Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
மகி நினைவுகள்...
கணவர் சொன்னதை கேட்ட மேரி,ஏங்க இந்த வருஷம் மகிக்கும் எஸ்தருக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம் என்க, இப்போது தான் டி படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிருக்கான்.
அதுக்குள்ள எதுக்கு உனக்கு அவசரம் என்று ஆபிரகாம் மனைவியை முறைக்க,என்னைக்கு இருந்தாலும் என் அண்ணன் பொண்ணு தானே இந்த வீட்டுக்கு மருமகள்.
அதை எப்போ பண்ணுனா என்ன?
ஒருவேளை உங்களுக்கு வேற யாரையாச்சும் மருமகளாக ஆக்கணும்னு எண்ணம் இருக்கா என்க, மனைவியின் குணத்தை பற்றி தெரிந்த ஆபிரகமோ அய்யய்யோ சாரா அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது.உன் அண்ணன் பெண் தான் என்னுடைய மருமகள் போதுமா என்றார்.
கண்டிப்பா அதுல எந்த சந்தேகமும் இல்லை.உங்க பையன் காதல் கீதலுனு சுத்திட்டு வந்தான் அப்புறம் நான் மனுசியாக இருக்க மாட்டேங்க.நல்ல ஞாபகம் வச்சுக் கொள்ளுங்கள் என்கவும்,ஏன் டி இப்படி சொல்ற?
நம்ம புள்ள எல்லாம் அப்படி பண்ண மாட்டேன் என்றார்.ஹம் அப்படி பண்ண கூடாது அதனால தான் சொல்லி வைக்கிறேன்.அப்பாவை போல நீங்க ஒன்னும் பழகறது கிடையாது பிரண்டு போல தானே பிள்ளை கிட்ட பழகுறீர்கள் என்று கணவரை மேரி முறைத்தார்.
தோளுக்கு மேல வளர்ந்துட்டா தோழன் மாதிரி இது நான் சொல்லி தான் உனக்கு புரியணும் என்று அவசியம் இல்லை.என்னை விட நீ தான் உன் மகனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறடி என்றார்.
சரி ரெண்டு பேரும் இப்படி மாறி மாறி வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா என்ன ஆகிறது.மகி வரும் போது அவனுக்கு பிடித்தமானதையெல்லாம் சமைக்கலாம்னு இருக்கிறேன் என்கவும் ஆபிரகாமும் தனது கோபத்தை விட்டவர் மகனுக்காக பிடித்ததை எல்லாம் லிஸ்ட் போட ஆரம்பித்தார்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்து செல்ல மூன்றாவது நாள் மதியம் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து மகி இறங்க,அவனுக்காக ஆபிரகாமும் காரில் வெளியே காத்துக் கொண்டிருந்தார்.
பேசஞ்சர் எல்லாம் இறங்கி வரவும் மகன் எங்கே என்று அந்த கூட்டத்தில் தேட,சிறிது நிமிடத்தில் லக்கேஜோடு மகியும் வர தாஸ் என்று ஆபிரகாம் கூப்பிட தந்தையின் குரல் வந்த திசையில் திரும்பியவன் அங்கிருந்தவரை பார்த்து கையைசைத்தான்.
பின் சீட்டில் வந்து மகி உட்கார டிரைவர் கார் எடுக்கவும் எப்படிப்பா போச்சு என்று விசாரிக்க நல்லா போச்சுப்பா என்றான்.
எப்போ ஜாயின் பண்ணனும் என்று கேட்க ஆகஸ்ட் 5ஆம் தேதி என்றான்.பின்னர் இருவரும் பேசிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தனர். மகனுக்காக மேரியோ பெரிய விருந்தையே தயார் பண்ணி வைத்திருந்தார்.
உள்ளே வந்தவன் அம்மா என்று மேரியின் காலில் விழ காட் பிளஸ் யூ பா என்றவர் ரொம்ப சந்தோஷமா இருக்கு மகி என்று மகனின் கையை பிடித்து சொல்லு எனக்கும் மா.நீ சந்தோஷமா இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றான்.
சரி மகி நீ குளிச்சிட்டு வா சாப்பாடு ரெடியா தான் இருக்கு சாப்பிட்டுக்கலாம் பா என்று சொல்ல,சரி மா என்றவன் அவனது ரூமிற்கு சென்று சிறிது நிமிடத்தில் குளித்து பிரஷ் ஆகி வர மகனுக்கு சாப்பாடு பரிமாறினார்.
எங்கம்மா ராணியை காணும் என்றவனுக்கு உங்க அத்தை கூட டவுனுக்கு போயிருக்குப்பா என்றவர் சமைத்த உணவுகளை மகனின் தட்டில் பரிமாற அவனும் தனது தாயின் கைப்பக்குவ உணவை வழக்கம் போல ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
ஒரு வாரம் போனதே தெரியவில்லை மகியும் வீட்டில் சொல்லிக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டான்.அங்கு போய் நல்லபடியாக வேலையில் ஜாயின் பண்ணி ஒரு மாதம் கடந்திருக்க,முதல் மாதம் சம்பளத்தை வாங்கி தனது அம்மா பெயருக்கு அனுப்பி விட மேரியோ தலைகால் புரியாமல் குதித்துக் கொண்டிருந்தார்.
வனிச்சூர்:
நான் வேற பெரிய பிளான்ல இருக்கேன் டி. 10 இல்லை 12 குட்டிகள் முடிவு பண்ணிருக்கேன் டி என்கவும்,என்ன 12 குழந்தையா என்று அதிர்ச்சியில் ஷமீரா கண்களை விரித்தாள்.
மனைவியின் அதிர்ந்த முகத்தை ரசனையோடு பார்த்தவன் ஆமாம் செல்லம்.அந்த காலத்தில் தாத்தா பாட்டி எல்லாம் பெத்துக்கலையா அதே டிரெண்டை தான் இனி நம்பளும் பாலோவ் பண்ண போறோம்...
சோ அதற்கான ப்ராசஸில் இறங்கிடலாம் டி.அதை விட்டு இப்படி பேசியே காலத்தை ஓட்டிடுவ போலையே என்று குனிந்து மனைவியை கைகளில் தூக்கியவன் ஐ லவ் யூ……
எனக்கென பிறந்தவள்
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா,ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோஓஓஓ என்று பாட கணவனின் குரலில் பெண்ணவளோ மயங்கி போக..
என்ன டி உன் புருஷன் குரல் அவ்வளவு கொடூரமாவா இருக்கு?கண்ணை மூடிக் கிட்ட என்கவும்,அதைக் கேட்டு பட்டென்று கண்களை திறந்தவள் உண்மையிலேயே உங்களுக்கு பாட்டு பாட தெரியுமா இளா?ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை என்க,
நீ தான் கேட்கவே இல்லையே டி என்றான்.
இதெல்லாம் ஒரு காரணமா?ஏன் நான் கேட்டா தான் நீங்க சொல்லணுமா என்கவும்,அப்படி இல்லையே.நீ கேட்காமல் சொல்லலாம்.
பட் நானும் இது போல ஒரு சூழ்நிலையில் பாடி உன்னை இம்ப்ரஸ் பண்ணனும்னு இருந்தேன் டி என்று சொல்லி மனைவியின் தோளில் கையை போட்டுக் கொண்டு ரோஜா பூ தூவிய பாதையில் நடத்தி கூப்பிட்டு போக,டெக்கரேஷன் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.
ஆமாம் இதெல்லாம் எப்ப பண்ணுனீங்க என்கவும்,டெக்ரேசன் காலையிலேயே பண்ணிட்டு போனேன் டி.இது ஆர்ட்டிபிசியல் ரோஸ் கசங்காது.
கேண்டில்ஸ் மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஏத்தி வச்சேன் என்றான்.
பயங்கர ரொமான்டிக் பர்சனா இருக்கீங்களே இளா.இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போயிடுச்சே என்கவும் எங்கடி நீ பேச விட்ட,சொல்லு?
ஏதாவது ஒரு வார்த்தை ரொமான்ஸா பேச விட்டாயா? என்று மனைவியை கையில் ஏந்தி கொண்டு மெத்தையை நோக்கி போனவன் அங்கிருந்து பெட்டில் படுக்க வைத்து கையை கட்டிக்கொண்டு ரசித்தான்.
சிறிது நிமிடங்கள் வரை கண்ணை மூடி இருந்தவள் கணவனின் பார்வையோ தன்மேல் தான் இருக்கிறது என்பது தெரிந்து இரண்டு கைகளையும் விரிக்க புயல் வேகத்தில் மனைவியின் மேல் பாய்ந்தவன் எண்ணிக்கையில்லா முத்தங்களோடு கூடலையும் தொடங்கினான்.
போதும் என்ற மனமின்றி மனைவியை ஆளுகை செய்தவன் அவள் சோர்ந்து போனதை பார்த்த பிறகு இன்று போதும் என்று மனமேயின்றி விலக அதிகாலை சேவலும் கூவியது.
ஒரு மணி நேரம் கடந்து கண்களை திறக்க அவளை அணைத்தபடி செழியன் நன்கு உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.
கணவனின் உறக்கம் கலையாமல் அவன் கையை எடுத்தவள் காற்றில் அலைபாயும் தன்னவனின் தலைமுடியில் கைகளை விட்டு நீவியவள்,பின்னர் அவன் அடர்ந்து தாடியில் முத்தம் வைத்துவிட்டு கீழே கிடந்த புடவை எடுத்து மேலே சுற்றிக் கொண்டவள் ரெஸ்ட் ரூமுக்கு சென்றாள்.
பின்னர் குளித்து தயாராகி கீழே வர அங்கே வானதியும் செல்லதுரையும் டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
பின்னர் வழக்கமான வேலையை செய்தவள் கணவனுக்கும் தனக்குமான டீ, காபியை போட்டு எடுத்துக் கொண்டு மேல போக,அங்கே செழியன் எக்சர்சைஸ் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது.
உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடலோ வியர்வையில் பளபளப்பதை பார்த்தவள் விழி விரிய அதிசயத்து நின்றாள்.
ஏதோ ஒரு தூண்டுதலில் செழியன் திரும்பிப் பார்க்க மனைவியின் பார்வை தன் உடம்பில் இருப்பதை பார்த்து சிரித்தவன் ஓய்...என்னடி பகல் கனவா என்க,அதில் சுதாரித்தவள் ஒன்னும் இல்லையே என்று சொல்லியவள் ஞாணம் கலந்தபடி அவனிடம் வந்தவள் டீ என்றாள்.
நிமிர்ந்து பார்த்து குடு டி.இப்படியா கீழே குனிஞ்சுகிட்டு குடுப்பாங்கள் என்கவும் பரவாயில்ல இப்படியே எடுத்துக்கோங்க ப்ளீஸ் இளா ஒரு மாதிரியா இருக்கென்றாள்.
அடியேய் நமக்குள்ள என்னடி வெட்கம் வேண்டி கிடக்கென்று காலை நேர பூந்தென்றலாய் நெற்றி வகுட்டில் குங்குமம் தீட்டி,புருவத்திற்கு நடுவில் பொட்டு வைத்து நீண்ட கூந்தலின் அடியில் முடிச்சு போட்டு மென்மையான புடவையில் தேவதைபோல் இருப்பவளை இமைக்கால் பார்த்தான்.
கணவனின் பார்வை குறுகுறுப்பை தர புரிஞ்சுக்கோங்களேன் என்று சினுங்கியவாறு டீ டம்ளரை செழியனிடம் நீட்டிக் கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றாள்.
மனைவியின் வெட்கத்தை ரசித்தவன் சரி போனா போகட்டும் எடுத்துக்குறேன் டி என்றவன் அவள் தோள் மேல் கையை போட்டுக் கொண்டே டீயை குடித்தவன் நீயும் காபி குடி என்க ம்ம் என்றாள்.
அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன் மனைவியின் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு அந்த மொட்டை மாடியில் நடக்க அய்யோ இளா என்ன பண்றீங்க?
யாராச்சும் பார்த்த சங்கடமா இருக்க போகுது என்கவும்,அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க டி என்றவன் மொட்டை மாடியின் ஓரத்தில் மனைவியை நிற்க வைத்து தூரத்தில் தெரியும் மலையை காட்ட அந்த அதிகாலை நேரத்தில் இயற்கை பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
கணவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்களா என்றாள்.ஆமாடி,ஏன் பார்க்க நல்லா இல்லையா என்று செழியன் கேட்க,
ஐயோ என பதறியவள் சூப்பரா இருக்கீங்க என்றாள்...
அப்படியா என்று மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே சிரிக்கவும்,அதில் என்ன சந்தேகம் என்று சொல்லி திரும்பியவள் கணவனின் முகத்தை பார்க்கவும் வெட்கம் வந்து தடுத்தாலும் கண்ணை மூடி திறந்தவள் ஜிம் பாய் போல இருக்கீங்க என்று சொல்லி நாக்கை கடித்தாள்.
பார்ரா என்று சிரித்தவன் பரவாயில்லையே என் பொண்டாட்டி என்னை எல்லாம் ரசிக்கிறாளே என்க, அதில் கோபம் வந்தவள் நான் ரசிக்காமல் அந்த மசாலா ஃபேக்டரில் உள்ளவளுங்க ரசிக்கணுமோ என்று பல்லை கடித்தாள்.
கணவர் சொன்னதை கேட்ட மேரி,ஏங்க இந்த வருஷம் மகிக்கும் எஸ்தருக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம் என்க, இப்போது தான் டி படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிருக்கான்.
அதுக்குள்ள எதுக்கு உனக்கு அவசரம் என்று ஆபிரகாம் மனைவியை முறைக்க,என்னைக்கு இருந்தாலும் என் அண்ணன் பொண்ணு தானே இந்த வீட்டுக்கு மருமகள்.
அதை எப்போ பண்ணுனா என்ன?
ஒருவேளை உங்களுக்கு வேற யாரையாச்சும் மருமகளாக ஆக்கணும்னு எண்ணம் இருக்கா என்க, மனைவியின் குணத்தை பற்றி தெரிந்த ஆபிரகமோ அய்யய்யோ சாரா அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது.உன் அண்ணன் பெண் தான் என்னுடைய மருமகள் போதுமா என்றார்.
கண்டிப்பா அதுல எந்த சந்தேகமும் இல்லை.உங்க பையன் காதல் கீதலுனு சுத்திட்டு வந்தான் அப்புறம் நான் மனுசியாக இருக்க மாட்டேங்க.நல்ல ஞாபகம் வச்சுக் கொள்ளுங்கள் என்கவும்,ஏன் டி இப்படி சொல்ற?
நம்ம புள்ள எல்லாம் அப்படி பண்ண மாட்டேன் என்றார்.ஹம் அப்படி பண்ண கூடாது அதனால தான் சொல்லி வைக்கிறேன்.அப்பாவை போல நீங்க ஒன்னும் பழகறது கிடையாது பிரண்டு போல தானே பிள்ளை கிட்ட பழகுறீர்கள் என்று கணவரை மேரி முறைத்தார்.
தோளுக்கு மேல வளர்ந்துட்டா தோழன் மாதிரி இது நான் சொல்லி தான் உனக்கு புரியணும் என்று அவசியம் இல்லை.என்னை விட நீ தான் உன் மகனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறடி என்றார்.
சரி ரெண்டு பேரும் இப்படி மாறி மாறி வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா என்ன ஆகிறது.மகி வரும் போது அவனுக்கு பிடித்தமானதையெல்லாம் சமைக்கலாம்னு இருக்கிறேன் என்கவும் ஆபிரகாமும் தனது கோபத்தை விட்டவர் மகனுக்காக பிடித்ததை எல்லாம் லிஸ்ட் போட ஆரம்பித்தார்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்து செல்ல மூன்றாவது நாள் மதியம் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் வந்து மகி இறங்க,அவனுக்காக ஆபிரகாமும் காரில் வெளியே காத்துக் கொண்டிருந்தார்.
பேசஞ்சர் எல்லாம் இறங்கி வரவும் மகன் எங்கே என்று அந்த கூட்டத்தில் தேட,சிறிது நிமிடத்தில் லக்கேஜோடு மகியும் வர தாஸ் என்று ஆபிரகாம் கூப்பிட தந்தையின் குரல் வந்த திசையில் திரும்பியவன் அங்கிருந்தவரை பார்த்து கையைசைத்தான்.
பின் சீட்டில் வந்து மகி உட்கார டிரைவர் கார் எடுக்கவும் எப்படிப்பா போச்சு என்று விசாரிக்க நல்லா போச்சுப்பா என்றான்.
எப்போ ஜாயின் பண்ணனும் என்று கேட்க ஆகஸ்ட் 5ஆம் தேதி என்றான்.பின்னர் இருவரும் பேசிக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தனர். மகனுக்காக மேரியோ பெரிய விருந்தையே தயார் பண்ணி வைத்திருந்தார்.
உள்ளே வந்தவன் அம்மா என்று மேரியின் காலில் விழ காட் பிளஸ் யூ பா என்றவர் ரொம்ப சந்தோஷமா இருக்கு மகி என்று மகனின் கையை பிடித்து சொல்லு எனக்கும் மா.நீ சந்தோஷமா இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றான்.
சரி மகி நீ குளிச்சிட்டு வா சாப்பாடு ரெடியா தான் இருக்கு சாப்பிட்டுக்கலாம் பா என்று சொல்ல,சரி மா என்றவன் அவனது ரூமிற்கு சென்று சிறிது நிமிடத்தில் குளித்து பிரஷ் ஆகி வர மகனுக்கு சாப்பாடு பரிமாறினார்.
எங்கம்மா ராணியை காணும் என்றவனுக்கு உங்க அத்தை கூட டவுனுக்கு போயிருக்குப்பா என்றவர் சமைத்த உணவுகளை மகனின் தட்டில் பரிமாற அவனும் தனது தாயின் கைப்பக்குவ உணவை வழக்கம் போல ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
ஒரு வாரம் போனதே தெரியவில்லை மகியும் வீட்டில் சொல்லிக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டான்.அங்கு போய் நல்லபடியாக வேலையில் ஜாயின் பண்ணி ஒரு மாதம் கடந்திருக்க,முதல் மாதம் சம்பளத்தை வாங்கி தனது அம்மா பெயருக்கு அனுப்பி விட மேரியோ தலைகால் புரியாமல் குதித்துக் கொண்டிருந்தார்.
வனிச்சூர்:
நான் வேற பெரிய பிளான்ல இருக்கேன் டி. 10 இல்லை 12 குட்டிகள் முடிவு பண்ணிருக்கேன் டி என்கவும்,என்ன 12 குழந்தையா என்று அதிர்ச்சியில் ஷமீரா கண்களை விரித்தாள்.
மனைவியின் அதிர்ந்த முகத்தை ரசனையோடு பார்த்தவன் ஆமாம் செல்லம்.அந்த காலத்தில் தாத்தா பாட்டி எல்லாம் பெத்துக்கலையா அதே டிரெண்டை தான் இனி நம்பளும் பாலோவ் பண்ண போறோம்...
சோ அதற்கான ப்ராசஸில் இறங்கிடலாம் டி.அதை விட்டு இப்படி பேசியே காலத்தை ஓட்டிடுவ போலையே என்று குனிந்து மனைவியை கைகளில் தூக்கியவன் ஐ லவ் யூ……
எனக்கென பிறந்தவள்
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா,ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோஓஓஓ என்று பாட கணவனின் குரலில் பெண்ணவளோ மயங்கி போக..
என்ன டி உன் புருஷன் குரல் அவ்வளவு கொடூரமாவா இருக்கு?கண்ணை மூடிக் கிட்ட என்கவும்,அதைக் கேட்டு பட்டென்று கண்களை திறந்தவள் உண்மையிலேயே உங்களுக்கு பாட்டு பாட தெரியுமா இளா?ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை என்க,
நீ தான் கேட்கவே இல்லையே டி என்றான்.
இதெல்லாம் ஒரு காரணமா?ஏன் நான் கேட்டா தான் நீங்க சொல்லணுமா என்கவும்,அப்படி இல்லையே.நீ கேட்காமல் சொல்லலாம்.
பட் நானும் இது போல ஒரு சூழ்நிலையில் பாடி உன்னை இம்ப்ரஸ் பண்ணனும்னு இருந்தேன் டி என்று சொல்லி மனைவியின் தோளில் கையை போட்டுக் கொண்டு ரோஜா பூ தூவிய பாதையில் நடத்தி கூப்பிட்டு போக,டெக்கரேஷன் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.
ஆமாம் இதெல்லாம் எப்ப பண்ணுனீங்க என்கவும்,டெக்ரேசன் காலையிலேயே பண்ணிட்டு போனேன் டி.இது ஆர்ட்டிபிசியல் ரோஸ் கசங்காது.
கேண்டில்ஸ் மட்டும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஏத்தி வச்சேன் என்றான்.
பயங்கர ரொமான்டிக் பர்சனா இருக்கீங்களே இளா.இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போயிடுச்சே என்கவும் எங்கடி நீ பேச விட்ட,சொல்லு?
ஏதாவது ஒரு வார்த்தை ரொமான்ஸா பேச விட்டாயா? என்று மனைவியை கையில் ஏந்தி கொண்டு மெத்தையை நோக்கி போனவன் அங்கிருந்து பெட்டில் படுக்க வைத்து கையை கட்டிக்கொண்டு ரசித்தான்.
சிறிது நிமிடங்கள் வரை கண்ணை மூடி இருந்தவள் கணவனின் பார்வையோ தன்மேல் தான் இருக்கிறது என்பது தெரிந்து இரண்டு கைகளையும் விரிக்க புயல் வேகத்தில் மனைவியின் மேல் பாய்ந்தவன் எண்ணிக்கையில்லா முத்தங்களோடு கூடலையும் தொடங்கினான்.
போதும் என்ற மனமின்றி மனைவியை ஆளுகை செய்தவன் அவள் சோர்ந்து போனதை பார்த்த பிறகு இன்று போதும் என்று மனமேயின்றி விலக அதிகாலை சேவலும் கூவியது.
ஒரு மணி நேரம் கடந்து கண்களை திறக்க அவளை அணைத்தபடி செழியன் நன்கு உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.
கணவனின் உறக்கம் கலையாமல் அவன் கையை எடுத்தவள் காற்றில் அலைபாயும் தன்னவனின் தலைமுடியில் கைகளை விட்டு நீவியவள்,பின்னர் அவன் அடர்ந்து தாடியில் முத்தம் வைத்துவிட்டு கீழே கிடந்த புடவை எடுத்து மேலே சுற்றிக் கொண்டவள் ரெஸ்ட் ரூமுக்கு சென்றாள்.
பின்னர் குளித்து தயாராகி கீழே வர அங்கே வானதியும் செல்லதுரையும் டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
பின்னர் வழக்கமான வேலையை செய்தவள் கணவனுக்கும் தனக்குமான டீ, காபியை போட்டு எடுத்துக் கொண்டு மேல போக,அங்கே செழியன் எக்சர்சைஸ் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது.
உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடலோ வியர்வையில் பளபளப்பதை பார்த்தவள் விழி விரிய அதிசயத்து நின்றாள்.
ஏதோ ஒரு தூண்டுதலில் செழியன் திரும்பிப் பார்க்க மனைவியின் பார்வை தன் உடம்பில் இருப்பதை பார்த்து சிரித்தவன் ஓய்...என்னடி பகல் கனவா என்க,அதில் சுதாரித்தவள் ஒன்னும் இல்லையே என்று சொல்லியவள் ஞாணம் கலந்தபடி அவனிடம் வந்தவள் டீ என்றாள்.
நிமிர்ந்து பார்த்து குடு டி.இப்படியா கீழே குனிஞ்சுகிட்டு குடுப்பாங்கள் என்கவும் பரவாயில்ல இப்படியே எடுத்துக்கோங்க ப்ளீஸ் இளா ஒரு மாதிரியா இருக்கென்றாள்.
அடியேய் நமக்குள்ள என்னடி வெட்கம் வேண்டி கிடக்கென்று காலை நேர பூந்தென்றலாய் நெற்றி வகுட்டில் குங்குமம் தீட்டி,புருவத்திற்கு நடுவில் பொட்டு வைத்து நீண்ட கூந்தலின் அடியில் முடிச்சு போட்டு மென்மையான புடவையில் தேவதைபோல் இருப்பவளை இமைக்கால் பார்த்தான்.
கணவனின் பார்வை குறுகுறுப்பை தர புரிஞ்சுக்கோங்களேன் என்று சினுங்கியவாறு டீ டம்ளரை செழியனிடம் நீட்டிக் கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றாள்.
மனைவியின் வெட்கத்தை ரசித்தவன் சரி போனா போகட்டும் எடுத்துக்குறேன் டி என்றவன் அவள் தோள் மேல் கையை போட்டுக் கொண்டே டீயை குடித்தவன் நீயும் காபி குடி என்க ம்ம் என்றாள்.
அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன் மனைவியின் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு அந்த மொட்டை மாடியில் நடக்க அய்யோ இளா என்ன பண்றீங்க?
யாராச்சும் பார்த்த சங்கடமா இருக்க போகுது என்கவும்,அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க டி என்றவன் மொட்டை மாடியின் ஓரத்தில் மனைவியை நிற்க வைத்து தூரத்தில் தெரியும் மலையை காட்ட அந்த அதிகாலை நேரத்தில் இயற்கை பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
கணவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்களா என்றாள்.ஆமாடி,ஏன் பார்க்க நல்லா இல்லையா என்று செழியன் கேட்க,
ஐயோ என பதறியவள் சூப்பரா இருக்கீங்க என்றாள்...
அப்படியா என்று மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே சிரிக்கவும்,அதில் என்ன சந்தேகம் என்று சொல்லி திரும்பியவள் கணவனின் முகத்தை பார்க்கவும் வெட்கம் வந்து தடுத்தாலும் கண்ணை மூடி திறந்தவள் ஜிம் பாய் போல இருக்கீங்க என்று சொல்லி நாக்கை கடித்தாள்.
பார்ரா என்று சிரித்தவன் பரவாயில்லையே என் பொண்டாட்டி என்னை எல்லாம் ரசிக்கிறாளே என்க, அதில் கோபம் வந்தவள் நான் ரசிக்காமல் அந்த மசாலா ஃபேக்டரில் உள்ளவளுங்க ரசிக்கணுமோ என்று பல்லை கடித்தாள்.