• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
38
🐝அத்தியாயம் 10

மாயன் சொன்னதை வர்மனால் நம்ப முடியவில்லை.

தோழிகளுக்குள் பொதுவாகப் பேசிக்கொண்ட வார்த்தைகாகவா மகதி தன்னை இந்த அளவுக்கு நேசிக்கின்றாள் என்ற சந்தேகம் வர்மனின் மனதில் எழுந்ததை மாயனும் அறிந்துக்கொண்டான்.

"வர்மா! அன்னைக்கு நீ சித்தப்பா வீட்டில இருந்து மறுநாள் காலையில ராஜன் சாரோட மும்பைக்கு கிளம்புறதா இருந்த தானே" என்று வர்மன் கேக்க, "ம்..." என்று யோசனையாகத் தலையசைத்தான் வர்மன்.

"அந்த நைட் என்ன நடந்துச்சு தெரியுமா?" என்று கேட்ட மாயன் மீண்டும் பத்து வருடத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகளைச் சொல்ல ஆரம்பித்தான்.

மகதியின் வீட்டில் அவளுக்கு நல்ல முறையில் தண்ணீர் ஊற்றி உள்ளே அழைத்து இருந்தார்கள்.

அக்கம் பக்கத்தினர் எதிரே மகதியை வர்மனின் தந்தை ராஜன் மருமகளே என்று உரிமையோடு அழைத்தது மட்டுமில்லாமல், மகதிக்கு சீர் வரிசை எல்லாம் சபை நிறையும் அளவுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்து இருந்தார் ராஜன்.

"என்னடி மகதி! அவரு உன்னை மருமகளேன்னு கூப்பிடுறாரே!அவரோட பையனைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்க போறியா!?" என்று மகதியின் தோழி ஒருவர் கேக்க,

"அப்படியெல்லாம் இல்லையே" என்று தோள்களைக் குலுக்கி பதில் சொன்னாள் மகதி.

"என்ன இல்ல! நீ வேணும்னா பாரு, நீ தான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க போற" என்று இன்னோரு தோழி சொன்னதும்,

"யாரை!?" என்று விளங்காமல் புருவம் உயர்த்தி கேள்வியாகக் கேட்டாள் மகதி.

"அதோ அங்க நிக்கிறாறே ஒரு அழகான பையன், அவர தான் நீ கல்யாணம் பண்ணிப்ப" என்று மகதியின் தோழி சொன்னதும்,

"ஏண்டி அப்படி சொல்றிங்க?" என்ற மகதியின் பார்வை அப்போது தான் வர்மன் மீது வேறு விதமாகப் பதிந்தது.

"நீ பெரிய பொண்ணு ஆனதும் முதல் முதலாக அந்தப் பையனைப் பார்த்தேன்னு நீ தானே டி சொன்ன! அதனால தான் சொல்லுறேன், அவரைத் தான் நீ கல்யாணம் பண்ணிப்ப" என்று தன் தோழி சொன்ன வார்த்தை மகதியின் இதயத்தில் காதல் விதையாக விழுந்தது.

"ஆனாலும் அந்தப் பையன் ஹீரோ மாதிரி இருக்காரு மகதி!" என்று தன் தோழிகள் வர்மனை வர்ணிக்கும் வார்த்தைகளைக் கேட்டு மகதியும் வர்மனின் அழகை கண்களால் அளந்துக்கொண்டு இருந்தாள்.

வர்மன் தன் அண்ணன் மாயனிடம் சிரித்து பேசிக்கொண்டு இருக்க,
"ஏன் மகதி, அந்தப் பையன் என்ன பண்ணுறாரு!?" என்று ஒருவள் கேக்க,

"வர்மன் சினிமால பெரிய நடன இயக்குனராக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு" என்றாள் ரோஜா.

"பார்த்து டி! சினிமாவில் இப்படிப்பட்ட அழகனை வளைத்துப் போடவே நிறைய ஆளுங்க இருப்பாங்க, அதனால இப்போவே போய் நீ அந்தப் பையனை உனக்காகக் காத்து இருக்க சொல்லு" என்ற தன் தோழியின் பேச்சில் மகதிக்கு குழப்பம் தான் ஏற்பட்டது.

"ஏய் என்ன நீ! நம்ம வயசு என்ன! அதுக்குள்ள நீ என்னென்னமோ பேசிகிட்டு இருக்க" என்று மகதி தன் தோழியைக் கண்டித்ததும்,

"அதான் இப்போ நம்ம பெரிய மனுஷி ஆகிட்டோமே! இன்னும் என்ன" எனக் கேட்டாள் மகதியின் தோழி.

"இருந்தாலும் இப்படியெல்லாம் பேசாதீங்க டி! அதெல்லாம் தப்பு" என்று மகதி சொன்னதும்,

"உனக்குத் தப்புனா நீ ஒதுங்கிப் போ, நான் வேணும்னா அந்தப் பையனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்ற பெண் நேராக வர்மன் அருகே சென்று அவனிடம் இயல்பாகப் பேசத் தொடங்கி இருந்தாள்.

இதுவரை வர்மனை பார்த்து எந்த வித உணர்வும் ஏற்படாத மகதிக்கு தன் தோழி வர்மனிடம் சிரித்து பேசிப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுவதை எல்லாம் பார்த்துப் பொறாமை கலந்த கோவம் ஏற்பட்டது.

நீண்ட நேரம் கடந்தும் மகதியின் தோழி வர்மனிடம் சகஜமாகப் பேசிக்கொண்டு இருக்க, மகதியோ பார்வையால் அவர்களைப் பந்தாடிக்கொண்டு இருந்தாள்.

விஷேஷம் முடிந்து மகதியின் தோழி வீட்டுக்குக் கிளம்பும் சமயம், அவள் வர்மனிடம் என்ன பேசினாளோ தெரியவில்லை, வர்மன் ஒரு துண்டு சீட்டில், 'என்றும் அன்புடன் உங்கள் அருள்மொழி வர்மன்' என்ற கையப்பத்தை போட்டு மகதியின் தோழியிடம் கொடுத்தான்.

வர்மனிடம் சிரித்து பேசியப்படி அவன் அளித்த கையப்பத்தை வாங்கிக்கொண்டு மகதியின் தோழி அவளிடம் வந்தவள், "இங்க பார்த்தியா மகதி, வர்மன் எனக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து இருக்காரு" என்ற தன் தோழியைக் கொலை காண்டில் முறைத்தாள் மகதி.

"அதுமட்டும் இல்ல, நான் மும்பை வந்தா என்னை அவரை வந்து பார்க்கச் சொன்னாரு" என்று பெருமை பீத்தும் விதமாகப் பேசியவளின் கையில் இருந்த வர்மனின் கையெழுத்து அடங்கிய துண்டுச் சீட்டை வேகமாகத் தன் வசம் பிடுங்கினாள் மகதி.

மகதியின் கோவமான முகத்தைப் பார்த்து அவள் தோழிக்கே சற்று பயமாகத் தான் இருந்தது.

"ஏய்! அந்த ஆட்டோகிராப் வர்மன் எனக்குக் கொடுத்தது" என்று மகதியின் தோழி சொல்ல, அவள் தலையில் குட்டு வைத்து,

"இனி நீ வர்மனை பற்றிப் பேச மட்டும் இல்லை!அவரைப் பற்றி நினைக்கவே கூடாது" என்று கண்டித்த மகதியின் வார்த்தையைக் கேட்டு அவள் தோழி உதட்டைச் சுலித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

தன் தோழியின் செயலில் கடுப்பான மகதி, வர்மனின் கையப்பம் அடங்கிய துண்டுச் சீட்டை மடித்து பத்திரப்படுத்தியவள் தூரத்தில் தன் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்த வரமனை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.

பள்ளி பருவத்தில் தான் காதல் உணர்வும் ஏற்படும், ஆனால் அந்த உணர்வுகளுக்கு எல்லாம் அடிபணியாமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அறிந்துடாத மகதி தன் தோழியின் தூண்டுதலில் வர்மனை தன் இதயத்தில் இணைத்துக் கொண்டாள்.

அன்றைய தினம் இரவு நேரம் மகதியிடம் இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்த வர்மனிடம் தன் மனதில் உள்ள உணர்வுகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணினாள் மகதி.

அந்த வயதில் தனக்கு இருக்கும் உணர்வுகளுக்குப் பெயர் தான் காதல் என்று நம்பியவள்,' வர்மனை நான் காதலிக்கிறேன், வர்மனை நான் தான் கல்யாணம் பண்ணிப்பேன்' என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

விடிந்ததும் காலை நான்கு மணி ரயிலில் மும்பைக்கு செல்ல ஆயுத்தமான வர்மனிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் எண்ணிய மகதி அவனைத் தேடி அவன் இருக்கும் அறைக்குச் சென்றாள்.

வர்மன் இருக்கும் அறையின் கதவை மகதி தட்டியதும், வர்மனின் அறையிலிருந்து எதிர் பாராத விதமாக வந்தது என்னவோ மாயன் தான்.

"என்ன பாப்பா இன்னும் நீ தூங்கலையா!" என்று மாயன் கேக்க, "வர்மா எங்கே அண்ணா!?" என்று கேட்டாள் மகதி.

"அவன் நல்லா தூங்குறான் பாப்பா, ஏன் என்ன விஷயம்!?" என்று மாயன் கேக்க, "அண்ணா! நான் வர்மாகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று சொன்னாள் மகதி.

"என்ன விஷயம் பாப்பா சொல்லு, அவன் நடுவுல எழுந்தா நான் சொல்லிடுறேன்" என்று மாயன் சொல்ல,

"நான் வர்மனை காதலிக்கிறேன், அவரு என்னைக் கல்யாணம் பண்ணிப்பாரான்னு கேளுங்க" என்று தேங்காயை போல உடைத்து சொன்னாள் மகதி.

"அவ்ளோ தானா! சரி எழுந்ததும் கேட்டுச் சொல்லுறேன்" என்ற மாயன் வாயைப் புலந்து கொட்டாவி விடும் நேரம் மகதி பேசியதை மீண்டும் எண்ணி பார்த்தவன்,

"பாப்பா நீ என்ன சொன்ன!? மறுபடியும் சொல்லு!" என்று கேட்டவனின் கண்களில் தூக்கம் மறைந்து அதிர்ச்சி நிறைந்து இருந்தது.

"அதான் சொன்னேனே! நான் வர்மனை காதலிக்கிறேன், அவரை என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேக்க வந்தேன்" என்று அழுத்தமான குரலில் பேசும் தன் தங்கையின் வார்த்தையைக் கேட்டு மாயனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

மகதியின் மனநிலையை யோசித்து பார்த்த மாயன், "பாப்பா... என்ன நீ! படிக்கிற பொண்ணு இப்படியெல்லாம் பேசக் கூடாது" என்று சொன்னதும், "அண்ணா! நீங்க முதல்ல நான் சொன்ன விஷயத்தை வர்மன்கிட்ட சொல்லுங்க" என்ற மகதியின் குரலில் கண்டிப்பு தெரிந்தது.

"நீங்கச் சொல்றிங்களா இல்ல நானே உள்ள போய் அவரை எழுப்பிச் சொல்லிடவா!" என்று மகதி கேக்க,

"பாப்பா பாப்பா இரு, உள்ள ராஜன் சாரும் தான் தூங்குறாரு, அதனால வர்மன் எழுந்ததும் நானே சொல்லிடுறேன்" என்ற மாயன் தன் தங்கையை இப்போதைக்கு அங்கிருந்து அனுப்பி வைக்க முடிவு செய்தான்.

"சரி அண்ணா! நடவுல வர்மன் எழுந்ததும் சொல்லுடுங்க, நாளைக்கு காலையில அவர் ஊருக்குப் போகும்போது எனக்கு அவர் நல்ல பதிலா சொல்லணும்னு சொல்லுங்க" என்ற மகதி கண்கள் முழுதும் எதிர்பார்ப்புடன் அவள் அறைக்குச் சென்றவளை மாயன் என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்து இருந்தான்.

 

Attachments

  • inbound188020167353705273.jpg
    inbound188020167353705273.jpg
    129.9 KB · Views: 14
Last edited:
Joined
Feb 6, 2025
Messages
38
மகதியின் மாற்றம் மாயனை நிலைக்குலைய செய்தது.

"பாப்பாவுக்கு என்னாச்சு! ஏன் திடிர்னு வர்மன்கிட்ட தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேச நினைக்கிறாள்"என்று தனக்குள் எண்ணிய மாயனுக்கு மகதி பேசியதை வேறு யாரேனும் கேட்டு இருந்தால் தன் தங்கையை என்ன நினைத்து இருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.

விடியும் முன்னே வர்மன் மும்பைக்கு கிளம்ப போகிறான் என்ற நம்பிக்கையில் மாயனும் மகதியின் மாற்றத்தைப் பெரிதாக எடுத்துகொள்ளாமல் அப்படியே உறங்கியும் இருந்தான்.

விடியல் காலை மூன்று மணி அளவில் வர்மனும் அவன் தந்தை ராஜனும் மகதியின் வீட்டிலிருந்து மும்பைக்கு செல்லும் முன்னே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகதியிடம் இவர்கள் ஊருக்குக் கிளம்பியதை தெரிவிக்கும்ப்படி சொன்னவர்கள் நான்கு மணிக்கு முன்னதாகவே மகதியின் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார்கள்.

வர்மனிடம் பேச வேண்டும் என்று எண்ணிய மகதி விடியல் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்தப்பின் தூங்கியவள் கண் விழித்துப் பார்த்தால், வர்மனும் அவன் தந்தையும் மும்பை சென்று விட்டதாக மகதியின் அம்மா தெரிவித்தார்.

"என்ன சொல்லுறிங்க! ஏன் அவரு என்கிட்ட சொல்லாம போனாரு, அவரு போகும்போது நீங்க என்னை எழுப்பி இருக்கலாமே!"என்று இயல்புக்கு மாறாகக் கோபத்துடன் கத்தும் மகதியை பார்த்து அங்குள்ள அனைவருக்குமே அவளது நடவடிக்கையில் வருத்தம் ஏற்பட்டது.

"ஏய் மகதி! இப்போ ஏன் டி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குற, சீக்கிரம் போனா தான் டிராபிக்கு முன்னாடி போக முடியும்னு வர்மன் தம்பி சீக்கிரமா அவங்க அப்பாகூட கிளம்பி போச்சு" என்று மாயனின் அம்மா கீதா சொல்ல,"மாயன் அண்ணன் எங்கே"என்று கோவமாகக் கேட்டாள் மகதி.

"என்ன பாப்பா ஏன் என்னைக் கூப்பிட்ட!" என்று மாயன் கேக்க,"அண்ணா! நான் சொன்னதை வர்மன்கிட்ட சொன்னிங்களா!?" என்ற மகதியை அனைவரும் கேள்வியாகப் பார்த்தார்கள்.

"என்ன டா மாயா! இவ என்ன பேசிகிட்டு இருக்காள்" என்று கீதா கேக்க,
"அது... அது ஒண்ணுமில்ல அம்மா! நீங்கப் போங்க நான் பாப்பாகிட்ட பேசிக்கிறேன்" என்ற மாயன் மகதியை அவள் அறைக்குள் அழைத்துச் சென்றான்.

மாயன் பின்னே சென்ற மகதிக்கு கோபம், அழுகை,ஏமாற்றம் என்ற அணைத்தும் கலந்த மனநிலை இருந்தது.

விடாமல் அழுதப்படி தன் அருகே நின்று இருந்த மகதியை பார்த்து மாயனுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல்
போனது.

"பாப்பா ஏன் மா அழற!" என்ற மாயனை கடுகோபத்துடன் முறைத்தவள்,"ஏன் அண்ணா வர்மன் என்கிட்ட சொல்லாமலே போனாரு"என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் வடிந்தப்படியே இருந்தது.

"வர்மனுக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்து இருக்கு பாப்பா, நாளையில
இருந்து சூட்டிங் ஆரம்பிக்கிறாங்க, அதனால தான் டா அவன் சீக்கிரமா கிளம்பிட்டான்" என்றான் மாயன்.

"இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கலாமே!" என்று மகதி மேலும் தேம்பியப்படி கேக்க,

"உன்கிட்ட சொல்லச் சொல்லிட்டு தான் போனான்" என்று மாயன் சொன்னதும் கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகை
மலர்ந்தாள் மகதி.

"அண்ணா... அப்போ வர்மன்கிட்ட நான் சொன்னதை நீங்கச் சொல்லிட்டீங்களா!?" என்று மகதி கேட்டதும், "அது... ஆமா சொல்லிட்டேன்" என்று பொய் சொன்னான் மாயன்.

மாயன் சொல்வது பொய் என்று அறிந்திடாத மகதி சிரித்த முகத்துடன்,

"வர்மன் என்ன அண்ணா சொன்னாரு, அவருக்கும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமுன்னு சொன்னாரா!?" என்ற மகதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் யோசனையுடன் நின்று இருந்தான் மாயன்.

மாயனின் தோள்களை அன்போடு கட்டிக்கொண்ட மகதி, "சொல்லுங்க அண்ணா வர்மன் என்ன சொன்னாரு!?" என்று மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைக் கேட்டதும், தன் தங்கையின் மனநிலையை மாயன் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான்.

"சொல்லுங்க அண்ணா... வர்மன் என்ன சொன்னாரு!?"என்ற மகதியின் நிலையிலிருந்து யோசித்த மாயனுக்கு இந்த வயதில் சில பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் என்று எண்ணியவன்,

"பாப்பா... வர்மனோட அப்பா அவன் கூடவே இருந்ததால அவனால வெளிப்படையா எதுவும் பேச முடியல" என்று மாயன் சொன்னதும் மீண்டும் அழத் தொடங்கினாள் மகதி.

"பாப்பா பாப்பா அழாத! வர்மன் என்கூட பேச முடியலைன்னா கூட உனக்கிட்ட தரச் சொல்லி அவன் எனக்கு ஒரு லெட்டர் தந்துட்டு போய் இருக்கான்" என்று மாயன் சொன்னதும் மகதி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.

"என்ன! வர்மன் எனக்கு லெட்டர் கொடுத்தாரா! எங்க லெட்டரை கொடுங்க!" என்று மகதி கேக்க, "அது... அந்த லெட்டர் என் வீட்டுல இருக்கு" என்றான் மாயன்.

"என்ன அண்ணா நீங்க! எனக்கு வர்மன் தந்த லெட்டரை நீங்க ஏன் உங்க வீட்டுல வச்சிட்டு வந்திங்க" என்று மகதி கோவமாகக் கேட்டதும்,

"அது! அது சட்டையை மாத்திட்டு வந்தேன், அப்போ மறந்து வீட்டுல வச்சிட்டேன் பாப்பா" என்றான் மாயன்.

"சரி சரி... நீங்க உடனே போய் அந்த லெட்டரை எடுத்துட்டு வாங்க" என்று எதிர்பார்ப்புடன் மகதி சொன்னதும்,

"இப்போ நீ ஸ்கூல்க்கு கிளம்பி போ, நீ சாய்ங்காலம் வீட்டுக்கு வரும்போது நான் அந்த லெட்டரை எடுத்துட்டு வரேன்" என்றான் மாயன்.

மாயனின் பொய்யை நம்பிய மகதி மகிழ்ச்சியுடனே பள்ளிக்குச் சென்றவளுக்கு மீண்டும் எப்போது பள்ளியிலிருந்து வீடு திரும்புவோம் என்று தான் இருந்தது.

மாலை நேரம் மகதி பள்ளி முடிந்து வீட்டுக்குள் நுழைந்தவள், "அண்ணா..." என்று மாயனை அழைக்க,

"இந்தா பாப்பா லெட்டர்" என்று மாயன் தன் தங்கையிடம் வர்மன் கொடுத்ததாகச் சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுக்க, உள்ளம் எல்லாம் பூரிப்புடன் மகதி அந்த எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தாள்.

"அன்புள்ள மகதிக்கு,

உன் மனதில் உள்ள உணர்வுகளை மாயன் மூலம் தெரிந்துகொண்டேன்.

இது காதலிக்க வேண்டிய வயது அல்ல. ஆனாலும் உன் அன்பை நான் மதிக்கின்றேன்.

முதலில் நீ உன் படிப்பில் கவனம் செலுத்து, நானும் என் வாழ்க்கையில் உயரத்தை அடைகிறேன்.

இப்போது உனக்கு 15 வயது. இன்னும் 10 ஆண்டுகள் கழிந்தும் என்மீது நீ கொண்ட உன் அன்பு மாறாமல் இருந்தால், பெரியவர்களின் சம்மதத்தோடு உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்.

ஆனால் அதற்குள் நீ படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்.

மற்றுமொரு முக்கியமான விஷயம்,
இந்த 10 ஆண்டுகளில், நாம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
அதற்குப் பிறகே நாம் சந்திக்கலாம்.

இப்படிக்கு அன்புடன்,
அருள்மொழி வர்மன்"

என்ற கடிதத்தை வாசித்த மகதி புன்னகை வாடாத நிலையில் அந்தக் கடிதத்தை அவள் இதயத்தோடு இணைத்துக்கொண்டாள்.

அந்தக் கடிதத்தைத் தந்தது வர்மன் தான் என்று எண்ணிய மகதி, அன்றைய தினத்திலிருந்து அவனையே நினைத்து வாழத் தொடங்கினாள்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததை போலவே படிப்பு,வேலை என்று இந்தப் பத்து வருடத்தில் மகதி நல்ல நிலையை அடைந்து இருந்தவள் மனதில் வர்மனின் மீது அவள் கொண்ட காதலும் வளர்ந்துக்கொண்டே இருந்தது.

மகதியின் மனதில் வர்மன் இருப்பதையும், வர்மன் அவளுக்காகக் கடிதம் தந்ததையும் மகதி அவளின் தந்தையை நண்பனாகப் பாவித்துச் சொல்ல, மகாலிங்கமும் அந்தக் கடிதத்தைத் தந்தது வர்மன் என்று நம்பினார்.

வர்மன் மும்பைக்கு போன அடுத்த மாதமே மாயன் இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி நந்தினியை காதல் திருமணம் செய்துகொண்டவன் சென்னையில் வாழாமல் நேரே மும்பைக்கு சென்றவனை வர்மன் தான் இந்த நொடிவரை பார்த்துக்கொள்கிறான்.

நாளிடைவில் மாயனின் அம்மா கீதாவும் மும்பைக்கு சென்று இருக்க,
கடிதத்தில் இருந்த வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்து மகதி வர்மனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதைத் தவிர்த்தே வந்தவளுக்கு அவன்மீது கொண்ட பிரியம் நாளுக்கு நாள் காதலாக மாறியது.

இப்படியாகப் பத்து வருடமாக மகதியின் மனதில் வர்மன் மட்டுமே இருப்பதை மாயன் இன்று வர்மனிடம் சொல்லிக்கொண்டு இருந்தவனின் வார்த்தைகளைக் கேட்டு
வர்மனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம் ஏற்பட்டது.

"என்ன மாயா சொல்லுற! நான் கொடுத்ததாகச் சொல்லி நீ கொடுத்த ஒரே ஒரு கடிதத்தை நம்பியா மகதி கடந்த பத்து வருஷமா என்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்காள்!?" என்ற வர்மனின் கேள்விக்கு 'ஆமாம்' என்ற ரீதியில் தலையசைத்தான் மாயன்.

"வர்மா... அன்னைக்கு இருந்த நிலைமையில எனக்கு மகதிக்கு உன் மேல இருக்குறது ஏதோ ஒரு வகையான ஈர்ப்புன்னு தான் நினைச்சேன் வர்மா,

ஆனா உனக்காக மகதி மும்பைக்கு வந்தவள், ரம்யா அருணை பற்றியெல்லாம் அரைகுறையா தெரிஞ்சிகிட்டு ரொம்பவே உடைந்து போயிட்டா வர்மா.

உண்மையைச் சொல்லனும்னா நீ கொடுத்ததா நான் எழுதிக் கொடுத்த லெட்டரை மகதி அவ வாழ்க்கையாவே நினைத்து வாழ்ந்து இருக்கா வர்மா.

ஊருல மகதியோட அம்மா அவங்க தம்பிக்குப் பாப்பாவை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்காங்க, அதனால தான் மகதி உன்னைத் தேடி இங்க வந்து இருக்காள் வர்மா"

என்று மாயன் இதுவரை நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி முடிக்கும் தருணம் மகதி இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தவளின் கையில் இரண்டு மருந்துப் பெட்டிகள் இருந்தன.

"அண்ணா... இந்த ரெண்டு மருந்துல எந்த மருந்து எப்போ தரணும்னு சொன்னிங்கன்னா தான் அருண் எழுந்ததும் போட்டு விட முடியும்" என்ற கேள்வியோடு மகதி இவர்கள் முன்னே வந்து நின்றாள்.

இதுவரை மகதியின் கண்களை மட்டுமே பார்த்துப் பேசிய வர்மனுக்கு இந்த நொடி மகதியை பார்க்க அவனின் இரு விழிகள் போதவில்லை.

வர்மனின் அம்மா மற்றும் அருணின் அம்மா ரம்யா என்று சில பெண்களால் வர்மனின் வாழ்க்கையில் சில கசப்புகளை சந்தித்தவனுக்கு இன்று அவன் மீது மகதிக்கொண்ட பிரியம் புனிதமாகத் தெரிந்தது.

மகதி மாயனுடன் பேசிக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை பாவையின் உச்சி முதல் பாதம்வரை அங்குலம் அங்குலமாக அவளைப் பார்வையால் களவாடிக்கொண்டு இருந்த வர்மனின் மனதில் மகதியின் உருவம் பதிந்து அவள்மீது இவனுக்கும் காதல் மலர்ந்தது.
 
New member
Joined
Mar 12, 2025
Messages
18
🥰🥰மீண்டும் மீண்டுமா sisy 😂அருமையான கதை நகர்வு 💐💐💐
 
New member
Joined
Feb 8, 2025
Messages
21
சூப்பர் சூப்பர் வர்மணுக்கும் காதல் வந்துடுச்சி.❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌
 
New member
Joined
Mar 30, 2025
Messages
13
என்னங்க லூப் மாடலா.
நல்ல நகர்வு கத✨
 
New member
Joined
Feb 8, 2025
Messages
22
இந்த மாயன் பார்த்த வேலை எங்க கொண்டு வந்து விட்டுஇருக்கு பாரு பாவம் மகதி😂😂😂😂
 
New member
Joined
May 2, 2025
Messages
14
It’s also heartwarming to see Magathi’s father taking on the role of a friend in this journey.

Now that Varman has begun to realize the truth and is slowly starting to fall in love with Magathi, that transition has been portrayed very gracefully.

I’m eagerly looking forward to discovering who Arun’s mother is and what connection she has with Varman.💗💗💗
 
New member
Joined
May 2, 2025
Messages
16
சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌சூப்பர் 👌👌👌👌சூப்பர் 👌👌👌👌👌👌👌
 
New member
Joined
Feb 8, 2025
Messages
25
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வேற என்ன சொல்றதுனு தெரியல ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை
 
Top