• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 35

Joined
Jan 15, 2026
Messages
75
விவாதக் காதல் – 35


“இருங்க இருங்க. அவங்க பொய் சொல்றாங்களா, இல்ல உண்மை சொல்லுறாங்களான்னு இப்போ தெரியும் பாருங்க.” ஆண்டாள் சொன்னதும், “என்ன தெரியும்?” என்று எரிச்சலாகக் கேட்டார் வனிதா.

“டேய்! சிவா. நீ போய் ரெண்டு பேப்பர்ல குங்குமமும், திருநீறும் கொண்டு வந்து, ஊர் மக்கள் முன்னாடி காட்டி, அந்த ரெண்டு பிரசாதத்தையும் மடித்து கடவுள் விக்ரகத்துக்கு முன்னாடி போடு. அப்புறம் ஒரு குழந்தையை அழைச்சி வந்து, அந்த ரெண்டு பொட்டலத்துல இருந்து ஒரு பொட்டலத்தை எடுக்கச்சொல்லு. அப்போ அந்த குழந்தை சரியா குங்குமத்தை எடுத்துட்டா, சசி சொல்லுறது சரி. இந்த சமயத்துல இவங்க இப்படி ஒரு கேவலத்தை பண்ணமாட்டாங்கன்னு நம்புவோம்” என்று ஆண்டாள் சொன்னதும் கீதா தன் பங்கிற்கு எதோ யோசித்தார்.

“அப்போ திருநீர் வந்தா?” என்ற நாராயணனிடம்,

“அதெல்லாம் வராது.” என்றார் கீதா.

“அத்தை...” என்ற கொடிவீரனிடம்,

“அட இருங்க மருமகனே. நீங்க ரெண்டு பேரும் தான் தப்பு பண்ணலையே அப்போ நமக்கு ஏன் பயம்?”

“பாட்டி இங்க என்ன நடக்குது? நீங்க சும்மா நின்னு வேடிக்கை பார்க்குறீங்க. எனக்கு எதுவுமே சரியாப்படல. இந்த கீதா அம்மா என்னன்னவோ உளறிட்டு இருக்காங்க” என்று பாட்டியை சத்தம் போட்டாள் மகிழினி.

“அதெல்லாம் சொன்னாதான் சித்ரா நம்ம இங்க இருந்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம வீட்டுக்கு போக முடியும். அதனாலதான் கீதா இப்படி ஒரு பிளான் போட்டுருக்கா.”

“இருந்தாலும் பாட்டி. எனக்கு இந்தப் பேச்சு பிடிக்கலை” என்று முகம் சுளித்தாள்.

“நீ சும்மா இரு. அவங்க எதாவது பண்ணி சசி கல்யாணத்த நல்லவிதமா முடிக்கட்டும். அப்போ தான் நிம்மதியா நம்மளும் ஊர் போய் சேர முடியும்” என்றார்.

ஆண்டாள் சொன்னது போலவே, சாமி சன்னதி முன் இரண்டு பொட்டலங்களை மடித்து போட்டவன், வேணுவை அழைத்து அதில் ஒன்றை எடுக்க, கேவி & சிஎம். இங்க நடக்கும் செயல்களை கண்டு குழம்பிய வண்ணம் நின்று இருக்க, பொட்டலத்தை பிரித்து பார்த்த ஆண்டாள் கையில் குங்குமம் தென்பட்டது.

“இவங்க குடும்பம் சொன்னது போல, இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. அதனால இப்படி ஒரு அசிங்கத்தை இவங்க கோவில்ல பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு, அந்தக் கடவுக்ளே நமக்கு தெரிய வச்சிட்டாரு. அதனால இந்தக் கதையை இங்கேயே மறந்துட்டு, எல்லோரும் போய் அவங்கவங்க வேலையை பாருங்க. டேய்! சிவா. விடிந்தா உனக்குக் கல்யாணம். இன்னும் சில மணிநேரம் தான் இருக்கு. போ போய் தூங்கு. எல்லோரும் கிளம்புங்க. சசி. இனி ஒரு வார்த்தை கல்யாணம் வேணான்னு எல்லாம் சொல்ல கூடாது புரியதா?” என்றாள் ஆண்டாள்.

“சாரி அண்ணி.”

“ம்... பரவாயில்ல. உன் தம்பியையும் அந்ப்த பெண்ணையும் அழைச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பு. முகூர்த்த நேரத்துக்கு நீங்க சரியா இங்க இருக்கனும்.”

“ம்... சரி அண்ணி.”

“தேங்க்ஸ் அக்கா.” என்றான் சிவா.

“சித்ரா வா போகலாம். டேய்! தம்பி வாடா.” என்றதும் கொடிவீரன் சம்மதமாய் தலையசைக்க, “கீதா அத்தை வாங்க. அம்மா பாட்டி வாங்க போகலாம்” என்றாள் சசி.

"எல்லோரும் கிளம்புங்க” என்று ஆண்டாள் சொல்ல, வனிதா. நாராயணனை பார்த்து கண்ஜாடை காட்டியதும்.

“ஒரு நிமிஷம் எல்லோரும் நில்லுங்க” என்று நாராயணன் சொல்ல, அனைவரும் அதே இடத்தில் நின்றனர்.

“சரி. நானும் கூட இந்ப்த பையனுக்கும், இந்தப் பொண்ணுக்க்கும் கல்யாணம் நடக்கப்போகுதுன்னு நம்புறேன். ஆனா, அதுக்கு முன்னாடி இவங்க இந்த ஊருக்காக ஒரு காரியம் பண்ணனும்” என்றதும் வனிதா மகிழினியை முறைக்க.

“என்ன பண்ணனும்?” என்று கேட்ட கொடிவீரன் அருகில் வந்த நாராயணன்,

"ஆண்டாளு. நாளைக்கு உன் தம்பி சிவாக்கு கல்யாணம் நடக்கப்போகுது தானே. அதுக்கு இந்த சசி வீட்டுல தானே செலவு பண்ணிருக்காங்க. அப்போ ஏன் இவங்க நாலு பேர் கல்யாணமும் ஒண்ணா ஒரே மேடையில நடக்கக்கூடாது” என்று நாராயணன் தனக்கு சாதகமாக அடுத்த திட்டத்தை போட்டு கொடிவீரனை பார்த்து முறைக்க.

"என்ன கல்யாணமா?” என்று விழி பிதுங்கியவளின் கண்களை பார்த்து, கொடிவீரனும் அதிர்ச்சி அடைந்த நிலையில் நின்று இருந்தான்.

"ஆமா கல்யாணம் தான். நாளைக்கு சசி சிவா கல்யாணம் நடக்கும்போது, இதோ இந்த கொடிவீரனுக்கும், சித்ரமகிழினிக்கும் கல்யாணம் முடிந்தாகணும். இல்லையா நாங்க சொன்னது போல, இவங்க கண்டிப்பா தீச்சட்டி எடுத்தே ஆகணும். அதுவும் நிர்வாணமாக” என்று வனிதா சொல்ல,

“அதுக்கென்ன. என்னைக்கோ நடக்கப்போற கல்யாணம் தானே. அது நாளைக்கு நடக்கும்” என்று ஆண்டாள் வாக்குறுதி தர,

“இல்ல. அதெல்லாம் நடக்காது” என்றாள் மகிழினி.

“ஆமா எங்க கல்யாணம் எல்லாம் நாளைக்கே நடக்காது” என்று கொடிவீரனும் சொல்ல,

“அப்போ நீங்க ரெண்டுபேரும் உள்ள போய், கேவலமான செயலை தான் பண்ணோம்னு ஒத்துகிட்டு, நாங்க தந்த தண்டனையை ஏத்துக்கோங்க.” என்று மீண்டும் நாராயணன் நயவஞ்சகமாக சொன்னதும்.

“அதுக்கு எல்லாம் அவசியம் இல்ல. நாளைக்கு என் பேத்தி சித்ராவுக்கும், கொடிவீரனுக்கும், சசி, சிவாவுக்கு நடக்க இருக்கும் அதே முகூர்த்ததில் கல்யாணம் நடக்கும்” என்று மகிழினியின் பாட்டி சொல்ல, கேவி, சிஎம் அதிர்ச்சியில் நின்று இருந்தனர்.

“அதான் சொல்லிட்டாங்க இல்ல. எல்லோரும் கிளம்பிப்போங்க. நாளைக்கு என் தம்பிக்குக் குறித்த அதே முகூர்த்தத்துல, சசியோட தம்பிக்கும் கல்யாணம் நடக்கும்.” என்று ஆண்டாள் சொன்னதை கேட்டு அங்கே கூடி இருந்த அனைவரும் சூரியனை கண்ட பணியை போல மறைந்து போயினர்.

“பாட்டி. என்ன நினைச்சுகிட்டு நீங்க சபையில இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிங்க?” என்று மகிழினி கடுங்கோபத்துடன் கத்த,

அவளின் கரங்களை பிடித்த கீதா, “இங்க பாருமா. நடக்குறது எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ. நீயும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருப்ப. உன்னை எங்களுக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் என் மாப்பிளைக்கும் கல்யாணம் நடக்கணும்னு நாங்க எல்லாம் ஆசைப்படுறோம். இந்த ஒரு சந்தர்ப்பத்தை அந்த ஆண்டவனா ஏற்படுத்தி தந்து இருக்கான்னு நம்ம நினைச்சிப்போம். அதனால, நீ எதைப்பற்றியும் கவலைப்படாம. இந்தக் கல்யாணத்துக்கு சம்மந்தம் சொல்லு தாயி.” என்று சொன்னார்.

அவர் கையை தன் வசம் இருந்து விடுவித்த மகிழினி, “இல்லிங்க. நான்...” என்று மகிழினி ஏதோ சொல்ல வரும் முன்பு.

“தம்பி என் பேத்தியை கல்யாணம் பண்ணிக்கோப்பா.” என்று கெஞ்சிய பாட்டி கொடிவீரனின் காலில் யாரும் எதிர்பாராத விதமாக விழ, அதைப் பார்த்த மகிழினியின் கண்கள் கோவத்தில் சிவந்தது.

“சித்ரா நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலைனா, என் மக கல்யாணம் நடக்காதுமா” என்று புலம்பிய வண்ணம் ஜெயா நெஞ்சில் கை வைத்து கீழே சரிந்து அழ, கீதா ஆறுதல் சொன்னார்.

ஆளுக்கொரு பக்கம் அவர்கள் அழுது புலம்பிக்கொண்டு இருக்க, வனிதா செய்த சூழ்ச்சியால், கொடிவீரனும் மகிழினியும் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றிருந்தார்கள்.

சில நொடிகள் யோசித்த மகிழினி கண்கள் மூடி பெருமூச்சியை வெளியேற்றி, "இவருக்கு சம்மதம்னா, நானும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றவள் மறுவார்த்தை பேசாமல் கோவில் வாசலில் இருந்து நேராக, இரண்டு தெரு தள்ளி அமைந்துள்ள வீட்டுக்குள் நுழைந்து. தனக்கு தரப்பட்ட அறைக்குள் சென்று கட்டிலில் படுத்திருக்க, அவள் கண்களில் கண்ணீரும் வற்றிப்போனது.
 
Joined
Jan 15, 2026
Messages
75
கோவில் வாசலில் நின்று இருந்த மகிழினியின் பாட்டி, தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, மன நிறைவோடு கொடிவீரனின் அருகில் வந்தவர், "தம்பி. என் பேத்தி சம்மதம் சொல்லுவான்னு நான் நினைத்து கூட பாக்கல. உங்க கல்யாணம் நாளைக்கு சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்தாலும். உனக்கு அவதான். அவளுக்கு நீதான்னு அந்த கடவுள் ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருக்கான். அதான் இப்படி எல்லாம் நடந்திருக்கு போல” என்று கவலை மறந்த மகிழ்ச்சியோடு சொன்னார்.

"ஆமாடா தம்பி. கெட்டதுல ஒரு நல்லது போல. இந்த வனிதா பண்ண கேவலமான காரியத்தால உனக்கு நீ ஆசைப்பட்ட பொண்ணோட கல்யாணம் நடக்கப்போகுது” என்று சந்தோசத்தில் தன் தம்பியின் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள்.

"வீரா. உன் அக்கா கல்யாணம் நின்னு போயிடுமான்னு நான் கூட பயந்தே போயிட்டேன்பா. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு. என் மகள் கல்யாணமும், என் பையன் கல்யாணமும் ஒரே நேரத்துல நடக்கணும் என்பது தான் விதிபோல” என்று ஜெயா ஒருபுறம் தன் மனதில் உள்ள எண்ணத்தை சொல்ல,

"எப்படியோ என் தம்பி ஆசைப்பட்டது போல, என் கையால தாலி எடுத்து கொடுத்து என் மருமகனுக்கு கல்யாணம் நடக்கப்போகுது. கீதா ஹாப்பி அண்ணாச்சி” என்று கீதா ஒருபக்கம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க.

"அக்கா. இங்க என்ன நடக்குது? இந்த மாமா தான் என் அத்தையை கல்யாணம் பண்ணிக்க போறாங்களா” என்று வேணு கேட்டதும்,

கொடிவீரன் யாரிடமும் ஏதும் பேசாமல், நடையில் வேகத்தை கூட்டியவனாக இவர்களுக்கு தரப்பட்ட வீட்டுக்குள் நுழைந்து மகிழினி இருக்கும் அறையின் கதவை தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த தருணம், அவள் முதுகு காட்டி கட்டிலில் படுத்திருந்தாள்.

கதவை திறக்கும் நேரத்தில் சோர்வாக சிணுங்கியவளை பார்த்தவன், "ஏங்க ஏங்க ப்ளீஸ் திரும்பாதீங்க. நான்... என்... என்னால உங்க முகத்தை பார்த்து என் மனசுல இருக்குறத எல்லாம் சொல்ல முடியாது. இன்னைக்கு கோவில்ல இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு நம்ம ரெண்டு பேருமே நினைச்சு பார்த்திருக்கமாட்டோம். ஆனா, அந்த வனிதா பண்ண காரியத்தால நம்ம செய்யாத தப்புக்கு அசிங்கப்பட வேண்டியதா போச்சு.”

“சரி. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இந்த விஷயத்தால வேற வழியே இல்லாம, உங்க பாட்டி சொன்னாங்க. என் அக்கா கல்யாணம் நின்னு போயிடும்னு, என் அம்மா சொன்னாங்க. அதே மாதிரி ஊர் உலகம் நம்மள தப்பா பேசுவாங்கனும், நம்ம சுத்தமானவங்கனும், நிரூபிக்கதான் நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கீட்டீங்கன்னு எனக்கு தோணுது. ப்ளீஸ் அப்படி இருந்தா தயவு செய்து சொல்லிடுங்க. என் உசுரை கொடுத்தாவது நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்.”

“ஏன்னா. உங்க மனசு முழுக்க உங்க வீரன் தான் இருக்காருன்னு எனக்கு நல்லாவே தெரியும். பட். ஒருவரை நேசித்த இதயம் வேறொருவரை ஏத்துக்கக்கூடாதுன்னு எல்லாம் கட்டாயம் இல்லையே. அப்படி நீங்க என்னை ஏத்துகிட்டு நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொன்னா, நான் உங்க கழுத்துல தாலி கட்டுறேன். அப்படி இல்லையா, இந்த ஊர் என்ன பரிகாரம் பண்ண சொன்னாலும் நீங்க அதை பற்றிக் கவலைப்படாதீங்க. நான் முன்னாடி சொன்னதுபோல, என் உசுரை தந்தாவது இந்த கல்யாணத்தை நான் நிறுத்துறேன். ஆனா, ப்ளீஸ் உங்க முழு சம்மதம் இருக்குற பட்சத்துல தான் நாளைக்கு நம்ம கல்யாணம் நடக்கும்” என்று சொன்ன கொடிவீரன், இதுவரை மகிழினியின் முகத்தைப் பார்க்காது, தரையைப் பார்த்து உளமாற பேசியவன், அவள் இருக்கும் திசை பக்கம் கூட பாராமல், தன் மனதில் இருந்த விஷயங்களை எல்லாம் அவளிடம் தெளிவாக சொல்லிய நிம்மதியில் அந்த அறையில் இருந்து வெளியே வந்தான்.

அறை வாசலில் கீதாவும், சசியும் நின்றபடி இவன் பேசியதை கேட்டுக்கொண்டு இருக்க, அவர்களைப் பார்த்தவன், "நான் அவங்கிட்ட எல்லாமே தெளிவா பேசிட்டேன். அவங்க மனசார இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னா தான், நான் அவங்கள கல்யாணம் பண்ணிப்பேன். அப்படி இல்லையா. நாளைக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லன்னு நானே நேரா போலீஸ் ஸ்டேஷன் போய், இன்னைக்கு இங்க எங்களுக்கு நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து சொல்லி அந்த வனிதா மேல கம்பளைண்ட் தந்துடுவேன்” என்று சொன்னான்.

"ஆனா, என்ன ஒன்னு என் அக்கா கல்யாணம் நின்னுடும்” என்று சொன்னபடி ஹாலில் நிம்மதி இல்லாமல் அமர்ந்து இருக்கும் தன் அம்மா மற்றும் மகிழினியின் பாட்டியை பார்த்து, மகிழினியின் முடிவுக்காக. நாளை முகூர்த்த நேரம் வரும்வரை காத்திருக்கப் போவதாக தன் செயல்களால் தெரியப்படுத்தியவன், வேகமாக மொட்டை மாடிக்கு சென்று விட, வேணு ஹாலில் போட்டு இருந்த சோபாவில் படுத்துக் கண்கள் மூடினான்.

சசியும், கீதாவும், மகிழினி இருக்கும் அறைக்குள் நுழைய, சுவற்று பக்கம் திரும்பிய வண்ணம் படுத்திருந்தவள், கவலையில் அவளை அறியாமல் கண்கள் மூடி பாதி உறக்கத்தில் இருந்தவளின், காதில் உள்ள மெஷின் இயங்கப்படாத காரணத்தால், கொடிவீரன் பேசிய எந்த ஒரு வார்த்தையும் கேளாமல் உறங்கிக்கொண்டு இருந்தவளை பார்த்தார்கள்.

“என்ன சசி இது? சித்ரா தூங்கினது தெரியாம, உன் தம்பி இவ முகத்தை பார்த்து சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லாம் முதுகை பார்த்து சொல்லிட்டு போய் இருக்கான்.”

“ஆமா அத்தை. ஐயோ இருங்க நான் சித்ராவை எழுப்புறேன்.”

“ஏய் இரு இரு. இப்போ ஏன் இவள நீ எழுப்பப்போற?”

“இல்ல அத்தை. தம்பி இவகிட்ட பேசினதை இவ கேட்க லையே. சொன்னால் தான தெரியும்” என்றாள் சசி.

“இவ கேக்காம போனதும் நல்லதுதான்.”

“என்ன அத்தை சொல்லுறிங்க?”

“யாருமே எதிர்பார்க்காம தான் இன்னைக்கு சித்ராவும், கொடிவீரனும் பஞ்சாயத்துல இப்படி ஒரு சூழ்நிலையில நிக்க வேண்டியதா போச்சு. ஆனா, கெட்டதுல ஒரு நல்லது போல. சித்ராவே அவ வாயால உன் தம்பிக்கு சம்மதம்னா, இவளும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மந்தம்னு சொல்லி இருக்கா. இவ அப்படி சொன்னதயே என்னால நம்ப முடியல. அப்படி இருக்கும்போது. இப்போ உன் தம்பி பேசின சினிமா வசனத்தை எல்லாம் இவ கேட்டான்னு வையு, போடா இவனேன்னு சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்தினாலும் ஆச்சிரியப்படுறதுக்கு இல்ல” என்றார் கீதா.

”என்ன அத்தை சொல்லுறீங்க.?”

“ஆமாடி. இந்தப் பொண்ணு எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்குட்டான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.”

“ம்... ஆமா அத்தை. எனக்கும் அதே சந்தேகம்தான். ஆனா, இந்த சூழ்நிலையில இவங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லையே. நீங்க வேற சும்மா இல்லாம சபையில வச்சி, சித்ராவை கொடிவீரனுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணிவைக்க நம்ம பிளான் பண்ணதுபோல சொல்லிட்டீங்க. அந்த நாராயணன் இதான் சாக்குனு இவங்க கல்யாணமும், எங்க கல்யாணம் கூடவே நடக்கட்டும்னு சொல்லிட்டான். போதக்குறைக்கு என் அம்மாவும், சித்ராவோட பாட்டியும், புலம்புவதைப் பார்த்து இவ இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்கா போல. ஆனா, என் தம்பி என்னடானா, இவளுக்கு எள்ளளவும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா கூட, கல்யாணத்தை ஸ்டாப் பண்ணிடலாம்னு சொல்லுறான். ஷப்பா... எனக்கு இப்பவே கண்ணை கட்டுது அத்தை.”

“ஏய் விடுடி. நீ பயப்புடுற அளவுக்கு எல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. இந்த சித்ரா தான் என் தம்பி மகனுக்கு பொஞ்சாதி. அதை அந்த கடவுள் ஏற்கனவே முடிவு பண்ணதால தான், சித்ராவை அசிங்கப்படுத்த கேவலமாக திட்டம் போட்ட, வனிதா மூக்கை உடைக்கிற மாதிரி, நாளைக்கு அவ எதிர்லயே சித்ரா கழுத்துல நம்ம கொடிவீரன் கட்ட போகும் தாலி ஏறப்போகுது.”

“ம்...” என்று சசி சொல்ல,

“சோ, இனிமே நடக்குறது எல்லாம் அந்த ஈசனின் அருள் என்று நம்பி, நம்ம அவன் காட்டுற வழியில பயணிப்போம். போ. இப்போ போய் கொஞ்ச நேரம் நிம்மதியா படு. இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்த நேரம் வந்துடும்.” என்று கீதா அவர்கள் சொன்னதும், சசி ஏதோ ஒரு பயத்தை சுமந்தபடியே வேறொரு அறைக்கு சென்று கட்டிலில் சரிந்தாள்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top