தப்பா... இதோட நிறுத்திக்க. உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்னு செல்வம் சொல்லிக்கொண்டே வேலை செய்ய,தம்பி விடுப்பா.இல்லைனா மட்டும் உன் சித்திக்காரி என்னை அரிச்சந்திரன்,ராமன்னா சொல்லிடப்போறா" என்றவர்,"அதுலாம் ஒரு காலம் டா பேராண்டி" என்று தனது சிறு வயது நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே வேலையை செய்தனர்".
வேறு பொண்ணு கிடைக்கலையானு சின்ன பேத்தி கேட்டதற்கு, "என்னம்மா செய்ய? எங்க ஆத்தா அப்பனுக்கு இவளை தான் கண்ணு தெரிஞ்சிருக்கு போல. காலமும் ஓடி போய்ட்டு" என்றார் சிவசாமி தாத்தா.
"ஓ... இந்த தொரைக்கு பொண்ணுங்க அப்படியே வரிசை கட்டி நின்னாளுங்க பாரேனென்று,தனது தோள் பட்டையில் இடித்து காட்டி கலா பாட்டி சொல்ல", தாமரைக்கு சிரிப்பு வர, "வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியாடி? என்க".
"ஏன்....சுதந்திர நாட்டுல எனக்கு பேச உயிமையில்லையா?என்னக்கொடுமை கலா இதுலாம்?என்க,அடியேய், இன்னொரு முறை பேர சொன்ன வெடுக்கு வெடுக்குனு ஆட்டுற அந்த கழுத்து எலும்ப திருவி போட்டுறுவேன்".
"ம்கும்... இந்த அம்மா திருவுர வரைக்கும் நான் கழுத்தை காட்டி கிட்டே இருப்பேன்னு கனவு,ஏழு ஊரு வாய், பாவம் தாத்தா நீ.எப்படி தான் காலத்தை தள்ளுனியோ போ,உன் மன தைரியத்துக்கு கோயில் கட்டி கும்பிடனும் என்றாள் அல்லி".
"சின்ன பேத்தி சொன்னதைக்கேட்டு சிவசாமிக்கு சிரிப்பு வந்தது".சின்ன குட்டி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது என்றவர் பின்னர் பேசிக்கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தனர்".
"அப்பொழுது அங்கு வந்த கவிதா,சாப்பாடு ரெடி வந்து சாப்பிட்டு பிறகு வேலைய பார்க்கலாம் என்க, இன்னும் கொஞ்சம் தான்,ஒரேடியா முடிச்சிட்டு வந்துடுறோம் என்றனர்".
ஒரு வழியாக எல்லா வேலையும் முடிய மதியம் ஆனது.தேவையில்லாத குப்பைகளை ஒரு பக்கம் கொளுத்துவதற்காக அள்ளி வைத்து விட்டு,கிணற்றிலிருந்து நீரை இறைத்து தங்களை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்கு வர,அவர்களுக்கான உணவுகளோடு கவிதாவும் திண்ணையில் காத்திருந்தார்"
"சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்து,என்ன செய்யனு பேசிக்கொண்டிருந்தனர்".
அப்பொழுது,வேதாகிட்டயே நீ சொல்லிருக்கலாமே வேலை பற்றினு அன்பு தனது மகளிடம் கேட்க, "என்னோட சம்மதம் இல்லாமல் அத்தையும் மருது வீட்டில் பேசியிருக்க மாட்டாங்கப்பா".
"தனது தங்கைக்கும் மகளுக்கும் உள்ள புரிதலை எண்ணி உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவர்,சரிமா நானே இதைப்பற்றி பேசுறேன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேதாவிடமிருந்து கால் வந்தது".
"அத்தை தான் பா என்றவாறு அட்டென் பண்ணிய அல்லி,அத்தை எப்படி இருக்கீங்க?,நல்லா இருக்கேன் குட்டி, பொங்கல் வேலையெல்லாம் எப்படி போகுது?".
"பெண்டு கழலுது".நான் சும்மா இருந்தால் தான் சில பேர் கண்ணுக்கு ஆகாது என்றாள் கலா அப்பாயியை பார்த்துக்கொண்டே.
தனது தாயை பற்றி தான் மருமகள் சொல்கிறாள் என்பது புரிந்து சிரித்தவர், அப்பா இல்லையாடா?,ம்ம் இதோ தரேன் என்று போய் அன்புவிடம் போனை நீட்ட, சொல்லுமா என்றார்".
"அண்ணா....மயிலாவுக்கு இன்னும் எந்த பதிலும் சொல்லலையேணா,சம்மதம் சொல்லிடுமா என்றவர்,நீயே எல்லாம் பேச வேண்டிய தானே?,நம்ப புள்ளை விருப்பம் தெரியாமல் எப்படிணா நான் வாக்கு கொடுக்க?,மருமகளும் அத்தையும் ஒரேப்போலவே யோசிக்கிறீங்களென்று சிரிக்க", என்னணானு வேதா கேட்க,புள்ளை சம்மதமில்லாமல் நீ எதுவும் பேச மாட்டனு.அதைப்போல தான் இப்போ நீயும் சொல்லுற.
அப்படியாணா என்ற வேதாவிற்கு, "கல்யாணம் மட்டும் இப்ப வேண்டாம் என்று சொல்லுதுமா".சிங்கப்பூர் போய் விட்ட பிறகு அத பத்தி யோசிக்கலாம்னு சொல்லுதுமா என்கவும்,எனக்கும் அது தான்ணா தோணுச்சி.
அவளுடைய கனவு இது தான்.அதை கலைக்க எனக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்ற தங்கையிடம், இதை பற்றி தம்பி வீட்ல பேசிடுமா, "சரிணா என்றார்"
"அப்புறம் மா."..பொங்கல் முடிஞ்ச பிறகு அவர்களை முறைப்படி பொண்ணு பாக்குறதுக்கு வர சொல்லிடு,சரி ணா. நான் அவங்க வீட்ல பேசிட்டு உனக்கு பதில் சொல்றேன் என்றவர்,வீட்டில் இருப்பவர்களிடம் பேசி விட்டு போனை கட் பண்ணினார்".
"தாமரையோ நாளைக்கு பொங்கலுக்கு போடுவதற்காக ஏற்கெனவே தைத்து எடுத்து வைத்த துணியை எடுத்து வந்து அம்மாவிடமும் பாட்டியிடமும் காட்ட,அவர்களுக்கு அந்த புடவை ரொம்ப பிடித்தது".
"அதற்கு மேட்சாக வேதா வாங்கி கொடுத்த நகைகளையும் தாமரை காட்ட, நாளைக்கு பூஜைக்கு இந்த புடவையவே கட்டிக்கடா தங்கம் என்கவும்,ம்ம் சரிம்மா என்றவள் "தங்கைக்கு எடுத்து வந்த டிரஸை தைக்க தொடங்கினாள்".
அப்பொழுது அங்கு வந்த அல்லி, அக்காஆஆஆ ஒரு விஷயம் என்க, சொல்லுடி என்றாள்.
வந்து... வந்து என்க,என்னதுனு சொல்லுடி.இதைப்போலவே இன்னொரு டிரஸ் தைக்க எவ்வளவு நேரம் ஆகும் கா என்க?
" டிரஸ் டிசைன் பொறுத்துடி என்ன மிஞ்சி போனால் கட்டிங்,ஸ்டிச்சிங், அப்படி இப்படினு பார்த்தால் 2 மணி நேரம் ஆகும்,ஓஓஓ...சரிக்கா.
அறுவடை வயல்...
என்னங்க....புள்ளைங்கள கூப்பிட்டு கிட்டு சாப்ட வாங்கனு சொல்லிக்கொண்டே வரப்பில் நடந்து சென்ற பார்வதி,அங்கிருந்த வேப்ப மர நிழலில் கூடையை இறக்கி வைத்தார்.
"அத்தை நான் போய்ட்டு அங்க என்ன நடக்குதுனு பார்த்துட்டு வரேனென்று வளவன் சொல்ல,சாப்பிட்டு போடி அப்பு என்கவும், "சாப்ட்டு தான் வந்தேன் என்றான் வளவன்".
"அங்கு வந்த செல்வம்,என்ன மருமகனே இன்னைக்கு பேக்டரிக்கு போகலையா?, வழக்கமான பொங்கல் லீவு மாமா".
ம்ம் என்றவர்,அதான் ஒத்தை சாப்ட சொல்லுறாளே,நீயும் கொஞ்சம் அந்த வெஷத்தை சாப்ட்டு பாக்க வேண்டியது தானேனு வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் கை, கால் மூஞ்சை கழுவி கொண்டே செல்வம் சொல்ல,கணவரின் பேச்சே கேட்டவர் ஆஹான்...அப்போ நல்லா சமையல் தெரிஞ்சவளையே கட்டிக்க வேண்டியது தானே,எதுக்கு பாரு... நோருனு பின்னாடியே அலைஞ்சீங்க? என்க,என்ன செய்ய?,"பருவத்துல பன்னி குட்டி கூட அழகா தான் தெரியுமென்று சிரித்தார்".
"தெரியும் தெரியும்",ஒரு பயலும் பொண்ணு குடுக்கலை அப்பு இவருக்கு.
ஏதோ எங்கப்பனும்,சித்தப்பனும் தான் நம்ப அத்தை குடும்பமாச்சே போனா போகட்டும்னு பொண்ணு குடுக்க சம்மதிச்சாங்க.அய்யா, "அதை மறந்துட்டாரு போல".
"அப்பொழுது அங்கு வந்த வேலு,எம்மா உன் பஞ்சாயத்து முடிஞ்சிட்டுனா சோறு தரலாமே,வாப்பா என்றவர்,மூவருக்கும் தட்டில் சூடான சாதத்தையும்,அதன் மேல் எண்ணெய் கத்தரிக்காய் கொழம்பை ஊற்றி,"தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரை பொறியலை வைத்து கொடுத்தார்".
"நீயும் சாப்டுடானு வேலு சொல்ல,சாப்டு தான் வந்தேன் மாமா என்ற வளவன், பின்னர் அங்கிருந்து வயலை நோக்கி சென்றான்.இவர்கள் மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து மீண்டும் வயலில் இறங்கி வேலையை தொடங்கினர்".
அப்பொழுது,வேலை செய்து கொண்டிருந்த வேலுவோ தாத்தா தாத்தா என்க,சொல்லுடா என்றார்.
ஆமாம்,நீ உன் வாலிப வயசுல பொண்ணுக்கு ரூட்டு விடுரதுலாம் உண்டா?என்க,எலேய் அறிவு கெட்டவனே என்னடா கேள்வினு மகனை செல்வம் சத்தம் போட,அதற்கு பெரியவரோ,செல்வம் விடுப்பா.என் பேராண்டி தானே கேட்குறான்,அட நீ வேற சித்தப்பா,அயோக்கிய பய, "உன்கிட்ட விசயத்தை வாங்கி கிட்டு ஊட்ல சித்தி கிட்ட போட்டு குடுத்துருவான்".
ஹாஹாஹா என்று சிரித்தவர், இன்னும் புதுசா உன் மவன் போட்டுக்குடுக்க என்ன இருக்கென்றவர்,சின்னஞ்சிறுசுக நாங்க ஏதோ பேசிக்குறோம்,நீ ஏண்டா மவனே அதையெல்லாம் காதுல வாங்குற என்று செல்வத்திடம் சொல்லியவர்,அது ஏகப்பட்ட கழுதை உண்டு டா பேரான்டி.
எங்கே,அதுல ஒன்னை எடுத்து உடு பாக்கலாம்னு வேலு சொல்ல,ம்ம் என்றவர்,அப்போ தான் மீசை முளைக்குற வயசு.பக்கத்து ஊரு வயல்ல தோண்டிகா போடும் வேலைக்கு ஆள் கூப்புட வந்தாங்களா."நானும் இன்னும் சில கூட்டாளிங்களும் வேலைக்கு போனோம்".
"காலைல சீக்கிரமாவே வேலைக்கு போய்ட்டதால பசி வேற வந்துட்டு. அப்போது ஜல்லு ஜல்லுனு கொலுசு சத்தம் கேட்க,வேலை செஞ்சிக்கிட்டே திரும்பி பார்த்தேன்,இடுப்புல பானையும்,தலையில பெரம்பு கூடையோட செப்பு செல போல வந்தாள் பாரு,கண்ண அங்கு இங்க சிமிட்ட முடியல".
"வரப்புல நடந்து வந்தவ,எல்லாரும் வாங்க கூழ குடிச்சிட்டு வேலை பாக்கலானு சொல்ல,அந்த குரலு அப்படியு காதுக்குள்ள போய் என்னமோ பண்ணிச்சி,ஆஹான் பண்ணும் தாத்தா பண்ணும் என்றவன் அப்புறமென வேலு கேட்க,நாங்க ஆறு பேர்,வயல்காரர் ஒருவர்".
"கேழ்வரகு கூழை கரைச்சி பதமா எடுத்து வந்தவ,ஆளுக்கு ஒரு சொம்ப மொண்டு கொடுக்க,பசிக்கு அது தேவாமிர்தமா இனிச்சிது.கண்ணுக்கு முன்னாடி நின்னவளை பாக்க கண்ணு கூசுதுடா பேராண்டி,ஏன் தாத்தா,சூரிய ஒளி கிட்ட நின்னாங்களா என்றான் வேலு?"
அதை கேட்ட தாத்தாவோ, "அட துப்பு கெட்டவனே".....அம்புட்டு பள பளனு இருக்கா.சரி இவள எப்படியாவது கரைக்ட் பண்ணிடலானு மனசுக்குள்ள நினைக்க,வந்து விழுந்துச்சே இடி.
என்ன இடி தாத்தா?,வயலுக்கு சொந்தக்காரனை பார்த்து,மாமா மதியம் சாப்ட ஊட்டுக்கு வரீங்களானு அவ கேட்க,அவரோ இல்லைடி மாமான் வேலைய முடிச்சிட்டு தான் வருவேன். "சாய்ங்காலம் ரெண்டாவது ஆட்டம் படத்துக்கு போகலாம்,நீ ஊட்ல அம்மாட்ட சொல்லிடுனு சொன்னார்".
"எனக்கோ, என்னடா இது விஷயம்னு மண்டை காய, பொறுமையா பேச்சு கொடுத்துக்கிட்டே உங்க சொந்தக்கார புள்ளைபோல, பாசமா இருக்கேனு கேட்க, அந்த ஆளு என் பொண்டாட்டினு சொல்லிட்டாருடா என்று தாத்தா கதையை முடிக்க ,ஹாஹாஹாஹா சோனமுத்தா போச்சா தாத்தா" என்று சிரித்தான் .
"சித்தப்பா... இதோட நிறுத்திக்க. உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்னு செல்வம் சொல்லிக்கொண்டே வேலை செய்ய,தம்பி விடுப்பா.இல்லைனா மட்டும் உன் சித்திக்காரி என்னை அரிச்சந்திரன்,ராமன்னா சொல்லிடப்போறா" என்றவர்,"அதுலாம் ஒரு காலம் டா பேராண்டி" என்று தனது சிறு வயது நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே வேலையை செய்தனர்".