• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
ஷமீரா நினைவுகள்:

மூன்றாம் வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டாள்…

ஆறாவது செமஸ்டரான ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீட்டிற்கு வர மகளிடம் கல்யாண வார்த்தை எடுக்கவும் ஒரு வருடம் போகட்டும் என்றாள்.

ஏன் என்று கேட்க ஒரு வருஷம் வேலைக்கு போயிட்டு பிறகு கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லவும் சரி மகள் மாறிவிட்டாள்.அவள் விருப்பம் போல விடலாம் என்று நினைத்தவர்கள் வேலைக்கு போ என்று சொல்ல பக்கத்து ஊரில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு ஜாயின்ட் பண்ணினாள்.

அதோ இதோ என்று நாட்களும் ஓடியது...

வீட்டினரிடம் கூடிப் பேசிய மகி ஷமீரா- பாபு திருமணத்திற்கு நாளை குறித்தவர் பத்திரிகை அடிக்க அட்வான்ஸும் கொடுத்து விட இரண்டொரு நாளில் பத்திரிகை ரெடியாகி விட்டதென்ற கால் வரவும் மீதம் பணத்தை கொடுத்து விட்டு வாங்கிட்டு வந்தவர்கள் குடும்பமாக போய் சர்சில் உள்ள பாதரிடம் கொடுத்து ஜெபம் பண்ணி வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

வழக்கம்போல் வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வந்து மகளைப் பார்த்த எஸ்தர் அவளுக்கு பிடித்தமான வடை கேசரி கெட்டி சட்னியோடு கொண்டு வந்து மகளுக்கு கொடுக்க,ஏன் எதற்கென்று வாயைத் திறந்து எதுவும் கேட்காமல் வாங்கிக் கொண்டாள்.

மகளைப் பார்த்து சிரித்து விட்டு எஸ்தர் வெளியே போக என்னமோ பிளான் பண்ணிட்டாங்க ஷமீரானு உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் ரெஸ்ட் ரூமிற்கு போய் பிரஷ் ஆகிவிட்டு வந்து துணியை மாற்றிவிட்டு பிடித்த பொருட்களை சாப்பிட விருப்பம் இல்லாமல் லெட்டினில் கொட்டி பிளஷை அழுத்தி விட்டு வந்து உட்கார கதவு தட்டும் சத்தம் கேட்டது.

மனம் ஏனோ உள்ளுக்குள் ஒருவித படபடப்பாகவே இருக்க ஏதோ நடக்கப் போகிறது என்பதை மட்டும் உணர்ந்தவள்,ஆண்டவரே என்கும் போது அழுகை வந்தது.மீண்டும் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டு கண்களை துடைத்துக் கொண்டவள் கதவை திறக்க அங்கே மகி தான் நின்று கொண்டிருந்தார்.

ஷமீராவோ எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க வாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லிக் கொண்டே மகி அங்கிருந்த சோபாவில் போய் உட்கார,ஹாலுக்கு வந்தவள் ஏதும் சொல்லாமல் சுவற்றில் சாய்ந்து கொண்டு நிற்க...

எஸ்தர் என்று குரல் கொடுக்கவும் ரூமிற்குள் போனவர் பத்திரிக்கையை எடுத்துட்டு வந்து கணவரிடம் கொடுக்க இந்தா...

உனக்கம் பாபுக்கும் அடுத்த மாசம் 20 ஆம் தேதி நம்ம சர்ச்சில் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கு,அன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷன் என்றார்.

இவ்வளவு அதிரடியாக முடிவெடுப்பார்கள் என்பதை அறியாமல் இடி விழுந்ததை போல அதிர்ந்தவள் உள்ளுக்குள் கதறி அழுக,அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பத்திரிகையை வாங்கும் போது கைகள் நடுங்கியது.

சாதாரணமாக பார்ப்பது போல் பிரித்துப் பார்க்க கண்கள் கலங்கி எழுத்துக்கள் மறைத்தது.

வேகமாக ரூமிற்குள் போனவளோ பத்திரிக்கையை தூக்கி எறிந்து விட்டு பெட்டில் விழுந்து சத்தமின்றி கதறி அழுதாள்.

நேரமும் கடந்து செல்ல கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தவள் முகத்தை துடைத்துக் கொண்டு என்ன மா என்க,சாப்பிட வா . .

கொஞ்சம் விசம் இருந்தா குடுங்க தின்னுட்டு ஒரேடியா செத்துப் போகிறேன் என்று உள்ளுக்குள் கதிறியவளோ பொங்கி வந்த அழுகையை கையை பொத்தி அடக்கியவள் இதோ வரேன் என்றவாறு கதவை திறந்து எஸ்தரை பார்க்காமல் நேராக கிச்சனுக்கு சென்று வாஷ்பேஷனில் முகத்தை கழுவ அவள் அழுதிருக்கும் சுவடு தெரியவில்லை.

தேவையானவை எடுத்து வைத்து சாப்பிட ஏதோ கடப்பாறை முழுங்குவது போல தொண்டையை அடைக்கவும் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டவள் .

ஒரு வழியாக இரண்டு தோசையை சாப்பிட்டுவிட்டு ரூமிற்கு வந்தவளோ தூக்கி எறிந்த பத்திரிகையை தேடி எடுத்து போனில் போட்டோ எடுத்துக் கொண்டவள் புக்கையும் போனையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தவளோ வேகமாக கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு போனில் இருந்த பத்திரிகை முதலில் செழியனின் நம்பருக்கு வாட்ஸப்பில் அனுப்பி விட்டு காத்திருக்க நொடிகளும் நிமிடங்களாய் கடந்ததே தவிர அவனிடமிருந்து கால் வரவில்லை.

செழியன் நினைவுகள்:

20 நிமிட பயணத்தில் தெருவிற்குள் நுழைந்த ஆட்டோ அங்கே வலது பக்கமாய் இருக்கும் 5 வது மாடி வீட்டின் முன்பு போய் நின்றது.

சார் இது தான் டாக்டர் வீடென ஆட்டோ டிரைவர் சொல்லவும் சரிங்கணா என்றவாறு கீழே இறங்கியவன் ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து கதவை திறந்து உள்ளே போக 55 வயது மதிக்க டாக்டர் மேகன் வாசலில் நின்று வாங்க என்று வரவேற்தார்

வணக்கம் டாக்டர் என்கவும் வாங்க சார் என்று வீட்டுக்குள் அழைத்துப் போனவர் அங்கிருந்த தனது மனைவியிடம் அறிமுகப்படுத்த வணக்கம் சொன்னார்.

டிபன் சாப்பிடுற நேரம் தான் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிடு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார் என்பவனுக்கு பரவால்ல வாங்க தம்பி என்று அவர்கள் வற்புறுத்த செழியனும் வேண்டாம் என்று மறுத்து விட்டான் .

டீ காபி ஜூஸ் என்று இருவரும் சொல்ல டீ கொண்டு வாங்கம்மா
என்றான்.

சரி பா என்றவாறு உள்ளே போனவர் சிறிது நிமிடத்தில் டீ எடுத்து வந்து கொடுக்க தேங்க்ஸ் என்றவாறு வாங்கி கொடுத்தவன் டாக்டர் ஒரு முக்கியமான கேஸ் விஷயமாதான் வந்திருக்கிறேன்.

ஹம் சொல்லுங்க...

என் மனைவியால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்க,ஓகே டாக்டர் என்றவன் பின்னர் ரவீந்திரனின் கேஸ் பற்றி சொல்ல அதைக் கேட்டு திடுக்கிட்டவருக்கு இவன் உண்மையிலேயே போலீஸ் தானா என்கும் பயம் வந்தது.

அவர்களின் பயத்தை பார்த்தவன் சந்தேகப்பட வேண்டாம் என்று தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டவும் அதன் பிறகு செழியனை பாதி நம்பினார்.

தம்பி வாங்க,மேல ரூம் இருக்கு அங்கு போய் பேசலாம் என்று சொல்லி அவர் தனது மனைவியிடம் கண்ணை காட்டி விட்டு மேலே போனார்.

இதையெல்லாம் அவன் கவனித்தாலும் அவர்கள் மேல அவனுக்கு பெரிதாக சந்தேகம் வராமல் இருக்கவும் செழியனும் தைரியமாக மேலே போனாலும் இடுப்பில் கன் இருக்கா என்று மட்டும் சோதனை பண்ணிக் கொண்டான்.

மாடியில் இருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனவர் புத்தக அலமாரியை சிறிது தள்ள,அதில் லாக்கர் இருப்பது தெரிந்தது.அதில் நம்பரை அழுத்தவும் கதவு திறக்க, சிறு பெட்டி போல் வெளியே வந்தது.

அதை கையில் எடுத்தவர் பெட்டியை திறந்து உள்ளே இருக்கும் சிறிய வீடியோ கேமராவை எடுத்து செழியனிடம் கொடுத்தவர் நீங்க தேடி வந்ததற்கான பலன் இதில் இருக்கு தம்பி.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அளவுக்கு தான் பிரியாவிற்கு பாதுகாப்பு. ஒரு வருஷமா இந்த ஆதாரத்தை நான் பாதுகாக்குறேன்.
எங்களுக்கும் பிரியாவுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஏதோ ஒரு நம்பிக்கை அவளுக்கு இருந்திருக்கிறது.என் கணவர் பற்றி நிச்சயமா யாராவது ஒருத்தவங்க தேடி வருவாங்க அவங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இது ஒப்படைங்க டாக்டர் என்றாள்

நீங்கள் போலீசென்று சொல்லும்போது அவ்வளவாக எனக்கு நம்பிக்கை இல்லை.எங்கே ஆடியோபாதத்தோடு ஆளாக இருப்பீர்கள் என்று கொஞ்சம் பயம் இருந்துச்சு.

அதான் என் மனைவி கிட்ட சொல்லி பிரியாவுக்கு கால் பண்ணி விசாரிக்க சொன்னேன்.நீங்க உண்மையிலேயே போலீஸா இருந்தால் எனக்கு கால் பண்ண சொன்னேன்.வைப்ரேஷன் சவுண்ட்ல நான் புரிஞ்சிக்கிறேனு அதேபோல ரூமுக்குள் வரும்போதே சிக்னல் கொடுத்துட்டாங்க என்றார்.

புரியுதுங்க டாக்டர்.விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது நம்மளுடைய கடமை என்றவன் இந்த வீடியோவை நான் பார்க்கலாமா டாக்டர்?

ஓ எஸ்...தாராளமா பாருங்கள் என்று வருத்தமாக டாக்டர் சொல்லவும் செழியனும் அதை ஆன் பண்ணி வீடியோவை ஓட விட்டவன் அனைத்தும் பார்த்து முடிக்கும் போது அதிர்ந்து போனான்.

டாக்டர்...அப்போ ரவீந்திரன்?

எஸ்... ஹீ ஈஸ் மர்டர்டு..

ஹம் டாக்டர்...பாவம்..

அப்போ பாடி எங்க தான் இருக்கு?

அதுதான் தெரியலை?

ரவீந்திரனை வெட்டும்போது தான் பிரியா மயங்கி விழுந்துட்டாள்.ஆனா பாடியை அவ்வளவு தூரம் எடுத்துட்டு போக வாய்ப்பு இல்லன்னு சொல்றாள்.

ஏன்னா கொலை வீட்டுக்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் நடந்ததாக சொன்னாள்.இதை மட்டும் வீடியோவில் ரெக்கார்ட் பண்ண முடியலை.

இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது, பிரியாவுக்கு பழைய நினைவுகள் எல்லாம் இல்லை என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் அவளோட உயிருக்கு பாதுகாப்பு வேண்டி இதை மறைத்து விட்டேன்.நீங்க என்கவும் எனக்கு புரியுது.கண்டிப்பாக பிரியாவை காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை என்றவன் நான் தேடி வந்த காரியம் இவ்வளவு எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கலை.

"கிட்டத்தட்ட ஒரு வருஷமா இந்த கேசுக்காக நான் அலைஞ்சிட்டு இருக்கேன் டாக்டர்"

அப்படிங்களா...நல்லவர்களை கடவுள் என்றைக்குமே கைவிடமாட்டார் என்றவர் இனியாவது சாப்பிடலாமா என்க வேண்டாம் சார்.இப்போ ரவீந்திரனின் பாடியை கண்டு பிடிக்கணும்.சோ நான் கிளம்பனும் சார்.

என் மேல் நம்பிக்கை வைத்து இந்த ஆதாரத்தை கொடுத்ததற்கு நன்றிங்க டாக்டர் என்பவனை பார்த்து சிரித்தவர், இது எனது கடமை.அதைவிட பெரிய பாரம் என்னிடம் இருந்து குறைந்தது என்றவர் அவனை கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டில் விட தேங்க்யூ டாக்டர் என்றவன் பஸ்ஸில் ஏறி சேத்தியாதோப்புக்கு வந்தவன் அங்கிருந்த லாட்ஜுக்கு சென்று வசுந்தராவிற்கு கால் பண்ணினான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
செழியன் நினைவுகள்:

கடைசி ரிங்கள் அட்டென்ட் பண்ணியவரிடம் பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு விஷயத்தை சொல்லியவன் அந்த வீடியோ காப்பியை அவரது இமெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு வெளியே வந்தவனை ஏட்டுவே அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வர, ஊருக்குப் புறப்பட்டான்.

அதிகாலையில் வனிச்சூருக்கு பஸ்சும் வந்து சேர்ந்தது.செழியனுக்காக கண்ணனும் காத்திருக்க இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்தனர்.

அத்தை மகன் போலீசாக இருக்கிறான் என்பது தெரிந்தாலும் கண்ணனோ இதுவரை எந்த கேசை பற்றியும் அவனிடம் விசாரித்ததில்லை.

சரி சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்று வீட்டு வாசலில் இறக்கிவிட்ட கண்ணனும் அவன் வீட்டிற்கு சென்று விட்டான். அதன் பின்னர் ஒரு வாரம் வழக்கமாய் நாட்கள் சென்று கொண்டிருக்க,தனது இன்பார்மரிடம் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆடியபாதத்திடம் யார் யார் அடியாட்களாக இருந்தார்களோ அவர்கள் டீடைல்ஸ், இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை விசாரித்து சொல்லுமாறு சொல்லியிருந்தான்.

வழக்கம்போல் இரவு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு ரூமிற்கு வந்தவன் கேஸ் பற்றி வெற்றி கபிலனிடம் பேசிவிட்டு மொபைலை சார்ஜிங்கில் போட்டுவிட்டு மொட்டை மாடியில் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தவனின் சிந்தனை தன்னவளிடமிருந்தது.

இவ்வளவு நேரம் அவள் தூங்கி இருப்பாளா?

கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகிறது அவளை பார்த்து பேசி,எவ்வளவு பிடிவாதமா இருக்கா பாரு என்று அவளின் மேல் தான் அவனுக்கு கோவம் வந்தது.

கால் வலிக்க நடந்தவன் அங்கிருந்த டேப்பை திறந்து கை கால்களை கழுவி விட்டு அவனது ரூமிற்கு வந்து படுத்தவன் சார்ஜிங்கில் இருக்கும் போனை எடுத்துப் பார்க்க சண்டி ராணி என்ற பெயரில் 7 மிஸ்டு கால் வந்திருந்தது.

பதறிப் போய் எழுந்தவன் என்ன இத்தனை போன் பண்ணிருக்கிறாள்?

ஏதாவது பிரச்சனையா என்று மணியை பார்க்க இரவு 11:45 என்று காட்டியது. இந்த நேரத்துக்கு பண்ணலாமா பண்ணக்கூடாதா என்று ஒரு நொடி யோசித்தவன் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சண்டி ராணி என்ற நம்பருக்கு கால் பண்ண ஒரே ரிங்கிள் அட்டென்ட் பண்ணியவள் நான் உயிரோட தான் இருக்கேன் எண்ணும்போது அவள் அழுவது தெரிந்தது..

ஏய் என்ன டி ஆச்சென செழியன் பதற, இன்னும் என்ன ஆகணும்?

மெசேஜ் பாத்தீங்களா இல்லையா?

இல்லை டி..

ஓஓஓ...முதலில் பாருங்கள் என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

என்ன அனுப்பி இருக்கான்னு தெரியலை என்றவாறு நெட்டை ஆன் பண்ணியவன் வாட்ஸ் அப்பில் பார்க்க அதில் இன்விடேஷன் போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ந்தவன் உடனே அவளுக்கு கால் பண்ண..

அட்டென் பண்ணியவளே அந்த பக்கம் அமைதியாக இருக்க,அவள் என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்பது தெரியவேண்டும் என்பதால் இவனும் அமைதியாக இருந்தான்.

இரண்டு நிமிடம் சென்று ஹலோ என்று அவள் சொல்லவும் சொல்லு டி என்ன பண்ணலாம்னு இருக்க?

உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?அதை சொல்லுங்கள் என்று கோவமாக கேட்க, என் பொண்டாட்டியை எவனுக்கும் விட்டுக் கொடுக்கிற அளவுக்கு நான் மானங்கெட்டவன் கிடையாது டி.

மீசை வைத்த வீரமான ஆம்பளை டி.

அப்போ ஒழுங்கு மரியாதையா வந்து உங்க பொண்டாட்டியை கூப்பிட்டு போங்களென்றாள்.

வரேன் டி...

நாளைக்கு உன் வீட்டில் வந்து பேசுறேன் போதுமா?

அய்யோ அப்படி எதுவும் பண்ணிடாதிங்களென ஷமீரா பதற, வேறு என்ன பண்ண சொல்ற?

"ஒருமுறை பேசி பார்கிறேன் டி"

எதுவும் சொல்லாமல் பத்திரிக்கை அடிச்சிருக்காங்களே அதிலே தெரியலையா என்று ஷமீரா அழ, அழாத...நீ என் பொண்டாட்டி டி.நாளைக்கு ராவுக்குலாம் ரெடியாக இரு..

ம்ம்...

என்ன டி ம்ம்?

இன்றைக்கு தான் உனக்கு நான் இருப்பது நினைவிற்கு வந்ததா?

இதே கேள்வியை நானும் திருப்பி கேட்கலாமே என்றாள்.

அதானே...உன் வாய் இருக்கே வாய்...உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என்று சொல்லி ஃபோனை வைத்தவன் அடுத்தடுத்து என்ன பண்ண வேண்டும் என்று திட்டங்களை தீட்டி விட்டு எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.

விடியலும் வந்தது...

வழமை போல் எழுந்து குளித்தவனோ வேலைக்கு தயாராகி கீழே வந்தவன் பெற்றோர்கள் இருவரின் காலில் விழ,என்னப்பா,இன்றைக்கு ஒன்னும் விஷேச நாள் இல்லையே என்றனர்.

ஏன் இப்படி... ஒரு நல்ல விஷயத்தை செய்ய போறேன் அதான் என்ற செழியன் சாப்பாடு வேண்டாமென்று சொல்லிக் கொண்டு வண்டியில் ஏறி பக்கத்து தெருவில் இருக்கும் தாத்தா வீட்டிற்குள் வர...

என்ன... அதிசயமாக இந்த எருமை சீக்கிரமா வந்துருக்கு என்றவாறு தம்புசாமி தாத்தா கேழ்வரகு கூழை குடிக்க, வேண்டுதலை என்றவாறு படியில் ஏறி கண்ணன் ரூமிற்கு போக, அவன் பாத்ரூமில் இருப்பது தெரிந்தது.

டேய் இன்னுமாடா குளிக்கிற என்று கதவைத் தட்டினான்.சத்தம் கேட்டு தண்ணீர் பைப்பை நிறுத்தியவன் யார் என்க, நான் தான் எருமை மாடு சீக்கிரம் வா.

நீ என்ன எருமை இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட??? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.வேகமாக குளிச்சிட்டு வா டா என்க,சரி சரி என்று கண்ணனும் அதேபோல் குளிச்சிட்டு வெளியே வரவும் மாப்பி இன்னைக்கு நைட்டு நான் உன் தங்கச்சியை கூப்பிட்டு வர போறேன்.

"நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கல்யாணம்"

அதைக் கேட்டவனோ என்னடா சொல்ற என்று அதிர,பேசுறதுக்கு நேரமில்லை நான் மாமாங்க கிட்ட பேசிட்டேன்.

பேக்டரிக்கு வந்து மேனேஜர் கிட்ட சொல்லிட்டு அங்கிருந்து நேரா மதுரைக்கு போகிறேன்.நீ எப்படியாவது வீட்டில் உள்ளவங்களை சமாளி.

இனி எந்த கேள்வியும் என்கிட்ட கேக்காத என்று கரராக சொல்லவும், இதுக்கப்புறம் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது என்பதை புரிந்து கொண்ட கண்ணன் ஆண்டவனே....!!!!

இவனை எதுக்கு அத்த மகனா படைச்சீங்க என்று முணவிக் கொண்டே வேக வேகமாக தயாராகி கீழே வந்தவர்கள் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு டவுனுக்கு வந்தனர்.

மச்சி எதுக்குடா இவ்வளவு அவசரம்?

வீட்ல சொல்லிட்டு பண்ணலாமே என்கவும் அதுக்கெல்லாம் நேரம் இல்ல புரியுதா..அவளுக்கு அங்க கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க,பத்திரிக்கை எல்லாம் அடிச்சிட்டாங்க என்று கடுப்போடு செழியன் சொல்லும்போது அவன் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்டது.

யாரென எடுத்து பார்த்தவன் இப்ப எனக்கு பேசறதுக்கு நேரம் இல்லை என்றவாறு நேராக மேனேஜர் அறைக்கு போனவன் ஒரு வாரம் லீவு வேணும் என்றான்.

என்னாச்சு செழியா என்று அவரும் கேட்க, தவிர்க்க முடியாத சூழ்நிலை உடனே கல்யாணம் பண்ணனும் என்று சொல்லவும் என்ன செழியா லவ் மேரேஜா...ஆமா சார்..

சரி போயிட்டு வா என்று அவரும் பர்மிஷன் கொடுக்க வெளியே வந்தவன் சற்று முன்னர் வந்த நம்பருக்கு கால் பண்ண,அந்த பக்கம் அட்டென் பண்ணியவர் தம்பி உங்களுடைய பாட்டி நகை கடைக்கு வந்துருக்காங்க நீங்க வர சொன்னிங்கன்னு சொல்றாங்க...

ஆமாங்க ணா இதோ வரேன் என்று சொல்லி ஃபோனை வைத்தவன் தாலி எடுக்க அப்பாயியை வரச் சொல்லிருக்கிறேன்.

நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்குனு சொல்லிருக்கிறேன்.அங்கு வந்து ஏடாகூடமா வாயை திறந்த குருத்து எலும்பிலே மிதிப்பேன் என்று கண்ணனிடம் சொல்ல,அடப்பாவி....!!!

பிளானோட தான் இருக்கியா டா??

மூடிட்டு வா என்றவாறு வெளியே வந்த செழியன் தனது வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் பெரிய நகை கடைக்கு செல்ல,என் விதி என்றவாறு கண்ணனும் அவன் பின்னாடியே வந்தான்.

வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே போக அங்கே விருமாயி பாட்டி உட்கார்ந்தருந்தார்.நேராக பாட்டியிடம் போனவன் வந்து ரொம்ப நேரம் ஆகுதா என்க..இல்லப்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்.

நீ தான் இன்னைக்கு வர சொன்னியே ஏதோ தாலி எடுக்கணும்னு?ஆமா அப்பாயி..நமக்கு ரொம்ப வேண்டியவங்க தான்.உன் கையால நம்ப வழக்கப்படி தாலி எடுத்துக் கொடு ..

அதுக்கு என்ன கண்ணு நம்ம மலையாத்தா புண்ணியத்துல நல்லபடியாக எடுத்துக் கொடுக்கலாமே என்றவர் கடைகாரரிடம் தாலி வகைகளை கேட்க அவரும் எடுத்துக்காட்டினார்.

அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தவர் இது தான் கண்ணு என்கவும் அதற்கு பில்லை போட்டு பாட்டியின் கையாலே வாங்க சொன்னவன் ஆசிர்வாதம் பண்ணிக் கொடு அப்பாயி...

சரி கண்ணு என்றவாறு கண்ணை மூடியவர் மலையாத்தா இந்த மாங்கல்யம் சூட போற பொண்ணு பூவும் பொட்டோடும் தீர்க்க சுமங்கலியா வாழணும் என்று சொல்லி பேரனிடம் கொடுத்தார்.

ஏ கிழவி உன் பேரனுக்கு தான் கல்யாணம் இது தெரியாமல் நீ வேற என தனக்குள் முணுமுணுத்த கண்ணனோ ரெண்டு தாத்தனுக்களும் தோலை உரித்து எடுப்பது உறுதி என சொல்லிக் கொண்டான்.

அதை வாங்கி பாக்கெட்டில் வைத்தவன் சரி அப்பாயி நீ பார்த்து போ என்கவும், நான் போறேன் கண்ணு என்றவாறு வெளியே வந்தவரை ஆட்டோவில் ஏற்றிவிட்டு கண்ணனை பார்த்தவன், சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே?

கண்ணனோ அமைதியாக இருந்தான்.

என்னடா வாயை திறக்க மாட்டேங்குற? என்க, அதான் எல்லாத்தையும் முடிவு பண்ணிட்ட தானே, என்கிட்ட எதுக்கு கேக்குற என்று கடுப்பில் கண்ணன் சொல்ல, உன்னையும் கூட்டிட்டு போக முடியாது டா புரிஞ்சிக்க...

ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் இல்லைனா நம்ப தாத்தனுங்களுக்கு சந்தேகம் வரும் எப்படியாவது சமாளி. மற்றது போன்ல பேசிக்கலாம் என்றவன் வண்டியை அங்கிருந்த ஸ்டாண்டில் போட்டுவிட்டு மதுரைக்கு பஸ் ஏறினான்.

ஏழு மணி நேரம் பயணத்தில் மாலை ஐந்து மணிக்கு எல்லாம் மதுரைக்கு வந்து இறங்க,அங்கே தீரனும் மாறனும் அவனுக்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

பஸ்ஸில் இருந்து இறங்கி வருபவனை பார்த்து இருவரும் முறைக்க,எனக்கு வேற வழி தெரியல மாமா என்கவும் அவர்களும் காதலித்து தான் கல்யாணம் பண்ணினார்கள் என்பதால் அத்தை மகனின் சூழலை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்தா டா என கார் சாவியை கொடுத்த மாறன் பத்திரமா போயிட்டு வா.எதா இருந்தாலும் எங்களுக்கு போன் பண்ணு என்க,சரி மாமா என்றவன் காரை எடுத்துக்கொண்டு சோழனூரை நோக்கி பயணமானான்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top