• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
38
அத்தியாயம் - 9

கண்கள் கலங்கிய நிலையில் மகதி அவள் அறைக்குள் சென்றதும்,"மகதி என்னாச்சு உனக்கு? " என்று மீண்டும் புரியாமல் கேட்டான் வர்மன்.

"வர்மா! நீங்க என் அம்மாவுக்குப் போன் பண்ணி சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க"என்ற மகதியின் குரலில் பதற்றமும் அழுகையும் கலந்திருந்தது.

"இரு இரு நான் மாமாவுக்குப் போன் பண்ணி பாக்குறேன்" என்ற வர்மன் தன் கைபேசி மூலம் மகதியின் தந்தையை அழைக்க, அவரோ இவன் அழைப்புக்குப் பதில் தராமல் போனார்.

"மகதி! மாமா போன் எடுக்கல, சரி நீ ஏன் அழற!?, என்னாச்சு உனக்கு?" என்ற வர்மன் மூடி இருந்த மகதியின் அறை வாசலில் நின்று தன் கேள்வியை எழுப்ப, மகதியின் அழுகை சத்தம் மட்டும் தான் வர்மனின் காதில் கேட்டது.

"என்ன நீ நான் கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டுற, இப்படியே அழுதுகிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என்று கேட்டுக்கொண்டே வர்மன் தன் நண்பன் மாயனை அழைத்துப் பார்க்க, அவனும் பதில் அளிக்காமல் போனான்.

தன் அறையினுள் மூலையில் அமர்ந்து இருந்த மகதிக்கு ஏன் அழுகிறோம் என்று தெரியாமல் அவள் கண்ணீர் தரையை நனைத்தது.

லேசான வயிற்று வலியால் மேலும் கண்கள் கலங்கியவளின் விசும்பல் சத்தம் வர்மனின் காதில் கேக்க, அதே சமயம் வர்மனின் தந்தையிடமிருந்து அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

"ஹலோ அப்பா... நானே உங்களுக்குப் போன் பண்ணனும்னு இருந்தேன்" என்ற வர்மனின் பதற்றமான குரலைக்கேட்டு,

"என்னாச்சு வர்மா? எதாவது பிரச்சனையா?" என்று ராஜன் கேக்க, வர்மன் மகதியின் அழுகையை பற்றி விவரித்துச் சொன்னான்.

"வர்மா! மகதி பெரிய பொண்ணு ஆகிட்டான்னு நினைக்கிறேன்"என்று ராஜன் சொல்ல, கைபேசியை காதில் வைத்து இருந்த வர்மனுக்கு அப்போது தான் மகதியின் பயத்துக்கு காரணம் தெரிந்தது.

"அப்பா...ஆனா இப்போ மாமா அத்தை வீட்ல இல்லையே, நான் என்ன பண்ணட்டும்" என்று வர்மன் தன் தந்தையிடம் கேக்க,

"நான் சொல்லுற மாதிரி பண்ணு" என்ற ராஜன் கைபேசி வாயிலாகவே வர்மனுக்கு சில விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்.

"வர்மா... நானும் மகாலிங்கத்துக்கு போன் பண்ணி சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பச் சொல்லிடுறேன். நீ அந்த வீட்டு பொம்பள பிள்ளையைப் பத்திரமா பார்த்துக்கோ.
அவளுக்குத் தைரியம் சொல்லு. நான் நைட் போன் பண்ணுறேன்" என்ற ராஜன் தன் கைபேசி இணைப்பைத் துண்டிதார்.

பெண் பிள்ளையுடன் வளராத காரணத்தால் வர்மனுக்கும் மகதியின் நிலைமையைப் புரிந்துக்கொள்ள முடியாமல் போனதும், தன் தந்தையின் வார்த்தையைக்கேட்டு மகதியின் பெற்றோர் வரும் வரை அவளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான்.

வர்மன் சமையலறை புகுந்தவன் மகதிக்காகத் தேநீரை தயாரிக்கும் தருணம், "சாரி வர்மா! ரொம்ப லேட் பண்ணிட்டேனா!" என்று கேட்டுக்கொண்டே மாயன் வீட்டுக்குள் நுழைந்தான்.

"டேய் எங்கடா போன! இந்தா முதல்ல இந்த டீயைக் கொண்டு போய் மகதிகிட்ட கொடு, நான் கடைக்குப் போயிட்டு வரேன்"என்று வர்மன் சொல்ல,

"ஏன் கடைக்கு? என்ன வேணும் சொல்லு நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றான் மாயன்.

"டேய் கடையில... அது அத! எப்படி உன்கிட்ட சொல்லுறது"என்று வர்மன் தயங்கும் தருணம்,

"அண்ணா..." என்ற மகதியின் அழுகுரல் கேட்டு,"பட்டுக்குட்டி என்னமா வேணும்?" என்று அறையின் வாசலில் நின்றப்படியே கேட்டான் மாயன்.

"மாயா... மகதி பெரிய மனுஷி ஆகிட்டா!" என்று வர்மன் சொன்னதின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள தெரியாத மாயனோ,
"என் தங்கச்சி எப்பவுமே பெரிய மனுஷி தனமா தானே பேசுவாள்" என்றான்.

"டேய்...மகதி ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாள்!" என்று வர்மன் ஒரு வழியாக மாயனுக்கு புரியும்படி சொன்னவனின் குரலைக் கேட்டுத் தன் அறையில் அமர்ந்து இருந்த மகதிக்கு சங்கடமாகப் போனது.

பதினைந்து வயதை நெருங்கியும் தன் மகள் ருது ஆகவில்லை என்ற கவலையில் இருந்த மகதியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத தருணம் தன் சித்தி மகள் பூபடைந்த செய்தி மாயனுக்கும் மகிழ்வை தான் கொடுத்தது.

"வர்மா! உடனே இந்த நல்ல செய்தியைச் சித்தி சித்தப்பாவுக்கு போன் பண்ணி சொல்லணும்" என்ற மாயன் சற்று தாமதிக்காமல் தன் கைபேசி வாயிலாக மகதியின் பெற்றோர்களை அழைக்க, மாயனின் அழைப்புக்கும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போனது.

"என்ன வர்மா இது! சித்தி சித்தப்பா போன் எடுக்கலையே" என்ற மாயன் தன் அம்மா கீதாவை அழைத்துப் பார்த்ததும்,

"மாயா... நானே உனக்குப் போன் பண்ணனும்னு தான் இருந்தேன்" என்றார் கீதா.

"மாயா...இங்க ஒரே பிரச்சனை மாயா! இந்த ஊர் அரசியல் தலைவரை யாரோ ஆளை வச்சி போட்டுட்டாங்க, ரோட்டுல எந்த வண்டியும் ஒடக்கூடாதுனு மறியல் பண்ணுறாங்க, ஹலோ மாயா நான் பேசுறது கேக்குதா" என்ற கீதாவின் குரலை விடவே அவர்களின் பின்னே கேக்கும் கட்சியின் கோஷம் அதிகமாக இவர்களுக்குக் கேட்டது.

"அம்மா... சித்தி சித்தப்பா எங்க? இங்க மகதி பெரிய மனுஷி ஆகிட்டா!" என்று மாயன் சொல்ல, அவன் பேசிய ஒரு வார்த்தைக்கூட கீதாவின் காதில் விழாத பட்சத்தில் அவரின் கைபேசி இணைப்பும் துண்டிக்கப் பட்டது.

"மாயா… அவங்க வரும்போது வரட்டும், நீ இந்த டீயை மகதிக்கு கொடு" என்ற வர்மன் வேகமாக டிபார்ட்மென்டல் ஸ்டோரை நோக்கிச் சென்றான்.

"பட்டுக்குட்டி இந்தாடா டீக்குடி" என்று அறை வாசலில் நின்றுக்கொண்டு மாயன் தன் தங்கையை அழைக்க, "எனக்கு எதுவும் வேண்டாம்" என்று அழுதாள் மகதி.

நீண்ட நிமிடங்கள் மாயன் போராடியும் மகதி கதவைத் திறக்காமல் போனதும்,"என்னடா இன்னுமா மகதி ரூம்ல இருந்து வரல!" என்று கேட்டுக்கொண்டே வர்மன் கை நிறைய பைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

"நானும் எவ்வளவு நேரம் தான் டா கதவைத் தட்டுறது, ஆனா! மகதி வெளியே வரவே இல்லை" என்று மாயன் சொன்னதும்,

"மகதி... நீ இப்போ கதவைத் திறக்கப் போறியா! இல்லை நான் கதவை உடைச்சிகிட்டு உள்ளே வரவா" என்ற வர்மனின் கோவமான குரலில் சட்டென்று கதவைத் திறந்துகொண்டு வந்தாள் மகதி.

மகதியை பார்த்ததும் மாயன் சிரித்தவன்,"இதுக்கெல்லாம் யாராவது அழுவங்களா?" என்று கேட்டான்.

"ஏன் நீ சொல்ல மாட்ட! உனக்கு வந்தா தான் என் வலி தெரியும்"என்ற மகதியின் கன்னத்தில் கண்ணீரின் கோடு காய்ந்து இருந்தது.

"சரி சரி... உனக்கு இந்த மாதிரி நேரத்துல வயிறு வலிக்காம இருக்க வெந்தய தூள் குடிச்சா நல்லதாம், டேய் மாயா இத தண்ணீர்ல கலந்து மகதிக்கு கொடு"என்றான் வர்மன்.

மாயனையும் வர்மனையும் சங்கடமாகப் பார்த்த மகதிக்கு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அம்மா ஸ்தானத்திலிருந்து வர்மனே எல்லா வற்றையும் காத்துக்கொடுக்க, மகதியும் வர்மன் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டாள்.

"இந்தா மகதி, இந்தப் பையில உனக்குத் தேவையான பொருளெல்லாம் இருக்கு, நீ போய்க் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் மாத்திக்கோ.டேய் மாயா நீ வா நம்ம மகதிக்கு சாப்பிட உளுந்து கஞ்சி ரெடி பண்ணலாம்" என்ற வர்மன் தன் நண்பனைச் சமையலறைக்குள் அழைத்துச் சென்றான்.

மகதியும் குழந்தை இல்லையே! பொதுவாக இந்த வயதில் அவளுக்கும் இந்தச் சூழ்நிலை யில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து இருக்க,
தன் பெற்றோர்கள் வரும் வரை தைரியமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து குளிக்கச் சென்றாள்.

மகதி வருவதற்குள் கூகுளை பார்த்து வர்மனும் மாயனும் மகதிக்கு தேவையான சத்தான உணவுகளைத் தயார் செய்து மேசைமேல் அடுக்கினார்கள்.

"மகதி சாப்பிட வா" என்று வர்மன் அழைக்க, "நான் வெளியே எல்லாம் வரக்கூடாது வர்மா" என்றாள் தயக்கத்துடனே.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மகதி, இந்த மாதிரி நேரத்துல உடல் அசதியா இருக்கும், வேலை பண்ண முடியாது, அதனால தான் ஓரமா உக்காந்து ஓய்வு எடுக்கச் சொல்லுவாங்க, மற்றபடி இந்த வயதில் எல்லா பெண்ணுக்கும் வர இயற்கையான விஷயம் தான்" என்று தைரியம் சொன்னான் வர்மன்.

ஒரு வழியாக வர்மன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு மகதி ஹாலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

"இது என்ன கஞ்சி எல்லாம் தரிங்க,
தோசை இல்லையா!?" என்று மகதி கேக்க,

"உனக்கு நெய் தோசை பிடிக்கும்னு எனக்கும் தெரியும், ஆனா இந்த நேரத்துல நீ ரொம்ப சத்தான சாப்பாட்டை தான் சாப்பிடணும்" என்ற வர்மன் மகதி என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்று பெரிய லிஸ்டையே சொல்லி முடித்தான்.

"ஏன் வர்மா! அது என்ன பொண்ணுங்களுக்கு மட்டும் இதெல்லாம் தராங்க!?அப்போ நமக்கு அதெல்லாம் தரமாட்டாங்களா"என்று மாயன் கேக்க,

"டேய்...பொண்ணுங்களுக்கு தான் டா இன்னோரு உயிரைச் சுமக்குற சக்தி இருக்கு, அவங்க ஆரோக்கியமா இருந்தா அடுத்தடுத்து வரப் போற தலைமுறை எல்லாம் ஆரோக்கியமா இருப்பாங்க" என்ற வர்மன் மேலும் சில உணவுப் பொருட்களை மகதியின் முன்னே எடுத்து வைத்தான்.

"போதும் வர்மா... இவ்ளோ சாப்பிட்டா நான் குண்டாகிடுவேன்" என்ற மகதி கொஞ்சம் கொஞ்சமாக அவள் பயத்திலிருந்து விடுபட்டு இருந்தாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
38
மாயன், வர்மன், மகதி என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, மாயன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியைப் பார்த்து முகம் மாறினன்.

"என்ன வர்மா இது! திருச்சியில் ஒரே கலவரம்போல!?" என்று மாயன் கேக்க, "அதான் அம்மா அப்பா போன் எடுக்கலையா?"எனப் பதற்றத்துடன் கேட்டாள் மகதி.

"அவங்க பாதுகாப்பா இருக்காங்களான்னு தெரியல! இந்த நேரத்துல மகதி விஷயம் தெரிந்தால் அத்த மாமா கவலை பாடுவாங்களே!"என வர்மன் சொன்னதும்,

"அவங்க வந்ததும் சொல்லிப்போம் வர்மா... அதுவரை பாப்பாவை நம்மளே பாத்துப்போம்"என்றான் மாயன்.

இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் வேளையில்,"இந்த நேரத்துல யாராவது பெண்கள் வீட்டில இருந்தா நல்லா இருக்கும் மாயா" என்று வர்மன் சொன்னதும்,

"நான் வேணும்னா நந்தினியை அழைச்சிட்டு வரவா" என்று கிண்டலாகக் கேட்டான் மாயன்.

"ஏன் டா! சும்மாவே இருக்க மாட்டியா நீ! நம்ம வேணும்னா பக்கத்து வீட்டுல மகதி தோழிங்க யாராவது இருந்தா அவங்கள வீட்டுக்கு வரச் சொல்லலாமா!?" என்று கேட்டான் வர்மன்.

"டேய்! நம்ம ரெண்டு பேர் ஆம்பளை பசங்க இருக்குற வீட்டுல யாருடா பெண் பிள்ளைங்களை தங்க அனுப்பி வைப்பாங்க, அதெல்லாம் வேண்டாம், நம்மளே பாப்பாவை பார்த்துப்போம்" என்றான் மாயன்.

"அண்ணா... எனக்குத் தூக்கமா வருது, ஆனா தூங்க முடியல" என்று மகதி சொன்னதும்,

"வேணும்னா வர்மனை பாட்டு பாட சொல்லவா!நீ தூங்குறியா!?"என்று மாயன் கேட்க, வர்மனோ தன் நண்பன் காலில் ஓங்கி மிதித்தான்.

"மகதி...இந்தா என்னோட போன், நீ உனக்குப் பிடித்த பாட்டைக் கேட்டுகிட்டே தூங்கு" என்ற வர்மன் தன் கைபேசியை மகதியுடம் கொடுக்க, அவளும் அவ்வாறே பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கவும் செய்தாள்.

எந்த ஒரு வீட்டிலும் பெண்கள் வயதுக்கு வந்த நாளில் அவர்களைத் தனியாக மூலையில் அமர வைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்துச் செய்வது தான் வழக்கம்.

ஆனால் இன்று மகதிக்கு அவளின் அண்ணனும் வர்மனும் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த வகையில் மகதிக்கு தேவையானவற்றை செய்தார்கள்.

வர்மனின் தந்தை இரவு நேரம் தன் மகனைக் கைபேசி வாயிலாக அழைத்தவர், "நாளைக்கே நீ இங்க வரணும்னு அவசியம் இல்லை வர்மா, நாளைய மறுநாள் நான் சென்னைக்கு வர வேண்டிய வேலை இருக்கு, அப்போ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே மும்பைக்கு கிளம்புவோம்"
என்று அவர் சொன்னதின் அடிப்படையில், இன்னும் ஒரு வாரம் வர்மன் மகதியின் வீட்டிலேயே தங்க முடிவெடுத்தான்.

அன்றைய தினம் இரவெல்லாம் நிம்மதியாகத் தூங்கி எழுந்த மகதி, மறுநாள் காலை எப்போதும் போலவே குளித்து முடித்துத் தன் அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கு கருப்பு உளுந்து உருண்டை, முட்டை, நல்லஎண்ணெய் என்று அனைத்தையும் வாங்கி வைத்து
இருந்தான் வர்மன்.

"டேய் வர்மா என்னடா இதெல்லாம்!?"
என்று மாயன் கேக்க,"இந்த மாதிரி நேரத்துல மகதி இப்படி தான் சாப்பிடணுமா!" என்று வர்மன் சொன்னதும், மகதியின் முகம் அஷ்ட்டகோணலாக மாறியது.

"அடப்பாவி! இதைத் தான் நேத்து நைட் முழுக்க என் போன்ல பாத்துகிட்டு இருந்தியா!?" என்று மாயன் கேக்க,

"மகதி இந்தா இதெல்லாம் சாப்பிடு" என்று வர்மன் மேசைமேல் இருக்கும் பொருளைச் சுட்டிகாட்டும் தருணம் மகதியின் பெற்றோரும் மாயனின் அம்மாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

தன் தந்தையை பார்த்ததும் மகதி தாவிப் போய் அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

"என்ன சித்தப்பா! ஏன் நீங்க ஒரு போன் கூடப் பண்ணல!?" என்று மாயன் கேக்க,
"எங்க போன் கலவரத்துல தொலைந்து போச்சு மாயா" என்றார் மகதியின் அம்மா.

"நாங்க திருச்சியிலிருந்து சென்னை வருவதற்குள் போதும் போதுமுன்னு ஆச்சு மாயா" என்ற கீதாவின் கண்கள் மேசைமேல் இருந்த பலகாரத்தின் மேல் பதிந்தது.

"என்ன இது!? முட்டை, நல்ல எண்ணெய், உளுந்து கஞ்சி எல்லாம் இருக்கு, யாருக்கு இதெல்லாம்!?"என்று கீதா கேக்க,

"என்ன தம்பி... நாங்க வர லேட் ஆகும்னு நீங்களே கஞ்சி வச்சிட்டீங்களா!?" என்று வர்மனை கேட்டார் மகதியின் அம்மா.

"ஆன்ட்டி! கஞ்சி எங்களுக்கு இல்லை, மகதிக்கு" என்று வர்மன் சொன்னதும், "ஐயோ... இவ அதெல்லாம் குடிக்க மாட்டாளே" என்றார் கீதா.

"அம்மா... இனி பாப்பா இதெல்லாம் குடித்து தான் ஆகணும்.பாப்பா இனி சேட்டை எல்லாம் பண்ணாது" என்று மாயன் சொல்ல,

"அப்போ இதுக்கு முன்னே நான் சேட்டை பண்ணனா அண்ணா!?" என்று பொய்யான கோபத்துடன் கேட்டாள் மகதி.

"இல்லமா... நான் அப்படி சொல்ல வரல" என்று மாயன் தன் பேச்சை மழுப்பிப் பேசியதும்,

"டேய் சும்மா இருடா நீ!
ஆன்ட்டி! மகதி நேத்து ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாள்" என்ற வர்மனின் வார்த்தையைக் கேட்டுக் கீதாவும் மகதியின் அம்மா மாலதியும் ஒருவரை ஒருவர் சங்கடமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

"என்ன இது! பெரிய மனுஷியான பொண்ணு இப்படியா ஆம்பள பிள்ளைங்க முன்னாடி நிப்பாங்க!" என்ற கீதா, வேகமாக மகதியின் கையைப் பிடித்து அவள் அறைக்கு அழைத்துச் செல்ல,
"ஐயோ பெரியம்மா கை வலிக்குது" என்று கத்தினாள் மகதி.

தன் மகள் ருதுவான செய்தியைக் கேட்டு மகதியின் பெற்றோருக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

நேற்றிலிருந்து இந்த நொடிவரை மகதியை நல்லபடியாகப் பார்த்துக்கொண்ட வர்மனைவயும் மாயனையும் பார்த்த மகாலிங்கதுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாமல் போனது.

"தம்பி... ஒரு அம்மாவா இருந்து நீங்க இந்த நேரத்துல என் பொண்ணுக்கு பண்ண உதவிக்கு நான் எப்படி கைமாறு பண்ண போறேறேன்!" என்ற மகாலிங்கம் கைகளைக் கூப்பி வர்மனை நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார்.

"என்ன அங்கிள்!ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க, இன்னும் கேட்டா எனக்கும் இந்தச் சூழ்நிலையில என்ன பண்ணுறதுனே தெரியல" என்ற வர்மனின் பேச்சில் மகதியின் அம்மா சிரித்துக்கொண்டார்.

"ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி" என்று மகாலிங்கம் மனதார தன் நன்றியைத் தெரிவிக்க, "மாலதி...உங்க அக்காகிட்ட மேற்கொண்டு என்ன சடங்கு பண்ணனும்னு கேட்டுச் சொல்லு" என்றார் மகாலிங்கம்.

மாயனின் அம்மா கீதாவின் ஆலோசனைப்படி மூன்றாம் நாளே மகதிக்கு தண்ணீர் ஊத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

அன்றைய தினம் இரவு நேரம் மகதியை தனியாக மூலையில் படுக்க வைத்து உலக்கையை அவளுக்குப் பக்கத்தில் வைத்தார் கீதா.

"பெரியம்மா...இதைக்கொண்டு இப்போ நான் உங்க மண்டையை உடைக்க போறேன் பாருங்க, ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க" என்ற மகதி, வேகமாகத் தன் அறையிலிருந்து வெளியே வரப் பார்த்தவளின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் ஓரமாக அமர வைத்தார் கீதா.

மகதி கோவத்தின் உச்சிக்குச் சென்றவளுக்கு இந்தச் சடங்கு சாம்பரதாயம் எல்லாம் பிடிக்காமல் போனது.

வேறு வழியே இல்லாமல் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு மகதி அமைதியாக இருந்தவளுக்கு மறுநாள் தண்ணீர் ஊற்றும் சடங்கும் நடந்தது.

இந்த நன்னாளில் மகதியின் வீட்டுக்கு வர்மனின் தந்தை ராஜனும் வருகை தந்துருக்க, மகதியின் வீடே அக்கம் பக்கத்தினர்களால் நிரம்பி வழிந்தது.

மகதியின் தாய்மாமன் வெளிநாட்டில் இருந்ததால், வர்மனின் தந்தை ராஜன் தான் மகதிக்கு முறைப்படி எல்லா சடங்குகளையும் செய்தார்.

நேற்று வரை பாவாடை சட்டையில் வளம் வந்த சிறுமி மகதி. இன்று புடவையில் பெரிய பொண்ணை போலக் காட்சியளித்தாள்.

மகதிக்கு அன்றைய நாள் சடங்கு நல்ல விதமாக முடிந்தது.

மறுநாள் காலை விடிந்ததும் ராஜனும் மாயனும் மும்பை வந்த நினைவு மட்டுமே வர்மனுக்கு இருந்த நிலையில்,

எந்தப் புள்ளியில் மகதிக்கு வர்மன் மீது காதல் உணர்வு ஏற்பட்டு இருக்க கூடும் என்று இந்த நொடி யோசித்து பார்த்த வர்மன், பத்து வருடத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகளின் நினைவுகளிலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தவனின் கையில் மகதியின் கைக்குறிப்பு புத்தகம் மட்டுமே இருந்தது.

நீண்ட நேரம் கடந்தும் காரில் அமர்ந்து இருந்த வர்மன் வீட்டுக்குள் வராமல் இருக்க,"என்ன வர்மா...டைரியை முழுசா படிச்சியா?"என்று கேட்டான் மாயன்.

"மாயா... என்னடா இதெல்லாம்! இந்தப் புத்தகம் முழுதும் என்னைப் பற்றிய நினைவுகள் மட்டும் தான் டா இருக்கு, ஆனா மகதி எப்படிடா என்னை இந்த அளவுக்குக் காதலிக்க முடியும்!, அப்படி!..... அப்படி நான் எந்த விதத்துல டா அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தேன்!?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.

"நீ எதுவும் பண்ணல வர்மா!
மகதி உன்னை இந்த அளவுக்கு நேசிக்க நானும் ஒரு காரணம்"என்ற மாயனை கேள்வியாகப் பார்த்தான் வர்மன்.

"உனக்கு நினைவு இருக்கா வர்மா... அன்னைக்கு மகதிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்துச்சு தானே! அப்போ மகதியோட friends வந்து இருந்தாங்க. அதுல யாரோ ஒரு பொண்ணு,
ஏஜ் அட்டென்ட் பண்ணதும் முதல்ல எந்த ஆம்பளையை பார்க்குறோமோ அவங்கள தான் நம்ம கல்யாணம் பண்ணிப்போம்னு விளையாட்டா மகதிகிட்ட சொல்லி இருக்காங்க,

அந்த ஒரு வார்த்தையில மகதிக்கு உன் மேல இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு இருக்கு" என்று மாயன் சொன்னதும், வர்மனின் விழிகள் ஆச்சிரியம், குழப்பம் என்று பல உணர்வுகளை வெளிப்படுத்தியது.



 
New member
Joined
May 2, 2025
Messages
14
மாயன், வர்மன், மகதி என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, மாயன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியைப் பார்த்து முகம் மாறினன்.

"என்ன வர்மா இது! திருச்சியில் ஒரே கலவரம்போல!?" என்று மாயன் கேக்க, "அதான் அம்மா அப்பா போன் எடுக்கலையா?"எனப் பதற்றத்துடன் கேட்டாள் மகதி.

"அவங்க பாதுகாப்பா இருக்காங்களான்னு தெரியல! இந்த நேரத்துல மகதி விஷயம் தெரிந்தால் அத்த மாமா கவலை பாடுவாங்களே!"என வர்மன் சொன்னதும்,

"அவங்க வந்ததும் சொல்லிப்போம் வர்மா... அதுவரை பாப்பாவை நம்மளே பாத்துப்போம்"என்றான் மாயன்.

இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் வேளையில்,"இந்த நேரத்துல யாராவது பெண்கள் வீட்டில இருந்தா நல்லா இருக்கும் மாயா" என்று வர்மன் சொன்னதும்,

"நான் வேணும்னா நந்தினியை அழைச்சிட்டு வரவா" என்று கிண்டலாகக் கேட்டான் மாயன்.

"ஏன் டா! சும்மாவே இருக்க மாட்டியா நீ! நம்ம வேணும்னா பக்கத்து வீட்டுல மகதி தோழிங்க யாராவது இருந்தா அவங்கள வீட்டுக்கு வரச் சொல்லலாமா!?" என்று கேட்டான் வர்மன்.

"டேய்! நம்ம ரெண்டு பேர் ஆம்பளை பசங்க இருக்குற வீட்டுல யாருடா பெண் பிள்ளைங்களை தங்க அனுப்பி வைப்பாங்க, அதெல்லாம் வேண்டாம், நம்மளே பாப்பாவை பார்த்துப்போம்" என்றான் மாயன்.

"அண்ணா... எனக்குத் தூக்கமா வருது, ஆனா தூங்க முடியல" என்று மகதி சொன்னதும்,

"வேணும்னா வர்மனை பாட்டு பாட சொல்லவா!நீ தூங்குறியா!?"என்று மாயன் கேட்க, வர்மனோ தன் நண்பன் காலில் ஓங்கி மிதித்தான்.

"மகதி...இந்தா என்னோட போன், நீ உனக்குப் பிடித்த பாட்டைக் கேட்டுகிட்டே தூங்கு" என்ற வர்மன் தன் கைபேசியை மகதியுடம் கொடுக்க, அவளும் அவ்வாறே பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கவும் செய்தாள்.

எந்த ஒரு வீட்டிலும் பெண்கள் வயதுக்கு வந்த நாளில் அவர்களைத் தனியாக மூலையில் அமர வைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்துச் செய்வது தான் வழக்கம்.

ஆனால் இன்று மகதிக்கு அவளின் அண்ணனும் வர்மனும் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்த வகையில் மகதிக்கு தேவையானவற்றை செய்தார்கள்.

வர்மனின் தந்தை இரவு நேரம் தன் மகனைக் கைபேசி வாயிலாக அழைத்தவர், "நாளைக்கே நீ இங்க வரணும்னு அவசியம் இல்லை வர்மா, நாளைய மறுநாள் நான் சென்னைக்கு வர வேண்டிய வேலை இருக்கு, அப்போ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே மும்பைக்கு கிளம்புவோம்"
என்று அவர் சொன்னதின் அடிப்படையில், இன்னும் ஒரு வாரம் வர்மன் மகதியின் வீட்டிலேயே தங்க முடிவெடுத்தான்.

அன்றைய தினம் இரவெல்லாம் நிம்மதியாகத் தூங்கி எழுந்த மகதி, மறுநாள் காலை எப்போதும் போலவே குளித்து முடித்துத் தன் அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கு கருப்பு உளுந்து உருண்டை, முட்டை, நல்லஎண்ணெய் என்று அனைத்தையும் வாங்கி வைத்து
இருந்தான் வர்மன்.

"டேய் வர்மா என்னடா இதெல்லாம்!?"
என்று மாயன் கேக்க,"இந்த மாதிரி நேரத்துல மகதி இப்படி தான் சாப்பிடணுமா!" என்று வர்மன் சொன்னதும், மகதியின் முகம் அஷ்ட்டகோணலாக மாறியது.

"அடப்பாவி! இதைத் தான் நேத்து நைட் முழுக்க என் போன்ல பாத்துகிட்டு இருந்தியா!?" என்று மாயன் கேக்க,

"மகதி இந்தா இதெல்லாம் சாப்பிடு" என்று வர்மன் மேசைமேல் இருக்கும் பொருளைச் சுட்டிகாட்டும் தருணம் மகதியின் பெற்றோரும் மாயனின் அம்மாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

தன் தந்தையை பார்த்ததும் மகதி தாவிப் போய் அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

"என்ன சித்தப்பா! ஏன் நீங்க ஒரு போன் கூடப் பண்ணல!?" என்று மாயன் கேக்க,
"எங்க போன் கலவரத்துல தொலைந்து போச்சு மாயா" என்றார் மகதியின் அம்மா.

"நாங்க திருச்சியிலிருந்து சென்னை வருவதற்குள் போதும் போதுமுன்னு ஆச்சு மாயா" என்ற கீதாவின் கண்கள் மேசைமேல் இருந்த பலகாரத்தின் மேல் பதிந்தது.

"என்ன இது!? முட்டை, நல்ல எண்ணெய், உளுந்து கஞ்சி எல்லாம் இருக்கு, யாருக்கு இதெல்லாம்!?"என்று கீதா கேக்க,

"என்ன தம்பி... நாங்க வர லேட் ஆகும்னு நீங்களே கஞ்சி வச்சிட்டீங்களா!?" என்று வர்மனை கேட்டார் மகதியின் அம்மா.

"ஆன்ட்டி! கஞ்சி எங்களுக்கு இல்லை, மகதிக்கு" என்று வர்மன் சொன்னதும், "ஐயோ... இவ அதெல்லாம் குடிக்க மாட்டாளே" என்றார் கீதா.

"அம்மா... இனி பாப்பா இதெல்லாம் குடித்து தான் ஆகணும்.பாப்பா இனி சேட்டை எல்லாம் பண்ணாது" என்று மாயன் சொல்ல,

"அப்போ இதுக்கு முன்னே நான் சேட்டை பண்ணனா அண்ணா!?" என்று பொய்யான கோபத்துடன் கேட்டாள் மகதி.

"இல்லமா... நான் அப்படி சொல்ல வரல" என்று மாயன் தன் பேச்சை மழுப்பிப் பேசியதும்,

"டேய் சும்மா இருடா நீ!
ஆன்ட்டி! மகதி நேத்து ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாள்" என்ற வர்மனின் வார்த்தையைக் கேட்டுக் கீதாவும் மகதியின் அம்மா மாலதியும் ஒருவரை ஒருவர் சங்கடமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

"என்ன இது! பெரிய மனுஷியான பொண்ணு இப்படியா ஆம்பள பிள்ளைங்க முன்னாடி நிப்பாங்க!" என்ற கீதா, வேகமாக மகதியின் கையைப் பிடித்து அவள் அறைக்கு அழைத்துச் செல்ல,
"ஐயோ பெரியம்மா கை வலிக்குது" என்று கத்தினாள் மகதி.

தன் மகள் ருதுவான செய்தியைக் கேட்டு மகதியின் பெற்றோருக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

நேற்றிலிருந்து இந்த நொடிவரை மகதியை நல்லபடியாகப் பார்த்துக்கொண்ட வர்மனைவயும் மாயனையும் பார்த்த மகாலிங்கதுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாமல் போனது.

"தம்பி... ஒரு அம்மாவா இருந்து நீங்க இந்த நேரத்துல என் பொண்ணுக்கு பண்ண உதவிக்கு நான் எப்படி கைமாறு பண்ண போறேறேன்!" என்ற மகாலிங்கம் கைகளைக் கூப்பி வர்மனை நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார்.

"என்ன அங்கிள்!ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க, இன்னும் கேட்டா எனக்கும் இந்தச் சூழ்நிலையில என்ன பண்ணுறதுனே தெரியல" என்ற வர்மனின் பேச்சில் மகதியின் அம்மா சிரித்துக்கொண்டார்.

"ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி" என்று மகாலிங்கம் மனதார தன் நன்றியைத் தெரிவிக்க, "மாலதி...உங்க அக்காகிட்ட மேற்கொண்டு என்ன சடங்கு பண்ணனும்னு கேட்டுச் சொல்லு" என்றார் மகாலிங்கம்.

மாயனின் அம்மா கீதாவின் ஆலோசனைப்படி மூன்றாம் நாளே மகதிக்கு தண்ணீர் ஊத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

அன்றைய தினம் இரவு நேரம் மகதியை தனியாக மூலையில் படுக்க வைத்து உலக்கையை அவளுக்குப் பக்கத்தில் வைத்தார் கீதா.

"பெரியம்மா...இதைக்கொண்டு இப்போ நான் உங்க மண்டையை உடைக்க போறேன் பாருங்க, ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க" என்ற மகதி, வேகமாகத் தன் அறையிலிருந்து வெளியே வரப் பார்த்தவளின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் ஓரமாக அமர வைத்தார் கீதா.

மகதி கோவத்தின் உச்சிக்குச் சென்றவளுக்கு இந்தச் சடங்கு சாம்பரதாயம் எல்லாம் பிடிக்காமல் போனது.

வேறு வழியே இல்லாமல் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு மகதி அமைதியாக இருந்தவளுக்கு மறுநாள் தண்ணீர் ஊற்றும் சடங்கும் நடந்தது.

இந்த நன்னாளில் மகதியின் வீட்டுக்கு வர்மனின் தந்தை ராஜனும் வருகை தந்துருக்க, மகதியின் வீடே அக்கம் பக்கத்தினர்களால் நிரம்பி வழிந்தது.

மகதியின் தாய்மாமன் வெளிநாட்டில் இருந்ததால், வர்மனின் தந்தை ராஜன் தான் மகதிக்கு முறைப்படி எல்லா சடங்குகளையும் செய்தார்.

நேற்று வரை பாவாடை சட்டையில் வளம் வந்த சிறுமி மகதி. இன்று புடவையில் பெரிய பொண்ணை போலக் காட்சியளித்தாள்.

மகதிக்கு அன்றைய நாள் சடங்கு நல்ல விதமாக முடிந்தது.

மறுநாள் காலை விடிந்ததும் ராஜனும் மாயனும் மும்பை வந்த நினைவு மட்டுமே வர்மனுக்கு இருந்த நிலையில்,

எந்தப் புள்ளியில் மகதிக்கு வர்மன் மீது காதல் உணர்வு ஏற்பட்டு இருக்க கூடும் என்று இந்த நொடி யோசித்து பார்த்த வர்மன், பத்து வருடத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகளின் நினைவுகளிலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தவனின் கையில் மகதியின் கைக்குறிப்பு புத்தகம் மட்டுமே இருந்தது.

நீண்ட நேரம் கடந்தும் காரில் அமர்ந்து இருந்த வர்மன் வீட்டுக்குள் வராமல் இருக்க,"என்ன வர்மா...டைரியை முழுசா படிச்சியா?"என்று கேட்டான் மாயன்.

"மாயா... என்னடா இதெல்லாம்! இந்தப் புத்தகம் முழுதும் என்னைப் பற்றிய நினைவுகள் மட்டும் தான் டா இருக்கு, ஆனா மகதி எப்படிடா என்னை இந்த அளவுக்குக் காதலிக்க முடியும்!, அப்படி!..... அப்படி நான் எந்த விதத்துல டா அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தேன்!?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.

"நீ எதுவும் பண்ணல வர்மா!
மகதி உன்னை இந்த அளவுக்கு நேசிக்க நானும் ஒரு காரணம்"என்ற மாயனை கேள்வியாகப் பார்த்தான் வர்மன்.

"உனக்கு நினைவு இருக்கா வர்மா... அன்னைக்கு மகதிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்துச்சு தானே! அப்போ மகதியோட friends வந்து இருந்தாங்க. அதுல யாரோ ஒரு பொண்ணு,
ஏஜ் அட்டென்ட் பண்ணதும் முதல்ல எந்த ஆம்பளையை பார்க்குறோமோ அவங்கள தான் நம்ம கல்யாணம் பண்ணிப்போம்னு விளையாட்டா மகதிகிட்ட சொல்லி இருக்காங்க,

அந்த ஒரு வார்த்தையில மகதிக்கு உன் மேல இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு இருக்கு" என்று மாயன் சொன்னதும், வர்மனின் விழிகள் ஆச்சிரியம், குழப்பம் என்று பல உணர்வுகளை வெளிப்படுத்தியது.
எனக்கு வர்மனை பிடிக்கும் நல்ல ஆண்மகன். மாயன் 😂சிரிப்பு தான் 👌மகதிக்கு crush தான்
 
New member
Joined
May 2, 2025
Messages
17
சூப்பர் அக்கா வர்மன் இயல்பா செஞ்ச எல்லாத்தையும் மகதி காதலின்னு நினைச்சுட்டா போல போதாக்குறைக்கு மாறன் வேற என்னமோ பண்ணி இருக்காரு பாப்போம் மறுபடியும் என்ன கதை சொல்ல போறீங்கன்னு கேட்போம் 😂😂
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
20
இனியாவது மகதி காதல் வர்மாக்கு புரியுமா.? வர்மராஜன் நல்ல பையனா இருக்கான். நந்தினி mayan காதல் அப்போவே இருக்கா. ஆனா இப்போ ஏன் இவ்ளோ சண்டை
 
Member
Joined
May 9, 2025
Messages
35
இனியாவது மகதி காதல் வர்மாக்கு புரியுமா.? வர்மராஜன் நல்ல பையனா இருக்கான். நந்தினி mayan காதல் அப்போவே இருக்கா. ஆனா இப்போ ஏன் இவ்ளோ சண்டை
Sanda errundha dhane kadhal varum
 
Member
Joined
May 9, 2025
Messages
35
Is Mahadhi love is infatuation. Varman was a nice boy when he was young.
 
New member
Joined
Feb 8, 2025
Messages
22
அருமையான கதை 👌வர்மா மகதி காதல் சேரனும் ஆனால் அருண் யார்?
 
New member
Joined
Feb 8, 2025
Messages
25
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe புரிதல் அருமை.❤❤❤❤❤❤❤❤❤❤
 
New member
Joined
Feb 8, 2025
Messages
21
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 
Top