Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 157
- Thread Author
- #1
வினை தீர்க்கும்
"என்னை விட்டுவிடு. நீ யார்? எதற்கு என்னை துரத்துகிறாய்?” மேல் மூச்சு வாங்க வாங்க அவளின் மார்புக்கூடு ஏறி இறங்கியது. எதிரில் நின்ற உருவமோ அவளையே உருத்து பார்த்துக் கொண்டிருந்தது. அவளுக்கு என்னவோ நிழலாக தான் தெரிந்தது எங்கிட்ட வராத என்கிட்ட வராது என்று கத்திக் கொண்டிருந்தாள் சன்மதி.
என் கைகளை அந்த நிழல் என் தலைக்கு மேலே உயர்த்தி இறுக்கி பிடித்து என் உடைகள் ஒவ்வொன்றாக அதன் பார்வையாலேயே உருவி தூக்கி போட்டது. என் அங்கமெல்லாம் தனலாய் எறிந்தது.
அதன் பார்வை என் மீது படப்பட எனக்கு வெறுப்பு உண்டானது. அதன் கண்கள் காம கொடூரமாய் என் மேனியை அங்க அங்கமாய் பார்க்க பார்க்க என் இதயம் துடித்தது.
"என்னை விட்டுவிடு என்னை விட்டு விடு என்று கத்திக் கொண்டிருக்க, யாரோ என்னை தட்டி எழுப்புவது போல் இருந்தது.
என்னை பிடித்திருந்த நிழல்தான் விட்டுவிட்டது என்று கண்ணைத்திருந்து பார்க்க, அம்மா அறையின் வாசலில் குழம்பு கிண்டும் கரண்டியோடு நின்றிருந்தார்.
"ஏண்டி விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது! வேலைக்கு போக வேண்டாமா? என்னவோ வேணாம் விட்டுடு என்று கத்திட்டு கிடக்குறவ.
"எழுந்திருடி... என்று கத்திவிட்டு அம்மா அடுப்பாங்கரைக்கு சென்று விட்டாள்.
எழுந்து பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்து வேலைக்கு கிளம்பினேன். இதுபோலவே ஒருவாரம் தொடர்ந்தது.அதன்பிறகு தான் அவளின் பயத்தை கண்டறிந்தனர்.
இவளுக்கு இங்க நடந்தது போல் இன்னொருவருக்கும் அதே நேரத்தில் அங்கே
வான்மதி தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு தன் பக்கத்தில் கெட்ட வாடை காற்றில் வருவது போல் இருந்தது .
மூக்கின் அருகில் குமட்டிக் கொண்டு வந்தது .அவளின் வயிற்றின் உள்ளே இருந்த சிறுகுடலே வெளியே வந்து விடும் போல அவளுக்கு தோன்றியது.
"அந்த நாற்றத்தை பொறுக்க முடியாமல், எழுந்திருக்கலாம் என்றால் உடம்பை அசைக்கவே முடியவில்லை. தன் மேல் பாரமான ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தது.
தொட்டுப் பார்க்க!.. மூன்று நாள் அழுகிய முட்டை, இரண்டு நாள் கெட்டுப் போன பிரியாணி சாப்பாடில் கை வைத்தால் எந்த அளவிற்கு வாடையும் அருவருப்பு தன்மையும் தோன்றுமோ அதுபோல் இருந்தது.
கத்தலாம் என்று பார்த்தால் வாயடைத்து போனது .நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது போல் தெரிந்தது. வார்த்தைகள் வரவில்லை .
"நானும் கத்தி பார்க்க முயற்சித்தேன்!!! மூச்சு விடுவதற்கு அவ்வளவு சிரமமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் போனால், என் மூச்சை அடங்கிவிடும் !!போல அழுத்தியது .
தொம்மென்று எங்கேயோ பள்ளத்தில் விழுந்தது போல் இருந்தவள் கண்ணை விழித்துப் பார்க்க கட்டில் இருந்து கீழே விழுந்தாள்.
கட்டிலில் அவள் தங்கை அருந்ததி உட்கார்ந்து கொண்டு இவளை கோபத்துடன் எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்
என்ன நடந்தது !என்று எனக்கு கனவில் புரியவில்லை. இவள் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாள்? என்று விழுந்த நானே மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்து அவளின் தோலை தொட.
கையை வைத்த கொன்னுடுவேன் உன்னை. நீ எல்லாம் மனுஷியா பக்கத்தில் தூங்க முடியுதா..! அடிக்கடி இதுபோல் செய்றியே இரு அம்மா கிட்ட உன்னை சொல்றேன் என்று கூறியவளை ஏதேதோ சமாதானம் சொல்லி அவளை சாந்தப்படுத்தினாள்.இருந்தாலும் சொல்லிவிட்டாள்.
இரவு வேலையை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் மதிவதனி.
எப்பொழுதும் வரும் நேரம் தான் இது. நைட் ஷிப்ட் என்றாலே!! இப்படித்தான் காலையில் இருந்து இரவு பத்து மணி பதினோரு மணி வரை ரோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்கே செல்லும் என்று தெரியாது.
தெருவில் நாய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக படுத்துக் கொண்டிருக்கும். மின்கம்பங்களில் பல நேரங்கள் விளக்குகள் எரிவதில்லை. சில நேரங்களில் எரியும்.
பெரிய பெரிய வீடுகளில் முன்பு போட்டிருக்கும் லைட்டுகள் மூலம் ரோட்டில் வெளிச்சம் தெரியும்.
அவள் நடந்து வரும் ரோட்டில் பழக்கடைகளும், ஹோட்டல்களும் இருப்பதால் கடைகளின் முன்னே காய்ந்து போன இலைகள், குப்பை தொட்டிகள் ,ஹோட்டல் பக்கம் அங்கே முழித்திருந்த மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.
பழங்கள் உள்ள பகுதியில் வீனா போன வாழைப்பழ தோள்கள் அதன் கொண்டுவந்த அட்டை பெட்டி பேப்பர்கள் , இலைகள் போன்றவை குப்பை தொட்டியில் கிடக்கும் .
ஒரு சில நேரம் அந்தப் பக்கம் நாற்றமும் வந்து சேரும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் மதிவதனி.
மதிவதினையும் அவளது தோழியும் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து கேட்டை திறந்து உள்ளே சென்று அவள் கேட்டை தாழ்ப்பால் போட்டுவிட்டு மாடிப்படி ஏறினாள். கீழே வீட்டு ஓனர் குடியிருந்தனர்.
வீட்டு ஓனர் கொஞ்சம் கரரான பேர் வழி. நேரம் கெட்ட நேரத்தில் வரக்கூடாது என்று சொல்பவர். வேலைக்கு வந்த போது புதிதில் வேலை விட்டு வரும் நேரம் ரொம்ப கஷ்டப்பட்டாள் .
இப்பொழுது அவருடைய மனைவி எடுத்து சொல்லி புரிய வைத்து அவரை அடக்கியுள்ளார்.
அதுபோல தான் இன்றும் அவள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவளை ஏதோ யாரோ பின் தொடர்வது போலவே தோன்றியிருக்கிறது.
'இரவில் தனியாக வருவதால் அப்படி தோன்றி இருக்கலாம் !என்று நினைத்து வேக வேகமாக நடந்து வந்துவிட்டாள் அறைக்கு.
அறைக்குள் வந்தவளுக்கு திடீரென..! கரண்ட் கட் ஆகியதால் தூக்கி வாரிப்போட்டது. நெஞ்சுக்கூடு பட பட வென்று அடித்துக் கொண்டது..!.
ஏன்?? ஏன்?? இப்படி ஆகிறது..! கீழே வேற வீட்டு ஓனரம்மாவை கூப்பிடலாம் என்றால் அவர்கள் ஊருக்கு சென்றிருக்கிறார்களே..!,
இந்த நேரம் பார்த்து தான் ! இந்த மஞ்சுவும் ஊருக்கு போகணுமா..? என்று நினைத்துக் கொண்டே, மெதுவாக போனை ஆன் செய்து அதில் இருந்த லைட்டை ஒளிர விட்டு அங்கம் இங்கும் தேடித் தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் எடுத்து பொருத்தினாள்.
எப்பவும் புழங்கின இடம் தான் என்றாலும் ! இன்று என்னவோ அவளுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது.
"மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு அதை மற்ற இடங்களுக்கும் பரவுவது போல இருக்க அருகில் உள்ள மேசையின் மீது வைக்கலாம்!!! என்று திரும்பியவளின் அருகில் சூடான மூச்சுக்காற்று வீசுவது போலவும்!! தன் பெயரைச் சொல்லி அழைப்பது போலவும் இருந்தது..
மேலும் இருந்த பயம் அதிகரித்தது .திரும்பாமலே முகம் வெளிரிப்போய் இருக்க ,என்னதான் ஆகிவிடும் என்று நினைத்து திரும்பியவளுக்கு அந்த கோர முகத்தை பார்த்து மயங்கிப்போய் விழுந்தாள்.
ஏன் ?இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாக வந்து மிரட்டுகிறது? ஏன் பயமுறுத்துகிறது? எதனால்?..
செய்யூர் கிராமம்
**********
செய்யூர் காளியம்மன் கோவில் பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
"தொண்டர்கள் தான் அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு, 'பெரியவருக்கு பதிலாக ,அவருக்கு அடுத்ததாக இருந்தவர் தீபாரதனையை காண்பிக்க..! கோவிலை சுற்றி காற்றும் தூசியும் வேகமாக வீசி அடித்தது.
அங்கிருந்த மக்கள் அனைவரும் நடுங்கி போய் அமர்ந்து இருந்தார்கள். அவர்களின் முகங்களில் எல்லாம் பயம் தொடர்ந்து இருந்தது. காற்றும் தூசியும் அடித்ததால் கண்களில் இலவசமாக அழுக்குகள் சேர்ந்து கொண்டது கண்ணீரை தானாகவே கொட்ட ஆரம்பித்தன கண்கள்.
காளியம்மனைப் பார்த்தவாறுப் படுத்திருந்த பெரியவர் முகத்தில் ,ஏன் இப்படி? என்ற கேள்வியோடு காளியைப் பார்த்தார்.
"ஊர் பெரியவர்களும், தொண்டர்களும், ஐயாவிடம் வந்து நிற்க !…
"ஊர் பெரியவர் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருட பூஜைகள் மட்டும், ஏன் இப்படி தடங்கல் ஏற்பட்டது ஐயா .??என்று கேட்டார்.
என்ன குறை வந்துவிட்டது !!எல்லாம் சரியாக தானே செய்து முடித்தோம். எப்படி எதுவும் தெரியாமல் எதற்கு இந்த முன்னெச்சரிக்கை!!!.. என்று இன்னொருவர் பெரியவரை பார்த்து கேட்டார்.
சக்தி கொண்ட தீய சக்தி வெளிய வந்து இருக்கு. அவை தொந்தரவு செய்தவர்களுக்கு பழி வாங்க வந்திருக்கு.
அதை ஆரம்பித்திலேயே அடக்கி வைக்கணும் .இல்லை என்றால் அது நினைப்பவர்களை பழிவாங்கி விட்டு தான் செல்லும் என்றார் பெரியவர்.
என்ன நடக்கப் போகிறது என்ற பயத்திலேயே மக்கள் காளிக்கு தீபாரதனை காட்டியதும் கும்பிட்டு விட்டு அவரவர்கள் வீடுகளுக்கு சென்றார்கள்.
மறுநாள் செய்யூரின் கிராமத்தில் உப்பிலி அப்பன் குடும்பத்தினர் என்று காலம் காலமாக அந்த பெயரை சொல்லி அழைத்து பெருமையை வாழ்ந்தார்கள்.
பெரிய குடும்பம் தான் அந்த குடும்பம். நடுக் கூடத்தில் அத்தனை பேரும் அமர்ந்திருந்தனர்.
ஆண்களின் முகம் யோசனையில் இருந்தது! பெண்களோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
"காத்தமுத்து', ஏன் அமைதியா இருக்க?? என்ன பிரச்சனை? என்று சொன்னால் தானே தெரியும் .
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தால், என்ன சொல்வது என்று அந்த வீட்டின் பெரியவர் வயதானவர் கேட்டார்.
அவருக்கு 20 வயது குறைவாக இருந்தவர் காத்தமுத்து என்றதும் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.
"அப்பா..! புள்ளைங்க மூணு பேரும் போன் போட்டாங்க. இரவு முழுக்க, "அவர்களை ஏதோ ஒன்று பயமுறுத்தி இருக்கிறது போல அப்பா, காத்தமுத்து.
"பெரியவரின் முகம் ',யோசனையில் ஆழ்ந்தது. ஏன் ?நீங்க அமைதியா இருக்கீங்க!!! என்று வயதான பெண்மணி ஒருவர் அவரிடம் கேட்க.
இல்ல பொம்பள பிள்ளைகளை மட்டும் விரட்டுவது, ஏன் இப்படி நடக்குது என்று தெரியலையே..! என்று யோசனையோடு அமர்ந்திருக்க ,வேகமாக உள்ளே நுழைந்தார்கள் மூன்று பெண்களும்.
"அம்மா, அப்பா” என்று அழைத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அவர்ளும் மதிவதனி, வான்மதி, சாருமதி வாங்கம்மா. மூணு பேரும் ஏன் இப்படி பயந்து கொண்டு வருகிறீர்கள்? எதுவும் ஆகாது கவலைப்படாதீர்கள்” என்று தைரியமூட்டினார் தாத்தா.
"இப்படி வாங்க. வந்து என் பக்கத்தில் உட்காருங்கள்” என்றதும் ,மூன்று பேரும் முகம் வெளிரிப் போய்!!! அவர்களின் காலுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டனர் தரையில்.
தாத்தாவும் பாட்டியும் பேத்திகளின் தலையில் தடவி கொடுத்துக்கொண்டு, ஏன்மா என்னாச்சுடா என்று அன்போடு விசாரிக்க.
மற்றவர்களும் , இவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..! என்று பயத்துடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.