• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
வினை தீர்க்கும்


"என்னை விட்டுவிடு. நீ யார்? எதற்கு என்னை துரத்துகிறாய்?” மேல் மூச்சு வாங்க வாங்க அவளின் மார்புக்கூடு ஏறி இறங்கியது. எதிரில் நின்ற உருவமோ அவளையே உருத்து பார்த்துக் கொண்டிருந்தது. அவளுக்கு என்னவோ நிழலாக தான் தெரிந்தது எங்கிட்ட வராத என்கிட்ட வராது என்று கத்திக் கொண்டிருந்தாள் சன்மதி.

என் கைகளை அந்த நிழல் என் தலைக்கு மேலே உயர்த்தி இறுக்கி பிடித்து என் உடைகள் ஒவ்வொன்றாக அதன் பார்வையாலேயே உருவி தூக்கி போட்டது. என் அங்கமெல்லாம் தனலாய் எறிந்தது.

அதன் பார்வை என் மீது படப்பட எனக்கு வெறுப்பு உண்டானது. அதன் கண்கள் காம கொடூரமாய் என் மேனியை அங்க அங்கமாய் பார்க்க பார்க்க என் இதயம் துடித்தது.

"என்னை விட்டுவிடு என்னை விட்டு விடு என்று கத்திக் கொண்டிருக்க, யாரோ என்னை தட்டி எழுப்புவது போல் இருந்தது.

என்னை பிடித்திருந்த நிழல்தான் விட்டுவிட்டது என்று கண்ணைத்திருந்து பார்க்க, அம்மா அறையின் வாசலில் குழம்பு கிண்டும் கரண்டியோடு நின்றிருந்தார்.

"ஏண்டி விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது! வேலைக்கு போக வேண்டாமா? என்னவோ வேணாம் விட்டுடு என்று கத்திட்டு கிடக்குறவ.

"எழுந்திருடி... என்று கத்திவிட்டு அம்மா அடுப்பாங்கரைக்கு சென்று விட்டாள்.

எழுந்து பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்து வேலைக்கு கிளம்பினேன். இதுபோலவே ஒருவாரம் தொடர்ந்தது.அதன்பிறகு தான் அவளின் பயத்தை கண்டறிந்தனர்.

இவளுக்கு இங்க நடந்தது போல் இன்னொருவருக்கும் அதே நேரத்தில் அங்கே

வான்மதி தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு தன் பக்கத்தில் கெட்ட வாடை காற்றில் வருவது போல் இருந்தது .

மூக்கின் அருகில் குமட்டிக் கொண்டு வந்தது .அவளின் வயிற்றின் உள்ளே இருந்த சிறுகுடலே வெளியே வந்து விடும் போல அவளுக்கு தோன்றியது.

"அந்த நாற்றத்தை பொறுக்க முடியாமல், எழுந்திருக்கலாம் என்றால் உடம்பை அசைக்கவே முடியவில்லை. தன் மேல் பாரமான ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தது.

தொட்டுப் பார்க்க!.. மூன்று நாள் அழுகிய முட்டை, இரண்டு நாள் கெட்டுப் போன பிரியாணி சாப்பாடில் கை வைத்தால் எந்த அளவிற்கு வாடையும் அருவருப்பு தன்மையும் தோன்றுமோ அதுபோல் இருந்தது.

கத்தலாம் என்று பார்த்தால் வாயடைத்து போனது .நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது போல் தெரிந்தது. வார்த்தைகள் வரவில்லை .

"நானும் கத்தி பார்க்க முயற்சித்தேன்!!! மூச்சு விடுவதற்கு அவ்வளவு சிரமமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் போனால், என் மூச்சை அடங்கிவிடும் !!போல அழுத்தியது .

தொம்மென்று எங்கேயோ பள்ளத்தில் விழுந்தது போல் இருந்தவள் கண்ணை விழித்துப் பார்க்க கட்டில் இருந்து கீழே விழுந்தாள்.

கட்டிலில் அவள் தங்கை அருந்ததி உட்கார்ந்து கொண்டு இவளை கோபத்துடன் எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்

என்ன நடந்தது !என்று எனக்கு கனவில் புரியவில்லை. இவள் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாள்? என்று விழுந்த நானே மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்து அவளின் தோலை தொட.

கையை வைத்த கொன்னுடுவேன் உன்னை. நீ எல்லாம் மனுஷியா பக்கத்தில் தூங்க முடியுதா..! அடிக்கடி இதுபோல் செய்றியே இரு அம்மா கிட்ட உன்னை சொல்றேன் என்று கூறியவளை ஏதேதோ சமாதானம் சொல்லி அவளை சாந்தப்படுத்தினாள்.இருந்தாலும் சொல்லிவிட்டாள்.

இரவு வேலையை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் மதிவதனி.

எப்பொழுதும் வரும் நேரம் தான் இது. நைட் ஷிப்ட் என்றாலே!! இப்படித்தான் காலையில் இருந்து இரவு பத்து மணி பதினோரு மணி வரை ரோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்கே செல்லும் என்று தெரியாது.

தெருவில் நாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக படுத்துக் கொண்டிருக்கும். மின்கம்பங்களில் பல நேரங்கள் விளக்குகள் எரிவதில்லை. சில நேரங்களில் எரியும்.

பெரிய பெரிய வீடுகளில் முன்பு போட்டிருக்கும் லைட்டுகள் மூலம் ரோட்டில் வெளிச்சம் தெரியும்.

அவள் நடந்து வரும் ரோட்டில் பழக்கடைகளும், ஹோட்டல்களும் இருப்பதால் கடைகளின் முன்னே காய்ந்து போன இலைகள், குப்பை தொட்டிகள் ,ஹோட்டல் பக்கம் அங்கே முழித்திருந்த மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.

பழங்கள் உள்ள பகுதியில் வீனா போன வாழைப்பழ தோள்கள் அதன் கொண்டுவந்த அட்டை பெட்டி பேப்பர்கள் , இலைகள் போன்றவை குப்பை தொட்டியில் கிடக்கும் .

ஒரு சில நேரம் அந்தப் பக்கம் நாற்றமும் வந்து சேரும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் மதிவதனி.

மதிவதினையும் அவளது தோழியும் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து கேட்டை திறந்து உள்ளே சென்று அவள் கேட்டை தாழ்ப்பால் போட்டுவிட்டு மாடிப்படி ஏறினாள். கீழே வீட்டு ஓனர் குடியிருந்தனர்.

வீட்டு ஓனர் கொஞ்சம் கரரான பேர் வழி. நேரம் கெட்ட நேரத்தில் வரக்கூடாது என்று சொல்பவர். வேலைக்கு வந்த போது புதிதில் வேலை விட்டு வரும் நேரம் ரொம்ப கஷ்டப்பட்டாள் .

இப்பொழுது அவருடைய மனைவி எடுத்து சொல்லி புரிய வைத்து அவரை அடக்கியுள்ளார்.

அதுபோல தான் இன்றும் அவள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவளை ஏதோ யாரோ பின் தொடர்வது போலவே தோன்றியிருக்கிறது.

'இரவில் தனியாக வருவதால் அப்படி தோன்றி இருக்கலாம் !என்று நினைத்து வேக வேகமாக நடந்து வந்துவிட்டாள் அறைக்கு.

அறைக்குள் வந்தவளுக்கு திடீரென..! கரண்ட் கட் ஆகியதால் தூக்கி வாரிப்போட்டது. நெஞ்சுக்கூடு பட பட வென்று அடித்துக் கொண்டது..!.

ஏன்?? ஏன்?? இப்படி ஆகிறது..! கீழே வேற வீட்டு ஓனரம்மாவை கூப்பிடலாம் என்றால் அவர்கள் ஊருக்கு சென்றிருக்கிறார்களே..!,

இந்த நேரம் பார்த்து தான் ! இந்த மஞ்சுவும் ஊருக்கு போகணுமா..? என்று நினைத்துக் கொண்டே, மெதுவாக போனை ஆன் செய்து அதில் இருந்த லைட்டை ஒளிர விட்டு அங்கம் இங்கும் தேடித் தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் எடுத்து பொருத்தினாள்.

எப்பவும் புழங்கின இடம் தான் என்றாலும் ! இன்று என்னவோ அவளுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது.

"மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு அதை மற்ற இடங்களுக்கும் பரவுவது போல இருக்க அருகில் உள்ள மேசையின் மீது வைக்கலாம்!!! என்று திரும்பியவளின் அருகில் சூடான மூச்சுக்காற்று வீசுவது போலவும்!! தன் பெயரைச் சொல்லி அழைப்பது போலவும் இருந்தது..

மேலும் இருந்த பயம் அதிகரித்தது .திரும்பாமலே முகம் வெளிரிப்போய் இருக்க ,என்னதான் ஆகிவிடும் என்று நினைத்து திரும்பியவளுக்கு அந்த கோர முகத்தை பார்த்து மயங்கிப்போய் விழுந்தாள்.

ஏன் ?இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாக வந்து மிரட்டுகிறது? ஏன் பயமுறுத்துகிறது? எதனால்?..



செய்யூர் கிராமம்

**********

செய்யூர் காளியம்மன் கோவில் பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

"தொண்டர்கள் தான் அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு, 'பெரியவருக்கு பதிலாக ,அவருக்கு அடுத்ததாக இருந்தவர் தீபாரதனையை காண்பிக்க..! கோவிலை சுற்றி காற்றும் தூசியும் வேகமாக வீசி அடித்தது.

அங்கிருந்த மக்கள் அனைவரும் நடுங்கி போய் அமர்ந்து இருந்தார்கள். அவர்களின் முகங்களில் எல்லாம் பயம் தொடர்ந்து இருந்தது. காற்றும் தூசியும் அடித்ததால் கண்களில் இலவசமாக அழுக்குகள் சேர்ந்து கொண்டது கண்ணீரை தானாகவே கொட்ட ஆரம்பித்தன கண்கள்.

காளியம்மனைப் பார்த்தவாறுப் படுத்திருந்த பெரியவர் முகத்தில் ,ஏன் இப்படி? என்ற கேள்வியோடு காளியைப் பார்த்தார்.

"ஊர் பெரியவர்களும், தொண்டர்களும், ஐயாவிடம் வந்து நிற்க !…

"ஊர் பெரியவர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருட பூஜைகள் மட்டும், ஏன் இப்படி தடங்கல் ஏற்பட்டது ஐயா .??என்று கேட்டார்.

என்ன குறை வந்துவிட்டது !!எல்லாம் சரியாக தானே செய்து முடித்தோம். எப்படி எதுவும் தெரியாமல் எதற்கு இந்த முன்னெச்சரிக்கை!!!.. என்று இன்னொருவர் பெரியவரை பார்த்து கேட்டார்.

சக்தி கொண்ட தீய சக்தி வெளிய வந்து இருக்கு. அவை தொந்தரவு செய்தவர்களுக்கு பழி வாங்க வந்திருக்கு.

அதை ஆரம்பித்திலேயே அடக்கி வைக்கணும் .இல்லை என்றால் அது நினைப்பவர்களை பழிவாங்கி விட்டு தான் செல்லும் என்றார் பெரியவர்.

என்ன நடக்கப் போகிறது என்ற பயத்திலேயே மக்கள் காளிக்கு தீபாரதனை காட்டியதும் கும்பிட்டு விட்டு அவரவர்கள் வீடுகளுக்கு சென்றார்கள்.



மறுநாள் செய்யூரின் கிராமத்தில் உப்பிலி அப்பன் குடும்பத்தினர் என்று காலம் காலமாக அந்த பெயரை சொல்லி அழைத்து பெருமையை வாழ்ந்தார்கள்.

பெரிய குடும்பம் தான் அந்த குடும்பம். நடுக் கூடத்தில் அத்தனை பேரும் அமர்ந்திருந்தனர்.

ஆண்களின் முகம் யோசனையில் இருந்தது! பெண்களோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

"காத்தமுத்து', ஏன் அமைதியா இருக்க?? என்ன பிரச்சனை? என்று சொன்னால் தானே தெரியும் .

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தால், என்ன சொல்வது என்று அந்த வீட்டின் பெரியவர் வயதானவர் கேட்டார்.

அவருக்கு 20 வயது குறைவாக இருந்தவர் காத்தமுத்து என்றதும் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.

"அப்பா..! புள்ளைங்க மூணு பேரும் போன் போட்டாங்க. இரவு முழுக்க, "அவர்களை ஏதோ ஒன்று பயமுறுத்தி இருக்கிறது போல அப்பா, காத்தமுத்து.

"பெரியவரின் முகம் ',யோசனையில் ஆழ்ந்தது. ஏன் ?நீங்க அமைதியா இருக்கீங்க!!! என்று வயதான பெண்மணி ஒருவர் அவரிடம் கேட்க.

இல்ல பொம்பள பிள்ளைகளை மட்டும் விரட்டுவது, ஏன் இப்படி நடக்குது என்று தெரியலையே..! என்று யோசனையோடு அமர்ந்திருக்க ,வேகமாக உள்ளே நுழைந்தார்கள் மூன்று பெண்களும்.

"அம்மா, அப்பா” என்று அழைத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அவர்ளும் மதிவதனி, வான்மதி, சாருமதி வாங்கம்மா. மூணு பேரும் ஏன் இப்படி பயந்து கொண்டு வருகிறீர்கள்? எதுவும் ஆகாது கவலைப்படாதீர்கள்” என்று தைரியமூட்டினார் தாத்தா.

"இப்படி வாங்க. வந்து என் பக்கத்தில் உட்காருங்கள்” என்றதும் ,மூன்று பேரும் முகம் வெளிரிப் போய்!!! அவர்களின் காலுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டனர் தரையில்.

தாத்தாவும் பாட்டியும் பேத்திகளின் தலையில் தடவி கொடுத்துக்கொண்டு, ஏன்மா என்னாச்சுடா என்று அன்போடு விசாரிக்க.

மற்றவர்களும் , இவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..! என்று பயத்துடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
Administrator
Joined
Sep 3, 2024
Messages
157
காளிக்கோவிலில்,

மறுநாள் பெரியவரிடம் வந்த தொண்டு செய்பவர்கள் வணங்கிவிட்டு அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் அமர்ந்தனர்.

படுத்திருந்த பெரியவர் கண்ணை லேசாக திறந்து பார்த்துவிட்டு, என்ன?? என்று கேள்வியோடு அனைவரையும் பார்த்தார்.

"ஐயா.. என்ன நடக்குது? எதனால் இது போல் ஆனது? யார் இதற்கு காரணம்? என்று ஒருவர் கேட்டார்.

"யாரும் எதிர்பார்க்காமல் நடந்தது. ஆனால் என்ன செய்வது !!மனதில் பல ஆசைகளோடு இறந்த உயிர், இப்பொழுது பழிவாங்க வந்திருக்கிறது.

தெரியாமல் செய்தாலும், தவறு தவறுதான் என்று இயற்கை விதி. பூர்வ சென்ம விதி ,என்று ஒன்று உள்ளது.

" அதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அசம்பாவிதம் நடைபெறாமல் சிறு சிறு விபத்தோடு முடியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

"அந்த சீவன்களை ,'காளி ஆத்தாள்' தான் காப்பாற்ற வேண்டும். அதுவும் அவள் இருக்கும் இடத்தில் அவளை மீறி எதுவும் செய்ய முடியாது. அதனால் பயப்பட தேவையில்லை என்றார் பெரியவர்.

ஐயா.. இன்னொரு விசயம் அந்தப் பிரச்சனைக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியுங்களா?? என்றான் ஒருவன்.

பரிகாரம் செய்ய வேண்டும் என்று, இங்கே வருவார்கள் .

"அவர்கள் தான் பிரச்சனைக்கு உள்ளானவர்கள் ,அதனால் அமைதியாக இருங்கள்.

உப்பிலியப்பன் குடும்பத்தினர்.

என்னாச்சு கண்ணுங்களா ஏன் இப்படி பயந்து போய் வருகிறீர்கள் என்றார் பெரியவர்.

அதில் வான்மதி தான் தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு, நேற்று அப்பாவிடம் சொன்னோம் தாத்தா.

"தொடர்ந்து இது போன்று அசம்பாவிதம் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது என்றதுமா அப்பா சமாதானப்படுத்தி விட்டார் ...நானும் அமைதியாகிவிட்டேன்.

இவளுங்க வேற வேற ஊரில் இருப்பதால் எனக்கு தெரியவில்லை. இவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது என்று. அடிக்கடி அது வந்து எங்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்று பயந்து கொண்டே கூறினாள்.

சரி மா கவலைப்படாதீங்க! கொஞ்சம் நிதானமாக இருங்கள். நான் பெரியவரிடம் சென்று என்னவென்று கேட்டுக்கொண்டு வருகிறேன். அது வரைக்கும் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்த என்று பெண்களின் பக்கம் திரும்பி சொன்னார் பெரியவர்.

காத்தமுத்து நீயும் அவனும் வாங்க போயிட்டு வருவோம். பேரனுங்க வரவேண்டாம் அவனுங்க இங்கேயே இருக்கட்டும், என்று மூன்று இளைஞர்களை பார்த்து நீங்கே இருங்க சொல்லி விட்டு பெரியோர்கள் அனைவரும் பெரியவரை பார்க்க சென்றனர்.

காரில் ஏறி கோவிலுக்கு சென்று காலை கீழே வைத்ததும் காற்று விசிறி அடித்தது. அவர்களை முன்னே போக விடக்கூடாது என்று பலவாறு கண்களில் புழுதியை கொட்டி தீர்த்தது.

பெரியவர் கொஞ்சம் பக்தி கொண்டவர் அதனால் அவரும் மனதில் மந்திரங்களை சொல்லிக்கொண்டே கோவிலின் வாசற்படிக்கு உள்ளே சென்று விட்டார்.

அதன் பிறகு வெளியில் அட்டகாசம் செய்தது .காற்றினால் எல்லாத்தையும் தூக்கி வீசிறியது.

பெரியவரிடம் சென்று என்ன விஷயம் நடந்தது என்று கூறி அதற்கான பரிகாரத்தை கேட்டு தெரிந்து கொண்டனர்.

உப்பிலியப்பன் தாத்தா மட்டும் கிளம்பி வீட்டிற்கு சென்று அந்த மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காரில் வந்து இறங்கினார்.

கோரமாக அவர்களின் முன்னே வந்து நின்று ஆட்டம் போட்டது அது.

எங்கிட்ட இருந்து இவர்களை காப்பாற்றவே முடியாது..! என்னை மீறி நீங்கள் செல்லவும் முடியாது என்று வாய்விட்டு கோரமாக சிரித்தது.

தாத்தாவோ தன்னுடைய மணி மாலையை எடுத்து மந்திரத்தை சொல்லிக்கொண்டே பெண்களை அழைத்துப் போக முயற்சித்தார்... ஆனால் எதிரில் நின்று கொண்டு பலவித அட்டகாசங்களை செய்து உள்ளே வரவிடாமல் தடுத்தது.



அந்த நேரம் ஒரு பாட்டி தன்னுடைய கையில் ஒரு குச்சியை ஏந்தி கொண்டு அவர்களிடம் வந்து , நீங்க உள்ளே வாகங்க.உங்களை என்ன பண்ணிடும் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு அழைத்துச் சென்றாள் பாட்டி.

அவர்களையே வெறித்த கண்களோடு அது பார்த்துக் கொண்டிருந்தது.

காளி ஆத்தாவின் முன் உட்கார்ந்து பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. அழைத்து வந்த பெண்களை அங்கே உட்கார சொல்லவும் வெளியே அது ஆக்ரோஷமாக அங்கும் இங்கு அலைந்தது.

வெளியே அந்த பாட்டி வந்து நின்று உனக்கு இப்பொழுது என்ன வேண்டும்!!...

ஏன் அவர்களை பிடித்து துன்புறுத்துகிறாய்? என்று கேள்வி கேட்கவும்.

பாட்டியின் அருகில்,அவரிடம் வந்து உனக்கு என்ன தெரியும். நான் என் மனைவி எங்கள் வாழ்நாளில் தொடங்கி இருந்தோம் எவ்வளவு போராட்டம் எவ்வளவு கஷ்டம் அத்தனையும் தாண்டி அப்பொழுது தான் சந்தோஷமாகவே வாழ ஆரம்பித்தோம்.



கோவில் உள்ளே மூன்று பெண்கள்

ஒருத்தியைப் பார்த்து, "பெரியவர் ஏன் இப்படி? உங்களை தொந்தரவு செய்கிறது என்பது உனக்கு தெரியுமா!!! என்றார்.

நீங்கள் ஏதாவது தப்பு செய்திருக்கிறீர்களா என்றார்.

நாங்க காலேஜ் படிக்கும் பொழுது ரூம் எடுத்து தங்கி தான் படித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் எங்க தோழியுடைய காரை எடுத்துக்கொண்டு ஊரை சுற்றி பார்க்க கிளம்பினோம். இதில் அவளுக்கு மட்டும் தான் கார் ஓட்ட தெரியும் சன்மதியைக் காட்டினார்கள்.

"அங்குமிங்கும் சுற்றி விட்டு இருட்ட தொடங்க ஆரம்பித்துவிட்டுது.. காரை ஓட்டிக் கொண்டிருந்த போது ஏதோ ஒன்று குறுக்க வரக். திடீரென்று இவளுக்கு என்ன செய்வது என்று புரியாமல் பிரேக் பிடிக்காமல், வேகமாக ஓடி முன்னே சென்றது.

காரைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கும் இங்கும் வளைந்து சென்று உன்னை போய்க் கொண்டிருந்த பைக்கின் மீது மோதி அதிலிருந்து இருவரும் பக்கத்தில் தூக்கி எறியப்பட்டு அங்கே இருந்து கல்லு தலையில் அடி பட்டு இறந்துவிட்டார்கள் என்று எங்களுக்கு அப்புறம் தான் தெரியும்.

நாங்களும் வேகமாக சென்று மரத்தில் மோதி மயக்கத்தில் இருந்து விட்டோம். எப்படி நாங்கள் மருத்துவமனை வந்தோம் என்றே தெரியாமல் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

எங்களுக்கும் இறந்து கிடந்த இடத்திற்கும் வெகு தூரம் என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எங்களுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அதன் பிறகு தான் மருத்துவமனையில் சொன்னார்கள் அங்கே இரண்டு பேரும் இறந்து விட்டார்கள் என்று.

ஆனால் அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்கள். சொல்லிட்டு நின்று சன்மதி குலுங்கி குலுங்கி அழுதாள் . அவளின் தோளை ஆதுரமாக அணைத்துக் கொண்டனர்.

தெரியாமல் செய்த தவறு இது என்றாலும், ஆசையோடு குழந்தை கையில் ஏந்தும் நாளுக்காக காத்திருந்தவர்கள் இருந்ததினால் பழிவாங்க வந்திருக்கிறது .என்ன செய்வது என்று புரியும் தவித்துக் கொண்டிருந்தார்.

பெரியவர் உடனே பலவித மந்திரங்களை சொல்லி பூஜையை நடத்திக் கொண்டிருந்தனர்.

வெளியில் இருந்ததுக்கோ தன்னுடைய கோபம் அதிகமாக வந்தது.

பெரியவரும் பூசையை முடித்துவிட்டு. இனிமே நீங்கள் பயப்படத் தேவையில்லை ...அதை என்ன செய்ய வேண்டுமோ அப்படி செய்துவிட்டேன் கவலைப்படாதீர்கள்.

பூஜை முடித்து கயிறு

கட்டுவதற்கு எடுத்து , அவர்களுக்கு கைகளில் கட்டி விட்டார்.

அந்த பாட்டியிடம் சொன்னதும், பாட்டி அதைப் பார்த்து மௌனமாக சிரித்துவிட்டு. இருப்பவர்கள் ஒரு நாள் இறந்து தான் ஆகவேண்டும்.

அது எப்படி..! நாங்கள் என்ன பாவம் செய்தோம்??.. நன்றாக மாட்டேன் என்று மீண்டும் தன் சக்தியால் காத்தை வீசி அடித்தது .மணலை தூக்கி வாரி இறைத்தது.

தன்னுடைய உருவத்தில் ரத்தம் வடிந்து, பயத்தை கொடுக்கும் அளவிற்கு பாட்டியிடம் காட்டி பயமுறுத்தியது.

நீ என்ன செய்தாலும் ,உன்னால் அவர்களை எதுவும் செய்ய முடியாது. அவர்களின் குடும்பம் வழி வழியாக

காளியாத்தாளை வணங்கி வருகிறது.

நீ என்ன செய்தாலும் எதுவும் செய்ய முடியாது.காலம் பதில் சொல்லும் அளவிற்கு இருக்காது என்று கூறி விட்டார்.

உள்ளே போறவரையே முறைத்துக் கொண்டு நின்றது அது. என் மனைவி எங்கே ???என் குழந்தைகள் எங்கே??? நான் என்ன தப்பு செய்தேன்?? காளியாத்தா.. எனக்கு ஒரு விடிவு காலம் இல்லையா என்று கேட்டு கதறியது.

என்ன செய்வது அவர்களின் வினை பயனை அனுபவித்து தான் ஆகும் வேண்டும் என்றார் பெரியோர்.

யார் என்ன செய்வது ,? உனக்கான விதி , அது அவர்களின் கையில் இருந்து வந்தது போல இருக்கிறது. வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றார் பாட்டி.

எதிரில் நின்றிருந்தது பாட்டியை அமைதியாக பார்த்துவிட்டு இனிமேல் என்னால் தொந்தரவு வராது என்று கூறிவிட்டு சென்றுவிட்டது.

கோவிலில் உள்ள சாமி கும்பிட்டு விட்டு பெண்களை அழைத்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டு விட்டனர்.

இவர்களை முன்னே விட்டு ,பின்னாடி எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது அது.

என் மனைவியும் குழந்தையும் எங்கே போய் நான் தேடுவேன்??? என்னை மட்டுமே இப்படி தவிக்கவிட்டு விட்டார்களே என்று கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது

அங்கே வந்து நின்றனர் இளைஞர்கள் இருவர் ‌. ஏண்டா ... நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்து ஏற்பட்டது .அதற்கு நீ தாண்டா காரணம் என்றான் ஒருவன்.

டேய் ....வாய மூடுடா! அது முடிஞ்சு, எத்தனை வருடமாகது..இப்ப எதற்கு வாயைத்திறக்கிற என்று மற்றவன் அவனை அடக்கினான்.

பக்கத்தில் நின்றிருந்த அதுக்கு அது காதில் விழுந்து விட்டது. நாங்கள் இறப்பதற்கு காரணம் இவர்கள் தானா என்று !தன்குரூரமான முகத்தை அவர்களின் முன் காட்ட பயந்து அலறியடித்து ஓடினார்கள்.

எங்கே ஓடினாலும் விடாது போல என்று நினைத்துக்கொண்டே ஓட, எதிரில் எங்கிருந்து தான்!!! யார் தான் கையில் இருந்து, கயிறு விழுந்ததோ அவர்களின் அதன் தலையில் போட்டு இழுத்து முடித்தது."அது ஆசையும் நிறைவேறி விட்டு, பெண்களும் நல்லபடியாக வாழ்கின்றவர்கள்.

யாரும் வினை பயனை தடுக்க முடியாது.

முற்றும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் சிஸ்டர் 💐 💐 💐
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top