Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்-சோழனூர்:
ரஞ்சனியும் ஷமீராவும் சேர்ந்து வீட்டை துடைத்து முடிக்கவும்,ரெண்டு பேரும் வாங்களென்றவாறு ஷமீராவுக்கு காபியை கொடுத்துவிட்டு ரஞ்சனிக்கு டீ கொடுக்கும் போது சுமதி அம்மாச்சியும் எந்திரிச்சு வந்தார்.
அத்தை உங்களுக்கு டீ எடுத்துட்டு வரட்டுமா என்க...அப்படியே உன் மாமனாருக்கும் கொடு மா அவரும் முழிச்சிட்டு தான் இருக்கிறார்.
புவனாவும்,ரஞ்சனியும் வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்ய,அம்மாடி நீ போய் குளிச்சிட்டு வந்துரு என்கவும் சரிங்கங்மா என்ற ஷமீராவும் குளித்து முடித்துவிட்டு சுடிதார் போட்டுக்கொண்டு கீழே வந்தவள்
கண்மணியும் கவிதாவும் தாவணியில் இருப்பதை பார்த்து,அய்யோ நம்ம சுடிதார் போட்டிருக்கோமே ஏதாவது நினைப்பார்களோனு யோசிக்க, அவள் முகத்தை வைத்து புரிந்து கொண்ட கண்மணி ஒன்னும் இல்லையென்று தலையை அசைத்தாள்.
பின்னர் காலை உணவுக்காக கம்மங்களியும் சுண்டைக்காய் வத்த குழம்பு இருவரும் செய்து முடிக்க,அன்பரசனும் கனலரசனும் தோட்டத்திற்கு சென்று விட கவிதாவும் கண்மணியும் சாப்பிட்டு ஸ்கூலிற்கு ரெடியாகினர்.
கண்ணனோ இரவு முழுவதும் கொள்ளையில் காவல் காத்து விட்டு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தான். அய்யா டீ என்க,முதல்ல குளிச்சிட்டு வரேன் என்கவும் என்ன அதிசயமா குளிக்க போறானென்று கேட்டுக் கொண்டே தம்புசாமி தாத்தா அங்கு வந்தார்..
ஆமா நான் குளிக்காத இந்த ஐயா தான் விளக்கு வைத்து பார்த்தாரென்று பல்லை கடித்துக் கொண்டே சென்றான்..
ஏம்மா..பெரியவன் அந்த புள்ளைங்க போட்டோ காமிச்சானே பார்த்தீங்களா? உங்களுக்கு புடிச்சிருக்கா என்கவும் கண்மணி கவிதாவை தவிர மற்றவர்கள் எல்லாம் பார்த்திருந்தனர்.
எங்களுக்கெல்லாம் காட்டவில்லையே என்று கவிதா கேட்க கட்டிக்க போறவங்கள் பார்த்தா போதும் உனக்கு எதுக்கு சின்ன குட்டிய அதெல்லாம் என்று தாத்தா கேட்க...ஏன் வீட்டுக்கு வர போற அண்ணியையும் மாமாவையும் நான் பார்க்கிறது இல்லையா தாத்தா என்றாள்..
முதல்ல படிச்சு முடி..அப்புறம் இதெல்லாம் கேட்கலாம் பெரிய மனுஷி போல எப்ப பார்த்தாலும் பேச்சென்று பேத்தியை சொல்ல...ஆமாம் கொஞ்சம் அறிவா பேசினால் இந்த வீட்ல தெய்வ குத்தம் ஆகிடுமே என்றாள்.
பின்னர் இருவரும் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து ஸ்கூலுக்கு போகும் மினி பஸ் ஏறும் இடத்திற்கு சென்றனர்.
வழக்கம்போல் தூங்கி எழுந்த செழியனும் பிரஷாகி கீழே வர அங்கே வானதியோ கணவருக்கு டீயை கொடுத்துவிட்டு தானும் குடித்துக் கொண்டிருந்தார்.மகனை பார்த்தவர் உள்ளே போய் ஒரு டம்ளரில் சூடா டீ எடுத்துட்டு வந்து கொடுக்க வாங்கியவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
செழியானு செல்லதுரை கூப்பிட சொல்லுங்கப்பா என்க,முறைப்படி பத்திரிகை அடிக்கணும்.இன்னைக்கு நானும் உங்க தாத்தாவும் பிரசுக்கு போறோம்.அந்த புள்ளையோட அப்பா அம்மா பேரு ஊரெல்லாம் எழுதி கொடு..
நேர்ல போய் அவங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும் தம்பி. வராங்களோ வரலையோ அது அடுத்த பிரச்சனை நம்ம முறைப்படி செய்யணும் என்க..அரைமனதாக சம்மதித்தான்..
அப்புறம் பொண்ணுக்கு துணி எல்லாம் வாங்கணும்.திருபுவனம் போகலாமா இல்ல மதுரைக்கு போகலாமா? திருபுவனத்துக்கே போகலாம் பா என்றான்.
சரி இன்னைக்கு வெள்ளிக்கிழமை நாள் நல்லா தான் இருக்கு.இன்னிக்கு போயிட்டு புடவை எடுத்துட்டு வந்துரலாமா வானதி என்கவும் சரிங்க என்றார்..
அப்போ நான் போயிட்டு ஒரு வார்த்தை உங்க அப்பா வீட்டுல சொல்லிட்டு வரேன்,அது என்ன இன்னும் எங்க அப்பா வீடு?,ஏன் உங்க அத்தை வீடு இல்லையானு வானதி கோவமாக கேட்க,ஏண்டி இது ரொம்ப முக்கியமா?
எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாக பொண்ணு குடுத்து எடுத்து கட்டிக்கிட்டதால எங்க பாத்தாலும் சொந்த பந்தமாக தான் இருக்கிறீங்க.இதுல உன் அப்பா வீடுனு சொன்னதால் என்னடி ஆகிட்டுனு தனது மாமனார் வீட்டை நோக்கி சென்றார்.
அம்மா என்று செழியன் கூப்பிட,ம்ம் சொல்லு பா என்றார்.என் மேல கோவமா இருக்கியா மா?.
"கோவம் இல்லைப்பா" வருத்தம் தான் இருக்கு.ஒரு வார்த்தை என்கிட்ட இது போல விஷயமென்று சொல்லிருக்கலாமே என்க...சூழ்நிலை அப்படி மா.
"அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்".
ஒரு வருஷமா அவள் கிட்ட நான் பேசுறது கிடையாது.2 வாரத்துக்கு முன்னாடி தான் எனக்கு போன் பண்ணி இதைப்போலனு விஷயத்தை சொன்னாள்.கேட்டுகிட்டு நான் எப்படி மா சும்மா இருக்க முடியும் சொல்லு?.
மனசுல இவளை நினைச்சு கிட்டு கண்மணி கூட என்னால எப்படி மா வாழ முடியும்?அதும் இல்லாம பொம்பள புள்ள இல்லாத வீட்டில் கண்மணியும் கவிதாவும் அக்கா தங்கச்சி போல இங்க வந்து ஓடி ஆடி விளையாண்டோம்.
அந்த புள்ளையை போய் நான் எப்படி பொண்டாட்டியா நினைக்க முடியும் மா என்கவும்,அன்று அந்த பாபு பையன் அவங்க அப்பா கிட்ட பேசியது போல மகனும் இன்று அப்படியே சொல்கிறானேனு தோணியது.
சரி ஆனது ஆகிவிட்டது.இனிமே அத பற்றி பேசி ஒன்னும் புண்ணியம் இல்லை.உன் பொண்டாட்டி எப்படி இருக்கிறாள்?.அங்கு எல்லாரையும் புடிச்சிருக்கா?, ம்ம் அத்தைங்க கூட நல்லா ஐக்கியம் ஆயிட்டாள் மா...
ஓஓஓ...ஆமா அவ பேரு என்ன?
சிரித்துக் கொண்டவன் இதுவரை ஷமீரா தாஸ் இனி ஷமீரா இளஞ்செழியன் என்றான்...ஏன் தம்பி அவங்க சாமிக்கும் நம்ம சாமிக்கும் ஒத்து வருமா யா?நம்ம வேற வெள்ளி செவ்வாயில சாம்பிராணி புகை போட்டு சூடம் கொளுத்துவோம்...
உன் பொண்டாட்டி பைபிளை தூக்கிட்டு இருந்தாக்க நல்லாவா இருக்கும்?
செழியனோ அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டான்.
செல்லதுரையும் தனது மாமனார் வீட்டிலும் தனது பங்காளி வீட்டிலும் விஷயத்தை சொல்ல,சரி பா நல்லபடியா போயிட்டு வந்துடலாம் என்றனர்.
ஷமீராவிற்கு துணையாக சுமதி அம்மாச்சி வீட்டில் இருந்து கொள்ள மற்றவர்கள் எல்லாம் வேனில் ஏறினர்.
காலை 11 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் எல்லாரும் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருபுவனத்திற்கு புடவை எடுக்க சென்றனர்.
மனைவிக்கு என்ன மாதிரியான புடவை வேணுமென்று செழியனே தேர்ந்தெடுக்க வந்தான்.அங்கிருந்த புடவை குவியல்களில் தேடி அலசியவன் மனைவிக்கு ஏற்ற புடவையை எடுத்தான்.
மற்ற பொருட்களையும் வாங்கிக்கொண்டு அவர்கள் வீடு வந்து சேரவே மாலை ஆனது.அதேபோல் பத்திரிக்கையும் அன்றே தயாராகும்னு சொல்லிவிட்டதால் செல்லதுரையும் அதை வாங்கிக் கொண்டு வந்தார்.
மறுநாள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அவர்கள் குல தெய்வத்திடம் பத்திரிக்கையை வைத்து படைத்து விட்டு,ஊர்காரர்கள் இரண்டு பேரையும் தனது சித்தப்பா சித்தி மாமனார்,மைத்துனர்,மற்றும் தனது மனைவியோடு செல்லதுரையும் காரில் ஏறி சோழனூரை நோக்கி பயணமானார்.
நம்ம முறைப்படி சொல்லுவோம் அது ஏத்துக்கிறது அவங்களோட விருப்பம் என்று வீரையன் சொல்ல மற்றவர்களும் அதுதான் சரி என்றனர்.
அதிகாலை கிளம்பியவர்கள் சோழனூருக்கு வந்து சேர மதியம் மூன்று மணிக்கு மேலானது.ஷமீராவின் வீட்டுக்கு எப்படி போகணுமென்று செழியன் சொல்லியிருக்க,அதே போல் அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் ஓரமாய் வந்து காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியவர்கள் அந்த ஏரியாவை சுற்றி பார்த்தனர்.
பின்னர் அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்து காலிங் பெல்லை அழுத்த சிறிது நொடியில் கதவை திறந்த எஸ்தரோ அங்கிருப்பவர்களை பார்த்து அதிர்ந்து போனார்.
பின்னர் சுதாரித்தவர் வீட்டிற்கு வந்தவர்களை வாங்களென்று சொல்வதுதான் பண்பாடு என்பதால் வாங்கயென்று உள்ளே கூப்பிட்டார்.
மகியோ யாரு என்ற யோசனையோடு ஹாலுக்கு வந்தவர் அங்கே இருப்பவர்களை பார்த்து அதிர்ந்தார்.தங்கள் வருகையை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது மற்றவர்களுக்கும் தெரிந்தது.
பின்னர் வாங்க என்றவர் குடிக்க எதாச்சி எடுத்துட்டு வா என்கவும்,உள்ளே போன எஸ்தரும் எதுக்கு வந்துருக்காங்கன்னு தெரியலையே என்றபடி டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
வீரையனே பேச்சை ஆரம்பித்தார்.வணக்கங்க எதுக்கு வந்திருக்கோம்னா அடுத்த வாரத்தில் பிள்ளைகளுக்கு எங்கள் குலதெய்வ கோயில்ல வரவேற்பு வச்சிருக்கோம்.
அவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.அதுக்காக நாம அப்படியே விட முடியாது இல்லையா??நாளைக்கு சொந்த பந்தங்கள் முகத்துல முழிக்கணுமே என்றார்..
நான் தான் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டேனேங்கனு மகி சொல்ல,நீங்க வேண்டான்னு சொல்லிட்டீங்க.ஆனால் முறைன்னு ஒன்னு இருக்குங்க..
மதிச்சு சொல்ல வேண்டியது எங்களோட கடமை.வாங்க என்று தான் கூப்பிட முடியும்.வர்றதும் வராததும் உங்களோட விருப்பமென்றவர் மச்சானென்று தம்புசாமியை கூப்பிட..இருவரும் எழுந்து தாம்பாளத்தில் பத்திரிகை பூ பழத்தை வைத்து மகியின் முன்பு நீட்ட என்ன சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை.
பின்னர் எஸ்தர் என்று கூப்பிட்டு மனைவியோடு தட்டை வாங்கியவர் எங்களை மதித்து கொடுக்குறீங்க பெரியவங்க என்பதால் தான் நான் வாங்கிக்கிறேன்.
மத்தபடி எனக்கு என் பொண்ணு மேல இருக்கிற...அதை எப்படி சொல்றதுன்னு தெரியல..உங்களுக்கு புரியுமென்று வார்த்தை வராமல் அவர் தவிப்பது தெரிந்தது.
நல்லவேளை வீட்டிற்கு வந்தவர்களை அவமானப்படுத்தாமல் இந்த அளவுக்கு நடந்து கொண்டாரேனு நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பின்னர் அந்தோணியின் வீடு எங்கே இருக்கு என்க,தங்கை வீட்டை மகியும் காட்டிவிட அங்கே சென்று பத்திரிக்கை வைத்தனர்.
ராணியும் தனது கணவருக்கு போன் பண்ணி வர வைத்தார்.அவர் டீ போட போக அதெல்லாம் வேண்டாம் இப்பதான் குடிச்சோம் என்றனர். கண்டிப்பாக நீங்க ஃபங்ஷனுக்கு வரணும் அவங்க தான் இல்லனாலும் நீங்க நிச்சயமா வாங்க என்று சொல்ல கண்டிப்பா என் மருமகளுக்காக நாங்கள் வருவோமென்றனர்.
மேலும் சிறிது நேரம் அவர்களுடன் பேசியிருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.
தட்டிலிருந்த பத்திரிகையை கிழித்து குப்பை தொட்டியில் எறிந்த மகியோ,பொண்ணே இல்லைங்குறேன் அவளுக்கு காரியம் ஒன்றுதான் கேடுனு சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்க சென்றார்.
எஸ்தரோ மகளை நினைத்து அழுது கொண்டே அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்திருந்தார்..
ஷமீராவிற்கோ திக் திக்கென்று இருந்தது.ஊரில் என்ன நடக்குமோ என்று தெரியலையே?எங்கே வந்தவர்களை தனது தந்தை அவமானப்படுத்தி அனுப்பிடுவாரோ?
இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை முற்றி ஏதாவது பிரச்சனை நடக்குமோ? என்று பயந்து கொண்டே இருந்தாள்.
அவள் முகத்தை கவனித்த புவனாவோ அப்படியெல்லாம் ஒன்று நடக்காது.எதுக்கு தேவையில்லாம பயப்படுறனு ஆறுதல் சொன்னாலும் இயல்பாக இருக்க முடியலை.
தனது கணவனை உடனே பார்க்கணும் போலிருக்க மனைவியின் மனநிலை உணர்தானோ என்னவோ தெரியவில்லை..
நேற்றிலிருந்து தன்னவளிடம் பேசவில்லையே கண்டிப்பாக வருத்தமாக இருப்பாளென்று நினைத்தவன்,தனது தோட்டத்தில் காய்கறி பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் நீங்கள் வேலையை பாருங்கள் இதோ வந்துடுறேனென்று சொல்லி வண்டியில் ஏறி தனது தாத்தா வீட்டிற்கு வந்தான்.
உள்ளே வந்தவன் அங்கே சோபாவில் சோகமான முகத்தோடு உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்து என்னாச்சென்று கண்களால் கேட்க கணவனை பார்த்தவளுக்கு மனம் நிம்மதியாக இருக்கவும்,ஒன்றும் இல்லையென்று தலையசைத்தாள்.
ரஞ்சனியும் ஷமீராவும் சேர்ந்து வீட்டை துடைத்து முடிக்கவும்,ரெண்டு பேரும் வாங்களென்றவாறு ஷமீராவுக்கு காபியை கொடுத்துவிட்டு ரஞ்சனிக்கு டீ கொடுக்கும் போது சுமதி அம்மாச்சியும் எந்திரிச்சு வந்தார்.
அத்தை உங்களுக்கு டீ எடுத்துட்டு வரட்டுமா என்க...அப்படியே உன் மாமனாருக்கும் கொடு மா அவரும் முழிச்சிட்டு தான் இருக்கிறார்.
புவனாவும்,ரஞ்சனியும் வழக்கம் போல் வீட்டு வேலைகள் செய்ய,அம்மாடி நீ போய் குளிச்சிட்டு வந்துரு என்கவும் சரிங்கங்மா என்ற ஷமீராவும் குளித்து முடித்துவிட்டு சுடிதார் போட்டுக்கொண்டு கீழே வந்தவள்
கண்மணியும் கவிதாவும் தாவணியில் இருப்பதை பார்த்து,அய்யோ நம்ம சுடிதார் போட்டிருக்கோமே ஏதாவது நினைப்பார்களோனு யோசிக்க, அவள் முகத்தை வைத்து புரிந்து கொண்ட கண்மணி ஒன்னும் இல்லையென்று தலையை அசைத்தாள்.
பின்னர் காலை உணவுக்காக கம்மங்களியும் சுண்டைக்காய் வத்த குழம்பு இருவரும் செய்து முடிக்க,அன்பரசனும் கனலரசனும் தோட்டத்திற்கு சென்று விட கவிதாவும் கண்மணியும் சாப்பிட்டு ஸ்கூலிற்கு ரெடியாகினர்.
கண்ணனோ இரவு முழுவதும் கொள்ளையில் காவல் காத்து விட்டு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தான். அய்யா டீ என்க,முதல்ல குளிச்சிட்டு வரேன் என்கவும் என்ன அதிசயமா குளிக்க போறானென்று கேட்டுக் கொண்டே தம்புசாமி தாத்தா அங்கு வந்தார்..
ஆமா நான் குளிக்காத இந்த ஐயா தான் விளக்கு வைத்து பார்த்தாரென்று பல்லை கடித்துக் கொண்டே சென்றான்..
ஏம்மா..பெரியவன் அந்த புள்ளைங்க போட்டோ காமிச்சானே பார்த்தீங்களா? உங்களுக்கு புடிச்சிருக்கா என்கவும் கண்மணி கவிதாவை தவிர மற்றவர்கள் எல்லாம் பார்த்திருந்தனர்.
எங்களுக்கெல்லாம் காட்டவில்லையே என்று கவிதா கேட்க கட்டிக்க போறவங்கள் பார்த்தா போதும் உனக்கு எதுக்கு சின்ன குட்டிய அதெல்லாம் என்று தாத்தா கேட்க...ஏன் வீட்டுக்கு வர போற அண்ணியையும் மாமாவையும் நான் பார்க்கிறது இல்லையா தாத்தா என்றாள்..
முதல்ல படிச்சு முடி..அப்புறம் இதெல்லாம் கேட்கலாம் பெரிய மனுஷி போல எப்ப பார்த்தாலும் பேச்சென்று பேத்தியை சொல்ல...ஆமாம் கொஞ்சம் அறிவா பேசினால் இந்த வீட்ல தெய்வ குத்தம் ஆகிடுமே என்றாள்.
பின்னர் இருவரும் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து ஸ்கூலுக்கு போகும் மினி பஸ் ஏறும் இடத்திற்கு சென்றனர்.
வழக்கம்போல் தூங்கி எழுந்த செழியனும் பிரஷாகி கீழே வர அங்கே வானதியோ கணவருக்கு டீயை கொடுத்துவிட்டு தானும் குடித்துக் கொண்டிருந்தார்.மகனை பார்த்தவர் உள்ளே போய் ஒரு டம்ளரில் சூடா டீ எடுத்துட்டு வந்து கொடுக்க வாங்கியவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
செழியானு செல்லதுரை கூப்பிட சொல்லுங்கப்பா என்க,முறைப்படி பத்திரிகை அடிக்கணும்.இன்னைக்கு நானும் உங்க தாத்தாவும் பிரசுக்கு போறோம்.அந்த புள்ளையோட அப்பா அம்மா பேரு ஊரெல்லாம் எழுதி கொடு..
நேர்ல போய் அவங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும் தம்பி. வராங்களோ வரலையோ அது அடுத்த பிரச்சனை நம்ம முறைப்படி செய்யணும் என்க..அரைமனதாக சம்மதித்தான்..
அப்புறம் பொண்ணுக்கு துணி எல்லாம் வாங்கணும்.திருபுவனம் போகலாமா இல்ல மதுரைக்கு போகலாமா? திருபுவனத்துக்கே போகலாம் பா என்றான்.
சரி இன்னைக்கு வெள்ளிக்கிழமை நாள் நல்லா தான் இருக்கு.இன்னிக்கு போயிட்டு புடவை எடுத்துட்டு வந்துரலாமா வானதி என்கவும் சரிங்க என்றார்..
அப்போ நான் போயிட்டு ஒரு வார்த்தை உங்க அப்பா வீட்டுல சொல்லிட்டு வரேன்,அது என்ன இன்னும் எங்க அப்பா வீடு?,ஏன் உங்க அத்தை வீடு இல்லையானு வானதி கோவமாக கேட்க,ஏண்டி இது ரொம்ப முக்கியமா?
எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாக பொண்ணு குடுத்து எடுத்து கட்டிக்கிட்டதால எங்க பாத்தாலும் சொந்த பந்தமாக தான் இருக்கிறீங்க.இதுல உன் அப்பா வீடுனு சொன்னதால் என்னடி ஆகிட்டுனு தனது மாமனார் வீட்டை நோக்கி சென்றார்.
அம்மா என்று செழியன் கூப்பிட,ம்ம் சொல்லு பா என்றார்.என் மேல கோவமா இருக்கியா மா?.
"கோவம் இல்லைப்பா" வருத்தம் தான் இருக்கு.ஒரு வார்த்தை என்கிட்ட இது போல விஷயமென்று சொல்லிருக்கலாமே என்க...சூழ்நிலை அப்படி மா.
"அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்".
ஒரு வருஷமா அவள் கிட்ட நான் பேசுறது கிடையாது.2 வாரத்துக்கு முன்னாடி தான் எனக்கு போன் பண்ணி இதைப்போலனு விஷயத்தை சொன்னாள்.கேட்டுகிட்டு நான் எப்படி மா சும்மா இருக்க முடியும் சொல்லு?.
மனசுல இவளை நினைச்சு கிட்டு கண்மணி கூட என்னால எப்படி மா வாழ முடியும்?அதும் இல்லாம பொம்பள புள்ள இல்லாத வீட்டில் கண்மணியும் கவிதாவும் அக்கா தங்கச்சி போல இங்க வந்து ஓடி ஆடி விளையாண்டோம்.
அந்த புள்ளையை போய் நான் எப்படி பொண்டாட்டியா நினைக்க முடியும் மா என்கவும்,அன்று அந்த பாபு பையன் அவங்க அப்பா கிட்ட பேசியது போல மகனும் இன்று அப்படியே சொல்கிறானேனு தோணியது.
சரி ஆனது ஆகிவிட்டது.இனிமே அத பற்றி பேசி ஒன்னும் புண்ணியம் இல்லை.உன் பொண்டாட்டி எப்படி இருக்கிறாள்?.அங்கு எல்லாரையும் புடிச்சிருக்கா?, ம்ம் அத்தைங்க கூட நல்லா ஐக்கியம் ஆயிட்டாள் மா...
ஓஓஓ...ஆமா அவ பேரு என்ன?
சிரித்துக் கொண்டவன் இதுவரை ஷமீரா தாஸ் இனி ஷமீரா இளஞ்செழியன் என்றான்...ஏன் தம்பி அவங்க சாமிக்கும் நம்ம சாமிக்கும் ஒத்து வருமா யா?நம்ம வேற வெள்ளி செவ்வாயில சாம்பிராணி புகை போட்டு சூடம் கொளுத்துவோம்...
உன் பொண்டாட்டி பைபிளை தூக்கிட்டு இருந்தாக்க நல்லாவா இருக்கும்?
செழியனோ அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டான்.
செல்லதுரையும் தனது மாமனார் வீட்டிலும் தனது பங்காளி வீட்டிலும் விஷயத்தை சொல்ல,சரி பா நல்லபடியா போயிட்டு வந்துடலாம் என்றனர்.
ஷமீராவிற்கு துணையாக சுமதி அம்மாச்சி வீட்டில் இருந்து கொள்ள மற்றவர்கள் எல்லாம் வேனில் ஏறினர்.
காலை 11 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் எல்லாரும் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருபுவனத்திற்கு புடவை எடுக்க சென்றனர்.
மனைவிக்கு என்ன மாதிரியான புடவை வேணுமென்று செழியனே தேர்ந்தெடுக்க வந்தான்.அங்கிருந்த புடவை குவியல்களில் தேடி அலசியவன் மனைவிக்கு ஏற்ற புடவையை எடுத்தான்.
மற்ற பொருட்களையும் வாங்கிக்கொண்டு அவர்கள் வீடு வந்து சேரவே மாலை ஆனது.அதேபோல் பத்திரிக்கையும் அன்றே தயாராகும்னு சொல்லிவிட்டதால் செல்லதுரையும் அதை வாங்கிக் கொண்டு வந்தார்.
மறுநாள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அவர்கள் குல தெய்வத்திடம் பத்திரிக்கையை வைத்து படைத்து விட்டு,ஊர்காரர்கள் இரண்டு பேரையும் தனது சித்தப்பா சித்தி மாமனார்,மைத்துனர்,மற்றும் தனது மனைவியோடு செல்லதுரையும் காரில் ஏறி சோழனூரை நோக்கி பயணமானார்.
நம்ம முறைப்படி சொல்லுவோம் அது ஏத்துக்கிறது அவங்களோட விருப்பம் என்று வீரையன் சொல்ல மற்றவர்களும் அதுதான் சரி என்றனர்.
அதிகாலை கிளம்பியவர்கள் சோழனூருக்கு வந்து சேர மதியம் மூன்று மணிக்கு மேலானது.ஷமீராவின் வீட்டுக்கு எப்படி போகணுமென்று செழியன் சொல்லியிருக்க,அதே போல் அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் ஓரமாய் வந்து காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியவர்கள் அந்த ஏரியாவை சுற்றி பார்த்தனர்.
பின்னர் அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்து காலிங் பெல்லை அழுத்த சிறிது நொடியில் கதவை திறந்த எஸ்தரோ அங்கிருப்பவர்களை பார்த்து அதிர்ந்து போனார்.
பின்னர் சுதாரித்தவர் வீட்டிற்கு வந்தவர்களை வாங்களென்று சொல்வதுதான் பண்பாடு என்பதால் வாங்கயென்று உள்ளே கூப்பிட்டார்.
மகியோ யாரு என்ற யோசனையோடு ஹாலுக்கு வந்தவர் அங்கே இருப்பவர்களை பார்த்து அதிர்ந்தார்.தங்கள் வருகையை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது மற்றவர்களுக்கும் தெரிந்தது.
பின்னர் வாங்க என்றவர் குடிக்க எதாச்சி எடுத்துட்டு வா என்கவும்,உள்ளே போன எஸ்தரும் எதுக்கு வந்துருக்காங்கன்னு தெரியலையே என்றபடி டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
வீரையனே பேச்சை ஆரம்பித்தார்.வணக்கங்க எதுக்கு வந்திருக்கோம்னா அடுத்த வாரத்தில் பிள்ளைகளுக்கு எங்கள் குலதெய்வ கோயில்ல வரவேற்பு வச்சிருக்கோம்.
அவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.அதுக்காக நாம அப்படியே விட முடியாது இல்லையா??நாளைக்கு சொந்த பந்தங்கள் முகத்துல முழிக்கணுமே என்றார்..
நான் தான் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டேனேங்கனு மகி சொல்ல,நீங்க வேண்டான்னு சொல்லிட்டீங்க.ஆனால் முறைன்னு ஒன்னு இருக்குங்க..
மதிச்சு சொல்ல வேண்டியது எங்களோட கடமை.வாங்க என்று தான் கூப்பிட முடியும்.வர்றதும் வராததும் உங்களோட விருப்பமென்றவர் மச்சானென்று தம்புசாமியை கூப்பிட..இருவரும் எழுந்து தாம்பாளத்தில் பத்திரிகை பூ பழத்தை வைத்து மகியின் முன்பு நீட்ட என்ன சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை.
பின்னர் எஸ்தர் என்று கூப்பிட்டு மனைவியோடு தட்டை வாங்கியவர் எங்களை மதித்து கொடுக்குறீங்க பெரியவங்க என்பதால் தான் நான் வாங்கிக்கிறேன்.
மத்தபடி எனக்கு என் பொண்ணு மேல இருக்கிற...அதை எப்படி சொல்றதுன்னு தெரியல..உங்களுக்கு புரியுமென்று வார்த்தை வராமல் அவர் தவிப்பது தெரிந்தது.
நல்லவேளை வீட்டிற்கு வந்தவர்களை அவமானப்படுத்தாமல் இந்த அளவுக்கு நடந்து கொண்டாரேனு நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பின்னர் அந்தோணியின் வீடு எங்கே இருக்கு என்க,தங்கை வீட்டை மகியும் காட்டிவிட அங்கே சென்று பத்திரிக்கை வைத்தனர்.
ராணியும் தனது கணவருக்கு போன் பண்ணி வர வைத்தார்.அவர் டீ போட போக அதெல்லாம் வேண்டாம் இப்பதான் குடிச்சோம் என்றனர். கண்டிப்பாக நீங்க ஃபங்ஷனுக்கு வரணும் அவங்க தான் இல்லனாலும் நீங்க நிச்சயமா வாங்க என்று சொல்ல கண்டிப்பா என் மருமகளுக்காக நாங்கள் வருவோமென்றனர்.
மேலும் சிறிது நேரம் அவர்களுடன் பேசியிருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.
தட்டிலிருந்த பத்திரிகையை கிழித்து குப்பை தொட்டியில் எறிந்த மகியோ,பொண்ணே இல்லைங்குறேன் அவளுக்கு காரியம் ஒன்றுதான் கேடுனு சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்க சென்றார்.
எஸ்தரோ மகளை நினைத்து அழுது கொண்டே அங்கிருந்து சோபாவில் உட்கார்ந்திருந்தார்..
ஷமீராவிற்கோ திக் திக்கென்று இருந்தது.ஊரில் என்ன நடக்குமோ என்று தெரியலையே?எங்கே வந்தவர்களை தனது தந்தை அவமானப்படுத்தி அனுப்பிடுவாரோ?
இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை முற்றி ஏதாவது பிரச்சனை நடக்குமோ? என்று பயந்து கொண்டே இருந்தாள்.
அவள் முகத்தை கவனித்த புவனாவோ அப்படியெல்லாம் ஒன்று நடக்காது.எதுக்கு தேவையில்லாம பயப்படுறனு ஆறுதல் சொன்னாலும் இயல்பாக இருக்க முடியலை.
தனது கணவனை உடனே பார்க்கணும் போலிருக்க மனைவியின் மனநிலை உணர்தானோ என்னவோ தெரியவில்லை..
நேற்றிலிருந்து தன்னவளிடம் பேசவில்லையே கண்டிப்பாக வருத்தமாக இருப்பாளென்று நினைத்தவன்,தனது தோட்டத்தில் காய்கறி பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் நீங்கள் வேலையை பாருங்கள் இதோ வந்துடுறேனென்று சொல்லி வண்டியில் ஏறி தனது தாத்தா வீட்டிற்கு வந்தான்.
உள்ளே வந்தவன் அங்கே சோபாவில் சோகமான முகத்தோடு உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்து என்னாச்சென்று கண்களால் கேட்க கணவனை பார்த்தவளுக்கு மனம் நிம்மதியாக இருக்கவும்,ஒன்றும் இல்லையென்று தலையசைத்தாள்.