Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
டெல்லி-மினிஸ்டர் அமர்நாத் வீடு:
ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்து ஒரு வாரம் ஹாஸ்பிடலில் டாக்டரின் கண்காணிப்பில் வைத்திருந்து மீண்டும் டாக்டர் கர்ணன் செக் பண்ணி பார்க்க குழந்தை நல்லா இருக்காள் என்று சொன்ன பிறகு பேத்தியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு அமர்நாத் ஏற்பாடு பண்ணியிருந்தார்.
அந்த பங்களாவோ வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க குழந்தையின் நலனுக்காக பூஜை செய்வதற்காக வந்திருந்த பண்டிதர்களுக்கு எண்ணற்ற பரிசுகளை அமர்நாத்தும் அவன் பொண்டாட்டியும் அள்ளி கொடுத்தனர்.
சேது ஒரு நாளைக்கு அந்த டாக்டர் பேமிலியை நம்ம வீட்டுக்கு லஞ்சுக்கு வர சொல்லு நம்ப புள்ளையோட உயிரை அந்த பையன் காப்பாற்றி கொடுத்து இருக்கிறான் அவன் என்ன கேட்டாலும் கொடுக்குறதுக்கு நம்ம கடமைப்பட்டிருக்கோம்.
ஆனா அந்த பொண்ணுங்களை பார்த்தால் எதுவும் வாங்குற போல தெரியல ஒருநாள் நம்ம வீட்டில் சாப்பிட கூப்பிட்டு பெருமை படுத்தலாமே என்கவும்,சார் டாக்டர் ருத்ரனுடைய அப்பாயிண்ட்மெண்ட் பற்றி ஹாஸ்பிடல் விசாரிச்சேன்.
இன்னும் ஒரு மாதம் வரைக்கும் அவர் எங்குமே நகர முடியாது.அவருக்கு சில ஆபரேஷன் இருக்கு என்று சொல்ல, அப்படியா சரி நம்ம குழந்தையும் கொஞ்சம் நல்லா ஆகட்டும் அவளை நேரடியாக கூப்பிட்டு அவங்க வீட்டுக்கு போகலாம் என்க,சரிங்க சார் என்றான்.
வனிச்சூர்:
கண்டிப்பா உன்கிட்ட இதைவிட ரொம்ப மோசமாக நடந்துப்பேன் டி.ஆளு பார்க்க எப்படி இருக்கேனோ அதை விட பல மடங்கு என் செயல் இருக்கும்.அது உன் கிட்ட மட்டுமே.அதனால் நீ என்னை சமாளிக்க ரெடியா இருக்கிறது ரொம்ப நல்லது செல்லமென்று கண்ணடித்து சொல்ல...
ஆமா "இவரு பெரிய வீராதி வீரன் சூராதி சூரன்" இவருக்கு நாங்க பயப்படுறாங்க போயா போயா என்று ஷமீராவும் வாயாட,ஓஓஓ அப்படியா டி.
சரி டி இன்னைக்கு பாத்துரலாமா என்க, பார்க்கலாமே அப்படி என்ன பண்ணிடுவீங்க?
இந்த கொய்யாக்கு நான் பயப்பட என்று ஷமீரா முறைக்க,இந்த வாய் அப்ப என்ன சொல்லுதுன்னு பார்க்க தாண்டி போறேன் என்றவன்,சாப்பிட்டு எழுந்து வாஷ்பேஷனில் போய் கையை கழுவிட்டு வந்து மனைவியின் இடுப்பில் சொருகியிருக்கும் முந்தானை எடுத்து அதில் கை மற்றும் வாயை துடைத்தான்.
கணவன் இப்படி செய்வான் என்பதை எதிர்பார்க்காதே ஷமீராவோ அதிர்ந்து போய் நிற்க,காலையிலேயே மல்லிப்பூ வச்சிட்டு இப்படி கும்முனு இருக்கியே மனசு எப்படி தடுமாறுது தெரியுமா டி என்கவும் அதில் சுதாரித்தவள் போயா அங்கிட்டு...
போய் சோபாவில் உட்காருங்கள் டீ எடுத்துட்டு வரேன்னென்க,சரிங்க பொண்டாட்டி.நீங்க சொல்லிட்டீங்க இல்லையா அதுக்கு அப்பீலே கிடையாது என்று சிரித்துக் கொண்டே ஹாலுக்கு போனவன் டிவியை ஆன் பண்ணிட்டு வந்து உட்கார்ந்தான்.
சிறிது நிமிடத்தில் ஷமீராவும் டீ டம்ளரோடு அங்கு வந்தவள் 2 அடி தள்ளி நின்று டீயை நீட்ட,மனைவியின் முன்னெச்சரிக்கையை பார்த்து சிரித்தவன் வீட்டில் பூஜை இருக்கு செல்லம்,அதனால் இப்போது மாமாக்கு ரொமான்ஸ் பண்ண மூடு இல்லை.
உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் தாராளமா கிட்டே வந்து கொடு என்கவும் சாமி பேரை சொல்வதால் ஷமீராவும் நம்பி அருகில் வர,அவளிடமிருந்து டீ வாங்கும்போது வலது கையால் அவளின் கையை பிடித்து இழுத்து தன்னோடு சோபாவில் உட்கார வைத்தவன் மேடம் ரொம்ப தற்காப்பு பிளானோடு இருக்கீங்களோ என்று அவள் தலையோடு முட்டி கேட்டவன் முதல்ல நீ டீ குடி என்கவும் எதேஏஏ டீ யாஆஆஆஆ என்றவள் முடியாது என்று தலையை அசைத்தாள்.
நீயா ரெண்டு வாய் குடிச்சிட்டு கொடுத்தா நல்லது செல்லம்.இல்லன்னா உன் புருசன் அவனுடைய ஸ்டைல்ல தான் உனக்கு டீ குடுக்குற போல இருக்கும்.உனக்கு எப்படி வசதி என்பதை நீ யோசிச்சுக்கோ என்றான்.
ஐயோ இளா எனக்கு டீ பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா ப்ளீஸ் எனக்கு வேண்டாமென்க,முடியாது இந்தா நீ குடிச்சிட்டு கொடு அப்பதான் நான் குடிப்பேன் என்றான்.
ஏன் தான் இப்படி பண்ணுறீங்க?
எனக்கு பிடிக்காத ஒன்றை செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம்?என்க,உனக்கு பிடிக்காதுனு எனக்கு நல்லா தெரியும் தான் செல்லம் ஆனா எல்லாரும் சொல்லுவாங்க இல்ல பொண்டாட்டி எச்சில் பட்டால் அது தேவாமிர்தம் போல இனிக்கும்னு அதை நானும் செக் பண்ணி பார்க்க வேண்டாமா?
"அதுக்காக தான் டி சொல்றேன்"
நீ சும்மா ஒரு வாய் குடி உன் இதழ் இந்த கோப்பையில் பட்டாவே அது போதும் மாமா சொர்க்கத்திற்கு போன போல ஆகிடுவேனென்று கண்ணடித்து செழியன் சொல்ல....
அவன் சொன்னதை கேட்டவள்,ஆமா எப்போ பார்த்தாலும் மாமா மாமான்னு சொல்றிங்களே எவன் அந்த மாமா எனக்கு தெரியாம என்று கணவனை வெறுப்பேத்தி பார்ப்பதற்காக ஷமீரா கேட்க...
"சொல்லால் அடித்த சுந்தரி மனம் சுட்டுவிட்டு கோலம் என்னடி" என்று செழியன் பாட..ஐயோ கடவுளே நான் கேட்ட கேள்விக்கு நீங்க என்ன பாடுறீங்களென்று சொல்லவும் சீக்கிரம் நீ குடிச்சிட்டு குடு டி..
டீ வேற ஆறுது.
அடி மக்கு பொண்டாட்டி உன்னோடு செல்ல புருஷன் தான் டி அந்த மாமா என்று மனைவியின் நெஞ்சில் கையை வைத்து சொல்ல அதுக்கு எதுக்கு இது என்று கணவனின் கையை விரலை தட்டி விட்டவள்,நீ டீ குடிக்க வேண்டாம் போயா என்கவும் எனக்கு டீ குடித்தே ஆகணும் டி என்று பிடிவதாக செழியன் சொல்ல,ஏன் தான் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று சினுங்கினாள்.
அப்பொழுது,யாருமா வீட்ல?
வீடு தான் இவ்வளவு பெரியதாக இருக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்றதுக்கு இந்த வீட்ல மனுஷால் கிடையாது?
இந்த லட்சணத்தில் புதுசா மருமகள் வேற வந்திருக்கு என்றவாறு உள்ளே வந்த கண்மணி,அங்கிருந்த செழியனையும் ஷமீராவையும் பார்த்தவள் ரெண்டு புளி மூட்டையும் இங்கதான் இருக்கீங்களா..
ஏன் வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு என்கவும்,எதற்கு டி இப்படி வாசலில் இருந்தே கத்திட்டு வர என்று செழியன் கேட்க,என் வாய் நான் கத்துறேன் உன்னை யாரு கேட்க சொன்னா?
காதில் ஏதாச்சும் தக்கை வச்சி அடைச்சிக்க வேண்டியது தானே என்றவள்,ஏன் மாமா எரும மாடு போல வளர்ந்து இருக்கியே கொஞ்சம் கூட உனக்கு வெக்கமா இல்லை?
இப்படி நடு வீட்டில் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களே எங்களை போல சின்ன புள்ளைங்க எல்லாம் பார்த்தா என்ன ஆவது என்று கண்மணி சொல்ல,உன்னை எவன் டி பார்க்க சொன்னா என்றான்.
இப்போ பாருடா மாமாயென மனதிற்குள் நினைத்தவள் வா வா உன் மவன் அடிக்கிற கூத்தை வந்து நீயே பாருத்தை என்று சொல்ல,அய்யோ அம்மாவா என்று பதறி அடித்து செழியன் எந்திரிக்க,அத்தை மகனை பார்த்து நையாண்டி காட்டியவள் தொப்பி தொப்பி என்று சிரித்தபடி வாசல் பக்கம் பார்க்க கவிதாவோ இடுப்பில் கூடையோடு வந்து கொண்டிருந்தாள்.
இந்த பனைமரம் ஏன் இப்படி நிக்குது என்றவாறு உள்ளே வந்த கவிதா கேட்கவும்,என்ன டி அக்காளும் தங்கச்சியும் காலையே கிளம்பி வந்துட்டீங்களா எனக்கு லந்து கொடுக்க என்றான்.
ஆமா எங்களுக்கு வேற வேலை வெட்டி கிடையாது இந்த மொகரகட்டைக்கு லந்து கொடுக்க வராங்களென்று கவிதா சொல்ல,ஆளு அரைக்கா படி இருக்க...
உனக்கு இவ்வளவு வாய் எப்படி டி வந்தது என்கவும்,அதுவா போனவாரம் சந்தையில் வாய் விற்றார்கள்.அதில் நாலு வாங்கி நேற்று தான் ஆபரேஷன் பண்ணி தச்சிட்டு வந்தேன்..
வேணும்னா சொல்லு மாமா உனக்கு நாலு வாய் தைக்க சொல்றேனேன்று அத்தை மகனிடம் கவிதா சொல்ல அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு ஷமீராவுக்கு சிரிப்பு தாங்கவில்லை.
ஏன் கா வீட்டுக்கு ரெண்டு பேர் வந்திருக்குமே ஒரு டீ காபி கொடுப்போமென்றுலாம் உனக்கு தெரியாதா என்று கவிதா கேட்க,உங்க வீட்டுக்கு நீ வந்து இருக்கீங்க இதை நான் கேக்கணுமாடி என்றாள்.
ஐயோ அக்கா நெஞ்ச நக்கிட்டியே என்று கவிதா ஆக்சன் பண்ண இந்த அடங்காத மாட்டுக்கு எவன் தான் வந்து மாட்ட போறான்னு தெரியலையே ஆண்டவா என்று செழியன் மேலே பார்த்து சொல்ல,உனக்கு அந்த கவலை எல்லாம் வேண்டாம் யா...
அது என்னை கட்டிக்க போறவன் தான் வருத்தப்படணும் என்கவும் சொல்ல முடியாது டி...விதி எப்போ எப்படி மாறுமென்று தெரியாது.நானே உன்னை ரெண்டாம் தாரமாக கட்டுனாலும் கட்டுவேன் என்று செழியன் சிரிக்க..உன் முகர கட்டைக்கு அக்காவே பெருசு.
இதில் நான் வேற உனக்கு இரண்டாம் தரமா கேக்குதா என்றவள் கையில் இருந்த கூடையை தூக்கி செழியனின் மேல் எறிய அதை கேட்ச் பிடித்தவன் என்ன டி இவ்வளவு வெயிட்டாக இருக்கென்றான்.
உங்க அம்மாச்சி தான் கொடுத்து அனுப்பிருக்கு.மதியம் சமையலுக்கு காய் எல்லாம் இருக்கு மாமா என்கும் போது வீட்டிற்குள் வந்த வானதியோ தனது அண்ணன் மகள்கள் இருப்பதை பார்த்து வாங்கடா எப்போ வந்தீங்களென்றார்.
அதற்கு கவிதாவோ,நான் வந்து 18 வருஷம் ஆகுது அக்கா வந்து 25 ஆகுதே,இவ்வளவு வருஷமும் நீ கோமாவில் இருந்தியாத்தை என்க,வாய் வாய் என்று சிரித்தவர்,சாப்டீங்களா டா என்க...
எங்கே உன் அண்ணிங்க சோறு போட்டாங்க? அத்தை வீட்டுக்கு போங்க டி என்று வெறும் வயிற்றோடு எங்களை துரத்தி விட்டுட்டாங்க.
இங்க வந்தாக்கா ஒரு டீக்கு கூட வழியில்லை.ஏன் ஒரு டம்ளர் பச்ச தண்ணிக்கு கூட வழியில்லையே என்று ஷமீராவை பார்த்து கண்ணடித்துக் கொண்டு கவிதா சொல்ல,இதை கேட்ட வானதி அடியாத்தி எனக்கு மாமியார் இல்லாத குறைய நீதான் டி அம்மா தீர்த்து வைக்கிற என்று சிரித்தார்.
அம்மாடி சமீரா(ஷமீரா) தோட்டத்துல கஞ்சி தண்ணி இருக்கு,உன் தங்கச்சிக்கு எடுத்துட்டு வந்து ரெண்டு குண்டான் கொடு.நல்லா குடிப்பா என்று சொல்ல,அம்மா சூப்பர் மா என்று செழியன் சிரிக்கவும்,முதல்ல உன் மகனுக்கு கொடு இன்னும் கொஞ்சம் வளந்துட்டு போகட்டுமென்றாள்.
அப்போது "மாமா மாமா" என்று செழியனை கூப்பிட "என்னடி?" என்றான்.
கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா?
ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்து ஒரு வாரம் ஹாஸ்பிடலில் டாக்டரின் கண்காணிப்பில் வைத்திருந்து மீண்டும் டாக்டர் கர்ணன் செக் பண்ணி பார்க்க குழந்தை நல்லா இருக்காள் என்று சொன்ன பிறகு பேத்தியை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு அமர்நாத் ஏற்பாடு பண்ணியிருந்தார்.
அந்த பங்களாவோ வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க குழந்தையின் நலனுக்காக பூஜை செய்வதற்காக வந்திருந்த பண்டிதர்களுக்கு எண்ணற்ற பரிசுகளை அமர்நாத்தும் அவன் பொண்டாட்டியும் அள்ளி கொடுத்தனர்.
சேது ஒரு நாளைக்கு அந்த டாக்டர் பேமிலியை நம்ம வீட்டுக்கு லஞ்சுக்கு வர சொல்லு நம்ப புள்ளையோட உயிரை அந்த பையன் காப்பாற்றி கொடுத்து இருக்கிறான் அவன் என்ன கேட்டாலும் கொடுக்குறதுக்கு நம்ம கடமைப்பட்டிருக்கோம்.
ஆனா அந்த பொண்ணுங்களை பார்த்தால் எதுவும் வாங்குற போல தெரியல ஒருநாள் நம்ம வீட்டில் சாப்பிட கூப்பிட்டு பெருமை படுத்தலாமே என்கவும்,சார் டாக்டர் ருத்ரனுடைய அப்பாயிண்ட்மெண்ட் பற்றி ஹாஸ்பிடல் விசாரிச்சேன்.
இன்னும் ஒரு மாதம் வரைக்கும் அவர் எங்குமே நகர முடியாது.அவருக்கு சில ஆபரேஷன் இருக்கு என்று சொல்ல, அப்படியா சரி நம்ம குழந்தையும் கொஞ்சம் நல்லா ஆகட்டும் அவளை நேரடியாக கூப்பிட்டு அவங்க வீட்டுக்கு போகலாம் என்க,சரிங்க சார் என்றான்.
வனிச்சூர்:
கண்டிப்பா உன்கிட்ட இதைவிட ரொம்ப மோசமாக நடந்துப்பேன் டி.ஆளு பார்க்க எப்படி இருக்கேனோ அதை விட பல மடங்கு என் செயல் இருக்கும்.அது உன் கிட்ட மட்டுமே.அதனால் நீ என்னை சமாளிக்க ரெடியா இருக்கிறது ரொம்ப நல்லது செல்லமென்று கண்ணடித்து சொல்ல...
ஆமா "இவரு பெரிய வீராதி வீரன் சூராதி சூரன்" இவருக்கு நாங்க பயப்படுறாங்க போயா போயா என்று ஷமீராவும் வாயாட,ஓஓஓ அப்படியா டி.
சரி டி இன்னைக்கு பாத்துரலாமா என்க, பார்க்கலாமே அப்படி என்ன பண்ணிடுவீங்க?
இந்த கொய்யாக்கு நான் பயப்பட என்று ஷமீரா முறைக்க,இந்த வாய் அப்ப என்ன சொல்லுதுன்னு பார்க்க தாண்டி போறேன் என்றவன்,சாப்பிட்டு எழுந்து வாஷ்பேஷனில் போய் கையை கழுவிட்டு வந்து மனைவியின் இடுப்பில் சொருகியிருக்கும் முந்தானை எடுத்து அதில் கை மற்றும் வாயை துடைத்தான்.
கணவன் இப்படி செய்வான் என்பதை எதிர்பார்க்காதே ஷமீராவோ அதிர்ந்து போய் நிற்க,காலையிலேயே மல்லிப்பூ வச்சிட்டு இப்படி கும்முனு இருக்கியே மனசு எப்படி தடுமாறுது தெரியுமா டி என்கவும் அதில் சுதாரித்தவள் போயா அங்கிட்டு...
போய் சோபாவில் உட்காருங்கள் டீ எடுத்துட்டு வரேன்னென்க,சரிங்க பொண்டாட்டி.நீங்க சொல்லிட்டீங்க இல்லையா அதுக்கு அப்பீலே கிடையாது என்று சிரித்துக் கொண்டே ஹாலுக்கு போனவன் டிவியை ஆன் பண்ணிட்டு வந்து உட்கார்ந்தான்.
சிறிது நிமிடத்தில் ஷமீராவும் டீ டம்ளரோடு அங்கு வந்தவள் 2 அடி தள்ளி நின்று டீயை நீட்ட,மனைவியின் முன்னெச்சரிக்கையை பார்த்து சிரித்தவன் வீட்டில் பூஜை இருக்கு செல்லம்,அதனால் இப்போது மாமாக்கு ரொமான்ஸ் பண்ண மூடு இல்லை.
உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் தாராளமா கிட்டே வந்து கொடு என்கவும் சாமி பேரை சொல்வதால் ஷமீராவும் நம்பி அருகில் வர,அவளிடமிருந்து டீ வாங்கும்போது வலது கையால் அவளின் கையை பிடித்து இழுத்து தன்னோடு சோபாவில் உட்கார வைத்தவன் மேடம் ரொம்ப தற்காப்பு பிளானோடு இருக்கீங்களோ என்று அவள் தலையோடு முட்டி கேட்டவன் முதல்ல நீ டீ குடி என்கவும் எதேஏஏ டீ யாஆஆஆஆ என்றவள் முடியாது என்று தலையை அசைத்தாள்.
நீயா ரெண்டு வாய் குடிச்சிட்டு கொடுத்தா நல்லது செல்லம்.இல்லன்னா உன் புருசன் அவனுடைய ஸ்டைல்ல தான் உனக்கு டீ குடுக்குற போல இருக்கும்.உனக்கு எப்படி வசதி என்பதை நீ யோசிச்சுக்கோ என்றான்.
ஐயோ இளா எனக்கு டீ பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா ப்ளீஸ் எனக்கு வேண்டாமென்க,முடியாது இந்தா நீ குடிச்சிட்டு கொடு அப்பதான் நான் குடிப்பேன் என்றான்.
ஏன் தான் இப்படி பண்ணுறீங்க?
எனக்கு பிடிக்காத ஒன்றை செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம்?என்க,உனக்கு பிடிக்காதுனு எனக்கு நல்லா தெரியும் தான் செல்லம் ஆனா எல்லாரும் சொல்லுவாங்க இல்ல பொண்டாட்டி எச்சில் பட்டால் அது தேவாமிர்தம் போல இனிக்கும்னு அதை நானும் செக் பண்ணி பார்க்க வேண்டாமா?
"அதுக்காக தான் டி சொல்றேன்"
நீ சும்மா ஒரு வாய் குடி உன் இதழ் இந்த கோப்பையில் பட்டாவே அது போதும் மாமா சொர்க்கத்திற்கு போன போல ஆகிடுவேனென்று கண்ணடித்து செழியன் சொல்ல....
அவன் சொன்னதை கேட்டவள்,ஆமா எப்போ பார்த்தாலும் மாமா மாமான்னு சொல்றிங்களே எவன் அந்த மாமா எனக்கு தெரியாம என்று கணவனை வெறுப்பேத்தி பார்ப்பதற்காக ஷமீரா கேட்க...
"சொல்லால் அடித்த சுந்தரி மனம் சுட்டுவிட்டு கோலம் என்னடி" என்று செழியன் பாட..ஐயோ கடவுளே நான் கேட்ட கேள்விக்கு நீங்க என்ன பாடுறீங்களென்று சொல்லவும் சீக்கிரம் நீ குடிச்சிட்டு குடு டி..
டீ வேற ஆறுது.
அடி மக்கு பொண்டாட்டி உன்னோடு செல்ல புருஷன் தான் டி அந்த மாமா என்று மனைவியின் நெஞ்சில் கையை வைத்து சொல்ல அதுக்கு எதுக்கு இது என்று கணவனின் கையை விரலை தட்டி விட்டவள்,நீ டீ குடிக்க வேண்டாம் போயா என்கவும் எனக்கு டீ குடித்தே ஆகணும் டி என்று பிடிவதாக செழியன் சொல்ல,ஏன் தான் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என்று சினுங்கினாள்.
அப்பொழுது,யாருமா வீட்ல?
வீடு தான் இவ்வளவு பெரியதாக இருக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்றதுக்கு இந்த வீட்ல மனுஷால் கிடையாது?
இந்த லட்சணத்தில் புதுசா மருமகள் வேற வந்திருக்கு என்றவாறு உள்ளே வந்த கண்மணி,அங்கிருந்த செழியனையும் ஷமீராவையும் பார்த்தவள் ரெண்டு புளி மூட்டையும் இங்கதான் இருக்கீங்களா..
ஏன் வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு என்கவும்,எதற்கு டி இப்படி வாசலில் இருந்தே கத்திட்டு வர என்று செழியன் கேட்க,என் வாய் நான் கத்துறேன் உன்னை யாரு கேட்க சொன்னா?
காதில் ஏதாச்சும் தக்கை வச்சி அடைச்சிக்க வேண்டியது தானே என்றவள்,ஏன் மாமா எரும மாடு போல வளர்ந்து இருக்கியே கொஞ்சம் கூட உனக்கு வெக்கமா இல்லை?
இப்படி நடு வீட்டில் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களே எங்களை போல சின்ன புள்ளைங்க எல்லாம் பார்த்தா என்ன ஆவது என்று கண்மணி சொல்ல,உன்னை எவன் டி பார்க்க சொன்னா என்றான்.
இப்போ பாருடா மாமாயென மனதிற்குள் நினைத்தவள் வா வா உன் மவன் அடிக்கிற கூத்தை வந்து நீயே பாருத்தை என்று சொல்ல,அய்யோ அம்மாவா என்று பதறி அடித்து செழியன் எந்திரிக்க,அத்தை மகனை பார்த்து நையாண்டி காட்டியவள் தொப்பி தொப்பி என்று சிரித்தபடி வாசல் பக்கம் பார்க்க கவிதாவோ இடுப்பில் கூடையோடு வந்து கொண்டிருந்தாள்.
இந்த பனைமரம் ஏன் இப்படி நிக்குது என்றவாறு உள்ளே வந்த கவிதா கேட்கவும்,என்ன டி அக்காளும் தங்கச்சியும் காலையே கிளம்பி வந்துட்டீங்களா எனக்கு லந்து கொடுக்க என்றான்.
ஆமா எங்களுக்கு வேற வேலை வெட்டி கிடையாது இந்த மொகரகட்டைக்கு லந்து கொடுக்க வராங்களென்று கவிதா சொல்ல,ஆளு அரைக்கா படி இருக்க...
உனக்கு இவ்வளவு வாய் எப்படி டி வந்தது என்கவும்,அதுவா போனவாரம் சந்தையில் வாய் விற்றார்கள்.அதில் நாலு வாங்கி நேற்று தான் ஆபரேஷன் பண்ணி தச்சிட்டு வந்தேன்..
வேணும்னா சொல்லு மாமா உனக்கு நாலு வாய் தைக்க சொல்றேனேன்று அத்தை மகனிடம் கவிதா சொல்ல அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு ஷமீராவுக்கு சிரிப்பு தாங்கவில்லை.
ஏன் கா வீட்டுக்கு ரெண்டு பேர் வந்திருக்குமே ஒரு டீ காபி கொடுப்போமென்றுலாம் உனக்கு தெரியாதா என்று கவிதா கேட்க,உங்க வீட்டுக்கு நீ வந்து இருக்கீங்க இதை நான் கேக்கணுமாடி என்றாள்.
ஐயோ அக்கா நெஞ்ச நக்கிட்டியே என்று கவிதா ஆக்சன் பண்ண இந்த அடங்காத மாட்டுக்கு எவன் தான் வந்து மாட்ட போறான்னு தெரியலையே ஆண்டவா என்று செழியன் மேலே பார்த்து சொல்ல,உனக்கு அந்த கவலை எல்லாம் வேண்டாம் யா...
அது என்னை கட்டிக்க போறவன் தான் வருத்தப்படணும் என்கவும் சொல்ல முடியாது டி...விதி எப்போ எப்படி மாறுமென்று தெரியாது.நானே உன்னை ரெண்டாம் தாரமாக கட்டுனாலும் கட்டுவேன் என்று செழியன் சிரிக்க..உன் முகர கட்டைக்கு அக்காவே பெருசு.
இதில் நான் வேற உனக்கு இரண்டாம் தரமா கேக்குதா என்றவள் கையில் இருந்த கூடையை தூக்கி செழியனின் மேல் எறிய அதை கேட்ச் பிடித்தவன் என்ன டி இவ்வளவு வெயிட்டாக இருக்கென்றான்.
உங்க அம்மாச்சி தான் கொடுத்து அனுப்பிருக்கு.மதியம் சமையலுக்கு காய் எல்லாம் இருக்கு மாமா என்கும் போது வீட்டிற்குள் வந்த வானதியோ தனது அண்ணன் மகள்கள் இருப்பதை பார்த்து வாங்கடா எப்போ வந்தீங்களென்றார்.
அதற்கு கவிதாவோ,நான் வந்து 18 வருஷம் ஆகுது அக்கா வந்து 25 ஆகுதே,இவ்வளவு வருஷமும் நீ கோமாவில் இருந்தியாத்தை என்க,வாய் வாய் என்று சிரித்தவர்,சாப்டீங்களா டா என்க...
எங்கே உன் அண்ணிங்க சோறு போட்டாங்க? அத்தை வீட்டுக்கு போங்க டி என்று வெறும் வயிற்றோடு எங்களை துரத்தி விட்டுட்டாங்க.
இங்க வந்தாக்கா ஒரு டீக்கு கூட வழியில்லை.ஏன் ஒரு டம்ளர் பச்ச தண்ணிக்கு கூட வழியில்லையே என்று ஷமீராவை பார்த்து கண்ணடித்துக் கொண்டு கவிதா சொல்ல,இதை கேட்ட வானதி அடியாத்தி எனக்கு மாமியார் இல்லாத குறைய நீதான் டி அம்மா தீர்த்து வைக்கிற என்று சிரித்தார்.
அம்மாடி சமீரா(ஷமீரா) தோட்டத்துல கஞ்சி தண்ணி இருக்கு,உன் தங்கச்சிக்கு எடுத்துட்டு வந்து ரெண்டு குண்டான் கொடு.நல்லா குடிப்பா என்று சொல்ல,அம்மா சூப்பர் மா என்று செழியன் சிரிக்கவும்,முதல்ல உன் மகனுக்கு கொடு இன்னும் கொஞ்சம் வளந்துட்டு போகட்டுமென்றாள்.
அப்போது "மாமா மாமா" என்று செழியனை கூப்பிட "என்னடி?" என்றான்.
கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா?