Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 396
- Thread Author
- #1
திருச்சி:
அன்று விடுமுறை நாள் என்றாலும் வழக்கம் போல எழுந்த மகியோ எஸ்தர் டீ கொண்டு வா டி என்கவும்,கிச்சனில் இருந்த மானசாவோ இதோடு ஒரு முடிவு கட்டுறேன் என்று பல்லை கடித்தவாறு ஹாலுக்கு வந்தவர்,உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?
நானும் பார்த்துட்டு இருக்கேன் எதற்கு எடுத்தாலும் எஸ்தர் எஸ்தர் னு... என் பேர் கூடவா மறந்துடுச்சி?
சட்டப்படி நான் தான் உரிமை உள்ள பொண்டாட்டி.அவள் உங்க ஆசை நாயகி,ஒண்ட வந்தவளென்று வாயை மூடுவதற்குள் ஓங்கி மானசாவின் கன்னத்தில் அறைந்த மகி,இன்னொரு வார்த்தை என் பொண்டாட்டியை பற்றி ஏதாவது பேசுன மனுசனா இருக்க மாட்டேன்.
ஏன் டி அவளா உன் புருஷனை பங்கு போட்டுக் கொண்டாள்?
வயிற்றில் இருக்கும் புள்ளை மேல சத்தியம் பண்ணி நீ தான டி எங்க அம்மாக்கு ஜால்ரா அடிச்ச...
என் அம்மாவை எப்படி சமாளிக்கணுமென்று எனக்கு தெரியாதா டி?
பெரிய புடுங்கி போல வார்த்தையை விட்டது நீ... இன்னைக்கு அவள் எங்கே போனானே தெரியலையே?இத்தனைக்கும் நீ ஒருத்தி தான் டி காரணம்.
எங்கம்மா அருவாமனையை கழுத்தில் வச்சிருந்தால் உடனே வெட்டிக்கொண்டு செத்துடுவாங்களா?எனக்கு தெரியாதா என் அம்மாவை பற்றி...
படிச்சு படிச்சு சொன்னேன் இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்.எனக்கு
கல்யாணம் ஆயிடுச்சு குழந்தை இருக்கு இன்னொரு பொண்ணு வாழ்க்கை கெடுக்க வேணாம்னு,நீ கேட்டியா டி? கொஞ்சமாவது நான் சொன்னதை காது கொடுத்து நீ கேட்டியா?.
என்னை நம்பி வந்தவள் டி.அவளை தொலைச்சிட்டேன்.ஊர் உலகத்தை பொறுத்தவரை எஸ்தர் தான் என் பொண்டாட்டி.உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதை சொன்னாலும் நீ தான் இடையில் வந்தவன்னு சொல்வாங்க.
சோ...
ஒழுங்கு மரியாதையா வாய மூடிக்கொண்டு இரு.என்னை மிருகமாக்காதே...
இந்த விஷயம் என் பொண்ணுக்கு தெரிஞ்சால் என்னை பற்றி என்ன நினைப்பாள்னு தெரியலையே...
உன் யோக்கியதையே காரி துப்புற போல இருக்கு.நீ எனக்கு நியாயம் பேச வந்துட்டியாடானு கேட்டால் என் நிலை என்ன ஆக டி??? என்று மனதில் உள்ளதை எல்லாம் மகி கொட்டும் போது அவரின் செல் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்து பார்த்தவர் அட்டென் பண்ணி சொல்லு ராணி,எப்படி இருக்க?
மாமா,அத்தை பாபுலாம் நல்லாருக்காங்களா?
உன் அண்ணி பற்றி எதாவது தெரிந்ததாயென கேள்விகளை அடுக்க,இதையெல்லாம் அந்த பக்கமிருந்து கேட்ட ராணிக்கு நம்ப அண்ணன் தான் இவ்வளவு அமைதியாக பேசுறாரா?
ஒருவேளை நம்பர் மாற்றி பண்ணிட்டோமா என்று காதில் இருந்த போனை எடுத்து பார்த்தவர் அண்ணா தான் என்றவாறு தனக்குள் சொல்லியபடி மீண்டும் காதில் வைக்க...
ராணி...
ராணி.... கேட்குதா என்க..
ம் ணா...
"நெட்வொர்க் பிரச்சினை போல ணா"
இங்கு எல்லாரும் நல்லாருக்கோம் ணா.அங்கு நீங்களும் அண்ணியும் நலமா?
"ஹம் இருக்கோம் மா"
என்ன திடீர்னு உனக்கு அண்ணன் ஞாபகம் வந்திருக்கு?நான் போன் பண்ணினாலும் எடுக்க மாட்டியே மா..
அது வந்து ணா உன் மருமகனுக்கு வரும் 7 ஆம் தேதி நிச்சயதார்த்தம் இருக்கே,உனக்கு ஞாபகம் இல்லையா என்று ராணி கேட்க,அட ஆமா இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு.
வேலையில் இருக்கிற டென்ஷன்ல அதை மறந்துட்டேன் மா.அங்கு சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் சொல்லியாச்சா என்று மகி கேட்க,ஆச்சு ணா.நானும் மாமாவும் தான் போய் சொல்லிட்டு வந்தோம்..
ஓஓஓ சரி மா..
நீங்கள் திருச்சி ரீச்சாகும் போது சொல்லு நான் வந்துடுறேன் மா.ஹம் ணா அண்ணி என்று ராணி தயங்க..
அதை பார்க்கலாமென்று அழைப்பை துண்டித்தவர் கண்ணீரோடு நிற்கும் மனைவியை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றார்..
மேதினூர்:
மூடியிருக்கும் கையை செழியன் விலக்க,எதிரில் இருப்பது அவளுக்கு மங்களாக தெரிந்தது.
பின்னர் கண்களை கசக்கி விட்டு பார்த்தவளோ பனிக்கட்டிகள் உறைந்தது போல் உறைந்து போய் நிற்பவளின் பின்னாலிருந்து அணைத்தவன்,எப்படி டி இருக்கு?
இந்த இடம் உனக்கு என்ன ஞாபகம் படுத்துது சொல்லு பார்க்கலாம்?
ஒரு நாள் நள்ளிரவில் ஒரு பொண்ணு கனவு கண்டு என்கிட்ட கனவில் நடந்த விஷயத்தையும் அந்த சூழலையும் சொன்னாள்..
அவள் கனவை நினைவாக்கணும்னு மனசு படுத்தி எடுத்துச்சு..ஏதோ என்னால் முடிந்ததை வைத்து இதை உருவாக்கியிருக்கேன்.
இந்த ஏழையோட பரிசு அவளுக்கு பிடிச்சிருக்கா?
கணவனின் ஒவ்வொரு வார்தைகளில் இருக்கும் காதலோ கோடி பூக்களை கொட்டியது போல உள்ளம் கர்வத்தில் மிதத்தாலும்,மறந்தும் வாயை திறக்கவில்லை.
அவளின் அமைதியை பார்த்தவன் ஏன் டி இப்படி?
"ஏதாவது வாயை திறந்து பேசு டி"
உன்னோட இந்த அமைதி நெஞ்சை பிளக்குது டி.தயவு செய்து ஒரு முறை உன் புருஷனை மன்னிச்சிடு டி என்று செழியன் கெஞ்ச,ஷமீராவோ சிறிதும் மனமிறங்கவில்லை
அவள் மனமோ கண்ணுக்கு முன்னால் இருக்கும் மலையை ரசிப்பதா,இல்லை பஞ்சு போன்ற மேகத்தை ரசிப்பதா, இல்லை இயற்கை எழிலோடு இருக்கும் அந்த சூழலை ரசிப்பதாக,இல்லை கணவனின் காதலை ரசிப்பதா?என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனாள்.
மேகங்களோ வெண் போர்வை போல அந்த உயர்ந்த மலையில் அங்கங்கே இருப்பதை பார்த்தவளுக்கு கையை நீட்டி அதை தொடணும் போல எண்ணம் வர அவளையும் மறந்து வலது கையை நீட்டினாள்.
மனைவியின் செய்கையை கண்டவனோ அவள் நினைப்பது புரிந்ததும் குனிந்து அவளை தூக்க, இப்போது முன்பை விட உயரத்தில் இருப்பது போல தோன்றவும் இரண்டு கைகளை விரித்து கண்களை மூடி அந்த சூழலை ரசித்தாள்.
செழியனோ கையிலிருப்பவளை ஒரு சுத்து சுற்ற மேக கூட்டத்தில் ஒரு பகுதி அவளை தழுவி செல்லும் போது கண்களை திறந்தவளோ இயற்கையின் பேரழகில் தன்னையே தொலைத்தாள்
"மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தது".
அந்த இரண்டு நாளிலும் மகாராணிக்கு சேவகன் போல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மனைவிக்கு பணிவிடை செய்ய,கணவனை பார்க்க பாவமாக இருந்தாலும் ஷமீரா மட்டும் மனமிறங்கி வரவில்லை.
வழக்கம் போல அதிகாலையில் எழுந்து மாடிக்கு வந்தவள் இயற்கையை ரசிக்கும் போது இந்தா டி என்று ஒரு கப்பை நீட்டியவன் பேக்கிங் பண்ணிட்டு ரெடியாகு.நாம ஊருக்கு கிளம்பணுமென்க...
அவளோ காபியை ரசித்து குடிக்க..
"சண்டாளி"
இன்னும் எவ்வளவு தான் டி நான் கெஞ்ச?
பெண் மனம் இளகியதுனு எந்த பரதேசி பயல் சொன்னது?அந்த நாய் மட்டும் கையில் கிடைச்சது அடிச்சே கொல்லுவேன்.
ஆளை பார்க்க தான் சாப்ட் போல இருக்காள்.ஆனா கோவத்தில் பெரிய சொர்ணாக்காவா இருக்காளே...
என்னைக்கு மனசு இறங்கி வருவாளோ என்று புலம்பிக் கொண்டே செழியன் கீழே போக, உடலில் ஏற்படுத்திய காயத்தை விட மனது காயமாக இருந்ததால் அந்த சூழலில் இருந்து அவளால் வெளிவர முடியாமல் இருந்தாள்.
சிறிது நிமிடங்கள் நின்று அந்த சுற்றத்தை ரசித்தவள் பின்னர் கீழே இறங்கி வந்து ஊருக்கு போவதற்காக பேக்கிங் பண்ணி முடித்து ரெடியாக,உள்ளே வந்த செழியனும் ரெடி ஆகி வெளியே போய் காரை எடுத்தான்.
ஷமீரா லக்கேஜோடு வெளியே வந்ததும் அதை வாங்கி டிக்கியில் வைத்தவன் பின்னர் அங்கிருந்த சுவற்றில் உள்ள நம்பரில் டோர் லாக் பண்ண,அந்த வீடு முழுவதுமே பெரிய இரும்பு கிரில்லால் மூடப்பட்டது.
இதை பார்த்தவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை,எப்படி இது சாத்தியம் என்று அதிர்ந்து போனாள்.
அந்நேரம் ஹாரன் சத்தம் கேட்டு ஷமீரா திரும்பி பார்க்க,ஹெல்மெட் போட்ட பெண்ணொருத்தி ஸ்கூட்டியில வந்து இறங்கியவள் வேகமாக வந்து செழியனை அடிக்க,அவனோ ஏய் செல்லம் வேண்டாம் வலிக்குது என்று சிரித்தபடியே சத்தமிட்டான்.
தாவணி பாவடையில் பாம்பு போன்ற நீண்ட பின்னலோடு அழகாய் இருப்பவளை பார்த்த ஷமீராவிற்கு கணவன் மேலே கோவமும்,யாரென்று தெரியாத பெண்ணவளின் மேலே கொஞ்சம் பொறாமையும் வந்தது....
"அய்யோ செல்லம் பிளீஸ் வலிக்குது"
உன் இளா பாவம் இல்லையா?
இது நியாயமா என்று செழியன் கதர...
இளாவாஆஆஆ..!!!
என்னை போல இளானு கூப்பிடும் அளவிற்கு உரிமையானவளா?
யார் இவள்?
போதாததற்கு செல்லம் னு இந்த மனுஷன் கூப்பிடுறாரே,என்ன சங்கதியென தனக்குள் சொல்லிக் கொண்டபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
செழியனை அடித்துக் கொண்டிருந்த புதிய பெண்ணவளோ எதுவும் சொல்லாமல் செழியனை அணைத்துக் கொண்டு அழ...
ஷமீராவிற்கோ எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல இருந்தது...
செழியனோ அழும் பெண்ணவளின் தலையை தடவி விட்டு சமாதானம் பண்ணியவாறு திரும்பி மனைவியை பார்க்க அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் அள்ளிப் போட்டால் கருகிவிடும் போல,அந்த அளவுக்கு அனல் அடித்தது.
ஆஹா செழியா,உன் பொண்டாட்டிக்கு பொறாமை வந்துடுச்சு டா.சூப்பரூ.. மூணு நாளா வாயை திறக்காதவள் இப்ப வெடிச்சு சிதற போறாள்.அப்படியே லிப் லாக் அடிச்சு சமாதானப்படுத்திட வேண்டியதுதான் என்க...
அவன் மனசாட்சியோ,அட மானங்கெட்டவனே இதெல்லாம் ஒரு பொழப்பா என்றதோ த்தூஊஊ என்று துப்பியது.
அழுது கொண்டிருந்தவளோ ம்ம் என மூக்கை உறிஞ்சியபடி கண்களை துடைத்தவள் பின்னர் செழியனிடமிருந்து விலகி போனவள் ஸ்கூட்டியில் மாட்டியிருக்கும் பேகை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி நிற்கும் ஷமீராவிடம் வந்து ஹலோ அண்ணி...
நான் தான் உங்க புருஷனுடைய செல்ல மான தங்கச்சி செல்லக்கண்ணு.இதை உங்களிடம் கொடுக்குமாறு உங்கள் சின்ன மாமியார் சொன்னாங்க என்று பையை நீட்ட...
என்னடா நடக்குது என்று ஷமீரா முழித்தாள்.
மனைவியின் பார்வையை உணர்ந்தவன் இந்த அறுந்தவாளு தான் வெற்றியோட மாமா பொண்ணு.என்னோட பிரியமான தங்கச்சி.மேடம் ஆபிஸ் விஷயமாக நார்த்திற்கு போயிருந்தாங்க.அதனால் தான் நம்ப பங்ஷனுக்கு வர முடியலை.
உன்னை வீட்டிற்கு கூப்பிட்டு வரச்சொல்லி ரொம்ப அடம்.நம்மால் தான் போக முடியாத சூழலென்று மனைவிக்கு விளக்க...
ஓஓஓ என்றாள்!!!
என்ன ணா மதனி இம்புட்டு அமைதியான புள்ளையா இருக்காக...பாவம்..இந்த அப்பாவி போய் உனக்கு பொண்டாட்டியா என்று வருத்தமாக செல்லா சொல்ல...
அட கிரகமே...
"இவளா அமைதி"
ஏழு ஊர் வாய் என் பொண்டாட்டிக்கு என்று தனக்குள்ளே முணவியவன் ஆமா செல்லம் உன் அண்ணி அமைதிக்கான நோபல் பரிசை வருஷா வருஷம் வாங்கிட்டு இருக்காள்.
வேண்டும்னா நீ வந்து எடுத்து போ டா.
அண்ணி ஒன்னும் சொல்லமாட்டாள் என்றவாறு மனைவியை பார்த்து கண்ணடித்தான்.
அன்று விடுமுறை நாள் என்றாலும் வழக்கம் போல எழுந்த மகியோ எஸ்தர் டீ கொண்டு வா டி என்கவும்,கிச்சனில் இருந்த மானசாவோ இதோடு ஒரு முடிவு கட்டுறேன் என்று பல்லை கடித்தவாறு ஹாலுக்கு வந்தவர்,உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?
நானும் பார்த்துட்டு இருக்கேன் எதற்கு எடுத்தாலும் எஸ்தர் எஸ்தர் னு... என் பேர் கூடவா மறந்துடுச்சி?
சட்டப்படி நான் தான் உரிமை உள்ள பொண்டாட்டி.அவள் உங்க ஆசை நாயகி,ஒண்ட வந்தவளென்று வாயை மூடுவதற்குள் ஓங்கி மானசாவின் கன்னத்தில் அறைந்த மகி,இன்னொரு வார்த்தை என் பொண்டாட்டியை பற்றி ஏதாவது பேசுன மனுசனா இருக்க மாட்டேன்.
ஏன் டி அவளா உன் புருஷனை பங்கு போட்டுக் கொண்டாள்?
வயிற்றில் இருக்கும் புள்ளை மேல சத்தியம் பண்ணி நீ தான டி எங்க அம்மாக்கு ஜால்ரா அடிச்ச...
என் அம்மாவை எப்படி சமாளிக்கணுமென்று எனக்கு தெரியாதா டி?
பெரிய புடுங்கி போல வார்த்தையை விட்டது நீ... இன்னைக்கு அவள் எங்கே போனானே தெரியலையே?இத்தனைக்கும் நீ ஒருத்தி தான் டி காரணம்.
எங்கம்மா அருவாமனையை கழுத்தில் வச்சிருந்தால் உடனே வெட்டிக்கொண்டு செத்துடுவாங்களா?எனக்கு தெரியாதா என் அம்மாவை பற்றி...
படிச்சு படிச்சு சொன்னேன் இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்.எனக்கு
கல்யாணம் ஆயிடுச்சு குழந்தை இருக்கு இன்னொரு பொண்ணு வாழ்க்கை கெடுக்க வேணாம்னு,நீ கேட்டியா டி? கொஞ்சமாவது நான் சொன்னதை காது கொடுத்து நீ கேட்டியா?.
என்னை நம்பி வந்தவள் டி.அவளை தொலைச்சிட்டேன்.ஊர் உலகத்தை பொறுத்தவரை எஸ்தர் தான் என் பொண்டாட்டி.உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதை சொன்னாலும் நீ தான் இடையில் வந்தவன்னு சொல்வாங்க.
சோ...
ஒழுங்கு மரியாதையா வாய மூடிக்கொண்டு இரு.என்னை மிருகமாக்காதே...
இந்த விஷயம் என் பொண்ணுக்கு தெரிஞ்சால் என்னை பற்றி என்ன நினைப்பாள்னு தெரியலையே...
உன் யோக்கியதையே காரி துப்புற போல இருக்கு.நீ எனக்கு நியாயம் பேச வந்துட்டியாடானு கேட்டால் என் நிலை என்ன ஆக டி??? என்று மனதில் உள்ளதை எல்லாம் மகி கொட்டும் போது அவரின் செல் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்து பார்த்தவர் அட்டென் பண்ணி சொல்லு ராணி,எப்படி இருக்க?
மாமா,அத்தை பாபுலாம் நல்லாருக்காங்களா?
உன் அண்ணி பற்றி எதாவது தெரிந்ததாயென கேள்விகளை அடுக்க,இதையெல்லாம் அந்த பக்கமிருந்து கேட்ட ராணிக்கு நம்ப அண்ணன் தான் இவ்வளவு அமைதியாக பேசுறாரா?
ஒருவேளை நம்பர் மாற்றி பண்ணிட்டோமா என்று காதில் இருந்த போனை எடுத்து பார்த்தவர் அண்ணா தான் என்றவாறு தனக்குள் சொல்லியபடி மீண்டும் காதில் வைக்க...
ராணி...
ராணி.... கேட்குதா என்க..
ம் ணா...
"நெட்வொர்க் பிரச்சினை போல ணா"
இங்கு எல்லாரும் நல்லாருக்கோம் ணா.அங்கு நீங்களும் அண்ணியும் நலமா?
"ஹம் இருக்கோம் மா"
என்ன திடீர்னு உனக்கு அண்ணன் ஞாபகம் வந்திருக்கு?நான் போன் பண்ணினாலும் எடுக்க மாட்டியே மா..
அது வந்து ணா உன் மருமகனுக்கு வரும் 7 ஆம் தேதி நிச்சயதார்த்தம் இருக்கே,உனக்கு ஞாபகம் இல்லையா என்று ராணி கேட்க,அட ஆமா இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு.
வேலையில் இருக்கிற டென்ஷன்ல அதை மறந்துட்டேன் மா.அங்கு சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் சொல்லியாச்சா என்று மகி கேட்க,ஆச்சு ணா.நானும் மாமாவும் தான் போய் சொல்லிட்டு வந்தோம்..
ஓஓஓ சரி மா..
நீங்கள் திருச்சி ரீச்சாகும் போது சொல்லு நான் வந்துடுறேன் மா.ஹம் ணா அண்ணி என்று ராணி தயங்க..
அதை பார்க்கலாமென்று அழைப்பை துண்டித்தவர் கண்ணீரோடு நிற்கும் மனைவியை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றார்..
மேதினூர்:
மூடியிருக்கும் கையை செழியன் விலக்க,எதிரில் இருப்பது அவளுக்கு மங்களாக தெரிந்தது.
பின்னர் கண்களை கசக்கி விட்டு பார்த்தவளோ பனிக்கட்டிகள் உறைந்தது போல் உறைந்து போய் நிற்பவளின் பின்னாலிருந்து அணைத்தவன்,எப்படி டி இருக்கு?
இந்த இடம் உனக்கு என்ன ஞாபகம் படுத்துது சொல்லு பார்க்கலாம்?
ஒரு நாள் நள்ளிரவில் ஒரு பொண்ணு கனவு கண்டு என்கிட்ட கனவில் நடந்த விஷயத்தையும் அந்த சூழலையும் சொன்னாள்..
அவள் கனவை நினைவாக்கணும்னு மனசு படுத்தி எடுத்துச்சு..ஏதோ என்னால் முடிந்ததை வைத்து இதை உருவாக்கியிருக்கேன்.
இந்த ஏழையோட பரிசு அவளுக்கு பிடிச்சிருக்கா?
கணவனின் ஒவ்வொரு வார்தைகளில் இருக்கும் காதலோ கோடி பூக்களை கொட்டியது போல உள்ளம் கர்வத்தில் மிதத்தாலும்,மறந்தும் வாயை திறக்கவில்லை.
அவளின் அமைதியை பார்த்தவன் ஏன் டி இப்படி?
"ஏதாவது வாயை திறந்து பேசு டி"
உன்னோட இந்த அமைதி நெஞ்சை பிளக்குது டி.தயவு செய்து ஒரு முறை உன் புருஷனை மன்னிச்சிடு டி என்று செழியன் கெஞ்ச,ஷமீராவோ சிறிதும் மனமிறங்கவில்லை
அவள் மனமோ கண்ணுக்கு முன்னால் இருக்கும் மலையை ரசிப்பதா,இல்லை பஞ்சு போன்ற மேகத்தை ரசிப்பதா, இல்லை இயற்கை எழிலோடு இருக்கும் அந்த சூழலை ரசிப்பதாக,இல்லை கணவனின் காதலை ரசிப்பதா?என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனாள்.
மேகங்களோ வெண் போர்வை போல அந்த உயர்ந்த மலையில் அங்கங்கே இருப்பதை பார்த்தவளுக்கு கையை நீட்டி அதை தொடணும் போல எண்ணம் வர அவளையும் மறந்து வலது கையை நீட்டினாள்.
மனைவியின் செய்கையை கண்டவனோ அவள் நினைப்பது புரிந்ததும் குனிந்து அவளை தூக்க, இப்போது முன்பை விட உயரத்தில் இருப்பது போல தோன்றவும் இரண்டு கைகளை விரித்து கண்களை மூடி அந்த சூழலை ரசித்தாள்.
செழியனோ கையிலிருப்பவளை ஒரு சுத்து சுற்ற மேக கூட்டத்தில் ஒரு பகுதி அவளை தழுவி செல்லும் போது கண்களை திறந்தவளோ இயற்கையின் பேரழகில் தன்னையே தொலைத்தாள்
"மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தது".
அந்த இரண்டு நாளிலும் மகாராணிக்கு சேவகன் போல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மனைவிக்கு பணிவிடை செய்ய,கணவனை பார்க்க பாவமாக இருந்தாலும் ஷமீரா மட்டும் மனமிறங்கி வரவில்லை.
வழக்கம் போல அதிகாலையில் எழுந்து மாடிக்கு வந்தவள் இயற்கையை ரசிக்கும் போது இந்தா டி என்று ஒரு கப்பை நீட்டியவன் பேக்கிங் பண்ணிட்டு ரெடியாகு.நாம ஊருக்கு கிளம்பணுமென்க...
அவளோ காபியை ரசித்து குடிக்க..
"சண்டாளி"
இன்னும் எவ்வளவு தான் டி நான் கெஞ்ச?
பெண் மனம் இளகியதுனு எந்த பரதேசி பயல் சொன்னது?அந்த நாய் மட்டும் கையில் கிடைச்சது அடிச்சே கொல்லுவேன்.
ஆளை பார்க்க தான் சாப்ட் போல இருக்காள்.ஆனா கோவத்தில் பெரிய சொர்ணாக்காவா இருக்காளே...
என்னைக்கு மனசு இறங்கி வருவாளோ என்று புலம்பிக் கொண்டே செழியன் கீழே போக, உடலில் ஏற்படுத்திய காயத்தை விட மனது காயமாக இருந்ததால் அந்த சூழலில் இருந்து அவளால் வெளிவர முடியாமல் இருந்தாள்.
சிறிது நிமிடங்கள் நின்று அந்த சுற்றத்தை ரசித்தவள் பின்னர் கீழே இறங்கி வந்து ஊருக்கு போவதற்காக பேக்கிங் பண்ணி முடித்து ரெடியாக,உள்ளே வந்த செழியனும் ரெடி ஆகி வெளியே போய் காரை எடுத்தான்.
ஷமீரா லக்கேஜோடு வெளியே வந்ததும் அதை வாங்கி டிக்கியில் வைத்தவன் பின்னர் அங்கிருந்த சுவற்றில் உள்ள நம்பரில் டோர் லாக் பண்ண,அந்த வீடு முழுவதுமே பெரிய இரும்பு கிரில்லால் மூடப்பட்டது.
இதை பார்த்தவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை,எப்படி இது சாத்தியம் என்று அதிர்ந்து போனாள்.
அந்நேரம் ஹாரன் சத்தம் கேட்டு ஷமீரா திரும்பி பார்க்க,ஹெல்மெட் போட்ட பெண்ணொருத்தி ஸ்கூட்டியில வந்து இறங்கியவள் வேகமாக வந்து செழியனை அடிக்க,அவனோ ஏய் செல்லம் வேண்டாம் வலிக்குது என்று சிரித்தபடியே சத்தமிட்டான்.
தாவணி பாவடையில் பாம்பு போன்ற நீண்ட பின்னலோடு அழகாய் இருப்பவளை பார்த்த ஷமீராவிற்கு கணவன் மேலே கோவமும்,யாரென்று தெரியாத பெண்ணவளின் மேலே கொஞ்சம் பொறாமையும் வந்தது....
"அய்யோ செல்லம் பிளீஸ் வலிக்குது"
உன் இளா பாவம் இல்லையா?
இது நியாயமா என்று செழியன் கதர...
இளாவாஆஆஆ..!!!
என்னை போல இளானு கூப்பிடும் அளவிற்கு உரிமையானவளா?
யார் இவள்?
போதாததற்கு செல்லம் னு இந்த மனுஷன் கூப்பிடுறாரே,என்ன சங்கதியென தனக்குள் சொல்லிக் கொண்டபடி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
செழியனை அடித்துக் கொண்டிருந்த புதிய பெண்ணவளோ எதுவும் சொல்லாமல் செழியனை அணைத்துக் கொண்டு அழ...
ஷமீராவிற்கோ எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல இருந்தது...
செழியனோ அழும் பெண்ணவளின் தலையை தடவி விட்டு சமாதானம் பண்ணியவாறு திரும்பி மனைவியை பார்க்க அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் அள்ளிப் போட்டால் கருகிவிடும் போல,அந்த அளவுக்கு அனல் அடித்தது.
ஆஹா செழியா,உன் பொண்டாட்டிக்கு பொறாமை வந்துடுச்சு டா.சூப்பரூ.. மூணு நாளா வாயை திறக்காதவள் இப்ப வெடிச்சு சிதற போறாள்.அப்படியே லிப் லாக் அடிச்சு சமாதானப்படுத்திட வேண்டியதுதான் என்க...
அவன் மனசாட்சியோ,அட மானங்கெட்டவனே இதெல்லாம் ஒரு பொழப்பா என்றதோ த்தூஊஊ என்று துப்பியது.
அழுது கொண்டிருந்தவளோ ம்ம் என மூக்கை உறிஞ்சியபடி கண்களை துடைத்தவள் பின்னர் செழியனிடமிருந்து விலகி போனவள் ஸ்கூட்டியில் மாட்டியிருக்கும் பேகை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி நிற்கும் ஷமீராவிடம் வந்து ஹலோ அண்ணி...
நான் தான் உங்க புருஷனுடைய செல்ல மான தங்கச்சி செல்லக்கண்ணு.இதை உங்களிடம் கொடுக்குமாறு உங்கள் சின்ன மாமியார் சொன்னாங்க என்று பையை நீட்ட...
என்னடா நடக்குது என்று ஷமீரா முழித்தாள்.
மனைவியின் பார்வையை உணர்ந்தவன் இந்த அறுந்தவாளு தான் வெற்றியோட மாமா பொண்ணு.என்னோட பிரியமான தங்கச்சி.மேடம் ஆபிஸ் விஷயமாக நார்த்திற்கு போயிருந்தாங்க.அதனால் தான் நம்ப பங்ஷனுக்கு வர முடியலை.
உன்னை வீட்டிற்கு கூப்பிட்டு வரச்சொல்லி ரொம்ப அடம்.நம்மால் தான் போக முடியாத சூழலென்று மனைவிக்கு விளக்க...
ஓஓஓ என்றாள்!!!
என்ன ணா மதனி இம்புட்டு அமைதியான புள்ளையா இருக்காக...பாவம்..இந்த அப்பாவி போய் உனக்கு பொண்டாட்டியா என்று வருத்தமாக செல்லா சொல்ல...
அட கிரகமே...
"இவளா அமைதி"
ஏழு ஊர் வாய் என் பொண்டாட்டிக்கு என்று தனக்குள்ளே முணவியவன் ஆமா செல்லம் உன் அண்ணி அமைதிக்கான நோபல் பரிசை வருஷா வருஷம் வாங்கிட்டு இருக்காள்.
வேண்டும்னா நீ வந்து எடுத்து போ டா.
அண்ணி ஒன்னும் சொல்லமாட்டாள் என்றவாறு மனைவியை பார்த்து கண்ணடித்தான்.